
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -5
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என்னுடைய நிழலையும் இன்னொருத்தி
தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ
சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பூஜா மீண்டும் சென்னைக்கு வந்து விட்டாள் .அவள் ஊரில் இருந்த நாட்கள் எல்லாம் அவள் அம்மா ஏதாவது தேவாக்கு எதிராக பிரச்சனை கொண்டு வர காத்து இருக்கிறாளா என்று அறிந்து கொள்ள முயற்சி செய்தாள். ஆனால் அப்படி எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை .எனவே பூஜா மீண்டும் நிம்மதியாக சென்னைக்கு வந்து விட்டாள்.ஊரில் உள்ள அவளுடைய தோழி ஒருத்தியிடம் ஏதாவது பிரச்சனை என்றால் சொல்ல சொல்ல சொல்லி இருந்தாள் பூஜா .அந்த பெண்ணும் சரி என்று சொன்னாள்.
இன்று ஞாயிறு என்பதால் பூஜா அவளுடைய தோழியுடன் வெளியே வந்திருந்தாள் .எப்போதும் போல டீ நகர் வந்தவள் செருப்பு மற்றும் ஆபீஸ்க்கு போட சில டாப் எடுத்து கொண்டாள்.பிறகு இருவரும் ஒரு ஹோட்டல்க்கு சென்று அமர்ந்தார்கள்.
பூஜா இருந்தாலும் உன்ன மாதிரி ட்ரெஸ் தேடி தேடி வாங்க யாரலையும் முடியாது .நீ போடுற ட்ரெஸ் எல்லாம் விலை கம்மியா இருக்கு ஆனா அழகாவும் இருக்கு எப்படி என்று கேட்டாள் அஸ்வினி .
ம்ம்ம் உண்மைய சொல்லணும்ன்னா நான் கொஞ்சம் கஞ்சம் அதான் என்று சொன்னாள் பூஜா
அட போடி.எல்லாத்துக்கும் இப்படியே சொல்லு .சரி பசிக்குது ஆர்டர் பண்ணலாமா என்று கேட்டாள் அஸ்வினி .
ம்ம்ம் என்ன வேணுமோ ஆர்டர் பண்ணு.இந்த பூஜா சாப்பாடு விஷயத்துல கணக்கு பாக்க மாட்டா என்று சொன்னாள் பூஜா .
ம்ம்ம் அது சரி என்று சொன்ன அஸ்வினி ஆர்டர் செய்ய போக அப்போது அஸ்வினி போன் அடித்தது .
போன் பேசியவள் உடனே வருவதாக சொன்னாள். பூஜா அவளை பார்த்தவள் என்ன விஷயம் என்று புரிந்து கொண்டாள்.போனை வைத்த அஸ்வினி பூஜாவை பார்க்க பூஜா அவள் பேசுவதற்கு முன்பாக பேசினாள்.
நீ எதுவும் சொல்ல வேண்டாம் .உன்னோட ஆள் உன்ன இப்போ வெளிய கூப்பிடுறாரு .அதனால இப்போ நீ போணும் அதான என்று பூஜா கேட்க அஸ்வினி ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.
இல்ல பூஜா நாங்க படத்துக்கு போறதாதான் பிளான் பண்ணோம் அப்போ வேலை இருக்கு வர முடியாதுன்னு சொன்னான். ஆனா இப்போ திடீர்னு போன் பண்ணி கூப்பிடறான்.சாரி டி என்று காரணம் சொன்னாள் அஸ்வினி .
அம்மா தாயே நான் உன்கிட்ட விளக்கம் எல்லாம் கேக்கவே இல்ல .நீ உன்னோட ஆள் கூட சந்தோசமா போய்ட்டு வா என்று சிரித்தபடி சொல்ல அஸ்வினி கிளம்பி விட்டாள்.பூஜா என்ன சாப்பிடலாம் என்று பார்த்தவள் வைட்டர் அருகில் வந்து விட்டார் என்று நினைத்து கொண்டு அண்ணா ஒரு சிக்கன் பிரியாணி மட்டும் போதும் என்று சொன்னாள்.பதில் எதுவும் வராததால் அவள் தலையை உயர்த்தி பார்க்க அங்கே ஊரில் பார்த்தவன் நின்று கொண்டு இருந்தான் அவனைப்பார்த்தவள் சட்டென்று பதட்டம் ஆகி விட்டாள். நீங்களா சாரி நான் வெயிட்டர் தப்பா நினைச்சிட்டேன் என்று சொன்னவள் எழுந்திருக்க அவள் சட்டென்று பதட்டம் ஆனதை பார்த்தவன் லேசாக புன்னகை செய்தான் .
எதுக்கு நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகுறிங்க பூஜா என்று அவன் சொல்ல பூஜா அவனை பார்த்தாள்.
ம்ம்ம் நான் இங்க உக்காரவா என்று கேட்டான் அவன் .எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று உட்கார சொன்னாள்.
அப்புறம் பூஜா என்ன துணி வாங்க வந்திங்களா என்று அவன் கேட்க பூஜா அவள் செருப்பு வாங்கதான் முக்கியமாக நினைத்து வந்திருந்தால் இல்லை செருப்பு வாங்க வந்தேன் என்று சட்டென்று யோசிக்காமல் சொன்னாள் .அவன் முகம் மாறிவிட்டது அவள் தன்னைதான் மறைமுகமாக திட்டுகிறாள் என்று நினைத்து கொண்டான் அவன் .அவன் முகம் மாறியதை பார்த்த பூஜா அவன் தன்னை தவறாக புரிந்து கொண்டான் என்று புரிந்து கொண்டாள்.
ஏங்க சாரி நான் உண்மையாவே செருப்பு வாங்கதான் வந்தேன் .உண்மையா என்று பதட்டம் நிறைந்த குரலில் சொன்னாள் பூஜா .அவளை பார்த்து புன்னகை செய்தவன் பேச ஆரம்பித்தான் .
ம்ம்ம் .சரி .ஆமா என்னோட பேர் என்னன்னு தெரியுமா என்று கேட்டான் அவன் பூஜா இல்லை என்பது போல இடம் வலமாக தலை அசைத்தாள்.
என்னோட பேர் ஜெய் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான் ஜெய்
ஜெய் உங்க பேர் நல்ல இருக்கு என்று சொன்னாள் பூஜா.ம்ம்ம் நீங்க இங்க எதுக்கு வந்திங்க என்று கேட்டாள் பூஜா .
ம்ம்ம் சும்மா அம்மாக்கு சாரி எடுக்க வந்தேன் ஆனா என்ன சாரி எடுக்கன்னு தெரியல அதான் சாப்பிட்டுட்டு போயி எடுக்கலாம்னு சாப்பிட வந்துட்டேன் என்று சொன்னான் ஜெய்.அப்போது வைட்டர் அவர்கள் அருகில் வர பூஜா முதலில் சாப்பிட ஆர்டர் செய்யலாம் என்று சொன்னாள். பிறகு பூஜா தனக்கு பிரியாணி ஆர்டர் செய்ய அவன் மட்டன் பிரியாணி ,பரோட்டா,பாயா .சிக்கன் பிரை எல்லாம் ஆர்டர் செய்தான் .பூஜா அவனைதான் பார்த்தாள்.
இவ்வளவையும் தனியாக சாப்பிட்டு விடுவானா என்பது போல .
ம்ம்ம் அப்புறம் உங்க வேலை எல்லாம் எப்படி போகுது .இங்க எங்க இருக்கீங்க என்று கேட்டான் ஜெய் .
கிட்டதான் இங்க தேனாம்பேட்டைல ஒரு ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன் .நீங்க என்று கேட்டாள் பூஜா .
ம்ம்ம் நான் அடையார் பக்கம் என்று சொன்னான் ஜெய் .அவர்கள் ஆர்ட்ர் செய்த எல்லாம் வர பூஜா அவள் பாட்டுக்கு சாப்பிட ஆரம்பித்தாள்.
பூஜா இந்தாங்க இவ்ளோவும் நான் தனியா சாப்பிட வாங்கல .நீங்களும் எடுத்துகோங்க என்று சொன்னான் ஜெய் .
இல்லைங்க எனக்கு வேணாம் நீங்க சாப்பிடுங்க .எனக்கு இந்த பிரியாணி முழுசா சாப்பிட்டு முடிச்சா அதுவே போதும்.நான் ஒரே நேரத்துல அதிகமா சாப்பிட மாட்டேன் நீங்க சாப்பிடுங்க என்று சொன்னாள் பூஜா ஜெய் அதற்கு மேலே கேட்டு எந்த பிரச்சனையும் ஏற்படுத்த விரும்பவில்லை .பூஜா சாப்பிட்டுவிட்டாள். எல்லாவற்றையும் அரைகுறையாக சாப்பிடவன் அவனும் அவளோடு எழுந்திருத்து விட்டான் .பிறகு அவரவர் சாப்பிடதற்கு காசு கொடுத்துவிட்டு இருவரும் ஒன்றாக வெளியே வந்தார்கள்.அப்போது அவளை நோக்கி ஒருவர் வந்து பசிக்குது சாப்பிடவேண்டும் என்று கேட்க பூஜா 100 ரூபாய் கொடுத்தாள். அவரும் அதை வாங்கி கொண்டு மகிழ்ச்சியாக சென்றார்.
ம்ம்ம் ஏங்க இந்த மாதிரி காசு கேக்குறவங்களுக்கு எல்லாம் காசு குடுத்து ஊக்க படுத்தாதீங்க .என்று தத்துவம் சொன்னது போல சொன்னான் ஜெய் .
ம்ம்ம் இப்போ நான் நினைச்சா 500 குடுக்கலாம் ஆனா அது எனக்கு கொஞ்சம் கஷ்டம்.அந்த 100 வச்சி இப்போ எனக்கு எந்த தேவையும் இல்ல .இப்போ அவர் 100 ரூபாய் கிடைச்ச உடனே அதை என்ன பண்ணுவாருன்னு எனக்கு தெரியாது ஆனா அவர் பசி தீர சாப்பிட்டா எனக்கு சந்தோசம்தான்.பசிக்குதுன்னு காய் நீட்டி கை கேக்குறவங்களுக்கு உண்மையா பசிக்குமான்னு ஆராய்ச்சி பண்றது ரொம்ப தப்புங்க .நீங்க சாப்பிடாம வேஸ்ட் பண்ண காசை விட இந்த. 100 ரூபா கம்மிதான் .நம்ம ருசிக்கு சாப்பிடறதால எல்லாரும் அப்டி இருக்காங்கன்னு யோசிக்க கூடாது இங்க பசிக்கு சாப்பிடரவங்கதான் அதிகம்.அதனாலதான் நான் கொடுத்தேன் .அச்சோ உங்ககிட்ட நான் தேவை இல்லாம பேசுறேன் .தப்பா நினைக்க வேண்டாம் என்று அவள் சொல்ல அவலை பார்த்து புன்னகை செய்தான் ஜெய் .
நீங்க சொன்ன மாதிரி நான் யோசிக்கலங்க .உண்மைதான் ஒரு நாளைக்கு எவ்ளோ வீண் செலவு செய்யுறோம் .ஆன யாராவது தேவைன்னு 10 ரூபா கேட்டா கணக்கு பாப்போம் .இனி நான் மாத்திக்கிறேன் .என்று சொன்னான் ஜெய் .அவனை பார்த்து புன்னகை செய்தவள் தான் கிளம்புவதாக சொல்லிவிட்டு பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.ஜெய்க்கு அவளிடம் நம்பர் கேட்க வேண்டும் என்பது போல இருந்தது ஆனால் இப்போது அவளிடம் நம்பர் கேட்டு தவறாக நினைத்து கொண்டால் என்ன செய்வது என்று யோசித்து நம்பர் கேட்காமல் விட்டுவிட்டான்.
அவளும் சென்றுவிட இவனும் சென்று விட்டான்.இருவரும் இருவேறு திசையில் சென்று விட இங்கே பிரசாத் கடையில் நின்று கொண்டு இருந்தான் .பிரசாத் கடை வைத்து இருந்தான் .அவனுடைய அப்பாவுக்கும் அதுதான் தொழில் இவனுக்கும் இதுதான் பிடித்திருந்தது சம்பளம் வாங்க கஷ்டப்பட்டு வேலை செய்வதை விட ஒரு கடைக்கு முதலாளியாக இருப்பது அவனுக்கு பிடித்திருந்தது .இது பலர் வேலை செய்யும் பெரிய கடையில்லை இருந்தாலும் 2 பேர் வேலைக்கு இருந்தார்கள்.முன்பு எல்லாம் அவனும் அமிர்தாவும்தான் பார்த்து கொண்டார்கள் .அப்போது நிறைய கஷ்டம் இருந்தது அதனால் அப்படி வேலை செய்தார்கள் .ஆனால் ஓரளவுக்கு சமாளிக்க முடிந்த பிறகு அமிர்தா அவளுக்கு பிடித்தபடி ஒப்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டாள். இப்போது இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதால் கொஞ்சம் ஓய்வில் இருக்கிறாள் .அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் ஒப்பனை செய்து கொடுப்பாள் .ஒரு அழகு நிலையம் ஆரம்பிகவேண்டும் என்பது பிரசாத் மற்றும் அமிர்தாவின் கனவு .சாயங்காலம் நேரம் எல்லோருக்கும் டீ கொண்டு வந்து கொண்டிருந்தாள் அமிர்தா .
அப்போது கடைக்கு கொஞ்சம் தூரத்தில் ஒரு பெண் பேசி கொண்டே நடந்து கொண்டு இருந்தாள் .
ஹே ஆமா செம்ம கியூட் தெரியுமா அந்த பையன் .இதோட நான் நாலாவது முறை அவனை பாக்க போய்ட்டேன் .இது 5 வது முறை .புதுசா குடி வந்த ஏரியா எப்டி இருக்கும்ன்னு நினைச்சேன் .ஆனா அந்த பையன பாத்த உடனே இந்த ஏரியாக்கு ஏன் இவ்ளோ நாள் வரல தோணுது என்று அந்த பெண் சொல்லி கொண்டே நடக்க அதை கேட்டு லேசாக புன்னகை செய்தவள் வேகமாக கடைக்கு சென்றாள்.கடைக்கு சென்று எல்லோருக்கும் டி கொடுத்தவள் தான் வந்து எல்லா பொருளையும்
எடுத்து கொடுத்து கொண்டிருக்க அப்போது அந்த வந்தாள் அமிர்தா பார்த்த பெண் . அமிர்தா அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்க அந்த பெண் வேண்டும் என்றே பிரசாத் பக்கம் கை காட்டி அவன் அருகில் இருக்கும் பிஸ்கட் வேண்டும் என்றாள்.அவள் தன்னுடைய கணவனை பார்க்கும் பார்வையை பார்த்து அமிர்தாக்கு கோபம் கோபமாக வந்தது .இருந்தாலும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டவள் கோபத்தை மறைத்து பேச ஆரம்பித்தாள்.
அவ்ளோ தூரம் ஏன் பாக்குறிங்க இங்கதான் பிஸ்கட் இருக்குது என்று எடுத்து கொடுத்தாள் .பிறகு அவள் மீண்டும் அந்த பக்கம் இருந்த கோதுமை மாவு வேண்டும் என்று கேட்க அமிர்தா அதை எடுக்க போக அதற்குள் பிரசாத் அதை எடுத்து வந்தான் .அந்த பெண் அவனை பார்த்து புன்னகை செய்தபடி வாங்க அதை பார்த்த அமிர்தாக்கு லேசாக பற்றி கொண்டு வந்தது .
வேற என்னம்மா வேணும் என்று கடுப்பை மறைத்து கொண்டு கேட்டாள் அமிர்தா .
அவ்ளோதான் அக்கா போதும் வேற ஏதாவது வாங்க சொன்னா வந்து வாங்கிக்கிறேன் என்று சொன்னாள் அந்த பெண் .என்ன மறுபடியும் வருவியா என்று மனதுக்குள் குமிறினாள் அமிர்தா .காசை கொடுத்தவள் சென்ற சில நொடியில் திரும்பி வந்து ஜூஸ் பாட்டில் கேட்க பிரசாத் எடுத்து கொடுக்க போக இதை இப்படியே விட்டால் சரி வராது என்று நினைத்தவள் என்னங்க நம்ம பாப்பாக்கு டயபர் தீந்து போச்சு கொஞ்சம் எடுத்து தாங்க என்று சொன்னனாள் .பிரசாத்க்கு குழப்பம் ஆனது ஏன் என்றால் அவர்கள் வீட்டில் எப்போதும் குழந்தைக்கு தேவையான பொருள் தீர்ந்து போக விட மாட்டார்கள் .நேற்றுத்தான் டைபர் எல்லாம் இருக்குது என்று சொன்னாள். இன்று ஏன் கேட்கிறாள் என்று தோன்றினாலும் அதை பற்றி எல்லாம் அவளிடம் கேட்கலாம் சரி அம்மு என்று சொன்னவன் அதை எடுத்துப் கொண்டு அவளிடம் கொடுத்து விட்டு அந்த பெண் கேட்ட மாதிரி ஜூஸ்
எடுத்து கொடுத்தான் .
எல்லாம் வாங்கிட்டயான்னு பாதுகோம்மா அப்புறம் மறுபடியும் நடக்க வேண்டியதா இருக்கும் என்று பிரசாத் சொல்ல அவங்க தேவையானது எல்லாம் வாங்குன மாதிரிதான் இருக்கு .இனி அடிக்கடி வர மாட்டாங்கனு நினைக்கிறேன் என்று சிரித்த படி சொன்னாள் அமிர்தா.
அவள் உதடுகள் புன்னகை செய்த போதும் அவள் பாரவை அவள் எந்த மாதிரி மனநிலையில் இருக்கிறாள் என்பதை பிரசாத்க்கு உணர்த்த அந்த பெண்ணையும் தன்னுடைய மனைவியையும் பார்த்தவன் தன்னுடைய மனைவியின் நிலையை புரணமது கொண்டான்.
அந்த பெண் சென்று விட .அமிர்தா கிளம்ப தயார் ஆனாள்.
அம்மு அந்த பொண்ணு பாவம் அம்மு என்னதான் இருந்தாலும் நீ ஒரே நேரத்துல கல்யாணமாகி குழந்தை இருக்குன்னு சொல்லி இருக்க வேண்டாம் என்று சொல்ல .அவனை முறைத்தவள் வீட்டுக்கு வாங்க வசிக்கிறேன் என்று கண்ணால் எச்சரித்து விட்டு சென்று விட்டாள் .உண்மையில் அமிர்தா இதுபோல கோபம் கொள்வது அவனுக்கு பிடிக்கும் தன்னையும் ஒரு ஜீவன் இப்படி நேசிக்கிறதே என்று மகிழ்ச்சிதான் அடைவான் .ஆனால் அதே நேரம் இன்று எச்சரிக்கை கொஞ்சம் பலமாக இருப்பதை பார்த்தவனுக்கு கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது.
அவன் தன்னை இன்று எதிர்கொள்ள வேண்டிய போராட்டத்துக்கு தயார் படுத்தி கொண்டான் .இரவு வழக்கம் போல எல்லாம் சாப்பிட்டு முடித்து விட்டு படுக்க வந்துவிட அமிர்தா எப்போதும் போல குழந்தை உறங்க வைத்துவிட்டு தானும் படுத்து கொண்டாள்.சஞ்சனா பாட்டி தாத்தா உடன் தூங்குவதாக சொல்லி அங்கே தூங்க சென்று விட்டாள் .பிரசாத் அமிர்தா ஏதாவது அந்த பெண்ணை பேசுவாள் என்று எதிர்பார்த்தான் ஆனால் அவள் ஒரு வார்த்தை கூட அந்த பெண்ணை பற்றி பேசவில்லை .
அம்மு என்றான் பிரசாத்
என்ன என்று கேட்டாள் அமிர்தா
இல்ல என்று இழுத்தான் பிரசாத்
இல்லையா அப்போ போயி தூங்குங்க என்றாள் அமிர்தா
அம்மு உனக்கு என்மேல கொஞ்சம் கூட கோபம் இல்லையா என்று கேட்டான் பிரசாத் .
எதுக்கு கோபபடணும். என்று கேட்டாள் அமிர்தா .
இல்ல அந்த பொண்ணு என்று இழுக்க அமிர்தா அவனை பார்த்தாள்.
இங்க பாருங்க அந்த பொண்ணு விஷயத்துல கொஞ்சம் கோப பட்டேன்.ஆன அது எதுக்காகன்னா அந்த பொண்ண பாத்தா இப்போதான் காலேஜ் போற மாதரி இருக்கு .சின்ன பொண்ணு அவ அப்படித்தான் பண்ணுவா நீங்கதான் உங்களுக்கு ஏற்கனவே ஒரு சொந்தக்காரி இருக்கானு புரிய வைக்கணும் .என்று அமிர்தா சொல்ல அவளை பார்த்தான்
நான் என்ன சொல்ல.அந்த பொண்ணுகிட்ட போயி . எம்மா என்ன பாக்காத எனக்கு பொண்டாட்டி இருக்கான்னு சொல்ல சொல்றியா என்று கேட்டான் பிரசாத் .
ம்ம்ம் நான் என்ன இவரு என்னோட புருசன்னா சொன்ன .நான் சொன்ன மாதிரி நீ ஏதாவது மறைமுகமா சொல்லி இருக்கணும். இல்ல சட்டுன்னு எனக்கு போன் பண்ணி ஹெலோ பொண்டாட்டின்னு சொல்லி இருக்கணும் .சின்ன பொண்ணு ஆசை வளத்துகிட்டா என்ன பண்ண முடியும் இனி ஒழுங்கா நடந்துக்கோங்க. என்று மிகவும் சாதரணமாக சொன்னவள் உறங்க போக அவள் முன்பு வேகமாக போய் நின்றான் பிரசாத்
அம்மு என்ன அம்மு இவ்ளோ சாதாரணமா சொல்லிட்ட .கடையில இருந்து கோபமா கிழம்புன இப்போ இவ்ளோ சாதாரணமா சொல்ற .என்று கேட்டான் பிரசாத் .
வேற என்ன என்ன பண்ண சொல்றிங்க .அப்போ கொஞ்சம் கோபம் வந்துச்சு இருந்தாலும் நீங்க பெரிய தப்பு பண்ணலேயே அதான் எனக்கும் இப்போ கோபம் இல்ல.என்று சாதாரணமாக சொன்னாள் அமிர்தா
என்ன அம்மு இப்டி சொல்ற .கல்யாணம் ஆன புதுசுல ஏதாவது ஒரு பொண்ணு என்கிட்ட வந்து பேசுனாலே அவ்ளோ கோப படுவ இப்போ இவ்ளோ சாதாரணமா சொல்ற.அப்போ நமக்குள்ள சண்டை இல்ல சமாதானம் இல்லை அதனால ரொமான்ஸ் கூட இல்ல அப்படித்தான என்று பிரசாத் கேட்க ஆமாம் என்பதுபோல தலை அசைத்தாள்.அமிர்தா
கல்யாணம் ஆன புதுசுல எனக்கு நீங்க புது வீடு மாதிரி .நம்ம புதுவீட்ட யாரும் தொட விடமாட்டோம் ஏதாவது கரை பண்ணிருவங்களோன்னு ஒரு பயம் இருந்துட்டே இருக்கும் ஆனா பல வருஷம் ஆனா எல்லாம் பழகிடும் அப்புறம் எதுக்கு ஓவர் டென்ஷன் ஆகணும் எல்லாத்தையும் சாதாரணமா கடந்து போக வேண்டியது தானே .என்று சொன்னாள் அமிர்தா
அம்மு நீ எப்பொழுதுதுல இருந்து இப்டி யோசிக்க ஆரம்பிச்ச .இது தெரியாம நான் உன்கிட்ட எவ்ளோ மறைச்சிட்டேன் தெரியுமா .போன வாரம் கூட ஒரு பொண்ணு என்கிட்ட வந்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்கள் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிச்சு தெரியுமா.நான் கல்யாணம் ஆச்சுன்னு சொன்ன அப்போ கூட பிரண்ட்டா பேசலாம்னு சொல்லிச்சு .இதெல்லாம் சொன்னா நீ கோப படுவேன்னு நினைச்சேன் ஆன பரவாயில்லை நீதானம் இப்போ இந்த அளவுக்கு முன்னேறிட்விட்டரிட்விட்டரிட்டியே அப்புறம் என்ன அந்த பொண்ண பாத்தா நம்பர் வாங்க வேண்டியதுதா என்று சொல்ல அமிர்தாக்கு கோபம் வந்தது .
மூக்கை உடைச்சிருவேன் .உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டயே இப்டி எல்லாம் பேசுவிங்க .உங்களை அவ்ளோதான் அன்று அமிர்தா சொல்ல அவளை பார்த்து புன்னகை செய்தான் பிரசாத் .
ஆமா ஏதோ புது வீடு பழைய வீடுன்னு டயலொக் எல்லாம் சொன்னிங்க இப்பப்போவும் நான் பழைய வீடு தான என்று கேட்டான் பிரசாத் .
ம்ம்ம் புது வீடோ பழைய வீடோ நீங்க என்னோட சொந்த வீடு இதுல மூணாவது மனுசங்க உரிமை கொண்டாட கூடாது. அப்டி வந்தா அவ்ளோதான் என்று அமிர்தா சொல்ல அவளை பார்த்து புன்னகை செய்தவன் அவளை அணைத்து கொண்டான் .பிறகு அவளின் முகத்தை தன்னை பார்க்கும் படி செய்தவன் பேச ஆரம்பித்தான் .
அம்மு நான் அப்டி எல்லாம் பண்ணுவேன்னு நீ நினைக்குரியா என்று பிரசாத் கேட்க அவனை பார்த்தவள் பேச ஆரம்பித்தாள் .
நீ அதுக்கு சரி பட்டு வரமாட்டேன்னு எனக்கு தெரியம்.இருந்தாலும் நீ சட்டுனு இன்னொரு பொண்ணுன்னு சொன்ன உடனே கொஞ்சம் கோபம் வந்துடசுச்சு .என்று அமிர்தா சொல்ல அவளை பார்த்து புன்னகை செய்தான்.
அப்போ சமாதானம் பண்ணவா என்று கேட்டான் பிரசாத் .
எல்லாம் அப்டியே அனுமதி கேட்டுதான் பண்ண பாரு என்று சொன்னவள் அவனை அனைத்து கொள்ளா அவனும் அவளை அனைத்து கொண்டான் .
.......
இங்கே தேவா அழுது கொண்டிருந்தாள் .அவளுக்கு அழுகை எல்லாம் பழக்கபட்ட ஒன்றுதான் .காலில் வேறு சூடு வைத்திருந்ததால் அது வேறு அவளுக்கு இன்னும் வேதனையை கொடுத்தது .இன்னும் ஒரு மாதத்தில் தன்னுடைய வாழ்க்கை மொத்தமாக மாற போவதை நினைத்து வேதனை அடைந்தவள் அந்த நொடி வேண்டியது எல்லாம் வாழ்க்கை முடிந்து விடாதா என்றுதான் .தேவா இவ்வளவு பயம் கொள்வதும் நல்லதுதான் இல்லை என்றால் என்றோ வாழ்வை முடித்து கொண்டிருப்பாள்.மரணத்தை பற்றிய பயம்தான் அவள் வாழ காரணம் .அவள் அப்படி தன்னுடைய வாழ்க்கையை நினைத்து அழுது கொண்டிருக்க மிகவும் மகிழ்ச்சியாக டிவி பார்த்து கொண்டு இருந்தார் புவனா .
சரி நான் வர்றேன் .இன்னும் 1 மாசம் இருக்குல்ல கண்டிப்பா வர்றேன் என்று தன்னுடைய நண்பனுக்கு வாக்கு கொடுத்தான் சூர்யா .
நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள்.அர்த்தங்கள் புரிந்தாலும் புரியவில்லை என்றாலும் வாழ்க்கை அடுத்த கட்டஹே நோக்கி நகர்ந்து சென்றே தீரும் .
அடுத்த பதிவில் சந்திப்போம் மக்களே .அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது Abirami G.N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro