Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு - 45

❤️போனா போறா தானா வருவா
மெதப்புல திாிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணாப் போச்சு
பொசுக்குன்னு உடைஞ்சேன்
உன் சோகப்பாா்வ உரசுது மேல
சிாிக்கிற ஓச சாிக்குது ஆள
தீத்தூவி ஏய் தீத்தூவி போனா
அவ வேணும் நானும் வாழ...❤️

"தேவா என்ன ஆச்சு .உன் சித்தி ஏதாவது சொன்னாங்களா?", என்று சரியாககேட்டான் சூர்யா .

தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் .அதை கேட்ட உடன் சூர்யாக்கு பயங்கர கோபம் வந்தது .

"இதுக்குதான் தேவா இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் நம்ம வீட்ல இருக்க விட கூடாது.இவங்க எல்லாம் அவங்களும் சந்தோசமா இருக்க மாட்டாங்க நம்மளையும் சந்தோசமா இருக்க விட மாட்டாங்க .நீ இங்கேயே இரு நான் இப்போவே அவங்களை கிளம்பி போக சொல்றேன்", என்று சொன்னான் சூர்யா (me - வா தலைவா வா தலைவா )

சொன்னவன் நிற்க கூட இல்லை நேராக ரூமைவிட்டு வெளியே செல்லப்போக .அவன் கையைபிடித்து தடுத்த தேவா .வேண்டாம் என்று சைகை செய்தான்.

"இப்போ எதுக்கு நீ வேண்டாம்ன்னு சொல்ற .அவங்களை எதுக்கு காப்பாத்த நினைக்கிற .இந்த மாதிரி ஆட்களை இனி நம்ம வீட்ல இருக்க கூடாது .யாரா இருந்தாலும் நம்மள அவசியமே இல்லாம கஷ்ட  படுத்துனா வாழ்க்கையில இருந்து நிரந்தரமா தூக்கி போட கத்துக்கணும் ",என்று சொன்னான் சூர்யா.

தேவா சரி என்று தலை அசைத்தவள் நேரத்தை காண்பித்து இப்போது புவனாவை வெளியே அனுப்ப வேண்டாம் என்று சைகை மூலம் சொன்னாள்.

"ம்ம் இந்த மாதிரி பாவம் பாக்குறதுக்கு ஒருநாள் தனியா நீ அனுபவிப்ப பாரு", என்று சொன்னான். அத்தைக்கேட்ட தேவா லேசாக சிரித்தாள்.

"ம்ம் இந்த சிரிக்குறது முறைக்கிறது எல்லாம் நீ என்கூட மட்டும் வச்சிக்கோ. வேற யாருக்கிட்டயும் காட்டாத", என்று சொன்னான் சூர்யா. தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.அதை பார்த்த சூர்யா சிரித்தான்.

"ஆமா அவங்க அப்படி என்ன சொன்னாங்க ",என்று கேட்டான் சூர்யா. அவனை அழைத்துக்கொண்டு சென்று கட்டிலில் உட்கார்ந்தவள் அவனிடம் கிருஷ்ணாவை காயப்படுத்தும்படி பேசியதை சைகை மூலம் விளக்கினாள்.

ம்ம் ஆரம்பகாலத்தில் தேவா கேட்கும் சிறு விஷயத்துக்கு கூட பேப்பர் தேடிய சூர்யாவிற்கு இப்போது பேப்பர் தேவை இல்லாமல் போனது. அவள் சைகைகள் மூலமே எல்yலாவற்றையும் புரிந்து கொண்டான்.

உண்மையில் சூர்யாக்கு அவ்வளவு கோபம் வந்தது ஆனால் தேவா அவனை இப்போது எதுவும் கேட்க கூடாது என்று சொல்லி இருந்ததால் அவன் இன்னும் புவனாவை துரத்தாமல் இருந்தான்.

"So இதுக்காகதான் நீ அவ்ளோ சோகமா இருந்தியா. உன் சித்தி என்ன அவ்ளோ பெரிய ஆளா. நீ ஒருமுறை அவங்கள எதிர்த்து பாரு தேவா. அப்போதான் உன்னோட பலம் என்னன்னு உனக்கே தெரியும்", என்று சொன்னான் சூர்யா. அவனை பாவமாக பார்த்த தேவா தனக்கு அதெல்லாம் வராது  என்பது போல சைகை செய்தாள்.

"ம்ம் சரி வேற எதுக்காக எல்லாம் நீ சோகமா இருந்த", என்று கேட்டான் சூர்யா. அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் தேவா.சூர்யா இந்த ஒரு காரணத்தை சொல்லி அதனால்தான் சோகமாக இருந்தாள் என்று தப்பிக்கலாம் என்றுதான் நினைத்தாள் தேவா. ஆனால் சூர்யா ஏமாறுபவனா அதனால் சரியாக கேட்டு விட்டான்.

தேவாதான் என்ன சொல்ல என்று தெரியாமல் அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். அதை பார்த்த சூர்யா.

அப்போ இன்னொரு காரணம் இருக்குன்னு நான் நினைச்சது  சரிதான் போல சரி உன் சித்தி உன்ன கஷ்ட படுத்துற மாதிரி என்ன பண்ணாங்கன்னு சொல்லு என்று கேட்டான் சூர்யா .

அவனிடம் அதற்கு மேலும் சமாளிக்க முடியாது என்று உணர்ந்த தேவா .மிகவும் கஷ்டபட்டு சூர்யாவிடம் உண்மை என்ன என்று சைகை மூலம்  சொல்லி விட்டாள் .இதைகேட்ட சூர்யாக்கு உண்மையில் அவ்வளவு கோபம் வந்தது .ஆனால் அவன் ரண களத்திலும் ஒரு குதூகலம் என்பது போல தேவாவிடம் விளையாட முடிவு செய்தான் .

"ஆமா தேவா அந்த பொண்ணு உண்மையாவே என்னதான் லவ் பண்ணாளா ..ம்ம்ம் பாரேன் என்னையும் இந்த உலகத்துல லவ் பண்ண ஒரு பொண்ணு இருக்கா", ...என்று சொன்னான் அதை கேட்டதும் தேவாக்கும் கோபம் வந்தது .இருந்தாலும் அவள் கோபத்தை உடனே காட்டிக்கொள்ள விரும்பவில்லை .அவனை லேசாக முறைக்க மட்டும் செய்தாள் .அதை பார்த்த உடன் சூர்யாக்கு சிரிப்பு வந்தது ..

இருந்தாலும் தன்னுடைய சித்தியை திட்டாமல் அவர் பேசியதை எல்லாம் ஆமாம் சாமி என்று சொல்லிக்கொண்டு கேட்டு வருவதற்கு இன்றைக்கு தேவாவை வைத்து செய்ய நினைத்து விட்டான் .

"ஹே என்ன தேவா என்ன இவ்ளோ லவ்வோட பாக்குற?", என்று கேட்டான் சூர்யா. தேவா ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தாள் .

"ஆமா தேவா அந்த பொண்ணு பாக்க எப்படி இருந்தா .நீ சொன்ன மாதிரி இன்னும் என்ன லவ் பண்ணிட்டு இருக்காளா ஆமா உன்னோட சித்திகிட்ட அந்த போட்டோ இருக்குன்னு சொன்னல்ல அதை கொஞ்சம் வாங்கிட்டு வந்து காட்டேன் .என்ன காதலிக்கிற அந்த தேவதை யாருன்னு நானும் கொஞ்சம் பாக்குறேன்", என்று கேட்டான் சூர்யா .

என்னதான் தேவா ஆரம்பத்தில் இவன் இப்படி பேசும்போது கொஞ்சம் கவலை அடைந்தாலும் போக போக அவன் பேசுவதை எல்லாம் கேட்டவள் அவன் பொய் சொல்கிறான் என்று நன்றாக புரிந்து கொண்டாள்.எனவே கொஞ்சம் நேரம் அவனை பேச விட முடிவு செய்தாள் .

"தேவா நீ பேசாம உன் சித்திகிட்ட போய் அந்த பொண்ணு போட்டோவை வாங்கிட்டு வா.எனக்கு அவளுக்கும் ஜோடி பொருத்தம் எப்படி இருக்கும்ன்னு கொஞ்சம் கேப்போம்", என்று சொன்னான் .உடனே தேவா சரி என்று தலை அசைத்தவள் எழுந்து செல்லபோக சட்டென்று அவள் கையை பிடித்தவன் .

"அடிப்பாவி நான் என்னவோ இந்த மாதிரி சொன்னா என்கிட்ட சண்டை போடுவன்னு.பார்த்தா நீ என்னவோ போய் போட்டோ எடுத்துட்டு வர போற . விட்டா உன் சித்தி சொல்றதை கேட்டு அந்த பொண்ணுக்கு என்ன கல்யாணம் பண்ணி வச்சாலும் வைப்ப போல ",என்று சூர்யா சொல்ல அவன் காதை பிடித்து திருகினாள் தேவா .(me : கோபமே வராது )

"ஹே தேவா என்ன பண்ணுற எனக்கு வலிக்குது", என்று சொன்னான் சூர்யா .(me - is it )

அதைகெட்ட தேவா இன்னும் அவனை முறைத்தாள் .

"என்ன முறைப்பு நான் இன்னொரு பொண்ணு பாக்குறேன் சொன்னா அதை நம்பி நீ என்ன போட்டோ வாங்கிட்டு வரப்போற .என் காதை பிடிச்சு திருகி என்ன விட்டு இன்னொரு பொண்ண நீ பாத்துருவியான்னு தானே நீ கேக்கணும்", என்று சொன்ன சூர்யா அப்போதுதான் அவள் அவன் காதுகளை பிடித்திருப்பதை பார்த்தான் .அப்போதுதான் சூர்யாக்கு புரிந்தது அவள் இவ்வளவு நேரம் தான் நடித்ததை கண்டு பிடித்துவிட்டாள் .

"அப்போ நீ கொஞ்சம் கூட நான் சொன்னதை நம்பலையா?",என்று கேட்டான் சூர்யா .

ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் .

"இருந்தாலும் உனக்கு என்மேல இவ்ளோ நம்பிக்கை ஆகாது தேவா .ஒருவேளை நாளைக்கே எனக்கு வேற பொண்ண பிடிச்சு போய் நான் உன்ன அம்போன்னு விட்டுட்டா என்ன பண்ணுவ?", என்று கேட்டான் .

அவன் அப்படி கேட்டதும் தேவா முகம் வாடி விட்டது ..அவன் காதிலிருந்து கையை எடுத்து விட்டாள் தேவா .அதை பார்த்த சூர்யாவிற்கு அவளை அதிகம் காயபடுத்திவிட்டோமோ என்று தோன்றியது . தேவா அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் நேராககட்டிலில் சென்று அமர்ந்தாள் .

அதை பார்த்த உடன் சூர்யாக்கு இன்னும் கஷ்டமானது .

"தேவா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் .உன்னைவிட்டு என்னால வேற எந்த பொன்னையும் நினைச்சு கூட பாக்க முடியாது அப்படி இருக்கும்போது நான் எப்படி இன்னொரு பொண்ணு கூட போவேன். சாரி தேவா ப்ளீஸ் நீ கஷ்ட படாத ",என்று கெஞ்சினான் சூர்யா..

ஆனால் தேவா எதுவும் செய்யவில்லை அவள் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தாள்

"சாரி தேவா என்ன பாக்காம நீ இருக்காத ப்ளீஸ் எனக்கு கஷ்டமா இருக்கு. என்ன பண்ணா நீ சந்தோச படுவ. சாக்லேட் வாங்கி தரவா",என்று கேட்டான் தேவாவிடமிருந்து ஒரு ரியாக்ஸன் கூட வரவில்லை.

!சரி நான் வேணா பண்ணது தப்புதான்னு ஆயிரம் முறை தோப்புகரணம் போடவா?",என்று கேட்டான் சூர்யா .சரி என்று உடனே தலை அசைத்தாள் தேவா .அதை பார்த்த சூர்யா .

"ரொம்ப நாளா என்ன இந்த மாதிரி பண்ண வைக்கணும்ன்னு நினைச்சிட்டு இருந்தியோ?",என்று கேட்டான் .தேவாக்கு சிரிப்புதான் வந்தது .இருந்தாலும் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டவள் அவனை பார்க்க .

அவனும் வேறு வழி இல்லை என்று தோப்புக்கரணம் போட ஆயத்தம் ஆனான் .

"ஆனாலும் தேவா நீ ரொம்பதான் ஓரவஞ்சனை பண்ணுற .உன்ன அந்த அளவுக்கு கஷ்ட படுத்துன உன்னோட சித்தியை கூட நீ மன்னிச்சிட்ட .ஆனா  நீ என்ன தோப்புகரணம் போட சொல்ற. இது நியாயமா?",என்று கேட்டான் சூர்யா .தேவா அதற்கு எல்லாம் அசரவில்லை .

சூர்யா பேசி எல்லாம் சமாளிக்க முடியாது என்று உணர்ந்தவன் அமைதியாக தோப்புகரணம் போட செல்ல அவனை பிடித்த தேவா ஒன்றும் செய்ய வேண்டாம் என்பது போல சைகை செய்தாள் .

தேவா இல்ல என்ன பார்த்து எல்லாம் பரிதாப படாத நான் பண்ணுறேன் என்று சொன்னான் சூர்யா அவனை பார்த்து சிரித்தவள் அவன் முடியை மெல்ல கோதிவிட்டு அவன் கையை பிடித்து எழுப்பி விட்டாள் .சம்மந்தமே இல்லாமல்  அவனை பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள். அதை பார்த்த சூர்யா குழப்பம் கொண்டவன்

"ஹே என்ன ஆச்சு என்று கேட்டான். ஒன்றும் இல்லை",என்பது போல தலை அசைத்தாள் தேவா.

"உனக்கு தெரியும் தேவா உன்ன தாண்டி இன்னொரு பொண்ணுகிட்ட நான் நிச்சயம் போக மாட்டேன்னு ஆனாலும் உன்கிட்ட அப்படி சொல்லி ஹர்ட் பண்ணிட்டேன் சாரி ",என்றான் தேவா அவன் நெற்றியில் முத்தம் வைத்தவள் தனக்கு அதில் பிரச்சனை இல்லை என்று சொல்லாமல் சொன்னாள்.

அவளை அழைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தவன்.

"தேவா அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா என்ன பெத்தவங்க எனக்கு பொண்ணு பாக்க எல்லாம் நினைச்சிருக்கவே மாட்டாங்க அவங்க அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வாழ ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. அதுல நான் என்னைக்குமே இல்லை. அதனால நீ உன் சித்தி சொல்றத எல்லாம் நம்பாத",. என்று சொன்னான் சூர்யா. தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.

அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்று சொன்ன சூர்யா பிரசாத் அமிர்தா விபத்து பற்றி சொல்ல அதைகேட்டு அதிர்ந்த வேதா உடனே சென்று அவர்களை பார்க்க செல்ல

"அடடா தேவா நீ இப்படி பதட்டப்படுவேன்னுதான் நான் உன்கிட்ட எதுவும் சொல்லல நீ கொஞ்சம் பொறுமையா இரு,என்று சொன்னான் சூர்யா. தேவா முகத்தில் பதட்டம் அப்பட்டமாக தெரிந்தது.

அவங்களுக்கு ஒன்னுமில்லை இப்போ நல்லாதான் இருக்காங்க நாளைக்கு நீ போய் அவங்கள பாரு. நான் இந்த விஷயத்தை இன்னும் யாரு கிட்டயும் சொல்லல என்று சொன்னான் சூர்யா.

"இன்னைக்கு பிரசாத் என்கிட்ட அவன் இல்லைன்னா கூட நம்ம சஞ்சனாவையும் அகரனையும் நல்லா பாத்துப்போம்ன்னு நம்பிக்கை இருக்குன்னு சொன்னா. அவன் எப்போவுமே அவனுக்கு எதாவது பிரச்சனைன்னா நான் அவனுக்காக வருவேன்னு சொல்லுவான். ஆனால் அது உண்மை இல்லை. எப்போவும் எனக்கு நிறைய கோபம் வரும் அதனால எல்லார் கூடவும் சண்டைக்கு போயிடுவேன். ஆனா பிரசாத் எப்போவும் எல்லாத்தையும் அதிகம் யோசிச்சு பண்ணுவான். ஆனால் என்ன யாரவது கஷ்ட படுத்துனா மட்டும் அவன் அமைதியா இருக்க மாட்டான். அவன் என்ன ரொம்ப நல்ல பிரண்ட்ன்னு சொல்ற அளவுக்கு நான் அவனுக்கு எதுவுமே பண்ணது இல்லை. ஆனால் அவன் எனக்கு ரொம்ப நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கான். அவனை மாதிரி ஒரு பிரண்ட் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்", என்று சொன்னான் சூர்யா அதைக்கேட்ட தேவா புன்னகை செய்தாள்.

"இத்தனை நாள் என்னவோ ஏதோன்னு இருந்தேன் தேவா. ஆனால் இன்னைக்கு பிரசாத்க்கும் அமிர்தாக்கும் எதாவது ஆகி இருந்தா பிள்ளைங்க நிலமை என்ன ஆகும்ன்னு நினைக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. நம்ம நல்லா பாத்துப்போம் ஆனால் அம்மா அப்பா இருக்க மாதிரி வராதுல்ல. அதனால நான் இனிமே ரொம்ப கவனமா இருக்க முடிவு பண்ணி இருக்கேன், என்று சொன்னான் சூர்யா அதைகேட்ட தேவா புன்னகை செய்தாள்.

"நமக்கு குழந்தைங்க பிறந்தா அவங்கள எப்போவும் நல்லா பாத்துக்கணும். நம்மள மாதிரி அவங்க கஷ்ட பட்டுட கூடாது", என்று சொன்னான் சூர்யா. அதை கேட்ட தேவா ஆமாம் என்று தலை அசைத்துவிட்டு. கிருஷ்ணாவின் போட்டோவை காட்டி அவன்தான் என்றும் முதலில் என்று சொன்னாள். அதை கேட்டு சிரித்த சூர்யா.

"நான் ரொம்ப லக்கி", என்று சொன்னான். அவனை பார்த்து சிரித்தாள்..

"நம்ம எப்போவும் இப்படி சந்தோசமா இருக்கணும் அப்டின்னா உன்னோட அந்த சித்தியை இங்க இருந்து அனுப்பிடணும் என்று சொன்னான் சூர்யா.

தேவா உடனே சரி என்பது போல தலை அசைத்தாள்..

"என் செல்ல பொண்டாட்டி இப்போதான் நார்மல் மனுஷி, மாதிரி நடந்துக்குற என்று சொன்னான் சூர்யா. அவன் சொன்னதை கேட்டு இருவரும் சிரித்தார்கள். அவர்களுக்கான பேச்சு என எல்லாம் நன்றாகதான் சென்று கொண்டு இருந்தது.அடுத்த நாள் சித்தியை பேக் செய்து விட்டால் நிம்மதி என்று நினைத்து சூர்யா உறங்கி விட
அதிகாலை நேரம் திடீரென்று சூர்யாக்கு ஸ்டேஷனில் இருந்து பிரச்சனை உடனே வரவேண்டும் என்று கால் வர அப்போதே கிளம்பி சென்றான் சூர்யா.

காலை விடிந்ததும் புவனா தேவாவிடம் என்ன முடிவு செய்து இருக்கிறாய் என்று கேட்க தேவா அவரை கண்டு கொள்ளாமல் செல்ல அதை பார்த்து கடுப்பாவனர் தேவாவை திட்ட வர அப்போது நடுவே டீயை கையில் வைத்துக்கொண்டு வந்த கிருஷ்ணாவை புவனா இடிக்க அவன் கையில் வைத்து இருந்த டீ புவனா மீது கொட்ட. சூடான டீ தன் மீது கொட்டிய கடுப்பில் கிருஷ்ணாவை அடிக்க கை ஓங்கினார் புவனா.....











Bạn đang đọc truyện trên: Truyen247.Pro