Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -35

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னுமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

கிருஷ்ணா சொன்னதை கேட்ட தேவா எழுந்து கிட்சன் பக்கம் செல்ல.அவள் வந்ததை ஓரகண்ணால் பார்த்த சூர்யா அவளை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய வேலையை மட்டும் பார்த்து கொண்டிருந்தான். அதை பார்த்த தேவாக்கு குழப்பம் ஆனது.

%என்ன இவரு என்ன கூப்பிட்டுட்டு நான் வந்ததுக்கு பிறகு என்ன பாக்காம இருக்காரு", என்று தன்னுடைய மனதுக்குள் நினைத்த தேவா அவன் அருகில் நடந்து சென்றாள். சூர்யா அவள் பக்கம் திரும்பவே இல்லை. தேவா அவன் அருகில் வந்தவள் அவள் தோளை தொட்டு அவனை அழைக்க அவன் அப்போதும் அவள் பக்கம் திரும்பவில்லை . அதை பார்த்த தேவாக்கு இன்னும் குழப்பம் ஆனது. அவள் அவன் அருகில் இன்னும் நெருக்கமாக சென்று நின்று அவன் முகத்தை பார்க்க முயற்சி செய்தாள். ஆனால் சூர்யா அவனுடைய முகத்தை அவளுக்கு காண்பிக்கவே இல்லை. அதனால் இன்னும் குழப்பம் அடைந்தவள் தன்னுடைய கையால் அவனுடைய முகத்தை திருப்பி அவனை தன்னுடைய முகத்தை பார்க்க வைத்தாள். அவள் பக்கம் திரும்பிய சூர்யா மிகவும் கஷ்டப்பட்டு அவளை பார்த்து முறைத்தான். தேவாக்கு சம்மந்தமே இல்லாமல் அவன் தன்னை பார்த்து முறைப்பது குழப்பமாக இருந்தது. அவனை பார்த்து கண்ணாலேயே என்ன என்று கேட்டாள்...

சூர்யா எதுவும் பேசவில்லை அவன் மௌனமாக இருந்தான். தேவா மீண்டும் அவனை பார்த்து புன்னகை செய்தபடி என்ன என்று கண்ணால் கேட்டாள் அவள் தனக்கு நெருக்கமாக இருப்பதையும் கண்களால் பேசுவதையும் அதிகம் ரசித்தவன் அவளிடம் அதை காட்டிக்கொள்ளாமல் கோபமாக இருப்பது போல பேச ஆரம்பித்தான்.

"என்ன தேவா,உனக்கு என்மேல இப்போ எல்லாம் பயமே இல்ல போல. முன்னாடி எல்லாம் கூப்பிட்டா உடனே வருவ. எனக்கு எல்லா வேலையும் செய்வ (me:அய்யா உங்க வேலையை ஆரம்பத்துல இருந்து நீங்கதான் பண்ணிட்டு இருக்கீங்க அய்யா )ஆனால் இப்போ என்னன்னா என்ன கொஞ்சம் கூட கண்டுக்காம கிருஷ்ணா கூட உக்காந்து சாவகாசமா டிவி பாத்துட்டு இருக்க உன்ன எல்லாம் என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல?. எல்லாம் எவ்ளோ சீக்கிரமா மாறிடுறீங்க ",என்று சூர்யா சொல்ல தேவா அவனை பார்த்து அழுவதற்கு பதில் சிரிக்க ஆரம்பித்தாள்.அதை பார்த்த சூர்யாக்கு குழப்பம் ஆனது.

"ஒய் நான் என்ன உன்கிட்ட ஜோக் சொல்லிட்டா இருக்கேன். இப்போ எதுக்கு சிரிக்கிற?", என்று கேட்டான் சூர்யா

தேவா அதற்கும் புன்னகை செய்தாள்...

"உனக்கு நான் உன்மேல கோபப்பட்டா கொஞ்சம் கூட கவலையே இல்லையா?", என்று கேட்டான் சூர்யா தேவா இல்லை என்பது போல இடம் வலமாக தலை அசைக்க இப்போது சூர்யாவின் முகம்தான் கவலையை வெளிப்படுத்தியது.

"உண்மையாவே உனக்கு நான் உன்மேல கோபபட்டா கவலை இல்லையா?. ஆனா அது எப்படி... ",என்று சொன்ன சூர்யா குழப்பமாக அவளை பார்க்க அவனை பார்த்து புன்னகை செய்த தேவா அவன் அருகில் இன்னும் நெருக்கமாக வந்து நின்றாள்.

"இப்போ எதுக்கு நீ இவ்ளோ கிட்ட வர்ற உன்மேல நான்தான் கோபமா இருக்கேன்னு சொன்னல்ல என்னவிட்டு தள்ளி"  என்று சூர்யா சொல்ல வந்த வார்த்தையை சொல்லி முடிப்பதற்குள் அவனை அணைத்து கொண்டாள் தேவா."தள்ளிப்போ "என்று சொல்ல வந்த சூர்யா இறுதியில்" தள்ளிபோகாதே "என்று தான் சொல்ல வார்த்தையை சொல்லி முடித்தான். அதை கேட்டு சிரித்த தேவா அவனை இன்னும் நெருக்கமாக அணைத்து கொண்டாள். சூர்யாக்கு இன்னும் மகிழ்ச்சி ஆனது.நடப்பதெல்லாம் கனவா நிஜமா என்று யோசிக்கும் நிலைமையில் அவன் இல்லை என்ன நடக்கிறதோ அதை அப்படியே அனுபவிக்க நினைத்தான்.. தேவா சில நொடிகள் கழித்து அவனைவிட்டு விலகி நின்றாள். அவள் அவனை பார்க்கவே இல்லை. அவள் வெட்கபடுவதை சூர்யா ரசிக்கவே செய்தான்..

"என்ன தேவா இந்த மாதிரி மாறிட்ட. நான் ஏற்கனவே ரொம்ப மாறிட்டேன் இப்போ நீ இப்படி எல்லாம் பண்ணா நான் அவ்ளோதான் போல. ம்ம்ம்.. அப்போ நான் உன்கிட்ட சும்மாதான் கோப பட்டேன்னு உனக்கு தெரியும் அப்டித்தான ",என்று கேட்டான் சூர்யா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் தேவா.

"ம்ம்ம் அது சரி.. முன்னாடி எல்லாம் நான் எதாவது பேச வர்றதுக்கு முன்னாடியே நான் என்னவோ திட்டுன மாதிரி என்ன பார்த்து பயந்த தேவால இருந்து. நான் திட்டுனா கூட அது பொய்யாதான் இருக்கும்ன்னு என்ன புரிஞ்சிகிட்ட தேவாவரைக்கும் நம்ம உறவு வந்துடுச்சுல", என்று சூர்யா கேட்க தேவா புன்னகை செய்தபடி ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.

"ம்ம்ம்... வாழ்க்கை ரொம்ப வித்யாசமா இருக்கு தேவா.ஒரு மனுஷனுக்கு அடிப்படை தேவையா என்னன்ன இருக்கணுமோ அதெல்லாம் என்கிட்ட இருந்துச்சு சாப்பாடுக்கு கஷ்ட படல அம்மா பாசம் கிடைக்கல ஆனால் அதுக்கும் சேர்த்து எங்கள அப்பா பாத்துகிட்டாரு. ஆனாலும் எதுவுமே இல்லைங்கிற மாதிரிதான் இருக்கும். நீ வர்றதுக்கு முன்னாடி எல்லாம் என்ன நடந்தாலும் அதை பத்தி எல்லாம் அதிகம் யோசிச்சதில்ல. ஆனா இப்போ எல்லாமே சின்ன சின்ன விஷயங்கள் கூட நான் அதிகமா ரசிக்கிறேன். அதுவும் உன்ன எல்லாம் சொல்லவே வேண்டாம். என்ன விட்டா நாள் முழுக்க உன்ன பாத்துட்டே இருப்பேன் ",என்று சூர்யா சொல்ல தேவா வெட்கத்தில் புன்னகை செய்தாள்.

"இப்படி எல்லாம் வெக்கப்பட்டா அப்புறம் சூர்யா ரொம்ப பாவம்மா... " என்று சூர்யா மென்மையான குரலில் சொல்ல தேவாக்கு வெட்கத்தில் அவன் முன்பு நிற்கவே முடியவில்லை. அவள் தலையை குனிந்து கொள்ள "எத்தனை நாட்கள் வேண்டும் என்றாலும் இந்த வெட்கத்தை ரசிக்கலாம் " என்று மனதுக்குள் நினைத்து கொண்டான் சூர்யா.

"தேவா இந்த வெக்கத்தை எல்லாம் சரி பண்ணுறதுக்கு நம்மவேணா ஒண்ணு பண்ணுவோமா?",என்று சூர்யா கேட்க அவனை என்ன என்பது போல நிமிர்ந்து பார்த்தாள் தேவா. அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தபிறகு இவ்வளவு நேரம் தெளிவாக பேசி கொண்டிருந்த சூர்யாவின் வார்த்தைகள் வர மறுத்தது சில நொடி மௌனதுக்கு பிறகு சூர்யா பேச ஆரம்பித்தான்.

"தேவா நம்ம ரெண்டு பேரும் ஏன் ஹனிமூன் போக கூடாது?" என்று சூர்யா சாதாரணமாக கேட்க தேவா அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் தேவா.

"என்ன பாக்குற தேவா போலாமா வேணாமா உடனே போக முடியலன்னாலும்..கொஞ்சம் நாளுக்கு அப்புறம் போலாம் என்ன ஒரு 2 வாரத்துக்கு அப்பறம் போலாம் என்ன சொல்ற?",என்று சூர்யா கேட்க தேவாக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.மறுக்க அவளிடம் காரணம் இல்லை அவனுடன் ஒன்றாக செல்ல அவளுக்கும் விருப்பம்தான் ஆனாலும் உடனே ஒப்புக்கொள்ள அவளுக்கு வெக்கமாக இருந்தது. உடனே சரி என்று சொல்லி அவளும் இதற்காகத்தான் காத்திருந்தாள் என்று
அவன் நினைத்து கொண்டால் என்ன செய்வது என்று மனதுக்குள் யோசித்த தேவா என்ன சொல்வது என்று யோசிக்க அவள் அருகில் இன்னும் நெருங்கி வந்தான் சூர்யா. அதை பார்த்த தேவாக்கு பதட்டம் ஆனது.

"ம்ம்ம்.. என்னோட பொண்டாட்டிக்கு நான் அவமேல கோப படமாட்டேன்னு தெரியுது அதனால பதட்டமாகாம இருக்காங்க.ஆனா அதே நேரம் நான் கொஞ்சம் கிட்ட வந்தாலே பயப்படுறாங்க. ஹனிமூன் போக சம்மதம் சொல்லவும்..",கொஞ்சம் தயக்கபடுறாங்க இந்த தயக்கம் நேத்து வரைக்கும் இருந்தா ஓகே ஆனால் இப்போவும் தொடர்ரது சரி இல்லையே என்று சூர்யா சொல்ல தேவாக்கு கால் தரையில் கால் படுகிறதா என்றே தெரியவில்லை அவளுக்கு உலகமே தலை கீழாய் மாறியது போல இருந்தது. தேவா பதட்டத்தின் உச்சியில் சூர்யா முன்பு நிற்க சூர்யா அவளை ரசித்தப்படி நிற்க
தேவாவின் கவனம் பொங்கி வழிய காத்திருந்த தேநீர் பக்கம் திரும்ப அதை பார்த்தவள் ஸ்டவ் ஆப் செய்ய போக தன்னிடமிருந்து அவள் நழுவி செல்ல பார்க்கிறாள் என்று நினைத்த சூர்யா அவளை விடாமல் தடுத்து கை வளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்தினான். தேவா அவனுக்கு டீ கொதித்து கழைய போகிறது என்பதை சொல்ல முயற்சி செய்தாள் ஆனால் அவள் எதையும் சொல்வதற்கு முன்பே தன்னுடைய இதழ்முத்த சிறையில் அவளை கைதாக்கினான் சூர்யா. தேவா இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவனிடமிருந்து விலகி செல்லவும் இல்லை. டீ பொங்கி கழைந்தது. ஆனால் என்ன செய்ய அதை கவனிக்கும் நிலையில் இருவருமே இல்லை (me: டீ போச்சே 🤷‍♀️)

சிறிது நேரம் கழித்து அவளைவிட்டு விலகினான் சூர்யா.அவனைதான் அதிர்ச்சி விலகாமல் பார்த்தாள் தேவா.

"ம்ம்ம் இப்படி நீ எல்லாத்துக்கும் ஷாக் ஆனால் நான் இப்படித்தான் பண்ணணும் ஷாக்க குறை"  என்று சொன்ன சூர்யா டீயை பார்க்க அது பாதி பொங்கி கழைந்திருந்தது.

"ம்ம்ம்... பாரு இந்த இடம் கொஞ்சம் நேரத்துல ரொம்ப ஹாட் ஆயிடுச்சு போல அதான் டீ கூட பொங்கி களைஞ்சிடுச்சு", என்று சூர்யா சொல்ல தேவாக்கு அதற்கு மேல் அவன் பார்வையில் இருக்க முடியாது என்று தோன்ற அந்த இடத்தைவிட்டு செல்லலாமா என்று யோசிக்க அப்போது கிருஷ்ணா வரும் சத்தம் கேட்டது அவன் சத்தம் கேட்ட உடன் அவனை பார்க்க செல்வதாக சைகை செய்தவள் கிட்சன்விட்டு சென்று விட்டாள். அவள் அவ்வளவு வேகமாக செல்வதை பார்த்த சூர்யா புன்னகை செய்தான்..

"நான் எப்பொழுதுல இருந்து இப்டி எல்லாம் ஆன. ம்ம்ம் இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசாதான் இருக்கு ஆனா எனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கு", என்று மனதுக்குள் நினைத்த சூர்யா ஸ்டவ் கிளீன் செய்துவிட்டு பஜ்ஜி போட ஆரம்பித்தான். தேவாவும் கிருஷ்ணாவும் ஒன்றாக பேசியபடி துணியை மடித்து வைத்து கொண்டிருந்தார்கள். அப்போது செல்வமும் வந்து சஞ்சனா உடன் வந்துவிட எல்லோரும் மகிழ்ச்சியாக பேசியபடி சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அப்போது சூர்யாவின் போனுக்கு அழைப்பு வர அந்த அழைப்பை பார்த்த உடன் சூர்யா முகத்தில் எந்த வித மாற்றத்தையும் காண்பிக்காமல் போனை எடுத்துக்கொண்டு முக்கியமான ஒரு கால் இப்போ பேசிட்டு உடனே வந்துடறேன் என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றான். அவன் அறைக்கு சென்றதும் தேவாக்கு என்னவோ சரி இல்லை என்று தோன்றியது. எல்லோரும் இருந்ததால் அவள் எழுந்து செல்லாமல் அமைதியாக இருந்தாள்.

அதே நேரம் தன்னுடைய அறைக்கு வந்த சூர்யா கொஞ்சம் நேரம் போனில் பேசிவிட்டு போனை வைத்தான் அவன் கண்ணில் கோபமும் உதட்டில் புன்னகையும் இருந்தது (me:என்ன பேசுனான்னு உங்களுக்கு தெரியணுமா தொடர்ந்து அடுத்தடுத்த எபிசொட் படிங்க.)

அடுத்த பதிவில் உங்களை விரைவில் வந்து சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது அபிராமி G. N

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro