Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

விழியை மீற வழி இல்லை: 57

நிமிடங்கள் நிற்காமல் கரைய தன் அன்பானவளின் மனம் லேசானதை அறிந்து அவள்  தலையோடு தன் தலை சாய்த்தவன் " இனிமே என் யமுனா சந்தோஷமா இருக்கனும். எதுக்காகவும் அழவும் கூடாது. சரியா? "

" ம்ம் நீங்க கூடவே இருக்கேன்னு சொல்லுங்க... நான் இருக்கேன். " அவனை விட்டுப் பிரியாமலே தலையை மட்டும் மெல்லமாய் திருப்பி அவன் கண்களை அவள் சந்திக்க, புருவம் உயர்த்தி அவளை லேசாய் முறைத்தான் யாதேஷ்.

" நான் இருக்கனோ இல்லையோ நீ தைரியமா இருக்கனும். "

சட்டென அவனிடம் இருந்து ஷிவன்யா விலக முயற்சிக்க யாதேஷ் அவளை இறுக்கிப் பிடித்து சுவற்றில் சாய்த்தான். அவன் பிடி இறுக ஷிவன்யாவிற்கும் கோவம் எகிரியது. அவள் முரண்டு பிடிப்பதை பொருட்படுத்தாமல் அவளை சுவற்றோடு அழுத்தி

" நான் சொல்றத கேளு யமுனா. " என காட்டமாய் கூற ஷிவன்யா வேண்டுமென்றே அவனை தீப் பார்வை பார்த்தாள்.

" நீங்க தேவையில்லாம இப்டி தான் பேசுவீங்கன்னா நான் எதையும் கேக்க விரும்பல. என்ன விடுங்க, "

" நான் சொன்னா கேப்பல்ல கேளு. நான் உன்ன விட்டுப் போகப் போறேன்னு சொல்லல டி. நான் போக மாட்டேன், ஆனா விதி வலியது. எந்த நேரம் என்ன நடக்கும்னு நமக்குத் தெரியாது. "

" நிறுத்துறீங்களா? போதும் போதும் போதும்! நாழு வர்ஷம் நீங்க இல்லாம நாம அனுபவிச்சதே போதும். திரும்ப என்ன விட்டுட்டு போறதுக்கு நீங்க வராமயே- "

யாதேஷ் வேகமாக அவள் வாயை மூட ஷிவன்யவின் கண்ணீர் கோபத்தையும் மீறிக் கொண்டு அவள் விழிகளில் மிளிர்ந்தது.

" யமுனா நானா உன்ன விட்டு எங்கையும் போக மாட்டேன் டி... ஏன் டி புரிஞ்சிக்க மாற்ற? நீ என் உயிரு, உன்ன விட்டுட்டா நான் வெறும் பொணம் தான். நானா போக மாட்டேன். ஆனா போகுற நிலமை வந்தா? ஒரு மனுஷனோட சாவு எப்போ வருமுன்னே அவனுக்குத் தெரியாது. நான் செத்துட்டா- "

இப்போது அவன் வாயை வேகமாக மூடிய ஷிவன்யா அவள் வாய் மீதிருந்த யாதேஷின் கையை உதறிவிட்டாள்.

" ஐயோ ஏன் இப்டி பேசுறீங்க மாமா நீங்க? வாழ்வோ சாவோ அது உங்க கூட தான். இந்த ஒரு நொடி வாழ்ந்தாலும் அது உங்க கூட வாழ்ந்தா எனக்குப் போதும். ப்லீஸ்...ப்லீஸ் தயவுசெஞ்சு என்னைக்கோ நடக்கப் போற ஒரு விஷயத்துக்காக நம்ம ப்ரெசென்ட் அ இப்டி பண்ணாதீங்க... "

அவள் கண்ணீரை காணப் பொருக்காமல் மென்மையாய் அதைத் துடைத்தெறிந்தவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி " நான் இல்லன்னா நீ ஒடஞ்சிடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு டி... "

" மாமா... "

" நான் சாவ பத்தி பெருசா எதுவும் நினைச்சதில்ல தான். மனுஷனுக்கு இறப்புன்னு ஒன்னு வந்து தான் ஆகும். நானும் சாவு பக்கத்துல போயிட்டு வந்ததால என்னவோ ஒரு நாள் அது திரும்ப கிட்ட வரும் போது உன்ன தனியா விட்டுப் போயிடுவனோன்னு- "

ஷிவன்யா இவனை விட்டால் இவன் பேசிக் கொண்டே தான் இருப்பான் என அறிந்தவளாய் அவன் சட்டை காலரை இழுத்து யாதேஷின் இதழை கவ்விக் கொண்டாள். முத்தத்தில் அவர்களின் கோவம் யுத்தம் புரிய ஷிவன்யாவின் கோவமும் யாதேஷின் பயமும் போட்டிப் போட்டிக் கொண்டு இறுதியில் அவர்களது காதல் வெற்றி கண்டது.

" நான் அழுவுவேன் தான். அதே மாதிரி சந்தோஷமா இருப்பேன். கோவமா இருப்பேன். அந்த எல்லா நேரத்துலையும் நீங்க என் கூட இருப்பீங்க. என்னவிட்டு எங்கையும் போக மாட்டீங்க. இறப்பு தவிர்க்க முடியாத ஒன்னு தான். அது வரும் போது வந்துட்டுப் போகுது. எக்காரணத்த கொண்டும் அதுக்கு முன்னாடி என்ன விட்டுப் போறத பத்தி யோசிச்சு உங்கள நீங்களே வருத்திக்காதீங்க... எனக்குக் கெட்டக் கோவம் வரும். " என அடக்கப்பட்ட கோபத்தை குரலில் பொருத்தி அவள் உறும

அவள் காதல் லீலையில் தன்னை இழந்திருந்த மாயவன் சினம் கக்கும் அவள் விழிகளில் லயித்து நெற்றியில் தவழ்ந்த சிகையை ஒதுக்கி அவள் வகுட்டில் மென்மையாய் முத்தம் பதித்தான்.

" அதென்ன கெட்டக் கோவம்? என் பொண்டாட்டிக்கு அப்போ கெட்டக் கோவம் நல்லக் கோவம் னு இரெண்டு கோவம் இருக்குதா? "

" ஏன் பேசமாட்டீங்க நீங்க? உங்களல்லாம் சசி சொன்ன மாதிரி நாழு நாள் அலைய விற்றுக்கனும். கணவனே கண் கண்ட தெய்வம்னு வந்தேன்ல என்ன தான் சொல்லனும். "

" ஏய் அவ விளையாட்டுப் புள்ள டி, அதெல்லாம் இந்த காதால வாங்கி அந்த காதால விற்றனும். "

ஷிவன்யா பொய் கோபம் காட்டி அவனை தள்ளிவிட்டு வெளியேற முயல அவளைப் பிடித்து இழுத்த வேகத்திற்கு அவன் மடிமீது வந்து விழுந்தாள் அவள்.

" ஏங்க என்னப் பண்றீங்க? அம்மா வெளிய தான் இருக்காங்க! " ஷிவன்யா அவன் மடியில் இருந்து எழ திமிற அவள் இடையை வளைத்துப் பிடித்திருந்த அவன் கரங்கள் அவளை அசையக் கூட அனுமதிக்கவில்லை.

" ஏன் உங்கம்மா வெளிய உக்காந்து இருக்காங்கன்னு என் சட்டைய பிடிச்சு இழுத்தப்போ நியாபகம் இல்லையா உனக்கு? " என யாதேஷ் வேண்டுமென்றே அவள் காது மடலை கடிக்க, அவன் மீசை அவள் கன்னத்தில் உரச ஷிவன்யாவின் வதனம் கோவப்பழத்தின் நிறத்தை வாடகைக்கு வாங்கிக் கொண்டது.

" போதும் உங்க அலும்பு.  விடுங்க என்ன, "

" இப்போ தான் விட்டுட்டுப் போகாதீங்கன்னு சொன்ன? அதுக்குள்ள என்ன பேச்சு மாத்துற கண்ணம்மா? "

" ஆமா நீங்க என் பேச்சத் தான் கேட்டு நடக்குறீங்களாக்கும், "

" பின்ன என் மனைவி வாக்கே வேதவாக்கு இல்லையா எனக்கு? "

ஷிவன்யா அவனை ஏறஇறங்க பார்த்து முறைக்க, சலைக்காமல் அவளைப் பார்த்து அவன் இளிக்க, காதல் ராணிக்கும் பொய் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக டாட்டா காட்டிய நேரம் சிவ பூஜையில் பனிக்கரடி புகுந்தது போல மூடியிருந்த கதவு வேகமாகத் தட்டப்பட்டது.

" உள்ள என்ன ஒரு மணி நேரமா துணிய புழிஞ்சி காயப் போடுறீங்களா இரெண்டுப் பேரும்? அப்போ கொஞ்சம் இன்டெர்வெல் ப்ரேக் விட்டீங்கன்னா நாங்களும் கொஞ்சம் ப்ரேக்பாஸ்ட் சாப்ட்டுக்குவோம். எப்டி வசதி? " என்ற ஆரவின் குரலைக் கேட்டு படாரென ஷிவன்யா யாதேஷின் மடியிலிருந்து எழுந்திருக்க யாதேஷ் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு கதவைத் திறந்தான்.

" என் பொண்டாட்டி கூட நான் துணி காயப் போடுவேன் இல்ல துணிய தொவைச்சுப் போடுவேன்? நீ உன் வேலையப் பார்த்துட்டு போ டா வெண்ண! " என கத்திக் கொண்டே வந்தவன் பட்டென வாயை மூடிக் கொண்டான்.

மொத்த குடும்பமும் அவன் கதவைத் திறந்ததும் கூடத்தில் அமர்ந்து அவனைத் திரும்பி பார்க்க, கதவைத் தட்டிவிட்டு எப்போதோ தப்பி ஓடியிருந்த ஆரவ் விஜித்தாவின் அருகில் அமர செல்ல அவனுக்கு முன்னமே சசி ஒரு பக்கமும் சூர்யா ஒரு பக்கமும் அமர்ந்திருந்தனர்.

அதைப் பார்த்து ' வாழ்க்க பூரா நான் உன் பக்கத்துல தான் உக்காரனும் போல, என் தலையெழுத்து ' என மனதிலே வேகமாக புலம்பிவிட்டு ஷிவனேஷின் அருகே அமர்ந்தவன் " என்னா மச்சான் இப்போ தான் உங்க ரூம்ல சேவல் கூவுச்சா? " என சத்தமாய் கேட்க, யாதேஷ் பே வென முளித்துக் கொண்டிருக்கும் போதே ஷிவன்யா அவனை வெளியே தள்ளிவிட்டுவிட்டு சமையல் அறைக்குள் ஓடிவிட்டாள்.

ஷிவனேஷைத் தவிர்த்து மற்ற இளையவர்கள் அனைவரும் வெடித்து சிரிக்க, இந்த அவமானம் உனக்குத் தேவையா ராசா என்பது போல் அவனை ஷிவனேஷ் திரும்பி பார்க்க, ராசாத்தி தான் எல்லாரையும் அடக்கி உணவை உண்ண வைத்து தன் மருமகனை காப்பாற்றினார்.

ஆனால் அவராலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பின்ன மகள் கலங்கியதை அவள் கண்ணசைவில் புரிந்து கொண்டு அவளை கண்ணுங்கருத்துமாய் பார்த்துக்கொள்ளும் மருமகனின் அன்பை கண்டால் தாய் மனமும் குளிராமல் இருக்குமா?

#

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு முடித்ததும் ஷிவன்யா அவள் அம்மாவை அழைத்துச் சென்று தாமரை பாட்டிக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

அந்த நாள் மேலும் மேலும் அவர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தர யாதேஷும் ஷிவன்யாவும் தொலைத்த வாழ்வை அவர்களின் குடும்பத்தோடு முழுமனதுடன் ஆனந்தமாய் களித்தனர்.

விஜித்தா தான் இதில் இரு பெண்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு முளித்துக் கொண்டிருந்தாள்.

" எப்போ விஜி கல்யாணம்? உங்க ஆரவ் அத்தான் தனியா ரொம்ப கஷ்டப்படுறாராமே, " என சூர்யா அவளை ஒரு பக்கமும், " சொல்லுங்க விஜி அக்கா! நான் ஒழுங்கா உருப்புடியா ஒரு கல்யாணம் கூட பார்க்கல தெரியுமா? இந்த அக்காவும் அண்ணனும் படார்படாருன்னு கல்யாணத்த முடிச்சிட்டாங்க! உங்க கல்யாணத்துலையாவது நான் ஆட்டம் போடனும்! " என சசி ஒரு புறமும் அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தனர்.

" ஏன் டா விஜி கல்யாணத்துக்கு நீ நோ சொல்லீட்டன்னு ஆரவ் அண்ணா ஃபீல் பண்றாராமே... " என ஷிவன்யாவும் அவள் பங்கிற்கு சிரிக்க விஜித்தா மூக்கு முட்ட அறையின் மறுபுறம் இருந்த ஆரவை முறைத்து வைத்தாள்.

" டேய் அவ கிட்டேந்து என்னக் காப்பாத்துங்க டா, " என ஆரவ் அவன் மாமன் மகளின் எரிக்கும் பார்வையிலிருந்து தப்பிக்க ஷிவனேஷையும் யாதேஷையும் நச்சரித்துக் கொண்டிருந்தான்.

ஷிவன்யாவை வைத்தக் கண் வாங்காமல் சைட்டடித்து சிலாகித்துக் கொண்டிருந்த யாதேஷ் ஆரவ் பக்கமே திரும்பவில்லை.

" முன்னாடியே அவ சொல்றப்போ நீ பேசி கல்யாணம் பண்ணாதது உன் தப்பு, இப்போ அவ கோவப்படாம பின்ன கொஞ்சுவாளா டா உன்ன? " என்று ஷிவனேஷ் தான் பாவம் பார்த்து ஆரவின் தோளில் தட்டிக் கொடுக்க

" உங்களுக்குலாம் கல்யாணம் ரொம்ப ஈசியா நடந்து முடிஞ்சிட்டதுனால தான டா ஆடீட்டு இருக்கீங்க? நானும் பண்ணுவேன்! " என ஆரவ் வீருகொண்டு சவால் விட விஜித்தா ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைத்த முறைப்பில் கப்சிப்பென அமர்ந்துவிட்டான்.

இவ்வாறாக இளையவர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்து விளையாடிக் கொண்டிருக்க ராசாத்தியும் தாமரை பாட்டியும் பழைய கதைகள் பேசியபடி ஆர்யா மற்றும் ஷிவானியோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அனைவரின் சிரிப்பலைகளோடு கலகலவென இருந்த யாதேஷ் ஷிவன்யாவின் வீடு மெல்ல மெல்ல கதிரவன் தாய் மடி சாய்ந்த நேரம் அமைதியடைய ஆரவ் விஜித்தாவை அலைத்துக் கொண்டு வீடு திரும்பிய கொஞ்ச நேரத்திலே உறங்கியிருந்த ஆர்யாவை தோளில் நெஞ்சில் சாய்த்துக் கொண்ட ஷிவனேஷ் அவன் சூர்யாவோடு சசி ராசாத்தியுடன் வீடு திரும்பினான்.

என்ன தான் ஷிவன்யாவிற்கு அம்மாவை தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என ஆசை இருந்தாலும் பல நாள் பின் ஒன்று சேர்ந்துள்ள கணவன் மனைவிக்கு தனிமையளிக்க நினைத்து ராசாத்தி அன்பாய் ஷிவன்யாவிற்கு அறிவுரை கூறிவிட்டு சசியின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

ஷிவானியைத் தூங்க வைத்துவிட்டு குளித்து முடித்து ஈரத்தலையை உளர்த்திய ஷிவன்யா கணவன் அறையில் இல்லாததால் அவனைத் தேடி வாசலுக்கு வந்தாள்.

உடை மாற்றிவிட்டு வாயிலின் திண்டில் சாய்ந்து ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்த யாதேஷ் அவள் காலடி சத்தம் கேட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.

" ஹாய் பொண்டாட்டி, என்ன எல்லாரையும் பார்த்ததுக்கு அப்பரம் இப்போ தான் புருஷன் நியாபகம் வந்துச்சா? " என குறும்பாய் கேட்டவனை முறைக்க முயன்று தோற்ற ஷிவன்யா அவன் நெஞ்சிலே அடைக்களமானாள்.

இருவரும் அந்த அழகிய மௌனத்தை இரசித்தபடி ஒருவர் மற்றவரது அருகாமையை மனதில் நிறப்பிக் கொண்டனர்.

" என்னால நம்பவே முடியல மாமா... "

நீண்ட நேரம் களித்து அந்த மௌனத்தை உடைத்த மனையாளை குனிந்து பார்த்தவன் அவளை மேலும் அவனோடு இறுக்கிக் கொண்டான்.

" என்னாலையும் தான்... எல்லாம் நியாபகம் வந்த அன்னைக்கு நான் இங்க வந்து நின்னப்போ லோட்டஸும் நம்பவே இல்ல. ஆனா ஏதோ நியாபகம் வந்து நான் நடுரோட்டுல நம்ம வீட்டப் பார்த்துட்டு நிக்காம இருந்துருந்தா எதுவுமே நடந்துருக்காது... "

" அன்னைக்கு அப்பரம் என்னாச்சு மாமா? " ஷிவன்யா இப்போதே மீதியை கேட்காத நினைவு வந்ததால் வாகாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவனைப் பார்த்தாள்.

" நான் கார எடுக்க வந்தப்போ தான் இந்த ஸ்ட்ரீட் ரொம்ப பழக்கப்பட்டதா இருந்துச்சு யமுனா. எங்கையோ நடந்து போனப்போ ரொம்ப நல்லா தெரிஞ்ச இடம் மாதிரி நேரா இங்க தான் வந்து நின்னேன். லோட்டஸ் என்ன பார்த்துட்டு ஷாக் ஆனதையும் கவனிச்சேன். அப்பரம் போட்டு லோட்டஸ ஒரு அரைமணி நேரம் நச்சரிச்சேன். நம்ம வீட்டுக்கு வந்துட்டு நான் நல்லா சுத்தி முத்தி பார்த்தேன். நிறைய குழப்பம் ஆனா ஒழுங்கா எதுக்குமே பதில் தெரியல. அப்போ தான் நமக்கு கல்யாணம் ஆன அன்னைக்கு எடுத்த ஃபோட்டோவ பார்த்தேன். அது கூடவே லோட்டஸ் என் கிட்ட ஒரு பழைய ஃபோன குடுத்து ' இத கேட்டுட்டு என் கிட்ட வா ' ன்னு போய்ட்டாங்க... "

" பழைய ஃபோனா? என்ன கேக்கனும்? என்ன சொல்றீங்க...? "

ஷிவன்யா அவனிடம் இருந்து அதற்குப் பிறகு பதில் வராததால் தலையை உயர்த்தி யாதேஷைப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

" என் ப்லைண்னெஸ் அ ட்ரீட் பண்ணலாமுன்னு நீ என்ன ஒத்துக்க வச்ச நியாபகம் இருக்கா? "

அந்த நாளை ஷிவன்யாவால் மறக்க முடியுமா?

" என்ன தான் நீ நான் எதையும் மறக்க மாட்டேன்னு சொல்லீருந்தாலும் உன்ன மறந்துருவேணோங்குற பயம் இருந்துட்டே இருந்ததால நான் கொஞ்சம் வேலை பார்த்தேன். அதான் எனக்கு நானே பேசிக்கிட்ட ரெக்கார்டர்... நம்ம லைஃப், லவ், நீ... நான்... அவ்ளோ தான். அதெல்லாம் கேட்டு முடிஞ்சு நான் கண்ண திறந்தப்போ அவ்வளவு நேரம் குழப்பமா இருந்த எல்லாமே தெளிவான மாதிரி இருந்துச்சு. என்னோட எல்லா கேள்விக்கும் பதில் என் கிட்டேந்தே கிடச்சதுக்கு அப்பரம் திரும்ப லோட்டஸ் கிட்ட போய் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தேன். அப்பரம் தான் அக்ஸிடென்டுக்கு அப்பரம் நீ காணாம போனது, நானும் வராம போனதுன்னு எல்லாமே சொன்னாங்க... அப்பரம் தான் அத்தையப் பார்க்கப் போனேன்... "

யாதேஷின் குரல் மெல்ல மெல்ல கம்மியது. அவளது தோளில் தாடையை வைத்து மென்மையாய் அவளை அணைத்துக் கொண்டவன் " நான் எதிர்பார்க்காத நேரம் நான் எல்லாத்தையும் தொலச்சிட்டேன் யமுனா... ஆனா இப்போ எல்லாமே திரும்ப என் கிட்ட வந்ததுக்கு அப்பரமும் எதுவுமே நமக்குள்ள மாறாம இருந்தாலும் பாதி வாழ்கைய தொலச்ச மாதிரி இருக்கு டி, "

ஷிவன்யா கண்களை ஆழ்ந்த மூடி பெருமூச்சுவிட்டாள். அவள் அழுது தீர்த்த காலங்கள் போயாகிவிட்டது. இப்போது அவளவனின் ஏக்கங்கள் தீர்க்க வேண்டி அவன் மீது மெதுவாய் சாய்ந்து கொண்டவள்

" நாழு வர்ஷம் போயிடுச்சு தான் மாமா... ஆனா அதையே யோசிச்சிட்டு இருந்தா நம்மளால இனிமே வரப் போற நம்ம வாழ்கைய வாழ முடியாதே... "

" நாழு வர்ஷமும் என்ன ரொம்ப மிஸ் பண்ணீருப்பல்ல? "

" ரொம்ப... ரொம்ப மிஸ் பண்ணேன். அதையெல்லாம் வெறும் வார்த்தையால எக்ஸ்ப்லைன் பண்ண முடியாதுங்க. ஆனா இப்போ அந்த நேரம் எல்லாத்துக்கும் சேர்த்துத் தான் என்ன கட்டிப்புடிச்சிட்டு நீங்க நிக்கிறீங்களே... இனி எங்கையும் என்ன விட்டுட்டுப் போவீங்க? "

அவள் கேள்விக்கு உடனே தலையை வேகவேகமாக இடவலதாய் அசைத்தவன் மேலும் அவளை அவனோடு இழுத்துக் கொள்ள அவளுக்குள்ளே சிரித்துக் கொண்ட நம் நாயகியின் மகிழ்ச்சி அவள் கண்களில் பிரதிபலித்தது.

" அப்போ பழச யோசிக்க வேணாம். "

" ஆனா... "

" வேணான்னா வேணாம். நான் சொன்னா கேப்பீங்க தான? "

தானாக யாதேஷின் தலை மேலும் கீழும் ஆட

" அப்போ இப்டியே இருக்களாம். பாஸ்ட் அப்டியே பாஸ்ட் ஆகவே இருந்துட்டு போகட்டும். இனிமே உங்களுக்கு நான், எனக்கு நீங்க. நமக்கு நம்ம பாப்பா. அப்பரம் நம்ம குடும்பம். "

" நீங்க சொன்னா சரி தான். ஆனா இப்டியே எவ்ளோ நேரம் இருக்களாம் மேடம்? " யாதேஷ் தன்னிலை பெற்றதை அவன் மூக்கின் நுனி அவள் கழுத்தின் வளைவில் வருடுவதில் உணர்ந்த ஷிவன்யா

" வாழ்க்க முழுக்க... உங்க கண்ணு இரெண்டையும் பார்த்த அந்த ஃபெர்ஸ்ட் டே-வே நான் முடிவு பண்ணீட்டேன். வாழ்க்க முழுக்க என்ன திகட்ட திகட்ட இரசிக்கிர அந்த கண்கள பார்த்துட்டே வாழ நான் ரெடி. நீங்க என்ன சொல்லப் போறீங்க? "

தன் முன் நின்றவளை திருப்பி அவள் காதல் பொங்கும் விழிகளை ஆசையாய் இரசித்தவன்

" இந்த கண்கள முதல் முறையா எப்போ பார்த்தேனோ அப்போவே என் மொத்தத்தையும் அதுல தொலச்சிட்டேன். இதுக்கு மேல வேறென்ன பதில்? " என சொல்லி அவள் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான் யாதேஷ்.

எண்ணற்ற வலிகளை பார்த்துவிட்ட போதிலும் காதல் என்ற ஒற்றை கயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டு புயலையும் மழையையும் தாண்டி வந்த அந்த இருவரை அன்பாய் இரசித்துப் பார்த்த மதியும் அந்த காதல் ஜோடிக்கு தனிமையளித்து முகில்ளின் இடையே மறைய தங்கள் காதல் கொண்ட விழிகளை மீற வழி இல்லாமல் கட்டுண்ட யாதேஷ் மற்றும் ஷிவன்யாவின் வாழ்வு மேலும் சிறக்க நாமும் வாழ்த்தி விடைப்பெறுவோம்.

விழியை மீற வழி இல்லை...

கதை
கற்பனை
வசனம்

தீராதீ

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro