Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 46

மனதில் அளவற்ற நிம்மதியையும் ஆனந்தத்தையும் சுமந்து அற்புத கோட்டைக்குள் நுழைந்த நாயகர்களை வரவேற்த்தது என்னவோ யாளிகளின் சினமுற்ற உறுமல் தான்..

அந்த உறுமலில் நாயகர்கள் திடுக்கிட குட்டி நாயகர்களும் உடன் ஐலா மற்றும் ரக்ஷவும் மிரண்டு போயினர்..

அந்த உறுமலை கேட்டதுமே முதலணி நாயகர்கள் அனைவரின் வதனத்திலும் தீவிரம் கூடியது... உண்மை தான்.. அது சாதாரணமாய் எடுத்து கொள்ளும் அளவிற்கு வீரயமற்ற ஒன்றல்ல... யானையாளிகளாவது சஹாத்திய சூரர்களின் வரவு தென்பட்டால் தன் பிளரலை சுதந்திரமாய் வெளியிடும்.. ஆனால் இவ்வுறுமல்களோ இருவது வருடங்களுக்கும் மேலாக அமைதியாய் இருக்கும் சிம்மயாளிகளால் வெளி வரப்பட்டது...

அந்த உறுமலிலே அது சத்தீஷின் சிம்மயாளியான காற் சின்னம் கொண்ட வெண்ணிற சிம்மயாளி விகி என புரிபட அவைக்கு என்றும் மருத்துவம் பார்க்கும் வீர் மற்றும் ரனீஷ் உடனே இரண்டிரண்டு படிகளாய் தாண்டி மாடிக்கு ஓட அவர்கள பின் தொடர்ந்து அவசரமாய் ஓட போன நாயகர்களுள் ரித்விக்கை பிடித்து இழுத்தான் ருத்ராக்ஷ்..

ருத்ராக்ஷ் : மாமா எங்க போறீங்க நீங்க

ரித்விக் : இது விகியோட உறுமல் ருத்ரா.. என்ன ஏதுன்னு தெரியல... போய் பாத்தா தான் தெரியும்...

ரக்ஷவ் : இங்கையே ஒரு வாரமா இருக்கேன் எனக்கே மேல ஒருத்தன் டேரா போற்றுக்கான்னு தெரியாதே என அப்பாவியாய் கேட்க

சேவன் : அடடே ரக்ஷவா... அது நீர் சில தினங்கள் முன்பிருந்து காண ஆவலுடன் ஏங்கும் சிம்மயாளிகளில் மூன்றாவது சிம்மயாளியின் உறுமல்.. விகி என்பது மனிதனின் நாமமல்ல... சிம்மயாளியின் நாமம் என பதட்டத்துடன் கூறவும் இளையவர்கள் அனைவருக்கும் மனதில் ஒரு பயபந்து உருள தொடங்கியது...

நிரு : அத்தான் நீங்க போய் என்னன்னு பாருங்க... நாங்க கீழயே இருக்கோம்..

ப்ரியா : விகி கோவமா இருக்குன்னு மட்டும் தெரியிது அண்ணா... அத மட்டும் சீக்கிரம் சரி பன்னுங்க... ரொம்ப தாக்குப்புடிக்க வைக்காதீங்க என கண்களில் தவிப்புடன் கூறியவள் அவன் தலையசைத்து சென்றதும் இவர்களை நோக்கி திரும்பினாள்...

பவி : சேவன் தமையரே... எமக்கு ஒரு உதவி புரிய இயலுமா என தயக்கத்துடன் கேட்க...

சேவன் : புதிதாய் தயக்கம் எதற்கு தங்கையே.. தயங்காமல் வினவுங்கள்... இன்னுயிரை கொடுத்தேனும் நிறைவேற்றுவேன் என கூறியவனை கண்டதும் புன்னகைத்தவள்

பவி : எமக்காய் தாம் சர்ப்பலோகம் சென்று அங்கு சிறைப்பட்டிருக்கும் எம் மகவுகளான பராக்ரம விந்தைகளுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்

சேவன் : இதற்காகவா தயங்குனீர் தங்கையே.. தமது மகவுகளை தைரியமூட்டி மெய்யை புரிய வைப்பது எமது கடமையாகும்... யான் வருகிறேன் என கிழம்ப போனவனை பிடித்திழுத்த மயூரன்

மயூரன் : யாமும் உம்முடன் வரவுள்ளுகிறோம் சேவா.. என கூறியதும்

சேவன் : தாமும் எனில்... உம்முடன் வரவுள்ளது யாவர் என புருவத்தை சுருக்கி கேட்டவனுக்கு அவன் சலிப்பாய் பெருமூச்சு பதிலாய் கொடுத்தான்...

மயூரன் : எம் தங்கையாரும் உமது தங்கையாரும் தான் என கூறியதும் அவனது இரு தோள் பின்னிருந்தும் ஈஈஈ என இளித்தபடி குட்டிராணிகள் எட்டி பார்த்தனர்...

சேவன் : வேண்டா... மயூரன் எம்முடன் வந்தாலே போதுமானது... தாம் இருவர் இங்ஙனம் வீற்றிருப்பதே தமக்கு நன்னலம்

நீலி : ப்லீஸ் சேவா.. நா இங்க வந்ததுலேந்து கோட்டைய விட்டு எங்கையுமே போகல... ப்லீஸ் என்ன கூட்டீட்டு போ என உதட்டை பிதுக்கி அழகாய் கெஞ்சினாள்...

சேவன் : இன்னுமொரு ஊழ்(முறை) அயல்மொழி வார்த்தைகளை பறைந்தாயெனில் மறுமைபூமியிலே சென்று விட்டு வந்து விடுவேன் நீலி என மிரட்டவும் இதழை சுருக்கி முறைத்தாள் பெண்ணவள்..

மது : என்னதிது தமையரே.. நீலியும் பிறையும் உம்முடன் வரட்டுமே தாம் இருக்கையில் அவ்விருவருக்கு என்(ன) இன்னற் ஈடேற போகிறது என அவர்களுக்கு பரிந்து பேச...

சேவன் : அவள்கள் வரவளித்தாலே அது இன்னல் தான் தங்கையே என கூறியதும் மதுவின் பேச்சோடு க்யூட் ஸ்மைலுடன் வந்த நீலி பிறை இருவரும் மீண்டும் முகத்தை சுருக்கி கொண்டனர்...

பிறை : தமையனாரே.. பெண்டிர் வீற்றிருக்கும் இடத்தினும் ஆணான தாம் எவ்வாறு நுழைவீர்.. அதற்கு பெண்ணாகிய யாம் இருவருர் இருப்பது தமக்கு இன்னும் நன்று தானே என பாய்ன்ட் கிடைத்த அவசரத்தில் வேகவேகமாய் கூறவும் சேவன் மறுப்பதற்குள்

மோகினி : இருக்கட்டும் சேவா.. பிறையின் கூற்றிலும் மெய் உள (உள்ளது)..  பிறை மற்றும் நீலியையும் தம்முடன் ஆழைத்து செல்லுங்கள் ... அத்துடன் இது துருவனின் பதக்கச்சங்கிலி.. இதை எதற்கும் எடுத்துச் செல்லுங்கள்.. எம் மகவுகளால் எளிதில் அடையாளங்காண இயலலாம் என அந்த பதக்கத்தை நீட்டியதும் அதை மறுப்பேதுமென்றி வாங்கி கொண்டான் சேவன்...

சேவன் : சரி தாயே.. சென்று வருகிறோம் என கூறிய பின் தான் நீலி பிறை இருவரின் முகத்திலும் ஃப்யூஸ் போயிருந்த பல்பெரிந்தது...

தீரா : அங்க போய் இவளுங்க சாம்பராவ கடுப்பேத்தி சித்ரியா கிட்ட உண்மையையும் உளறி கொட்டுவாளுங்கன்னு யாரு எதிர்பார்த்தா...

வருண் அருண் ஆதவ் மற்றும் மித்ரன் போரினால் காயமடைந்திருந்த தங்களது சகோதரர்களுக்கும் வளவனுக்கும் சிகிச்சையளிக்க அந்த இயற்கை மூலிகையினால் மருந்துகளை வீனா ரக்ஷா தான்யா கொடுத்தவாறே அவர்களுக்கும் உதவினர்...

நேரம் கடந்ததே தெரியாமல் நிமிடங்கள் மணி நேரங்களாகி சோர்வில் ரக்ஷவ் வர்ஷியின் இடது மடியிலும் ஐலா அவளின் வலது மடியிலும் தலை வைத்து உறங்கியிருந்தனர்...

பராக்ரம வீரன்கள் முதல் முறை இப்படி ஒரு போரில் பங்கு கொண்டதால் உடலில் அங்கங்கு பலத்த வலிகளுடன் உறக்கத்தை தழுவியிருந்தனர்..

இரட்சகன்களும் அன்றே பல வருடம் பின் தன் தாயார்களின் மடியில் வலிகளும் கவலைகளும் மறந்து தொலைந்து போன பொக்கிஷம் கிடைத்த நிம்மதியில் துயில் கொண்டிருந்தனர்...

இப்போது கோட்டையில் முதலணி நாயகர்கள் மாத்திரமே முளித்து இருந்தனர்... மூன்றரை மணி நேரம் ஓடியிருந்தாலும் சிம்மயாளிகளை காண சென்ற சஹாத்திய சூரர்கள் இன்னும் கீழ் வரவில்லை... நாயகிகள் தான் சண்டையிட்டு கலைத்தது பத்தாதென குறுக்கும் நெடுக்கும் நடந்து தங்களை தானே வருத்தி கொண்டிருந்தனர்...

ஒரு கட்டத்தில் ஒவீயே அனைவரையும் தேடி மாடிக்கு சென்றாள்...

அந்த ஆயுத கள அறைக்குள் ஒரு சிறு தயக்கத்தின் பின் மெதுவாய் தட்டி விட்டு நுழைந்தவள் அந்த அறையின் நிலையை கண்டு குழம்பி போனாள்... ஒரு இருளடைந்த மூலையை நோக்கி வீர் மற்றும் ரனீஷ் சில மூலிகை பொருட்களுடன் பொருமையாய் நகர்ந்து சென்று கொண்டிருக்க அவர்கள் பின் சில அடி இடைவெளிகளில் ரவி மற்றும் அஷ்வன்த் அவளே இது வரை கண்டிராத சில பல அறிய வகை மூலிகைகளுடன் அவர்களை போலவே மெதுமெதுவாய் நகர்ந்தவாறு நின்று கொண்டிருக்க மற்ற நாழ்வருமான படைதளபதிகள் முகில் அர்ஜுன் ரித்விக் சரண் நாழ்வரும் அவரவர் வாள்களை முன்னோக்கி வைத்து கொண்டு முன் நின்ற நாழ்வரின் பின் ஒரே இடத்தில் ஏதோ போருக்கே தயாரென்பதை போல் தயாராய் நின்றிருந்தனர்...

இவள் கதவை திறந்த அடுத்த நொடி அனைவரும் கண்களை விரித்து திரும்பி பார்க்க ஒவீயும் அவள் கண்களை விரித்து முளிக்க அந்த இருளருகில் நெருங்கி சென்றிருந்த வீர் மற்றும் ரனீஷ் இப்புறம் திரும்பியிருந்ததால் எதிர்பாராமல் கேட்ட விகியின் திடீரென்ற உறுமலில் தொபக்கடீரென கீழே விழுந்தனர்...

விகியின் இந்த உறுமல் கோட்டையையே அதிர வைத்தாலும் அது அந்த அறையை விட்டு ரித்விக்கின் சக்திகளால் வெளியேறவில்லை...

ஒவீ ஏது செய்வதென்று தெரியாமல் முளிக்கவும் அஷ்வன்த் சைகையிலே அவளை அமைதியாய் உள்ளே வர கூறினான்...

வீர் : விகி.. உமக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.. அதற்கு நீர் உம் சகோதரன்களை போல் ஒத்துழை என கூறி கொண்டிருக்கும் போதே மீண்டும் விகி மறுப்பாய் உறுமியது... அதன் மொழி இவர்களுக்கு புரியாதென்றாலும் இம்முறை அந்த உறுமல் எதை குறிக்கிறதென இருவருமே உணர்ந்திருந்தனர்

ரனீஷ் : நீவிரும் உம் சகோதரன்களை போலே இருளை விட்டு வெளியேற அவசியமன்று விகி.. உமக்கு சிகிச்சை அளித்ததும் யாம் மீண்டும் உமக்கு தொந்தரவாய் இருத்தல் மாட்டோம்.. அத்துடன் தற்போது தம்முடைய ஒத்துழைப்பு கிடைத்தாலே ஒழிய உமது துன்பத்தை எம்மால் தீர்க்க இயலும் என கூறிய சில நொடிகளுக்கு அங்கு நீண்ட மௌனம் நிலவியது...

ரனீஷ் வீரை கண்டு தலையசைக்க வீர் பொருமையாய் அந்த இருளை நோக்கி நடந்தான்... முன்பை போல விகி உறுமவில்லை... மாறாக வீர் அந்த இருளில் சென்றும் கூட எந்த ஒரு ஓசையும் எழுப்பவில்லை...

ரவி விகியின் சிறு சிறு முனகல் ஓசையையும் கவனிப்பதால் அந்நொடிக்கு தேவையான மருந்துகளை அஷ்வன்த்திடம் தெரிவிப்பான்... அஷ்வன்த் அந்த மருந்துகளை ரனீஷிடம் ஒப்படைத்ததும் ரனீஷ் வெளியிலிருந்து அதை வீரிடம் ஒப்படைத்து காத்திருப்பான்...

தன் கூர் பார்வையின் உதவியினால் விகியின் உருவ அசைவுகளை கொண்டே அதற்கு சிகிச்சை அளித்து மருந்தினையும் அளித்து முடித்திருந்த வீர் அதன் திடீர் சினத்திற்கு இப்போதும் காரணமறியாமலே இருளை விட்டு வெளியேறினான்...

அஷ்வன்த் கூறியதும் அனைவரும் அந்த அறையை விட்டு வெளியேறி கீழே வந்தனர்...

ஒவீ : சாரி அண்ணா.. நா தப்பான நேரத்துல

அஷ்வன்த் : இட்ஸ் ஓக்கே ஒவீமா... விகி அவ்வளவு நேரமும் எங்க பேச்ச கேக்கவே இல்ல... உன்ன பாத்த பிறகு தான் கொஞ்சம் கேட்டான்...

அர்ஜுன் : நம்ம மூஞ்சையே இருவது வருஷமா பாத்ததால போரடிச்சிடுச்சு போல டா அவனுக்கு என்றவனின் தலையிலே ஒரு தட்டு தட்டினான் ரவி

வீனா : என்னாச்சு யுகி அகி விகி மூணு பேரும் எப்டி இருக்காங்க...

முகில் : பசங்களாம் எங்க டா.. அவளின் கேள்விக்கு பதிலின்றி இவனொரு கேள்வியை முன் வைத்தான்

மோகினி : தூங்குறாங்க இளவா...

முகில் : ரக்ஷவும் ஐலாவும் எங்க.. அதோட சேவன் மயூரன் நீலி மிறை நாழு பேரும் எங்க..

வர்ஷி : ரக்ஷவும் ஐலாவும் அசந்து தூங்கீட்டாங்க... சேவனும் மயூரனும் நீலி பிறைய கூட்டிக்கிட்டு சர்ப்பலோகம் போய்ர்காங்க...

துருவ் : சர்ப்பலோகத்துக்கா... எதுக்கு சித்தி என அவனது ஒரு பக்க இடையை பிடித்தவாறு நடந்து வந்தான்...

ப்ரியா : உன் தங்கச்சிங்களுக்கு தூதனுப்ப தான்... உனக்கு இப்போ எப்டி இருக்கு கண்ணா

துருவ் : பரவாயில்ல அத்த.. இதெல்லாம் ஒரு காயமா... வரும் போது விகி உறுமுச்சே... என்னாச்சு விகிக்கு

ரனீஷ் : ஒன்னும் இல்ல துருவா.. இப்போ விகி நல்லா இருக்கான்...

தான்யா : ஏன் அண்ணா... க்ரிஷ் அண்ணா இந்திரன் அண்ணா சத்தீஷ் அண்ணா மூணு பேர் இல்லாம இந்த இருவது வர்ஷத்த நாம ஓட்டீட்டோம் சரி... ஆனா இனிமே போக போக என்ன என்னலாம் நடக்கும்... இந்த யட்சினி சர்ப்ப வம்சத்தவர்கள நாம அழிச்சிட்டாலும் உலகம் ஆபத்தில்லாம காக்கப்பட்டாலும் யுகி அகி விகியோட நிலமை என்ன ஆகும்... அவங்கள நம்மளால பாத்துக்க முடியும்... ஆனா ஒரு நொடி அவங்களுக்கு வெறி ஏறுனாலும் அவங்கள நம்மளால அடக்கவே முடியாது... இந்த கோட்டைய சுத்தி இருக்குர கோவன்களோட கட்டு அவங்கள இதுக்குள்ளைள்ளே இருக்க வச்சிருக்கு.. அது இன்னும் எத்தன வர்ஷத்துக்கு நீளும்...

அர்ஜுன் : அத நினைச்சா எங்களுக்கும் தலை சுத்துர மாரி தான் இருக்கு... ஆனா வேற வழியும் இல்லை டா.. சிம்மயாளிகளுக்கு எப்டி முடிவுன்னு இது வர எந்த ஒரு வரலாறுமே இல்ல... சொல்ல போனா சிம்மயாளிகளோட உண்மையான வரலாறே இன்னும் கிடைக்கல.. இந்த உலகத்துல எப்பையும் இறைசக்தி மட்டுமே இருக்காது... தீயசக்தியும் தலா தூக்கும்... அதை அழிக்க நாம எப்டி இருக்கோமோ.. அதே மாரி அவங்களும் நமக்கு உதவியா எப்பவும் இருப்பாங்க... ஆனா கோவன்களுக்கு மட்டுமே கட்டுப்படுர சிம்மமாளிகள் இன்னும் எத்தனை வர்ஷத்துக்கு அந்த இருள்ளையே அடஞ்சு கிடக்கும்னு தெரியாது... போருக்கு நிச்சயமா உதவும் ஆனா அவனுங்க மறுவப்பிறப்பெடுக்குர வர காத்திருக்கும்....

துருவ் : ஆர் யு ஷ்யுர் மாமா... மாமாவால மறுப்பிறப்பெடுக்க முடியும்னா ஏன் அவங்க இன்னும் வரல...

வீர் : அப்டி இல்ல துருவ்... கோவன்கள் பிறப்பெடுக்க படுர அந்த ஒரு குறிப்பிட்ட நாள் நாழாயிரம் வருஷத்துக்கு ஒரு முறையும் அவங்க பிறந்து இருவத்தியாறு வர்ஷத்துக்கு ஒரு முறையும் தான் வரும்... நம்ம க்ரிஷ் இதிரன் சத்தீஷோட இந்தைய பிறப்ப பொருத்த வர மறுபிறப்பெடுக்குரதுக்கு அடுத்த மதிநட்சத்திரம் வர்ரதுக்கு இன்னும் நாழாயிரம் வருஷம் இருக்குரதால... அந்த நாழாயிரம் வருஷம் கூட காத்திருக்கும்ங்குரதுல சந்தேகமில்லன்னு சொல்ல வரோம்...

மோகினி : ஆனா.. இன்னும் ஒரே வாரத்துல யோகபரீபூஜன நாள் வருதே என கூறவும் என்ன என்பதை போல் அனைவரும் அவளை நோக்கினர்...

அனு : அப்டீன்னா என்ன அண்ணி...

மோகினி : அது பழகாலமா நம்மப்படுர ஒரு நம்பிக்கை.. யோகபரீபூஜன தினம்ங்குரது உலகத்தோட எல்லா வம்சங்ஙளுக்கும் சமமான ஒரு நாள்.. அந்த நாள்ள நாம எத நினைச்சு பல வகையான வம்ச பலிகள கொடுத்து யாகம் நடத்துனாலும் அது நிறைவேறும்னு சொல்லுவாங்க... அனேகமா அன்னைக்கு தான் உங்க எல்லாரையும் பலி கொடுத்து மகாவம்சம் .. சஹாத்திய வம்சம் .. நாகதாரணி வம்சிம் .. யாளி வம்சம் .. பஞ்சலோக வம்சம் மற்றும் யட்சினி சர்ப்ப வம்சம்னு ஆறு வம்சத்தோட சக்திகளைளும் ஒன்றிணைக்க போறாங்கன்னு நினைக்கிறேன்...

திவ்யா : ஆனா இதுக்கும் மதிநட்சத்திரத்துக்கும் என்ன சம்மந்தம்...

மோகினி : சம்மந்தம் இருக்கு... யோகபரீபூஜன நாள் எல்லா வம்சத்துக்குமே சமம் அப்டீன்னு இருக்கையில உலகோட முதல் வம்சமான மகாவம்சத்துக்கு அதிக வீரியம் இருக்கும்.. இறைவன் நினைச்சாலோ இல்ல நிர்ப்பந்தம் ஏற்பட்டாலோ அன்றைய நாள்ள இறக்கப்பட்ட வம்சங்களால எதாவது ஒரு வகைல உயிர்த்தெழ முடியும் அப்போ மகா வம்ச கோவன்களாலையும் முடியுமே

தீரா : அப்டியே ரீடர்ஸ்லாம் குதிக்க ஆரம்ச்சிடாதீங்க... இத நா சொல்றதுக்கு காரணம் இருக்கு... தொடர்ந்து படிங்க...

அஷ்வன்த் : அப்டி ஒரு வாய்ப்பு இருந்தாலும் ... கோவன்கள் பிறக்குரதுக்கான வாய்ப்பே இல்ல.. ஏன் சொல்றேன்னா நாம இருக்கும் போதே பஞ்சலோகத்தவர்கள் பிறந்தது ஒரு அதிசயம்... அவங்க கூட யட்சினி சர்ப்ப வம்சத்தவர்கள அழிக்க தான் பிறப்பெடுத்துர்க்காங்க... சோ கோவன்களால நிர்பந்தம் ஏற்படாம திரும்ப பிறக்க முடியாது.. அப்டியே நிர்பந்தம் ஏற்படனும்னாலும் அதுக்கு கோவன்கள் கையால நுப்பது வர்ஷத்துக்கு முன்னாடி கழுத்தறுப்பட்டு வதம் செய்யப்பட்ட முப்பெரும் தேவன்கள் தான் உயிர்த்தெழனும்... அதுக்கு துளியும் வாய்ப்பு இல்லன்னு நமக்கே தெரியும் என தாமே நடக்காத ஒன்றிற்கு ஆசையை வளர்க்க வேண்டாமென அப்படியே முடித்து விட்டான்...

துருவ் : ஏன் சித்தா கோவன்கள் ஏமாற்றப்பட்டு தானே கொலை செய்யப்பட்டாங்க... அப்போ அவங்கள ஏமாத்துனவங்கள பழிவாங்க அவங்க பிறப்பாங்க தானே..

சரண் : துருவ் கண்ணா.. உன்னோட இந்த ஒரு கேள்விக்கு பல முறை பதில் சொல்லிட்டோம்... கோவன்கள கொல்றது நடக்காத விஷயம் டா என அவனுக்கு புரிய வைக்க முயற்சிக்க

துருவ் : என்ன சித்தா சொல்ல வரீங்க... அவங்கள யாராலையுமே கொல்ல முடியாதுன்னா ஏன் அவங்க இப்போ நம்ம கூட இல்ல... அவங்க உயிரோட தான இருக்கனும்... ஆனா மரணமே இல்லன்னு சொன்ன அவங்க மூணு பேரும் கொல்லப்பட்டு உங்க கண்ணு முன்னாடி தானே இறந்தாங்க ...

சித்தார்த் : அவங்க கொல்லப்படல துருவா... தற்கொலை செய்ய வைக்கப்பற்றுக்காங்க.. என இவன் திடீரென எங்கிருந்தோ வர சஹாத்திய சூரர்கள் மெருமூச்சை இழுத்து விட்டனர்...

துருவ் : நீயும் ஏன் டா கொழப்புர...

சித்தார்த் : ஆமா துருவா... தர்மன் ஐயா சொன்ன மாரியே அவங்களுக்கு மரணமே கிடையாது தான்... ஆனா அன்னைக்கு அவங்க மூணு பேரும் நம்ம அஞ்சு வம்சங்களுக்கும் எதுவும் ஆக கூடாதுன்னு தான் தங்களை தானே அழிச்சிக்கிட்டு அந்த வாயிலையே திறக்க முடியாதபடி செஞ்சிட்டாங்க... அவங்கள யாராலையும் கொல்ல முடியாதுங்குரதால தான் பாதி செத்துக்குட்டு இருந்த உடல அவங்களே அழிச்சிக்கிட்டாங்க... அவங்கள யாராலையும் கொல்லவே முடியாதுங்குர இயற்கை நியதி தான் அவங்கள தங்களத்தானே அழிச்சிக்க வச்சு அவங்களுக்கு மறுப்பிறப்பெடுக்க இருந்த வாய்ப்பையும் அழிச்சிடுச்சு என்றான் இறுகிய குரலில்...

இத்துனை நாட்களும் உண்மையில் அவர்கள் கொல்லப் பட்டனர் நஞ்சினால் தான் மரணமெய்தினர் என சஹாத்திய சூரர்களை தவிர்த்து அனைவரும் கண் மூடி நம்பினர்...

ஆனால் அம்மூவர் மரணத்தை தானாகவே தான் சென்று வாங்கி கொண்டனர் என்பதை புரிந்து கொள்ள தான் அனைவருக்கும் வெகு காலமெடுத்து விட்டது

ரித்விக் : உனகக்கிதெல்லாம் எப்டி தெரியும் சித்து... அதோட உனக்கு எப்டி எல்லா விஷயமும் நியாபகம் இருக்கு... நீங்க மூணு மேரும் எஐஸ்ரீஅ செ.ஞ்சீங்க... ஏன் அத சொல்லவே இல்ல...

சித்தார்த் : நா ஒரு மாசமா சேகரிச்சு புரிஞ்சு தெரிஞ்சிக்கிட்டது தான் மாமா... ஆனா நா எவ்ளோ தான் தெரிஞ்சிக்கிட்டாலும் இன்னைக்கு வர எதுவுமே முழுசா புரியல... இப்போ தான் எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டேன் என கூறியவனின் குரலில் வேறு ஒன்றை புரிந்து கொண்டதற்கான உள் அர்த்தமும் இருந்தது....

ரக்ஷா : சரி உனக்கு என்ன கண்ணா ஆச்சு... அத மொதல்ல சொல்லு சித்தார்த் பதில் கூற வாயெடுக்கும் முன் மாடியிலிருந்து கேட்ட விகியின் உறுமல் அனைவரையும் மிரள வைத்தது...

ஓய்விலிருந்த அனைவரும் பதறி அடித்து கொண்டு எழ இவர்கள் அனைவரும் தடதடவென மாடிக்கு ஓடியிருந்தனர்...

முதலில் மிரட்சியிலிருந்து வெளிப்பட்ட ரக்ஷவ் மாடிக்கு ஓட அவன் ஓடும் திசையில் இரண்டாமணி நாயகன்களும் பின் தொடர ஐலாவிற்கோ கால் நகருவேணா என அங்கேயே பசை வைத்து ஒட்டியதை போல் சமைந்திருந்தது...

விகியின் உறுமலை கண்டு கொண்டு அந்த கதவை திறக்க போன சித்தார்த்தை முகில் தடுத்து நிறுத்தினான்...

முகில் : நீங்க யாரும் உள்ள வர வேண்டாம்... முதல்ல நாங்க போறோம்... அப்ரமா நீங்க வாங்க.. விகி இருக்குர கோவத்த யாத்தா யுகி அகியும் இன்னும் சில நிமிஷங்ளையே எழுந்திடுவானுங்க.. மூணு பேரும் எல்லாரையும் பாத்தா இன்னும் கோவந்தான் படுவாங்க என நீண்ட விளக்கமளித்து கொண்டிருக்க அதை கவனித்து கொண்டிருந்த அனைவரையும் தள்ளி விட்டு அந்த கதவை திறந்து உள்ளேயே சென்றிருந்தான் ஆதியன்த்...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே.. எனக்கும் உங்கள காக்க வைக்க மனசில்ல... ஆனா எப்போலாம் நா கதைய முடிச்சிடலாம்டா... எண்டிங்க ரீச் பன்னீடலாம்டான்னுலாம் சபதமெடுக்காத குறையா ப்லன் போடுறேனோ அப்போலாம் என் விதிக்கு மூக்கு வேர்த்துடுது... இப்போ என்ன எக்ஸ்க்யூஸ் கேக்க போறன்னு தான கேக்குறீங்க... எனக்கு வேற வழியும் இல்லையே... மாடல் எக்ஸம் வைக்கிறேன்னு சொன்னவங்க இப்போ அத கன்சல் பன்னிட்டு டரெக்ட்டா குவார்ட்டலி எக்ஸம்க்கே போய்ட்டாங்கப்பா...

ஆன்லைன் வச்சதுக்கு எனக்கு ஸ்கூல் வச்சிருக்கக் கூடாதான்னா ஃபீலாகுது... ஸ்கூல் போன ஒரு வர்ஷத்துல கூட நா 5 கதைய முடிச்சிட்டேன்.. ஆனா இப்போ ஒரு கதைய தான் முடிச்சிர்க்கேன்.. ஹ்ம் சரி அத விடுங்க... நவம்பர் முதல் வாரம் என் கிட்டேந்து எந்த யூடியும் இருக்காது... 5 டேஸ் எக்ஸம் வச்சிருக்காங்க... (நடுவுல கூட ஸ்டடி ஹாலிடே இல்ல தெரியுமா... ஓ மை காட் 😭😭😭) அது வரை இருக்க அஞ்சு நாள் யூடி வரும் கவலை வேண்டாம்... இந்த எக்ஸம முடிச்சிட்டு மாயம் கதை முடிச்ச பிறகு தான் நான் மறுவேலை பாக்க போறேன்... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro