Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வேதனையும் இரட்டிப்பாக: 12

என்றும் போல் காலையிலே கிளம்பி விட்டு கன்ட்டீன் பக்கம் வந்த ஷிவன்யா சகமாணவிகள் தோசை உண்டவாறே காஃபீக்காய் காத்திருப்பதை கண்டதும் முகத்தை சுழிக்க, அவளை கண்டுவிட்டு இரு தட்டுக்களுடன் அவளிடம் வந்தாள் அத்விகா.

அத்விகா " என்னாச்சு ஷிவு? "

ஷிவன்யா " ஹான் ஒன்னும் இல்லம்மா... இவங்கலாம் எப்படி காலங்காத்தால சாப்பாடோட காஃபீ குடிக்கிறாங்க?! உவக்! எனக்கு கொமட்டிக்கிட்டு வந்துடும்! " என பாவமாய் கூற, சிரித்துக் கொண்டே தலையை அசைத்த அத்விகா, ஷிவன்யாவை அழைத்துக் கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்து உண்ணத் தொடங்கினாள்.

யாதேஷ் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். என்ன தான் அவனின் கல்வி அனைத்திற்கும் முன் தெரிந்தாலும், உண்மையில் அவனாலும் ஷிவன்யாவை பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை. முதல் ஒரு வாரமே அவளின் அரவம் எதையும் கேட்காமல் அவளையும் உணராமல் இருந்தவனுக்கு ஏதோ போலிருந்தது.

அவளின் கொலுசு சத்தமோ வளையல் சத்தமோ கேட்காமல் அவளை சுற்றுவட்டாரத்திலே உணரவும் இயலாமல் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறத் தொடங்கியிருந்தான். அவனை மேலும் கடுப்பேற்றுவதை போல ஆரவ், ஷிவனேஷ் இருவரும் ஷிவன்யா என்ற ஒரு மனிதபிறவியே இல்லாததை போல நடந்து கொண்டனர்.

ஆரவ் " டேய் மச்சான்... பராக்கு பார்த்தது போதும் இங்க பாருடா! "

யாதேஷ் " பார்த்தா மட்டும் தெரியவா போகுது?! நான் எங்க பார்த்தா உனக்கென்ன டா?! உன் வேலைய மட்டும் பாரேன். "

ஆரவ் " அப்பரம் கழுத்து வலி வந்தாலும் நீ என் உயிர தான வாங்குவ!? அப்போ பாத்துக்குறேன்... "

யாதேஷ் ஒரு நீண்ட அமைதியின் பின் லேசாக தொடங்கினான். " டேய்... அவள பாத்தீங்களா...? "

ஆரவ் " எவள...? "

யாதேஷ் " அதான்... "

ஷிவனேஷ் " அதான்னுலாம் எங்களுக்கு யாரையும் தெரியாது டா. "

யாதேஷ் " டேய் கடுப்பேத்துறீங்களா என்னைய?! அவள பாத்தீங்களா, இல்லையா? "

ஷிவனேஷ் " பாத்தோம்னு சொன்னா என்ன டா பண்ண போற? அவ கூட டூயெட்ஆ பாட போற? "

ஆரவ் " டேய் டூயெட் கீயெட்டுன்னு வாயத்திறக்காத! சத்தமா சொல்லி எவனாது கேட்டுட்டா அப்பறம் எல்லாரும் என் காத கொடைய ஆரம்ச்சிடுவானுங்க!! " என தாவி வந்து ஷிவனேஷின் தலையிலே அடித்தான்.

யாதேஷ் " டேய் வீட்ல வேற அம்மா புரிஞ்சிக்காம என்ன டென்ஷனாக்கீட்டு இருக்காங்க... நீங்களும் தலவலிய ஏத்தி விடாதீங்க டா! "

ஆரவ் " ஏன் என்ன பன்றாங்க அத்தை...? " என நண்பர்கள் இருவரும் நம் நாயகனை சாதாரணமாய் பார்க்க, பெருமூச்சு விட்ட யாதேஷ்

" அப்ராட்ல இருக்குர ஸ்வேத்தா கிட்ட பேச சொல்லி உயிர வாங்குறாங்க டா... " என சொல்லியது தான் போதும் ஆரவ் படாரென அமர்ந்த இடத்திலிருந்து எழுந்திருந்தான்.

ஆரவ் " எதே அவளா?! அவ கிட்ட நீ பேசி என்ன டா பண்ணப் போற?! "

யாதேஷ் " அவளுக்கென்ன வயசாகுது? இன்னும் கொஞ்ச நாளானா காலேஜ் சேந்துடுவா... அவ மனசுல போய் என் அம்மா ஆசைய வளத்து விட்டுட்டு இருக்காங்க டா... "

ஷிவனேஷ் " டேய் தெளிவா சொல்லு... கொழப்பாத... " என அவன் சீரியசாய் கேட்க, அவன் எப்போதுமே சீரியசாய் இருப்பதாலோ என்னவோ யாதேஷிற்கு வித்தியாசம் தெரியவில்லை.

யாதேஷ் " அவளுக்கு என்ன தான் கட்டிவைப்பேன்னு எங்க அப்பா அவ பொறந்த புதுசுல சும்மா சொல்லீட்டு இருந்தாரு டா... அதையே புடிச்சிட்டு ஸ்வேத்தா அம்மா அவளுக்கு என்ன பாக்குறப்போலாம் என்ன அவளுக்கு கட்டிக் கொடுக்குறத பத்தி சொல்லீட்டே இருப்பாங்க. இப்போ அம்மாவும் ஆரம்பிச்சிட்டாங்க... "  என இவன் சாதாரணமாய் சொல்லிக் கொண்டிருந்ததை தவறுதலாய் அப்புறம் வந்த அத்விகா கேட்டு விட, ஒரு சில நொடிகளுக்கு அப்படியே யோசனையோடு நின்றிருந்த அத்விகா பின் அங்கிருந்து ஷிவன்யாவைத் தேடிச் சென்றாள்.

நாட்களும் வாரங்களும் ஓடிட, யாதேஷ் ஆரவ் மற்றும் ஷிவனேஷின் கல்லூரி காலம் முடிய ஒரு மாதமே இருந்த நிலையில் யாதேஷ் பல விதத்தில் மாற்றம் கண்டிருந்தான். கல்லூரியில் பாடுவதையே அறையோடு நிறுத்தியிருந்தான். அன்னை சாதனாவிடம் பேசுவதை குறைத்திருந்தான். விஜித்தா இவனின் பிரச்சனை புரியாமல் ஆரவை குடைய, அவன் அதற்கு மேல் குழம்பித் தான் போயிருந்தான். பின்ன வாய் ஓயாமல் பேசுபவன் வாய் மூடியே இருந்தால் நண்பனுக்கு வருத்தமிருக்காதா என்ன?

இந்த ஐந்து மாதத்தில் ஷிவன்யாவை மறக்க முயற்சித்தானோ தெரியவில்லை... ஒவ்வொரு நாளும் அவளை ஒரு முறையேனும் உணர்ந்து விட மாட்டோமா என ஏங்க மறக்காதிருந்தான் நம் நாயகன். ஏங்காமல் உறங்கிய நாட்கள் இல்லை அவனுக்கு...

ஷிவன்யா வாரம் கடக்கக் கடக்க நம்பிக்கையை இழந்து வந்தாலும், ஷிவனேஷ் அவளை தேற்றிக் கொண்டே இருந்தான். அவனுக்குள் மட்டும் எங்கோ ஒரு நம்பிக்கை... யாதேஷ் ஒரு நாள் வாய் திறப்பானென்று.

அதை சற்றும் இழந்திருந்த ஆரவின் மௌனப் போராட்டங்கள் அனைத்தையும் முடித்து கொள்ளும் நாளும் வந்தது.

ஷிவன்யா " என்னால முடியலண்ணா! அவர பார்த்து எத்தன நாளாச்சு?! நான் பெருசா சவால் விட்டுட்டு வந்துட்டேன்... ஆனா அவர பத்தி நெனச்சிட்டே மட்டும் இருக்குரது ரொம்ப கஷ்டமா இருக்கு. அவரு என்ன விரும்பலன்னா கூட நான் ஊர விட்டே போயிருப்பேன். ஆனா ஏன் இப்படி நடிக்கிறாரு? நான் என்ன தப்பு பண்ணேன்...? "

அத்விகா " ஷிவு ப்லீஸ்மா... அழாத... " என மனம் வருந்தி வெம்பிக் கொண்டிருந்தவளுக்கு அதை மட்டும் தான் கூற முடிந்தது.

ஷிவன்யா " என்னால முடியல டி... இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. நான் அவரு மேல பைத்தியமாய்டுவேணோன்னு எனக்கு பயமா இருக்கு. "

அத்விகா " ஷிவு அழாத டி... ஒருவேளை அவங்க வேற யாரையாவது கூட லவ் பண்ணலாம்ல? "

ஷிவன்யா " அப்படி இருக்குமா? அண்ணா, அப்படி இருக்குமா? அவரு வேற யாரையாவது லவ் பன்றாரா? " என ஆரவிடம் அவள் தவிப்பாய் கேட்க, " அப்படிலாம் இல்லடா... " என கூற வந்த ஆரவை தடுத்தாள் அத்விகா.

அத்விகா " சீனியர்... நடுவுல பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க. ஒருவேளை யாதேஷ் சீனியர் இவள லவ் பண்ண மாட்டாருன்னா அவ கிட்ட தெளிவா சொல்லீடுங்க... அவ நம்பி ஏமாற மாட்டால்ல... " அவள் சற்று வேகமாக கேட்டிருந்தாலும், அது ஷிவன்யாவின் மீதான அன்பில் தான்.

ஷிவனேஷ் " என்னமா சொல்ற...? " என மற்ற மூவருமே புரியாமல் அவளை பார்க்க, சற்றேத் தயங்கிய அத்விகா பின் ஷிவன்யாவை பார்க்காது பேசினாள்.

அத்விகா " நான்... யாதேஷ் சீனியர் உங்க கிட்ட ஸ்வேத்தாங்குறவங்கள பத்தி பேசும் போது...நானும் அங்க தான் இருந்தேன். ஸ்வேத்தாங்குற பொண்ணத் தான் யாதேஷ் சீனியர்க்கு கல்யாணம் பண்ணித் தரப் போறதா அவரு சொல்லீட்டு இருந்தாரே...? "

ஆரவ் " ஹே... அப்படிலாம் யாருமா சொன்னா உனக்கு?!  " என இவன் பதட்டமாய் கேட்கும் போதே ஷிவன்யாவிற்கு தெளிவாய் அத்விகா கூறியது புரிந்திருந்தது.

ஷிவன்யா " அப்போ இது தான் அவரோட காரணமா? " என நினைத்தபடி அங்கிருந்து எழுந்த ஷிவன்யா, " அண்ணா, ப்லீஸ் எதுவும் சொல்லாதீங்க... என்ன தனியா விடுங்க... நானே அவரு கிட்ட போய் பேசிக்கிறேன், " என வேகவேகமாய் கூறியவள் பதிலை எதிர்பார்க்காமல் விருவிருவென படிகளில் இறங்கினாள்.

அவள் தடுமாற்றத்தோடே ஓட்டமும் நடையுமாய் செல்வதை கண்டதும் ஷிவனேஷின் முகத்தில் பதட்டம் குடிக்கொள்ள, இவன் " ஷிவா! " என அழைத்தபடி அவளை பின் தொடரும் முன்னே கால் தடுமாறி சுவற்றில் இடித்துக்கொண்டு படியிலிருந்து கீழே விழுந்தாள் ஷிவன்யா.

ஆரவ், அத்விகா பதறி அடித்து அவர்களை பின் தொடர, இரண்டிரண்டு படிகளாய் தாண்டி கீழேச் சென்ற ஷிவனேஷ் முகம் தரையில் பதிய விழுந்திருந்த ஷிவன்யாவைத் தூக்க, படியின் முணை அவளின் நெற்றியைக் கிழித்து அந்நேரத்திற்கு மெதுமெதுவாய் இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.

ஷிவனேஷ் " ஷிவா... ஷிவா என்ன பாருடா! ஷிவா! "

ஷிவன்யா " ஆ... ம்.. வ..வலிக்கிது... " என அவள் கண்களிள் கண்ணீர் குளம் தேங்க மெதுவாய் பிதற்ற, ஷிவனேஷிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

ஷிவனேஷ் " ஒன்னும் இல்ல ஷிவாமா... இங்க பாரு எதுவும் இல்ல... நான் வந்துட்டேன்ல? " என அவன் தனக்கே ஆறுதல் கூறிக் கொண்டு வேகவேகமாய் ஷிவன்யாவை இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டான்.

வலியில் ஷிவன்யா அலறிய அலறல் அதே கட்டிடத்தில் ஒரு ப்ரொஜெக்ட்டர் முன் அமர்ந்திருந்த நம் நாயகனுக்கும் தெளிவாய் கேட்டிருந்தது. அவன் குழப்பத்திலும் பதட்டத்திலும் தட்டுத்தடுமாறி வேளியே வர, அதே நேரம் அவனைத் தாண்டி வேக எட்டுக்களுடன், அழும் ஷிவன்யாவை தூக்கிக் கொண்டு ஓடினான் ஷிவனேஷ்.

அவன் பின் ஓடி வருவது ஆரவ் என்பதை அறிந்து யாதேஷ் அவனை சரியாய் பிடித்து நிற்க வைக்க, அத்விகா மாத்திரம் ஷிவனேஷைத் தொடர்ந்து ஓடினாள்.

யாதேஷ் " டேய்... டேய் ஆரவ் என்ன டா ஆச்சு?! "

ஆரவ் " டேய் நான் வந்து பேசுறேன் டா என்னவிடு! நான் நர்சிங் ரூமுக்கு போகனும்! " என ஒரு அவசரத்தில் யாதேஷின் கரத்தை உதறியவன் பின் தன் தலையிலே அடித்துக் கொண்டு, " சாரி டா மச்சான்... ஒரு பதட்டத்துல அப்படி பண்ணீட்டேன், வா! " என யாதேஷின் கரத்தைப் பிடித்துக் கொண்டு நர்சிங் ரூமை நோக்கி ஓடினான்.

யாதேஷிற்கு ஒன்றும் புரியவில்லை. ஷிவன்யாவின் குரலை இத்துனை மாதம் கழித்து கேட்டதில் மகிழவா அந்நிலையில் அவள் அழுவதையல்லவா கேட்டோமென வருந்தவா என்றறியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

ஆரவ் யாதேஷை இழுத்துக் கொண்டு அவ்வறையை சென்றடைந்த நேரம் ஷிவன்யாவின் அழுகை பெருகியிருந்தது. அவளின் காயம் சற்று ஆழமாய் இருப்பதாய் தெரிகிறதென கூறியதற்கே அவள் ஷிவனேஷை பிடித்துக் கொண்டு பயத்தில் அழுது கொண்டிருக்க, அந்த செவிலியர் அவளின் காயத்தில் வைத்த டின்ஜரின் வீரியத்தில் வலியைத் தாங்க இயலாமல் கண்களை இறுக்கி மூடி மயங்கியே விட்டிருந்தாள்.

ஆனால் அந்த நேரம் யாதேஷை விடவும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் இருந்தது ஆரவ் தான். ஷிவனேஷை அவ்விருவரும் நான்கு வருடமாய் அறிவர். இந்நான்கு வருடத்தில் எருமை மாட்டில் மழை பேய்ந்ததை போல எதற்கெடுத்தாலும் அமைதியாய் இருப்பவன் முதல் முறை, அதுவும் ஷிவன்யாவின் விஷயத்தில் பதட்டம் கொண்டது மேலும் அவனின் ஆச்சர்யத்தைக் கூட்டியது.

ஷிவன்யா அழுது கொண்டே மயங்கியதால் அந்த செவிலியர் சிகிச்சையை முடித்து விட்டு நகர்ந்துவிட, அவளின் சிகையை கோதியபடி அவளருகிலே அமர்ந்து கொண்டான் ஷிவனேஷ். அவனின் கண்களில் எங்கு எழுந்தால் உடனே அழுவாளோ என்ற பயம் நிறைந்திருந்தது.

காரணமே இல்லாமல் அன்று முழுவதும் யாதேஷ் அந்த அறையின் வாசலிலே குடியிருந்தான், அவனுக்கு ஷிவன்யா விழித்து விட்டாளென்ற செய்தி வரும் வரை....

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro