Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -38

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

கண்ண......கண்ண......கண்ண.....
உருட்டி உருட்டி......என்னை மெரட்டுனா
நான் என்ன........சிறு பிள்ளையா
பேசி....பேசி...... பேசி....
வார்த்தையால......என்ன தாக்குற
நீ என்ன.......கிளி பிள்ளையா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

காலை நேரம் சூரியன் அழகாக தன்னுடைய கதிர்களை வீசிக்கொண்டு இருந்தது. சூர்யா தன்னுடைய வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தான். தேவா கிருஷ்ணாவுடன் அவர்கள் சைகை பேசி கொண்டிருந்தாள்.சூர்யா ரூமைவிட்டு வெளியே வந்தான். செல்வமும் நியூஸ் பேப்பர் படித்து கொண்டிருந்தார். அவர்கள் யாருக்கும் இன்னும் பிரசாத் வீட்டில் நடந்தது தெரியாது என்பதால் மிகவும் சகஜமாக இருந்தார்கள்.

சூர்யா தன்னுடைய அறையில் தயார் ஆகி கொண்டிருந்தவன் வேண்டுமென்றே  தேவாவை அழைத்தான் .

"இந்த அண்ணனுக்கு நீங்களும் நானும் ஒண்ணா உக்காந்து பேசுனாலே பிடிக்காது போல .எப்போ பார்த்தாலும் கூப்டுடே இருக்கான் .நீங்க போய்ட்டு வாங்க அண்ணி", என்றான் கிருஷ்ணா .அவனை பார்த்து சிரித்தவள் சூர்யாவை காண சென்றாள்.

சூர்யா எதையோ தேடி கொண்டிருந்தான் .அவன் அருகில் சென்றவள் என்ன என்று சைகையால் கேட்க ."என்னோட பிரவுன் கலர் பைல் இருந்துச்சு பாத்தியா", என்று கேட்டான் .

தேவா தனக்கு எதுவும் தெரியாது என்பது போல தலை அசைத்துவிட்டு .அவனுக்கு உதவி செய்தாக சொல்லிவிட்டு தேட ஆரம்பித்தாள்.அவள் கப்போர்டில் தேட அவளுக்கு அந்த பைல் கிடைத்தது .அதை சூர்யாவிடம் கொடுத்தாள் தேவா .அதை பார்த்தவன் 

"ம்ம் நீ வந்து எடுத்து குடுத்தாதான் இது கிடைக்கணும்னுஇருந்துருக்கு போல அதான்  என் கண்ணனுக்கு தெரியாம இருந்துருக்கு பாரேன்", என்று சொன்னான் சூர்யா .அவனை நம்ப முடியாத பார்வை பார்த்தவள் இடுப்பில் கை வைத்துகொண்டு அவனை பார்க்க அவளை பார்த்து சிரித்தவன் .

"என்ன நீ இப்போ எல்லாம் என்ன அடிக்கடி முறைக்கிற. நான் பாவம் தெரியுமா?', என்று கேட்டான் .

தேவா சைகையால் அந்த பைல் இருப்பதை  நீங்க பாக்கலயா என்று கேட்க தன்னுடைய முடியை கோதி விட்டவன் அந்த பைல் தேவையே இல்ல .நீங்கதான் விடிஞ்சா என்ன கண்டுக்குறதே இல்லையி அதான் நானே காரணத்தை உருவாக்கி உன்ன கூப்பிட்டேன் என்றான சூர்யா .அவனை பார்த்து லேசாக சிரித்தவள்  அவன் அருகில் சென்று கன்னத்தை கிள்ளி வைத்தாள்.

"ஸ்  ஆஹ்  வலிக்குது ",என்று சொன்னவன் தன்னுடைய கன்னத்தை தேய்க்க அவனுக்கு உண்மையாக வலிக்கிறது என்று அவன் கன்னத்தை தடவி கொடுத்தாள் தேவா .அவள் கண்களிலில்  தெரியும் பரிதவிப்பை பார்த்தவன் அப்படியே அவள் இடையோடு சேர்த்து அணைத்து கொண்டான்.அவன் அப்படி செய்ததும்தான் அவன் விளையாடி இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் அவனை விட்டு விலக போக" தள்ளி போகாத தேவா அப்போ எனக்கு உண்மையா வலிக்கும் ",என்றன் சூர்யா .அவன் அப்படி சொன்னதும் அவனை பார்த்தவள் மீண்டும் கன்னத்தில்  கிள்ளினாள் .

"என்ன என்னோட கன்னம் அவ்ளோ நல்லாவா இருக்கு சும்மா கிள்ளிட்டே இருக்க",  என்று கேட்டான் சூர்யா .ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் தேவா .

'அது சரி .எனக்கு கூட உன்னோட கன்னம் ரொம்ப  பிடிச்சிருக்கு ஆனா அதுக்காக உன்ன மாதிரி நான் கிள்ள மாட்டேன். கடிச்சு வச்சிடுவேன்", என்று சொன்னவன் அவளை நெருங்கி வர அப்போது ஹாலிலிருந்து சத்தம் கேட்க ஆரம்பித்தது .அந்த சத்தம் கேட்டதும் தேவாவை விலகினான் சூர்யா தேவாக்கும் அந்த பேச்சு  சத்தம் குழப்பத்தை கொடுத்தது. எனவே இருவரும் அந்த அறையைவிட்டு வெளியே வர அங்கே   செல்வத்திடம் பிரசாத்தின்  அம்மா அப்பா இருவரும் பேசி கொண்டிருந்தார்கள் .அதை பார்த்த சூர்யாக்கு குழப்பமாக இருந்தது .பிரசாத் அவர்கள் அருகில் அமைதியாக நின்று கொண்டிருந்தான் .

"என்ன ஆச்சு"  என்று பிரசாத்திடம் கேட்டான் சூர்யா .

'உன் பிரெண்ட ஏன்பா கேக்குற அவன சொல்ல சொன்னா அவன் இல்லாத நியாயத்தை எல்லாம் சொல்லுவான் .நான் உனக்கு சொல்லுறேன்", என்று சொன்ன கோமதி நடந்த எல்லாவற்றையும் சொல்ல அதை கேட்கும்போதே சூர்யாக்கு அவ்வளவு கோபம் வந்தது.செல்வம் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார் .அவருக்கும்கூட பிரசாத் செய்ததுதான் சரி என்று தோன்றியது .

"என்ன சூர்யா நான் சொல்றத கேட்டு அமைதியா இருக்க .பாத்தியா உனக்கே உன்னோட பிரன்ட் பண்ண இந்த பெரிய மனுசத்தனம் பிடிக்கல  அவன் தங்கச்சி வாழ்க்கையை அவனே கெடுத்துட்டு வந்துருக்கான்.சூர்யா நீ எவ்ளோ கேஸ் எல்லாம் பார்துருப்ப இந்த ஒரு சின்ன விசயத்துக்காக இப்படி கல்யாண வாழ்க்கையே தூக்கி போடணுமா .உன்னோட பெரிய மனுஷன் பிரண்டுக்கு கொஞ்சம் புரிய வைப்பா .அவன் மட்டும் மாப்பிள்ளைகிட்ட வந்து மன்னிப்பு கேட்டான்னா அதுக்கப்றம் நாங்க அவங்ககிட்ட எப்படியாவது பேசி அனுவை அங்க வாழ வச்சிடுவோம்.இவங்க எல்லாம் எப்படியோ போட்டுன்னு விட்டுட்டு போகத்தான் நினைச்சோம் ஆனா பெத்த  மனசு இருக்க விட மாட்டேங்குது .தயவு செஞ்சு உன் பிரன்ட்க்கு புரிய வை", என்று கோமதி சொல்ல சுப்பிரமணியம் அமைதியாக இருந்தார் .செல்வம் சூர்யா என்ன சொல்ல போகிறான் என்று பார்த்தார் .

"நீங்க சொல்றதும் சரிதான்மா ரொம்ப பெரிய மனுஷன்தான் ஆகிட்டான்  பிரசாத்",என்று சூர்யா சொல்ல அமைதியா இருந்தான் பிரசாத் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

"ஏண்டா நீ எல்லாம் பிரண்டாடா . இவ்ளோ பெரிய பிரச்சனை நடந்துருக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாம் இருந்துருக்க .பிரச்னைன்னா நான்தான உன் முன்னாடி நிப்பேன். இதென்ன புது பழக்கம் உனக்கு என்ன அவ்ளோ பெரிய ஆளுன்னு நினைப்பா ",என்று சூர்யா கேட்க அப்போதும் எதுவும் பேசாமல் நின்றான் பிரசாத் .

"டேய் இப்போ எதுக்கு வாயை மூடிட்டு நிக்குற . உன்ன நான் நீ பண்ண விசயதுக்காக  திட்ட மாட்டேன் எதுவும் சொல்ல மாட்டேன் நீ பண்ணதுதான் சரி .என்ன பிரச்னை வந்தாலும் பாத்துக்கலாம் யார் என்ன சொன்னாலும் தந்கச்சியை அவன்கூட அனுப்ப வேண்டாம்.இனி நீயே அனுப்புறேன் சொன்னாலும் நான் விட மாட்டேன்", என்று சொன்னான் சூர்யா .அவன் சொன்னதை கேட்ட பிரசாத் அவனை நிமிர்ந்து பார்த்தான் அதில் ஒரு நிம்மதி தெரிந்தது.

'அதுக்காக இப்படி என்கிட்டே சொல்லாம் போனதுக்கு அவ்ளோ சீக்கிரம் மன்னிசிடுவேன்னு மட்டும் நினைக்காத", என்று சூர்யா சொல்ல பிரசாத் அவனி பார்த்து லேசாக புன்னகை செய்தான் .

"ஏன்பா  நீயாச்சு அவனுக்கு அட்வைஸ் பண்ணுவேன்னு பாத்தா நீயும் அவனுக்கே சப்போர்ட் பண்ணுற.இதெல்லாம் ஒரு பிரச்னையா?", என்று  கேட்டார் கோமதி .

"ஆமா நீங்க சொல்ற மாதிரி இது பிரச்னை இல்லன்னு சொல்லி அந்த மாதிரி பணம் வேணும்னு கேட்டு தொந்தரவு  பண்ணுரவங்க வீட்டுக்கே திருப்பி அனுப்பி அந்த பொண்ணு வரதட்சனை  கொடுமை தாங்காம செத்து போறப்போதான் பெரிய கேஸ் ஆகும் .அப்போ பெத்தவங்க அழுவாங்க என்ன பொண்ணு என்கூட இருந்துருக்கலாமேன்னு.உங்களுக்கு அதுதான் நட்டகனுமா ",என்று கேட்டான்  சூர்யா.அவர் சொன்னதை கேட்டு ஒரு நொடி அமைதியானார் கோமதி .

"என்னப்பா நீ என்னவோ எங்க பொண்ணு மேல எங்களுக்கு அக்கறை இல்லாத மாதிரி பேசுற அவ சந்தோசமா வாழணும்ன்னு எங்களுக்கு ஆசை  இல்லையா என்று கேட்க .இல்லை உங்களுக்கு அனு  நல்லா இருக்கணும்னு ஆசை  இல்ல.நீங்க  நாலு பேர்  முன்னாடி கவுரவாமா வாழணும்னுதான் ஆசை ",என்று சொன்னான் சூர்யா .அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்தார்கள் எல்லோரும் .அவன் குரலில் கோபத்தை எல்லோராலும் உணர முடிந்தது. 

'சூர்யா எதுக்குப்பா இந்த மாதிரி எல்லாம் பேசுற கொஞ்சம் பொறுமையா பேசு ",என்றார் செல்வம்.

'நான் கோபமா பேசலப்பா . ஆதங்கத்துல பேசுறேன் .எத்தனை கேஸ் வருது தெரியுமா ஒரு நாளைக்கு  வரதட்ச்சனை கொடுமை ,கொலை அது இதுன்னு அந்த மாதிரி ஒரு நிலைமை நம்ம அனுக்கு வர  கூடாதுன்னு பேசுறேன்.இவங்க தப்பா பேசுவாங்கன்னு பயபடுற நாலு பேர் நாலு நாள் ஆனா இவங்க பிரச்னையை மறந்துட்டு அடுத்தவங்க பிரச்னையை பாக்க போய்டுவாங்க ஆனா அனுக்கு எதாவது ஆச்சுன்னா காலம் முழுக்க இவங்களால அதை மறக்க முடியுமா.என்று சூர்யா கோபத்தில் கேட்க அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொலல் முடியாமல் அமைதியானார்கள் இருவரும்  .அதை பார்த்தவன் 'ஒரு கேள்விக்கு பதில் கூட சொல்ல  முடியல்லன்னா நீங்க எப்போவும் தப்புதான் பண்ணுரிங்க அர்த்தம் .நீங்களே ஒரு விசயத்துல உறுதியா இல்லாதப்போ அதை இன்னொருதன்தர பண்ண சொல்லாதிங்க.பெரியவாங்கன்னா   நீங்க சொல்லுற எல்லாம் சரியைருக்கனும்க்னு அவசியம் இல்ல என்று சொன்ன சூர்யா டேய் வாடா நம்ம போய் அனுவ பாப்போம் ",என்று சொன்னவன் பிரசாரத்தை  அழைத்துக்கொண்டு செல்ல தேவா அவன் கோபமாக செல்வதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

செல்வம் சூர்யா பேசியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டு அனுவுக்காக பொறுமையாக புரியும்படியாக எடுத்து பேச ஆரம்பித்தார் .

'அண்ணி அண்ணா காயிலையே கோபமா போயிருக்கான் இன்னைக்கு முழுக்க இப்படிதான் இருப்பான்", என்று சொன்ன கிருஷ்ணா தானும் ஸ்கூலுக்கு கிளம்ப சென்றான் அவனுக்கு இந்த பிரச்னையில் என்ன பேச என்றே தெரியவில்லை .தேவா அமைதியாக இவர்களை பார்த்துக்கொண்டு நின்றாள்.

...........................

சாயங்காலம் ஆனது பூஜா காபி ஷாப்பில் ஜெய்க்காக வெயிட் செய்து கொண்டிருந்தாள் .அவனும் சொன்ன நேரத்தை விட 5 நிமிடத்துக்கு முன்னமே வந்து சேர்ந்தான் .வனுக்கு இத்தனை நாள் இல்லாமல் இன்று பூஜாவை எதிர்கொள்வது என்பது கடினமாக இருந்தது .அவள் எதிரில் வந்து அமர்ந்தவன்' ஹாய் லேட் ஆயிடுச்சா", என்று கேட்டான் இல்ல நான்தான் சீக்கிரமா வந்துட்டேன் என்றாள் பூஜா .

அதன் பிறகு இருவரும் மௌனம் ஆனார்கள் .இருவருக்கும் என்ன பேச என்று தெரியவில்லை .இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியாக இருக்க இங்கே  சென்னை வருவதற்காக ட்ரைன்  ஏறினார் புவனா .

.........................

ஹாய் மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க. உங்களை எல்லாம் பார்த்து கிட்டத்தட்ட ஒரு  மாசம் ஆகுது .நான் உங்களை எல்லாரையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ண .எனக்கு இங்க நிறைய பிரண்ட்ஸ் உண்டு உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ண.கமென்ட் செக்சன்ல ஆர்த்திகூட பேசுறத ரொம்ப மிஸ் பண்ண .கீர்த்தி எத்திராஜ்,நித்யா அக்கா ,மூர்த்தி அண்ணா ,ஐஸ்வர்யா .என்னோட பிரின்ட் பாஹீம்,சிவா  இன்னும் நிறை பேர் நான் ரொம்ப மிஸ் பண்ண.கமென்ட் பண்ணா எப்போவும் ரிப்ளை பண்ணுவேன் அதுவே முடியாம போச்சு ..மெசேஜ் பண்ண எல்லாருக்கும் நன்றி .நான் ரொம்ப கஷ்ட பட்டேன்பா .வாழ்க்கையில கஷ்ட படல கடந்த 1 மாசம் நல்லாத்தான் போச்சு புதுசா பொறுப்புகள் வர்றபோ சில விஷயங்கள்  தியாகம்ம் பண்ணிதான் ஆகணும் .ஆனா என்னால தியாகம் பண்ண முடியல .சோ இந்த கதையை நான் நிச்சயம் முடிப்பேன் .எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோங்க  .

நன்றி ............... 




Bạn đang đọc truyện trên: Truyen247.Pro