Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

👹5👹

தன்னுடைய டீலல பற்றி அவளிடம் விளக்கியவன் அவளின் பதிலை எதிர்பார்த்து கைகளில் கன்னத்தை ஏந்தி காத்திருந்தான்.

அவனை எதிர்த்து பேசவும் முடியாமல் என்ன செய்வது என செய்வதறியாது முழித்தவளின் மனக்கண்ணில் ஒரு நிமிடம் அவளின் தந்தை வந்து நின்றார்.

"ஆரா, நல்லா படிக்கணும். அப்பாக்கு பெருமை சேர்த்து குடுக்கணும். அப்பா தலை குனியிற மாதிரி எந்த வேலையும் வச்சுக்க கூடாது.

காலேஜ் போனோமா வந்தோமான்னு இருக்கணும். அங்க இங்க சுத்துனன்னு என் காதுக்கு வந்தது அப்புறம் நான் பொல்லாதவன்னா ஆயிடுவேன்.

உன் மேல இருக்குற நம்பிக்கையில தான் பசங்க படிக்கிற காலேஜ்ன்னும் பாக்காம உன்னை சேர்த்து விடுறேன்.

இல்லாட்டி பொண்ணுங்க மட்டும் படிக்கிற காலேஜ்ல தான் சேர்த்துவிட்டு இருப்பேன்.

என் நம்பிக்கையை நீ காப்பாத்துவன்னு நம்புறேன். " 

மீண்டும் மீண்டும் அவர் குரல் காதில் ஒலிக்க கண்களை திறந்து ஒரு முடிவுடன் அன்பினியனின் முன் நின்றாள்.

"என்ன மன்னிச்சிடுங்க சீனியர். நான் பண்ணினது தப்பு தான். அதுக்காக எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க நான் தயாராக இருக்கேன்.

ஆனா இது மட்டும் என்னால முடியாது. நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் சரி. உங்களுக்கு இருக்கப் பவருக்கும் அழகுக்கும் நீங்க சொன்ன கண்டிஷனுக்கு யார் வேணா ஒத்துக்குவாங்க.

ப்ளீஸ் என்னுடைய சூழ்நிலை புரிஞ்சுக்கோங்க. என்னால முடியாது. நான் எங்க படிக்க மட்டும்தான் வந்திருக்கேன். என்னால வேற எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க. நீங்க வேற யாரையாவது செட் பண்ணிக்கோங்க." என்றவள் அங்கிருந்து நகர அவள் கையை பிடித்து இழுத்தான்.

" இந்த டீல் நான் முடிவு பண்ணது. இதை ரிஜெக்ட் பண்ற உரிமை உனக்கு இல்ல. நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும்."

அழுத்தமாகக் கூற மீண்டும் அவள் கண் முன் அவள் தந்தை தோன்ற தன் கையை அவன் கையிலிருந்து பிரித்தாள்.

" மன்னிச்சிடுங்க சீனியர்." என்று வாசல்வரை செல்ல,

"ஒரு நிமிஷம்" என்ற அவன் குரலில் திரும்பி பார்த்தாள்.

" என்னுடைய டீல்ல உன்னால கேன்சல் பண்ண முடியா.து இன்னும் ரெண்டு நாள்ல நீயா என்கிட்ட இந்த டீல்ல எனக்கு சம்மதம் சொல்லிக்கிட்டு என்கிட்ட வருவ.

நான் வர வைப்பேன்."  என கூற அவளும் பார்க்கலாம் சீனியர் என்று கூறி அங்கிருந்து நகர்ந்தாள்.

தன் முன்னால் நிற்பது தன் நண்பன் அன்பினியன் தானா என்ற சந்தேகத்தில் தீனாவும் அமுதனும் பார்க்க,

" என்னடா அப்படியே பாக்குறீங்க?"

"மச்சி உண்மையிலேயே நீ அந்த பொண்ணா விரும்புறியா?"

"ஆர் யூ மேட். நான் எப்படிடா??? போயும் போயும் அவளை லவ் பண்ணுவேன்?? சும்மா காலேஜ்க்காக அவ எனக்கு லவ்வர். அவ்ளோ தான்."

அமுதன் அவனருகில் வந்து,

"ஏண்டா அவகிட்ட இவ்வளவு சாப்டா பேசுற. அவ உன்னுடைய டீல ரிஜக்ட் பண்ணிட்டுப் போயிட்டா. அப்பவும் நீ அமைதியா பேசிகிட்டு இருக்க." என கூற அவனோ சிரித்தவன்,

" அதனால தான் டா அமைதியா இருந்தேன்."

அமுதன் ஒரு புரியாமல் பார்த்தான்.

"அன்புவோட  லவ்வர்க்கு கொஞ்சமாவது ஆட்டிடூய்ட் வேணும்ல. இதுவும் இல்லைனா யாருடா நம்புவா." எனக் கூற அவனும் சிரித்தான்.

அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஆராதனா இதயம் படபடவென அடித்தது.

கல்லூரி வந்த முதல் நாளே தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக் கொண்டதாய் உணர்ந்தாள். அவள் இதற்கு காரணமான பிரியாவின் மேல் கொலைவெறியில்  வகுப்பை நோக்கி சென்றாள்.

அங்கு பேராசிரியர்கள் யாரும் இல்லாமல் மாணவர்கள் மட்டும் அமர்ந்திருக்க அவளை பார்த்ததும் மாணவர்கள் அவர்களுக்குள்ளாகவே சலசலத்து கொண்டிருந்தனர்.

அவர்களின் பார்வையில் இருந்தது எள்ளலலா பயமா அருவருப்பா என்னவென்று அவளால் பிரித்தறிய முடியவில்லை.

ஆனால் இந்த பார்வைகளில் இருந்து தப்பி ஓட எண்ணினாள்.

ஆனால் பாவம் அவளால் தான் முடியவில்லை. அமைதியாய் சென்று பிரியாவின் அருகே அமர அவளோ என்னவென்று கேட்க அவளிடம் அனைத்தையும் கூறி முடித்தாள்.

அவள் சொன்னதும் குற்ற உணர்வு மேலோங்க, " என்ன மன்னிச்சிடு ஆரா.  என்னால தானே இதெல்லாம் நான் வேணா அவங்ககிட்ட பேசிப் பார்க்கிறேன். சாரி சொல்லி கால்ல கூட விழுறேன்."

"விடுடிடிடி . அவங்க கிட்ட யாராலும் பேச முடியாது. நீ சொன்னாலும் கேட்க மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்."

"நீ என்ன பண்ண போற."

"நான் இதுக்கு கண்டிப்பாக சம்மதிக்க மாட்டேன். அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என்னை யாருக்காவது கட்டிவிட்ருவாரு.அவருக்கு தெரியாம இந்த பிரச்சனையா எப்படியாவது சரி பண்ணனும்."

"இப்போ என்ன பண்றது?"

"நான் காலேஜ் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு இருக்கேன்."

"என்னடி சொல்ற விளையாட்டா சொன்னதுக்கே நம்மளுக்கு இந்த நிலைமை. இதுல நாம அவனை எதிர்த்து நிற்கிறது என்னவோ எனக்கு சரியா படல. அதுவுமில்லாம அவனுக்கு எதிராக பண்றது நமக்கே ஆபத்தாக முடியலாம்,ஆரா."

"இதைவிட நம்மகிட்ட வேற எந்த ஆப்ஷனும் இல்ல."

அவள் சொல்வதும் சரி என பட முயற்சி செய்து பார்ப்போம் என இருவரும் பிரின்ஸ்பல் அறையை நோக்கி சென்றனர்.

கல்லூரி முதல்வர் அறையின் வாசலில் நின்றிருந்தவரிடம் பிரின்சிபாலை பார்க்க அனுமதி வேண்டி நிற்க அவரும் உள்ளே சென்று அவரிடம் அனுமதி வாங்கி வந்து இருவரையும் உள்ளே விட்டார்.

"குட் மார்னிங் சார்." என இருவரும் உள்ளே சென்றனர்.

"குட்மார்னிங் யங் லேடிஸ். சிட்." என்ற  உற்சாகமான அவர் குரலில் தோழமையும் தெரிய  தைரியம் உடன் பேச ஆரம்பித்தாள், ஆராதனா.

"சார், என் பேர் ஆராதனா. பிஎஸ்சி மேக்ஸ். ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கனும்." என்று அவள் கூற தோழமையுடன் இருந்த முகம் சற்று கடுமை ஏறியதோ என்னவோ?

" நீங்க அன்பினியனோட லவ்வர் தானே." என்றவர் ஒரு கசந்த புன்னகையுடன்,

" சொல்லுங்க மேடம். உங்களோட கம்ப்ளைன்ட் என்னவா இருந்தாலும் நான் சரி பண்ண பார்க்கிறேன்." என்று கூறினார்.

"நான் அன்பினியனை பற்றி கம்பெனி கொடுக்கணும்." என்று கூற  தன் இடத்திலிருந்து எழுந்துவிட்டார், அறுபது வயது மதிக்கத்தக்க பிரின்ஸ்பல்.

அந்த நேரத்தில் அந்த அறைக்குள் அவர் அனுமதியுடன் நுழைந்தார், பேராசிரியர் சதாசிவம்.

உள்ளே அமர்ந்திருந்த ஆராதனாவையும் ப்ரியாவையும் குழப்பமாக பார்த்தவாறு பிரின்ஸ்பலை நெருங்கினார்.

" என்ன உளர்றீங்களா?  அன்பினியனை பத்தி கம்ப்ளைன் பண்ணனும்னு சொல்றீங்க. உங்க காதல் விளையாட்டுக்கு எப்படித்தான் இந்த மாதிரி எங்களை  உபயோகப்படுத்த நினைக்கிறீங்களோ?" என அவர் பொறித்து தள்ளினார்.

ஆராதனா தயக்கமாக சதாசிவத்தை பார்த்தவாறு "அவர் என்னோட லவ்வர் இல்லை." என கூறியவள் நடந்த அனைத்தையும் இன்றைய அவனுடைய டீல் என அனைத்தையும் அவர் இருவரின் முன் கூறி முடித்தாள்.

வகுப்பறையிலேயே ஆராதனா அந்த மாதிரி பெண்ணில்லை என்று உணர்ந்த சதாசிவம் உண்மையை உணர்ந்தபின் அவளுக்காக மிகவும் வருந்தினார்.

" உங்களுக்கெல்லாம் இது விளையாட்டு தெரியுதா? அதனால்  எவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டி இருக்குன்னு உங்களுக்கு தெரியல. அந்த சைக்கோ என்ன நினைக்கிறானோ அதான் இந்த காலேஜ்ல நடக்கணும்னு நினைப்பான். எங்களால எதுவும் பண்ண முடியாது." என்றுகூற ஆராதனா  பிரின்சிபாலை பார்த்தாள்.

"சதாசிவம்  சொன்ன மாதிரி இதுல எங்களால எதுவும் பண்ண முடியாது.

இந்த பிரச்சினைய நீங்க தான் சரி பண்ணனும்.

எனக்கு என்னவோ அவனோட டீலுக்கு நீ ஒத்துக்குறது தான் சரின்னு படுது. இல்லாட்டி உன்னை ஒத்துக்க வைக்க எந்த எல்லைக்கு வேணாலும் போவான்.

ஒரு பிரின்ஸ்பல்லா என்னால உன்கிட்ட இத மட்டும் தான் சொல்ல முடியும்."

"நீங்களே இப்படி சொன்னா எப்படி?"

"சாரிமா என்னால எதுவும் பண்ண முடியாது. அந்த அன்ப பகைச்சுக்காத. அது உனக்கும் உன்னை சுத்தி இருக்குறவங்களுக்கு நல்லதல்ல"

இதற்கு மேல் இவர்களிடம் பேசி பலனில்லை என உணர்ந்தவள் அந்த இடம் விட்டு அகன்றாள்.

நேரே வகுப்பறைக்கு சென்ற சிறிது நேரத்தில் பேராசிரியர் ஒருவர் வகுப்பு அறைக்குள் நுழைந்தார்.

அவரை வணங்கியவாறு எல்லோரும் எழுந்து நிற்க அனைவரையும் உட்கார கூறியவர் அறையை ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு,

"ஹீ இஸ் ஆராதனா?" எனக்கேட்க ஆராதனா திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.

"கிளாஸ் விட்டு வெளியே போ. நான் கிளாஸ் எடுக்கணும்." என அவளோ ஏன் என்ற கேள்வியோடு அவரை ஏறிட்டாள்.

அவரோ, "உன்னை வெளிய போக சொன்னேன். உன்னை வச்சிகிட்டு கிளாஸ் எடுக்கக்கூடாதுன்னு எனக்கு ஆர்டர் வந்திருக்கு." என்றார்.

அவளுக்கும் யார் இந்த ஆர்டரை கொடுத்திருப்பார் என புரிய தன்னுடைய புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

முதல்நாளே கல்லூரியில் அனைவரின் பார்வையும் அவள் மேல் வித்தியாசமாய் பார்த்ததை வெறுத்தவள் யாருமில்லாத ஒரு ஓரமாய் சென்று மரத்தின் அருகே நின்றாள்.

காலையிலிருந்து நடந்த அனைத்தையும் எண்ணிப் பார்த்தவள் சோர்ந்து போக,

" மிஸஸ் ஆராதனா அன்பினியன்" என்ற குரல் தன் பின்னால் இருந்து வர நடுங்கி திரும்ப, அருகில் கிடந்த சிறிய கல் தடுக்கி பின்னால் விழப்போனவளை தாங்கினான், அன்பினியன்.

விழ போனவள் விழாமல் இருக்க இறுகிய கண்களை திறக்க தன் முன் இருந்த அன்பினியனை பார்த்ததும் நெருப்பில் இட்ட புழுவாய் துடித்து அவன் அணைப்பிலிருந்து நகர்ந்தாள்.

ஒரே ஒரு புன்னகையை சிந்தி அவன் அவள் அருகே வந்தான்.

"என்ன ஆரு. நான் படிக்கணும். முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டு, ஏன் இப்படி கிளாஸ் விட்டு வெளியே வந்து நிக்கிற.

படிக்கலையா?" என நக்கலாக கேட்க அவளும் தலைகுனிந்தாள்.

அவளை நெருங்கியவன் ஒரு விரல் கொண்டு அவள் முகத்தை  நிமிர்த்தியவன்,

"உன்னால முடியாது. பேசாம டீலுக்கு ஓகே சொல்லிடு. இல்லாட்டி நீ ரொம்ப அனுபவிப்ப."

அவன் விரலை தட்டிவிட்டாள்.

" அதையும் பார்க்கலாம் சீனியர்." என்று நகர, அவள் கையை பிடித்து இழுத்தான்.

  அவன் இழுப்பில் அவன் மேலே அவள் வந்து விழ,  அவன் கண்ணை பார்த்து,

" எவ்வளோ முயற்சி பண்ணுனாலும் நான் ஒத்துக்க மாட்டேன்." அவனோ சிரித்துக் கொண்டு  அவளை பார்க்க,

அவளோ அப்பொழுது தான் அவனை உரசிக்கொண்டு இருப்பதை உணர்ந்து அவனை தள்ளி விட்டு அவளும் நகர்ந்து நின்றாள்.

"நைஸ் கான்பிடன்ட். ஐ லைக் இட். சீ யூ டுமாரோ பேபி என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.






Bạn đang đọc truyện trên: Truyen247.Pro