Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -39

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

பூஜாக்கும் ஜெய்க்கும் என்ன சொல்ல என்றே தெரியவில்லை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி மௌனமாக இருந்தார்கள். ஜெய் தைரியத்தை வரவைத்துவிட்டு பேச செல்லும் போது வெயிட்டர் ஆர்டர் எடுக்க வர அதனால் வேறு வழி இல்லாமல் தங்களுக்கு தேவையானதை சொன்னவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

"அது அது அதுவந்து", என்று பேச முடியாமல் தடுமாறினான் ஜெய்.

"உங்களுக்கும் பதட்டமா இருக்கா ",என்று கேட்டாள் பூஜா. அவள் அப்படி கேட்டதும் தலை நிமிர்ந்து பார்த்தவன் ஆமாம் என்பது போல தலை அசைக்க அவனை பார்த்து சிரித்தவள," எனக்கும் ரொம்ப பதட்டமாதான் இருக்கு. என்னவோ எதுவுமே படிக்காம எக்ஸாம் ஹாலுக்கு வந்த மாதிரி", என்று பூஜா சொல்ல..

"பயங்கர படிப்ஸ்சா எக்சாம்ப்பில் கூட படிப்புதான் வருது ",என்று கேட்டான் ஜெய்.

"ம்ம்ம் அவ்ளோ படிப்ஸ்ன்னு சொல்ல முடியாது ஆனா கொஞ்சம் படிப்ஸ்தான்", என்று சொன்னாள் பூஜா.

"ம்ம் எப்படிங்க நீங்க திடிர்னு கால் பண்ணி அப்டி சொன்னிஙக ",என்று கேட்டான் ஜெய்.

"நான் என்ன சொன்ன?", என்று கேட்டாள் பூஜா.

அதான்.... என்று இழுத்தான் ஜெய்.எதான் என்றாள் பூஜா

"உங்களுக்கு தெரியும்தான ?',என்று கேட்டான் ஜெய்.

"ம்ம்ம் தெரியும் ஐ லவ் you சொன்னததான சொல்றிங்க ",என்று சாதாரணமாக கேட்டாள் பூஜா.

"என்ன இவ்ளோ சாதாரணமா சொல்றிங்க ",என்று கேட்டான் ஜெய்.

"உண்மையா சொல்லணும்ன்னா இப்போ கூட எனக்கு ரொம்ப பதட்டமாதான் இருக்கு. ஆனா நான் எந்த அளவுக்கு பதட்டமா இருக்கேன்னு காட்டிக்கல", என்று சொன்னாள் பூஜா.

"ஓ அப்படி... அது சரி என்ன எப்படி லவ் பண்ணுறேன்னு ஒத்துகிட்டிங்க. நான் எல்லாம் நீங்க என்ன லவ் பண்ணவே மாட்டீங்க நான் சாமியாரா போயிடுவேன்னுதான் நினைச்சேன் ",என்று சொன்னான் ஜெய். அவன் சொன்னதை கேட்டு சிரித்த பூஜா.

"ஏங்க நான் அந்த அளவுக்கு கல் நெஞ்சக்காரி இல்லங்க. ஆனா உண்மையா நேத்துதான் ரியலைஸ் பண்ண நான் உங்கள எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு . உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு உள்ளுக்குள்ள ஒரு பயம் வந்துச்சு பாருங்க ...நான் அந்த அளவுக்கு இதுவரைக்கும் என் வாழ்க்கையில பயந்ததே இல்லை. ஒரு நிமிஷம் என்கிட்ட இருந்த எல்லாமே என்னவிட்டு போன மாதிரி ஒரு பீல்.[me ; என்ன என்ன என்னா பீலிங்கு ] ஆனால் நீங்க பேசுனப்போ திரும்ப எல்லாமே என்கிட்ட வந்த மாதிரி ஒரு பீல் வந்துடுச்சு.அப்போ ரியலைஸ் பண்ண. இதுக்கு மேல உங்க கூடதான் ஒரு லைப்ன்னு. நம்ம நிறைய பேசல பழகல. அதுக்கு நடுவுல அவ்ளோ சண்டை வேற நிறைய போட்ருக்கோம். ஆனாலும் நீங்கதான் என் லைப்ன்னு முடிவு எடுக்க ஒரு செகண்ட் போதுமானதா இருந்துச்சு. ஆனா அதுக்கும் முன்னாடி உங்களபத்தி கொஞ்சம் தெரியும். இன்னும் டைம் இருக்கு நம்ம நிறைய தெரிஞ்சிக்கலாம்",என்று சொன்னாள் பூஜா.

"ம்ம் தெரிஞ்சிக்கலாம்?",என்று சொன்னான் ஜெய்.

"எல்லாம் நார்மலா இருக்கு ஆனாலும் கொஞ்சம் வித்யாசமா இருக்கு ",என்று சொன்னான் ஜெய்.

"எனக்கும்தான் தைரியமா பேசுறேன் பட் ஸ்டில் கொஞ்சம் பயமாதான் இருக்கு", என்று சொன்னாள் பூஜா.

"ஆரம்பத்தில அப்படிதான் இருக்கும். ஆனா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்மளோட பசங்க ஸ்கூலுக்கு போற டைம்ல நம்ம ஆபிஸ் கிளம்பும்போது ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறப்போ என் அம்மா நம்மள திட்டுறப்போ. இதை எல்லாம் நினைச்சு பாக்குறப்போ கொஞ்சம் சிரிப்பாதான் வரும்", என்று சொன்னான்  ஜெய்...

"ஓ அப்ப கொஞ்சம் வருஷம் கழிச்சா என்கிட்ட சண்டை போடுவிங்க அப்பிடித்தான... முதல் நாள் லவ் சொல்லி மீட் பண்றப்போவே என்கிட்ட இப்படி சொல்றிங்களே. அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் இப்படித்தான் என்கிட்ட சண்டை போடுவீங்களா",என்று கேட்டாள் பூஜா.

"குடும்பம்ன்னா சண்டை வரதான செய்யும்", என்று கேட்டான் ஜெய்.

"ஓஹோ. அப்போ நம்ம ரெண்டு பேருக்கும் சண்டை வந்தா நீங்க என்ன பண்ணுவிங்க ",என்று கேட்டாள் பூஜா.

"வேற என்ன பண்ணுவேன் சமாதானம்தான் பண்ணுவேன்", என்று சொன்னான் ஜெய்.

அவன் சொன்னதை கேட்டு சிரித்துவிட்டாள் பூஜா.அதை பார்த்தவன் தானும் சிரித்தான்.

"So உங்களுக்கு நான் பொய்யா கோபபட்டா அது எப்படி இருக்கும்னு தெரியுமா?', என்று கேட்டாள் பூஜா

"ஏன் தெரியாது அதான் அன்னைக்கு நான் பார்க்ல வச்சி பாத்தேனே", என்று சொன்னான் ஜெய்.

"ஓஹோ அப்டி. ம்ம் சரி நமக்கு என்ன பேசுறதுன்னே தெரியல கொஞ்சம் நெர்வஸ்சா இருக்கு. இல்லை இந்த இடம்தான் இப்படி இருக்கான்னு எனக்கு தெரியல", என்று சொன்னாள் பூஜா.

"ம்ம் ஆமா இந்த இடம் நல்லா இருக்கு ஆனா ரொம்ப சைலண்டா இருக்கு நம்ம வேற எங்கேயாவது போலாம்",என்று சொன்னான் ஜெய்.

"ம்ம் போலாம் ஆனா ஆர்டர் பண்ணத சாப்பிட்டு போவோம்', என்று சொன்னாள் பூஜா. அப்போது அவர்கள் ஆர்டர் செய்தவை வர ஒருவரை ஒருவர் பார்ப்பதப்படி சாப்பிட ஆரம்பித்தார்கள்.

கொஞ்சம் நேரத்தில் சாப்பிட்டு முடித்தவர்கள் .கிளம்ப போக ஜெய் பூஜாவை பார்த்தான் .பூஜா அவனை பார்த்தவள் தன்னுடைய கையை நீட்ட அவளை  பார்த்து சிரித்தவன் பூஜா கையை கோர்த்துகொண்டான் .பூஜா முத்தில் ஒரு புன்னகை தோன்றியது .அவர்கள் இருவரும் ஒன்றாக நடக்க ஆரம்பிக்க அவளை பார்த்து அழகாக சிரித்தான் ஜெய் .அவர்கள் இருவரும் புன்னகையுடன் இருக்க இங்கே தேவா சூர்யாவிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவன் ரிப்ளைக்காக காத்து கொண்டிருந்தாள் .5 நிமிடத்துக்கு ஒருமுறை வாசலை பார்த்துகொண்டு இருந்தாள் .அதை செல்வமும் கவனிக்கத்தான் செய்தார் கிருஷ்ணாவும் கவனித்தான் .

"தேவா நீ இப்படி வாசலுக்கு 5 நிமிசத்துக்கு ஒருமுறை நடந்தா மட்டும் அவன் வந்துடுவானா .கொஞ்சம் உக்காரும்மா ",என்றார் செல்வம்.தேவாக்கு அவர்கள் இருவரும் சாதரணமாக இருப்பதை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது .

"தேவா அவன் வேலை அப்படிம்மா ...நாம டென்சன் ஆனா அவன் உடனே வந்துட மாட்டான் .மெசேஜ் பண்ணியா அவனுக்கு அவன் உனக்கு ரிப்ளை பண்ணானா ?",என்று கேட்டார் செல்வம் .இல்லை என்பது போல தலை அசைத்தாள் தேவா .அவள் முகம் வாடியது அதை பார்த்தவர்.சரிம்மா இன்னைக்கு அவன் வந்ததும் நான் அவன்கிட்ட அதை பத்தி  பேசுறேன் என்று சொன்னார் செல்வம் தேவா சரி என்று தலை அசைக்க தன்னுடைய அறைக்கு சென்றார் செல்வம் அதே நேரம் தேவா அருகில் வந்தான் கிருஷ்ணா.

"அண்ணி இந்த அப்பா இப்படிதான் சொல்வாரு ஆனா கேக்க மாட்டாரு .அதே மாதிரி அண்ணனும் அப்பா திட்டுனா எல்லாம் அவ்ளோவா கண்டுக்க மாட்டான் .அதனால நீங்க அண்ணா வந்ததும் சரியா படிச்சு திட்டிடுங்க .நீங்க மிறட்டுறதுல அவன்  பயந்துடனும் .நீங்க வர்றதுக்கு முன்னாடியும் இப்படிதான் அண்ணி வீட்டுக்கு ஒழுங்காவே வர மாட்டான் .இப்போதான் ஒழுங்கா வர்றான்னு பாத்தா இப்போவும்  இப்படிதான் பண்ணுறான்.நீங்களாவது கொஞ்சம் நல்லா திட்டி விடுங்க அண்ணி அப்போவாது அவன் கேக்குறானான்னு பாப்போம் ",என்று சொன்னான் கிருஷ்ணா.அவன் குரலிலும் சூர்யா இன்னும் போன செய்யவில்லையே என்னும் பதட்டம் இருந்தது .அதை கவனித்தவள் அவன் வந்ததும் திட்டுவதாக சைகை  மூலம் சொன்னாள் .அப்போது சூர்யாவிடமிருந்து இரவு வர மணி 10 ஆகும் உறங்கி விடுங்கள் என்னும் மெசேஜ் வந்தது .அதை பார்த்தவளுக்கு கொஞ்சம் நிம்மதியானது .அப்போது அந்த மெசேஜை பார்த்த கிருஷ்ணா நிம்மதியானான் .பிறகு இரவு நேரம் 10 மணி ஆனபோது தேவா கிருஷ்ணாவை சென்று உறங்க சொன்னாள் முதலில் அவன் உறங்க செல்ல மாட்டேன் என்றுதான் சொன்னான்.ஆனால் தேவாதான் அவனை சமாதானம்  செய்து உறங்க அனுப்பி வைத்தாள் .

தேவாக்கு உறக்கம் வரவில்லை .மணி 10.15 ஆனது அப்போதுதான் சூர்யாவின் பைக் சத்தம் கேட்டது .அவன் வந்ததும் வேகமாக சென்று  கதவை திறந்தவள் முடிந்த அளவுக்கு தன்னை அமைதியாக காண்பித்துக்கொண்டாள்.

அதே நேரம் சூர்யா எதுவும் பேசாமல் நேராக தன்னுடைய அறையை நோக்கி சென்றான் .தேவாக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை .ஒன்று அவள் இவ்வளவு நேரம் கண் விளித்து இருந்ததுக்கு திட்டி இருப்பான். இல்லை என்றால் லேட்டாக வந்ததுக்கு மன்னிப்பு கேட்டிருப்பான். அது எதுவும் இல்லாமல் அவன் மௌனமாக இருப்பது அவளுக்கே வித்யாசமாக இருந்தது .அவன் ரூமுக்கு செலல் கதவவை மூடியவள் .அவனை பின் தொடர்ந்து தன்னுடைய அறைக்கு சென்றாள் .

அவன் செய்வது எல்லாம் தேவாக்கு வித்யாசமாக இருக்க கிருஷ்ணாவிடம் சொன்னது போல எதாவது சண்டை செய்யலாம் என்று நினைத்துகொண்டு அவள் பின்னே சென்றாள் தேவா .சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் .அவன் அருகில் சென்ற தேவ அவன் முகத்தை  பார்க்க அதில் சோகம் தெரிந்தது .அதை பார்த்தவள்  முடியை கோதிவிட ஆரம்பிக்க அவளிடையோடு சேர்த்து அவளை அணைத்துகொண்டான் சூர்யா .தேவாக்கு அவன் அப்படி செய்ததும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.அவன் ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது .அவள் அவன் தலையை உயர்த்தி என்ன ஆனது என்று சைகை மூலம் கேட்க ."இல்தேவா ல என்னவோ இன்னைக்கு என்னோட வாழ்க்கையே திரும்ப பாக்குற மாதிரி இருந்துச்சு.அனு  பாவம்  நான் பார்த்து வளர்ந்த பொண்ணு அவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை .ஒரு தப்பும்  செய்யாத அவளை இந்த உலகம் வார்த்தையால எப்படி குத்தி கிழிக்க போகுதுன்னு நினைக்கும்போதே எனக்கு ரொம்ப கஷ்டமா  இருக்கு .நம்ம செய்யாத ஒரு தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறது எவ்ளோ பெரிய கொடுமை தெரியுமா தேவா .என்ன தைரியமா இருந்து என்ன.... எல்லா கஷ்டத்தை கடந்து வந்தா என்ன.. வலி வலிதான.ஏன் அடுத்தவங்க வாழ்க்கை மேல இவங்க எல்லாம் இவ்ளோ அக்கறை காட்டுறேன் நாசம்  பண்ணுறாங்க .அப்பாவோ அம்மாவோ கூட இல்லன்னா  அதுக்கு பசங்க எப்படியோ பொறுப்பவாங்க  .விட்டுட்டு போன ஒருதங்கள் வச்சி எதுக்கு பசங்கள இந்த உலகம் குறை சொல்லி காயப்டுதுது எனக்கு எதுவும் புரியல தேவா ",என்று முதல்முறை தன்னுடைய மனதில் உள்ள பாரத்தை தேவாவிடம் அடிபட்ட ஒரு குழந்தை போல சொல்ல ஆரம்பித்தான் சூர்யா .தேவா அவன் தலையை மெல்ல வருடி கொடுத்தபடி கேட்க ஆரம்பித்தாள்.

எவ்வளவு வலிமையாக  ஒருவர் வெளியே தோன்றினாலும் அந்த மனிதனுக்கு உள்ளே ஒரு குழந்தை இருக்கும் .அந்த குழந்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஒரு உறவு கிடைத்தால் வாழ்க்கை ஒரு வரம்தான் 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro