
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -37
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எந்தக் கலைஞனும்
அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப்
பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும்
அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம்
செல்லும் {nallaa iruku papa😁)
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"நீங்க எனக்காகவா அழுறிங்க பூஜா ?"என்று ஜெய் கேட்ட உடன் என்ன சொல்ல என்று தெரியாமல் பூஜா மௌனமாக ஜெய் மீண்டும் அவளிடம்" எனக்காகவா அழுதிங்க?",என்று மீண்டும் கேட்டான் ஜெய்..
பூஜா எதுவும் பேசவில்லை அவளால் பேச முடியவில்லை....
"பூஜா உங்ககிட்டதான் கேக்குறேன்... ஓ சரி என்கிட்ட பேச விருப்பம் இல்லையா?.. அப்போ சரி நான் போன வைக்கிறேன் ",என்று ஜெய் சொல்ல இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள் இப்போது பேசினாள்.
"இல் ...இல்லை.. போன் வைக்காதீங்க ",
என்று சொன்ன பூஜா மீண்டும் மௌனம் ஆனாள்.
"அட என்னங்க நீங்க. எனக்காகதான் அழுறேன்னும் ஒத்துக்க மாட்டேங்குறிங்க. சரி வேற எதாவது பேசுவீங்கன்னு பாத்தா சைலன்ட்டா இருக்கீங்க என்ன உங்க பிரச்சனை. என்ன நீங்க இப்படி எல்லாம் பண்ணுறத பாத்துட்டு லவ் பண்ணுறீஙகளான்னு...", என்று ஜெய் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கும் முன்பாகவே" ஆமா" என்றாள் பூஜா.
அவளிடம் ஜெய் சாதாரணமாக அந்த கேள்வியை கேட்டான். நிச்சயம் பூஜா இல்லை என்று மறுப்பாள் என்றுதான் எதிர்பார்த்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததுக்கு மாறாக அவள் ஆமாம் என்று சொல்லி விட்டாள். இப்போது ஜெய்க்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.அவன் முகத்தில் தானாக புன்னகை தோன்றியது .சந்தோஷத்தில் துள்ளி குதித்தான்
"ஹெலோ நான் சொன்னது உங்களுக்கு கேட்டுச்சா ?",என்று கேட்டாள் பூஜா. அவள் அருகில் இருந்த பூஜாவின் தோழி அவளை "என்ன?", என்றுபோல கேட்க நீ கொஞ்சம் பக்கத்துல உள்ள ரூம்க்கு போறியா என்று கேட்டாள் பூஜா நடத்து நடத்து என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு சென்றாள் அந்த பெண்.
இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுகொண்டுதான் இருந்தான் ஜெய்.பூஜா கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
"ஹெலோ ஜெய் என்ன எதுவும் பேசாம இருக்கீங்க ?",என்று கேட்டாள் பூஜா.
"ஹான் கேட்டுட்டுதான் இருக்கேன் பூஜா. எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல. ரொம்ப சந்தோசமா இருக்கேன். ஆனா அந்த சந்தோசம் எனக்குள்ள எப்போவும் இருக்கணும்... சோ இன்னொருமுறை உங்களோட வாயால என்ன லவ் பண்றேன்னு சொல்ல முடியுமா?", என்று கெஞ்சலாக கேட்டான் ஜெய். பூஜாக்கு ஏனோ வெட்கம் எல்லாம் வந்தது.
"ம்ம்ம் நான் என்ன சொன்ன நான் ஒண்ணுமே சொல்லலயே", என்றாள் பூஜா. அவள் தன்னிடம் விளையாடுகிறாள் என்று புரிந்து கொண்டான் ஜெய்....
"ஓ அப்ப நீங்க ஒண்ணுமே சொல்லலையா?", ஆனா என்னோட காதுக்கு என்னவோ கேட்டுச்சே என்றான் ஜெய்.
"இங்க பாருங்க மிஸ்டர் ஜெய். எனக்கு இப்போ தூக்கம் வருது நாளைக்கு எனக்கு வேலைக்கு போணும். உங்களுக்கு எதாவது பேசணும்ன்னோ ,இல்லை கேக்கணும்ன்னோ தோணுச்சுன்னா சாயங்காலம் ஆறு மணிக்கு ஆபிஸ்கிட்ட இருக்க காபி ஷாப்க்கு வாங்க பேசலாம் ",என்று சொன்னாள் பூஜா அவள் சொன்னதை கேட்டு மகிழ்ச்சியில் சிரித்தான் ஜெய்.
"ஓ கண்டிப்பா வரலாமே",என்றான் ஜெய்.
"அப்ப ஒகே நாளைக்கு நேர்ல பேசலாம்",என்ற பூஜா போனை கட் செய்ய போக "பூஜா ",என்று அழைத்தான் ஜெய். சொல்லுங்க என்றாள் பூஜா." I love you", என்றான் ஜெய் அவன் அப்படி சொன்னதும் பூஜாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. இப்போது மீண்டும் அவளுக்கு வார்த்தைகள் கிடைக்காமல் போனது. ஜெய் அவள் நிலை உணர்ந்தவன்" நான் சொல்ல நினைச்சதை சொல்லிட்டேன் இனி நம்ம நேர்ல பாக்குறப்போ மிச்சத்தை சொல்றேன்", என்றான் . "ம்ம்ம் நேரில பேசலாம் ",என்ற பூஜா போனை கட் செய்தாள். போனை கட் செய்தவள் அப்படியே கட்டிலில் சரிந்தாள். அவள் முகம் முழுவதும் சிவந்து இருந்தது.
"ஒகே இனி எதையும் மறைச்சு ஒண்ணும் பண்ண போறது இல்லை. தேவா வாழ்க்கையை அவளால பாத்துக்க முடியும் இனி நான் என்னோட வாழ்க்கை பத்தி யோசிக்கலாம்", என்று மனதுக்குள் நினைத்த பூஜா. போனை ஆன் செய்து
ஜெய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு சென்று அவனுடைய புகைப்படத்தை பார்த்து ரசிக்க ஆரம்பித்தாள். அந்த நேரம் ஜெய்யிடமிருந்து மெஸேஜ் வர ஆவலாக அவனுக்கு மெசேஜ் செய்ய ஆரம்பித்தாள் பூஜா (me : இதுபோன்ற காட்சிகள் கதைக்கு என்னவோ பிரியாணியில் இருக்கும் லெக் பீஸ் போல நன்றாக இருக்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் கிராம்பு ஏலக்காய் மாதிரியும் இருக்கலாம். அதனால உஷாராக இருக்கவும் 😌 கருத்து மக்களே )
காதல் தொடங்கும் நேரம் பேச காரணம் இல்லை என்றாலும் மனம் ஆயிரம் கதைகள் பேச எண்ணி ஏங்கி தவிக்கும் எனவே அவர்கள் இப்போது பேசுவதை நிறுத்த மாட்டார்கள் என்பதால் நாம் தேவா சூர்யா பக்கம் செல்வோம்.
இங்கே தன்னுடைய அறைக்கு வந்த தேவா சூர்யா நன்றாக உறங்கி கொண்டிருப்பதை பார்த்து குழப்பம் அடைந்தாள்.இருந்தாலும் அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல் அவன் அருகில் சென்று படுத்து கொள்ள சூர்யா அப்படியே சாதாரணமாக திரும்பி படுத்து கொண்டான். அவனை பார்த்தபடி இருந்த தேவா அவன் முடியை மெல்ல கோதிவிட்டபடி உறங்கபோக அவனை முடியை கோதிவிட்டபடி அவனை பார்த்து கொண்டிருந்தவள் பிறகு அவன் நெற்றியில் லேசாக முத்தம் கொடுத்துவிட்டு தனக்கு தானே சிரித்து கொண்டு கட்டில் அருகில் இருக்கும் சுவிட்ச்சை அணைக்க போக அவளை சட்டென்று இழுத்தான் சூர்யா அவன் அப்படி செய்ததில் தேவா அவன்மீது விழுந்தாள். அவள் அதிர்ச்சியாக சூர்யாவை பார்க்க சூர்யா அவளை பார்த்து புன்னகை செய்தான்.அவளுக்கு முன்பே கொஞ்சம் சந்தேகம் இருந்தது சூர்யா உறங்கவில்லை என்று அதனால்தான் அவள் அவனுக்கு தலை கோதி விட்டாள். அப்போது சூர்யா எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததால் அவன் உண்மையாக உறங்கிவிட்டான் என்று நினைத்துவிட்டாள்.ஆனால் அவள் நினைத்து தவறு என்று சூர்யா நிரூபித்து விட்டான்.
தேவா அவனிடமிருந்து விலக போராட அவளை அசைய விடாமல் இன்னும் இறுக்கமாக பிடித்து கொண்டான்.
"ஹெலோ மேடம் என்ன தப்பிச்சு போக பாக்குறீங்களா அதெல்லாம் உன்ன அப்படி விட முடியாது. இவ்ளோ நேரம் நீ என்ன சைட் அடிச்சல்ல இது என்னோட turn அதனால கொஞ்சம் அமைதியா இரு",என்று சூர்யா சொல்ல தேவாக்கு வெட்கம் வந்தது.
"அட என்னடா இது இப்படி வெக்கபட்டா நான் என்ன பண்றது", என்று சூர்யா கேட்க அவன் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து கொண்டாள் தேவா...
"ஹெலோ மேடம் இன்னைக்கு உங்களுக்கு தண்டனை இருக்கு என்று தேவா சொல்ல தேவா சட்டென்று நிமிர்ந்து அவனை புரியாமல் பார்த்தாள்.
ம்ம்ம் ஆமா உனக்கு தண்டனை இருக்கு. என்ன மாதிரி ஒரு அப்பாவி புருஷன வேணும்ன்னே படம் பாக்க போறேன்னு காக்க வைச்ச குற்றதுக்காக உங்களுக்கு நான் தண்டனை தர போறேன் அது என்ன தண்டனைன்னா நான் நாளைக்கு காலையில இருந்து உங்ககிட்ட பேச மாட்டேன் (me : பேச வேண்டாம்ன்னா உடனே பேசாம இருங்க அத எதுக்கு தள்ளி வைக்கிறிங்க ஆபிசர் 😂)
என்று சூர்யா சொல்ல அவனை சந்தேகத்துடன் பார்த்த தேவா சரி என்பது போல தலை அசைத்தாள் தேவா. அதை பார்த்த சூர்யாக்கு ஆச்சர்யம் ஆனது.
"ஹோய் என்ன நீ நான் கிட்சன்ல விளையாடுன மாதிரி இப்போவும் விளையாடிட்டு இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கியா. இப்போ உண்மையாவே உன்மேல கோபமா இருக்கேன் ",என்று அவன் சொல்ல அவனை பார்த்து சிரித்தவள் அவன் இன்னும் தன்னை விடாமல் இறுக்கமாக பிடித்திருப்பதை கண்ணால் சொல்ல... தன்னை தானே நொந்து கொண்டவன் அவளை பார்த்து" இங்க பாரு எனக்கு கோபம் ரொம்ப அதிகமா இருக்கு அதனால...", என்று சொல்ல வர அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள் தேவா. அதிலே பேச வந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் மறந்த சூர்யா அவளை பார்த்தான்.தேவா அவனை பார்த்து சிரித்தாள் .சில நொடியில் நிஜ உலகுக்கு வந்த சூர்யா பேச ஆரம்பித்தான்.
"ம்ம்ம் நீயும் தேறிட்ட தேவா. சரி நீயும் பாவம் ரொமான்டிக்கான படம் பாக்காம இங்க வந்துட்ட அதனால அதை சரிகட்ட நம்ம ரொமான்ஸ் பண்ணுவோம் ...",என்று சூர்யா சொல்ல தேவா அவனை பார்த்து புன்னகை செய்தவள் அவன் மீது சாய்ந்து கொண்டாள்....
அதிகாலை 4.30 மணி அளவில் பிரசாத் மற்றும் அவன் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். பிரசாத் அம்மா மற்றும் அப்பா இருவரும் வீட்டுக்குள் வரும்போதே மிகவும் இருக்கமான முகத்தோடுதான் வந்தார்கள். அமிர்தா அவர்கள் வந்ததும் முதலில் அனுவை சென்று அழைத்து வந்தாள்.
"அனு நீ ரொம்ப டையார்ட்டா இருப்ப ரெஸ்ட் எடு. எல்லாமே சரி ஆகிடும்", என்று சொன்ன அமிர்தா அவள் கையிலிருந்து குழந்தையை வாங்க போக. "இப்போ உனக்கு சந்தோசமா அமிர்தா. என்னோட பொண்ணு வாழ்க்கை நாசமா போச்சு. நீ உன்னோட புருஷன் புள்ள கூட சந்தோசமா இருப்ப. என் பொண்ணு மட்டும் இங்க நம்ம கூட வாழா வெட்டியா இருக்கணுமா ?என்று பொரிந்து தள்ளினார் அனுவின் அம்மா.
"அம்மா கொஞ்சம் அமைதியா இருங்கம்மா .நம்ம எதுவா இருந்தாலும் காலையில நல்லா விடிஞ்சதுக்கு அப்புறம் பேசிக்கலாம் ",என்றான் பிரசாத். அப்போது அவனிடம் அவன் அம்மா ஏதோ சொல்ல வர அவரை தடுத்தார் அனுவின் அப்பா.
"நீயேன்மா அவங்ககிட்ட எல்லாம் தேவை இல்லாம பேசுற. அவங்க எல்லாம் பெரிய ஆள் ஆயாச்சு இதுக்குமேல நம்ம சொல்லுறத எல்லாம் எங்க கேக்க போறாங்க", என்று கேட்டவர் தன்டைய அறையை நோக்கி செல்ல," அப்பா ",என்று அழைத்தான் பிரசாத் ஆனாலும் அவர் திரும்பி பார்க்கவில்லை. "எல்லாரும் நல்லா இருங்க ...",என்று சொல்லிவிட்டு அவருடன் சென்று விட்டார் பிரசாத் அம்மா..
"நம்ம நல்லாத்தான் அண்ணி இருப்போம்", என்று அனு சொல்ல அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது அவளை அணைத்து கொண்டாள் அமிர்தா.
"எல்லாமே சரி ஆகிடும் அனு. இதெல்லாம் மாறும்", என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாள் அமிர்தா.
எல்லா நேரத்துலயும் பெத்தவங்க சொல்றது நல்லதா இருக்குறது இல்லை நல்லதுக்கான அளவீடு ஆளுக்கு ஆள் மாறும் ஆனால் நியாயத்துக்கான அளவீடு எப்போவும் மாறாது. முடிஞ்ச வரைக்கும் நல்லபடியா நியாயமா இருக்கணும். அவ்வளவுதான்.
அதிகாலை நேரம் புவனா தன்னுடைய வீட்டில் கோபமே உருவாகி அமர்ந்திருக்க அவருக்கு எதிரே சுதாகரும் அவனுடைய அக்காவும் உட்கார்ந்திருந்தார்கள்.இவர்கள் மூவரின் கூட்டணி தேவா சூர்யா உறவுக்கு எந்த மாதிரி பாதிப்பை ஏற்படுத்த போகிறது என்பதை வரும் பதிவுகளில் அறிவோம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது Abirami G. N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro