Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 7

"வரு, இந்த ஃபோட்டோவை என் கிட்ட இருந்து திரும்ப வாங்கிக்காதடா, என் கிட்டயே பத்திரமா இருக்கட்டுமே?..... ப்ளீஸ்!" என்று கெஞ்சலாக கேட்டவனின் சட்டையை கோபத்தில் கொத்தாக பற்றியிருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"உன் கிட்ட எதுக்குடா என்னோட ஃபோட்டோ இருக்கணும்? நீ தான் எனக்கு நல்ல பையனை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கணும்ன்னு சொல்றல்ல..... அப்போ எப்படியும் நான் இன்னொருத்தனுக்கு வொய்ப் ஆகணும்ல; அப்புறம் எப்படி என் போட்டோவை நீ உரிமையா வச்சுட்டு இருக்க முடியும்? என் கிட்ட குடுடா!" என்று அவன் பாண்ட் பாக்கெட்டில் கை வைத்தவளை, "ஒரு நிமிஷம் பொறுமையா இரு வரு! உன் கோபம் எனக்கு புரியுது. இப்போ என்ன? நான் உன்னோட போட்டோவை வச்சிருக்க கூடாது! அவ்வளவு தானே? இந்தா!" என்று அரை மனதுடன் ஒரு முறை ஃபோட்டோவை வருடி விட்டு அவளிடம் நீட்டினான் சிவ மித்ரன்.

அவனிடம் அதை பிடுங்கியவள் சட்டென்று அதை துண்டு துண்டாக கிழித்து கீழே வீசி எறியவும் மித்ரனின் கோபம் எல்லை கடந்தது. அவனது கோபத்தின் தீவிரம் ஐஸ்வர்யாவின் கன்னத்தில் கைத்தடம் பதியும் அளவில் பளார் என்ற சத்தத்துடன் அறையாக மாறியிருந்தது.

கன்னத்தை கையால் தாங்கிக் கொண்டு இருந்தவளை இழுத்து அணைத்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான் சிவ மித்ரன். புரியாத பாவனையுடன் நின்று கொண்டு இருந்தவளிடம், "எனக்கு புரிய வைக்க தான் நீ இதெல்லாம் செஞ்சன்னா..... எனக்கு புரிஞ்சுடுச்சு வரு! எப்போ உன் போட்டோவை உரிமையா எடுத்து என் பர்ஸ்ல வச்சுக்கிட்டேனோ.. அப்போலேர்ந்து; நான் உன்னை காதலிக்கிறேன். தேவையில்லாம இனிமேல் நான் ரொம்ப யோசிக்க போறது இல்லை. உன்னை சந்தோஷமா வச்சிருந்தா போதும்! நானும், ஸாரும் சந்தோஷமா இருப்போம். ஆனாலும் எனக்கு உன் மேல ரொம்ப கோபம் வரு! போட்டோவை கிழிச்சுட்டியே......!" என்று ஆதங்கத்துடன் கேட்டு கீழே சிதறியிருந்த கிழிந்த துண்டுகளை சேகரித்தவனிடம்,

"நான் ஒரு பிஸினஸ் மேனோட பொண்ணு; பார்க்க கொஞ்சமே.... கொஞ்சம் அழகா இருக்கேன், நல்ல டான்ஸர், என் அக்கவுண்ட்ல நிறைய பணம் இருக்கு, என் கிட்ட நிறைய சொத்துக்கள் இருக்கு.... எக்ஸட்ரா எக்ஸட்ராவுக்காக எல்லாம் என்னை ஒரு பையன் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நினைச்சேன் மித்து! அதனால தான் மாமா கிட்ட இங்க வந்ததும் என்னை பத்தின விஷயம் எதையும் யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி வச்சிருந்தேன். ஆனா அப்பா, அம்மா எனக்கு உன்னை லைஃப் பார்ட்னரா சூஸ் பண்ணினாங்கன்னு எனக்கு இப்போ வரைக்கும் தெரியாது. அவங்க நினைச்சிருந்தா பிஸினஸ் பிரண்ட்ஸ் சர்க்கிள்ல எனக்கு சூட் ஆகிற பையனை செலக்ட் பண்ணி இருக்கலாம்ல மித்து? அதை ஏன் செய்யல? அம்மாவும், அப்பாவும் உன் டிக்னிட்டி, செல்ஃப் ரெஸ்பெக்ட் எல்லாத்தையும் கேள்விப்பட்டு தான் மாமா கிட்ட ப்ரப்போஸல ஓகே பண்ணியிருப்பாங்க. ஆனா அப்பா, அம்மாவோட இழப்பு என் வாழ்க்கையை அப்படியே ஃப்ரீஸ் பண்ணிடுச்சு. கொஞ்ச நாளைக்கு எதையுமே யோசிக்க முடியல. யார் கிட்டயும் பேச பிடிக்கல. அப்போ யார் தோள் வளைவிலயாவது சாய்ஞ்சு அழுதா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. பட் எனக்கு தெரியாதே...... அந்த தோளுக்கு சொந்தக்காரன் இண்டியாவில இருக்கான்னு...... தெரிஞ்சு இருந்தா இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வந்துருப்பேன். அப்ப்ப்ப்பா..... ரொம்ப வலிக்குற மாதிரி அடிச்சிட்ட மித்து! ஒரு நிமிஷம் இரு!" என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டு வந்தவள் கையில் அவளின் புகைப்படம் இருந்தது.

"இந்தா உன் கிட்ட இருந்த என் போட்டோவோட இன்னொரு காப்பி, என் கிட்ட இருந்ததை உனக்கு குடுத்துட்டேன். என்னையும் உன் கிட்ட குடுத்துட்டேன். பத்திரமா பார்த்துப்ப தானே?" என்று கேட்டவளை

"இப்போதைக்கு ஸாரை தவிர நீ தான் என்னோட மத்த எல்லா சொந்தமாவும் இருக்க கண்மணி! உன்னை எப்படி ஃபேஸ் பண்றதுன்னு தயங்கி தான் நான் யூஎஸ்க்கு ஸார் கூட வராம இருந்துட்டேன். ஆனா அப்போ பேசியிருந்தா நமக்குள்ள இவ்வளவு ஸ்மூத்தா அண்டர்ஸ்டாண்டிங் வந்துருக்குமான்னு தெரியலடா! இனிமேல் உன் முயற்சிகள் எல்லாத்துக்கும் ஸப்போர்ட்டா நான் இருப்பேன். என்னிக்குமே உன்னை காதலிச்சுட்டே இருப்பேன். ஐ லவ் யூ! ஐ லவ் யூ! ஐ லவ் யூ மை டியர் வரு பேபி!" என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டான் சிவ மித்ரன்.

"ஏன் மித்து போட்டோவை கிழிச்சு... நீ என்னை அறைஞ்சு, இதுக்கு பேரு தான் உங்க ஊர்ல ஸ்மூத் அண்டர்ஸ்டாண்டிங் ஆ? அது எப்படி மாஸ்டர் நீங்க யோகா ப்ராக்டிஸுக்கு வர்ற குட்டி பாப்பாவை எல்லாம் நீ கண்மணின்னு கூப்பிடுவிங்களா?......
டோண்ட் லை மித்து!" என்று சொல்லி சிரித்தவளிடம்

"அது தான் பொய் சொல்றேன்னு உனக்கே தெரியுதுல்ல..... அப்புறம் எதுக்கு கேள்வி வேற கேட்டுட்டு? நீ மட்டும் தான் என்னோட கண்மணி....
தௌசண்ட் டைம்ஸ் ஸாரிமா, இனிமேல் லைஃப் லாங் உன்னை அடிக்கவே மாட்டேன். ரொம்ப வலிக்குதா? இரு ஐஸ் க்யூப்ஸ் எடுத்துட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு ஐஸ் கட்டிகளை கொண்டு வந்தான் மித்ரன்.

கொஞ்சம் முத்த ஒத்தடங்கள், கொஞ்சம் பனிக்கட்டி ஒத்தடங்கள் என்று மாறி மாறி ஒத்தடம் இட்ட மித்ரன், "வரு பேபி, நீ இன்னும் எனக்கு ஐ லவ் யூ சொல்லவே இல்லையே? எப்போ சொல்லுவ?" என்றான் ஆவலுடன்.

அவன் மார்பினில் முகத்தை வைத்துக் கண்மூடி கிடந்தவள், "அவ்வளவு சீக்கிரமா சொல்லிடுவேனா மிஸ்டர் சிவ மித்ரன்? நீங்க அதுக்கு இன்னும் என்னோட சில பல கண்டிஷன்ஸ்க்கு எல்லாம் ஓகே சொல்லணும்!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"கண்டிஷன்ஸா? ம்ஹூம்! ஏதோ இடிக்குதே, சரி ஓகே; உங்க கண்டிஷன்ஸ் என்னன்னு சொல்லுங்க ஐஸ்வர்யா மேடம்! கேப்போம்!" என்று புன்னகையுடன் அவள் மூக்கை பிடித்து ஆட்டியவனிடம்,

"இனிமேல் டெய்லி காலையில ஆறு மணிக்கு யோகாவுக்கு என்னை கூப்பிடக் கூடாது. டெய்லி ஈவ்னிங் நீ ஹாஸ்பிட்டல்ல இருந்து வரும் போது ரெண்டு சாக்லெட்ஸ், அப்புறம் ஒரு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வரணும். நம்ம லவ் பிரப்போஸல் டே செலிபரேஷன்க்கு இன்னிக்கு நைட் எனக்கு பானிபூரி வாங்கி தரணும்! இதெல்லாம் தான் கண்டிஷன்ஸ். இதுக்கு எல்லாம் நீ ஓகே சொன்னா தான் நானும் உனக்கு ஐ லவ் யூ சொல்லுவேன்!" என்று மிகவும் உறுதியான முடிவு எடுத்தவளை பார்த்து புன்னகைத்து விட்டு,

"உன் கண்டிஷன் எதையும் என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியாது. இப்போதைக்கு உன் லவ் யூ எனக்கு வேண்டாம். கல்யாணத்துக்கு அப்புறம் கேக்குற மெத்தட்ல கேட்டு வாங்கிக்கறேன். அப்புறம் நாளைக்குல இருந்து நீ ஈவ்னிங் ஒன் ஹவர் டான்ஸ் ப்ராக்டிஸும் செய்யணும். பீ ரெடி! வா லன்ச் சாப்பிடலாம்!" என்று எழுந்தவன் கையை பிடித்துக் கொண்டு,

"மித்து! திஸ் இஸ் நாட் ஃபேர்! நீ உட்காரு, நம்ம பேசி ஏதாவது சமாதான உடன்படிக்கை செஞ்சுக்கலாம்!" என்று கேட்டவளிடம்

"நோ வே வரு பேபி, பை!" என்று கையசைத்து விட்டு உள்ளே சென்று விட்டான் சிவ மித்ரன்.

மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்த அருள்மொழியிடம் ஐஸ்வர்யா, "சீக்கிரம் முஹுர்த்தம் பாருங்க மாமா, இந்த பையன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான். என்னை தான் லவ் பண்றேன்னு கூட சொல்லிட்டான்!" என்றாள்.

அருள்மொழி அவனிடம், "ஐசு நல்ல பொண்ணுடா மித்ரா! அவளை இனிமேல் மனசு வருத்தப்படாம நீ தான் பார்த்துக்கணும்!" என்றார் இருவரையும் கைப்பற்றி கொண்டு.

"நல்லா சொல்லுங்க மாமா! ஒரு பானி பூரி கேட்டா வாங்கி தர மாட்டேங்கிறான், மித்து சரியான பித்து!" என்றவளின் காதை திருகினார் அருள்மொழி.

"ச்சு.....ஆ; வலிக்குது மாமா விடுங்க!" என்று அலறியவளிடம்

"உன் ஃப்யூச்சர் ஹஸ்பெண்டை போய் மரியாதை இல்லாம பேசுற, மித்து சொல்ற டயட்டை தான் ஸ்ட்ரிக்டா பாஃலோ பண்ணணும். அன்னிக்கே உன் கிட்ட சொன்னதுக்கு தலையை ஆட்டின? சொன்னது மறுபடியும் மறந்து போச்சா?" என்று கேட்ட அருள் மொழியிடம்

"ஸார்! த்ரீ மன்த்ஸ் கழிச்சு மேரேஜ் பிக்ஸ் பண்ணுங்க ஸார். ஐஷூவை பெர்பெக்ட் ஃபிட்டா ரெடி பண்ணிட்டு, அவ நாட்டிய அரங்கேற்றம் செஞ்ச பிறகு தான் நான் அவளை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன். அவளோட டேலண்ட்ஸை எல்லாருக்கும் தெரிய வைக்கணும் ஸார்! அங்கிள், ஆன்ட்டி கடைசியா ஆசைப்பட்டது, அதனால கண்டிப்பா நாம இதை செஞ்சுடணும் ஸார்!" என்றான் மித்ரன் தீர்மானமாக.

"நீ என்னடா சொல்ற ஐசு?" என்று கேட்ட தன் மாமாவிடம்,

"ம்ப்ச், என்னால முடியும்ன்னு எனக்கு தோணலை மாமா.....ப்ளீஸ்! என்னை விட்டுடுங்களேன்!" என்று சொன்ன ஐஸ்வர்யாவை கவலையாக பார்த்த அருள்மொழி, "இல்லடா ஐசு! நான் என்ன சொல்றேன்னா...!" என்று பேசிக் கொண்டு இருக்கையில் மித்ரன் அவரிடம் மறுப்பாக தலையசைக்க பேச்சை பாதியில் நிறுத்தி கொண்டார்.

"ஆறு மணி தானே ஆகுது. ரெண்டு பேரும் எங்கேயாவது குட்டி வாக்கிங், இல்ல கார்ல ஒரு ட்ரைவ் போயிட்டு வரலாம்ல?" என்று கேட்ட அருள் மொழியிடம்,

"ஸார் உங்களுக்கு ஸ்நாக்ஸ் செஞ்சு வச்சுட்டேன். ப்ளாக் காஃபி ப்ளாஸ்க்ல இருக்கு. ஐஷு ஹெல்ப் பண்ணினதால எல்லா வேலையும் முடிஞ்சது. நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா?" என்று அருள்மொழியிடம் அனுமதி கேட்டான் மித்ரன்.

"டேய் தம்பி மாமா இப்போ ஏதோ சொன்னாங்களே... உன் காதுல விழலையா? என்னை எங்கயாவது கூட்டிட்டு போ!" என்றாள் ஐஸ்வர்யா கோபத்துடன்.

"நீங்க முகத்தை தூக்கி வச்சுட்டு உட்கார்ந்துட்டு இருந்தீங்க. அது தான் உங்களுக்கு கிளம்ப மூட் இல்லையோன்னு நினைச்சேன். வாங்க மேடம் போலாம்!" என்று சொன்னவனை முறைத்த ஐஸ்வர்யா ஸ்ரீ தன் கார் சாவியை எடுக்க, "ஏனுங்க மேடம், உங்க கால் இருக்குதுல்ல.... அதை பத்திரமா க்ரீம் பூசி, செருப்பு போட்டு, நெயில் பாலிஷ் போட்டு அழகா மட்டும் தான் வச்சுருப்பீங்களா? இல்ல நடக்க, நிக்க, ஓட, குதிக்க இதுக்கெல்லாம் உபயோகிக்கவும் செய்வீங்களா?" என்று குறும்பு சிரிப்புடன் கேட்டான் சிவமித்ரன்.

"சாரி மித்து! என்னால ரொம்ப தூரம் எல்லாம் நடக்க முடியாது!" என்று சொன்னவளிடம்

"அதை நீயே முடிவு பண்ணிக்குவியா வரு? சரி வா, உன்னை சைக்கிள்ல கூட்டிட்டு போறேன்!" என்றான் மித்ரன் படிகளில் இறங்கியவாறு.

"வாட்.....ஆர் யூ ஜோக்கிங் மித்து?" என்று ஆச்சரியத்துடன் கேட்டவளிடம் ஒன்றும் பேசாமல் சென்று இரண்டு நிமிடங்களில் தன் சைக்கிளுடன் வந்து அவளை பின்புறம் ஏற்றிக் கொண்டான் மித்ரன்.

"ஏய் லூசு மித்து; என் பேலன்ஸுக்கு நான் எதை ஹோல்ட் பண்ணிக்குறது?" என்று கேட்டவளின் கையைப் பின்புறமாக பற்றி தன் இடுப்பை சுற்றி வளைத்து பிடிக்க செய்தான் மித்ரன்.

"கேர்புல் மித்து! பின்னால என்னை உட்கார வச்சு கூட்டிட்டு போற; யார் மேலயும் மோதி அவங்க மேல நான் விழுந்தன்னா மர்டர் அட்டெம்ப்ட் கேஸ்ல ஜெயிலுக்குப் போயிடுவ; யோசிச்சுக்க!" என்றவளிடம்

"பின்னால வரப் போற பிரச்சனையை அப்புறம் பார்க்கலாம். இப்போ என்னை கெட்டியா பிடிச்சு உட்காரு கண்மணி!" என்று சொன்னவன் தன் காதலியுடன் கிளம்பினான் சிவ மித்ரன்.

வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro