Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வசந்தம் - 2

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடையழகு

"டேய் கௌதம் போதும் டா நீ வொர்க்அவுட் பண்ணது கொஞ்சம் இங்கே வரியா?" என்ற தன் ரூம் மேட் சதீஸ் அண்ணாவின் குரலில் நிமிர்ந்து பார்த்தவன் உடலில் ஆங்காங்கே பூத்திருக்கும் வியர்வைத் துளிகளை  டவலால் துடைத்தவாறே எழுந்து நின்றான்.

சில்லென்ற தென்றல் அவன் மேனியை வருட இதழ்கள் அழகாய் புன்னகைத்தது.
இவன் கௌதம், கோயம்புத்தூரில் நண்பர்களுடன் தங்கி  வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான்.
படித்து முடிப்பதற்கு முன்பே கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துவிட "ஆத்தா எனக்கு வேலை கிடைச்சுடுச்சு" என்று இவன் கத்தாத குறை தான்.

தமிழ் மீடியம் படித்த எல்லாரும் பயந்து நடுங்குவது இதற்கு தான்.
ஏதோ வரும் ஆங்கிலத்தை வைத்து அவன் தேர்வாகி விட வானத்தில் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

கோயம்புத்தூர் பீளமேடு அருகில் மாடிகுடியிருப்பு ஒன்றில் மூன்றாம் தளத்தில் வசித்து வருகின்றான்.
இன்று இவனின் கோட்டா , அதாவது இவன் தான் சமையல் செய்ய வேண்டும் அதை செய்யாமல் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறது இந்த பக்கி.

மறுபடியும் சதீஸ் கத்த "இதோ வரேன் " என்று திரும்பியவன் கண்களில் பட்டாள் அவள்.
தோள்பட்டை அளவு மட்டுமே நீண்டிருக்கும் கூந்தல் அவள் அசையும் பொழுது அதுவும் அசைய பள்ளி சீருடையில் அம்மா காய வைத்த வத்தலை மேல் மாடியிலிருந்து எடுத்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

கண்கள் மின்ன அவளைப் பார்த்தவனின் இதழ்கள் மறுபடியும் புன்னகைப் பூக்களைப் பூக்க இவனைக் கண்டுக் கொண்டவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

இவனின் மாடிக்கருகிலேயே அவளின் மாடியும்.
எட்டிக் குதித்தால் அவள் வீட்டிற்கு சென்று விடலாம்.
ஆனால் அந்த எண்ணமெல்லாம் வந்ததில்லை.

அவள் வருவாளா என எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வந்ததென்னமோ அவள் அக்கா தான்.
அவள் பார்த்த பார்வையிலேயே பத்தடி தள்ளி நின்றவன் "சப்பா " என்று பெருமூச்சு வாங்கியபடியே உள்ளே நுழைந்தான்.

அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பியவன் ஐடி கார்டை கொண்டு ஸ்வைப் செய்து ஆபிஸினுள் நுழைந்து தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒரு புன்னகையை பரிசாக அளித்து அவன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

கணினியை ஆன் செய்தவனின் மனக்கண்ணில் திடீரென காலையில் கண்களுக்கு தோன்றிய அந்த  தேவதையின் முகம் வர
மறுபடியும் இதழோரம் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

அந்த நாள் முழுவதும் க்ளோசப் விளம்பரத்தில் வருபவன் போல் பல்லைக் காட்டிக் கொண்டே இருக்க ஏன் டா இப்படி பல்லை பல்லை காட்டுற என்ற நண்பனுக்கும் பல்லை தான் காட்டினான்.

மாலையில் அவளைக் காண்போமா என்ற ஆசையில் வந்தவனுக்கு சரியாக காட்சியளித்தாள் அவனின் தேவதை சைக்கிளில்.

தன் டையை சரிசெய்தவாறே "உங்க பேர் என்னங்க" என்று கேட்க அவள் முறைத்த முறைப்பில் சற்று பயந்து தான் போனான்.

எப்படியும் சொல்ல மாட்டா என்று நினைத்தவன் அவளைத் திரும்பி திரும்பி பார்த்தவாறே வீட்டிற்குள் நுழைந்தான்.

அன்று இரவு அவள் வெளியே வரவே இல்லை...ஆனால் அக்காவுடன் சண்டையிடுவது மட்டும் நன்றாக கேட்டது.
அவள் குரலும் அவளைப் போலவே அழகு என்று மனதில் நினைத்தவனுக்கோ ஒரே ஆச்சரியம்.

கௌதமைப் பொறுத்தவரை ஜாலியான டைப் தான் ஆனால் ஒரு நாள் முழுவதும் அவன் இப்படி சிரித்து புன்னகை முகமாக வலம் வந்ததே இல்லை...
இதற்கு காரணமான அந்த தேவதைக்கு ஆயிரம் நன்றிகள் சொன்னவன் நாளைக்கு சீக்கிரமே எழுந்திருக்கணும் என நினைத்தவாறே உறங்கச் சென்றான்.

"அடியே வரு " என்ற கத்தலில் கண் விழித்தவன் நேரத்தைப் பார்க்க அதுவோ சிரித்துக் கொண்டே 8:15 என்று காட்டியது.

அய்யய்யோ என்று அலறியவன் வேகமாக வெளியே ஓடி வர அவனின் தேவதையோ பள்ளி வாகனத்தில் ஏறிக் கொண்டிருந்தாள்.

"போச்சு" என தலையில் கை வைத்தவனுக்கோ அந்த நாள் ஓடவே இல்லை...
நேற்று இருந்ததிற்கு மாறாக உர்ரென்று வலம் வந்தான்.

இன்று அதே போல் அவனின் தேவதை  சைக்கிளில் தரிசனம் கொடுக்க புன்னகைத்தவாறே அவளருகில் சென்றவன் "இன்னைக்காச்சும் நேம் சொல்லலாமே" எனக் கேட்க அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து விட்டாள்.

அவளின் செயலில் சிரித்தவாறே கேட்டை திறந்தவன் கண்டது முதல் தளத்தில் இருக்கும் பெண்களைத் தான்.நாகரிகம் என்ற பெயரில் இன்னும் என்னவெல்லாம் ஆட்டம் போட போறாங்களோ என்று மனம் நொந்தவன் அவர்களைக் கண்டுக் கொள்ளாமல் மாடியேற

"என்னடி பாக்காம போறான்? ஒருவேளை மேக்கப் கம்மியோ ?" என்றவள் ஏற்கனவே போட்ட ஏழு கோட்டிங் மேல் இன்னும் இரண்டு போட்டாள்.
முதல் தளத்தில் வசிக்கும் மூன்று பெண்களும் ஏர்ஹோஸ்டஸ்.
அவர்களின் உடையும் , மேக்கப்பும் முகம் சுழிக்க வைக்கும் அளவு இருந்தாலும்  அதை அவர்கள் மாற்றிக் கொள்வதில்லை.

கௌதமிற்கு இப்படிப் பட்ட பெண்களையே பிடிக்காது.
கிராமத்தில் அதுவும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவனுக்கு கல்லூரியில் பெண்களைக் கண்டதுமே ஒருவித கூச்சம் ,பயம் வந்து ஒட்டிக் கொட்டது.
நல்ல வேளை மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்.
கிராமத்துப் பெண்களையே பார்த்து பழகியவனுக்கு இந்த மாதிரி உடை அணியும், மேக்கப் செய்யும் பெண்களை அறவே பிடிக்காது.

தன் தேவதையின் தரிசனத்தால் குதூகலமாக விசிலடித்துக் கொண்டே மாடி ஏறியவன் "ஏய் வருணவி என் பிஸ்கட்டை தா டி " என்ற குரலில் சடன் ப்ரேக் போட்டு நின்றான்.

ஆம் அவனின் தேவதையின் பெயர் வருணவி.அவளின் அக்கா தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள்.

இவளும் அவள் கேட்டவுடன் புன்னகை முகமாக எடுத்துத் தர மனதில் எங்கோ சென்று விட்டாள்.
பட்டுப் பாவாடையில் நெற்றியில் சிறிய பொட்டு அதற்கு மேல் குங்குமம் , கைகளில் வளையல், கால்களில் கொலுசு என்று அமர்ந்திருப்பவள் அவனுக்கு அவன் அம்மாவாகவே காட்சியளித்தாள்.

எவ்வளவு சாந்தமான முகம் என்று நினைத்தவனும் முகம் கழுவி பட்டை போட்டுக் கொண்டான்.

திடீரென்று சிரிக்கும் சத்தத்தில் சுயநினைவிற்கு வந்தவன்
என்ன என்று அவன் மனையாளிடம் கேட்க "உங்களை அந்த பட்டை முருகன் போஸ்ல நினைச்சு பாத்தேன் சிரிப்பு வந்துடுச்சு" என்று கூற அவள் தலையில் தட்டியவனோ
"டைம் ஆச்சு பாரு போய் தூங்கு " என்று கூற
"அப்போ ஸ்டோரி " என்று உதட்டைப் பிதுக்கியவளைப் பார்த்து சிரித்தவனோ அவளருகில் வர
கண்களை விரித்து சீனியர் என்று கூற வந்தவளுக்கோ காற்று மட்டும் தான் வந்தது.

அவன் உதடுகள் தவழ வேண்டிய அந்த பிறை நெற்றியில் அவளின் கற்றை முடி தவழ்ந்துக் கொண்டிருக்க அதைக் கண்டு எழுந்த பொறாமையை அடக்கியவனோ ஊதி அதை பின்தள்ளி "நவி" என்று கூற
அவனின் சூடான காற்றில் மெய் மறந்தவளோ ம்ம் என கூறவும் மறந்தாள்.

கைகள் இரண்டும் மடியில் இருந்த தலையணை இறுக்கி பிடித்திருக்க கண் இமைகளோ ஒன்றோடொன்று பிணைந்திருந்தது.
ஏசி அறையிலும் வியர்வைத் துளிகள் முகத்தில் பூத்திருக்க இதற்கு மேலும் வம்பு செய்யக் கூடாது என எண்ணியவனோ அவன் இடத்தில் சென்று படுத்துக் கொண்டான்.

பொங்கி வரும் சிரிப்பை கடினப்பட்டு அடக்கியவன் "ஓய் ஜூனியர் " என்று அழைக்க
அதில் தன்னிலை அடைந்தவளுக்கோ அவன் முகம் பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது.

தன் அருகில் இருந்தவன் எப்போது அங்கு போனான் என மனதில் தோன்றினாலும் அவனிடம் கேட்டால் கலாய்ப்பான் என நினைத்தவள் தன் இடத்தில் படுத்துக் கொண்டாள்.

இடையில் தலையணைகளால் சுவர் ஒன்று எழுப்பப்பட்டிருக்க கால்களை குறுக்கிப் படுத்துக் கொண்டவளுக்கோ இன்னும் அந்த சூடான காற்று நெற்றியை தீண்டுவது போல இருந்தது.

அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு அவளிடம் முதலில் பேசிய அந்த நாள் நினைவுக்கு வந்தது.

பிஸினஸ்மேன் தான் என்றாலும் அக்கா குழந்தைகளுடன் விளையாடுவது, குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவது, சோசியல் மீடியாவில் மொக்கை போடுவது என அனைத்தும் சரியாக செய்துவிடுவான்.

கல்லூரியில் படிக்கும் போது பெண்கள் என்றாலே பேச தயங்குபவன் காதல் தோல்விக்குப் பின் அதை முற்றிலும் தகர்த்தெறிந்து விட்டான்.

நண்பர்களின் உதவியுடன் முகப்புத்தகத்தில் காலடி எடுத்து வைக்க என்ன பெயர் வைக்கலாம் என கும்பலாக ஆலோசனை செய்தனர் அந்த வானர படையினர்.
லுக்கிங் பார் கேர்ள் ப்ரெண்ட் என ஒருவன் கூற அவனை முறைத்தவனோ அடுத்து எப்படிப் பட்ட வார்த்தைகளால் செல்லமாக கொஞ்சியிருப்பான் என நான் தான் கூறவேண்டுமா என்ன?

"ஓகே கூல் கூல்" என்றவனோ தண்ணீர் கொடுத்து சமாதானம் செய்ய "லவ் கருமமே வேணாம்,கேர்ள் ப்ரெண்ட்டும் வேணாம்...நல்லதா யோசி" என்றவன் தண்ணீர் குடித்துக் கொண்டே யோசிக்க அப்போது அவனுக்கு கை கொடுத்தது சில்லுனு ஒரு காதல்.

அதில் சூர்யாவின் பெயரும் கௌதம் அதுமட்டுமில்லாமல்  மெக் என்று அவன் கெத்தாக வலம் வர
இவனும் தன் ஐடியை அப்படியே வைத்துவிட்டான் கௌதம் மெக் என்று.

மற்ற துறையைக் காட்டிலும் மெக் என்றால் பெண்களுக்கு பிடிக்கும்.(எனக்கு பிடிக்கும் பா🙈)

பெண்கள் ரெக்வஸ்ட்டாக வந்து குவிய காண்டான அவன் நண்பர்களோ அவன் ஐடியை டிஏக்டிவேட் செய்துவிட்டார்கள்.
அவர்களும் அவனுடன் தான் ஐடி ஓபன் செய்தார்கள்.
அவர்களுக்கு எதுவும் வராமல் இவனுக்கு வந்து குவிந்ததால் வந்த பொறாமை.

அப்போது விட்டது இப்போது தான் சில மாதங்களாக முகப் புத்தகத்தில் வலம் வருகிறான்.
மறுபடியும் கௌதம் மெக் என்று வைக்க நண்பன் ஒரு பொழிந்த நன்மொழிகளால் அதை மாற்றிவிட்டான்.

மனம் ஏதோ போல் இருக்க தன் அக்காவின் குழந்தை நிக்கி என்கிற நிகிதாவுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் முகப்புத்தகத்தில் நுழைந்து நியூஸ் பீட் பார்த்துக் கொண்டிருக்க கீழே சஜ்ஜஸ்டட் பிரெண்ட் லிஸ்டில் கண்டான் வருணவி என்ற பெயரை...

அந்த பெயரைக் கண்டதும் மனம் லேசாக ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க பலமுறை யோசிப்பவன் சிறிது நேரம் கூட யோசிக்காமல் அந்த பெயரைப் பார்த்ததும்  கொடுத்துவிட்டான்.

நாட்கள் அதன்போக்கில் செல்ல அவளோ அவன் ரெக்வஸ்டை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
இவனும் காலை மதியம் மாலை என அனைத்து நேரங்களிலும் அவள் ப்ரொபைலையேப் பார்த்துக் கொண்டிருக்க அவள் பக்கத்தில் இருந்து எந்தவித ரெஸ்பான்ஸூம் இல்லை.

நிக்கி குட்டி மாமா சொல்லு மாமா சொல்லு என்று அவளைத் தூக்கி தன் கால் மீது வைத்து விளையாடிக் கொண்டிருந்தவன் நோட்டிபிகேஷன் சவுண்டில் மொபைலை எடுத்துப் பார்க்க அங்கு வருணவியோ அவனின் ப்ரெண்ட் ரெக்வஸ்டை அக்சப்ட் செய்திருந்தாள்.

மனதில் பட்டாம்பூச்சியெல்லாம் பறப்பது போல் தோன்ற தன்னைத் தானே திட்டிக் கொண்டவன்  அந்த பெயரை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

நிக்கி குட்டியின் உதவியால் ஹார்ட் ஸ்டிக்கர் ஒன்று அந்த முகம் தெரியாத பெண்ணுக்கு சென்றுவிட அவனின் கெட்ட நேரம் அவள் அதை பார்த்து விட்டாள்....

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro