
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -49
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊மார்பின் மேலே உன்னை சாய்த்து
கதைகள் சொன்ன தருணங்கள்
வார்த்தை எல்லாம் ஓய்வு கொள்ள
மௌனம் பேசும் பொழுதுகள்
விண்மீன் வெளிச்சத்தில் உன்னோடு
எல்லை மீறிய காலம்
எண்ணும் போதே ஏன் இந்த
நெஞ்சம் போடுது தாளம்
எங்கே நீயோ அங்கே நானும்
வேண்டும் என்று தோன்றுதே
வா வா அருகே வா வா கனவே
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
தேவாவை சூர்யா அணைப்பிலிருந்து விலக்கவே இல்லை தேவாவும் விலக விருப்பம் கொல்லவில்லை. கொஞ்சம் நேரம் சென்ற பிறகு அவளைவிட்டு பிரிந்து நின்ற சூர்யா..
"ஹே தேவா நீ என்ன இப்படியே நின்னுட்டு இருக்க உனக்கு பசிக்கலயா", என்று கேட்டான். தேவா பசிக்கிறது என்று சைகையால் சொன்னாள் .
"பசியை வச்சிட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்க.இப்போ நீ நம்ம பாப்பாக்கும் சேர்த்து சாப்பிடணும்", என்று சொன்னவன் அவளை தன்னுடன் ஹாலுக்கு அழைத்து சென்று அமர வைத்துவிட்டு சாப்பாடு எடுத்து வந்தான். சூர்யா சமையல் நன்றாகதான் இருக்கும்.அதுவும் தேவாக்கு வேறு பசி அதிகம் எடுத்தது அதனால் அவள் ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
சூர்யா அவளையே பார்த்து கொண்டிருந்தான். ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாள் விறைப்பாக தன்னுடைய வாழ்வில் தான் மட்டும் இருந்தால் போதும் வேறு யாரும் வேண்டாம் என்று இருந்த சூர்யாவின் அனைத்துமாகி விட்டாள் தேவா.
இப்போது அவர்கள் வாழ்க்கையிலும் குழந்தை ஒன்று வர போகிறது. தேவாவும் அவளுக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்று ஒரு வருடத்துக்கு முன்பு நினைத்திருக்க மாட்டாள் ஆனால் இப்போது அவளுக்கும் வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக செல்கிறது.
வாழ்க்கை எப்போதும் அப்படித்தான் இன்பத்தையும் துன்பத்தையும் மாற்றி மாற்றி கொடுக்கும் நாம்தான் அதை சரியாக கடந்து செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
தேவா சிரித்தபடி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் சட்டென்று அவளுடைய முகம் மாறி சோகம் ஆனது..
"தேவா என்ன ஆச்சு?", என்று கேட்டான் சூர்யா.
தேவா கிருஷ்ணாவை நினைத்து வருத்தம் கொள்வதாக சைகை மூலம் சொன்னாள் அதை கேட்டு சிரித்த சூர்யா ...
"என்ன உன் சித்தி சொன்ன மாதிரி நீ உனக்குன்னு ஒரு குழந்தை வந்தா அவனை கவனிக்க மாட்டோமோன்னு நினைக்கிறியா?", என்று கேட்டான் சூர்யா.
அதைக்கேட்ட தேவா ஆமாம் என்பது போல தலை அசைக்க ..
"தேவா இங்க பாரு நீயே நினைச்சாலும் உன்னால கிருஷ்ணாவை கஷ்ட படுத்த முடியாது. அவன் இன்னைக்கும் என்னைக்கும் நம்ம பையன் மாதிரிதான்", என்று சொன்னான் சூர்யா.
தேவா சரி என்று தலை அசைத்தாள் இருந்தாலும் அவள் மனதுக்குள் கிருஷ்ணா இந்த விசயத்தை கேட்டு எப்படி ரியாக்ட் செய்ய போகிறான் என்ற கேள்வி எழுந்தது.இருந்தாலும் அதை பெரிதாக வெளியே காண்பித்து கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.கொஞ்சம் நேரத்துக்கு பிறகு சூர்யாவும் தேவாவும் ஹாஸ்பிடல் சென்றார்கள் ..டாக்டர் செக்கப் எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தார்கள். டாக்டர் இவர்கள் எதிர்பார்த்து சென்ற நல்ல செய்தியைதான் சொன்னார்கள் சூர்யா அந்த செய்தியை கேட்டதும் சூர்யா அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தான்...டாக்டரை பார்த்து நன்றி சொன்னவன் தேவாவின் கையை பிடித்து அழைத்து வந்தான் .வெளியே வரும்போது ஒரு குழந்தை அவனை நோக்கி ஓடி வந்தது .
சூர்யாவால் முன்பு காப்பாற்றப்பட்ட பெண் குழந்தைதான் இது..சூர்யா அந்த குழந்தையை தூக்கியவன் அவன் அம்மா அப்பா எங்கே என்று பார்க்க அவனை பார்த்தபடி வந்தார்கள் இருவரும்..
"தம்பி நீங்க எப்படி இருக்கீங்க?",என்று கேட்டார் அந்த பிள்ளையின் அப்பா
"நான் நல்லா இருக்கேன்.குழந்தைக்கு என்ன?", என்று கேட்டான்.அதைகேட்ட சூர்யா குழந்தையின் அம்மா..
"இல்ல லேசா காய்ச்சல் அதான் வந்தோம்",என்றவர் பார்வை அருகில் இருந்த தேவா பக்கம் விழுந்தது..
"இவங்க யாரு சம்சாரமா என்று கேட்டார்", அந்த பெண்மணி.தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.
"உங்க பேர் என்ன?",என்று கேட்டார் தேவாவிடம் அந்த பெண்மணி அதற்கு தேவா மௌனத்தை பதிலாக தர ..
"சூர்யாவோ என் wifeக்கு பேச வராது", என்ற உண்மையை சொன்னான் அதை கேட்ட பெற்றோர்கள் இருவரும் ஒரு நொடி அமைதியாகிவிட்டு பிறகு பேச்சை மாற்றும் நோக்கில் ..
"ஆமா தம்பி என்ன விசயம் wifeக்கு உடம்பு சரி இல்லையா?", என்று கேட்டார் அந்த பெண்.அதைகேட்ட சூர்யா..
"இல்லம்மா என் wife ப்ரெக்னன்ட்டா இருக்காங்க அதான் செக்கப்க்கு வந்துருக்கோம்", என்றான்.
"ரொம்ப சந்தோசம் தம்பி எங்க பிள்ளை உயிரோட இருக்கவே நீதான் காரணம் .உன் பிள்ளைக்கு என்ன நல்ல படியா பிறக்கும் .நீயும் உன் பொண்டாட்டியும் ரொம்ப சந்தோசமா இருப்பிங்க ",என்று சொன்னார் .அதை கேட்டதும் தேவாக்கும் சூர்யாக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..
கொஞ்சம் நேரம் அவர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள் .தேவா கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சைகை செய்ய சூர்யா அவளை அருகில் இருந்த சிவன் கோவிலுக்கு அழைத்து சென்றான் ..தேவா கடவுளிடம் தன்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு சந்தோசத்தை கொடுத்ததற்கு நன்றி சொன்னார்.சூர்யா தேவா கிடைத்ததற்காக நன்றி சொன்னான்.இறைவனிடம் மனதில் உள்ளதை எல்லாம் பேசிவிட்டு கண்ணை திறந்து பார்க்கும் போது அவன் கண் எதிரே அவனுடைய அம்மா தோன்றினார்.
யாருடைய கல்யாணத்திற்காகவோ வந்தேன் என்று சத்தமாக போனில் பேசி கொண்டு இருந்தார்.சூர்யா எப்போது அவரை பார்த்தாலும் அவர் ஏன் தங்களைவிட்டு சென்றார் என்று நினைத்து வருத்தம் கொள்வான் ஆனால் இப்போது அவரை ஒரு பொருட்டாக கூட அவன் எண்ணவில்லை .அவன் வாழ்வில் யாரை பார்த்தால் உடைந்து போவானோ அவரையே சுலமாக கடந்து வர வைத்துவிட்டது இந்த காதலும் காலமும் .சும்மாவா சொன்னார்கள் கடந்து போவதுதான் வாழ்க்கை என்று ..
தேவாவின் கையை பிடித்துகொண்டு வீட்டுக்கு வந்தான்..அவன் வீட்டுக்கு வரும்போது சரியாக சாயங்காலமாகி இருந்தது..சூர்யாவும் தேவாவும் வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி சொல்ல என்று யோசித்து கொண்டு இருந்தார்கள்..அப்போது அமிர்தாவும் பிரசாத்தும் குழந்தையுடன் வந்தார்கள்..
"டேய் நல்லவனே நீ பாட்டுக்கு இவளை பீச் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்ட இவ எங்களை உக்கார விட மாடேங்குறா.இவகிட்ட சொல்லு நம்ம இன்னைக்கு பீச்க்கு போகல வேற என்னைக்காவது போலாம்ன்னு", என்று சொன்னான் பிரசாத்..
"நாங்க இன்னைக்கு பீச்க்கு கண்டிப்பா போவோம் ஏனா நாங்க ரொம்ப சந்தோசமா இருக்கோம்",என்று சொன்னான் சூர்யா.அதைகேட்ட அமிர்தா தேவாவை பார்க்க தேவா வெட்க புன்னகை செய்தாள்.
"அமிர்தாக்கு டாக்டர் கன்பார்ம் செய்து விட்டார்கள்", என்று புரிந்தது .அவள் ஓடி சென்று தேவாவை இன்னொரு முறை அணைத்துகொள்ள பிரசாத் அவளை விநோதமாக பார்த்தான்.
"ஏன் பாப்பா உன் அம்மாக்கு என்ன ஆச்சு ஏன் இவ்ளோ சந்தோஷ படுறா", என்று கேட்டான் பிரசாத்.அதைகேட்ட சஞ்சனா தனக்கும் தெரியவில்லை என்று குழம்பி போனாள் .தன் கையில் இருந்த அகரனை கீழே உட்கார வைத்த பிரசாத் அமிர்தாவை பார்த்து .
"இப்போ இங்க எல்லாரும் என்ன நடக்குதுன்னு சொல்றிங்களா", என்று கேட்டான் பிரசாத்.
"அது ஒன்னுமில்லடா நீ இன்னொருமுறை மாமா ஆகிட்ட", என்றான் சூர்யா அதைகேட்டதும் பிரசாத்தும் "ஓஹோ அப்படியா..நான் கூட என்னவோ", என்று சொல்லிக்கொண்டே சூர்யா சொன்னதை இன்னும் ஒருமுறை நினைத்து பார்த்தான் அப்போதுதான் அவனுக்கு சூர்யா சொன்னதே புரிந்தது .சூர்யாவை அவன் பார்க்க சூர்யா அவனை பார்த்து சிரித்துகொண்டு இருந்தான்.
"டேய் மச்சான்..உண்மையாவா", என்று கேட்டான்..
"நான் ஏன் பொய் சொல்ல போறேன்", என்று கேட்டான்.அதை கேட்ட உடன் பிரசாத் முகம் பிரகாசம் ஆனது .ஏனோ அவன் கண்ணிலிருந்து கண்ணீரும் வந்தது .வேகமாக வந்து சூர்யாவை அணைத்து கொண்டவன் .
"வாழ்த்துகள்டா மச்சான் உன் வாழ்க்கையில இன்னும் நிறைய சந்தோசம் வரட்டும்..நீ சஞ்சனாவை எப்படி பாத்துகிட்டயோ நானும் அந்த குழந்தையை அப்படி எல்லாம் பாத்துப்பேன்", என்று சொல்லி சிரித்தான்.சஞ்சனா எல்லாரையும் புரியாமல் பார்த்தவள் .
"எனக்கு எப்போவோ தங்கச்சி பாப்பா வர போறான்னு தெரியுமே",என்று சொல்லி சிரித்தாள்.அதை கேட்டதும் பிரசாத்க்கு இதைத்தான் அப்போது மறைத்தார்கள் என்று புரிந்தது..கொஞ்சம் நேரம் இவர்கள் சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்..
பிரசாத் சூர்யாவை தேவா உடன் நிம்மதியாக இருக்க சொல்லிவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டான்.5 மணி அளவில் செல்வம் மற்றும் கிருஷ்ணா இருவரும் வந்து சேர்ந்தார்கள்..கிருஷ்ணா வந்ததும் நேராக தன்னுடைய அறைக்கு சென்றான்.தேவாக்கு அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அவள் முகம் லேசாக வாடியது.அதை கவனித்த செல்வம் .
"தேவா நீ ஒன்னும் கவலை படாதம்மா அவன் சாதாரணமாதான் உள்ள போனான் ",என்றார் .தேவா சரி என்று தலை அசைத்தவள். சூர்யாவை பார்த்தாள் சூர்யா எல்லாம் சரியாகும் என்றான். தேவா பெருமூச்சு விட்டவள் நேராக கிருஷ்ணா இருக்கும் அறையை நோக்கி சென்றாள்.
சூர்யாவும் பின்னால் சென்றான் கிருஷ்ணா அமைதியாக கட்டிலில் உட்கார்ந்து இருந்தான்,அவனை பார்த்த சூர்யா ..
"கிருஷ்ணா என்ன வந்த உடனே அண்ணிகிட்ட பேசுவ இப்போ என்ன அமைதியா உக்காந்துட்ட உனக்கும் அண்ணிக்கும் எதாவது பிரச்னையா", என்று கேட்டான்,அதைகேட்ட கிருஷ்ணா.
"அண்ணி மேல எனக்கு என்ன கோவம் நான் சாதாரணமாதான் இருக்கேன்", என்றான்.
"அப்படியா நீ அதை என் முகத்தை பார்த்து சொல்லு ",என்று சொன்னான் சூர்யா.கிருஷ்ணா தலை நிமிரவே இல்லை .
"கண்ண பார்த்து பேசு", என்று சொன்னான் சூர்யா அவன் குரலில் கண்டிப்பு இருந்தது அதைகேட்டதும் கிருஷ்ணா சற்று அதிர்ந்தான் அதை உணர்ந்த தேவா ..
சூர்யாவை அமைதியாக இருக்கும்படி சைகையால் சொன்னாள்..
"நீ சும்மா இரு தேவா சில நேரத்துல இவன் இப்படி பேசுனாதான் புரியும்.யாரோ வந்து சொன்ன உடனே இவன் ஏன் உன்ன தப்பா நினைக்கிறான்.காலையில நல்லாதானே இருந்தான்.இப்போ என்னவாம்.டேய் ஸ்கூல்ல யாராவது எதாவது சொன்னாங்களா?", என்று கேட்டான்.
அதைகேட்ட கிருஷ்ணா ."ஆமா என்கிட்ட ஒரு பையன் வந்து நான் ரொம்ப unlucky என்ன யாருக்கும் பிடிக்காம போயிடும்ன்னு சொன்னான். அதோட என்கூட இருக்கவங்களும் கண்டிப்பா கஷ்ட படுவாங்கன்னு சொன்னான் அதைகேட்ட உடனே எனக்கு ரொம்ப கஷ்டம் ஆகிடுச்சு .அண்ணியும் பாவம் அப்புறம் என்னால கஷ்டபட்டா என்ன பண்ண..அதான் நான் அமைதியாகிட்டேன்", என்றான்.
"சரி எத்தனை நாள் அமைதியா இருக்க போற?",என்று கேட்டான் சூர்யா.
"அண்ணி ஹாப்பியா இருக்குற வரைக்கும்", என்றான் கிருஷ்ணா .அப்போது சூர்யா ஏதோ சொல்ல வர அவளை தடுத்த தேவா .கிருஷ்ணா முகத்தை தன் பக்கம் திருப்பி அவன் நெற்றியில் முத்தம் கொடுத்தவள் ..
அவன் முடியை மெல்ல கோதிவிட்டு அவன்தான் அவளுக்கு முதல் பிள்ளை அதில் எப்போதும் மாற்றம் இல்லை என்று சொல்லாமல் சொன்னாள்.
"சாரி நான் உங்களை ஹர்ட் பண்ண நினைக்கல அண்ணி ""என்று சொன்னான் அவனை பார்த்து சிரித்தவள்..அவன் கையை எடுத்து தன்னுடைய வயிற்றில் வைத்தாள்.அதை பார்த்த கிருஷ்ணா சூர்யாவை பார்க்க..
"ம்ம்ம் நீ சித்தப்பா ஆகிட்டேன்னு உன் அண்ணி சொல்றா.அவளுக்கு என்ன சொல்ல போற", என்று கேட்டான் சூர்யா..அதை கேட்டதும் கிருஷ்ணா குழப்பம் அடைந்தான் பிறகுதான் அவனுக்கு புரிந்தது..
"ஹையா ஜாலி நம்ம வீட்டுக்கு குட்டி பாப்பா வர போகுது..நாங்க சேர்ந்து ஜாலியா இருக்க போறோம்", என்று கத்தினான் அவன் கத்திய சத்தம் கேட்டு அறைக்குள் வந்த செல்வம்..
"என்னப்பா ஆச்சு ",என்று கேட்டார்..சூர்யாவிற்கு இவ்வளவு நேரம் இல்லாமல் இப்போது ஏனோ வெட்கம் வந்தது..
"அது அப்பா ",என்று ஆரம்பித்தவன் தேவாவை பார்க்க தேவா அவனை பார்த்து சொல்லும்படி கண்களால் சைகை செய்தான்..
எப்போதும் இல்லாத வெட்கம் சூர்யாவிற்கு இப்போது வந்தது..
"அது வந்து அப்பா நாங்க ..அது ",என்று இழுத்தான்..
"என்ன ஆச்சு?", என்று கேட்டார் செல்வம்.அவருக்கு இவன் இப்படி பேச தயங்குவது வித்தியாமாக இருந்தது..
"இல்லப்பா உங்களை தாத்தான்னு கூப்பிட நம்ம வீட்டுக்கு கூடிய சீக்கிரம் குட்டி பாப்பா ஒன்னு வர போகுது", என்று சொன்னான்..அதை கேட்டதும் செல்வத்திற்கு அவ்வளவு மகிழ்சியாக இருந்தது. காலை நேரம் புவனா பேசியதை எல்லாம் நினைத்து அவர் அதிகம் வேதனை அடைந்து இருந்தார் தன்னுடைய பிள்ளைகளுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும் என்று வேண்டினார் அதன்படியே நடந்ததில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி..
தேவாவும் சூர்யாவும் சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள்..செல்வம் அவர்களை மகிழ்ச்சியாக வாழ்த்தினார்.அவர்கள் எல்லோரும் குடும்பமாக சந்தோசமாக பேசி சிரித்தனர்.
அதே நேரம் இங்கே பூஜாவும் ஜெய்யும் இருவரும் கடற்கரையில் உட்கார்ந்து இருந்தனர்..பூஜா ஜெய்யிடம் நடந்தது எல்லாவற்றையும் சொல்லி இருந்தாள் .அதை எல்லாம் கேட்ட ஜெய்..
"பூஜா நான் சொல்றேன்னு என்ன தப்பா நினைக்காத ..எங்க வீட்ல உங்க அம்மா பத்தி யாரோ தப்ப சொல்லி இருக்காங்க .அதனால ஒரு ரிலேடிவ் உன்ன மாதிரி ஒரு பொண்ணுக்கு கண்டிப்பா அவங்க அம்மா குணம்தான இருக்கும்..அதனால இந்த கல்யாணம் எல்லாம் செட் ஆகாதுன்னு சொல்லிட்டாங்க என்று சொன்னான்.அதைக்கேட்ட பூஜாவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.அவளுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை .அவனை அதிர்ச்சி விலகாமல் பார்த்து கொண்டிருந்தாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro