Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பதிலறியா வினாக்கள்: 37

ஆரவின் இதயத்திற்கு மட்டும் ஆயிரம் மைல் ரேஸில் ஓடும் காரின் இஞ்சினெல்லாம் இருந்திருந்தால் அது இந்நேரத்திற்கு வெடித்து சிதறியிருக்கும். யாதேஷ் அவன் மீது விழுந்த அடுத்த நொடி ஆரவ் கத்திய கத்தில் பலருக்கு மாரடைப்பு வந்திருக்கும்.

அவன் அலறலில் கூடிய மக்களின் உதவியோடு நண்பனை அவன் காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

யாதேஷை கண்டதுமே அவர்களின் குடும்ப நலமருத்துவர் ராக்கேஷ் வேகமாய் ஆரவிடம் வந்தார்.

ராக்கேஷ் " என்னாச்சு ஆரவ்? யாதேஷுக்கு என்ன ஆச்சு? "

ஆரவ் பதில் கூற முடியாமல் பறபறத்தான். அவன் பதட்டத்தைப் புரிந்து கொண்ட மருத்துவர் யாதேஷைப் பரிசோதிக்க வேண்டி உடனே அவனை அனுமதித்தார்.

ராக்கேஷ் " ஆரவ் கொஞ்சம் பதறாம என்னன்னு சொல்லுப்பா. அவனுக்கு நான் உடனே ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும். எதனால மயங்கி விழுந்தான்? " என தன்னால் இயன்ற வரை பொருமையாக அவனையும் நிதானமாக்க முயன்றார்.

ஆரவ் கண்கள் படபடத்தது. அவன் எச்சிலை கூட்டி விழுங்கினான் நடந்ததை எப்படி அப்படியே சொல்வதென்ற தயக்கத்தில். ராக்கேஷ் மூலமாக ஷிவன்யா பற்றிய விஷயம் யாதேஷின் அம்மா சாதனாவை அடைந்துவிட்டால் இந்த நேரத்திற்கு அது சரியாக இருக்குமென்று தோன்றழில்லை அவனுக்கு.

" அது... டாக்டர் நாங்க... "

ராக்கேஷ் " சொல்லு ஆரவ்... டிட் ஹி ட்ரை டு ரிமெம்பர் சம்த்திங்? (அவன் எதையாவது நியாபகப்படுத்திக்க முயற்சி செய்தானா?) "

ஆரவ் பெருமூச்சோடு பாதி உண்மையை கூறினான்.

" இப்போ இல்ல டாக்டர்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரொம்ப யோசிச்சிட்டே இருந்தான். என்கிட்டையும் கேள்வி கேட்டுட்டே இருந்தான். கொஞ்ச நேரம் முன்னாடி... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லா தான் இருந்தான்... என்ன ஆச்சுன்னு எனக்கும் புரியல, "

ராக்கேஷ் குழப்பத்தோடு யாதேஷை பரிசோதித்துக் கொண்டே மீண்டும் கேட்டார்.

" இப்போ தான டிஸ்சார்ஜ் ஆகி போனான்... திரும்ப மயக்கம் வந்து இருக்குன்னா ஓவரா பழசையே யோசிச்சிட்டு இருக்கான் போல ஆரவ்... அதை முதல்ல நிறுத்துறதுக்கான வழியப் பாருங்க நீங்க... "

ஆரவிற்கு அவன் பழைய நினைவுகளைப் பற்றி சொன்னதும் ஏதோ போலிருந்தது. " ஏன் டாக்டர் அவனுக்கு நியாபகமே வராதா அப்போ? "

" என்ன ஆரவ் விளையாட்டா இருக்கா உனக்கு? நீயும் விஜித்தாவும் எத்தனை டைம் கேட்டாலும் இதான் என்னோட பதில். நீங்களா அவனுக்கு ஃபோர்ஸ் பண்ணி பழசையெல்லாம் நியாபகப்படுத்தீட்டு இருந்தீங்கன்னா அவன் ப்ரெய்ன் அதையெல்லாம் தாங்காது. அவனுக்கான முடிவு எல்லாம் யாதேஷோட அம்மா தான் எடுத்துருக்காங்க, அவங்க தான் எடுக்கனும். அவன் அம்மாவ விட உனக்கு அவன பத்தி என்ன தெரியப் போகுது? எப்போ என்ன நடக்குமுன்னே தெரியாம அவங்க அவனுக்கு யாரு என்ன மறந்து போனாலும் பரவாயில்ல அவன் உயிரோட இருந்தா போதும்னு இருக்காங்க, அப்டி தான் நாங்களும் ட்ரீட்மென்ட் பண்ணீட்டு இருக்கோம். நீயும் விஜித்தாவும் ஏன் இப்டி நடந்து முடிஞ்சதையே புடிச்சிட்டு இருக்கீங்க? "

அவர் ஆரவை பார்த்து முறைத்துக் கொண்டே கோபமாகத் தான் கேட்டார். ஆனால் ஆரவிற்கும் கோபம் வந்தது.

" அவன் வாழ்கை எனக்கு விளையாட்டு இல்ல டாக்டர். நான் முன்னாடியே சொன்னேன் தான உங்ககிட்ட! அவன் மறந்து போன நாழு வர்ஷம் தான் அவனுக்கு எல்லாமே... "

" ஸ்டாப் இட் ஆரவ், யாதேஷுக்கே நீங்க இத சொன்னாலும் இதுல அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்குமுன்னு எனக்குத் தோனல... அந்த பொண்ணு தான் எங்கையோ போய்டுச்சே அப்பரம்— 

ஆரவ் கோபத்தில் உடனே அவரை நிறுத்தினான்.

" அவளப் பத்தி எதுவும் சொல்லாதீங்க டாக்டர்! "

" ஆரவ் நானும் அந்த பொண்ண பத்தி எல்லாம் கேட்டேன். யாதேஷ இவ்ளோ கஷ்டப்படுத்தீட்டு போயிடுச்சு... அதையெல்லாம் அவனுக்கு நியாபகப்படுத்தி அவன ஏன் கஷ்டப்படுத்தனும்? அவன் அம்மா எல்லாமே சொன்னாங்க, "

ஆரவிற்கு கோபம் புசுபுசுவென ஏற, யாதேஷின் நிலை மட்டும் தான் அவனை பொருமையாக அங்கே நிற்க வைத்தது.

" ப்லீஸ் டாக்டர், எதுவும் தெரியாம பேசாதீங்க. "

அது வரை செயலற்றுப் போன பொம்மைப் போல் இருந்த யாதேஷ் பொருமையாக கண்களைத் திறந்தான்.

அவன் பொருமையாக கண்களைத் திறந்ததை உடனே கவனித்த ஆரவ் உறைய, அந்த கட்டில் மீதிருந்து மிகவும் பொருமையாக எழுந்து அந்த மருத்துவரை ஒரு பார்வை பார்த்தான் யாதேஷ்.

இவன் திடீரென விழித்ததும் முளித்த மருத்துவரும் பின் தன்னை சமன்செய்தபடி அவனை கவனித்தார்.

ராக்கேஷ் " இப்போ எப்டி ஃபீல் பன்ற யாதேஷ்? "

யாதேஷ் அதற்கு பதில் தரவில்லை. அவன் அந்த மருத்துவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆரவைத் திரும்பி உருத்து நோக்கினான். ஆரவ் தான் எதை எதை பேசினோம், எதை எதையெல்லாம் இவன் கேட்டான் என தெரியாமல் முளிக்க, எழுந்து அவனிடம் வந்தவன் மருத்துவரிடம் எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர முயன்றான்.

ராக்கேஷ் " யாதேஷ் எங்க போற நீ? வெயிட், நீ ரெஸ்ட் எடுக்கனும். "

யாதேஷிடமிருந்து சற்று தாமதமாக ஒரு பதில் வந்தது.

" இட்ஸ் ஓக்கே டாக்டர்... நான் நல்லா இருக்கேன், இதுவே நான் உங்கள பார்க்க வர்ரது கடைசியா இருக்கும். " என ஒரு முறை அவரைப் பார்த்து கூறியவன் வாயடைத்து நின்றிருந்த ஆரவை இழுத்துக் கொண்டு கதவு வரை சென்றிருக்க, ராக்கேஷ் அவனை பதட்டமாய் கத்தி அழைத்தார்.

" என்னாச்சு யாதேஷ்?! ஏன் அப்டி— "

" நத்திங் டாக்டர். எனக்கு நீங்க ட்ரீட்மென்ட் பண்ணதெல்லாம் போதும். மத்தத இனிமே நானே பார்த்துக்குறேன். என் லைஃப்ல எனக்கு மறந்து போனது நியாபகம் வரனுமா வர கூடாதான்னு நான் தான் முடிவு பண்ணுவேன். நீங்க பண்ண வேண்டாம். மீதிய என் அம்மாக்கிட்டையே நான் பேசிக்கிறேன். " என ஆழ்ந்த அமைதியான குரலில் கூறியவன் மீண்டும் ஒரு முறை திரும்பினான்.

முன்பு இருந்த அமைதி கூட இப்போது மறைந்திருக்க, முதல் முறையாக அவன் கண்களில் தெரிந்த கோபம் அவரை ஆட்டிப் பார்த்தது.

" நான் இருந்தாலும் சரி இல்லனாலும் சரி. இனிமே ஒருபோதும் அவன் கிட்ட அப்டி பேசாதீங்க. "

தன்னை மருத்துவமனையை விட்டு இழுத்து வந்த நாயகனை ஆரவ் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, கொஞ்சம் தூரம் தள்ளி வந்ததும் காரை நிறுத்த வைத்து சாவியைப் பிடுங்கிக் கொண்டான் யாதேஷ்.

" என்ன டா? "

யாதேஷ் " அந்தாளு தான் உன்ன அப்டி பேசுறான்னா நீயும் வாய மூடீட்டு கேட்டுட்டு இருக்க? சொல்ல வேண்டியது தான நீ, உனக்கு தான் என்ன பத்தி நல்லாத் தெரியும்னு? " என லேசாய் அவன் பற்ளை நரநரவென கடிக்க, ஆரவ் பெருமூச்சுவிட்டான்.

" டேய் விடு டா... நீ ஏன் டென்ஷனாகுற? "

" பின்ன தூக்கி வச்சு கொஞ்சனுமா உன்ன? அந்தாளு ஆரம்பத்துலேந்து ஒரு மாதிரி தான் பேசுறாரு, நீ அப்டியே இருக்க! இதே மாதிரி எத்தனை நாளா உன்ன நடத்தீட்டு இருக்காரு அவரு? "

ஆரவ் என்ன தான் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை என்றாலும் தன் நண்பனை அவர் அப்படி பேசியது யாதேஷிற்கு அரவே பிடிக்கவில்லை.

" எவ்ளோ நேரமா டா நீ முளிச்சிருக்க? " என ஆரவ் காட்டமாய் பதிலொரு கேள்வி கேட்க, யாதேஷ் பார்வையை மட்டும் திருப்பிக் கொண்டான்.

யாதேஷ் " நீ எங்க டா என்ன மயங்கவிட்ட? நீ கத்த ஸ்டார்ட் பண்ணதுலேந்து நானும் அரை மயக்கத்துல தான் இருந்தேன். ஏதோ நீங்க பேச ஸ்டார்ட் பண்ணப்போ தான் எனக்குத் தெளிய ஆரம்பிச்சிது. இப்போ நான் கேட்குறதுக்கு உண்மைய சொல்லு, "

ஆரவ் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தான். யாதேஷ் இவன் பக்கமே திரும்பவில்லை.

" நான் மறந்து போன நாழு வர்ஷம் என்ன தான் ஆச்சுன்னு எனக்குத் தெரியல... ஆனா ஏன் அம்மா எனக்கு அது எதுவும் நியாபகம் வர கூடாதுன்னு நினைக்கிறாங்க? "

" அப்டியெல்லாம் இல்லையே...  யாரு சொன்னா உனக்கு? "

யாதேஷ் இப்போது ஆரவைத் திரும்பி பார்த்தான்.

" எனக்கு கண்ணு நல்லாத் தெரிய ஆரம்பிச்சு நாழு வர்ஷமாகுது டா. யாரு என்ன எந்த விதத்துல பார்க்குறாங்கன்னு கூடவா எனக்குத் தெரியாது? அதான் அந்த டாக்டரே சொன்னாரே, அம்மாக்கு நான் யார மறந்தாலும் இழந்தாலும் பிரச்சனை இல்லை. நான் உயிரோட இருந்தா மட்டும் போதும்ன்னு... எனக்கு நியாபகம் வரனுமுன்னு இவங்க எனக்கு ட்ரீட்மென்ட் பண்ண மாதிரியே தெரியல டா, நாழு வர்ஷத்துல ஒரு முறை கூட எனக்கு எதுவுமே நியாபகம் வரல, ஏன்? என்ன தான் ஆச்சாம் எனக்கு? ஒழுங்கா எனக்கு நீ பதில சொல்றியா இல்ல நான் நேரா அம்மாவ போய் பார்க்கவா? "

இதை கேட்ட ஆரவ் யாதேஷை சற்று குழப்பமாக பார்த்துவிட்டு பின் அலுப்பாக திரும்பிக் கொண்டான்.

ஆரவ் " நாழு வர்ஷத்துல எதுவும் நியாபகம் வரலங்குறது சந்தேகமா தான் இருக்கு... ஆனா உங்க அம்மாகிட்டலாம் பதில் வராது, "

அவன் சலிப்பாக தலையைத் திருப்பிக் கொண்டதும் யாதேஷும் அதே போல் தலையை ஜன்னல் புறம் திருப்பிவிட்டு அவனுக்கு ஒரு அட்டக்கைக் கொடுத்தான்.

" அப்போ நான் கேட்ட ஷிவா யாருன்னு சொல்லு, நான் அவங்ககிட்ட போய் கேட்டுக்குறேன். "

ஆரவ் இவனை எரிச்சலாய் திரும்பி பார்த்தான்.

ஆரவ் " ஷிவாலாம் இல்ல... யாருக்கிட்ட போய் நீ கேட்டாலும் உன் கேள்விக்கு பதில் வராது டா, அப்டி தான் உங்கம்மா நிறுத்தி வச்சு இருக்காங்க எங்கள! "

யாதேஷ் இப்போது ஆரவை அவன் பக்கம் திருப்பினான். " நீ பேசுறத பார்த்தா எனக்கு எதாவது நியாபகம் வந்தா கண் பார்வை போய்டுமோன்னு பயப்படுறதவிட அவங்க எனக்கு எதாவது நியாபகம் வந்துடுமோன்னே பயந்துட்டு இருக்க மாதிரி இருக்கு... "

ஆரவிடம் அதற்கான எந்த பதிலும் வரவில்லை. அவன் யாதேஷிடமிருந்து பார்வையை அகற்றுவதிலே குறியாய் இருக்க, அவன் தாடையை வலுக்கட்டாயமாகப் பிடித்து அவன் புறம் திருப்பினான்.

" மச்சான் சத்தியமா எனக்கு ஏதேதோ தோனுது டா... நான் எத மறந்தேன், எத தொலைச்சேன்னு ஒன்னுமே எனக்குத் தெரியல, ஆனா இன்னும் எத்தன நாளைக்கு இப்டி மறச்சே வைக்கப் போறீங்க?! "

" மறச்சு வைக்கிறது நாங்க இல்ல டா! இப்போ நினைச்சாலும் வேதனையா இருக்கு எனக்கு, உன்கிட்ட வாயத் திறந்து சொல்ல முடியாத நிலமைல இருக்கேன் நான்... நான் ஒரு விஷயம் சொன்னா நீ அதுக்கு சம்பந்தமான பல விஷயத்த யோசிப்ப யாதேஷ், திரும்ப உனக்கு எதாவது ஆனா நான் ஷிவாக்கு— "

ஆரவ் பட்டென அவன் வார்த்தைகளை விழுங்க, அவன் கண்களையே பார்த்திருந்த யாதேஷ் அந்த தடுமாற்றத்தைப் பிடித்துக் கொண்டான்.

" சொல்லு... ஷிவாக்கு என்ன? " யாதேஷ் ஆரவிற்கு அவன் விட்டதை எடுத்து கொடுக்க, தன் நண்பனை பாவமாகப் பார்த்தான் அவன். " ஏதோ பொண்ணு...‌ ஏதோ பொண்ணுன்னு வேற பேசுனீங்களே...‌ யாரது? "

ஆனால் ஆரவ் ஏதும் சொல்லும் முன்பாக திடீரென சமைந்து போன யாதேஷ் காரின் ஜன்னல் புறம் திரும்பி எங்கோ பார்க்க, ஆரவும் குழப்பமாய் அவன் பார்வையை பின் தொடர்ந்தான்.

யாதேஷின் கண்கள் எதையோ தேடி சரசரவென அலைபாய, அவன் இதயம் வேகவேகமாக சிறகடித்துப் பறக்கவேண்டி துள்ளிக் குதிக்க அவன் மனம் ரோலர்கோஸ்டரில் ஏறியது போல் துள்ளுவதற்கு காரணமானவளும் சரியாக அவர்களின் காரை தாண்டிச் சென்றாள்.

இரவின் குளிரில் மஃப்லரால் முகத்தை மறைத்து, மனதை லேசாக்க வேண்டி சசியுடன் ஷிவானியை விட்டுவிட்டு தனியே சற்று காலாற நடந்து கொண்டிருந்த ஷிவன்யா அவளவனின் சிந்தையில் ஆரவின் டெஸ்லாவை கவனியாமல் நடந்து செல்ல, யாதேஷின் கண்கள் மௌனமாய் அவள் மீதே தான் நிலைத்திருந்தது.

பேசிக் கொண்டிருந்தவன் படாரென அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டுத் திரும்பியதால் குழம்பி போன ஆரவ் ஷிவன்யாவை கண்டு அதிர, அதை கவனிக்கும் நிலையில் யாதேஷ் இல்லை.

அவள் மறையும் வரை பார்த்திருந்தவன் பின் என்ன நினைத்தானோ உடனே காரை விட்டு கீழிறங்கி ஷிவன்யாவின் பின் ஓடினான்.

காரிலே அமர்ந்து ஆரவ் யாதேஷை அமைதியாக பார்த்துக் கொண்டீருந்தான்.

ஷிவன்யா உலகே அறியாமல் அந்த இருள் அப்பிய இரவில் கால் போன போக்கில் நடந்து கொண்டிருக்க, அவளுக்குப் பின் பத்தடி தொலைவில் நடந்து சென்ற யாதேஷின் கண்களும் கவனமும் அவளைச் சுற்றியே இருந்தது.

ஒரு நண்பனாய் நம் நாயகனின் காதலை கண்டு பெருமிதம் கொண்டான் ஆரவ். நினைவுகள் இன்றி அனைத்தும் மறைந்திருந்தாலும் அவன் நித்தமும் நான்கு வருடம் நினைத்து அவளுக்காகவே வாழ்ந்த வாழ்கையில் ஒரு துளி கூடவா அவன் உயிரோடு சேர்ந்திருக்காது?

ஷிவன்யாவின் மனதை மாற்றப் போவது மேலும் கடினமாக தோன்றவில்லை ஆரவிற்கு.

எவ்வளவு நிமிடங்கள் கடந்ததோ தெரியவில்லை. ஷிவன்யா தானாக ஒரு அப்பார்ட்மென்ட்டிற்குள் நுழையும் வரை அவளை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த யாதேஷ் அவள் தன் கண்களை விட்டு மறைந்தவுடன் ஆரவின் காரிற்கு திரும்பியபோது ஆரவ் கண்கள் மூடி சீட்டில் சாய்ந்திருந்தான்.

யாதேஷ் கதவை திறந்த அரவத்தில் கண்களைப் பிரித்த ஆரவும் அவனிடம் எங்கு போனாய்? எங்கு சென்றாய்? என கேட்கவில்லை, யாதேஷும் பதில் எதுவும் தராமல் ஏதோ இதுவெல்லாம் ஆரவிற்கு பலமுறை பழக்கப்பட்ட ஒன்று தான் என அறிந்தது போல ஏன் யாரோ ஒருவளை பின் தொடர்ந்து சென்றாய்? என கேட்காத நண்பனைப் பற்றி யோசிக்கவில்லை.

யாதேஷ் " மச்சான் யமுனா நாளைக்கு இன்ட்டர்வ்யூக்கு வருவாளா டா? " என ஆரவை பார்க்க, இவன் பதிலின்றி விழித்தான்.

ஆனால் ஆரவிடம் பதில் எதிர்பார்க்காமல் திடீரென யாதேஷின் பார்வை மீண்டும் எங்கோ சென்றது...

" இந்த நேரத்துல தனியா ஏதோ...ரொம்ப கஷ்டத்துல இருக்க மாதிரி இருந்தா டா... சூப்பர்மார்கேட்ல அவ என்ன பார்த்த பார்வைக்கு... "

அவன் வார்த்தைகள் தடைப்பட்டு நிற்க, அவளின் கண்ணீர் நிறம்பிய விழிகள் மின்னலாய் அவன் கண் முன் பாய, மீண்டும் அவன் பின்னந்தலையில் சுல்லென்ற வலி...

கண்களை இறுக்கி மூடிக் கொண்ட யாதேஷின் மனதில் அவளின் வலி நிறைந்த முகமே மீண்டும் படம் போல் ஓட, தான் மயங்கும் முன் நடந்த விஷயத்தை மீண்டும் அசைப்போட்டவனின் இதயம் இப்போதும் அவள் சாலையில் கவனமின்றி தவறி விழுந்தபோது நின்றதை போலவே நின்று துடித்தது.

தனக்குள் இந்த அறிமுகமில்லாத பெண்ணால் நடக்கும் மாற்றங்களின் அர்த்தம் புரியாமல் இவன் விழிக்க, பதில் அனைத்தையும் அறிந்திருந்த அவன் நண்பனோ அவன் குழப்பத்தில் முக்குளிப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

பல நிமிடங்கள் யோசித்தும் விடையறியாத ஆத்திரத்தில் அவன் மூளையில் சிகப்பு லைட் எரியத் தொடங்க, அந்த யோசனையை அப்படியே விட்டுவிட்டு இவை அனைத்திற்கும் மூலகாரணமான வேலைக்கு நாளை அவள் வருவாளா மாட்டாளா என சிந்திக்க... ஏதோ ஒரு காரணத்தினால் யாதேஷின் மனதில் ஒரு குரல் " அவள் இந்த வேலையை ஏற்க மாட்டாள்! " என ஆணித்தரமாய் கூறிக் கொண்டே இருந்தது.

ஆனால் இந்த நிராகரிப்பையெல்லாம் பார்த்துவிட்டு அவன் அமைதியாக இருந்துவிட்டால் யாதேஷ் ஷிவன்‌ நம் நாயகனே இல்லையே...

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro