Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -36

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

சூர்யா புன்னகை செய்தபடி போனில் பேச அங்கே சுதாகருக்கோ மரண அடி விழுந்து கொண்டிருந்தது. சூர்யா சுதாகர் அனுப்பிய புகைப்படத்தை பார்த்தான்தான். அவனுக்கு அதை பார்த்த உடன் சூர்யாக்கு சந்தேகம் வந்தது. அது தேவா தனக்கு துரோகம் செய்து விட்டாளோ என்று அல்ல மாறாக தன்னையும் தேவாவையும் யார் இதுபோல பிரிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று. அப்போது அந்த போட்டோ வந்த நம்பரை பற்றி விசாரித்து பார்த்தபோதுதான் அது சுதாகர் புதிதாக வாங்கிய நம்பர் என்பதை சூர்யா கண்டறிந்தான்...அதற்குபிறகு அவன் ஏன் சும்மா இருக்க போகிறான். சுதாகர் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லையே அதனால் ஏற்கனவே அவன் மீது இருந்த பழைய கேஸ் சிலவற்றை தூசிதட்டி எடுத்து அதோடு அவன் செய்த காரியத்துக்கும் சேர்த்து நாலு தட்டுதட்டி தன் நண்பர்கள் மூலம் ஸ்டேஷனில் உட்காரவைத்துவிட்டான் சூர்யா. பாவம் எதுக்கு அடி வாங்குகிறோம் என்று தெரியாமல் அடி வாங்கி கொண்டிருந்தான் சுதாகர்.எப்படியும் அவன் வெளியே வந்துவிடுவான் என்று சூர்யாக்கு தெரியும்தான் இருந்தாலும் அவன் செய்த தவறுக்கு தண்டனை தர முடிவு செய்துதான் இது போல செய்திருந்தான். போன் மூலம் அவன் அடி வாங்கியதை எல்லாம் கேட்ட சூர்யா கொஞ்சம் நேரத்தில் போனை வைத்துவிட்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தான்.

அவன் வந்தநேரம் பூஜாவும் வீட்டுக்கு வந்தாள்.அவளை ஓடி சென்று வரவேற்றாள் தேவா.
அவளை பார்த்து புன்னகை செய்தபடி
வந்தாள் பூஜா.

வழக்கம் போல அவள் எல்லோரிடமும் பேசினாள். எல்லாம் மகிழ்ச்சியாகதான் சென்று கொண்டிருந்தது.கிருஷ்ணாவும் பூஜாவும் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசி கொண்டிருந்தார்கள்..

"அக்கா நீங்களும் எங்க கூட இங்கயே இருக்கலாம்ல. நீங்க அப்பப்போதான் வர்றிங்க.வந்ததும் கொஞ்சம் நேரத்தில போய்டிறீங்க. நீங்க இங்கயே இருந்தா அண்ணியும் ஜாலியா இருப்பாங்க. நானும் ஜாலியா இருப்பேன்ல", என்று கிருஷ்ணா சொல்ல பூஜா அவனை பார்த்து சிரித்தாள்.

"கிருஷ்ணா ஒரு விஷயம் சொன்னா அது சரியாதான் இருக்கும்..ஆனா என்ன பண்ணுறது எனக்கு ஆபிஸ் அங்க இருந்துதான கிட்ட இருக்கு.நான் வேற என்னைக்காவது இங்க தங்குறேன். ஒகேவா கிருஷ்ணா ",என்று பூஜா சொல்ல கிருஷ்ணா முகம் வாடியது.

"அட போங்க அக்கா.நீங்க இப்படி எல்லாம் சும்மா என்ன சமாதானம் பண்ணுறதுக்காக சொல்றிங்கன்னு எனக்கு தெரியும்.நீங்க எல்லாம் இங்க இருக்க மாட்டீங்க ",என்று கிருஷ்ணா சொல்ல.

"இல்லைடா கிருஷ்ணா ஹாஸ்டல்ல சொல்லாம எல்லாம் ஒருநாள் வெளிய தங்க முடியாது.இல்லைன்னா நான் நிச்சயமா இங்க தங்கி இருப்பேன்", என்று பூஜா சொல்ல" ம்ம்ம் ",என்றான் கிருஷ்ணா..

"சரிம்மா உன்னால எங்க கூட தங்கதான முடியாது.ஆனா உன்னால எங்க கூட சாப்பிட முடியும்ல ",என்று செல்வம் கேட்க மறுக்க முடியாமல் சம்மதித்தாள் பூஜா.பூஜா போனை வைத்து கிருஷ்ணா விளையாடி கொண்டிருந்தவன் செல்வம் அழைத்ததும் போனை கையில் வைத்துகொண்டே அவரிடம் பேசினான்.அப்போது அவனையும் அறியாமல் அவனுடைய விரல்கள் தொடுதிரையில் பட்டு ஜெய்க்கு அழைப்பு சென்று விட்டது இதை கிருஷ்ணா கொஞ்சம் கூட கவனிக்கவில்லை. இரண்டு ரிங் சென்றபிறகுதான் கவனித்தவன்
போனை கட் செய்துவிட்டான்..பாவம் ஜெய்க்கு அது தெரியாது அதோடு அவனும் போனை சைலன்ட்டில் போட்டிருந்ததால பூஜாவின் அழைப்பை கவனிக்கவில்லை.அவனும் வேலையில் மும்முரமாக இருந்து விட்டான்.

இரவு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். சமையல் எல்லாம் சூர்யா பார்த்தது என்பதால் அவன்தான் பறிமாறினான்.
சாப்பிட்டு கொண்டிருக்கும்போது தேவாக்கு புரையேற அவளுக்கு பூஜா தண்ணீர் கொடுக்கவர அதற்கு முன்பாக தேவாக்கு தலையை தட்டி கொடுத்த சூர்யா அவளுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து கொடுத்தான். இதை எல்லாம் பார்த்த பூஜாக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அவள் எதிர்பார்த்தது இதைத்தான்.. தேவாவை நன்றாக பார்த்துக்கொள்ள ஒரு குடும்பம் அது இன்று தேவாக்கு கிடைத்துவிட்டது எனும்போது அவளுக்கு அதற்கு மேல் எதுவும் தேவை இல்லை என்று தோன்றியது. அதோடு இனி தேவா வாழ்க்கையில் தான் அந்த அளவுக்கு கவலைகொள்ள தேவையில்லை என்னும் எண்ணமும் அதிகம் ஆனது.கொஞ்சம் நேரம் எல்லோருடனும் மகிழ்ச்சியாக பேசிய பூஜா கிளம்ப தயார் ஆனாள்.அப்போது ஏற்கனவே கறுத்திருந்த வானம் அடை மழையை பொழிய தயாராகி கொண்டிருந்தது

அதை பார்த்த செல்வதுக்கு இந்த மழை நேரத்தில் அவளை அனுப்புவது சரி என்று படவில்லை.

"ஏன்மா பூஜா நீ இந்த மழையில நீ போய்தான் ஆகணுமா?", என்று கேட்டார் செல்வம்..

"ஆமா அங்கிள் டைம் ஆகுது.சீக்கிரமா போனாதான் நல்லது. இம்பார்ட்டண்ட் மெயில் வேற அனுப்பணும் அங்க போனாதான் அத பண்ண முடியும்", என்று சொன்னாள் பூஜா.

"சரி பூஜா அப்போ நான் உன்ன கொண்டு விடறேன் ",என்றான் சூர்யா. தேவாவும் அதுதான் சரி என்பது போல தலை அசைத்தாள்.

"இல்லை மாமா மழை வர்ற மாதிரி இருக்கு. இதுல நீங்க வந்தா நீங்களும் நனையணும். நான் ஆட்டோல போய்டுவேன் மாமா. ஆட்டோ வந்துடும் இப்போ ",என்றாள் பூஜா. சூர்யா அவளை கட்டாயப்படுத்த விரும்பவில்லை அதனால் சரி என்பது போல தலை அசைத்தான்.

ஆட்டோ வந்ததும் எல்லோரிடமும் விடைபெற்ற பூஜா கிளம்பிவிட்டாள். கொஞ்சம் நேரத்தில் தன்னுடைய ஹாஸ்டலுக்கு வந்தவள் அவளுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள். மேகம் மெல்ல கரைந்து மழையாக பொழிய துவங்கியது.

அதே நேரம் வீட்டுக்கு வந்த ஜெய் அப்போதுதான் பூஜா தனக்கு அழைத்திருப்பதை பார்த்தான்.

தேவாவும் கிருஷ்ணாவும் வழக்கம் போல பேசி கொண்டிருந்தார்கள். சூர்யா அமைதியாக அவர்கள் பேசுவதை பார்த்து கொண்டிருந்தான்.செல்வம் உறங்க சென்றுவிட்டார்

"அண்ணி வர்றிங்களா நம்ம போய் மழையில நனைவோம் செம்ம ஜாலியா இருக்கும்", என்று அழைத்தான் கிருஷ்ணா. அவனை பார்த்து முறைத்தான் சூர்யா.

"எதுக்கு இப்போ போய் மழையில நனைஞ்சிட்டு அப்புறம் உடம்பு சரி இல்லாம போகவா. ஏதோ காலை நேரமா இருந்தா கூட பரவாயில்லை. இப்போ போய் மழையில நனைய போறானாம். போடா போய் ஒழுங்கா தூங்கு", என்று சொன்னான் சூர்யா.

"ஹே போடா மணி 9.30 தான் ஆகுது இப்போ எல்லாம் என்னால தூங்க முடியாது. அண்ணியும் நானும் அலைபாயுதே பாக்க போறோம். வேணா நீயும் கூட உக்காந்து பாரு ",என்று அழைத்தான் கிருஷ்ணா. அவன் சொன்னதை கேட்ட சூர்யாக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. கிருஷ்ணா லேப்டாப் ஆன் செய்ய அவனுடன் சேர்ந்து படம் பார்க்க ஆர்வமாக உட்கார்ந்தாள் தேவா. அதை பார்த்த சூர்யாக்கு தனக்கு தானே பரிதாபபடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

"இவள வச்சிக்கிட்டு என்ன பண்ணுறது..என்கூட ரொமான்ஸ் பண்ண வேண்டிய டைம்ல. ரொமாண்டிக் மூவி பாக்க போறேன்னு உக்காந்துருக்கா.கஷ்டம் ரொம்ப கஷ்டம்.... சரி அவ விருப்பபடுறா பாத்துட்டு போகட்டும்", என்று மனதுக்குள் நினைத்த சூர்யா அமைதியாக எழுந்து சென்றான்... அவன் சென்றபிறகு கிருஷ்ணா தேவாவை பார்த்தான்..

"அண்ணி எதுக்கு அண்ணி அண்ணாகிட்ட படம் பாக்க போறோம்ன்னு சொல்ல சொன்னிங்க", என்று கேட்டான் கிருஷ்ணா.

ஒன்றுமில்லை என்பது போல கண் அடித்தாள் தேவா.

"சரி அண்ணி நம்ம படம் பாப்போம்.ஆனா எனக்கு தூக்கம் வந்தா நான் தூங்கிடுவேன் அதுக்கப்பறம் உங்களுக்கு தூக்கம் வந்தா நீங்களும் லேப்டாப் ஆப் பண்ணிட்டு போய்டுங்க ",என்று சொன்னான் கிருஷ்ணா தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.

அதே நேரம் ஹாஸ்டலில் இருந்த பூஜா அவள் அனுப்ப வேண்டிய மெயிலை தயார் செய்து அனுப்பினாள். அப்போது போன் வர லேப்டாப்பை பார்த்தபடி போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள் பூஜா.மறுமுனையில்

"ஹெலோ பூஜா", என்ற ஜெய்யின் குரல் கேட்டது. அதை கேட்டதும் ஏனோ பூஜா மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றியது. அது அவளுக்கே புதிதாக இருந்தது.ஆனாலும் அவள் மனம் அந்த மகிழ்ச்சி தவறு என்று அவளுக்கு எடுத்து சொல்ல அவள் மகிழ்ச்சி காணாமல் போனது. முகத்தை இறுக்கமாகவைத்துகொண்ட பூஜா "ஹெலோ", என்றாள் வெறுமையாக

"சொல்லுங்க பூஜா", என்றான் ஜெய்.ஒரு சின்ன எதிர்பார்ப்புடன்.

"உங்ககிட்ட சொல்ல எனக்கு எதுவுமில்லை "என்றாள் பூஜா அதைகேட்ட ஜெய்க்கு கொஞ்சம் குழப்பம் ஆனது.

"இல்லை பூஜா நீங்கதான் எனக்கு கால் பண்ணி இருக்கீங்க. அதனாலதான் நான் உங்கள கூப்பிட்டேன் ",என்று பொறுமையாக சொன்னான் ஜெய். பூஜா அவனுக்கு அழைக்கவில்லை என்பதால் அவன் சொல்வதை நம்பவேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை.

"ஓ அப்ப நான் உங்களுக்கு போன் பண்ண அதை பாத்துதான் நீங்க என்ன கூப்பிட்டீங்க அப்டித்தான", என்று கேட்டாள் பூஜா.

"ம்ம்ம் ஆமா", என்றான் ஜெய்.

"ம்ம்ம் அது சரி. இந்த மாதிரி எல்லாம் பேச எங்க இருந்துங்க கத்துக்கிறீங்க. என்கிட்ட பேசதான் கால் பண்ணேன்னு ஒத்துக்கோங்க.அதை கூட நான் பொறுத்துககிறேன் ஆனா இப்படி நான் கால் பண்ணன்னு பொய் எல்லாம் சொல்லாதீஙக. (Me : நெருப்புல சுட்டா ஆறிடும் வெறுப்புல சுட்டா ஆறாதுன்னு வடிவேலு சொல்லி இருக்காரும்மா பூஜா 🤷‍♀️)என்று பூஜா சொல்ல அதை கேட்ட ஜெய்க்கு கோபம் வந்தது.

"இங்க பாருங்க பூஜா உங்களுக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது. ஒரு பொண்ணு பிடிக்கலன்னு சொன்ன பிறகும் காதல் கத்திரிக்கான்னு சொல்லிட்டு பின்னாடியே சுத்தி அவங்கள கஷ்ட படுத்துற பையன் மாதிரியா.... அப்படி நீங்க நினைச்சா சாரி மிஸ் பூஜா நான் ஒண்ணும் அந்த மாதிரி பையன் இல்லை. நீங்கதான் எனக்கு முன்னாடி கால் பண்ணி இருக்கீங்க. உங்க நம்பர் பாத்ததுக்கு பிறகு கொஞ்சம் சந்தோசம் சந்தோசப்பட்டேன். ஆனா நான் நீங்க கால் பண்ணி இருக்கீங்கன்னா ஏதோ அவசரமா இருக்கும்னு நினைச்சு பதட்டம் ஆயிடுச்சு.மழை பெய்யுற மாதிரி இருக்க டைம்ல எனக்கு போன் பண்ண உடனே.என்ன கூட்டிட்டு போக சொல்விங்களோ.... அந்த மாதிரி ஹெல்ப் கேக்க கூப்பிட்டீங்களோன்னு நான் நினைச்சேன் அதுக்குதான் கால் பண்ண. உங்க வாய்ஸ் கேட்டு நீங்க நல்லா இருக்கீங்கன்னு சந்தோசபட்டேன்
ஆனா நீங்க என்னன்னா என்னவோ உங்ககிட்ட தப்பா பேசுன மாதிரி என்கிட்ட பேசுறீங்க. இங்க பாருங்க நான் ஒண்ணும் படத்துல வர்ற வில்லன் கிடையாது. அதனால என்கிட்ட பேசுறப்போ குறைஞ்சபட்சம் ஒரு முன்னபின்ன தெரியாத பையன்கிட்ட பேசுற மாதிரியாவது பேசுங்க ",என்று சொன்னான் ஜெய். அவன் குரலில் வேதனை அப்பட்டமாக தெரிந்தது. (Me : நமக்கு பிடிச்சவங்ககிட்ட கெட்டபேர் வாங்குற வேதனை இருக்கே வேதனை அப்படி ஒரு வேதனை )

பூஜாக்கும் அவனிடம் தேவை இல்லாமல் பேசி விட்டோமோ என்று தோன்றியது.

"ஒகேங்க உங்களுக்கு என்கிட்ட பேச பிடிக்கலன்னு நல்லா தெரியுது..இனி நான் உங்ககிட்ட பேசவே மாட்டேங்க. நீங்களா என்கிட்ட வந்து பேசுனா கூட நான் உங்ககிட்ட பேச மாட்டேன்.அதான உங்களுக்கும் வேணும்..", என்று ஜெய் சொல்ல பூஜா அவனிடம் தான் அதிகமாக பேசி விட்டோம் என்று மன்னிப்பு கேக்கலாம் என்று பேச ஆரம்பிக்க ஏதோ இரண்டு வண்டி மோதுவது பெரும் சத்தம் கேட்டது அதோடு ஜெய்யும் அம்மா.....என்று கத்திய சத்தமும் கேட்டது. அதை கேட்டதும் பூஜாக்கு பதட்டம் ஆனது. அவள் பதட்டமாக ஜெய். ஹெலோ ஹெலோ ஜெய். என்ன ஆச்சு என்ன சத்தம் அது என்று கேட்க போன் கட் ஆனது. பூஜாக்கு பதட்டத்தில் உடலெல்லாம் நடுங்கியது..
அவனுக்கு மீண்டும் போன் அடித்து பார்த்தாள் அவன் எடுக்கவில்லை. அதனால் அவன் பதட்டம் இன்னும் அதிகம் ஆனது.
"என்ன ஆச்சு பூஜா?", என்று அவள் அருகில் வந்தாள் பூஜாவின் தோழி நித்யா.

"இ இல்லை நித்யா ஜெய் கூட பேசிட்டு
இருந்தேன் திடீர்னு ஏதோ பெரிய சத்தம் கேட்டுச்சு.இவரும் அம்மான்னு கத்துனாரு அதுக்கப்பறம் போன் எடுக்கவேயில்லை.எனக்கு பயமா இருக்கு", என்று சொன்ன பூஜா கண்ணிலிருந்து கண்ணீர் நிற்காமல் வந்தது.

"இங்க பாரு பயப்படுற மாதிரி ஒண்ணும் இருக்காது. சரி உன்கிட்டதான் அவங்க அம்மா நம்பர் இருக்குல்ல. அவங்ககிட்ட போன் பண்ணி கேட்டுப்பாரு%, என்று சொன்னனாள் நித்யா. அந்த நேரம் பூஜாக்கு ஜெய்க்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்தால் போதும் என்று இருந்ததால் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஜெய்யின் அம்மாக்கு அழைத்தாள். முதல் ரிங்கிலேயே போன் அட்டென்ட் செய்யப்பட்டது.

"ஹெலோ ஆண்டி ஜெ ஜெய் வீட்ல இருக்காரா?.. அவர் இருந்தா அவர்கிட்ட கொஞ்சம் போன் குடுங்களேன். ப்ளீஸ் ஆன்டி ஹெலோ ஆன்டி நான் பேசுறது கேக்குதா? அவர் வீட்ல இருக்காரா?",அழுதுகொண்டே கேட்டாள் பூஜா." நான் ஜெய்தான் பேசுறேன்",பூஜா என்றான் ஜெய். அவன் குரல் கேட்ட உடன்தான் பூஜாக்கு உயிரே வந்தது போல இருந்தது பூஜாக்கு

"நல்லா இருக்கீங்கல்ல ஜெய் என்று தவிப்புடன் கேட்டாள் பூஜா. நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க எனக்காகவா அழறிங்க பூஜா?",என்று அவன் கேட்க அதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் நின்றாள் பூஜா.

இழந்திடுவோம் என்று தெரியும்போதுதான் நம்முடன் இருப்பவர் அருமை புரிகிறது.

ஒகே இனி ஜாலியா ரெகுலர் அப்டேட்ல உங்களை சந்திக்க முடியும் என்பதை உங்களிடம் சொல்லிவிட்டு உங்களிடமிருந்து நான் விடைபெறுவது அபிராமி க. நி

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro