Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -43

❤️ஆருயிரே மன்னிப்பாயா
மன்னிப்பாயா சொல்லு நீ என்
சகியே ஆருயிரே மன்னிப்பாயா
மன்னிப்பாயா சொல்லு நீ என்
சகியே❤️

சூர்யா அப்படி பாதியிலேயே போனை வைத்ததும் தேவாக்கு என்னவோ போல இருந்தது. சாப்பாடை வீணாக்க கூடாதே என்று அமைதியாக சாப்பிட்டவள் பிறகு தட்டை எல்லாம் எடுத்து  வைத்துவிட்டு வந்து அமர அவள் அங்கு வருவதை பார்த்த புவனா இன்னும் தூக்கத்தை தொடர்வதை போல நடித்தாள்.

அப்போது தேவாக்கு பூஜா வீடியோ கால் செய்தாள். பூஜாவின் நம்பரை பார்த்ததும் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. போனை அட்டென்ட் செய்து சைகை மூலம் பேச ஆரம்பித்தாள்.

பூஜாவும் அவளுடன் சந்தோசமாக பேசினாள்

"ஹே தேவா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்ன்னு நினைச்சேன்",என்று ஆரம்பித்தவள் சிக்னல் இல்லாததால் பேசுவது விட்டு விட்டு கேட்டதும்

"ஹே தேவா சிக்னல் இல்ல போல. சிக்னல் இருக்க இடத்துக்கு போ", என்றாள். அதைக்கேட்ட தேவா ஹாலுக்கு வந்து அமர  அவள் போனை திருப்பி பிடித்த நேரம் தன்னுடைய பாசமான அம்மாவை பார்த்தாள் பூஜா.

சம்மந்தமே இல்லாமல் இந்த நேரத்தில்  புவனா தேவா வீட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆனாள் பூஜா.

"தேவா இந்த அம்மா உன் வீட்ல என்ன பண்ணுறா. நீ எதுக்கு அமைதியா இருக்க.. இவங்க எப்போ வந்தாங்க. நீ எதுக்கு இவங்கள இங்க விட்ட ",என்று கேட்டாள் பூஜா. இது எல்லாம் உறங்குவது போல நடித்துக்கொண்டிருந்த புவனாக்கும் கேட்கதான் செய்தது. என்ன செய்ய அவரால் எதுவும் பேசதான் முடியவில்லை

"ஊருல ஒவ்வொரு பிள்ளையும். அம்மா சொல்லி குடுக்காமலே அடுத்த தாரத்து பிள்ளைகிட்ட அவ்ளோ கோவத்தை காட்டும் இவளை நான் என்ன சொல்றது. என்ன விட அக்கா அக்கான்னு அவமேல உயிரா இருக்கா. இவ பிறந்த உடனே என் அக்காவை கொன்னா. இந்த தேவா என்ன அவ்ளோ நல்லவளா.அடுத்து இவளுக்கு அம்மாவா இருக்கணும்ன்னு என்ன ரெண்டாம் தாரமா மாத்தி என் ஆசையை கொன்னா. இப்போ என் பொண்ணையும் என்கிட்ட இருந்து எடுக்க பாக்குறா. இதுக்கெல்லாம் நான் உன்ன சும்மாவே விட மாட்டேன்", என்று மனதுக்குள் நினைத்துகொண்டாள் புவனா.

தேவாவை பூஜா எதற்க்காக புவனாவை உள்ளே விட்டாய் என்று திட்டி தீர்த்துக்கொண்டு இருக்க  தேவா அவளை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தாள்.

"தேவா நீ போனை நான் இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன். எப்போவும் உன்ன கஷ்ட படுத்திட்டேதானே இருந்தா அவளுக்கு இப்போ என்ன உன்கூட இருக்க அவ்ளோ ஆசை . நான் இன்னைக்கு வந்து அவங்கள என்கூட கூட்டிட்டி போய் ட்ரெயின் ஏத்தி விடுறேன்", என்று சொன்னாள். அதைக்கேட்ட புவனாக்கு கோவம் தலைக்குமேல் ஏறியது.

ஆனாலும் உறங்குவதை போல நடிப்பதை தொடர்ந்தாள். தேவா மனம் முழுவதும் பூஜா சொன்ன விஷயங்கள்தான் ஓடி கொண்டிருந்தது. அதோடு சூர்யா போனை சட்டென்று கட் செய்துவிட்டு சென்றதும் அவள் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. கொஞ்சம் நேரம் அதைப்பற்றி யோசித்து கவலைப்பட்டவளுக்கு தலை சுற்றுவது போல இருக்க தன்னை மிகவும் கஷ்டப்பட்டு சமாதானம் செய்தவள். சோர்வில் அப்படியே படுத்துக்கொண்டாள்.

..

சாயங்காலம் நேரம் கிருஷ்ணா செல்வதுடன் வீட்டுக்கு வந்தான் அவன் கையில் கவிதைக்காக அவன் வாங்கிய முதல் பரிசு கோப்பை இருந்தது. வீட்டுக்கு வந்ததும் கிருஷ்ணா அவளைதான் தேடி வந்து அந்த பரிசை கொடுத்தான். தேவா அவனுக்காக அவ்வளவு சந்தோசப்பட்டாள். அவனுக்கு ஸ்வீட் செய்து தருகிறேன் என்று சைகை மூலம் சொன்னாள். கிருஷ்ணாவும் அதைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.அவள் முகம் முழுவதும் இருந்த மகிழ்ச்சியை பார்த்ததும் புவனாக்குதான் அவ்வளவு கோபம்.
இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் .

"என்ன பிள்ளே பள்ளிக்கூடத்துல உனக்கு பிரைஸ் குடுத்தாங்களா. எதுக்கு "" என்று கேட்டார்.

"அது நான் கவிதை எழுதுனேன் அதான்", என்று சொன்னான் கிருஷ்ணா.

"ஓ அப்படியா நல்லா கவிதை எழுதுவியா ஆமா எதைப்பத்தி கவிதை எழுதுன", என்று கேட்டார் புவனா.

"அம்மா பத்திதான் தலைப்பு அதைத்தான் எழுதுனேன்", என்று சொன்னான் கிருஷ்ணா.

"ஆமா அம்மா பத்தி நீ என்ன பெருசா எழுதுன. உனக்க அம்மாதான் நீ சின்ன பையனா இருக்கும்போதே உன்னவிட்டுட்டு போயிட்டாங்களாமே அப்புறம் எப்படி அம்மா பத்தி எழுதுன", என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் கிருஷ்ணா மனதை காயப்படுத்தும் நோக்கில் கேட்டாள். கிருஷ்ணாக்கும் அவர் கேள்வி வருத்தத்தை கொடுத்தது. செல்வம் புவனாவை என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக நிற்க தேவா கிருஷ்ணாவை பார்த்து கவலை படாதே என்று கண்ணால் சைகை செய்ய.. கிருஷ்ணா புவனாவை பார்த்து.

"நீங்க சொல்ற மாதிரி நான் எங்க அம்மா கூட வளரல ஆனால் எனக்கு இப்போ அம்மா மாதிரி அண்ணி இருக்காங்க அதான் நான் அவங்கள நினைச்சு எழுத்துனேன்", என்று சொன்னான். அதை கேட்டதும் தேவாக்கு என்னவோ போல இருந்தது. அவளுக்கு தெரியும் கிருஷ்ணாக்கு தன்னை பிடிக்கும் என்று அவளுக்கு தெரியும்.

ஆனால் மனதில் இப்படி ஒரு இடத்தை வைத்திருப்பான் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை அவள் கிருஷ்ணாக்காக எதுவும் பெரிதாக செய்தது இல்லை. எல்லோரின் மீதும் எப்படி அன்பு காண்பிப்பாளோ அப்படிதான் கிருஷ்ணா மீதும் தேவா அன்பு காட்டினாள். அவளுக்கு கிருஷ்ணாவை அதிகம் பிடிக்கும்தான் ஆனால் அதற்காக அவள் தன் சுயத்தை மாற்றி எதையும் செய்தது இல்லை.

இத்தனை வருடம் அவளும் புவனா உடன் இருந்தாள். புவனாக்காக அவள் பல விஷயங்கள் செய்து இருந்தாலும் புவனா தேவா மீது எந்த விதத்திலும் பாசத்தை காண்பித்தது இல்லை .

என்னதான் நாம் ஒருவர் மீது அன்பு காட்டினாலும் அவர் அந்த அன்பை மதிக்கவில்லை என்றால் நமக்கு காயம் மட்டும்தான் கிடைக்கும் என்ற மிகப்பெரிய பாடத்தை தேவா  இன்றுதான் கற்றுகொண்டாள்.

கிருஷ்ணா சொன்னதை கேட்டு மகிழ்ச்சியாக இருந்த தேவா அவன் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு அவனை கையோடு கிட்சன் பக்கம் அழைத்து சென்று விட்டாள் .ஏன் என்றால் அவளுக்கு நன்றாக தெரியும் இங்கே கிருஷ்ணா இருந்தால் அவனை ஏதாவது சொல்லி காயப்டுதுவார் என்று அதனால்தான் அவள் அவனை அழைத்து சென்றாள் .புவனா அமைதியாக செல்லும் தேவாவை பார்த்து கடுப்பின் உச்சியில் இருந்தார். 

இரவு 7 மணி அளவில் 

இங்கே அனுவை அனுப்பி வைக்க அவளுடன் ரயில்வே ஸ்டேசன் சென்று இருந்தார்கள் பிரசாத்தின் குடும்பத்தினர் . அனு எப்போதும் போல இல்லாமல் இந்தமுறை கொஞ்சம் தைரியமாக இருந்தாள் .அனு உடன் கொஞ்சம் நாள் அவர்கள் அம்மா அப்பாவும் அவளுடன் கிளம்பினார்கள் ..

அமிர்தாவும்  பிரசாத்தும் பைக்கில் வந்து கொண்டு இருந்தார்கள் .அப்போது பிரசாத் திடீரென தன்னுடைய வீட்டின் பக்கம் பைக்கை செலுத்தாமல் வேறு எங்கோ பைக்கை செலுத்தினான் .

"ஏங்க எங்க இப்போ போறோம் நம்ம வீட்டுக்கு போலாம் .பசங்க தேவா வீட்ல இருப்பாங்க நம்ம லேட்டா போனா தேவாக்குதாங்க கஷ்டம்" .என்று சொன்னாள் 

"அடடா என்ன நீ .நம்ம பசங்க சூர்யா வீட்ல இருக்குற வரைக்கும் நிச்சயம் நம்மள தேடவே மாட்டாங்க .நம்ம இல்லன்னாலும் அவங்க தேவா சூர்யா கூட ரொம்ப சந்தோசமாதான் இருப்பாங்க", என்று சொன்னான் பிரசாத் .

"ம்ம்ம் நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனா நம்ம இப்போ எங்க போறோம் .நீங்க என்கிட்டே எதுவும் சொல்லவே இல்லையே ",என்று கேட்டாள் அமிர்தா 

"சப்ரைஸ் எல்லாம் சொல்லிட்டா பண்ணுவாங்க", .என்று லேசாக சிரித்தபடி சொன்னான் பிரசாத் .

"அதுவும் சரிதான் ஆனா என்ன திடீர்னு இதெல்லாம் ",என்று கேட்டாள் அமிர்தா .

"இல்ல அம்மு இந்த கொஞ்சம் நாள்ல நீ ரொம்ப கஷ்ட பட்ட அது எனக்கு தெரியும் என்னதான் ஸ்ட்ராங்கா இருந்தாலும் இந்த கொஞ்சம் நாள்ல எவ்ளோ கஷ்ட பட்டுருப்பன்னு எனக்கு நல்லா தெரியும் இருந்தாலும் .உன்ன நான் கண்டுக்கவே இல்லல்ல ,நம்ம சந்தோசமா சிரிச்சு பேசி எத்தனை நாள் ஆகுது", என்று கேட்டான் பிரசாத் .அவன் சொன்னதை கேட்டு லேசாக சிரித்த அமிர்தா .

"அடடா என் அருமை புருசனுக்கு இப்படி எல்லாம் கூட யோசிக்க தெரியுமா.நான் ஒன்னும் இத்தனை நாள் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் கஷ்ட படல நான் ரொம்ப சந்தோசமாதான் இருந்தேன் ,பிரசாத் நான் எங்க இருக்கேன் எந்த மாதிரி நிலமையில இருக்கேங்குறது முக்கியம் இல்லை .உங்க கூட இருக்கேனாங்குறதுதான் ரொம்ப முக்கியம்", என்று சொன்னாள் அமிர்தா .அவள் இப்படிதான் சொல்லுவாள் என பிரசாத்க்கு நன்றாக தெரியும். பல வருடம் ஒன்றாக இருந்து கூட தெரியவில்லை என்றால் எப்படி.இருவரும் அதன் பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை ..அந்த பயணம் அழகாக நீண்டு கொண்டே சென்றது ..

பூஜா தேவா வீட்டில் புவனாவை முறைத்தபடி அமர்ந்து இருந்தாள் .புவனா அதை எதையும் கண்டு கொள்ளாமல் சாதாரணமாக இருப்பது போல நடித்தார் .பூஜாவிடம் பக்கம் பக்கமாக பேசினார் .ஆனால் பூஜா ஒரு இரண்டு வார்த்தையில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டாள் .எல்லாம் பேசிவிட்டு தான் கிளம்புவதாக எழுந்தாள் பூஜா .

"என்னம்மா பூஜா இவ்ளோ சீக்கிரம் போற .நைட் சாப்பிட்டு போலாம்", .என்றார் செல்வம் 

"இல்ல அங்கிள் இப்போ போனாதான் ரயில்வே ஸ்டேசன் போக சரியா இருக்கும்", என்று சொன்னாள் பூஜா .

'என்னம்மா இப்போ எதுக்கு ஸ்டேசன் போனும்னு சொல்ற ",என்று கேட்டார் செல்வம்..

"நான் எங்கேயும் போகல அம்மாதான் ஊருக்கு போகணும் .எதுக்கு தேவை இல்லாம இங்க இருந்து மத்தவங்கள கஷ்ட படுத்தணும்..ஊருல பண்ண நிறைய வேலை இருக்கும் அதான் அம்மாவை  ஊருக்கு கூட்டிட்டு போலாம்ன்னு  இருக்கேன்", என்றாள் ..

இதைகேட்ட புவனாக்கு தூக்கி வாரிப்போட்டது ... இருந்தாலும் தன்னை சமாளித்தவர் .

"என்ன திடீர்னு வந்து என்ன கூப்பிடுற .நான் எல்லாம் எங்கேயும் வரல .நான் தேவா கூட ஒரு ரெண்டு வாரம் இருந்துட்டுதான் வருவேன்", என்று சொன்னாள் .இதைகேட்ட கிருஷ்ணாக்கு லேசாக நெஞ்சு வலியே வருவது போல இருந்தது அவனுக்கு வீட்டில் எப்போதும் அதிகம் பேர் இருந்தால் பிடிக்கும் ஆனால் அவனால் புவனா தன்னுடைய வீட்டில் இருப்பதை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்ளவே ,முடியவில்லை ...

"அம்மா நீ எதுக்கு இங்க இருக்க.. அது அக்காக்கு சிரமம்மா.. நீ என்கூட வா", என்று அழைத்தாள் பூஜா .

புவனா தேவாவை பார்த்து .

"தேவா நான் இங்க இருக்குறது உனக்கு சிரமமா இருக்கா?", என்று கேட்க தேவா ஏன் புவனாவை மறுத்து பேச போகிறாள் அவள் அமைதியாக இருந்தாள் .அவள் அமைதியை பார்த்து சிரித்த புவனா .பாரு தேவாக்கே நான் இங்க இருக்குறதுதான் இஷ்டம் அதனால நான் இங்கேயே இருக்கேன் என்றாள் .பூஜாவால் வேறு எதுவும் பேச முடியவில்லை..அப்போது பூஜாக்கு ஒரு கால் வர ஆபிஸ் சம்மந்தப்பட்ட முக்கியமான ஒரு வேலை இருப்பதாக அவள் தோழி அழைக்க வேறு வழி இல்லாமல் அங்கிருந்து சென்றாள் ..

இங்கே பிரசாத் மற்றும் அமிர்தா இருவரும் கடற்கரையில் அமர்து இருந்தார்கள் .அமிர்தா கடலையை ரசித்தபடி இருக்க பிரசாத் அவளை ரசித்துக்கொண்டு இருந்தான்.

கொஞ்சம் நேரம் கழித்து அமிர்தா பிரசாத்தை பார்த்தவள் அவன் தன்னை வைத்த கண் வாங்காமல் இருப்பதை பார்த்தான் .

"என்னங்க என்ன அப்படி பாக்குறிங்க", என்று கேட்டாள் அமிர்தா .

"ஏன் நீ இவ்ளோ அழகா இருக்க?", என்று கேட்டான் பிரசாத் .

"நீங்க நிறைய லவ் பண்ணுரிங்கல்ல அதான் ",என்று சொன்னாள் அமிர்தா .அதைகேட்டு லேசாக புன்னகை செய்தவன் .

"அப்படியும் இருக்கலாம் .ஏன் அம்மு நம்ம ஏன் இன்னொருமுறை  கல்யாணம் பண்ணிக்க கூடாது",என்று கேட்டான்  பிரசாத் .

அதைகேட்டு ஆச்சர்யம் அடைந்த அமிர்தா எதுக்கு என்று கேட்க .

"இல்ல அம்மு அப்போ நம்ம first இருந்த மாதிரி ரொமாண்டிக்கா இருக்கலாம் ",என்று கேட்டான் .

"ஏன் இப்போ அப்படி இல்லையா", என்று கேட்டாள் அமிர்தா

"இருக்குதான் இருந்தாலும் கொஞ்சம் வயசான பீல் வருது .அதான் மறுபடியும் கல்யாணம் பண்ணி ஒரு புது life மாதிரி ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு நினைச்சேன்", என்று சொனனான் பிரசாத் .

"sir ஒரு ப்ளான்லதான் இருக்கீங்க போல ",என்று சொன்னவள் வெட்கப்பட்டு சிரிக்க .

"சிரிக்காம yes ஓர் no ன்னு ஏதாவது சொல்லு", என்று கேட்டான் பிரசாத் .

"உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஆயிரம்முறை கேட்டாலும் yesதான் ",என்று சொன்னாள் அமிர்தா .அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன் 

"அப்படின்னா கண்ண மூடு",என்று சொன்னான் .அவன் சொன்னதை கேட்டு கொஞ்சம் குழம்பினாலும் கண்ணை மூடினாள் அமிர்தா .

கொஞ்சம் நேரம் கழித்து அவன் சொன்ன நேரம் கண்ணை திறக்க அவள் முன்பு கப்பிள் றிங் வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தான் .அது வெள்ளி மோதிரம்தான் ஆனலும அதன் மதிப்பு வைரத்தை விட உயர்வானது அமிர்தாக்கு .

"இந்தா இந்த மோதிரம் நீ எனக்கு போட்டு விடு நான் உனக்கு இதைபோடு விடுறேன் .சோ நம்ம எப்படியும் இன்னொருமுறை கல்யாணம் ஆனவங்க மாதிரி ஆகிடுவோம் ",என்று சொன்னான் பிரசாத் அவன் சொன்னதை கேட்டு லேசாக சிறிதவள் அவள் கையிலிருந்து மோதிரத்தை வாங்கி அவன் கையில் போட்டு விட்டாள் அவள் கண்கள் எல்லாம் கலங்கியது அதை பார்த்த பிரசாத் என்ன ஆச்சு அம்மு என்று கேட்க

"ஐ லவ் யு ",என்றாள் .அதை கேட்டவன் அவள் கையில் மோதிரத்தை போட்டு விட்டு "ஐ லவ் யு", என்று சொல்லிவிட்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க வர அவனை தடுத்தவள்" பப்ளிக் பிளேஸ்ல இப்படி பண்ணாதிங்க", என்று சொல்ல .

"ஆயிரம் கல்யாணம் பண்ணாலும் இது மட்டும் மாறாது ",என்று சொல்லிவிட்டு சிரித்தான் பிரசாத் அவனுடன் கொஞ்சம் நேரம் பேசி சிரித்த அமிர்தா/பிறகு நேரமாகி விட்டது என்று சொல்ல இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள் 

"இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் ",என்று பைக்கை ஓட்டியபடி சொன்னான் பிரசாத் 

"நானும் ரொம்ப சந்தோசமா இருக்கேன் .ஆனா நம்ம பசங்க இப்போ எப்படி இருப்பாங்களோ", என்று கேட்டாள் அமிர்தா .

"சூர்யாவும் தேவாவும் அவங்களை நல்லா பாத்துப்பாங்க .இன்னைக்கு இல்ல என்னைக்குமே நம்ம பசங்கள பாக்க போகலன்னா கூட அவங்கள தங்களோட குழந்தைங்க மாதிரி பாத்துப்பாங்க", என்று மனம் நிறைந்து சொன்னான் பிரசாத் .

அதற்கு லேசான புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைத்த அமிர்தாவின் கண்கள் அருகே கட்டுப்பாட்டை மீறி வந்து கொண்டிருந்த காரை பார்த்து அதிர்ச்சியில் பெரிதாக விருந்தது.











































































































































































































































































































Bạn đang đọc truyện trên: Truyen247.Pro