Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -42

❤️சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம் விட்டு செல்லாதே
கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே அடியே❤️






தேவா கிச்சனில் இருக்க அவளை நோக்கி வந்த புவனா .

"என்ன தேவா உனக்க வீட்டாளு ரொம்ப கோவமா போற மாதிரி இருக்கு ...அந்த வீட்ல ஏதாவது பிரச்னையா ?",என்று கேட்டார் .தேவாக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை .அவள் இல்லை என்பது போல தலை அசைத்தாள் .

"ஒரு பிரச்சனையும் இல்லாமதான் உனக்க வீட்டாளு இந்த அளவுக்கு கோப படுறாரா .அப்படி எல்லாம் இருக்காது . இங்க பாரு தேவா பக்கத்துல இருக்கவங்களுக்கு எல்லாம் நம்ம நேரத்தை எடுத்து அவங்க பிரச்சனையை சரி பண்ண போனா அது நமக்குதான் பிரச்னையை கொடுக்கும் புரியுதா ?",என்று சொன்னார் புவனா .அவர் சொன்னதை கேட்ட தேவா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அப்போது சூர்யா வரும் சத்தம் கேட்டது .உடனே பேச்சை மாற்றியவர் .

"போ தேவா போய் அவங்களுக்கு சாப்பாடு கொடு", என்று சொன்னாள் .தேவா சூர்யாவை சென்று பார்க்க அவன் கண்களாலேயே ஒரு பிரச்சனையும் இல்லை என்பது போல தலை அசைத்தான் தேவா லேசாக புன்னகை செய்தாள் .

"தேவா எனக்கு வேலைக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன் .இன்னைக்கு வர கொஞ்சம் லேட் ஆகும்", என்று சொன்னான் .அவன் சொன்னதை கேட்ட தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.சூர்யா வேலைக்கு சென்றுவிட செல்வம் மற்றும் கிருஷ்ணா இருவரும் அவர்கள் லஞ்ச் எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றனர் இதை எல்லாம் பார்க்கவே புவனாக்கு ஆத்திரமாக இருந்தது .அவர் தேவாவை எந்த அளவுக்கு கொடுமை படுத்தினாரோ அந்த அளவுக்கு தேவா இங்கே நிம்மதியாக இருந்தாள். எல்லோரும் சென்றபிறகு குளித்துவிட்டு வந்த புவனா சாப்பிட உட்கார்ந்தார் .தேவாதான் அவருக்கு சாப்பாடு பரிமாறினாள் .அப்போது அங்கே சஞ்சனாவும் அமிர்தாவும் வந்தார்கள் . சூர்யா புவனா வந்ததை பற்றி அவர்களிடம் சொல்லி இருக்கவில்லை .அதனால் வீட்டில் புதிதாக வந்திருக்கும் நபரை பார்த்து அமிர்தா கொஞ்சம் குளம்பினாள் .

புவனா அமிர்தாவை பார்த்து "யாரும்மா நீ ",என்று கேட்டார் ..அமிர்தா புவனாவை பார்க்க 

தேவா அமிர்தா தங்களுக்கு நெருங்கிய உறவு என்று சைகையால் சொன்னாள் .தேவாக்கு ஒருவரை பிடித்தால் புவனாக்கு எங்கே பிடிக்கும் அவர் அமிர்தாவை முறைத்துவிட்டு "சாப்பிடுறியாம்மா", என்று கேட்டார் .அதை பார்த்தவள் இல்ல எனக்கு வேண்டாம் சாப்பிட்டுதான் வர்றோம் என்று சொன்னாள் .அப்போது சரியாக கருமி அங்கே வர புவனாக்கு கோபம் கோபமாக வந்தது .

"எட்டி தேவா என்னட்டி வீடுக்குள்ள கண்ட இலவுவளையும் விடுற .பாரு அது பாட்டுக்கு வீடுக்குள்ள வருது .போ பூனை", என்று  அங்கிருந்த ஒரு நோட்டை எடுத்து கருமியை அடிக்க போக அமிர்தாக்கு அவர் பேசிய விதம் ஒரு மாதிரி ஆனது .ஆனாலும் தேவாவின் சொந்தம் என்பதால் அமைதியாக இருந்தாள் ஆனால் குழந்தைகளுக்கு என்ன தெரியும் . சஞ்சனாவின் கருமி மீது ஒருவர் கை வைக்க வந்தால் அவள் சும்மா இருப்பாளா .

"ஸ்டாப்பு...  .என்ன பண்ணுறிங்க .அவன அடிச்சா நான் சூர்யா மாமாகிட்ட சொல்லிடுவேன் அப்புறம் நீங்க மாமாகிட்ட அடி வாங்குவிங்க ",என்று சொன்னாள் அவள் சொன்னதை கேட்ட புவனாவின் முகம் அதிர்ச்சியில் மாறியது .அவர் அமைதியாக அவளை பார்க்க அமிர்தாக்கு சிரிப்பு வந்தது .இருந்தாலும் சிரிக்காமல் 

"சஞ்சுகுட்டி நீ இந்த மாதிரி எல்லாம் பெரியவங்ககிட்ட பேசக்கூடாது", என்று சொன்னார் .

"என் கருமியை அடிக்க வந்தா நான் என்ன பண்ணுவேன் .",. என்று சொன்னாள் சஞ்சனா .. என்ன செய்ய  அவள் சூர்யாவின் தோழியாக அல்லவா வளர்கிறாள் அதனால் அவன் குணம் அவளுக்கும் வந்து விட்டது.அதனால்தான் அவள் இப்படி பேசுகிறாள் .

"அத்தை நான் இப்போ போறேன் நம்ம அப்புறமா விளையாடுவோம் ",என்று சொல்லிவிட்டு கருமியை திரும்பி பார்த்த சஞ்சனா "வா கருமி நம்ம போயிட்டு அப்புறம் வருவோம் ",என்று சொல்லிவிட்டு சென்றாள்.

சஞ்சனா குழந்தை தனத்தோடு சொல்லிவிட்டு சென்றாலும் என்னவோ நன்றாக பலமாக அடி வாங்கியது போல இருந்தது புவனாக்கு . சஞ்சனா மீது புவனாக்கு அவ்வளவு  கோபம் வந்தது இருந்தாலும் அவர் அதை காண்பித்துக்கொள்ளவில்லை ..

"சஞ்சனாக்கு அவளோட பூனைன்னா ரொம்ப பிடிக்கும் அதான் அப்படி பேசிட்டா நீங்க எதுவும் மனசுல வச்சிக்காதிங்க", என்று சொன்னாள் அமிர்தா .

"நான் கோபம் எல்லாம் படல ..சின்ன பிள்ளைங்க அப்படிதான் செய்யும் நான் எதுவும் நினைக்கல ",என்றார் .அதை கேட்டவள் சரி என்பது போல தலை அசைத்துவிட்டு தான் கொண்டு வந்திருந்த பூவை தேவாவிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தாள் அப்போது புவனா சாப்பிட்டுவிட்டு தட்டிலேயே கை கழுவிவிட்டு அதை தேவாவிடம் எடுத்து செல்ல சொன்னார் .அவர் தேவாவிடம் பேசும் விதமே அமிர்தாவை கொஞ்சம் யோசிக்க வைத்தது .இருந்தாலும் அவள் எதுவும் பேசவில்லை .தேவா கிட்சன் பக்கம் செல்ல ..

"இந்த தேவா இங்க வந்து ஒரு வேலையையும் செய்ய மாட்டா போலம்மா .எங்க வீட்ல அவ நிறைய வேலை செய்வா ...ம்ம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி அமையுது பாரேன் ..இந்த காலத்துல நல்லா இருக்க பொண்ணுங்களுக்கே இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்காது ஆனா இவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு", என்று சொன்னார். அவர் அப்படி சொன்னதும் தேவாக்கு மிகவும் கஷ்டமானது .அவள் அமைதியாக இருக்க  அமிர்தாக்கும் புவனாவைபற்றி நன்றாக புரிந்தது.இவர்தான் தேவாவின் சித்தி என பிரசாத் சொன்னதையும் இவர் நடந்து கொள்வதையும் பார்த்து உறுதி படுத்திக்கொண்டார் . அவள் நினைத்ததை விட புவனா மிகவும் கொடூரமாக தெரிந்தாள். 

சரி தேவா நான் வீட்டுக்கு போறேன் அப்புறம் பாப்போம் என்று சொன்னவள் வீட்டுக்கு சென்றாள் .வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க அவர்களிடம் கொஞ்சம் நேரம் பேசியவள் பிறகு தங்கள் அறைக்கு சென்றாள்.அவளை பார்த்த பிரசாத் மட்டும் என்னவோ சரியில்லை என்பதை புரிந்துகொண்டு 

"என்ன ஆச்சு ",என்று அவளை தனியாக அழைத்து கேட்டான் அவனை பார்த்த அமிர்தா .

"ஏங்க தேவாவோட சித்தி வந்துருக்காங்க அவங்களை பார்த்தாலே நல்லவங்க மாதிரி இல்ல .நீங்க சொன்னப்போ கூட நான் அவங்க இப்படி இருப்பாங்கன்னு நினைக்கல ஆனா அவங்க ரொம்ப மோசம்ங்க .எனக்கு அவங்கள பார்த்தாலே ரொம்ப கோபம் கோபமா வருது .நல்லா நாலு கேள்வி கேட்கலாம்ன்னுதான் நினைச்சேன் ஆனா அதுவும் தேவாக்கு பிரச்சனையை கொடுத்துருமோன்னு நான் அமைதியா இருந்துட்டேன் .ஆனா எனக்கு அந்த பொண்ண நினைச்சா பாவமா இருக்கு", என்று சொன்னாள் .அதைகேட்ட பிரசாத் 

"நீ எதுக்கு அம்மு தேவை இல்லாம கவலை படுற .நம்ம சூர்யாதான் இருக்கான்ல . அத்தை மாமா ஓவரா பேசுனாலும் பரவாயில்லன்னு ஒதுங்கி போக அவன் என்ன பிரசாத் மாதிரியா .அவன் சூர்யா தேவாவை மட்டும் அவங்க ஏதாவது பண்ணட்டும் வெளிய போங்கன்னு மரியாதையா அவனே துரத்தி விட்டுருவான் . எல்லாரும் என்ன மாதிரி தியாகியா இருப்பாங்களா என்ன ?",என்று கேட்டான் .

"ஓஹோ அப்போ நீங்க என் அம்மா அப்பா உங்களை ஒழுங்கா நடத்தலன்னு சொல்லுறிங்க அப்படிதானே ...என் அம்மா அப்பா உங்களைதான் என்ன விட ரொம்ப பாசமா பாப்பாங்க ஆனா நீங்க அவங்களை இப்படி நினைக்குறிங்கல்ல ",என்று கேட்டாள்.

அதைகேட்டவன் ."ஹே அம்மு நான் என்ன வேணும்னா அப்படி சொன்ன ,இருந்தாலும் நம்ம கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி உன் வீட்ல என்ன எப்படி எல்லாம் வச்சி செஞ்சாங்க அதெல்லாம் வச்சி பாக்கும்போது உங்க அம்மா அப்பா கொஞ்சம் டெர்ரர் பீஸ்தான்", என்று சொன்னான் பிரசாத்.

"எங்க அம்மா அப்பா அப்போ அப்படிதான் சொன்னாங்க .பின்ன நீ என்ன நல்லா வச்சி பாத்துபியான்னு தெரிஞ்சிக்க வேண்டாமா.சும்மா பொண்ண தூக்கி குடுத்துடுவாங்களா .என்ன இருந்தாலும் நீ எங்க அம்மா அப்பா பத்தி அப்படி பேசுனது தப்பு", என்று கோபமாக சொன்னாள் அமிர்தா 

"நான் பண்ணது தப்பா அப்போ", என்று கேட்டான் பிரசாத் 

"ஆமா ",என்றாள் அமிர்தா 

"சரி அம்மு அப்போ மன்னிச்சிடு", என்று சொன்னான் பிரசாத் .

"என்ன இது சண்டை போடுவிங்கன்னு பார்த்தா சாரி கேக்குறிங்க ",என்று ஆச்சர்யமாக கேட்டாள் அமிர்தா .

"தப்புன்னு தெரிஞ்சா சாரி கேக்க வேண்டியது தானே அதுக்கு எதுக்கு டைம் எடுக்கணும்", என்று கேட்டான் பிரசாத் .

"அப்படியா சாரி  கேட்ட உடனே எல்லாம் மன்னிக்க முடியாது .அப்போதான் அடுத்தமுறை இப்படி விளையாட்டுக்கும் இப்படி பேசணும்ன்னு தோணாது", என்று சொன்னவள் எழுந்து செல்ல .அவள் கோபத்தை கண்டு கொஞ்சம் குழம்பியவன் .

"ம்ம் புரிஞ்சிடுச்சு ..நம்ம இவகூட ஒழுங்கா டைம் ஸ்பென்ட் பண்ணி ரொம்ப நாள் ஆகுது அதான் இப்படி பண்ணி அவள சப்ரைஸ் பண்ண கேக்குறா போல ",என்று மனதுக்குள் நினைத்தவன் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான் .

மதிய நேரம் ஆனது புவனா மிகவும் நிம்மதியாக படுத்து தூங்கிகொண்டு இருக்க தேவா சூர்யாவிற்கு மெசேஜ் அனுப்பினாள்" சாப்டாச்சா", என்று .வழக்கம் போல ஒரு ஹார்ட் எமொஜியும் இருந்தது .ஒரு கேஸ் பற்றி தீவிரமாக யோசித்து கொண்டிருந்தவன் சாப்பிட கூட மறந்து போயிருக்க அவன் சிந்தனையை கலைக்கவே தேவாவின் மெசேஜ் வந்தது . போனை எடுத்து பார்த்த சூர்யாவின் முகத்தில் இருந்த கடுமை தேவாவின் மெசேஜ் பார்த்ததும் ,மென்மையாக மாறியது .லேசாக புன்னகை செய்த சூர்யா அவளுக்கு வீடியோ கால் செய்தான் அவன் வீடியோ கால் செய்வதை பார்த்த தேவா தன்னை கண்ணாடியில் ஒருமுறை பார்த்துவிட்டு போன் அட்டென்ட் செய்தாள் .

தேவாவை பார்த்து சிரித்தவன்" என்ன சாப்பிட்டியா", என்று கேட்டான் ,

அவள் இல்லை என்று தலை அசைக்க .

"இவ்ளோ நேரம் சாப்டாம என்ன பண்ணுற நீ முதல்ல சாப்பிடு.டைமக்கு சாப்பிடாம இருந்தா உடம்பு என்ன ஆகுறது.ஒழுங்கா சாப்பிடு", என்று சொன்னான் சரி என்று தலை அசைத்தவள் .

அவனை சாப்பிட்டிங்களா என்று சைகையால் கேட்க அவளிடம் வீர வசனம் பேசியவன் இப்போது என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாற அவனை பார்த்தவள் மீண்டும்

"சாப்பிடவில்லையா", என்று சைகையால் கேட்க ஆமாமா என்று தலை அசைத்தான் .அவள் அவனை  முறைக்க எப்போது எல்லோரையும் தைரியமாக எதிர்கொள்ளும் சூர்யா இப்போது அவள் கண்களை பார்க்க முடியாமல் தடுமாற அவனை பார்த்து சிரித்தவள் சாப்பிட சொல்லி சைகை செய்ய .

"ஹே தேவா இரு நம்ம சேர்த்தே சாபிடலாம் ",என்று சொல்ல தேவாவும் சரி என்று தலை அசைக்க இருவரும் வீடியோகாலில் இருந்தபடியே அதிகம் பேசி சிரித்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர் இதை எல்லாம் புவனா கவனித்து கொண்டு இருந்தான் .

"ம்ம் எவ்ளோ தூரம் சந்தோசமா இருக்கணுமோ இரு ஆனா இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்குறேன்", என்று நினைத்தார் .இவர்கள் இருவரும் சந்தோசமாக சாப்பிட்டுகொண்டு இருக்க அப்போது கதவு ஒரு கான்ஸ்டபில் பதட்டமாக வர அவர் வருவதை வைத்தே ஏதோ பிரச்சனை என்று புரிந்துகொண்ட சூர்யா தேவாவிடம் 

"தேவா நம்ம நைட் பாக்கலாம்", என்று சொல்லிவிட்டு பதில் எதிர்பார்க்காமல் போனை வைத்தான் .தேவாக்கு அவன் அப்படி போனை வைத்தது மியாவும் கஷ்டமாக இருந்தது .இனம் புரியாத ஒரு பதட்டம் மனதில் ஒட்டிக்கொண்டது....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro