
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு - 47
❤️தடுமாறிப்போனேன் அன்றே...
உன்னைப்பார்த்த நேரம்...
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்...
நெஞ்சின் ஓரம்...
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே...
உள்ளம் கேள்விக்கேட்கும்...
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்...❤️
புவனாவை பார்த்த பூஜா அதிர்ந்து போனாள்."அம்மா என்னமா இது உன் உடம்புல இவ்வளவு தழும்பு இருக்கு? ", என்று கேட்டாள் .
"ம்ம்ம் இப்போ கேளு இதெல்லாம் .நான் இவ்ளோ படுறதுக்கும் காரணம் அந்த தேவாதான் அதனாலதான் எனக்கு அவமேல அவ்ளோ வெறுப்பு இருக்கு.ஆனா அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது .ஏனா அவ பொறுமைக்காரி.ஆது இதுன்னு சொல்லுவிங்க .அவ மட்டும் இல்லன்னா நான் இந்நேரம் எவ்ளோ சந்தோசமா இருந்துருப்பேன் தெரியுமா?", என்று கேட்டார் புவனா .
"அம்மா நீ சும்மா சும்மா அக்காவை குறை சொல்லாம கொஞ்சம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு சொல்லும்மா ",..என்று பதட்டத்துடன் கேட்டாள் பூஜா .
"இவ பிறந்ததுனாலதான் என் அக்கா செத்து போனா இவ மட்டும் பிறக்கலன்னா நான் இந்நேரம் சந்தோசமா இருந்துருப்பேன் என் அக்காவும் அவ வாழ்க்கையை நிம்மதியா வாந்துருப்பா.இதோ ஊரே சொல்லுதே உங்க அப்பா நல்லவர் வல்லவர்ன்னு அதெல்லாம் எதனாலன்னு நினைக்கிற நான் இப்படி மூடி மறைச்சிட்டு இருந்ததுனாலதான் .உன் அப்பாவை என்ன நினைச்சிட்டு இருக்குற ரொம்ப நல்லவர்ன்னா .உன் அப்பாக்கு குடி பழக்கம் இருந்துச்சு.அது உனக்கு தெரியுமா?",என்று கேட்டார் புவனா .அதைகேட்ட பூஜா அதிர்ந்துதான் போனாள் .
"உன் அப்பாவை கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி நான் வேற ஒருத்தர விரும்புனேன் அவரும் என்ன விரும்புனாரு .எல்லாம் நல்லாத்தான் போச்சு .அக்கா பிறந்ததுக்கு அப்புறம் நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைச்சோம் ஆனா அது எதுவும் நடக்கவே இல்ல .அக்கா செத்துட்டான்னுதான் சேதி வந்துச்சு ,அக்கா செத்த துக்கம் முடியிறதுக்குள்ள எனக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு கூட கேக்காம எனக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க .என் காதல் .என் சந்தோசம் எல்லாமே போச்சு அன்னையோட .அதுகப்புறம் உங்க அப்பாவை கல்யாணம் பண்ண .ஆரம்பத்துலையே எனக்கு தேவாவை பிடிக்கல ஆனா நான் அவளை அப்போ நிறைய கொடுமை படுத்தல. ஆனா நீ பிறந்ததுக்கு அப்புறம் எங்க நான் உன்ன பாத்துட்டு அவளை பாக்காம விட்டுடுவேனோன்னு உங்க அப்பா உன்ன கவனிக்காம இருந்தாரு .எல்லாரும் நான் தேவாவை கொடுமை படுத்தாமலேயே நான் அவளை கொடுமை படுத்தினதா பேசுனாங்க.இதுல அவர் வேற அப்பபோ அவர் குடிச்சிட்டு வந்து என்ன அடிப்பாரு.
அப்போ நீங்க எல்லாம் சின்ன பசங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது .அவருக்கு அக்காவை தான் ரொம்ப பிடிச்சிருந்துச்சு.ஏதோ கடமைக்கு என் கூட வாழ்ந்தாரு .கடமைக்குதான் ஒருத்தர் கூட இருக்காருன்னு தெரிஞ்சும் அவர் கூட வாழ்ந்து குழந்தை பெத்து அவங்க எதிர்காலத்துக்காக அங்கேயே வாழுறது எவ்ளோ கஷ்டம்ன்னு எனக்குதான் தெரியும் .
வலி இருக்குன்னு தெரிஞ்சும் அதை வெளிய காட்டாம இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா .உன் அக்கா தேவா பாவம் அது இதுன்னு சொல்லுவியே அவ பட்ட கஷ்டம் எல்லாம் உன் கண்ணுக்கு தெரிஞ்சுச்சு டி ஆனா நான் பட்டது எனக்கு மட்டும்தான் தெரிஞ்சிச்சு அதான் அவளுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் .நான் ஒன்னும் தியாகி இல்ல என்ன இந்த கஷ்டமான வாழ்க்கைக்கு வர வச்ச ஒருத்தியை நல்லா வச்சி பாத்துக்க. அதான் அவளை கஷ்ட படுத்தினேன். இதுக்காக நீ என்ன கொடுமைகாரின்னு கூட நினைச்சிக்கோ. ஆனால் நான் இப்படிதான் என்று சொன்னார் புவனா.
.அவர் சொன்னதை எல்லாம் கேட்ட பூஜாக்கு தலை சுத்தாத குறைதான் .புவனா பொய் சொன்னால் அதை பூஜாவால் நொடியில் கண்டு பிடிக்க முடியும் அது ஒன்றும் அவளுக்கு பெரிய வேலை இல்லை .ஆனால் இன்று புவனா பொய் சொன்னது போல அவளுக்கு தெரியவில்லை. தேவாவின் கஷ்டத்தை புரிந்து கொண்டது போல இவருடைய கஷ்டத்தை தான் அறிந்திருந்தால் இவர் இந்த அளவுக்கு கொடூரமாக மாறி இருக்க மாட்டாரோ என்ற எண்ணம் வந்தது பூஜாக்கு. அவள் தன்னுடைய அம்மாக்கு நிதர்சனத்தை புரிய வைக்க முடிவு செய்தாள்.
"அம்மா எனக்கு உன் பிரச்சனை புரியுதும்மா ஆனா அதுக்காக நீ அக்காக்கு செஞ்சது தப்புத்தான . உன்ன யாரோ கஷ்ட படுத்துனாங்கங்கிறதுக்காக உன்ன நம்பி இருந்த அவளை ஏன்மா நீ விட்டுட்ட . உன்ன அப்பா கொடுமை படுத்துனா நீ அவரைவிட்டு வந்துருக்கலாம் .ஆனா அதை பண்ணாம தேவாவை ஏன் கஷ்ட படுதுன்ன .என்ன நீ பட்ட கஷ்டத்தை அவ படணும்ன்னா...
ஏன்மா பெரியம்மா செத்தப்போ அப்பாக்கு உன்ன கட்டி வச்சது கொடுமைன்னு நீ நினைச்சா .அப்போ எதுவுமே செய்யாத அக்காவை நீ கொடுமை பண்ணதும் தப்புதானே .நீ உன் அம்மா அப்பாவை நம்புன இடத்துல அவங்க உன்ன கை விட்டது மாதிரிதானம்மா அக்காவை நீ கைவிட்டுட்ட .அக்கா இல்லன்னா நான் இன்னைக்கு இப்போ இப்படி இருந்துருக்க முடியுமா இல்ல நீதான் இருந்துருக்க முடியுமா .இங்க பாரும்மா நீ பட்ட கஷ்டத்துக்கு அவளை பழி வாங்குறேன்னு எவ்வளவோ பண்ணிட்ட .இதுவரைக்கும் பண்ணதோட நிறுத்திக்கோ ..இதுக்குமேல நீ இந்த மாதிரி பண்ணாத .
உனக்குன்னு இன்னும் வாழ்க்கை இருக்கும்மா அதை உருப்படியா வச்சிக்க ஏதாவது முயற்சி பண்ணு .நீயே போய் கூப்பிட்டாலும் சூர்யா மாமா அவளை அனுப்ப மாட்டாங்க .அவளுக்கு சின்ன வயசுல இருந்து கிடைக்க வேண்டிய பாசம் எல்லாம் இப்போதான்மா கிடைச்சிருக்கு அவளை சந்தோசமா இருக்க விடுமா .என்னதான் இருந்தாலும் அவ உன் பொண்ணுதானேம்மா என்று சொன்னாள் பூஜா .அதை எல்லாம் கேட்ட புவனாவின் மனம் ஏதோ செய்தது ..
இங்க பாரு நீ சொன்னதை எல்லாம் கேட்டு என்னால ஒன்னும் திருந்த முடியாது .நான் ஒன்னும் படத்துல வர்ற வில்லி இல்ல .ஒரே நாள்ல திருந்துறதுக்கு என்று கோபமாக சொன்னார் புவனா அதை கேட்ட பூஜா
"அம்மா நீ ஒன்னும் திருந்த வேண்டாம் உன் வீட்டுக்கு அவளை வான்னு கூப்பிட வேண்டாம்.ஆனா அவளை அவளுக்குன்னு இருக்க வீட்ல நிம்மதியா வாழ விடு .உன்ன யாரு தேவாவை கஷ்ட படுத்த சொல்றாங்களோ அவங்ககிட்ட மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடு அவங்க இஷ்டத்துக்கு எல்லாம் ஆட முடியாதுன்னு .இங்க யாரும் யாரையும் கட்டயபடுத்த முடியாதும்மா .உனக்கு ஒருத்தரை பிடிக்கலன்னா அவங்களை பாக்காம விலகி போயிடு .உனக்கு இருக்குறது நான் மட்டும்ன்னு நினைச்சிக்கோ .அவ்ளோதான்மா", என்று சொன்னாள் பூஜா .அதைகேட்ட புவனா அவளை அமைதியாக பார்த்தாள் .
"நீ சொல்ற மாதிரியே வச்சிக்குவோம் நான் அவளை மொத்தமா மறந்டுடுறேன் அதே மாதிரி நீயும் அவளைபத்தி இனி என்கிட்ட பேச கூடாது ",என்று சொன்னார் புவனா .
"நான் ஏன்மா உன்கிட்ட அக்கா பத்தி பேச போறேன்", என்று கேட்டாள் பூஜா ..
"உன் அக்கா இனி நம்ம வீட்டுக்கு வர கூடாது ",என்று சொன்னார் புவனா .
"ஏன்மா அவ ஏன்மா உன் வீட்டுக்கு வர போறா அதெல்லாம் வர மாட்டா", என்று சொன்னாள் பூஜா .
"ம்ம் சரி அப்படின்னா வேணா நான் அவ வழிக்கு இனி போகாம இருக்கேன்....ஆனா அவ என்ன இன்னைக்கு அடிச்சது ரொம்ப தப்பு அதுக்கு எல்லாம் நான் எப்போவும் அவளை மன்னிக்க மாட்டேன் அதனால இனி அவ என்ன பாக்க வர கூடாது அதை நீ அவகிட்ட சொல்லிரு. மீறி வந்தா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் ",என்று சொன்னார் புவனா .சரி என்று தலை அசைத்தாள் பூஜா .
"சரி எனக்கு இனி இங்க என்ன வேலை நான் போறேன் ",என்றார் புவனா .
"இரும்மா நான் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன் சாப்பிட்டு கிளம்பி போலாம் .ட்ரைன்க்கு டைம் இருக்கு", என்று சொன்ன பூஜா புவனாக்கு சாப்பாடு வாங்க சென்றார் .
என்னதான் பூஜா தேவாவை நேசித்தாலும் அவளுக்கு பெற்றவளும் முக்கியம்தான் அதனால்தான் அவள் இருவருக்கும் பொதுவாக நடந்து கொண்டாள்..
..
இங்கே தேவா அமைதியாக சூர்யா தோளில் சாய்ந்து அழுது கொண்டு இருந்தாள் .அப்போதுதான் அவளுக்கு அமிர்தா பிரசாத் நியாபகம் வந்தது .காலையில் அவர்களை பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தாள்.ஆனால் காலையில் நடந்த பிரச்னையில் அவர்களை பார்க்க கூட செல்ல முடியவில்லை .வேகமாக அவனைவிட்டு விலகிய தேவா .அமிர்தா பிரசாத்க்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று நியாபக படுத்தினாள் .
"சரி நீ டென்சன் ஆகாத.சாப்பாடு எடுத்துவை நம்ம போய் குடுத்துட்டு வரலாம் ",என்று சொன்னான் .தேவா இப்போது அவர்களை சந்தித்தால் மகிழ்ச்சியாக இருப்பாள் என்று நினைத்தான் சூர்யா .அதனால்தான் அவர்களை அழைத்து சென்றான் .
சூர்யாவும் தேவாவும் காலையில் கிளம்பி அமிர்தா மற்றும் பிரசாத்தை பார்க்க சென்றனர் .தேவா அமிர்தாவை விசாரிப்பதற்குள் அமிர்தா தேவாவை பார்த்து .
"என்ன ஆச்சு தேவா எதாவது பிரச்னையா உன்னோட முகம் ரொம்ப வாடி இருக்கு ",என்று கேட்டாள் .தேவா அமைதியாக இருக்க சூர்யாதான் அவர்களுக்கு அனைத்தையும் சொன்னான் .அமிர்தா தேவாவின் நிலைமையை புரிந்து கொண்டாள்.
"சரி தேவா நீ கவலை படாத எல்லாம் நல்லதுக்குதான் நினைச்சுக்கோ", என்று சொன்னாள் அமிர்தா. அப்போது பிரசாத்க்கு கால் வந்தது.கடையில் பொருள் வந்திருப்பதாக கடையில் வேலை பார்க்கும் பையன் சொன்னான் அதை கேட்ட பிரசாத்தான் உடனே வருவதாக சொல்லிவிட்டு போனை கட் செய்தான்.
"அம்மு கடைக்கு பொருள் வந்துருக்காம் நான் போய் என்னன்னு பாத்துட்டு வந்துடறேன் ",என்று சொன்னான்.
"டேய் இருடா நானும் வர்றேன் ",என்று சொன்ன சூர்யா.
தேவாவை பார்த்து "தேவா நீ இங்கேயே இரு. நான் வந்ததுக்கு அப்புறம் உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்", என்று சொன்னான்.
தேவா சரி என்று தலை அசைத்தாள். அமிர்தாக்கு தேவா இன்னும் சாப்பிடவில்லை அவளை சாப்பிட வைக்கும்படி போன் செய்து சொன்னான்.அமிர்தா தேவாக்கும் அவளுக்கும் சாப்பாடு எடுத்துகொண்டு வந்தவள் அவளை சாப்பிட சொன்னாள் தேவா முதலில் மறுத்தாள்.ஆனால் அமிர்தா முறைத்ததும் சாப்பிட உட்கார்ந்தாள். தேவா காலையில் இட்லீ மற்றும் தக்காளி சட்னிதான் செய்திருந்தாள்.சஞ்சனா அகரன் உடன் விளையாடி கொண்டு இருந்தாள். தேவா சாப்பிட ஆரம்பித்தாள். வைத்த இரண்டு இட்லீக்கு அவள் 5 கரண்டி சட்னிவைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.அதை பார்த்த அமிர்தா.
"என்ன தேவா சட்னிக்கு இட்டிலி தொட்டு சாப்பிடுற மாதிரி தெரியுதே", என்று கேட்டாள் அப்போதுதான். தான் வித்தியாசமாக சாப்பிடுகிறோம் என்று உணர்ந்தாள் தேவா
"என்ன ஆச்சு தேவா எப்போவும் இல்லாம ரொம்ப வித்தியாசமா பண்ணுற ",என்று மீண்டும் அமிர்தா கேட்க
ஒன்றும்இல்லை என்பது போல தலை அசைத்தாள் தேவா. அவளுக்கு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே லேசாக வாமிட் வருவது போல இருந்தது.
"ஹே என்ன ஆச்சு?",என்று கேட்டாள் அமிர்தா ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தாள் தேவா...
கொஞ்சம் நேரத்தில் சாதாரணமான தேவா குழந்தைகளுடன் விளையாட ஆரம்பிக்க அவளைதான் கவனித்துகொண்டு இருந்தாள் அமிர்தா.
ஏன் தேவா உனக்கு பீரியட்ஸ் எல்லாம் ஒழுங்கா வருதா என்று கேட்டாள் அமிர்தா தேவா அப்போதுதான் அதை பற்றி யோசித்து இடம் வலமாக தலை அசைத்தாள்.
"ம்ம் குழந்தை பத்தி ஏதாவது பிளான் பண்ணி இருக்கீங்களா", என்று கேட்டாள்.
தேவாவும் சூர்யாவும் குழந்தைபற்றி பேசி இருக்கிறார்கள். ஆனால் இப்போதே வேண்டும் என்று அவர்கள் பேசியது இல்லை. அதனால் தேவா இல்லை என்று தலை அசைத்தாள்.
"தேவா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத. நீ இப்போ பண்ணுறது எல்லாம் நான் கர்ப்பமா இருக்குறப்போ பண்ண மாதிரி இருக்கு. உன் பேஸ் கூட ரொம்ப பிரைட்டா இருக்கு. நீ ரொம்ப வித்தியாசமா சாப்பிடுற. So நம்ம ஏன் பிரேக்னசி டெஸ்ட் பண்ணி பாக்க கூடாது?",என்று கேட்டாள் அமிர்தா.
அவள் அப்படி சொன்னதும் தேவாவின் கண்கள் ஆச்சர்யத்தில் பெரிதாக விரிந்தது.
உடலில் உள்ள மொத்த ரத்தமும் தலைக்கு வந்தது போல இருந்தது அவர்கள் இருவருக்கும் குழந்தை ஒன்று பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நினைக்கும்போதே தேவா அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் அதே நேரம் காலையில் புவனா சொன்ன வார்த்தைகள் இவள் மனதை பதட்டம்கொள்ள செய்தது. ஒரு ஆசைக்காக டெஸ்ட் செய்துவிட்டு இறுதியில் இல்லை என்று வந்தால் அது புவனா சொன்ன வார்த்தையை நினைவு படுத்தி காயப்படுத்துமே என்று நினைத்தவள் முகம் வாடி போனது.
"என்ன ஆச்சு தேவா ஏன் சோகம் ஆகிட்ட ",என்று கேட்டாள் அமிர்தா.
தேவா ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தாள்.
"இங்க பாரு தேவா இதெல்லாம் டெஸ்ட் பண்ணி பாத்துதான் ஆகணும்.. என்னைக்கா இருந்தாலும் இப்படி ஒரு எண்ணம் வந்தா டெஸ்ட் பண்ண தான போற. நீ வெயிட் பண்ணு நான் போய் டெஸ்ட் பண்ண கிட் வாங்கிட்டு வர்றேன். அவங்க வர்றதுக்குள்ள நம்ம டெஸ்ட் பண்ணி பாத்துடலாம்", என்று தைரியம் சொன்ன அமிர்தா அருகில் உள்ள மெடிக்கல் ஷாப் சென்று பிரக்னன்சி கிட் வாங்கிவிட்டு வந்து கொடுத்தாள்.
அதை வாங்கிய தேவா அமிர்தாவை பார்க்க. அமிர்தா அவளுக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி கொடுத்தாள். தேவா அவள் சொன்னது போல செய்துவிட்டு என்ன ரிசல்ட் வருகிறது என்று அந்த கிட்டை பார்த்து கொண்டு இருந்தாள்.
தேவா கர்ப்பமாக இருந்தால் அந்த கிட்டில் இரண்டு கோடு வரவேண்டும்.ஆனால் இரண்டு கோடு மட்டும் வரவில்லை. அதை பார்த்தவளுக்கு அழுகைதான் வந்தது. அந்த கிட்டை கொண்டு வந்தவள் அமைதியாக அமிர்தா முகத்தை பார்த்தாள். அமிர்தாக்கு அவள் முகத்தை பார்த்தே தேவா நிலை புரிந்தது.
தேவா அவளிடம் சோகமாக டெஸ்ட்டை காண்பிக்க.அதை பார்த்த அமிர்தா சற்றே குழப்பம் அடைந்தாள்.... (Me : என்னவா இருக்கும் )
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro