
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு-7
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்
மறு நாள் அந்த
செடியில் அந்த மலர்
வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே
இறைவனின் மனமும்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தேவா வயலுக்கு அருகில் உள்ள கோவிலில் உட்கார்ந்து இருந்தாள் .கோவில் என்றால் பெரிய மண்டபம் என்று சொல்ல முடியாது கட்டிடம் அல்லாமல் வெளி இடத்தில் உள்ள கோவில் அது .அங்கு யார் வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் வந்து பூஜை செய்து கொள்ளலாம் .அந்த கோவிலுக்கு தேவாதான் வந்து கோலம் போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து வைப்பாள் .அவள் இல்லை என்றால் வேறு யாரிடமாவது கோலம் போட சொல்லி அனுப்பியாவது வைப்பாள் .அவளுக்கு ஊருக்குள் இருக்கும் இறைவனை காட்டிலும் இப்படி வயலுக்கு அருகில் இந்த அம்மன் மீதுதான் பாசம் ஜாஸ்தி .இதுவரை அவள் இந்த கடவுளிடம் வந்து தன்னுடைய வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்று அழுததும் இல்லை மாற்றி கொடு என்று கேட்டதும் இல்லை .அவள் மனதின் வலி இது என்று ஒரு நாள் கூட இறையவனிடம் சொன்னது இல்லை .பல நாள் அடி வாங்கிவிட்டு அந்த வலி உடன் இங்கு வந்து எல்லா இடத்தையும் சுத்தம் செய்து இருக்கிறாள் .இதுநாள் வரை அவள் இங்கு வந்து தன்னுடைய மனதில் இருக்கும் எந்த கவலையும் சொன்னது இல்லை ஆனால் இன்று அவள் தன்னுடைய மனதில் இருக்கும் வேதனை எல்லாவற்றையும் கடவுளிடம் பேச முடிவு செய்து விட்டாள் .மனதை புரிந்து கொள்ளாத மனிதர்களிடம் பேசுவதற்குதான் வார்த்தைகள் தேவை கடவுளிடம் பேச வார்த்தைகள் தேவை இல்லை .
யென் என்றால் தெளிவற்ற மனதை கொண்டு வாடும் ஒவ்வொருவரின் மனதின் குரலை கேட்கவே செய்கிறார் .பிரச்சனை வரும் நேரம் எல்லாம் ஏன் கடவுள் நம்மை மட்டும் ஏன் முள் பாதையில் கொண்டு செல்கிறார் என்று தோன்றும் .ஆனால் பிரச்சனை முடிந்த பிறகுதான் தெரியும் அந்த முள் பாதையில் நம் உடன் இருந்து கடக்க செய்ததே கடவுள்தான் என்று .நமக்கு ஒரு பிரச்சனை சொல்ல ஆள் இல்லை என்றால் மனதிலே கடவுளை நினைத்து கொண்டாலே போதும் .அவர் நிச்சயம் கேட்பார் .கடவுள் நெருப்பு சுடும் என்று வாழ்க்கை பாடத்தை கற்று கொடுப்பார் என்றும் அந்த நெருப்பில் நம்மை எரிய விட மாட்டார் .ஏன் தெரியுமா நாம் எல்லாம் கடவுளின் குழந்தைகள் [me; ஏன்னா நான் ஊருக்குள்ள இப்படித்தான் சொல்லிட்டு இருக்கேன் 😂😂😂😂.கடவுள் நம்பிக்கை மூட நம்பிக்கை ரெண்டும் வேற.எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு அதான் இந்த தத்துவம் மக்களே ]
தேவா இப்போது அந்த அம்மன் சிலையை பார்த்து கொண்டிருந்தாள் .அவளுக்கு எங்கிருந்து ஆரம்பிக்க என்றே தெரியவில்லை .இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் .அவளுக்கு என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை .அவளுக்கு பெண் பார்க்க வந்த அன்று மாப்பிள்ளை என்று வந்தவன் பார்த்த பார்வை இப்போது நினைத்தாலும் அவளுக்கு அவ்வளவு அருவருப்பாக இருந்தது .அவன் உடன் அம்மா அப்பா என்று யாரும் வரவில்லை அக்கா என்ற பேரில் ஒரு பழைய பாட்டி வந்தார் .அவர் தேவாவை பார்த்து வாய் கூசாமல் மைனி [அண்ணி]என்று அழைக்க புவனா அதற்கு ஒரு படி மேலே சென்று அந்த 45 வயது சுதாகரை மாப்பிள்ளை என்று அழைத்தார் .அவர்கள் உடன் வந்தவர்கள் எல்லோரும் பெண்ணுக்கு பேச்சு வரவில்லை என்றால் என்ன பார்க்க அழகாக இருக்கிறாள் என்று சொன்னார்கள் .அந்த நேரம் தேவாக்கு அவர்கள் பார்வை என்னவோ நெருப்பு போல சுட்டது அதுவும் சுதாகர் அவன் பார்வை தேவாக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை .அவள் தான் சரியாக கட்டி இருந்த புடவையை சரி செய்து கொண்டு இருந்தாள் .அவளால் அவள் வாழ்க்கையைதான் சரி செய்ய முடியவில்லை ஆனால் புடவையாவது சரி செய்யலாம் என்று அவள் சரி செய்து கொண்டாள் .தேவாக்கு யாருடன் கல்யாணம் நடக்க போகிறது எவ்வளவு வயசு வித்யாசம் என்பது சொந்தக்காரர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆனால் யாருக்கும் அதை தட்டி கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை .கேட்க போய் நீ கல்யாணம் செய்து வைப்பாயா என்று கேட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது அதனால் யாரும் புவனாவிடம் இதை பற்றி கேட்கவில்லை .திருமணம் கூட மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள்.பூஜாக்கு எல்லா விஷயமும் தெரியும் அவளுக்கு உடனடியாக லீவ் கிடைக்கவில்லை .அவளும் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்புதான் வர முடியும் என்னும் சூழ்நிலை . .அதற்கு முன்பு அவள் எத்தனையோ முறை அவள் தோழி மூலம் தேவாவிடம் பேசினாள் அவள் தயார் என்று சொன்னால் அவளை அங்கிருந்து அழைத்து வருவதாக சொன்னாள் பூஜா ஆனால அதற்கு எல்லாம் தேவா ஒப்பு கொள்ளவில்லை .தேவாவிடம் போனில் பேசுவது எல்லாம் வீண் நேரில் சென்று அழைத்து வரலாம் .என்ன ஆனாலும் இந்த கல்யாணம் மட்டும் நடைபெற கூடாது என்று மனதில் நினைத்து கொண்டாள் பூஜா .இப்படி நடந்தது எல்லாவற்றையும் மனதுக்குள் நினைத்தபடி கடவுள் முன்பு அமர்ந்து இருந்தாள் தேவா.
எனக்குன்னு குரல் இல்லை .நான் உங்ககிட்ட பேச அது தேவையும் இல்லை .எல்லாரும் என்ன பாத்து பாவமா பாக்குறப்போ கூட எனக்கு வருத்தமா இருந்ததுல்ல . எல்லாரும் என்னோட சித்தியை என்ன கொடுமை படுத்துறாங்கன்னு சொன்னபோ கூட நான் அப்படி நினைக்கல .ஏனா என்ன பார்த்து பாவபட்ட யாரும் எனக்கு உதவி பண்ண வரல.என்ன அடிச்சாலும் திட்டுனாலும் அவங்கதான என்ன பாத்துகிட்டாங்க .இந்த வாழ்க்கை எனக்கு போதும்ன்னு தான நான் வாழ்ந்துட்டு இருக்கேன் எனக்கு இந்த வாழ்க்கை போதும் .எனக்கு இது வேணும்ன்னு நான் கேக்கல இந்த கல்யாணம் வேண்டாம்ன்னுதான் சொல்றேன் .எனக்கு என்னோட வாழ்க்கைல கல்யாணம் வேண்டாம் .எனக்கு யாரும் வேண்டாம் .சாகவும் எனக்கு தைரியம் இல்லை வாழவும் வழி இல்ல .இதுவரைக்கும் என்கூட இருந்திங்க இனியும் என்கூட இருங்க .என்ன கை விட்டுடாதீங்க .எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று தன்னுடைய மனதில் உள்ளதை எல்லாம் சொன்னாள் தேவா .மனதில் இருந்து சொன்ன வார்த்தைகள் எல்லாம் கடவுளுக்கு கேட்கதான் செய்தது .
அதே நேரம் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் பூஜா .அவள் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக தேவா தேவா என்று அழைத்தாள் .புவனா வந்து அவளை பார்த்தார் .
எட்டி என்னட்டி உனக்க பிரச்சனை .எதுக்கு இப்போ வந்ததும் வராததுமா இப்டி சத்தம் போட்டுட்டு இருக்க .புவனா அவளை பார்த்து முறைத்தாள் .
பாக்கணும்னு நினைக்குறவள பாக்க முடியல .உன்ன எல்லாம் பாக்கவே கூடாதுன்னு நினைக்குறேன் ஆனா நீ என் முன்னால வந்து நிக்கிற .அவ எங்க என்று கேட்டாள் பூஜா .
என்னட்டி உனக்க வாய் நீழுது என்று அதடின்னார் புவனா .
உன்னோட அதட்டலுக்கு எல்லாம் பயப்படற ஆள் நான் இல்லை .நான் தேவா கிடையாது என்று பூஜா சொல்ல அவளை அடிக்க கையை ஓங்கினார் புவனா .பூஜா அவள் கையை பிடித்து தடுத்தாள் .
நான்தான் சொன்னல நான் தேவா கிடையாதுன்னு .அப்புறம் என்ன தைரியத்துல என்ன அடிக்க கை ஓங்கிட்டு இருக்கீங்க .இன்னொரு வாட்டி கைய நீட்டுன நீட்டுன கையை உடைச்சிருவேன் .நீயெல்லாம் மனுஷியா .அந்த பொண்ணு உனக்கு அப்டி என்ன பண்ணிச்சுன்னு இந்த மாதிரி கொடுமை எல்லாம் பண்ணிட்டு இருக்க .நானும் அவ பாதுகாப்பா இருக்க ஒரு இடம் இல்லைன்னுதான் இத்தனை நாள் பொறுமையா இருந்தேன் .ஆனா இனி நான் நிச்சயம் பொறுமையா இருக்க மாட்டேன் .அந்த பைத்தியத்துக்கு என்ன சொன்னாலும் உன்ன எதிர்த்து ஒண்ணும் பண்ண மாட்டேங்குறா .இத்தனை நாள் அந்த பொண்ணு தச்சி தந்த துணியிலதான நீ நல்ல சாப்பாடு சாப்பிட்ட .அந்த நன்றி வேணா உனக்கு இல்லாம போலாம் ஆனா நான் அப்டி எல்லாம் இருக்க முடியாது .உனக்கு அவளை வச்சி பாத்துக்க முடியலன்னா விட்டுட்டு போய்டே இரு என் அக்காவை பாத்துக்க எனக்கு தெரியும் என்று பூஜா புவனாவை பார்த்து குரலை உயர்த்தி பேச ஒரு நொடி வாயடைத்து போனாள் புவனா .
என்ன புது பாசமா .அவளுக்கு ஏதாவது ஆனா உனக்கு என்ன பிரச்சனை .இங்கபாரு பூஜா நீ வெளுத்தது எல்லாம் பாலுன்னு நினைக்காத நீ நினைக்குற அளவுக்கு அவ நல்லவ இல்ல.அவளுக்க ராசிதான் நம்ம இத்தனை நாள் இவ்ளோ கஷ்ட பட்டுட்டு இருக்கோம் .அம்மா அப்பான்னு அவளுக்க மேல பாசம் வச்ச எல்லாரும் ஏற்கவே செத்து போயாச்சு .அவளுக்க ராசி அப்படி அதனாலதான் அவளை நான் தள்ளி வச்சிருக்கேன் .நீயும் அப்டியே இரு இத்தனை நாள் கடமைக்கு வலதாச்சு இதுவரை அவளால என்ன நல்லது நடந்துருக்கு .அப்படி பட்டவளுக்கு நான் காசு செலவு பண்ணி நல்லவனா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கணுமா .இவளை கட்டிக்கிறேன்னு எல்லாம் வாசல்ல வந்து நிக்குறாங்க .நான்தான் கட்டி வைக்க மாட்டேன் இருக்கேன் .இவளை மாதிரி ஒருத்தியை எவனோ ஒருத்தன் பைசா தர்றேன் சொல்லி கட்ட வந்தா கட்டி குடுக்குறதுதான் புத்திசாலித்தனம் .அவளை கல்யாணம் பண்ணி குடுத்து வர்ற அந்த பைசா நகை வச்சிதான் உனக்கு கல்யாணம் பண்ணணும் என்று மனசாட்சி இல்லாமல் பேசினார் புவனா .
எது ஒரு பொண்ண பலி கொடுத்துட்டு இன்னொரு பொண்ண நீ வாழ வைபிய்யா .தள்ளி வச்சேன் சொன்னா அவ சாம்பாதிச்ச காசையும் ஒதுக்கி வைக்க வேண்டியது தான என்று கோபமாக கேட்டாள் பூஜா .
அதுக்கு என்ன பண்ண முடியும் கோழிக்கு வலிக்கும்ன்னு பாத்தா நமக்கு இலைல இறைச்சி சோறு கிடைக்குமா .அந்த ராசி இல்லாதவள பத்தி நீ தேவை இல்லாம பேசி என்ன கோப படுத்தாத .போ போய் உள்ள இரு .என்று புவனா சொல்ல அவளை பார்த்து முறைத்து கொண்டு தேவா இருக்கிறாளா என்று பார்க்க தன்னுடைய அறைக்கு நடக்க ஆரம்பித்தாள் .
கூட இருக்குற வரைக்கும் எனக்கு தொந்தரவு கொடுத்தா .இப்போ போற நேரத்துல என்னையும் என்னோட பொண்ணையும் பிரிக்க பாக்குறா .அது இருக்குற நேரத்துக்கு செத்து போனா கூட நிம்மதியா இருக்கும் போல என்று சொன்னாள் புவனா அதை கேட்ட பூஜாக்கு கோபம் கோபமாக வந்தது .இண்ணைக்கு புவனாவை ஏதாவது செய்யாமல் விட கூடாது என்று முடிவு செய்தவள் .புவனா பக்கம் திரும்ப அவள் போன் அடித்தது .வள்ளி போன் செய்தாள் .பூஜா எதற்கு இப்போது வள்ளி போன் செய்கிறாள் என்று தோன்றியது இருந்தாலும் போன் எடுத்தாள் .
ஹெலோ பூஜா .உனக்க அம்மைக்கு விழிச்சேன் மக்கா .போன் போல .நம்ம தேவா இப்போ நெய்யூர் ஆஸ்பத்திரில இருக்கா ஆக்சிடன்ட் ஆகிட்டு மக்கா .நீ வந்ததை எனக்க வீட்டாளு சொன்னாரு .கொஞ்சம் சீக்கிரம் வா மக்கா என்று வள்ளி சொல்ல பூஜாக்கு தலை சுற்றுவது போல இருந்தது .
அக் அக்கா அவ அவளுக்கு ஒண்ணும் இல்லையே என்று கேட்டாள் பூஜா .
சீக்கிரம் வா மக்கா என்று சொல்லிவிட்டு போனை வைத்து. விட்டாள் .பூஜா வேகமாக வாசல் நோக்கி செல்ல புவனா அவளை அழைத்தாள் புவனா அவளை எரிப்பது போல பார்த்தாள் பூஜா ,.
நீ சொன்ன மாதிரி என்னோட அக்காக்கு ஆக்சிடன்ட் ஆகி ஹாசப்பிட்டல்ல இருக்கா .அவளுக்கு மட்டும் எதாச்சு ஆச்சு உன்ன நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று சொன்னவள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் ஆட்டோ ஓட்டுபவர் அவரிடம் கேட்டு ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடல் கிளம்பினாள் .புவனாவும் ஏதோ செல்ல வேண்டும் என்பதற்காக உடன் சென்றாள் .
வள்ளி ஹாசப்பிடலில் இருந்தார்.
பிள்ளே நீ தான தேவாவை இங்க கொண்டு வந்து சேர்த்தது.உனக்க பேர் என்னப்பா என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து இருந்தவனை பார்த்து கேட்டார் வள்ளி .
என்னோட பேர் சூர்யா என்றான் சூர்யா .அவன் குரலில் பதட்டம் தெரிந்தது .போலீஸ் என்பதனால் விபத்து காயம் ரத்தம் எல்லாம் அவனுக்கு பழக்கம்தான் .ஆனால் இன்றுதான் ஒரு விபத்து அவனை இந்த அளவுக்கு பாதித்திருக்கிறது .அவளுக்கு ஒன்றும் இல்லை என்று டாக்டர் சொல்ல வேண்டும் என்று வேண்டி கொண்டான் .அவனுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே விட்டால் பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது அவனுக்கு.வள்ளி கேள்விகள் கேட்டார் அவனுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை .அப்படியே அமர்ந்து இருந்தான் .
முற்றுப்புள்ளி என்று நாம் நினைப்பது சில நேரம் தொடக்கபுள்ளியாக கூட இருக்கலாம் .(me:இப்போ இதை ஏன் சொல்றேன்னுதான யோசிகிறிங்க .ஏனா கதை இனிதான் தொடங்க போகுது .)
நான் இந்த கதைக்கு கதாப்பாத்திரம் போட்டோ எல்லாம் வேணான்னு நினைச்சேன் .ஆனா மனசு ரெடி பண்ண சொல்லிச்சு பண்ணிட்டேன்😁.
சரி கவர் பாப்போம்
எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ
சூர்யா😍😍😍
தேவா
பிராசாத்
அமிர்தா
ஜெய்
பூஜா
இவங்க எல்லாம்தான் முக்கியமான கதாபாத்திரம் மக்களே. நன்றி வணக்கம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro