
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு - 44
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடா
நெஞ்சை வலி தீர்க்கும்
மருந்தாளன் நீதானடா
வாழ்வின் வேர் நீங்கிடும்
காலம் இதுதானடா
அன்பின் நீர் வார்க்கும்
முகிலாளன் நீதானடா
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அமிர்தாவும் பிரசாத்தும் சென்று கொண்டு இருக்கையில் கார் ஒன்று அருகில் வர அதை பார்த்த அமிர்தா அதிர்ச்சியில் "பிரசாத்", என்று கத்த சட்டென்று சுதாரித்த பிரசாத் பைக்கை அந்த கார் இடிக்காதபடி ஓரமாக செலுத்தினான். ஆனாலும் அந்த காரில் இருந்தவன் சரியான போதையில் இருந்தான் போல இவர்கள் பைக்கை இடித்து விட்டான். அமிர்தாவும் பிரசாத்தும் கீழே விழுந்து விட்டனர். நல்லவேளை பின்னே வண்டி எதுவும் வரவில்லை. இல்லை என்றால் அவ்வளவுதான்.
எல்லா நேரத்திலும் மனிதம் என்பது செத்து போய் விடாது என்பதால் அந்த வழியாக வந்த சிலர் அமிர்தா மற்றும் பிரசாத்திற்கு உதவி செய்தார்கள். அமிர்தா மற்றும் பிரசாத் இருவருக்கும் லேசாக அடி பட்டிருந்தது.
பிரசாத் தனக்கு அடிப்பட்டு உள்ளதா என்று பார்ப்பதற்கு முன்பு அமிர்தா நன்றாக இருக்கிறாளா ",என்றுதான் பார்த்தான் அதையேதான் அமிர்தாவும் செய்தாள்.
"அம்மு உனக்கு ஒன்னும் ஆகலேயே", என்று கேட்டான் பிரசாத்.
"இல்லை லேசான அடிதான் உங்களுக்கு ",என்று கேட்டாள் அமிர்தா.
"நான் நல்லாத்தான் இருக்கேன்", என்றான் பிரசாத். அவர்களுக்கு உதவி செய்ய கூடிய கூட்டத்தில் இருந்த தம்பதி அவர்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு ஹாஸ்பிடல் செல்ல அறிவுறித்தினர். பிரசாத் அருகில் இருந்த ஹாஸ்பிடல் சென்று தங்களுக்கு தேவையான சிகிச்சையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் .
இரவு 10 மணி ஆனது சூர்யா இன்னும் வீட்டுக்கு வரவில்லை. பிரசாத் மற்றும் அமிர்தாவும் வரவில்லை. சஞ்சனா இந்த வீட்டில் அதிகம் இருப்பவள் என்பதால் அவள் செல்வதின் அருகில் படுத்து உறங்கி விட்டாள். ஆனால் அகரன்தான் அழுவதை நிறுத்தவே இல்லை. தேவா அவனை சமாதானம் செய்தபடி சூர்யா வருகிறானா என்று பார்த்துக்கொண்டு இருந்தாள். கிருஷ்ணாவும் சூர்யாக்காக காத்திருந்தான்.இதை எல்லாம் பார்த்த புவனா.
"ஏய் என்னட்டி இது. இந்த பிள்ளை இந்த மாதிரி கத்துது. மனுஷன் ராத்திரி(me: நீங்க மனுசனா?)தூங்க வேணாம். எங்க போனாங்க இதுக்க அம்மையும் அப்பனும். கண்டவன் பிள்ளையை வளக்கதான் நான் உன்ன நான் அவ்ளோ கஷ்டபட்டு வளத்தேனா?", என்று கேட்டாள் புவனா. அதை கேட்ட கிருஷ்ணாக்கு கோபம் வந்தது.
"இங்க பாருங்க நீங்க தேவை இல்லாம பேசுறீங்க. இது யாரோ ஒரு குழந்தை இல்லை எங்க பிரசாத் அண்ணா குழந்தை. அதுவும் இல்லாம யார் குழந்தைன்னாலும் ஒரே மாதிரிதானே பாத்துக்கணும் ",என்று கேட்டான் கிருஷ்ணா. அதை கேட்ட புவனா லேசாக சிரித்து.
"அது சரி நீ சின்ன பையன் வெளுத்தது எல்லாம் பாலுன்னு நினைக்கிற. எல்லாரும் அப்படியே இருப்பாங்களா?",என்று கேட்டார் அதை கேட்டு குழம்பி போனான் கிருஷ்ணா.
"என்ன சொல்றிங்க நீங்க?", என்று கேட்டான்.
"ஐயோ உனக்கு நான் சொல்றது புரியலையா இரு நான் உனக்கு தெளிவா சொல்றேன். நீ இப்போ உன்னோட அண்ணியை அம்மா மாதிரி நினைச்சிட்டு இருக்க. ஆனா நாளைக்கே அவளுக்கு ஒரு குழந்தை வந்தா அவளோட கண்ணுக்கு நீ பையனாவா தெரிவ.. நிச்சயமா இல்லை. எல்லாருக்கும் அவங்கவங்க பிள்ளைங்கதான் முக்கியம் அதைத்தான் நான் இப்போவே பழகிக்க சொல்றேன் என்று சொன்னார் புவனா அதை கேட்டதும் கிருஷ்ணா முகம் வாடி விட்டது. தேவாக்கும் சூர்யாக்கும் குழந்தை பிறந்தால் கிருஷ்ணாக்கு நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும்தான் ஆனால் அதனால் தன்னைவிட்டு தேவா பிரிந்து விடுவளோ என்ற வருத்தம் கிருஷ்ணா கண்ணில் தெரிந்தது.
என்னதான் அவன் வளர்ந்து இருந்தாலும் அவன் அம்மா என்று நினைப்பது தேவாவை என்பதால் அவனுக்கு அவளை விட்டு விலக வேண்டிய சூழல் வந்து விடுமோ என்று நினைக்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது.
கிருஷ்ணா எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்த தேவா அவன் முகத்தை கையால் உயர்த்தி கண்களால் அவர் சொல்வது போல எதுவும் நடக்காது என்று சொன்னாள். அதை பார்த்த கிருஷ்ணா அமைதியாக ரூமுக்கு சென்றான். தேவாக்கு உண்மையில் புவனாவை நன்றாக திட்ட வேண்டும் போல இருந்தது ஆனால் அவளால் அதை செய்ய முடியவில்லை.
குழந்தையை சென்று ரூமில் கிடத்திவிட்டு கிட்சனுக்குள் சென்றாள் தேவா. அவள் பின்னாலேயே வந்தாள் புவனா.
"எட்டி தேவா இங்க வா நான் ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லணும்ன்னு நினைச்சேன்", என்று சொன்னார்.
தேவா அவரை என்ன என்பது போல பார்த்தார்
"உடனே ஒரு போட்டோவை எடுத்து இந்த போட்டோல இருக்க பொண்ணு நல்லா இருக்காளா?", என்று கேட்டார்.
தேவாவும் அதில் இருக்கும் போட்டோவை பார்த்தாள் அந்த பெண் உண்மையில் மிகவும் அழகாக இருந்தாள். சொல்லப்போனாள், நிறம், உயரம், எடை என அழகுக்கு இந்த சமூகம் எந்த வரையறை வைத்து உள்ளதோ அதற்கு எல்லாம் பொருத்தமானவளாக இருந்தாள். தேவாவும் அழகாக இருக்கிறாள் என்று தலை அசைத்தாள்.
"என்ன இருந்து என்ன பண்ண எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனை வேணுமே. இந்த பொண்ணதான் உன்னோட புருஷன் சூர்யாக்கு முதல்ல பாத்துருக்காங்க. உன் புருஷன் அம்மாவை ஒருவாட்டி கோவில்ல பாத்தேன் என்ன அடையாளம் கண்டு பிடிச்சு வந்து பேசுனாங்க அப்போதான் சொன்னாங்க இந்த பொண்ணதான் அவங்க பையனுக்கு பாத்துருந்தேன்னு. பொண்ணு நல்ல வசதியாம் கட்டுனா ஒரு நல்ல போலீஸதான் கட்டுவேன்னு தேடி திரிஞ்சி மாப்பிள்ளை எல்லாம் பார்த்த மாப்பிள்ளை எல்லாம் வேணாம்ன்னு கடைசியா இவன் செலக்ட் பண்ணதுதான் உன் சூர்யா. இவங்க ரெண்டு பேரும் ரொம்ப அருமையான ஜோடியா இருந்துருப்பாப்பாஙக. இந்த பையன் விதி இப்படி உன்ன கல்யாணம் பண்ணுற மாதிரி ஆகிடுச்சு. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா அந்த பொண்ணு இன்னும் உன் புருஷனதான் கல்யாணம் பண்ணனும்ன்னு இருக்காளாம்.
நினைச்சு பாரு. அந்த பொண்ணுக்கு இந்த பையன் மேல எவ்ளோ பாசம் இருக்கும்", என்றார். அதை கேட்டதும் தேவா முகத்தில் அதிர்ச்சி பரவியது. அதை பார்த்த புவனா.
"இதெல்லாம் கேக்க உனக்கு அதிர்ச்சியாதான் இருக்கும் ஆனா இதான் உண்மை கொஞ்சம் நினைச்சு பாரு. உன்ன சூர்யா எதுக்காக கல்யாணம் பண்ணாரு. உன்மேல பரிதாபப்பட்டுதானே. இப்போ நீ என்கிட்ட சொல்லலாம் நீங்க ரெண்டு பெரும் சந்தோசமா இருக்கீங்க அது இதுன்னு ஆனால் உண்மைன்னு ஒன்னு இருக்குல்ல. என்னதான் அவருக்கு உன்ன பிடிச்சிருக்குன்னு இருந்தாலும் எல்லாம் பரிதாபம்தானே. நமக்கு உதவி செய்யுறேன் ஒருத்தங்க சொன்னா அவங்க தோள்ல ஏறி உக்காந்து இந்த மாதிரி பாரம் கொடுக்க கூடாது அழகா விலகி வந்துடணும்... இங்க பாரு தேவா உன் புருஷன் ஒரு கவர்மென்ட் வேலை பாக்குறான். சாதாரண வேலை பாக்குறாவனுக்கே லட்ச கணக்குல பணம், நகை, சீர் கிடைக்கும். உன் புருசனுக்கு உன்ன கல்யாணம் பண்ணி என்ன கிடைச்சிட்டு.அழகும் இல்லை ஆஸ்தியும் இல்லை சரி அதை எல்லாம் விடு உனக்குன்னு குறை இல்லாமயா இருக்கு. நீ இதெல்லாம் யோசிக்க வேண்டாமா. இங்க பாரு நான் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போறேன். நீ பேசாம என்கூட வந்துரு",என்று சொன்னார் அதை கேட்ட வேதா அமைதியாக நின்றாள்
"கல்யாணம் ஆன புதுசுல எல்லாம் நல்லாத்தான் இருக்கும் போக போகாதான் உண்மை தெரியும். இன்னைக்கு அவன் உன்ன ஒரு ஆசையில நல்லா வச்சி பாத்துப்பான்.ஆனால் அதையே நம்ம நாளைக்கும் எதிர்பார்க்க முடியுமா.நான் உன்ன வளத்தவ நாலு வார்த்தை கூட குறைய பேசுவேன். அதை நீ தாங்கிப்ப ஆனா உன் புருஷன் திட்டுன்னா உன்னால தாங்க முடியுமா. அதான் சொல்றேன் நீ என் கூட வந்துடு", என்று சொன்னாள் புவனா. புவனா மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்ல தேவாக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. அவளால் அதை கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை. இருந்தும் தன்னை சமாளித்தவள் அமைதியாக நின்றாள்.
அப்போது சூர்யா பைக் வரும் சத்தம் கேட்க தேவா வாசலுக்கு சென்றாள். அவள் கண்ணில் இருந்த எதிரிபார்ப்பு அவள் நடையில் இருந்த வேகம் என எல்லாவற்றையும் பார்த்த புவனாவிற்கு தான் இவ்வளவு நேரம் சொன்னது எல்லாம் தேவாவின் காதில் விழுந்ததா என்றே தெரியவில்லையே என்ற யோசனைதான் இருந்தது.
சூர்யா வீட்டுக்கு வந்தவன். குழந்தை எங்க என்று கேட்க தேவா சஞ்சனா ரூமில் தூங்குவதாக சைகை காண்பித்தவள். அகரன் அவர்கள் ரூமில் இருப்பதாக சொன்னாள். நேராக ரூமுக்கு வந்த சூர்யா அகரனை தூக்கிக்கொண்டு இரு தேவா பிரசாத்கிட்ட குழந்தையை கொடுத்துட்டு வர்றேன் என்று குழந்தையை தூக்கிக்கொணடு பிரசாத் வீட்டுக்கு சென்றான்.
"ம்ம் பிள்ளையை இன்னொரு வீட்ல கொடுக்குறதும். அந்த பிள்ளையை வாங்க கூட வராம இருக்குறதும் நல்லவா இருக்கு. ம்ம் இதெல்லாம் சொல்ல வந்தா என்னதான் வில்லி ஆக்குவீங்க", என்று சொல்லிவிட்டு சோபாவில் படுத்துக்கொண்டார்.
சூர்யாக்கு மட்டும் பிரசாத் தனக்கு ஆக்சிடண்ட் ஆன விஷயத்தை சொல்லி இருந்தான். பிரசாத் தேவை இல்லாமல் இரவு நேரத்தில் எல்லோரையும் பயமுறுத்த விருப்பம் கொள்ளவில்லை.
சூர்யா குழந்தையை அமிர்தாவிடம் கொடுத்தவன் பிரசாத்தை பார்த்து.
"தேங்க்ஸ்டா", என்றான். அதை கேட்ட சூர்யா.
"அடிச்சு வாய உடைச்சிடுவேன். தேவை இல்லாம தேங்க்ஸ் எல்லாம் சொல்லாத".என்றான். அதைக்கேட்டு சிரித்தான் பிரசாத். அமிர்தா குழந்தையைக்கொண்டு உள்ளே சென்றாள்.
"டென்ஷன் ஆகாத சூர்யா. நீ டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒரு விஷயமே இல்லை ",என்றான்.
"ஒரு விஷயமே இல்லையா கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா என்ன ஆகுறது. உன்ன நம்பி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க அது உனக்கு மனசுல இருக்க வேண்டாமா ",என்று கேட்டான்.
"உண்மைய சொல்லவா நாங்க கீழ விழுந்து எழுந்து சின்ன அடிப்பட்டு இப்போ நல்லாதான் இருக்கோம். ஆனா விழுற அந்த செகண்ட் எனக்கு எதுவும் தெரியல. ஆனா அதுக்கும் முன்னாடி பேசுனப்போ கூட நீ எங்க குழந்தைங்கள நல்லா பாத்துப்பேன்னுதான் சொன்னோம். இப்போவும் அதான் நான் சொல்றேன். நான் இருந்தாலும் இல்லைன்னாலும் நீ எங்க குழந்தைங்களை நல்லா பாத்துப்படா . எங்களுக்கு எதாவது ஆனா பிள்ளைங்கள பாக்க முடியாதுங்கிற கஷ்டம் இருக்குமே தவிர எங்க பிள்ளைங்கள பாத்துக்க யாரும் இல்லங்குறது கஷ்டம் எங்களுக்கு இல்ல ",என்று சொன்னான் பிரசாத். அதை கேட்டதும் என்னவோ சூர்யாக்கே ஒரு மாதிரி ஆனது.
"என்ன இப்படி செண்டிமெண்ட்டா பேசுனா உன்ன எதுவும் பண்ண மாட்டேன்னு ஒரு எண்ணமா. இனிமே பத்திரமா இரு", என்று சொன்னான் சூர்யா.
"போலீஸ் நீ சொல்லி கேக்காம இருக்க முடியுமா", என்று கேட்டான் பிரசாத்.
"போய் தூங்குடா ",என்று சொன்ன சூர்யா எதுவும் பேசாமல் வீட்டுக்கு வந்தான்.. அவனிடம் சாப்பாடு எடுத்து வைக்கவா என்று சைகையால் கேட்டாள் தேவா.
"வேண்டாம்", என்று சொன்னான் சூர்யா. தேவாவிற்கு சூர்யாவின் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. அவள் உறங்க செல்வதாக சைகை செய்துவிட்டு உறங்க செல்ல அவள் கையைபிடித்து தடுத்த சூர்யா.
"என்ன ஆச்சு தேவா ஏன் ஒரு மாதிரி இருக்க ?",என்றுகேட்டான் சூர்யா.
உண்மையில் சூர்யா தான் கவலையாக இருப்பதை அறிந்து கொள்ள கூடாது என்பதால் தேவா தன்னை முடிந்தவரை சாதாரணமாக காட்டிக்கொண்டாள். ஆனாலும் சூர்யா கண்டு பிடித்துவிட்டான்.
"என்ன ஆச்சு தேவா உன் முகமே சரி இல்லையே? என்று மீண்டும் கேட்டான் அதை கேட்ட தேவா ஒன்றும் இல்லை என்று சைகை செய்ய.
இங்க பாரு தேவா . நீ என்ன பீல் பண்ணுறன்னு சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணும்ன்னு அவசியம் இல்லை. உன் கண்ணை பாத்தே என்னால ஏதோ பிரச்சனைன்னு சொல்ல முடியும். இப்போ சொல்லு உன்னை கஷ்ட படுத்துனது யாரு என்று கேட்டான் சூர்யா.
தேவாக்கு ஏனோ அழுகை மட்டும்தான் வந்தது. தன்னுடைய கண்ணீர் அவன் கண்களுக்கு தெரியும் முன்பே அவனை அனைத்துக்கொண்டாள் தேவா.
சூர்யாக்கு என்னவோ சரியில்லை என்பது நன்றாக புரிந்தது. தேவாவின் வருத்திற்கு காரணம் புவனா என்று அறிந்தால் புவனா நிலை என்னவாகும்.(me: awesome ஆ இருக்கும்)
அடுத்த பதிவில் சந்திப்போம்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro