Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

போய் வா: 27

முணியாண்டி மற்றும் ராசாத்தி வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடியே சசி " அப்பா! " என்ற அழுகுரலோடு ஓடிச் சென்று அவள் தந்தையிடம் சரனடய, என்னவோ ஏதோவென்று ஓடி வந்திருந்த பெற்றோர் இருவரும் கத்தி அழும் இளைய மகளையும், திருமண கோலத்தில் வாழ்வையே தொலைத்துவிட்ட வலியோடு இடிந்து அமர்ந்திருந்த மூத்த மகளையும் கண்டு உடைந்து விட்டனர்.

முணியாண்டி சசியை அவள் அனையிடம் விட்டுவிட்டு வேகவேகமாக அனைவரையும் தாண்டி முதலில் அவர் மகளிடம் விரைய, எஞ்சியிருந்த தெம்புடன் தன்னை பற்றியிருந்தவர்களிடம் இருந்து திமிரி எழுந்த ஷிவன்யா தாயை தேடிய சேயாய் அவள் தந்தையின் கரங்களில் விழுந்தாள்.

" யமுனா! அம்மாடி, என்ன டா ஆச்சு?! அய்யோ என்ன பாரு யமுனா! அப்பாவ பாரு தங்கம்! " முணியாண்டி முகமெல்லாம் வேர்த்துப் போய், அழுகை தொண்டையை அடைக்க தன்னிடம் ஓடி வந்த தன் மூத்த மகளை குழந்தைப் போல் தன்னுள் புதைத்துக் கொண்டார்.

ஐந்து நாட்களாக பெற்றப் பிள்ளைகளிடம் பேச முடியவில்லை என்றாலும், அழைக்கும் போதெல்லாம் அவர்கள் ஏதோ வேலையாக இருப்பதாகவும் நலமாகவே இருப்பதாகவும் கூறிய தன் அம்மாவின் வார்த்தைகள் இப்போது அவர் கண் முன் நிழலாட, சடாரென முத்துலட்சுமி அப்பத்தாவை திரும்பி பார்த்தார்.

" ஆத்தா! எம் புள்ளைவோளுக்கு என்ன ஆத்தா ஆச்சு?! "

அப்பாவின் கைவளைவில் உடைந்து அழுது கொண்டிருந்த ஷிவன்யாவிற்கு நாவே எழவில்லை. ஆனால் அவர் எப்போது இந்த வலிகள் அனைத்திற்கும் காரணமான முத்துலட்சுமி அப்பத்தாவை பேச்சில் இழுத்தாரோ அப்போதே சட்டென அவரிடமிருந்து விலகிய ஷிவன்யா, அவள் தந்தையையும் தாண்டி அவர்களுக்கு சில அடி தூரங்களில் தலையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த யாதேஷிடம் ஓடினாள்.

" மா— மாமா, என்னாச்சு மாமா! ஏன் மாமா அங்கேயே நின்னிங்க? அய்யோ என்ன பாருங்க மாமா?! " என அவன் தலையை அவள் பட்டும் படாமல் தூக்கிய போதும் யாதேஷ் வலியில் பல்லைக் கடித்து அவள் கைகளை வேகமாகப் பிடித்துக் கொண்டான்.

" எனக்கு ஒன்னும் இல்ல டி, "

அவன் நெற்றியில் வலியும் இரத்தத்தை பாராமல் வேகமாக அதை ஷிவன்யா கவனிக்கும் முன்பாக துடைத்துவிட்டு, தலையை சிலிப்பிக் கொண்டபோது முணியாண்டி இவர்களை கவனித்தார்.

" தம்பி... நீங்க எப்டி தம்பி இங்க வந்தீங்க? என்ன நடக்குது இங்க...? "

ராசாத்தியிடம் அழுது கொண்டிருந்த சசி வேகமாக மூச்சு விட்டபடி அவள் தந்தையைப் பார்த்து கத்தினாள். " அப்பா நான் சொல்றேன்ப்பா! அப்பத்தா என்னையும் அக்காவையும் வீட்டுக்குள்ளேயே அடச்சிவச்சு அக்காவுக்கு யாருக்கூடையோ கல்யாணம் பண்ண பாத்துச்சுப்பா! நீங்க...நீங்க ஊருக்கு போனதுலேந்து எங்கள யாருக்கிட்டையும் பேசவிடல! வெளியப் போக விடல! அக்காவ அடிச்சு அடிச்சு அந்த ரூம்ல போட்டு...போட்டு லாக் பண்ணீடுச்சு! உங்க கிட்ட பேவவே விடல! அக்கா அழுதுட்டே இருந்தாப்பா! நீங்க ஏன் எங்கள இவங்ககிட்ட விட்டுட்டுப் போனீங்க?! "

சசியின் ஒவ்வொரு சொல்லும் முணியாண்டியின் இதயத்தை முள்ளாய் குத்த, யாதேஷின் கரத்தை இறுக்கிப் பிடித்திருந்த ஷிவன்யா அழுகையை அடக்க இயலாமல் நடுங்க, யாதேஷ் அவளை வேகமாய் அவன் கை வளைவிற்குள் புதைத்துக் கொண்டான்.

" என்ன...என்ன டா சொல்ற? ஆத்தா... ஆத்தா... கங்கா சொல்றதெல்லாம் உண்மையா?! "

முத்துலட்சுமி அப்பத்தா வாய் திறக்க இயலாமல் சுற்றி முற்றிப் பார்க்க, அவர் வாயிலிருந்து காத்து தான் வந்தது. கண்கள் சிவந்து தன் அம்மாவைப் பார்த்து நின்ற முணியாண்டிக்கு தன் மகள்கள் இருவரும் நடுநடுங்கி அழும் அந்த காட்சி மனதை நொருக்கியது.

" சொல்லு ஆத்தா! கங்கா சொல்றதெல்லாம் உண்மையில்லன்னாவது சொல்லு! "

தன்னை இத்தனை பேர் முன்னிலையில் தன் மகனே கத்துவது பொருக்காமல், முத்துலட்சுமி அப்பத்தா உண்மையைப் போட்டுடைத்தார்.

" ஆமா! உண்மைதான்! நான் தான் அடச்சு வச்சு அவளுக்கு கல்யாணம் பண்ண பார்த்தேன். அப்டி என்ன தப்பு பண்ணிப்புட்டேன்?! இவ பட்டனத்துக்குப் போன திமிருல எவனோ கண்டவன பார்த்துட்டு அவன் தான் உலகம்-னு சொல்லீட்டு நின்னா நான் என்னோட இரத்தம் இவளால அசிங்கப்படுறத பார்த்துட்டு சும்மா போனுமா?! இப்போ கூட பாரு, பெத்து வளத்த அப்பன் ஆத்தா மானத்தையெல்லாம் பார்க்காம அவன கட்டிப்புடிச்சிட்டு நின்னுட்டு இருக்கா நீ பெத்த உன் பொண்ணு! நீ அவள வளத்தி விற்றுக்க லட்சணத்த கேள்வி கேட்காம, உன்ன வளத்து பெரிய ஆளாக்குன என்ன இத்தன ஜனங்க முன்னாடி கேள்வி கேக்குற?! "

" உன்னால... எப்டி ஆத்தா முடிஞ்சிது... எம் புள்ளைய— "

" இவ்ளோ நடந்தும் உன் மானமரியாதைய காப்பாத்தாம அவன் கையப் புடிச்சிட்டுத் தான் நின்னுட்டு இருக்கா அவோ?! நான் என்ன டா பெருசா தப்புப் பண்ணீட்டேன்! நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ என்ன மீறி அவளுக்கு அவன் கூட நீ கல்யாணம் பண்ணன்னா இந்த வீட்ட விட்டு பொணமா தான் அவள அனுப்புவேன்! "

" போதும் நிறுத்து ஆத்தா!! "

முணியாண்டிக்கு கோபம் எல்லையைக் கடந்திருக்க, அவர் முகம் சிவந்து கர்ண கொடூரமாய் தன் அம்மாவிடும் கொடுத்த குரல் அங்கிருந்த அனைவரையும் அங்கேயே உறைய வைத்தது. அப்பத்தா பேசிக் கொண்டிருக்கும் போதே யாதேஷ் ஷிவன்யாவின் இரு காதுகளையும் மூடிக் கொண்டு, அவளை மேலும் மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

" போதும்! போதும்! நீ பேசுறது எல்லாம் பேசீட்ட போதும்! "

அப்பத்தா பேச வாயெழாமல் வெளிரிய முகத்தோடு முணியாண்டியைப் பார்க்க, யாரோ ஒரு ஊர் மனிதர் பேச வேண்டும் என்பதற்காகவே பேசினார் போல.

" என்ன முணியாண்டி அண்ணே, நம்ம ஆத்தா என்ன தப்பா பண்ணிப்புடுச்சு? பொட்டப் புள்ளைவோல ஊருக்குள்ள கட்டிக்குடுத்து அடுப்படியோட போடுற காலத்துல உங்க மொவ மாத்திரம் பட்டனத்துலேந்து ஒருத்தன இழுத்துட்டு வந்தா அது தப்பில்லையோ?  "

அவர் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதோடு வேறு ஒரு பெண்மணி அதில் ஈயத்தை ஊற்றினார்.

" ஆமா மதனி, இப்டியே விட்டா ஊரு பூராவும் உங்க குடும்பத்து கௌரவத்த உங்க மவ கெடுத்துருவா, ஆனது ஆகட்டுமுன்னு சட்டுப்புட்டுன்னு ஒரு கல்யாணத்த முடிச்சிடுங்க... " சசியை கட்டிப்பிடித்துக் கொண்டு தன் மூத்த மகளை பார்க்கக் கூட திராணியற்று நின்றிருந்த ராசாத்தியை அவர் உசுப்பேற்ற, இன்னோறு ஒருவர் ஏதோ கலாட்டா காமெடியைப் பார்த்தது போல் கலகலவென சிரித்துவிட்டு முணியாண்டியைப் பார்த்து,

" நாங்க பார்த்த மாப்பிள்ளை சொக்கத் தங்கம், முணியாண்டி! ஊட்டுக்கு ஒரே புள்ள, பொட்டுத் தங்கம் வேணாம் உம் பொண்ணு மட்டும் போதும்னு பார்த்ததுலேந்து கேட்டுட்டு கெடைக்கான், விற்றாத முணியாண்டி, "

யாதேஷ் மற்றும் ஷிவன்யாவை திரும்பி பார்த்த முணியாண்டியின் முகத்தில் அப்படி ஒரு வலி.

" என் வீட்ட விட்டு எல்லாரும் வெளியப் போங்க! போங்க! எம் பொண்ணப் பத்தி அருகதையில்லாம பேசுன யாரும் இங்க இருக்க வேண்டாம்... தயவுசெஞ்சு வெளிய போய்டுங்க! " என அவர் கைகூப்பி கத்தவும் முத்துலட்சுமி அப்பத்தா குதிக்க ஆரம்பித்தார்.

" என் வார்த்தைக்கு இந்த வீட்டுல என்ன டா மரியாதை?! யார கேட்டு—

" ஆத்தா தயவுசெஞ்சு என்ன கொலகாரணாக்கீறாத! " என முணியாண்டி தீப்பொறி கண்களில் தெறிக்க கர்ஜித்த அடுத்த நொடி, கூடியிருந்த ஊர் மொத்தமும் அங்கிருந்து ஒரு தடையமும் இல்லாமல் மறைந்திருந்தது.

அப்பத்தாவும் சொல்லாமல் கொள்ளாமல் அவர்கள் அனைவரின் பார்வையில் இருந்தும் மறைந்து வீட்டைவிட்டு வெளியே எங்கோ சென்றிருக்க, அவரை தேடும் மனநிலையில் கூட அந்த வீட்டில் யாரும் இல்லை.

மெல்ல மெல்ல அழுது அடங்கியிருந்த ஷிவன்யாவின் காதுகளில் இருந்து தன் கரங்களை எடுத்த யாதேஷ், அவளோடு நெற்றிமோதி அவள் கன்னத்தை மென்மையாய் ஏந்தினான்.

" சாரி டி... சாரி, ரொம்ப சாரி... சாரி யமுனா, " என அவன் அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் கண்ணீரோடு கெஞ்ச, ஷிவன்யாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

ஒரு தூணில் சாய்ந்து தரையில் அப்படியே அமர்ந்த முணியாண்டியின் அருகில் போய் சசி அவரது கைகளில் சாய்ந்து அமர்ந்து கொள்ள, ராசாத்தி இன்னமும் யாதேஷின் கைவளைவில் புதைந்திருந்த தன் மகளைத் தான் வலியோடு பார்த்திருந்தார்.

அந்த தாயிற்கு தன் மகள் தான் உடனில்லாத போது என்னவெல்லாம் அனுபவித்தாளோ? இன்னும் எந்தளவிற்கு அவச்சொற்களை கேட்டாளோ? எப்படியெல்லாம் மனமுடைந்து கிடந்தாளோ? என யோசிக்க யோசிக்க மனதில் ஒரு பிரளயம் வெடிக்க, அவள் வலியில் கண்ணீர் வடிக்கும் அவனைக் கண்டு வாயடைத்து நின்றிருந்தார்.

நேரம் ஓடியதே தெரியாமல் கண்ணீரில் அந்த குடும்பம் கரைய, யாதேஷிடமிருந்து பிரிந்த ஷிவன்யா மீண்டும் ராசாத்தியைப் பார்த்ததுமே தாங்கமாட்டாமல் அழுதுவிட்டாள்.

தாய் முகம் கண்டால் யார் தான் வலியை மறைப்பரோ? " அம்மா! " என ஷிவன்யா கத்தி அழ, ராசாத்தியின் மனம் அங்கேயே சுக்கு நூறாய் போய்விட்டது.

அவளது அழுகுரலில் சசியும் ஓடிப் போய் அம்மா அக்காவோடு சேர்ந்து கொள்ள, தலை நிமிர்ந்து பார்த்த முணியாண்டிக்கும் கண்கள் பனித்தது. எதற்கும் துணிச்சலோடு எழுந்து நின்று புன்னகையோடு எதிர்த்து நிற்கும் தன் மகளையா இப்படி உடைத்து விட்டனர்? கைகளில் தூக்கி மலரென பார்த்துப் பார்த்து சீராட்டி பாராட்டி வளர்த்த மகளையா இப்படி வேதனையில் தள்ளிவிட்டனர்?

" ஷிவன்யா... அம்மாவ மன்னிச்சிரு டி... அம்மாவ மன்னிச்சிரு டி என் தங்கமே, அய்யோ எம் புள்ளைய போய் இப்டி பண்ணீட்டாங்களே, கடவுளே, ஏன்யா எம் புள்ளைய சோதிக்கிற? ஹையோ, " என கத்தி அழுத அந்த தாயின் கண்ணீர் அங்கிருந்த அனைவரின் மனதையும் கலைக்க, எந்த வலியிலும் எழுந்து நின்று தன் பெற்றோருக்கே சமாதானம் சொல்லும் ஷிவன்யாவிடம் அன்று பலம் இல்லை.

அவள் ராசாத்தியின் மடியில் முகம் புதைத்து விசும்ப, எழுந்து சென்று மடிந்து அழும் தன் குடும்பத்தை தழுவிக் கொண்ட முணியாண்டி, ஷிவன்யாவின்
கால்களை மென்மையாய் பிடித்துக் கொண்டார்.

அடிப்பட்ட சிறுபிள்ளை போல் அவள் அன்னையின் மடியில் அப்பாவின் கதகதப்போடு அழுது அழுதே உறங்கிப் போனாள்.

ஷிவனேஷ் ஒரு பெருமூச்சோடு யாதேஷையும் ஆரவையும் ஒரு இடத்தில் அமரவைத்துவிட்டு அவனும் அவர்களோடு சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். இப்படி ஒரு நிலைமை ஏன் தன் தங்கைக்கு வர வேண்டும் என்ற கேள்வி அந்த அண்ணனின் மனதை பிசைந்தது.

நேரம் போனதே தெரியாமல் யாதேஷ் கல்லென சமைந்த தன் மனதை லேசாக்காமல் அதே இடத்தில் அமர்ந்திருக்க, அவன் அருகில் கேட்ட திடீர் சத்தம் அவனை ஒரு வழியாக உலகிற்கு அழைத்து வந்தது.

" தம்பி... " முணியாண்டியின் உடைந்த குரல் அவனை மேலும் சில நிமிடங்கள் களித்து அடைந்தது.

யாதேஷ் தன்னருகில் ஆரவ் ஷிவனேஷ் இருவரும் இல்லை என்பதை உணர்ந்ததும் எவ்வளவு நேரமானதென்று தெரியாமல் பதறி எழுந்து நின்றான். எழுந்த நொடியே அவன் தலை ஒரு முறை சுற்றியது. ஆனால் தலையை சிலிப்பிக் கொண்டு முணியாண்டியை நோக்கி நிமிர்ந்தான்.

" யமுனா... யமுனா எங்க ஸர்? " என அவன் அங்குமிங்கும் அவள் சத்தம் தேடி தலையைத் திருப்ப, முணியாண்டியின் முகத்தில் கசந்த புன்னகை ஒன்று இலையோடியது.

தட்டுத்தடுமாறி அவன் கைகளை அவர் பிடித்தவுடன், ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த யாதேஷ் சுதாரிக்க, முணியாண்டி உடைந்து கண்ணீர் சிந்திவிட்டார்.

" என்ன மன்னிச்சிருங்க தம்பி, என்ன மன்னிச்சிருங்க... நான் இல்லாத நேரத்துல என் பொண்ண என்னோட அம்மாவே இவ்வளவு கஷ்டப்படுத்துவாங்கன்னு நான் நினைச்சேப் பார்க்கல தம்பி, என்ன மன்னிச்சிருங்க என்னென்னமோ ஆயிப்போச்சு ... நீங்க சரியான நேரத்துல இங்க வரலன்னா... "

" ஸர் என் கிட்ட ஏன் ஸர் மன்னிப்புக் கேக்குறீங்க... நான்...நான்— "

" எம் புள்ளைய எங்கையாவது கூட்டீட்டு போய்டுங்க தம்பி, "

யாதேஷ் அதிர்ச்சியில் பேச்சற்று கண்களை விரிக்க, முணியாண்டி அவன் கைகளை அழுத்திப் பிடித்தார்.

" தயவுசெஞ்சு யமுனாவ உங்ககூடையே கூட்டீட்டுப் போயிடுங்க தம்பி, தயவுசெஞ்சு கூட்டீட்டுப் போய்டுங்க... சொந்த வீட்டுலையே அவளால நிம்மதியா இருக்க முடியல... இனிமே என்ன ஆனாலும் இந்த வீட்டுல அவளுக்கு சந்தோஷம் இருக்காது! எம் புள்ளைய நீங்க எப்டி பாத்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அவள தனியா இங்க விற்றாதீங்க தம்பி, என் பொண்ணோட மனச என்னால பாதுகாக்க முடியல தம்பி... அவ அழுதா என்னால தாங்க முடியாது... என்னால முடியாது... " என யாதேஷின் கைகளில் முகம் புதைத்து முணியாண்டி கண்ணீர் சிந்த, யாதேஷ் பதறினான்.

" ஸர்! அழாதீங்க ஸர்... ஸர் யமுனா அத தாங்க மாட்டா ஸர், "

அவன் சொல்லி முடிக்கவில்லை, அப்போதே எழுந்துவிட்டு வேகவேகமாக யாதேஷைத் தேடி வந்திருந்த ஷிவன்யா அனைத்தையும் கேட்டுவிட்டு முணியாண்டியை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

" அப்பா... சாரிப்பா... சாரிப்பா... "

ஷிவன்யாவை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட முணியாண்டி யாதேஷின் கைகளை ஒரு கையில் இன்னும் பிடித்துக் கொண்டு, " நீ ஏன் டா தங்கம் மன்னிப்பு கேக்குற? நீ எனக்குக் கிடைச்ச மகாலட்சுமி டா யமுனா, என் வீட்டு குலசாமி நீ அழ கூடாது மா... உன் சந்தோஷம் தான் டா எனக்கு முக்கியம்... நீ இங்க இருக்க வேணாம் ராசாத்தி... தம்பி கூட போ யமுனா, "

நம் நாயகிக்கு மீண்டும் கண்கள் கலங்க, அவள் தந்தையின் கண்ணீரை பார்க்க முடியாமல் தலையை ஆட்டிக் கொண்டாள்.

" அழாதீங்கப்பா... ப்லீஸ் அழாதீங்கப்பா... நான்...நான் ந...நல்லா தான் ப்பா...இரு... இருக்கேன், " என திக்கித் தினறினாள்.

" ஸர்... ப்லீஸ் நான் அவள நல்லா பார்த்துக்குவேன்... நீங்க அழாதீங்க ஸர், " என யாதேஷ் அவரை சமாதானம் செய்தான்.

ஒரு சில வினாடிகளுக்கு அவர்களை அப்படியே பிடித்திருந்த முணியாண்டி, ஷிவன்யாவின் கையைப் பிடித்து யாதேஷிடம் கொடுத்தார்.

" எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் குடுங்க... இங்கேந்து போய் நீங்க சென்னைல நல்ல வாழ்கைய தொடங்கனும்... இங்க...இங்க நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு... "

ஷிவன்யா அவரை தடுக்க முணைவதற்குள் அவளையும் இடைமறித்தார்.

" அப்பா சொல்றத கேளு டா தங்கம்... நீ தம்பி கூட போ... நான் அம்மா தங்கச்சியெல்லாம் கூப்ட்டுட்டு வந்து உன்ன பார்க்குறேன், இந்த...இந்த ஊரு... உன்ன கஷ்ட்டப்படுத்திப் பார்த்த இந்த ஊரு உனக்கு வேணாம்... அப்பா சொல்றத கேட்டு ஊருக்குப் போ யமுனா... ஊருக்குப் போ, "

யாதேஷும் ஷிவன்யாவும் செய்வதறியாமல் முணியாண்டி முன் சோகமாய் நின்றிருக்க, கண்ணீரோடு அவர்களை பார்த்த முணியாண்டியின் கண்களில் வெகுநேரம் களித்து ஒரு நிம்மதி பரவியது.

நடப்பதை தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஷிவனேஷும் ஆரவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு யாதேஷின் அருகில் வந்து நின்றனர்.

" நல்லா யோசிச்சுத் தான் சொல்றீங்களா? " ஷிவனேஷ் முணியாண்டியை அமைதியாய் பார்க்க, அதற்கு அவர் ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினார்.

" அப்பா... இதுல உங்க தப்பு இல்லப்பா... "

" தங்கம் நீ அனுபவிக்கக் கூடாததையெல்லாம் அனுபவிச்சிட்ட டா... நான் உன்ன தனியா இப்டி விட்டுட்டு போயிருக்கக் கூடாது டா மா... இங்க இருந்து இனிமேலும் நீ கஷ்டப்படுறத இந்த அப்பாவால பார்க்க முடியாது டா... தம்பி கூட போய்யிட்டு வா டா யமுனா, "

சரியாக அதே நேரம் அவர்களை நோக்கி ஓடி வந்த சசி, ஷிவன்யாவின் இன்னோறு கையைப் பிடித்துக் கொண்டாள். " அக்கா நீ மாமா கூட சென்னைக்கே போயிடுக்கா! இந்த அப்பத்தாவ வச்சிட்டு நீ இங்க இருந்தா எந்த நேரம் என்ன ஆகுமோ-னு பயந்தே சாகனும், நீ மாமாவோடையே ஊருக்குப் போயிடுக்கா! "

" சசி, செத்த பொருமையா இரு, " என ராசாத்தி அதட்டிவிட்டு அவர்கள் அருகில் வந்து பாவமாய் நின்றார். " ஏங்க நம்ம புள்ளைய இந்த நிலைமைல நம்மளவிட்டு அனுப்பனுமாங்க? "

பெற்ற மகளை இந்த நிலையில் கண் பார்வையிலிருந்து அனுப்ப எந்த பெற்றோருக்குத் தான் மனம் வரும்? ஆனால் வருத்தம் புரிந்தாலும் இங்கிருந்து தன் மகள் படும் வேதனைக்கு இங்கிருந்து செல்வது தான் மேல் என தோன்றியது முணியாண்டிக்கு.

" இரெண்டு நாளுக்கு அப்பரம் பரிட்சை வேற இருக்குல்ல... நாமளும் இரெண்டு வாரத்துல யமுனாவ போய் பார்க்களாம் ராசாத்தி... புள்ள இங்க இருந்தா தாங்காது ராசாத்தி... போயிட்டு வரட்டும், "

அதற்கு மேல் ராசாத்திக்கும் தன் கணவனை எதிர்க்க மனம் வரவில்லை. இரண்டு மணி நேரத்திற்குள்ளாக ஷிவன்யா மீண்டும் சென்னைக்கே கிளம்பினாள்.

" அம்மா... நான் போறேன் மா, "

ராசாத்திக்கு கண்கள் உடனே கலங்கிவிட்டது. அவளை வேகமாக பிடித்துக் கொண்டார்.

" அப்டி சொல்லாத கண்ணு... அந்த கடவுள் உன்ன பார்த்துப்பாரு, தைரியமா இரு, " என ராசாத்தி அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள, " என்ன அவரு நல்லாப் பாத்துப்பாரு மா, " என்ற ஒரு கசந்து புன்னகையோடு தாயிடமிருந்து பிரிந்து தன் தந்தையும் காதலனும் ஒன்றாய் நின்றிருந்த இடத்திற்குச் சென்றாள்.

" நீங்க கவலப்படாதீங்க ஸர்... நான் இருப்பேன்... நாங்க எல்லாரும் இருக்கோம், "

முணியாண்டி யாதேஷின் கைகளை இறுக்கிப் பிடித்து அவனை அணைத்துவிட்டுத் தான் விடுவித்தார்.

" ஓய் சசி, எங்க கூட நீயும் வாயேன் சென்னைக்கு, கார்ல தான் போறோம். " என தன் அக்காவை கட்டிப் பிடித்து நின்றிருந்த சசியை யாதேஷ் வம்பிழுக்க, சசி ஷிவன்யாவை கலட்டிவிட்டுவிட்டு யாதேஷைச் சென்று பிடித்துக் கொண்டாள்.

" நீங்க இப்போ போய்ட்டு வாங்க மாமா! அம்மாவும் அப்பாவும் தனியா இருப்பாங்க, நான் என் படிப்ப முடிச்சிட்டு அப்பாம்மா கூட அங்க வந்துடுறேன், நீங்க அப்போ என்ன கார்ல கூட்டீட்டுப் போங்க, "

" ஏய் மொதல்ல காலேஜ் சேரு டி நீ! "

ஷிவன்யா வேகமாக வந்து அவனின் மறுகையை பிடித்துக் கொள்ள, " நான் சென்னைக்குப் படிக்க வரலன்னு நீ அங்க ஜாலியா இருக்காதக்கா! நான் வருவேன் சீக்கிரமே! அப்பரம் மாமாவ கூட்டீட்டு நான் ஊர் சுத்தீட்டே இருப்பேன்! "

" என் மாமாவ கூட்டீட்டு நீ ஏன் டி ஊரு சுத்துற?! "

" உனக்குலாம் மாமா இல்ல! முறைப்படி எனக்கு மட்டும் தான் மாமா! "

" பல்ல கைல களட்டிக் குடுத்துடுவேன், நீ போய் உனக்கு வேற மாமாவ புடிச்சிக்க போ டி, "

" ம்மா! உன் பொண்ணு பண்ணெண்டாவது படிக்கிற ஒரு பச்சமண்ணப் பார்த்து என்ன சொல்றா பாரு மா! இத கேட்டுட்டு நான் எவனையாவது வீட்டுக்கு கூட்டீட்டு வந்தா நீ என்னன்னு என்ன கேட்க கூடாது சொல்லீட்டேன்! "

" அடிங்க போ டி அந்த பக்கம்! "

" அடப்பாவிங்களா, உங்களுக்கு இடைல வந்தது பெரும் தப்பா போச்சே, " என சசியை துரத்திவிட்ட ஷிவன்யாவின் ஆர்வத்தைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டான்.

இவ்வாறு அக்காவும் தங்கையும் யாதேஷை ஒரு ஒரு பக்கம் இழுத்து இழுத்து விளையாட, ராசாத்தி அவர்களை உருட்டி மிரட்டி அமைதிப் படுத்தியதும் ஷிவனேஷ் ஊருக்கு செல்லத் தயாராகி ஆரவோடு காரில் வந்து நின்றான்.

காரைப் பார்த்ததும் மீண்டும் ஷிவன்யாவின் மனதில் ஒரு வெறுமை குடி கொள்ள, அக்காவின் முகம் மாறுவதை கவனித்த சசி வேகமாக பேசினாள்.

" சரி சரி, ஆல்ரெடி ரொம்ப நேரமாச்சு! அக்கா நீ இங்கேந்து தப்பிச்சு போய் மாமாவோட ஜாலியா இரு அக்கா! " என ஷிவன்யாவைப் பிடித்து உலுக்கு உலுக்கென உலுக்கி எடுத்துவிட்டாள்.

" அட ஏன் டி நீ வேற, "

" என் மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா, நீ இங்க நடந்த எல்லாத்தையும் தயவுசெஞ்சு மறந்துட்டு மாமாவ மட்டும் யோசி, உன் எக்ஸம பாரு... நடந்த எதப்பத்தியும் யோசிக்காதக்கா... ப்லீஸ்க்கா... ஹப்பியா மட்டும் இரு, ப்லீஸ்... "

அவள் வார்த்தைகளில் அடங்கிய ஷிவன்யா சசியின் கண்களில் பளபளத்த வருத்தத்தை கண்டு அவள் முகத்தை வருடினாள்.

" நீ இன்னும் என் குட்டி வாலு தங்கச்சி இல்ல டி... ரொம்ப... பெரிய மனுஷி ஆய்ட்ட... " அதை கூறும் போது தானாகவே ஷிவன்யாவின் கண்கள் கலங்க, புன்னகைத்த சசியின் பதில் அவளையும் சிரிக்க வைத்தது.

" என் அக்கா நீ ஆச்சேக்கா! உன் கிட்ட இருந்து தான் கத்துக்குட்டேன், "

அவர்கள் இருவரின் பேச்சில் மற்றவர்கள் அனைவரும் புன்னகைக்க, சகோதரிகளின் அன்பு சம்பாஷனைகளோடு அம்மாஅப்பாவின் ஆசிகளுடன் தன் காதலன் கையைப் பிடித்துக் கொண்டு பிறந்து வளர்ந்த ஊர் தனக்கு செய்த அநியாயங்களை மறக்க காதலைத் தொடர்ந்து சென்னைக்குப் பயணமானாள் ஷிவன்யா.

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi ❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro