எட்டிப் பார்க்கும் நினைவுகள்: 46
ஷிவனேஷ் மற்றும் யாதேஷ் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியாக நிற்க, ஆரவின் காதை கடித்தாள் ஷிவன்யா.
" அண்ணா! என்னண்ணா இது?! ஹிட்லர் என்ன டக்குன்னு வந்துட்டாரு?! மாமாக்கு தலைவலி வந்துட்டா—
" ஷிவா கூல்... எதுவா இருந்தாலும் பேஸ் பண்ணிக்கலாம். எனக்குத் தெரிஞ்சு உன் புருஷன் மெமரீஸ்-அ ட்ரிகர் பண்றது தான் கரெக்ட்டா இருக்கும். "
" ட்ரிகர் பண்ணனுமா? அண்ணா அவருக்கு எதாவது ஆய்ட்டா—
" பக்கத்துலேயே ஹாஸ்பிட்டல் இருக்கு டா தங்கம். "
" யோவ் அண்ணா! விளையாடுறீங்களா?! "
" ஓய்! என்ன மரியாதை எல்லாம் கொறையிது? "
" பெருமாளே... ஏன்யா என்ன சோதிக்கிற? " என விட்டத்தை பார்த்து கைகளை தூக்கிய ஷிவன்யா பின் அவளை ஏறஇறங்க பார்த்த ஆரவை கண்டு, " அண்ணா, நான் சீரியஸா கேக்குறேன் அண்ணா. இப்போ என்ன ட்ரை பண்றீங்க? "
" எல்லாம் நல்லதுக்கு தான் டா, "
" என்ன நல்லதுக்கு சொல்றீங்க? அவரு செல மாதிரி நின்னிட்டு இருக்காரு... "
இவ்வாறாக இவர்கள் ஒரு பக்கம் ஒருவர் காதை இன்னொருவர் கடித்துக் கொண்டிருந்த போது இன்னமும் தன்னை ஏதோ நெப்ட்யூன்-இல் இருந்து வந்த அதிசயப்பிறவியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த நண்பனைக் கண்டு புன்னகைத்தான் ஷிவனேஷ்.
" என்ன யாதேஷ், உங்களுக்கு என்ன நியாபகம் இல்லையா? நான் உங்களோட ஒன் ஆஃப் தி பார்ட்னர். நாம கூட ஒன்னா ஒரே காலேஜ்-ல தான் படிச்சோம். "
ஷிவனேஷ் ஒரு பக்கம் தன்னை பல வருடம் முன்பு பார்த்த ஒரு மாணவனிடம் தன்னை அறிமுகம் செய்வது போல் ஒரு பட்டியலைத் துவங்க, அவனையே உருத்து நோக்கிக் கொண்டிருந்த யாதேஷ் அவர்கள் மீது அலட்டலின்றி ஒரு அணுகுண்டை தூக்கி வீசினான்.
" ஷிவா... நீ... எங்க போன இவ்ளோ நாளா? நீ... நீ ஏன் காணும்? நீ... நீ ஷிவா... யமுனா உன்னோட ஹிட்லர்... ஷிவா நீ ஆனா... "
யாதேஷின் வார்த்தைகளில் தெளிவில்லை. அவன் முகம் முழுவதும் குழப்ப இரேகைகள் படர்ந்திருக்க, கண்களில் வந்து வந்து சென்றதென்னவோ கண் முன் நிற்கும் இதே முகத்தை ஏதோ ஒரு கனவில் இரத்தகோலத்தில் பார்த்தது தான்.
ஆனால் இவனை பார்த்தது போலவே யாதேஷிற்கு நினைவில் இல்லாத போது, கனவில் எங்கு அவனை இரத்த கோலத்தில் பார்த்திருக்கப் போகிறான்?
இந்த காட்சிகளுக்கு இடையில் ஷிவனேஷின் குரல் அவன் காதுகளை மீண்டும் மீண்டும் ரிங்காரமிட்டது.
யாதேஷின் கரங்கள் அவனையும் மீறி ஷிவனேஷின் சட்டையை கொத்தாக பிடித்தது.
" எங்க போன நீ...? ஷிவா... நீ... இல்ல நீ காணும்... "
ஆரவும் ஷிவனேஷும் சற்றே பதட்டத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, யாதேஷ் தலையைப் பிடித்த உடனே ஷிவன்யா அவனிடம் ஓடியிருந்தாள்.
" மாமா, என்ன ஆச்சு மாமா? தலை வலிக்கிதா? "
ஷிவன்யாவின் கைககள் அவன் வதனத்தை ஏந்தியதும் யாதேஷ் மேலும் பிதற்றினான்.
" எனக்கு புரியல யமுனா... இவன்... இவன் காணும் இவ்ளோ நாளா... ஆனா...ஆனா எனக்குப் புரியல. "
ஷிவனேஷிற்கு நிலைமை கை மீறிவிடுமோ என்ற பயம் மேலோங்க உடனே அவன் யாதேஷை சமாதானம் செய்ய முயன்றான்.
" நான் எட்டு வர்ஷமா வெளியூர்-ல இருந்தேன் யாதேஷ். அதான் உனக்கு தெரியல என்ன. "
ஆனால் யாதேஷ் அதை நம்புவதாய் தெரியவில்லை. " இல்ல... இல்ல நீ எங்க கூட தான் இருந்த, இல்ல... "
யாதேஷ் மறந்தது ஷிவன்யா அவன் வாழ்வில் இருந்த நான்கு வருடத்தைத் தான். ஷிவன்யாவிற்கு முன்னமே நம் நாயகனின் வாழ்வில் இருந்த ஷிவனேஷின் அழியா நட்பின் நினைவுகள் யாதேஷின் அடிமனதிலிருந்து எட்டிப் பார்த்தது.
ஆரவ் " மச்சான் கூல்... உனக்கு அக்ஸிடென்ட் ஆன டைமெல்லாம் அவன் இங்க இல்ல. இப்போ தான் ஊருக்கு வந்துருக்கான். அதான் உனக்கு அவன தெரியல டா, "
என்ன தான் ஆரவின் கூற்றை யாதேஷ் கொஞ்சம் நம்பினாலும் இன்னும் ஏதோ ஒன்று அவனை உருத்திக் கொண்டே இருந்தது.
" எனக்கும்...அவனுக்கும் தான அக்ஸிடென்ட் ஆச்சு...? "
யோசித்து யோசித்து அவன் ஆரவின் கண்களை பயத்தோடுப் பார்க்க, அவர்களிடத்தில் அதற்கு சரியான விடை இல்லை.
திடீரென கேட்ட ஒரு காரின் சத்தத்தில் இவர்களின் கவனம் கலைய, ஆரவின் கார் அருகில் தன் காரை நிறுத்திவிட்டு ஆனந்த அதிர்ச்சியோடு கீழே இறங்கினான் ரம்யகண்ணன்.
" ஹே ஷிவன்யா! என்னால என் கண்ணையே நம்ப முடியல! இவ்வளவு நாளா எங்க போயிருந்த நீ?! உன்ன யாதேஷ் ஸீனியர் எவ்வளவு மிஸ் பண்ணாரு தெரியுமா? என்ன நீ ஆளே மாறிப் போயிட்ட? ஆஹ்! ஷிவனேஷ் ஸீனியர், ஏஹ்! நீங்க அந்த அக்ஸிடென்ட்ல செத்துட்டீங்கன்னு தான சொன்னாங்க? நீங்க எப்போ உயிரோட திரும்ப வந்தீங்க?! "
மொத்தத்தையும் புட்டுப்புட்டு வைத்துவிட்டு அப்போதே அவனை உருத்து நோக்கிக் கொண்டிருந்த நாழ்வரையும் தெளிவாகப் பார்த்தான் அவன். ஷிவன்யாவிற்கு முதலில் யார் இவன் என தோன்றியிருந்தாலும் அவன் ஒவ்வொரு கேள்விக்காய் குதித்த குதியிலே தன்னோடு பயின்ற சகமாணவன் தான் என நினைவிற்கு வர, அதற்குள்ளாகவே அவன் யாதேஷின் மூளையை யூடர்ன் போட வைத்திருந்தான்.
மழையில் முழுதாய் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என நினைத்து ஏற்கனவே கண்ணனோடு காரை விட்டு இறங்கியிருந்த நம் சசி பெருமூச்சோடு இன்னமும் திறந்திருந்த காரின் கதவை மூடினாள்.
அந்த சத்தத்தில் யாதேஷ் ஜெர்க்கடித்து படக்கென கண்ணனின் கையைப் பிடிக்க, அவன் மற்ற மூவரையும் கண்டு பேய் முளிமுளித்தான்.
" கண்ணா ஒழுங்கா உண்மைய சொல்லீடு. உனக்கு எப்டி இவங்கள தெரியும்? உண்மைய மட்டும் சொல்லு கண்ணா. எந்த அக்ஸிடென்ட்? எப்போ ஷிவா செத்தான்?! "
யாதேஷ் கேட்க கேட்க கண்ணனின் கண்கள் அகலத்தைத் தாண்டிட, மற்றவர்களுக்கு உள்ளம் எகிரிக் கொண்டிருந்தது.
இப்படியெல்லாம் ஒரே போடில் இவன் கேள்விகளை அடுக்குவான் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு இத்தனை நாளும் கொடுக்கப்பட்ட மருந்துகளின் வீரியம் இல்லாமல் அவனது பழைய நியாபகங்கள் துளியேனும் எழுகிறதா என சுரண்டிப் பார்க்க செய்த ஒரு சிறு முயற்சி தான்.
" மாமா அவன விடுங்க, "
" நீ சும்மா இரு யமுனா. எனக்கு...எனக்கு தல ரொம்ப வலிக்கிது. ஒரு பதில் எனக்கு வேணும் இப்போவே, " என அவளைப் பார்க்காமலே பதில் கொடுத்தவன் கண்ணனைத் தான் விடுவதாய் தெரியவில்லை.
" டேய் உன்ன ஃபோர்ஸ் பண்ணிக்காத டா! " ஆரவ் அபாய மணி அடித்த பாவத்திற்கு அவன் சட்டையையும் கொத்தாய் பிடித்துக் கொண்டான்.
" அப்போ நீ சொல்லு என் கேள்விக்கு பதில். "
ஆரவும் இப்போது பேந்தபேந்த விழிக்க, எங்கிருந்து யாதேஷிற்கு அவ்வளவு கோவம் வந்ததோ தெரியவில்லை. அவன் பல்லை நறநறவென கடிக்கும் சத்தம் வெளியேவும் கேட்க, ஷிவன்யா எதையும் சிந்திக்காமல் அவர்கள் இருவருக்கும் இடையில் நுழைந்து யாதேஷின் கன்னத்தைப் பிடித்து நேருக்கு நேர் அவன் கண்களை நோக்கினாள்.
" மாமா ப்லீஸ்... ப்லீஸ் நான் எல்லா பதிலும் சொல்லுறேன். நான் உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன். இவங்க எல்லாரையும் விடுங்க ப்லீஸ்... கொஞ்சம் அமைதியாகுங்க. ப்லீஸ்... ப்லீஸ்... "
யாதேஷை ஏதோ ஒன்று அவன் கோவத்தை அவளிடம் காட்ட விடாமல் தடுத்தது. அவளின் பிடியில் இருந்து திமிறி விலக முயன்றான். ' நான் அமைதியாக மாட்டேன்! ' என கத்த முயற்சி செய்தான். ஆனால் ஷிவன்யா அவனுக்கு வாய்ப்பே அளிக்காமல் கண்கள் மூடி அவன் நெற்றியோடு நெற்றி மோதிக் கொண்டாள்.
" ப்லீஸ் மாமா... கொஞ்சம் பொருமையா இருங்க. "
நொடிகளும் நிமிடங்களும் கடந்ததோடியது. மனமின்றி தலைக்கேறிய சினத்தை கடிவாளமிட்டு அடக்கினான். காரணம் கேட்டால் யாதேஷிடம் மீண்டும் பதில் இல்லை.
ஷிவன்யாவின் கன்னங்களில் உருண்டோடிய கண்ணீர் அவன் இதயத்தை முள்ளாய் தைத்தது.
எப்போது ஆரவையோ கண்ணனையோ அவன் கைகள் விட்டதென்று அவன் அறியவில்லை. எப்போது ஷிவன்யா அவனை அவனுக்கேத் தெரியாமல் மறைவான ஒரு இடத்திற்கு இழுத்து வந்தாள் என்றும் அவன் அறியவில்லை. அவன் கட்டளைகளை எதிர்பார்க்காமல் அவன் கைகள் அவளது முகத்தை மேலே நிமிர்த்த, கண்ணீரை தன் பெருவிரலால் துடைத்துவிட்டு அவள் வதனத்தை அவன் கண்களில் நிறைத்துக் கொண்டான்.
" ஸாரி டா மா... அழாதீங்க ப்லீஸ்... " யாதேஷின் கெஞ்சல் அவர்கள் இருவரின் செவிகளை விட்டுத் தாண்டவில்லை.
கண்ணீர் குளமான அழகிய மீன் போன்ற கயல் விழிகளை அவள் பிரிக்க, ஓரத்தில் எஞ்சியிருந்த ஈரம் உருண்டோடும் முன் அதை விரைந்து துடைத்த யாதேஷ் அவள் கண்களில் தன்னைத் தொலைத்தான்.
" நான் யாரு? "
" யமுனா "
ஷிவன்யா கண்ணீரோடு சிரிக்க, அவன் கண்கள் அவளை உலகில் இல்லாத அதிசயமாய் பார்த்தது.
" உன் கண்ணு ஏன் இவ்வளவு அழகா இருக்கு? ஏன் நான் முன்னாடி பார்க்கவே இல்ல...? "
கேள்விகள் கேட்டதென்னவோ ஷிவன்யாவிடம் தான். ஆனால் பதில் யாதேஷ் அவனிடமிருந்தே தான் எதிர்பார்த்திருந்தான்.
" எனக்கும் உங்கள முதல் முறை பார்த்தப்போ அப்டி தான் இருந்துச்சு. அப்டி என்ன இந்த கண்ணுல இருக்கு, வேற எங்கையும் பார்க்க முடியலையேன்னு... "
ஷிவன்யா மெதுவாய் அவன் கேசத்தை கோதிவிட, அந்த மென்மையான தொடுகை மீண்டும் யாதேஷின் அடிமனதிலிருந்த எதை எதையோ தோண்டி எடுத்தது.
" ஒவ்வொரு முறை பார்க்குறப்போவும் அதான் தோனுது. என்ன மாயம் பண்ணி வச்சிருக்கீங்களோ தெரியலப்பா, "
யாதேஷின் இதழ் அழகாய் விரிந்தது. அவள் கண்களை விட்டுப் பிரிய இயலாமல் அவளை அவனோடு எப்போது சேர்த்தணைத்தான் என்று அவனுக்கும் தெரியவில்லை.
அவன் நெஞ்சோடு ஒன்றியிருந்த ஷிவன்யா பெருமூச்சுவிட்டாள்.
" உங்ககிட்ட இருந்து மறைக்கனும்னு நாங்க எதையும் மறைச்சு வைக்கல மாமா. கொஞ்சம் பொருமையா இருங்க... "
யாதேஷ் அமைதியாக அவள் தலை மீது தன் தலையை சாய்த்துக் கொள்ள, ஷிவன்யா அவன் இதயத்துடிப்பை கேட்டுக் கொண்டிருந்தாள்.
" நான் ஒன்னே ஒன்னு கேக்குறேன் இப்போ... அதுக்கு மட்டும் பதில் சொல்றியா? "
ஷிவன்யா தலையை நிமிர்த்தி சரி என தலையசைக்க, யாதேஷ் அவள் விழிகளை பார்த்தான்.
" என்னோட மறந்து போன வாழ்கைல நான் தொலச்சது உன்ன தானா? "
ஷிவன்யாவின் கண்களில் ஒரு சிறு மிரட்சி. ஆனால் அவள் மேலும் தயங்கி நிற்கவில்லை. பதில் ஏனோ அவளின் இதழ்களுக்கு முன் அவள் கண்களே அவனுக்கு சொல்லிக் காட்டியது.
" நான் கொஞ்ச நாளா பாதி நேரம் என்ன பேசுறேன், என்ன யோசிக்கிறேன்னு எனக்குத் தெரியலன்னாலும் எதையும் நான் கவனிக்காம இல்ல டி... எனக்குத் தெரியும். எனக்குப் புரியிது. ஆனா எதுவும் புரியல. நீ வந்ததுக்கு அப்பரம்— இல்ல உன்ன பார்த்ததுக்கு அப்பரம் இவ்வளவு நாளும் பாதியா இருந்த எல்லாம் முழுசான மாதிரி இருந்துச்சு. நான் உன் கிட்ட வந்தப்போவெல்லாம் நீ தள்ளித்தள்ளிப் போனப்போ...கஷ்டமா இருந்துச்சு. ஆனா அது எதுவும் நீ என் கண்ணு முன்னாடி இருக்கங்குற சந்தோஷத்த விட அதிகமா இல்ல. ஆனா ஏன் ஹப்பியா இருக்கனும்? உன்ன நான் பார்த்தது இல்ல. நீ யாருன்னே தெரியல. இருந்தாலும் ஒரு செக்கெண் எனக்குத் தேவப்படலையே... நீ மாமான்னு என்ன கூப்டுறது ஏன் டி எனக்கு புதுசாவே இல்ல? யாரு நீ? என் யமுனா... ஆனா இந்த யமுனா எனக்கு யாரு? "
யாதேஷ் கண்களில் காதல் ததும்ப கண்ணீர் புரள, மறையாத புன்னகையோடு அவள் கண்களை பார்த்தான். அவன் கண்கள் சிரித்தாலும் அவன் குரல் உடைய உடைய அவன் மனதை ஆட்டி வைக்கும் அவன் வலியும் வளர்ந்து கொண்டே இருந்தது.
" சொல்லு யமுனா... நீ எனக்கு யாரு? நான் எதை தொலைச்சதால இப்டி என்னையே தொலைச்சிட்டு நின்னேன் நாழு வர்ஷமா? "
ஷிவன்யா அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டாள்.
" நான்... நான் நீங்க மறந்த அந்த நாழு வர்ஷத்தோட முழு உருவம்... உங்களோட யமுனா... உங்களோட காலேஜ் லவ்வர்... "
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi ❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro