Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -9

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கண்ணீா்
கனியே உன்னை
கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
மாலை சூடிய
காலை கதிரின் மேலே

த்தியம் சத்தியம் இது

சத்தியமே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

சூர்யா சொன்ன வார்த்தை கேட்டு எல்லோரும் அதிர்ச்சியாகி நின்று கொண்டு இருந்தார்கள் சூர்யா சாதாரணமாக நின்று கொண்டு இருந்தான் .

தம்பி விளையாட்டு காரியம் இல்ல .இப்படி எல்லாம் சொல்லாதிங்க .நான் ஏதோ கோபத்துல சொன்ன
அதுக்காக யாருன்னே தெரியாத ஒரு பையனுக்கு எப்படி கல்யாணம் பண்ணி தர முடியும் .நாளைக்கு ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா என்னால போலீஸ் ஸ்டேஷன்க்கு எல்லாம் போய் நிக்க முடியாது என்று நல்லவர் போல சொன்னார் புவனா .சூர்யா அவரை பார்த்தான் .

இங்க பாருங்க நான் வருசத்துத்துல முக்கால்வாசிக்கு மேல போலீஸ் ஸ்டேஷன்லதான் இருப்பேன் எனக்கு குடும்பத்தையம் வேலையையும் ஒண்ணா வைச்சு பாக்க பிடிக்காது.அதனால உங்க பொண்ணு அதாவது என்னோட வருங்கால மனைவியை எந்த காரணத்துக்காகவும் நான் போலீஸ் ஸ்டேஷன் வர விட மாட்டேன் .என்று சொன்னவன் பூஜா பக்கம் திரும்பினான் .

ம்ம்ம் நீதான இவங்க மேல புகார் கொடுப்பேன்னு சொன்ன .உன்னோட அக்காவை கல்யாணம் பண்ணுறேனோ இல்லையோ நீ புகார் கொடுத்தா உங்க அம்மாக்கு தண்டனை வாங்கி தர வேண்டியது என்னோட பொறுப்பு .இங்க நம்ம பசங்க நிறைய பேர் போலீஸ் ஸ்டேஷன்ல வேலை பாக்குறாங்க என்று சூர்யா சொல்ல அவனை எல்லோரும் ஆச்சார்யமாக பார்த்தார்கள். பூஜாக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது இன்னொரு பக்கம் அவன் சொல்வது எல்லாம் உண்மைதானா என்று குழப்பமாகவும் இருந்தது .சூர்யா என்னதான் பூஜா வந்ததில் இருந்து நல்ல முறையில் நடந்து கொண்டாலும் அதை எல்லாம் காரணமாய் வைத்து கல்யாணம் வரை யோசனை செய்ய முடியாது அல்லவா .பூஜா அதை பற்றி யோசித்து குழப்பத்தில் இருந்தாள் .புவனா தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தார் .

இங்க பாருப்பா நீ யாரோ என்னவோ எனக்கு தெரியாது .
பண்ண உதவி வரைக்கும் போதும் . இப்போ தயவு செஞ்சு போ .எங்க பொண்ண நாங்க பாதுக்குறோம் என்று சொன்னார் புவனா .

உங்க பொண்ணா அது சரி என்று சொன்னவன் தேவா பக்கம் திரும்பினான் .அவன் முகம் குற்றவாளிகளை விசாரணை செய்யும் போது எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஏற்கனவே தன்னுடைய சித்தியை பார்த்து ஒருவன் எதிர்த்து பேசுகிறான் என்று சூர்யாவை பார்த்து பிரமித்து போய் இருந்தவள் இப்போது அவன் தன்னை பார்த்து முறைப்பதை பார்த்து இன்னும் பயந்து போனாள் .அவளை பார்த்தான் சூர்யா .

உனக்கு ஏற்கனவே ந நடக்க இருந்த கல்யாணம் நின்னுருச்சு .என்று சொன்னான் சூர்யா அதை கேட்டதும் தேவா முகம் பிரகாசம் ஆனது .அதை சூர்யா கவனிக்கதான் செய்தான் .என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா என்று நேரடியாக கேட்டான் .தேவா கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது அவளுக்கு அவனை பார்த்து கொஞ்சம் பயமாக இருந்ததால் அவள் அவனை பார்ப்பதை தவிர்த்து தலையை குனிந்து கொண்டாள் .

உன்னதான் கேக்குறேன் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா என்று மீண்டும் கேட்டான் சூர்யா அவள் ஒரு முறை கூட அவனை பார்க்கவில்லை .

இங்க பாருங்க நீங்க யாரு என்னன்னே தெரியல .எப்படி சார் உங்களுக்கு நாங்க பொண்ணு தர்றது .என்று கேட்டாள் பூஜா .

அது சரி .நான் போலீஸ் இன்ஸ்பெக்டர். சென்னைல தான என்னோட குடும்பம் எல்லாம் இருக்கோம் .அப்பா நான் தம்பி அவ்ளோதான் எங்க வீட்ல இருக்கோம் .என்று தன்னை பற்றிய விவரம் எல்லாம் சொன்னவன் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு பூஜாவிடம் நம்பர் கேட்டு வாங்கினான் .

ம்ம் அப்புறம் யாருக்கிட்ட விசாரிக்கணுமோ விசாரிச்சிக்கோங்க .உங்க பேர் பூஜான்னு சொன்னிங்கல்ல நீங்க தேவாவை வீட்டுக்கு கூட்டிட்டு போனதுக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனைன்னா
எனக்கு போன் பண்ணுங்க என்று சொன்னவன் தன்னுடைய போன் நம்பரை கொடுத்தான் .கொஞ்சம் நேரம் கழித்து பூஜா தேவாவை அழைத்து கொண்டு செல்ல சூர்யாவும் பிரசாத்தும் கிளம்பி விட்டார்கள் .

சூர்யா வீட்டுக்கு போகாமல் வேறு வழியில் சென்று கொண்டு இருந்தான் .

டேய் சூர்யா ஒரு நிமிசம் இப்போ எங்க போய்ட்டு இருக்கோம் .என்று கேட்டான் பிரசாத் .

தாலி வாங்க வேண்டாமா அதான் கடைக்கு போலாம் .என்ன ஷாஜஹான்க்கு[me; நகைக்கடை பேர் மக்களே ] போலாமா என்று கேட்டான் சூர்யா சதாரணமாக .

டேய் அதோ வர்ற ஆலமரத்துக்கு கிட்ட பைக்க நிறுத்து என்று சொன்னான் பிரசாத் .

சூர்யா பைக்கை பிரசாத் சொன்னது போல நிறுத்தினான் . பிரசாத் பைக்கை விட்டு இறங்கினான் .

டேய் சூர்யா இறங்கு முதல்ல எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு என்று பிரசாத் சொல்ல சூர்யா பைக்கை விட்டு இறங்கினான் .

சூர்யா நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுதா .என்னடா விளையாடிட்டு இருக்கியா .நீ பண்றது எல்லாம் பாத்தா எனக்க்கு ஹார்ட் அட்டாக் வந்துரும் போல என்று சொன்னான் பிரசாத் .

நீங்க எல்லாரும்தான நான் கல்யாணம் பண்ணணும்னு சொல்லிட்டே இருந்திங்க இப்போ நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்றேன் ஏன் ஷாக் ஆகுற என்று கேட்டான் சூர்யா .

சூர்யா நீ என்னவோ பத்து வருஷம் லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்க .அந்த பொண்ணு பேர் தேவதர்ஷினின்னு மட்டும் தெரியும் அவ்ளோதான் .மத்த படி என்ன தெரியும் என்று கேட்டான் பிரசாத் .

அந்த பொண்ணு ஊர் பேர் தெரியும் .அந்த பொண்ணு தங்கச்சி நம்பர் இருக்கு .கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் அவளை பத்தி நல்லா தெரிஞ்சிக்கிறேன் என்று சொன்னான் சூர்யா .

இங்க பாரு சூர்யா கண்டதும் காதலான்னு நான் கேக்க மாட்டேன்.அந்த பொண்ணோட கல்யாணம் நிக்க நம்ம பண்ண விபத்து காரணமா இருக்கலாம் .ஆனா அது அந்த பொண்ணுக்கு நல்லதுதான பண்ணி இருக்கு .அதனால நீ பரிதாபபட்டு கல்யாணம் பண்ண வேண்டாம் என்று சொன்னான் பிரசாத் .

நான் பரிதாப பட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லவே இல்லையே என்று சொன்னான் சூர்யா .

பின்ன என்ன காதலா என்று கேட்டான் பிரசாத் .

இல்லை என்று வேகமாக மறுத்தான் சூர்யா .

பரிதாபமும் இல்ல காதலும் இல்ல அப்புறம் என்ன நினைச்சிட்டு கல்யாணம் பண்ணிக்க போற என்று கேட்டான் பிரசாத் .

எனக்கு தெரியல .அந்த பொண்ண இப்படியே விட்டுட்டு போக மனசு சொல்லல .எப்போவும் நான் மனசு சொல்றதை கேக்க மாட்டேன் .மூளை சொல்றது மட்டும்தான் கேப்பேன் .ஏனா மனசு என்ன பொறுத்த வரைக்கும் முட்டாள்தனமாதான் யோசிக்கும் ஆனா இந்த விஷயத்துல என்னோட ,மனசு மூளை ரெண்டுமே அந்த பொண்ண விட்டுடாதன்னு சொல்லுது .நான் என்ன பண்ண என்று சூர்யா கேட்க பிரசாத் அவனை புரியாமல் பார்த்தான் .

சூர்யா கல்யாணம் அப்டிங்கறது சாதாரண விஷயம் இல்லடா .இப்போ ஒரு அவசரத்துல கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை .உன்னால அந்த பொண்ண சந்தோசமா வச்சிக்க முடியும்னு உனக்கு தோணுதா என்று கேட்டான் பிரசாத் .

கஷ்டப்படாம பாத்துக்க முடியும்ன்னு தோணுது .அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா ஆனா அவ இருக்க இடம் சரி இல்ல .அவ கண்ணுல எப்போவும் ஒரு பயம் இருக்கு .நான் அந்த கண்ணுல சந்தோசத்தை பாக்குறேனோ இல்லையோ ஆனா பயத்தை பாக்க கூடாதுன்னு நினைக்குறேன்.என்று சொன்னான் சூர்யா .

எல்லாம் ஓகேதான் .ஆனா அந்த பொண்ணு உன்ன பார்த்தே ரொம்ப பயப்படுதே அதுக்கு என்ன பண்ண போற .நீ அந்த பொண்ணுக்கு விருப்பமான்னு எதுக்கும் ஒருமுறை கேட்டு பாரேன் .விருப்பம் இருந்தா கல்யாணம் பண்ணிக்கோ இல்லன்னா வேற ஏதாவது ஹெல்ப் பண்ணலாம் என்று சொன்னான் பிரசாத் .

அவன் சொன்னதுக்கு ம்ம் என்று மட்டும் சொன்னான் சூர்யா

சரி வாடா வீட்டுக்கு போலாம் என்று சொன்னான் பிரசாத் .

ஹே தாலி வாங்கணும்டா வா கடைக்கு போலாம் என்று சொன்னனான் சூர்யா .

இவ்ளோ நேரம் நான் என்ன கதையா சொல்லிட்டு இருந்தேன் .என்னடா நீ தாலி வாங்க போறேன்னு சொல்ற என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் பிரசாத் .

எனக்கு தோணுது வா போலாம் என்று பைக் ஸ்டார்ட் செய்தான் சூர்யா . பிரசாத் எல்லாம் எங்க போய் முடிய போகுதோ என்று நினைத்து கொண்டு பைக்கில் ஏறி அமர்ந்தான் .

அதே நேரம் வீட்டுக்கு வந்த பூஜா தேவா உடன் இருந்தாள். புவனா கோபத்தில் இருந்தார் .பூஜா இருந்ததால் அவரால் தேவாவிடம் நெருங்க முடியவில்லை .

பூஜா நீண்ட நேரம் போன் பேசியவள் தேவா அருகில் வந்தாள் .

தேவா இண்ணைக்கு பேசுன பையன் பத்தி நான் விசரிச்சேன் .என்னோட பிரண்ட் தர்சன் இருக்கான்ல அவன்தான் சொன்னான் .சூர்யா ரொம்ப நல்ல பையன் .நல்ல குடும்பம் .நல்ல வேலை .எனக்கு அவங்க குடும்பம் ரொம்ப பிடிச்சிருக்கு .பாரு அப்பா தம்பி மட்டும்தானா .வேற யாரும் இல்லையாம் .அம்மா இப்போ அவங்க கூட இல்லையாம் .நீ இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்ன்னு தோணுது .தேவா நீ இவரையே கல்யாணமே பண்ணிக்கோ என்று சொன்னாள் பூஜா .தேவா அவளை பார்த்தாள் .

என்ன தேவா ஏதாவது சொல்லணுமா என்று கேட்டாள் பூஜா .

தேவா தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று சைகை மூலம் சொன்னாள் .பூஜா அவளை முறைத்தாள் .

என்ன தேவா உன்னோட பிரச்சனை .நீ இப்போ ரொம்ப சந்தோசமா ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்து உன்ன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்க சொன்னா பரவாயில்லை .அம்மா கூட இருந்தாலும் அவங்க உன்ன நிம்மதியா இருக்க விட மாட்டாங்க . நீ எப்படியும் ஒருநாள் இல்ல ஒருநாள் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கதான போற.அவர பாத்தா உன்மேல ரொம்ப அக்கறையா இருக்க மாதிரிதான் இருக்கு தேவா .சரி உனக்கு கல்யாணம் வேண்டாம்ன்னா கூட பரவாயில்லை. நீ என்கூட வந்துரு .என் அம்மாவிட உனக்கு வேற ஆபத்து எதுவும் இல்ல .என்னோட பிரன்ட் வீட்டுல வாடகைக்கு விடுறாங்க நம்ம. அங்க இருக்கலாம் .என்று சொன்னாள் பூஜா

தேவா தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் .அவள் இப்படி அப்பாவியாக இருப்பதை பார்த்த பூஜாக்கு கோபம்தான் வந்தது .

சரி தேவா நீ கொஞ்சம் நேரம் தூங்கு .அப்புறம் எழுந்து மாத்திரை போடணும் என்று சொன்னவள் அவளை படுக்க வைத்துவிட்டு. ஹாலுக்கு வந்தாள் .அவள் ஆச்சர்யம் கொள்ளும் விதமாக அங்கே புவனா இல்லை .புவனாவை தேட அவள் மனமும் இடம் கொடுக்க முடியவில்லை .எனவே போன் எடுத்துக்கொண்டு மாடிக்கு போனாள் .

மாடிக்கு போன நேரம் சூர்யா அழைத்தான்.

ஹெலோ என்றாள் பூஜா

ஹெலோ சூர்யா பேசுறேன் .உங்க அக்கா இப்போ எப்படி இருக்காங்க .என்று கேட்டான் சூர்யா .

தூங்கிட்டு இருக்கா என்று சொன்னாள் பூஜா .

ம்ம்ம் சரி ஏதாவது பிரச்சனைன்னா கூப்பிடுங்க.உங்க வீடு ஒரு பெரிய ஆலமரத்துக்கிட்டதான இருக்கு .என்று சூர்யா கேட்க பூஜா ஆமா என்று சொன்னாள்.

நீங்க உண்மையாவே என்னோட அக்காவை கல்யாணம் பண்ணிக்க தயாரா என்று கேட்டாள் பூஜா .

நான் விளையாட்டுக்கு எல்லாம் பேசுறவன் கிடையாது.என்று சொன்னான் சூர்யா

உண்மையா சொல்லனும்னா தேவா மாதிரி ஒரு பொண்ணு உங்க வாழ்க்கை வந்தா அது அதிர்ஷ்டம் .அவள மாதிரி ஒரு பொண்ண எல்லாம் நீங்க பாத்துருகேக்கவே முடியாது என்று சொன்னாள் பூஜா .

ம்ம்ம் அதுவும் உண்மைதான் .உங்க அக்கா என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னா நான் அவங்களை கல்யாணம் பண்ணிக்க தயார் .அவங்களுக்கு என்ன பிடிக்கலன்னாலும் பரவாயில்லை நான் அவங்களுக்கு என்ன உதவின்னாலும் பன்றேன் என்று சொன்னான் சூர்யா .

கேக்குறேன்னு தப்பா நினைக்காதிங்க ஏன் உங்களுக்கு என் அக்கா மேல இவ்ளோ அக்கறை என்று கேட்டாள் பூஜா .

தெரியல என்று சொன்னான் சூர்யா [me; கா ல ஆரம்பிச்சு ல் ல முடியும் நடுவுல த போட்டுக்கோங்க அதா கூட இருக்கலாம்😂😂😂😂 ]

பூஜா அவன் சொன்னதை கேட்டு மௌனம் ஆனாள் .அவள் எதுவும் பேசவில்லை .

ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க .நான் பாத்துக்குறேன் என்று சொன்னவன் போனை வைத்து விட்டான் .

...............

இரவு நேரம் சூர்யா மற்றும் பிரசாத் அப்போதுதான் உறங்க சென்றார்கள் .அமிர்தாவிடம் பேசிவிட்டு படுக்க வந்தான் பிரசாத் .

சூர்யா இந்த நாள்ல எவ்ளோ நடந்துருக்குல்ல . இதுக்குமேல நடக்க ஒண்ணுமே இல்லன்னு கூட சொல்லலாம் என்று சொன்ன பிரசாத் படுக்க போக சூர்யா போன் அடித்தது .

சூர்யாக்கு பூஜாதான் அழைத்திருந்தாள் .அதை பார்த்ததும் சூர்யாவின் புருவம் குழப்பத்தில் முடிச்சிட்டது .

போன் அட்டெண்ட் செய்து பேசியவன் எப்போ எப்படி எங்க என்று அவன் சீரியஸாக பேச அடுத்து ஏதோ ஒரு சம்பவம் நடக்க போகிறது என்று புரிந்து கொண்டான் பிரசாத் .

எதுக்கும் பயப்பட வேண்டாம் .காலையில 7 மணிக்குள்ள நான் அங்க இருப்பேன் .என்ன ஆனாலும் எனக்கு உடனே கூப்பிடுங்க என்று சொன்னவன் போனை வைத்து விட்டான் .

இப்போ என்னவோ வில்லங்கமா சொல்ல போறேன்னு எனக்கு தெரியுது .என்ன விஷயம் சொல்லு.

வில்லங்கமா ஒண்ணுமில்ல .நாளைக்கு காலையில எனக்கு கல்யாணம் வந்துரு என்று சாதாரணமாக சொன்னான் சூர்யா .

டேய் என்னடா யாருக்கோ கல்யாணம் மாதிரி சொல்ற என்று கேட்டான் பிரசாத்.

பின்ன என்ன பண்ண சொல்ற ஏற்கனவே பார்த்த அந்த ஆளுக்கே அவங்க அம்மா கல்யாணம் பண்ணி வைக்க பேசிட்டு வந்துட்டாங்களாம் .அவங்க முடிவு பண்ண நாள்ல கல்யாணம் பண்ணி வைக்க போறாங்களாம் .அதான் நான் நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறேன் . என்று சொன்னான் சூர்யா .

டேய் சூர்யா நீ கொஞ்சம் அவசர படுற மாதிரி இல்ல என்று கேட்டான் பிரசாத் .

என்னால அந்த பொண்ண அப்படி எல்லாம் விட்டுட முடியாது .அந்த பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்ன நான் பண்ணுவேன் அவ்ளோதான் என்று சொன்னான் சூர்யா .

அப்போ வீட்ல எல்லாம் சொல்ல வேண்டாமா என்று கேட்டான் சூர்யா .

நான் நேரா போய் பேசிக்கிறேன் என்று சொன்னான் சூர்யா .

அப்போ நாளைக்கு கல்யாணம்ன்னு முடிவு பண்ணிட்ட வாழ்த்துக்கள் .என்றான் பிரசாத் .

தூங்கு நாளைக்கு சீக்கிரம் எழுந்திருக்கணும் என்று சொன்ன சூர்யா படுத்து கொண்டான் தூங்கவில்லை .

அதே நேரம் இங்கே பூஜா தேவா உடன் பேசி கொண்டு இருந்தாள்.

தேவா நான் பேசிட்டேன் நாளைக்கு அவங்க வருவாங்க .உனக்கு நாளைக்கு கல்யாணம் ஆக போகுது .உன்னோட கல்யாணத்துக்கு சாட்சி கை எழுத்து போட போறதே நான்தான் .நீ நாளைக்கு சூர்யா வந்து கூப்பிடறப்ப தைரியமா அவர் கூட வரணும் . நீ ஏதாவது மாத்தி பேசுனா எல்லாம் சொதப் பிடும் .ப்ளீஸ் என்னோட செல்லம்ல உன்ன அவர் நல்லா பாத்துப்பாரு என்று பூஜா சொல்ல தேவா மீண்டும் தலை குனிந்து கொண்டாள் .

தேவா உனக்கு ஒரு முடிவுக்கு வர முடியலன்னா உனக்கு நல்லது நடக்கணும்ன்னு நினைக்குற என்னோட பேச்ச தயவு செஞ்சி கேளு ப்ளீஸ் என்று பூஜா சொல்ல அவளை நிமிர்ந்து பார்த்தவள் சரி என்பது போல தலை அசைத்தாள் .

அடுத்த நாள் காலை வந்தது பூஜா மற்றும் தேவா இருவரும் தயாராகி கொண்டிருக்க அப்பொழுதுதான் புவனா அவர்களை பார்த்தார் .

எங்கட்டி கிளம்பிட்டு இருக்கீங்க என்று கேட்டார் புவனா .

ம்ம்ம் தேவா கல்யாணத்துக்கு கிளம்பிட்டு இருக்கோம் என்று சொன்னாள் பூஜா .

இவ்ளோ வாய் ஆகவே ஆகாதுட்டி உனக்கு பூஜா இதெல்லாம் நல்லத்துக்கு இல்ல என்று சொன்னார் புவனா .

உனக்கு பிறந்துட்டு இந்த வாய் கூட இல்லன்னா எப்படி என்றாள் பூஜா .

நீ எனக்கு பிறந்த அதனால உனக்கு இந்த வாய் இருக்கு ஆனா அவளுக்கு அப்படி இல்லையே.தேவா போ போய் ரூம்ல உக்காரு என்று அதட்டினார் புவனா .தேவா ஏற்கனவே பூஜா சொன்னாள் என்று பயந்து பயந்து கிளம்பி கொன்டு இருந்தாள் .இப்போது புவனா சொன்ன உடன் அவளுக்கு இன்னும் பயம் வந்து அவர் சொன்னது போல ரூமுக்கு செல்ல வேண்டி ஒரு அடி பின்னால் எடுத்து வைக்க பூஜா வாங்க வாங்க என்று அழைக்க தேவா மற்றும் புவனா வாசல் பக்கம் திரும்பினார்கள்.அங்கே சூர்யா மற்றும் பிரசாத் நின்று கொண்டிருந்தார்கள் .பூஜா அழைத்ததும் அவர்கள் உள்ளே வந்தார்கள் .புவனாக்கு கோபம் தலைக்கு ஏறியது .

அங்கேயே நில்லுங்க .என்று கத்தினார் புவனா ஆனால் சூர்யா அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை .

போலாமா என்று கேட்டான் சூர்யா தேவாவை பார்த்து .தேவாக்கு மயக்கமே வருவது போல இருந்தது.கால்கள் உதறுவது போல இருந்தது .

புவனா சூர்யா போலீஸ் என்பதை மனதில் வைத்து கொண்டு பேச ஆரம்பித்தார் .

இங்க பாருங்க தம்பி ..உங்களுக்கு என்ன இவளை கட்டணும்னு தலை எழுத்தா .உங்களுக்கு வேற நல்ல பொண்ணு கிடைப்பா.நின்ன கல்யாணம் மறுபடியும் கை கூடி வந்துருக்கு தயவு செஞ்சு போயிருங்க என்று கெஞ்சி கேட்டார் புவனா .ஆனால் சூர்யா அவர் போலியான கெஞ்சல்களை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை .

அவன் தேவாவிடம் சென்றான் .அதை பார்த்த புவனா இன்னும் கடுப்பானார் .

தேவா உள்ள போ தேவா .நல்லா இருக்க இந்த பையனுக்கு ஏதாவது ஆகணுமா .நான் இருக்க வரை அந்த கொடுமை நடக்க விடவே மாட்டேன் .இந்த பையன் உன் கழுத்துல தாலி போட நான் விட மாட்டேன் .ஒழுங்கா உள்ள போ என்று புவனா சொல்ல இத்தனை நாள் புவனா சொன்னதை நம்பி வாழ்ந்தவள் இப்போதும் அதை செய்ய போக அவள் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு முன்பு அவள் கையை பிடித்து நிறுத்தினான் சூர்யா .தேவா அவனைதான் அதிர்ச்சியாக பார்த்தாள்.

கடைசியா கேக்குறேன் என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமா என்று கேட்டான் சூர்யா .புவனா முகத்தில் ஒரு புன்னகை தோண்றியது அவர் தேவாவை பார்த்து விருப்பம் இல்லை என்று சைகை செய்ய சொல்ல .நல்லவேளை தேவா பூஜாவை பார்த்தாள் .

பூஜா சரி என்று சைகை சொன்னாள் .தேவாக்கு அவ்வளவு பதட்டமாக இருந்தது அவளுக்கு கண்கூட லேசாக கலங்கியது .புவனா 100 சதவீதம் நம்பினார் எப்படியும் தேவா முடியாது என்று சொல்வாள் என்று .ஆனால் அங்கு நடந்தது வேறு .

உன்கிட்டதான் கேக்குறேன் என்று சூர்யா மறுபடியும் கேட்க தேவா கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் என்று தலை அசைத்தான் .

என்னட்டி உனக்கு கொழுப்பு அதிகம் ஆகிட்டோ .தம்பி அவளுக்கு வாய்தான் இல்லன்னு நினைச்சா மூளையும் இல்ல போல .அதான் இப்படி பண்ணிட்டு இருக்கா.இத்தனை வருஷம் அவளை வளர்த்து நான்தான் .அவ மேல எனக்கு உரிமை உண்டு .நீ உள்ள போ தேவா என்று அவர் சொல்ல தேவா அவரை பார்க்காமல் பதட்டமான கண்களுடன் சூர்யாவை பார்த்தாள்.அவன் அவளை பதட்டம் இல்லாமல் ஒரு சிறு புன்னகையுடன் பார்த்தான் .பிறகு புவனா பக்கம் திரும்பினான் .நீங்க சொன்னது சரிதான் என்னால நீங்க வளர்த்த பொண்ண கூட்டிட்டு போக முடியாது ஆனா என்னோட மனைவியை கூட்டிட்டு போலாம்ல என்று சொன்னவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து தாலியை எடுத்தான் .எல்லோரும் அவனை
அதிர்ச்சியிடன் பார்க்க சூர்யா அவள் கழுத்தில் பொன்னால் ஆன தாலியை போட்டு விட்டான்.தேவாக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை .புவனா அதிர்ச்சியில் நிற்க தேவா கையை பிடித்து கொண்டு சூர்யா நடக்க ஆரம்பித்தான் .

கண்கள் சூர்யா மீது நிலைத்து இருக்க அவள் கால்கள் அவனோடு பயணத்தை தொடங்கியது .

உறவு தோன்றுவது எப்படி இருந்தாலும் தோன்றியது தோன்றியதுதான் .இவர்களுக்குள் தோன்றிய உறவு எதுவரை செல்லும் என்பதை வரும் பதிவில் சந்திப்போம் .

அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது அபிராமி G.N

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro