Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

எதிர்பார்க்காத அழைப்பு: 19

ஆரவ் சசி கூறிய எந்த விஷயத்தில் ஆடிப் போவதென்று தெரியாமல் வாயைத் திறந்தபடி நின்ற நேரம், யாரோ அவன் கதவை வேகமாய் தட்டினர்.

கர்ணணும் யாதேஷும் வந்துவிட்டனரோ என்று இவர்கள் பயந்த நேரம், ஆரவ் அனுமதி கொடுக்கக் கூட காத்திராமல் அவனது உதவியாளன் ராஜ் வெளியிலிருந்தே அவசரமாய் குரல் கொடுத்தான்.

" ஸர், ஷிவனேஷ்னு யாரோ உங்கள பார்த்தே ஆகனும்னு சண்ட— " ராஜிற்கு வாய்ப்பே அளிக்காமல் கதவை படாரென திறந்து உள்ளே வந்து மீண்டும் அதை மூடிவிட்டு ஒரு பெருமூச்சோடு தன் ஆருயிர் நண்பனைப் பார்த்துத் திரும்பினான் ஷிவனேஷ்.

#

கண்ணனோடு கலந்துறையாடியபடி வேலையை முடித்த யாதேஷ், ஏதோ நினைவு வந்தவனாக கண்ணனைப் பார்த்தான்.

" கண்ணா, நான் ஃபைனல் இயர் முடிச்சப்போ நீ என்ன பண்ணீற்றுந்த? "

" ம்ம் நான் செக்கென்ட் செமெஸ்டர் பண்ணீட்டு இருந்தேன், சீனியர். "

" அப்பறம் எப்படி உனக்கு என்ன தெரியும்? "

இப்படி எதாவது இவன் கடந்தகாலத்தை கிளறுவான் என்று தான் ஆரவ் யாதேஷை அவர்களை நன்கறிந்த யாவருடனும் தனியே விடமாட்டான். அவன் கேள்வியிலிருந்த அமைதியை எண்ணியவாறு கண்ணன் பதிலளித்தான்.

" நீங்க செக்கென்ட் டிகிரி, அதான் மாஸ்டர்ஸ் பண்ணீங்க, சீனியர். அதனால இன்னும் நல்லா தெரியும் உங்கள... "

சுரத்தே இல்லாமல் ம்ம் கொட்டிய யாதேஷ் பின் தன்னை உருத்திக் கொண்டே இருந்த பெயரை கூறினான்.

" யமுனஷிவன்யா... " அவள் பெயரில் சற்றே சில்லிட்ட கண்ணனை கவனியாமல் எங்கோ பார்வையை பதித்திருந்த யாதேஷ் தன் கேள்விக்கனைகளைத் தொடுத்தான். " இந்த பேர கேற்றுக்கியா நம்ம காலேஜ்ல? எனக்கு பெருசா நியாபகம் இல்ல... ஆனா நம்ம காலேஜ்ல படிச்சிருந்தா உன்னோட சேம் பட்ச்-ஆ தான் இருந்துருக்கனும்... "

" அட என்ன சீனியர் யாஷா ஃபன்க்லப்-ல நான் உயிர விற்றுக்னேன். ஷிவன்யாவ தெரியாம இருக்குமா எனக்கு?! "

" யஷா ஃபன்க்லப்-ஆ? "

மகிழ்ச்சியாய் பல்லை இளித்தவனை புரியாமல் பார்த்தான் நம் நாயகன்.

#

சுடுகாட்டில் இருந்து எழுந்து வந்த பேயைப் பார்ப்பதை போல் ஷிவனேஷைப் பார்த்த ஆரவிற்கு நா எழவில்லை. சசி என்னவோ எப்போதும் இது பார்க்கும் முகம் தானே என்பது போல் ஷிவனேஷைப் பார்த்துவிட்டு, இவன் இப்போது இங்கு ஏன் வந்தான் என குழப்பமாய் நின்றிருக்க, ஆரவை விடவும் இவளை இங்கு எதிர்பார்க்காததால் ஷிவனேஷ் தான் சசியை கண்டு அதிர்ந்து நின்றிருந்தான்.

" அண்ணா... இங்க என்ன பன்ற? "

" நீ இங்க என்ன பன்ற? "

" அ—அண்ணனா? "

மூவரும் மாற்றி மாற்றி கேள்விகளை கேட்டுவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஆரவிற்கு இப்போது தான் வந்து நிற்பது பேயல்ல, சாட்சாத் அவன் நண்பன் தான் என புரிந்தது. புரிந்த வேகத்திற்கு வேகமாய் அவனை அணைத்துக் கொண்டான்.

" ஷிவா நீ சாகலையா டா... அய்யோ டேய் நீ எப்படி டா வந்த இங்க?! " என காலும் புரியாமல் வாலும் புரியாமல் ஆரவ் ஷிவனேஷைப் பிடித்து உலுக்க, தன் நண்பனின் மனநிலையை மேலும் வதைக்க விருப்பமில்லாமல், சசி இருக்கும்போதே உண்மைகளை போட்டுக்கத் தொடங்கினான் ஷிவனேஷ்.

" சாரி டா... நான் நாழு வர்ஷத்துக்கு முன்னாடி சாகல... "

ஆரவ் அதிர்ச்சியாக இவனை பார்க்க, சசிக்குத் தான் ஒன்றும் புரியவில்லை.

நீ எப்போ செத்த என்பது போல் ஷிவனேஷைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

" அன்னைக்கு...அன்னைக்கு யாதேஷுக்கு அக்ஸிடென்ட் ஆனதுல நான்...நான் கோமாக்கு போயிட்டேன்... நான் கொஞ்ச மாசத்துல திரும்பவர்றதுக்குள்ள என்னென்னமோ ஆய்டுச்சு... யாதேஷுக்கு எதுவும் நியாபகம் இல்ல, ஷிவா எங்க போனான்னே தெரியல, நீ பேசுற நிலைமைல இல்ல... நான் யார நம்புறதுன்னு தெரியாம ஊருக்கு போய் கொஞ்ச நாள் தூரத்துலேந்து உங்கள— "

" டேய் நிறுத்து டா! என்னென்னமோ சொல்ற?! எனக்கு...எனக்கு ஒன்னும்புரியல... நீ...நீ உயிரோட தான் இருந்தீன்னா ஏன் டா இவ்வளவு நாளா எங்கள பார்க்க வரல?! " ஆரவ் இப்போது துளிர்விடும் கோபத்தோடு ஷிவனேஷின் சட்டையை பிடிக்க, விரக்தியாய் அவனைக் கண்டு புன்னகைத்தான் இவன்.

" நான் வந்தேன் டா... நான் எழுந்த உடனே உங்களத் தேடி வந்தேன். ஷிவன்யாவ தேடி தெருத்தெருவா அலைஞ்சேன். எனக்குன்னு இந்த ஊருல உன்னையும் யாதேஷையும் விட்டா வேற யாரு டா இருக்கா?! நான் ஒரு ஒரு முறை உங்களத்தேடி யாதேஷ் வீட்டுக்குப் போனப்போவும் அவனோட அம்மா... என்ன விடல ஆரவ்! நான் வழியில்லாம அலைஞ்சதால தான் திரும்ப கீரனூருக்கே போனேன். என்னால...என்னால சூர்யாவையும் கண்டுபிடிக்க முடியல... "

அதிர்ச்சியில் இருந்த ஆரவின் கைகள் தானாக ஷிவனேஷின் சட்டையை விடுவிக்க, கண்களில் கண்ணீர் ததும்ப, உடைந்து நின்ற தன் நண்பனை அதிசயமாய் பார்த்தான். இவனுக்கு அழவும் தெரியுமா? என்ற கேள்வி தான் முதலில் அவனை வந்து வாட்டியது.

" அண்ணா... அண்ணா, என்னண்ணா சொல்ற? அக்...அக்கா எங்க போனா? அவ காணும்னா என்ன சொல்ல வர?! அக்கா எங்கண்ணா?! " சசி பயத்தின் உச்சத்தில் ஷிவனேஷைப் பிடித்து உலுக்கினாள்.

எங்கோ தன் மாமனோடு நலமாய் அக்கா வாழ்கிறாள் என நினைத்த சசிக்கு இடியாய் இன்றைய நாள் விடிந்திருக்க, நண்பர்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

" ஆரவ், நான் உள்ள வரலாமா? " என்ற குரலைக் கேட்டு இம்மூவரும் அந்த கதவைப் பார்க்க, கதவை திறந்து கொண்டு அங்கு நின்றது சூர்யாவே தான். " யாதேஷ இவ்வளவு பக்கத்துல வச்சிட்டு நீங்க ஷிவன்யாவ பத்தி பேசுறது நல்லதில்ல... சசி கேட்கும் போது சொல்ல வேண்டியது தான ஷிவா... ஷிவன்யா இப்போ சென்னைல தான் அவன் கொழந்தையோட இருக்கான்னு... ஏன் சிலை மாறி நிக்கிறீங்க? "

ஆரவும் சசியும் சூர்யாவை பேரதிர்ச்சியோடு பார்க்க, ஷிவனேஷ் எச்சிலை கூட்டி விழுங்கினான்.

" குழந்தையா... அப்போ... அப்போ நாழு வர்ஷம் முன்னாடி உண்மையாவே ஷிவன்யாவுக்கு யாரு கூடையோ கல்யாணம் ஆயிடுச்சா? " என ஆரவ் பித்துப்பிடித்ததைப் போல தரையை வெறிக்க, சசி முன்பு கூறியதை தெளிவாக மறந்திருந்தான் அவன்.

" இல்ல! அய்யோ என்ன எல்லாரும் என்ன கொழப்புறீங்க?! அக்காவுக்குத் தான் முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சே! " சசி குழப்பத்தில் அழுகையினூடே தலையை பிடிக்க, ஆரவ் அவளை கண்டு அமைதியாய் அடுத்த கேள்வியை வைத்தான்.

" நாழு வர்ஷத்துக்கு முன்னாடி உங்க ஊருல ஷிவன்யாவுக்கு கட்டாயக் கல்யாணம் நடந்துச்சு தானே? "

" இல்ல! " இந்த பதில் வந்தது ஷிவனேஷிடமிருந்து.

" எனக்கும் ஷிவனேஷுக்கும் தான் அன்னைக்கு கல்யாணமாச்சு, ஆரவ்... "

" ஏதே?! " ஆரவின் அதிர்ச்சி இப்போது பேரதிர்ச்சியாகியிருந்தது.

" அண்ணி! இவங்க இரெண்டு பேரும் என்ன பேசுறாங்க, ஏன் எனக்கு எதுவும் புரியல? நீங்களாவது சொல்லுங்க என் அக்கா எங்க?! " என சசி கத்தவும் ஆரவ் அண்ணியா என மேலும் குழப்பத்தில் திரும்பிய போது தான் சூர்யா ஷிவனேஷின் அருகில் வந்து நின்றார்.

" நான் உன்ன ஷிவாகிட்ட அழச்சிட்டு போறேன், சசி. வா " என சூர்யா சசியின் கைகளைப் பிடிப்பதற்குள் ஷிவனேஷ் சூர்யாவின் கைகளை பிடித்தான்.

" சூர்யா... ப்லீஸ் நான் சொல்றத கேளு... " என சூர்யாவை கண்டு கெஞ்சும் பார்வை அளித்த ஷிவனேஷை அதிசயமாய் பார்த்தான் ஆரவ்.

" உங்ககிட்ட விளக்கம் கேட்குற நிலைமைல நான் இல்ல ஷிவா... ஆனா நான் உங்க மேல கோபமாவும் இல்ல... நீங்க இறந்துட்டீங்கன்னு நானும் தப்பா நினைச்சிட்டதால தான் இவ்வளவு பிரச்சனையும்... " என சூர்யா ஷிவனேஷின் கன்னத்தில் வலிந்த கண்ணீரை மென்மையாய் துடைத்து விட்டு, அவனின் கரங்களை பற்றிக் கொண்டார். " இப்பவும் வீட்டுக்கு வரனும்னு உங்களுக்குத் தோனலைன்னா "

" இல்ல! இல்ல, நம்ம வீட்டுக்குப் போகலாம். ப்லீஸ் நம்ம வீட்டுக்குப் போகலாம் சூர்யா... "

சூர்யா ஒரு பெருமூச்சுடன் தலையசைத்துவிட்டு சசியைப் பார்க்க, இன்னமும் பாதி குழம்பிய நிலையில் தான் சசியும் ஆரவும் நின்றிருந்தனர்.

" உங்க இரெண்டு பேருக்கும்...கல்யாணம்... எப்படி...? எப்போ...? ஷிவன்யாவுக்கு கொழந்தை... இங்க...இங்க என்ன நடக்குது ஷிவா? " ஆரவ் பயத்தில் வெளிரி போய் தரையை வெறிக்க, ஷிவனேஷ் ஒரு பெருமூச்சோடு கண்களை அழுந்தத் துடைத்தான்.

" எல்லாமே...அஞ்சு வர்ஷத்துக்கு முன்னாடி தான் தப்பா போச்சு... "

#

" யஷா ஃபன்க்லஃப் ஆ? அப்டீனா என்ன? " என குழப்பம் மேலோங்க, கண்ணனைப் பார்த்தான் யாதேஷ்.

ஆனால் கண்ணன் கடைசி நேரத்தில் தான் சில விஷயங்களை உளறிவிட்டதை உணர்ந்து வாயை மூடிக் கொண்டான். என்ன சொல்வதென தெரியாமல் யாதேஷைக் கண்டு இவன் விழிக்க, நம் நாயகன் மேலும் இவனை கேள்விகள் கேட்டு நச்சரிக்கத் தொடங்கினான்.

" அது... அதான் அதான் சீனியர், நீங்க நல்லாப் பாட்டு பாடுவீங்கல்ல? உங்களோட...உங்களோட ஃப்ன்க்லஃப் தான் அது! "

யாதேஷ் குழப்பத்தோடே விழித்தபடி எங்கோ பார்த்தான். கண்ணன் இவனிடம் இருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டுமே என எண்ணிய அதே நேரம், யாதேஷின் அறை கதவை தட்டினான் ராஜ்.

" ஸர் ஆரவ் ஸர் சடன் மீட்டிங்னு வெளிய கிளம்பி போயிட்டாரு ஸர்... உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ண சொன்னாரு... " என ராஜ் கூறிவிட்டுச் சென்ற அதே நேரம், கண்ணனுக்கும் சசி அழைப்பேசியின் வாயிலாக தனக்கு முக்கியமான வேலை ஒன்று வந்துவிட்டதாக கூறி விடுப்புப்பெற்றுக் கொண்டாள்.

" சரி சீனியர், நான் அப்போ கிளம்புறேன். " என யாதேஷ் ஒரு யோசனையில் இருந்தபோதே, மேலும் அவனை சிந்திக்க அனுமதிக்காமல் புன்னகையோடு அங்கிருந்து விடைப்பெற்றான் கண்ணன்.

அவனை வழியனுப்பிவிட்டு அமர்ந்திருந்த யாதேஷ் ஷிவன்யாவின் கோப்புகளை கிளறிக் கொண்டிருந்தான். அவன் நினைவெல்லாம் அவளது கண்களில் தான் இருந்தது. கைவரை வந்த பால்நிலவை மேகங்களிடையே விட்டுவந்த ஏமாற்றம் அவன் கண்களை நிறைத்தது. அந்த தாள்களை திருப்பிக் கொண்டிருந்தவனின் இடதுகை தானாக செல்பேசியில் ஒரு தொலைபேசி எண்ணை தட்ட, அவன் நினைவிற்கு திரும்பும் முன் அந்த அழைப்பு உரியவளை அழைக்கப் பறந்திருந்தது.

அந்த மோன நிலையிலிருந்து அவன் வெளிவந்ததென்னவோ அழைப்பேசியிலிருந்து ஒலித்த தேன் போன்ற அவளின் குரலால் தான்.

" ஹலோ "

அத்விகாவிடம் பேசிவிட்டு கண்கள் மூடி யோசனையில் ஆழ்ந்திருந்த ஷிவன்யா, அழைப்புமணி கேட்டபோது யோசனையின்பிடியில் அவன் பெயர் பளிச்சிட்ட திரையை பார்க்கவில்லை. அவனது காந்தக்குரல் அவளின் இதயத்தை நின்று துடிக்க வைத்தது.

" ஹ...ஹலோ... யமுனா? " பதட்டத்தில் யாதேஷ் படபடக்க, அவனது ஒற்றை அழைப்பு அவளை எம்மலையின் உச்சத்திற்கு கொண்டு சென்றதென்பது என்றும் அவனுக்குத் தெரியப்போவதில்லை.

சற்றும் சிந்தியாமல் அந்த அழைப்பை துண்டிக்க முற்பட்டவளை மீண்டும் தடுமாறச் செய்தது அவன் அழைப்பு.

" ஹலோ? ஆர் யூ தேர்?  "

" ஹலோ? யமுனா? "

" ஹலோ? "

இதயமும் மூளையும் போட்ட சண்டைகளுக்கு மத்தியில் எப்போது இவன் கைகள் இடையில் நீண்டு அவன் மனயுத்தத்திற்கு காரணமானவளையே அழைத்ததோ தெரியவில்லை. இருந்தும் ஈர்க்கும் அந்த காந்தக்குரலை மீண்டும் ஒருமுறை கேட்க வேண்டி அவன் இதயம் யாதேஷிடம் மன்றாடியதால் பேச்சைத் தொடர முயன்றான்.

" யமுனஷிவன்யா? இருக்கீங்களா? நாங்க யா.ஸ் டெலிவிஷன்ஸ்-ல இருந்து கூப்புட்றோம், " என நம் நாயகன் குரலை சரி செய்து கேட்ட அடுத்த நொடி, ஷிவன்யாவின் தலையில் யாரோ தண்ணீரை ஊற்றியது போல் ஒரு சில்லிட்ட உணர்வு படர்ந்தது.

அழைப்பை படாரென துண்டித்துவிட்டு செல்பேசியை தன்னை விட்டு இரண்டடி தள்ளி தூக்கி வைத்தாள். அவளது கைகள் தானாய் ஷிவானியை அவளோடு சேர்த்தணைக்க, நான்கு வருடம் பிறகு அவள் செவியை நிறைத்த அவளவனின் அழைப்பு மீண்டும் மீண்டும் இம்சித்தது.

ஆனால் எதிர்காலத்தின் பயம் அந்த இம்சையையும் தாண்டியிருக்க, அத்விகாவின் குரல் அவளை தட்டி எழுப்ப முயன்றது.

" ஓடி ஓடி நீ எங்கையும் போக போறதில்ல... நடக்குறது நடக்கட்டுமுங்குற தைரியத்தோட தான சென்னை போன? நீ அதே தைரியத்தோட எழுந்துக்கோ... அவங்க உன்ன முன்னாடி கஷ்டப்படுத்துன மாதிரி இந்த முறையும் உன்ன கஷ்டப்படுத்துறகக்கு நீயே அவங்களுக்கு வாய்ப்ப குடுத்துறாத! யாதேஷ் சீனியர் கடைசி நாள் வரைக்கும் உன்ன ஓடி ஒழிய வைக்கல, ஷிவு. உன் வாழ்க்கை டி இது! நீ உனக்காகவும் ஷிவானிக்காகவும் வாழு. அதுக்கு நீ ஓடி ஒழியிறத முதல்ல நிறுத்தனும். நிறுத்து. "

கண்கள் கண்ணீரால் நிறைய, ஷிவன்யா மீண்டும் அலறத் தொடங்கிய தன் செல்பேசியை வெறிக்கத் தொடங்கினாள்.

நான்கு வருடத்தில் அவளது செல்பேசியின் திரையில் பளிச்சிறாத பெயர்.

' ஷிவா மா '

அதை பார்க்க பார்க்க, இதுவெல்லாம் ஒருவேளை கணவு தானோ? தான் அவனை பார்க்கவில்லையோ? என்ற கேள்விகள் மேலோங்க, அவளது நடுங்கும் கைகள் மீண்டும் அந்த அழைப்பை ஏற்றது.

இம்முறை ஆழ்ந்த அமைதி இரண்டு பக்கத்திலிருந்தும் பரவ, ஏதோ பெயர் தெரியாத வலியை உணர்ந்த தன் மனதின் குமுறல்களை மதியாமல் ஒரு பெருமூச்சோடு அவளது பெயரை அழைத்தான்.

" யமுனஷிவன்யா? "

நெஞ்சில் சுருக்கென்று மீண்டும் ஏதோ வலித்தது. ஆனால் யாதேஷ் அவளது குரலை கேட்காமல் போவதாய் இல்லை இம்முறை. மீண்டும் அழைத்தான்.

" யமுனஷிவன்யா? "

அழுகை அவளது தொண்டையை அடைத்தது. கண்களை மூடி சுவற்றில் தலையை சாய்த்த ஷிவன்யா வரவழைத்த தைரியத்துடன் தொடங்கினாள்.

" ஹ...ஹ... ஹ...லோ... ஹலோ... "

" யமுனஷிவன்யா? " படாரென அவன் குரல் மறுபுறம் கேட்டது. பதட்டம், குழப்பம் மற்றும் மறைக்கப்பட்ட பயம் சரசரவென அவன் குரலை நிறைக்க, அவையனைத்தையும் அவனால் பேச்சில் காட்ட முடியவில்லை. " ஆர் யு... ஆர் யு ஓக்கே? "

அவளின் நடுக்கத்தையும், நிலையில்லா பெருமூச்சுக்களையும் யாதேஷினால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் அதை நேரடியாய் கேட்கும் அளவிற்கும் அவனிடம் தைரியமில்லை.

" ம்...ஹ்ம்... " அழுகையை விசும்பலுடன் விழுங்கிவிட்டு, " சொல்லுங்க... "

" நான்... நான் யாதே- " என்ன பேசுவதென்று தெரியாமல் முதலில் உளறினான், பின் எப்படியோ அவளது கோப்புக்களை பார்த்தவனாய் குரலை சரி செய்து கொண்டு ஏதோ மனதில் வந்ததை அப்படியே அவளிடம் ஒப்பித்தான் அவன். " நாங்க யாஸ் டெலிவிஷன்ஸ்-ல இருந்து பேசுறோம். நீங்க அட்டெண் பண்ண இன்டெர்வ்யூ விஷயமா பேசனும். "

எப்படியாவது பேச்சை சுருக்கிவிட்டு அழைப்பைத் துண்டிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்த ஷிவன்யா அவன் கூற்றையெல்லாம் கவனிக்கவில்லை. அவள் அறிந்தவையெல்லாம் எங்கு இன்னும் சில நிமிடங்கள் அவனது குரலை கேட்டாள் வெடித்து அழுதுவிடுவாளோ என்ற பயம் மட்டும் தான்.

" தன்க்யூ " அதனால் நன்றி கூறி அவள் அழைப்பை துண்டிக்கச் செல்ல, யாதேஷ் தினறினான்.

" அய்யோ ஏங்க?! இருங்கங்க! நான் ஒன்னுமே சொல்லல இன்னும். இருங்க! ய...யமுனா! யமுனஷிவன்யா! " யாதேஷ் அவன் இருக்கையிலிருந்து குதித்தெழுந்ததோடு நில்லாமல் அங்குமிங்கும் பறக்க, ஷிவன்யா தன்னையே கடிந்துக் கொண்டாள்.

" ஸா...ஸாரி... ஸாரி... சொல்லுங்க... நான்... நான் என்ன பண்ணனும்? "

" ஹா அதான்ங்க... இந்த இன்ட்டர்வ்யூல நாங்க வேற ஒரு கேண்டிடேட்ட சூஸ் பண்ணீட்டோம். வீ ஆர் ஸாரி... "

மேலும் அவனை பேசவிடாமல் இது தான் சாக்கென அவள் பெருமூச்சோடு நன்றி கூறி மீண்டும் அழைப்பைத் துண்டிக்க முணைய, யாதேஷிற்கு அந்த பக்கம் மலை ஏறாத குறை தான்.

" ஏங்க இருங்க! உங்க...உங்களோடு செர்டிஃபிக்கேட்ஸ் எல்லாமே பார்த்தோம். நீங்க எங்க டீவி-ல இருந்தா எங்களுக்கு அது ஒரு பெரிய ப்ராஃபிட்டா இருக்கும். உங்களுக்கு ஒக்கேன்னா இன்னும் வக்கென்ட்டா இருக்குற... அஹ்... ஸ்க்ரிப்ட் எடிட்டர் போஸ்ட் டீட்டெய்ல்ஸ் உங்களுக்கு சென்ட் பண்ணுவோம். " என எப்படியோ அவள் அழைப்பை துண்டிப்பதற்குள் அவன் கூறி முடிக்க, அதற்கு மேலும் தாங்கமாட்டாமல் மேலும் ஒரு நன்றியை கூறிவிட்டு அழைப்பை துண்டித்த ஷிவன்யா வாயை மூடி வெடித்து அழுதாள்.

மறுபுறம் அவளிடம் சரியான பதில் பெறாத ஏக்கத்தில் ஃபோனை பார்த்தபடி தன் சீட்டில் சென்று பொத்தென அமர்ந்தான் யாதேஷ்.

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro