Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தொடரும் நினைவுகள்: 9

அதே நாள் மாலை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்பதற்காய் இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் சிறிதாய் கச்சேரியே நடத்தினர். அதில் பலர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென இருந்த போதே, ஷிவன்யா மேடையில் எங்கோ பார்த்த முகமொன்றை மீண்டும் கண்டாள்.

" நம் கல்லூரியின் காதல் மன்னன் வருகிறார், வருகிறார், வருகிறார்! " என்ற ஓலத்துடன் ஆரவ் ஒரு கிட்டாரை தூக்கிக் கொண்டு முன்னே வர, அவனின் பின் தன் வசீகரப் புன்னகையுடன், கருப்பு நிறத்தில் சாம்பல் நிற கோடிட்ட தனது கிட்டாரை தோளில் மாட்டியபடி நின்றான் யாதேஷ்.

யாதேஷின் கரங்கள் மைக்கை பற்றியதும் ஒரு மெல்லிய ஹம்மிங்குடன், " ஹாய் மாலினி, ஐ ஆம் கிருஷ்ணன்.
நான் இதை சொல்லியே ஆகனும், " என கூறியதும் கரகோஷம் பொங்க, " நீ அவ்வளவு...அழகு... " என அழுத்தி கிரக்கமாய் கூறிவிட்டு " த்ரீ, " என கூறினான்.

அங்கு குழுமியிருந்த கல்லூரி மாணவர்களின் ஒரு சேர எழுந்த " த்ரி,டூ,ஒன்! " என்ற கரகோஷத்துடன் அந்த வளாகமே அதிர ஒலித்தது அவனது குரல்.

யாதேஷ் " முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே என பாடியவனின் நினைவில் ஷிவன்யாவின் நினைவே வந்துச் செல்ல ஒரு புன்னகையுடன் அருகில் நின்ற ஆரவிற்கு கை காட்டியவன் மேடையின் ஓரத்திற்கு பாடியடியே நடை கட்டினான்... "

யாதேஷ் " வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... " என அவன் கூட்டத்தை நோக்கி கை நீட்ட அவனின் மாயக் குரலில் கட்டுடுண்டு கிடந்த ஷிவன்யாவின் கண்கள் குழப்பத்தில் சுருங்கியது...

இது வருட வருட வழக்கமே. வருடா வருடம் யாதேஷ் பாடும் டூயெட்டில் உடன் முதல் வருட மாணவ மாணவிகள் யார் வேண்டுமானாலும் பாடலாம். அவன் கை நீட்டியதுமே பாதிக்கும் மேலான மாணவிகள் பயந்து பின் செல்ல, சிலர் இத்தனை பேர் முன் பாட வேண்டுமா என்ற பதட்டத்தில் பின் செல்ல, சிலர் உடனே ஒத்துக் கொள்ள வேண்டுமா என்ற பந்தாவில் பின் சென்றனர்.

அவனின் கண்களும் கரமும் இப்போது நம் நாயகியை நோக்கியிருக்க, அந்த கண்களில் மீண்டும் தன்னை தொலைத்த ஷிவன்யா அவ்விழி மீற வழியற்று அவனின் கரத்தைப் பிடித்தாள். யாதேஷ் வரிகளை திடீரென விழுங்கிவிட்டு அப்படியே நிற்க, மாணவர்கள் புது ட்ரெண்டென நினைத்தாலும் ஆரவ் யாதேஷை கவனிக்கத் தவறவில்லை.

யாதேஷின் பார்வையற்ற கண்கள் ஷிவன்யாவின் மீதே நிலைத்திருக்க, அவளின் கரம் அவனிடத்தில் இருப்பதை கண்டவன் ஒரு கெஸ்ஸிங்கில் ஷிவன்யா தான் தன் நண்பனை முதல் சந்திப்பிலே லவ்வர் பாயாக்கியவள் என்பதை புரிந்து கொண்டு ஷிவன்யாவிடம் புன்னகையோடு மைக்கை குடுக்க, அவ்விருவரும் இவனின் வருகையில் அந்த உணர்விலிருந்து கலைந்தனர்.

ஆரவ் " மச்சான் இந்த பொண்ணு தானே அந்த பொண்ணு? " என எதற்கும் யாதேஷிடம் கேட்டு கொள்ள, அவனது புன்னகையே ஆரவிற்கு பதில் கொடுத்தது.

ஆரவ் " இனிமே இவன கைல புடிச்ச மாதிரி தான். " என புன்னகைத்து கொண்டவன், இசை முடியத் தயாராவதை கண்டு ஷிவன்யாவிடம் பாடல் வரிகளுள்ள நோட்டை கொடுக்க, அவள் புன்னகையோடு மறுத்து விட்டு மைக்கை ஆன் செய்தாள்.

யாதேஷ் " துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே... " என யாதேஷ் அவளின் கரத்தை இன்னும் விடாத உணர்விலே பாட, அவள் அடுத்த வரியை தொடர்ந்ததும் மயங்கியே விட்டான்...

ஷிவன்யா " முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே... " அவளின் தேன் போன்ற குரலை கேட்ட அரங்கமே வாயைப் பிளக்க, இதயம் வேகமெடுக்கப் பாடலைத் தொடர்ந்தான் அவன்.

யாதேஷ் " ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி... "

ஷிவன்யா " முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே.. ஓ...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ...
நாட்களும் வீணானதே... "

யாதேஷ் மற்றும் ஆரவ் ஷிவன்யாவின் பாட்டுத் திறமையில் ஆச்சர்யமடைந்தனர். யாதேஷ் விரும்பியே அவளின் குரலில் தொலைந்தான்.

ஷிவன்யா " கடல் நீரும் பொங்கும் நேரம்
அலைவந்து தீண்டும் தூரம்
மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே... "

யாதேஷ் " தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே... " என்ற வரியை அதுவும் அவளிடம் இப்போநு பாடியாக வேண்டுமா என்ற எண்ணம் பாடியப் பின் தான் வந்தது நம் நாயகனுக்கு...

ஷிவன்யா " பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே...
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்... நெருங்காமலே...
உனையன்றி எனக்கு ஏது... எதிர்காலமே... (முன்தினம் பார்த்தேனே...) " என அவள் ஏற்பட்ட குறுகுறுப்பை காட்டிக் கொள்ளாது பார்வையை அகற்றிக் கொண்டாள்.

யாதேஷ் " வெண்ணிலா... வெண்ணிலா... வெண்ணிலா... "

அவர்களின் குரலினால் லையித்திருந்த அரங்கமே ஒரு அபாய கரகோஷத்தை எழுப்ப, ஷிவன்யா முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் நன்றி கூறிவிட்டு இறங்க முற்படும் பொழுதே அவளின் கரத்தை இன்னும் விடுவிக்காதிருந்த யாதேஷை கவனித்தாள்.

ஆரவ் யாதேஷை அறிமுகப்படுத்த, அதன் பின்னே அவனுக்கு பார்வையில்லை என்பதை அறிந்த ஷிவன்யா, " ஹையோ சாரி சீனியர்! காலைல நான் சத்தியமா கண்ணு தெரியாதவரேன்னு உங்கள கூப்டல, ப்ராமிஸ்! " என அடித்து சத்தியம் செய்தாள்.

ஆரவ் மற்றும் யாதேஷ் சிரித்துக் கொண்டே அதை அப்படியே விட்டு விட்டனர். அவர்களின் பாட்டின் ஆராவாரம் ஒரு வாரத்திற்கு அந்த கல்லூரியில் அலைகழிக்க, ஷிவன்யா மற்றும் யாதேஷ் ஒருவர் மற்றவரின் மனதில் யாவரும் அறியாமலே விலை மதிப்பற்ற இடங்களை பிடித்திருந்தனர்.

ஆனால் நாயகனை விடுத்தும் நாயகியின் மனம் ஒரு கட்டத்தை தாண்டியிருந்தது. யாதேஷின் கண்களை கண்டு அவள் மூச்சு விடவும் நியாபகம் வைத்துக் கொண்டதில்லை. அவனுக்கு இவள் தெரியமாட்டாள் தான், ஆனால் எத்துனை நாட்களுக்குத் தான் பெண்ணவளும் அந்த கண்களின் தாக்கத்தை விட்டு ஓடி ஒளிவாள்.

ஆரவ், யாதேஷ் மற்றும் ஷிவன்யா மூவருக்கும் இடையே ஒரு தூய்மையான நட்பும் இருந்தது. ஷிவனேஷ் மற்றும் சூர்யா இருவரும் ஷிவன்யாவிற்கு தோழர்களே, அவர்களை எப்படி கணக்கில் விடுவாள் அவள். ஆரவ் ஷிவனேஷை அறிமுகம் செய்து வைத்த பின் தான் தெரிய வந்தது ஷிவனேஷ் உண்மையில் நம் நாயகியின் நெருங்கிய சொந்தமென்று. சூர்யா ஷிவன்யாவின் சீனியர். அதனால் தான் சூர்யாவுடன் பழக்கம். பெரும்பாலான நேரம் சூர்யா மற்றும் ஷிவன்யா ஒரே இடத்தில் தான் இருப்பர்.

ஆரவை அண்ணா அண்ணா என அழைத்தே பாசக்கடலில் மூழ்கடிப்பாள் நம் நாயகி. அவர்களின் பாசமலர் நாடகத்தில் ஷிவனேஷிற்கும் அதிக பங்குண்டு. அவர்கள் மட்டுமல்ல ஷிவன்யாவிற்கு யாதேஷ் மீதும் அதிக பிரியம். அவன் கல்லூரியில் எங்கேனும் முட்டிக் கொள்வானோ, யாரேனும் அவனை தவறாய் பேசி விடுவரோ என்று அவள் புலம்பாத நாளில்லை.

கல்லூரியில் நடக்கும் ஒவ்வொரு விழாவிற்கும் யாதேஷ் மற்றும் ஷிவன்யாவை ஜோடியாய் பாட வைத்தனர். தத்தித் தவிக்கும் அவ்விருவரின் மனமறியாது பல விழாக்கள் குவிய, அவர்களின் மனமுருகிப் பாடும் பாடல்களுக்கேற்ப கல்லூரி மாணவர்களின் மத்தியில் _யாஷா_ என்னும் பெயர் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது. யாதேஷ் ஷிவாங்கி ஃபன் கலப்ஃபாம், இதில் அதற்கு சீஈஓ ஆரவே தானாம்.

அவனை விட்டு தூரமாக இருக்கவும் முடியாமல், கண்டும் காணாது செல்லவும் இயலாமல் அவன் ஒவ்வொரு முறை தான் ஐந்தடி தூரத்தில் இருக்கும் பொழுதே, " ஹாய் மா! " என அவளின் திசை நோக்கி புன்னகையுடன் கையசைப்பதை தவிர்க்கவும் இயலாமல் திண்டாடினாள் நம் நாயகி.

அவனின் விழி மட்டும் தான் அவளை பெரும்பாலும் இம்சித்தது. வேறு எவரும் அவளுக்கு இந்தளவு தொந்தரவு கொடுத்தது இல்லை. தள்ளி செல்கிறேன் தள்ளி செல்கிறேனென ஓட முயல்பவளை யாதேஷும் கல்லூரி நிர்வாகமும் மீண்டும் மீண்டும் இழுத்து வந்து அதே விழியில் தான் சிக்க வைத்தனர்.

ஒரு கட்டத்தில் அவன் விழிக்குள் இருந்த பெருங்கடலுக்குள் தன்னையும் தொலைத்து விட்டிருந்தாள் ஷிவன்யா.

ஓரம் ஒதுங்க எண்ணி அவனின் விழிகளுள்ளே விழுந்து, அந்த பெயரற்ற உணர்வை இரசிக்கத் தொடங்கி " ஐ லவ் யூ சீனியர் " என அவன் முன்னே சொல்லும் அளவை அடைந்திருந்தாள்.

காதல் வயப்பட்டு நாட்கள் ஓடிட, யாதேஷை நேருக்கு நேர் சந்திக்க இயலாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் நம் நாயகி. அவர்களிடையே ஆன நட்பு வளர்ந்தாலும் அவளின் நேசத்தை அந்த கூட்டத்திலே கவனித்தது சூர்யா மட்டும் தான்.

தன் படுக்கையில் படுத்து உருண்டுக் கொண்டிருந்த ஷிவன்யா, ஒரு முடிவெடுத்தவளாய் தன் செல்பேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.

நுப்பது வினாடிகளிலே " அக்காஆஆஆஆஆஆ! " என மறுபுறத்திலிருந்து கொண்டு உற்சாகமாய் சசி கூச்சலிட, " பைத்தியக்காரி குடு டி அத! " என கத்திக்கொண்டே, " தங்கம் நல்லாருக்கியா டா கண்ணு? " என அன்பாய் நலம் விசாரித்தார் ஷிவன்யா மற்றும் சசியின் அன்பு அன்னை ராசாத்தி.

ஷிவன்யா " நான் நல்லா இருக்கேன் ராசாத்தி. நீ எப்படி இருக்க? " என எடுத்த எடுப்பிலே ஷிவன்யா தன் தாயை வம்பிழுக்க, " ஹன் இங்க இருந்துருந்தா சரி, நீ இப்படி கூப்பிட்டு எத்தன நாளாகுது கண்ணு?! " என அவர் சோகமாய் கூறவும், " ம்மா. திரும்பவும் ஆரம்பிக்காத உன் புராணத்த! குடு ஃபோன நா அக்கா கிட்ட பேசுறேன்! " என சசி அடம்பிடித்தாள்.

ராசாத்தி " அட இரு டி, சரி நீ சொல்லு தங்கம். "

ஷிவன்யா " சரி சரி அடுத்த மாசம் லீவு வரபோவுது, நான் ஊருக்கு வரப் போறேன். இதுக்கெல்லாம் கண்ண கசக்காதீங்க ராசாத்தி. என்னோட ப்லக் ப்யூட்டீ என்ன பன்றாங்க? " என இவள் கேட்டதும் " யக்கா ஸ்பீக்கர்ல போட்டுட்டேன்! " என சசி அபாய ஒலி எழுப்பினாள்.

" அங்கருந்தும் இவ வாய் அடங்கீருக்கா பாரு! " என உறலை ஆட்டியபடி கத்தினார் ஷிவன்யாவின் ப்லக் ப்யூட்டீ என்ற அவர்களின் அப்பத்தா முத்துலட்சுமி.

ராசாத்தி " ஏன் டி நீ வேற, அதெல்லாம் எல்லாரும் நல்லா இருக்கோம். நீ நல்லா சாப்புடுறியா? "

சசி " ஆமா உன் பொண்ணு அங்க உண்ணா விரதம் தான் டெய்லி இருக்கு பாரு. இப்போ ஃபோன என்ட்ட குடுக்க போறியா இல்லையா?! "

ராசாத்தி " ஐயோ என்ன இரகசியம் பேச போறாளோ?! புடி டி! " என ராசாத்தி தன் இளைய மகளிடம் ஃபோனை கொடுத்தார்.

சசி " அக்காஆஆஆஆ!! என்ன பன்ற? நல்லா இருக்கியா? "

ஷிவன்யா " ஹாஹா நல்லா இருக்கேன் டி. நீ எப்படி இருக்க? ஸ்கூல் போறியா? "

சசி " போறேன் போறேன். இங்க எங்க லீவு விடுறாங்க? நம்ம ஊர்ல பேய்ர மழை, மாவட்டத்துல பேயலன்னு சொல்லி லீவு உடமாற்றாங்கக்கா! " என அவள் சோக கதையை இவள் கூற, " ரொம்பவே பெரிய விஷயம் தான். உனக்காவது அங்க மழை பேயுது, எனக்கு அது கூட இல்லையே டி. " என ஷிவன்யா புலம்பும் நேரம், குட்டி பெண் சசியோ தெரியாத்தமாய் வாயை விட்டாள்.

சசி " என்னக்கா சொல்ற? போன வாரம் தான் மாமா கூட இன்னோறு டூயெட் பாட்டு பாடுனேன், என் காட்டுல மழ தான் டி ஒரு வாரத்துக்குன்னு சொன்ன? " என அப்பாவியை கேட்கவும் ராசாத்தி அவளை வாயை பிளந்து பார்க்க, அவர்களின் அப்பாத்தாவோ " ஏதே?! மாமாவா?! " என கத்தி ஊரையே கூட்டி விட்டார்.

ஷிவன்யா " குட்டிப்பிசாசே! "

சசி " சாரிக்கா ஒளறீட்டேன்னு நினைக்கிறேன்! " என பாவமாய் முளித்தபடி அனைவரையும் நோக்க, தன் தாயின் அலறலினால் வெளியே யாருடனோ பேசிக் கொண்டிருந்த முணியாண்டி எதற்சையாய் உள்ளே நுழைந்தார்.

முனியாண்டி " என்ன ஆத்தா, ஏன் காத்தால இப்படி கத்தீட்டு இருக்க? ஏகுத்த ஊட்டு பேரன் உன் பாக்க காத்தாலையே ஆட்டையா போட்டுட்டானா என்ன? அவன சாயங்காலம் தானே நான் வர சொன்னேன்? " என கேட்டபடி உள்ளே நுழைந்தவர், இளைய மகள் கொட்ட கொட்ட முளிப்பதையும், தன் ஆசை மனைவி அதற்கு மேல் விழி பிதுங்கி விழிப்பதையும், அவர்களை தன் தாய் முறைப்பதையும் கண்டு நெற்றி சுருக்கவும் தான் தன் மகளின் கரத்திலிருந்த செல்பேசியே அவருக்கு கண்ணில் பட்டது.

"வா டா வா! உன் மவள பட்டனத்துக்கு அனுப்புனல்ல! இப்போ என்னன்னா உன் சின்ன மவ, அவ கிட்ட மாமா கீமான்னு பேசீட்டு இருக்கா. என்னன்னு கேளு! " என நேராய் அப்பத்தா விஷயத்தை கொழுத்தி விட்டார்.

" அட பெரியவளா பேசுறா? குடு கண்ணு ஃபோன, " என தன் தாயிற்கு ரியக்ஷனே கொடுக்காமல் ஃபோனை வாங்கிக் கொண்டு ஒரு சாயும் நாற்காலியில் அமர்ந்தார் முணியாண்டி.

இவ்வளவு நேரமும் நடந்த களோபரத்தை கேட்டு கப்சிப்பென அமர்ந்திருந்த ஷிவன்யா, தன் தந்தையிடம் ஃபோன் வந்து விட்டதை உணர்ந்ததும் குரலை சரி செய்து கொண்டாள்.

முனியாண்டி " யமுனா, நல்லாயிருக்கியா கண்ணு? நல்லா சாப்புடுறியா? படிப்புலாம் எப்படி கண்ணு போகுது? " என என்றும் போல் அன்பாய் வினவவும் ஷிவன்யாவின் மனம்  தனிச்சையாகவே குளிர்ந்தது.

ஷிவன்யா " நல்லா இருக்கேன்ப்பா, நல்லா சாப்புடுறேன், எல்லாம் நல்லா போகுது. நீங்க நல்லா இருக்கீங்களா? வயல் வேலையெல்லாம் நல்லா போகுதா? "

முனியாண்டி " எல்லாம் நல்லா இருக்கு கண்ணு. அப்பா திரும்பவும் கேக்குறேன்னு பாக்காத ராசாத்தி, உனக்கு காலேஜு புடிக்கலன்னா சொல்லு அங்கேந்து மாத்திக்களாம். அப்பா வந்து அழச்சிட்டு போறேன். " என இரண்டு நாளுக்கு ஒரு முறை கூறும் கதையையே இவர் இன்றும் கூற புன்னகையுடன், " ஒரு பிரச்சனயும் இல்லப்பா, எனக்கு இந்த காலேஜ் உண்மையாவே புடிச்சிருக்கு. அப்பரம் அப்பா ஒன்னு சொல்லனும்... " என மெதுவாய் அவள் தொடங்கினாள்.

முனியாண்டி " சொல்லுடா கண்ணு. என்ன விஷயம்? "

ஷிவன்யா " அது அப்பா... அம்... எனக்கு இங்க ஒருத்தர ரொம்ப புடிச்சிருக்குப்பா... " என எப்படியோ கூறி முடித்தவள் மறு புறம் அமைதி நிலவவும், " அப்பா...? " என குரல் கொடுக்க, மறுபுறமோ முணியாண்டி திடீரென சிரிக்கத் தொடங்கியிருந்தார்.

முணியாண்டி " ஏன் டா தங்கம் அங்க போய் இரெண்டு மாசம் தானே ஆகுது, அதுக்குள்ள யாரு என் மவ மனச‌ திருடுனது?? " என சகஜமாக வினவ, ஷிவன்யா குழந்தை போல் உதட்டை பிதுக்கினாள்.

ஷிவன்யா " நம்புங்கப்பா! அவரு ரொம்ப நல்லவரு. காலேஜ் விஸ்காம் நாழாவது வர்ஷம் படிச்சிட்டு இருக்காரு. ஆரவ் அண்ணா சொன்னேன்ல, அவரோட ஃப்ரெண்டு தான்! "

முணியாண்டி " பையன் எப்படி?  பையன பத்தி சொல்லு கேப்போம். " என வாகாய் சாய்ந்தபடி புன்னகையோடு கேட்டார்.

ஷிவன்யா " அவரா? ஹ்ம்ம் என் அளவுக்கு இல்லனாலும் ஓரளவுக்கு என்ன விட நல்லா தான் படிப்பாரு... " என யோசித்துக் கொண்டே கூறியவள், தந்தை மீண்டும் சிரிப்பதை கேட்டு இளித்தபடியே, " சென்னை தான் சொந்த ஊராம். ரொம்ப நல்ல மனுஷன், பொண்ணுங்கள தலை நிமிந்து கூட பார்க்க மாட்டாரு. பேரு தான் காதல் மன்னன், ஒரு பொண்ணு கிட்டயும் ஒழுங்கா பேச மாட்டாரு. அவருக்கு அவங்க அம்மா தங்கச்சினா ரொம்ப புடிக்கும். அத விட ஆரவ் அண்ணாவ ரொம்ப புடிக்கும், எல்லாத்தையும் விட எனக்கு அவர ரொம்ப புடிக்கும்ப்பா! " என ஆசையாய் கூறினாள்.

முணியாண்டி " பரவால்லையே மா, இதெல்லாம் சிவாக்கு தெரியுமா? "

ஷிவன்யா " ஹையோ ஷ்! ஷ்! மிஸ்டர் ஹிட்லரோட ஃப்ரெண்டு தான் அவரு. நான் இன்னும் மிஸ்டர் ஹிட்லர் கிட்ட சொல்லலப்பா! " என ஹஸ்கி வாய்சில் அவசரமாக கூறவும், " நான் சொல்லீட்டனே!! " என மறுமூலையிலிருந்து ஒரு கத்து கத்தினாள் சசி.

ஷிவன்யா " அடியேய் நான் போறதுக்கு முன்னாடி உன் பல்ல புடிங்கீட்டு போய்ர்க்கனும் டி வந்து பாத்துக்குறேன் உன்ன! அதனால தான் இந்த ஹிட்லர் ஒரு வாரமா என்ன ஓவரா நோட்டம் விட்டுட்டு இருக்குதா?! " என இங்கிருந்து ஷிவன்யா கத்த, வாய் விட்டே சிரித்திருந்தார் முணியாண்டி.

முணியாண்டி " சரி டா தங்கம், நீ காதலிக்கிறன்னு அந்த பையன் கிட்ட சொல்லீட்டியா? " என கேட்டது தான் போதும் முத்துலட்சுமி அப்பத்தா குதிக்காத குறை தான்.

முத்துலட்சுமி அப்பத்தா " ஏன் டா டேய், நான் உன்ன என்ன ஏதுன்னு கேக்க சொன்னா, நீ அவ காதலிக்கிறான்னு சொல்லியும் எவன பத்தியோ கேட்டுட்டு இருக்க?! அவள பட்டனத்துக்கு அனுப்பாதன்னு அப்பவே தலைபாடா அடிச்சிக்கிட்டனே! என் பேச்ச யாராவது கேட்டீங்களா? குடும்பம் மானம், ஊர் மானம் எல்லாத்தையும் வாங்கீட்டாளே! நான்லாம் உங்க ஐயாவ கட்டிக்கிட்ட அன்னைக்கு தான் டா உன் ஐயாவையே பாத்தேன், இவ பாத்துட்டு வந்து யாருன்னே தெரியாதவன புடிச்சிருக்குங்குறா! காலம் கெட்டு போய்கெடக்கு டா முணியாண்டி! சீக்கிரம் பெரிய மரத்தடீல ஊர கூட்டு, உன் மவள நாழு பேர அனுப்பி தூக்கீட்டு வர சொல்லு! அடுத்த முகூர்த்தத்துல அவளுக்கு கல்யாணத்த பண்ணி— "

முணியாண்டி " எத்தா, போதும் நிறுத்து! " என்ற தன் ஒற்றை அதட்டலில் அவரை அணைத்திருந்தார்.

ஷிவன்யா " நான் இல்லாத நேரம் உங்க ஆத்தா ரப்பிங் க்லஸ் போய்ட்டு வந்துட்டாங்க மீசைக்காரரே, " என மெதுவாய் முனுமுனுத்தாள்.

முணியாண்டி " இப்போ எதுக்கு ஆத்தா நீ இந்த கத்து கத்திக்கிட்டு இருக்க? என் மவ என்ன தப்பு பண்ணா? "

முத்துலட்சுமி அப்பத்தா "அவ என்னடா செய்யல?! எவனையோ புடிச்சிருக்குன்னு சொல்றாளே?! அவனையே புடிச்சு வச்சு உன் மவள கட்டி வைக்க போறியா?! "

முணியாண்டி " ஆத்தா, என் பொண்ணே ஒரு பையன புடிச்சிருக்குன்னு சொன்னா அந்த பையன் தங்கமானவனாத் தான் இருப்பான். புள்ள சொல்றப்பவே எனக்கு அந்த தம்பிய பாக்கனும் போல இருக்குது, "

முத்துலட்சுமி அப்பத்தா " முணியாண்டி! நடக்குறதத் தான் பேசுறியா? " என விருமாண்டியின் மனைவியை போல அவர் தன் மகனை பார்த்தார்.

முணியாண்டி " ஆமா ஆத்தா, எனக்கு என் மவ மேல நம்பிக்கை இருக்கு. எனக்கு படிப்பறிவில்லாம இருக்களாம், ஆனா இப்போவே என்ன விட நல்ல முடிவு எடுக்குரவ என் பொண்ணு. அவளுக்கு ஒரு பையன புடிச்சிருக்குன்னா, அவனுக்கு இஷ்டம் இருந்தா நிச்சயமா அவங்க கல்யாணத்துக்கு சம்மதம் தான். " என தீர்மானித்தார்.

முத்துலட்சுமி அப்பாத்தா " டேய் பட்டனத்து காரங்களாம் நம்மள கால் தூசியா கூட நினைக்க மாட்டாங்கடா. எல்லாரும் பணத்தாசை புடிச்சவங்களா இருப்பாங்க, அவன் கேடு கெட்டவனா தான் இருப்பான்!! "

ஷிவன்யா "அப்பத்தா நீ அநியாயத்துக்கு வாயவிடுர! நேர்ல இருந்தேன்னா வெத்தலைல கல்ல வச்சு குடுத்துடுவேன்!! " என இவள் கூறிய அதே விஷயத்தை சசி இங்கு நேரம் தவறாமல் கத்தினாள்.

முணியாண்டி " கங்கா தங்கம், சும்மா இருடா. இதோ பாரு ஆத்தா, எல்லா புள்ளையோளையும் அப்படி தப்பு சொல்ல கூடாது. அதோட சிவாக்கும் இந்த விஷயம் தெரியுமாம், அவனே அமைதியா இருக்கான்னா அந்த தம்பிய தங்கத் தட்டுலையே வைக்களாம். " என பெருமிதமாய் கூறியவருக்கு அமோதிப்பதை போல ஷிவன்யாவும் சசியும் முறைத்தபடி தலையாட்டினர்.

முத்துலட்சுமி அப்பத்தா " உன்ன பத்து மாசம் சுமந்து பெத்த நான் சொல்றத விட, அந்த சிறுசுங்க சொல்றத தான் நீ கேப்பியா? "

முணியாண்டி " உன் பேச்ச நா மீறுவணா ஆத்தா? ஆனா இந்த விஷயத்துல என் புள்ளைங்கள தான் நான் நம்புவேன். சிவா மேலையும் யமுனா மேலையும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா அந்த தம்பி நல்லவனாத் தான் இருப்பான். யமுனா அவ எல்லைக் கோட்டையும் மீற மாட்டா, என்ன தலை குனியவும் விட மாட்டா. இதுக்கு மேல நீ இதப் பத்தி பேசாத ஆத்தா. " என அத்தோடு முற்றுப்புள்ளி வைக்க, ஷிவன்யாவிற்கு தந்தை தன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கை மனதை நெகிழ்ச்சியடைய வைத்தது.

முத்துலட்சுமி அப்பத்தா " என் மவன் இந்த சிருக்கி பொறந்ததுலேந்து தான் என்னையே எதுத்து பேசுறான். இருக்கட்டும் டா இருக்கட்டும், ஒரு நாள் பாத்துக்குறேன்! " என அவர் கோவமாய் கொள்ளை புறம் சென்றிருந்தார்.

முணியாண்டி " நீ சொல்லு டா கண்ணு, அப்பத்தா உன் மேல உள்ள பாசத்துல தான் அப்டியெல்லாம் பேசிடுச்சு. நீ கண்ண கசக்கீட்டு இருக்காத சரியா? "

ஷிவன்யா " ஹ்ம்ம் சரிப்பா, "

ராசாத்தி " சரி அந்த பையன் பேரென்ன? எதாவது சொல்லு டி! " என கணவன் அருகில் வந்தமர, சசியும் தந்தையின் காலருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

ஷிவன்யா " அவரு பேரு என்னவோல்ல, ஹான் யாதேஷ் ஷிவன். "

ராசாத்தி " என்ன டி பேர கேட்டதுக்கே யோசிக்கிற? " என ஆச்சர்யமாய் சற்று பீதியோடு வினவினார்.

எந்த பெண் இந்த காலத்தில் காதலன் பெயரையெல்லாம் காதலால் மறக்கிறாள் என்ற பயம் அந்த தாயிக்கு.

ஷிவன்யா " இல்லம்மா, அவர சீனியர்னே சொல்லி பழகீட்டேன் அதான். ஆனா... இதுல ஒரே ஒரு சிக்கல் இருக்கு. "

முணியாண்டு " என்னடா சிக்கல்? "

ஷிவன்யா " நான் மட்டும் தான் அவர விரும்புறேன் அப்பா. இன்னும் அவரு கிட்டையே சொல்லல. ஆனா அத விட வேற ஒரு பிரச்சனை இருக்கு. ம்ம்ம்... அவருக்கு... " என எவ்வாறு கூறுவதென தெரியாமல் இழுத்தாள்.

நிச்சயம் யாதேஷின் குறை ஷிவன்யாவிற்கு ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் அவளது பெற்றோருக்கு அது அப்படியில்லையே.

ராசாத்தி " என்னன்னு சொல்லு டா, "

ஷிவன்யா " அவரு ஒரு விபத்துல கண் பார்வைய இழந்துட்டாரும்மா... "

ஒரு நிமிடம் அந்த இரு பக்கமும் அமைதி நிலவ, குட்டி சசியே அதை கிழித்தெறிந்தாள்.

சசி " அதனால என்ன? மாமாக்கு தாலி கற்றப்போ உன் கழுத்து எங்க இருக்குன்னு தெரியலன்னா, நானே அவரு கைய புடிச்சு உன் கழுத்துல வச்சிடுறேன். சிம்பில்! " என சகஜமாய் கூற, ஷிவன்யா தன் தங்கையை எண்ணி இப்போது சிரிக்கவா இன்னமும் மௌனம் காத்திருக்கும் பெற்றோரை எண்ணி பதைபதைக்கவா எனத் தெரியாமல் அமைதியை கடைபிடித்தாள்.

ஷிவன்யா " உங்களுக்கு இஷ்டம் இல்லனா... சொல்லுங்கப்பா. நான் அவர... இப்போவே...மறந்துடுறேன்... " என மிகவும் மெதுவாய் அவள் தயங்கித் தயங்கிக் கூற, தாய் மனம் மெதுவாய் பதறத் தொடங்கியது.

ராசாத்தி " ஏங்க... சிவா கிட்ட ஒருக்க பேசிக்களாமுங்க, " என மெதுவாய் கூறவும், மனைவியைக் கண்டு புன்னகைத்தார் முணியாண்டி.

" தங்கம்... நீ விரும்புனத பண்ணு டா. அந்த தம்பிக்கும் உன் மேல விருப்பம் இருந்தா சரி தான். நான் சிவாக்கிட்ட பேசிக்கிறேன். " என தந்தை கூறியதும் தான் ஷிவன்யா தன் கண்ணீரையே கவனித்தாள்.

ஷிவன்யா " உண்மையா தான் சொல்றீங்களாப்பா? " என குரல் உடைய கேட்டவளின் குரலில் நகைத்த அவளது தந்தை

முணியாண்டி " ஆமா கண்ணு. நான் தேடுனாலும் உனக்கு ஏத்த மாதிரி, முக்கியமா உனக்கு புடிச்ச மாதிரி என்னால ஒரு பையன கண்டுப்புடிக்க முடியாது. அதனால நான் பாத்துக்குறேன். நீ உன் எல்லை கோட்டுல இருப்பன்னு எனக்கு தெரியும். சிவா கிட்ட பேசீட்டு நானே உன் கிட்ட சொல்றேன். இதுக்கெல்லாம் கண்ண கசக்கீட்டு கெடக்காத டா தங்கம். அப்பா நான் இருக்கேன் உனக்கு. "

ஷிவன்யா " தன்க்ஸ்ப்பா!! " என மனம் நிறைந்து பூரிப்புடன் நம் நாயகி கண்ணீரை துடைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

இனி நம் நாயகிக்கு சொல்லவா வேண்டும்? ஃப்ரீ பீரியட் கிடைக்கும் போதெல்லாம் அவளின் நாயகனை வைத்த கண் வாங்காமல் சைட்டடிக்க தொடங்கி, அவனறியாமல் அங்கங்கு ஒளிந்து நின்று அவனை இரசித்து இரசித்து நேரத்தை ஓட்டினாள்.

என்ன தான் பாடம் புரியாமல் நாழு மணி நேரம் பாடத்தையும், அதை கற்றுத் தரும் பாவத்திற்கு ஆசிரியரையும் சேர்த்து மில்லில் அரைக்காத குறையாக அறைத்தாலும், யாதேஷை கண்டாள் அனைத்தையும் மறந்து விடுவாள் ஷிவன்யா.

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro