Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு-34

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அமுதைப் போல கிடைத்தாய்
மயக்கம் கோடி கொடுத்தாய்
நீயில்லாமல் என்னாகிறேன்
உடைந்து போன இதயம்
இருண்டு போன உலகம்
நீயில்லாமல் இங்கே
நான் என்னாகிறேனோ(me: my favorite song )
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

பிரசாத், அனு உடன் ரகு வீட்டுக்கு சென்றான்.பிரசாத்தின் அம்மா மற்றும் அப்பா இருவரும் அடுத்து என்ன நடக்குமோ ஏன்னும் பயத்துடன் வீட்டுக்குள் சென்றார்கள். ஆனால் பிரசாத் அடுத்து என்ன நடந்தாலும் அனுவை விட்டு கொடுக்க கூடாது என்னும் முடிவில் இருந்தான். அனுவுக்கு அந்த வீட்டுக்குள் நுழையவே அவ்வளவு அருவருப்பாக இருந்தது. எந்த வீட்டுக்குள் கனவுகளுடனும் எதிர்பார்பப்புடனும் நுழைந்தாளோ அதே வீட்டுக்குள் இப்போது வெறுமையான மன நிலையில் நுழைந்தாள். அவளுக்கு கோபம் வரவில்லை மாறாக என்ன மாதிரி வாழ்க்கை இத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்னும் வெறுப்பு வந்தது. (Me :மனதின் வலிகள் அதிகம் ஆகும் நேரத்தில் கோபம் வருவதில்லை வெறுமைதான் வருகிறது )

அவர்கள் நால்வரும் வீட்டுக்குள் வரும்போது  ரகுவின் அம்மா அனுவின் குழந்தை ரித்தீஷ்சை மடியில் படுக்க வைத்து உறங்கவைத்து கொண்டிருந்தார்.இவர்கள் உள்ளே வந்ததை பார்த்தும் பார்க்காதது போல இருந்தார் அவர். அப்போது ரகு அவனுடைய அறையிலிருந்து வெளியே வந்தான்.

"அம்மா,பாப்பா என்ன பண்ணுறான்?. ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தான் இப்போ தூங்கிட்டானா?",என்று கேட்டபடி கொஞ்சம் தூரம் வந்தவன் அவர்களை பார்த்தும் பார்க்காதது போல குழந்தை அருகில் சென்றான்.

"என்னடா உன்னோட பொண்டாட்டி வந்துருக்கா... அவகிட்ட எதுவும் பேசாம நீ என்கிட்ட பிள்ளையபத்தி கேட்டுட்டு இருக்க?", என்று நக்கலாக கேட்டார் ரகுவின் அம்மா.

அப்போதுதான் அனு பக்கம் திரும்பினான் ரகு.

"அம்மா இவள என்ன நான் புதுசாவா பாக்குறேன்.கை நிறைய பொருள் கொண்டு வர்றவங்கள வரவேற்கலாம் இப்படி வெறும் கையோட வர்றவங்கள எதுக்கும்மா பாக்கணும். எப்படியும் தலையை அடமானம் வச்சாவது உங்களுக்கு இதை வாங்கி தர்றேன் அதை வாங்கி தர்றேன் சொல்லுவாங்க. அப்டியே இவள இங்க விட்டுட்டு போயிடுவாங்க.அதுக்குதான இங்க வந்துருக்காங்க",என்று அவன் பேசிக்கொண்டே செல்ல பிரசாத்க்கு அவ்வளவு கோபம் வந்தது. ஆனால் பிரசாத் பேச வரும்போது அனு அவன் கையை பிடித்து தடுத்துவிட்டாள்.அதே நேரம் அனுவின் அப்பா பேச ஆரம்பித்தார்.

"மாப்பிள்ளை உங்களோட ஆதங்கம் எல்லாம் எங்களுக்கு புரியுது.எங்களுக்கு உங்க அளவுக்கு வசதி இல்லாம இருக்கலாம் ஆனா எங்க பொண்ணுக்கு எங்களால முடிஞ்ச அளவுக்கு செய்ய முடியும். ஒரு ஆறு மாசம் டைம் குடுங்க நாங்க நீங்க கேட்ட மாதிரி கார் வாங்கி குடுத்துடறோம் ",என்று பணிவாக சொன்னார் அனுவின் அப்பா.அவரை ஏளனமாக பார்த்தான் ரகு.

"நீங்க வாங்கி தர போற கார்லதான் நான் போணும்னு எனக்கு ஒண்ணும் அவசியம் கிடையாது. எனக்கு அந்த கார் ஒரு கௌரவத்துக்காக தேவைபடுது அவ்ளோதான். நீங்க என்ன பண்ணுங்க உங்க பொண்ண உங்க கூட கூட்டிட்டு போய்ட்டு நீங்க வாங்க போற கார்ல அனுப்பி வைங்க சரியா ?",என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் பேசினான் ரகு.

அனு அவனைதான் பார்த்தாள். ஆனால் அவன் அனுவை ஒருமுறை கூட பார்க்கவில்லை.பிரசாத்க்கு அங்கே நிற்கவே பிடிக்கவில்லை.
அவனுக்கு அனுவையும் குழந்தையையும் அழைத்து கொண்டு சென்றால் போதும் என்று இருந்தது.

"இந்த மாதிரி எல்லாம் கேக்க உனக்கு அவமானமா இல்லையா ",என்று கேட்டான் பிரசாத். அவன் அப்படி கேட்டதும் ரகுக்கு அவ்வளவு கோபம் வந்தது.

"ஹே என்னடா... பருப்பு பொட்டலம் போட்டு வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்க நீ இப்போ என்னயே இப்படி பேசுறியா. உன்னோட தங்கச்சிக்கு இனி இந்த வீட்ல இடம் இல்லை நீ அவள கூட்டிட்டு போய்டு. அப்புறம் உன் தங்கச்சி வாழ்க்கை முழுக்க எப்படி அவமானம் படாம வாழுறான்னு பாப்போம். ஒரு கார் கூட வாங்கி தர முடியாத உங்களுக்கு எல்லாம் ஒரு பேச்சு ",என்றான் ரகு.

பிரசாத் ஏதோ சொல்ல வர அனு அவனை தடுத்தாள்.

"அண்ணா நீ ஆயிரம்தான் இருந்தாலும் அவர அப்படி எல்லாம் பேசி இருக்க கூடாது அண்ணா. அவரோட தகுதிக்கு அவர் கார் வாங்கி தர கேக்குறாரு. யாருகிட்ட வாங்கி கேட்டாரு அவரோட மாமனார் வீட்லதான வாங்கி கேட்டாரு. நம்ம வாங்கி கொடுப்போம் அண்ணா. அவருக்கு இல்லாததா", என்றாள் அனு. அவள் சொன்னதை கேட்ட ரகு முகத்திலும் அவன் அம்மா முகத்திலும் புன்னகை தோன்றியது.

"அனு என்ன பேசுற நீ. எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறியா?", என்று கேட்டான் பிரசாத்.

"அட எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன். இத்தனை நாள் கௌரவமா தொழில் பண்ணிட்டு இருந்தாரு. இப்போ புதுசா பிச்சை எடுக்குறேன்னு சொல்றாரு முதல்ல நம்மகிட்ட கார பிச்சையா கேக்குறாரு.போடுவோம் அண்ணா", என்றாள் மித்ரா அவள் சொன்னதை கேட்ட எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள் பிரசாத் மட்டும் நிம்மதி அடைந்தான்...

"ஏய் என்ன டி யாரை பாத்து பிச்சை கேக்குறேன்னு சொல்ற. எனக்கு இருக்க வசதிக்கு என்னால எவ்ளோ கார் வேணும்னாலும் வாங்க முடியும்.
போ டி இந்த வீட்டை விட்டு வெளிய ",என்றான் ரகு.

அவன் சொல்லி முடிக்கும் நேரம் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்தாள் அனு.அதில் ரகு அதிர்ச்சி ஆனவன் அப்படியே நின்றான். பிரசாத் அனு என்ன செய்தாலும் அவள் பக்கம் நிற்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். அப்போது அனுவின் பெற்றோர் அனுவிடம் பேச வர பிரசாத் அவர்களை தடுத்தான்.அதே  நேரம் ரகுவின் அம்மா இத்தனை நாள் அமைதியாக இருந்த தன்னுடைய மருமகள் இன்று தன்னுடைய மகனையே அடித்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்.

"என்னடா நானும் பாக்குறேன் இஷ்டத்துக்கு பேசிட்டே போற. பிச்சை எடுக்குறப்போ இல்லாத கௌரவம் பிச்சை எடுக்குறத சொல்லி காட்டறப்போ வருதோ. ஆமா ஆமா நீ எங்க பிச்சை எடுக்குற. பிச்சை எடுக்குறவன் கூட கெஞ்சிதான் கேப்பாங்க ஆனால் நீ.. ச்சி உன்ன எல்லாம் என்ன சொல்லன்னே தெரியல. உனக்கு கார் வேணுமா கப்பல் வேணுமா என்ன வேணும்னா வாங்கு ஆனா என்ன விட்டுடு. நான் இதுக்குமேல உன்கூட வாழ ஆசைப்படல இண்ணைக்கு பணத்துக்காக என்ன வீட்டை விட்டு அனுப்புன நீ நாளைக்கு இன்னொருத்தி மேல ஆசைப்பட்டு என்ன கொன்னாலும் கொன்னுடுவ. உன்கூட இருந்து என்னோட உயிரை நானே அழிச்சிக்க விரும்பல. அந்த அளவுக்கு நான் முட்டாளும் இல்லை. என் குழந்தையை வாங்கிட்டு போலாம்ன்னுதான் நான் வந்தேன்.உன்ன மாதிரி ஒருத்தன் கூட வளந்தா என் பிள்ளையும் நாளைக்கு உன்ன மாதிரிதான் ஆவான",. என்றவள் நேராக தன்னுடைய மாமியாரிடம் சென்று குழந்தையை வாங்கினாள். அவர் அதிர்ச்சியில் இருந்ததால் அவரும் குழந்தையை கொடுத்து விட்டார். அதுவரை ஏதோ கனவில் இருந்தது போல ரகு குழந்தையை அவள் வாங்கிய பிறகுதான் நிஜ உலகுக்கு வந்தான். அவனுக்கு அனுவை விட மனம் இல்லை அதற்காக அவளை பிரிய மனம் இல்லாமல் தவித்தானா என்றால் அதுவும் இல்லை. அவனுக்கு அனு அவன் பேச்சை மீறி நடந்து கொள்கிறாள் என்னும் கோபம் மட்டும்தான் இருந்தது. அவன் வேகமாக அனுவிடம் செல்ல போக பிரசாத் அவனை கையை பிடித்து நிறுத்தினான்.

"என்ன ரொம்ப ஸ்பீடா போற மாதிரி இருக்கு. என் தங்கச்சி மேல உன் கை பட்டுச்சு மவனே பல்ல உடைச்சிருவேன். அவன் சந்தோசமா உன்கூட இருக்குற வரைக்கும்தான்டா நீ எனக்கு சொந்தம் இப்போ நீ எனக்கு யாரோ. யாரோ ஒருத்தன் என் தங்கச்சி மேல கை வைக்கிறத பாத்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்", என்றான் பிரசாத்.(me:இது வந்து expectation)

அப்போது பிரசாத்தின் அப்பா வந்து பிரசாத்தை பிடித்து இழுத்தார்.
பிரசாத் அவன் கையை விட்டுவிட்டு தன்னுடைய அப்பா பக்கம் திரும்ப அவர் பிரசாத்தை திட்ட ஆரம்பித்தார்.

"டேய் நீ இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுதா. உன் தங்கச்சி வாழ்க்கையை நீயே கெடுத்துட்டு இருக்க. இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் கல்யாணம் வாழ்க்கையில வர்றது சகஜம்தான் இதுக்கெல்லாம் புருஷனே வேண்டாம்ன்னு தூக்கி போட்டா இங்க பாதி பொண்ணுங்க பொறந்த வீட்லதான் இருக்கணும். அதோட கல்யாணம் ஆன பொண்ணு பொறந்த வீட்ல வந்து இருந்தா அவளை பத்தி இந்த உலகம் தப்பா பேசும்டா", என்றார் பிரசாத் அப்பா (me :இது ரியாலிட்டி 🤷‍♀️)

"அப்பா நீங்க சொல்ற அத்தனை பொண்ணுங்களும் புருஷன் வீட்ல இருக்காங்க. இந்த ஊர் உலகம் அவங்கள எந்த குறையும் சொல்லாம இருக்கலாம் ஆனா அதுக்கு அவங்க விலையா கொடுக்குறது சுயமரியாதையப்பா. சுயமரியாதை இல்லாம வாழுறது உயிரோட இருந்தும் செத்த மாதிரிப்பா. அந்த மாதிரி ஒரு கஷ்டத்த நான் என்னோட தங்கச்சிக்கு வர விட மாட்டேன். உங்களுக்கு உங்க பொண்ண அவ வீட்டுக்கு கூட்டிட்டு போக இஷ்டம் இல்லாம இருக்கலாம் ஆனால் நான் என் தங்கச்சியை நிச்சயம் அவ வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்", என்றான் பிரசாத்

"பிரசாத் என்ன பேசிட்டு இருக்க நீ. உன் அப்பாவை எதிர்த்து பேசுற. இப்போ மாப்பிள்ளை வீட்ல இருந்தா அவளுக்கு என்ன ஆகிட போகுது இத்தனை நாள் அவர்கூட சந்தோசமாதான இருந்தா. இப்போ யாரு கண்ணு பட்டுச்சோ அவங்களுக்குள்ள சின்ன பிரச்சனை நம்ம கார் வாங்கி குடுத்துடலாம்டா. அவ சந்தோசமா இருப்பா இங்க. நீ எதுவும் பேசாத மாப்பிள்ளைகிட்ட நாங்க பேசுறோம் ",என்றார் பிரஷாத் அம்மா.

"என்ன பேச போறீங்க சம்மந்தி. உங்க பொண்ணும் பையனும்தான் அவ்ளோ பேசிட்டாங்களே. ஏழை பொண்ணா இருந்தாலும் நாங்க இவளை எங்க வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வந்தோம் அப்ப உங்ககிட்ட வசதி இல்லை அதனால நாங்க எதுவும் கேக்கல இப்போ ஏதோ உங்களுக்கும் கொஞ்சம் வருமானம் வருது அதனால கடன் வாங்கியாவது என் பிள்ளைக்கு நீங்க இதை பண்ணி இருக்கணும். அதை நீங்க பண்ணல அதனால அவன் கேட்டான். என்னவோ ஊருல இல்லாதது நடந்த மாதிரி இப்படி பண்ணுறாங்க உங்க பிள்ளைங்க. உங்க பொண்ணு உங்க வீட்ல வந்து இருந்தா எவ்ளோ தப்பா பேசுவாங்கன்னு நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அதே நேரம் என் பையன கட்டிக்க பொண்ணுங்க வரிசைல நிப்பாங்க ",(me : என்னென்ன சொல்றாங்க பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் இழுத்து போடுறாங்க. ம்ம்ம் கல்யாணம் பண்ணுவாங்களாமே. நான் பண்ண விட்டாதான😂)

"ஐயோ அண்ணி அப்படி எல்லாம் சொல்லாதீங்க இவங்க ஏதோ விவரம் தெரியாம பேசிட்டு இருக்காங்க. அண்ணி இவங்கக்களுக்காக நான் உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.மாப்பிள்ளை அவள உங்ககிட்ட நான் மன்னிப்பு கேக்க சொல்றேன். உங்களுக்கு இப்போ குழந்தை இருக்கு அதோட முகத்துக்காகவாது பாருங்க. அம்மா அப்பா ஒவ்வொரு பக்கம் போனா குழந்தை எதிர்காலம் பாதிக்க படாதா கொஞ்சம் யோசிங்க மாப்பிள்ளை", என்று கெஞ்சினார் அனுவின் அம்மா.

"சரி அத்தை நீங்க சொன்ன மாதிரி குழந்தைக்காகன்னு சொன்னதுனால நான் அவள மன்னிக்க ஒத்துகிறேன். ஆனால் அவ இப்போ உங்க எல்லோருக்கும் முன்னால என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் அதே மாதிரி இண்ணைக்கு அப்புறம் நீங்க அவள பாக்க எப்போவும் வர கூடாது எனக்கா எண்ணைக்கு தோணுதோ அண்ணைக்கு நான் அவள கூட்டிட்டு வருவேன்", என்று சொன்னான் ரகு. அவன் சொன்னதை கேட்ட அனுவின் அம்மாக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.அவர் மௌனம் ஆனார். அனு குழந்தையை உறுதியாக பிடித்தவள் நேராக பிரசாத் பக்கம் வந்தாள்.

"அண்ணா எனக்கு இந்த இடத்துல நிக்கவே அருவருப்பா இருக்கு. அதனால வாங்க போலாம் ",என்றாள் அனு.

"போடி போ. உன்ன எத்தனை நாள் உன் வீட்ல வச்சி தாங்குறாங்கன்னு நானும் பாக்குறேன். அங்க உன்ன அவமான படுறப்போ இந்த வெட்டி ரோசம் எல்லாம் இல்லாம போகும்ல அப்போ இங்க வா காலம் முழுக்க ஒரு வேலைக்காரி மாதிரி உன்ன நான் நடத்துறேன்", என்றான் ரகு.

"நான் ஏன்டா இங்க வர போறேன் நான் உன்ன நம்பியும் இனி இல்லை என் அம்மா அப்பா நம்பியும் இல்லை. எனக்கு என் படிப்பு இருக்கு நான் வேலைக்கு போவேன் என்னையும் என் குழந்தையையும் என்னால பாத்துக்க முடியும். நீ அந்த மித்ராவை கல்யாணம் பண்ணனும்ன்னுதான இவ்ளோ பண்ண. நீ அவள இல்லை யார வேணா கல்யாணம் பண்ணு ஆனா இப்போ இங்கவச்சி சொல்றேன் உனக்கு இனி நிம்மதி இருக்காதுடா. நான் வசதியா இருப்பேனான்னு தெரியல ஆனா நிம்மதியா இருப்பேன்", என்று சொன்ன அனு நேராக நடக்க ஆரம்பிக்க பிரசாத் அவளுடன் நடக்க ஆரம்பித்தான்.பிரசாத்தின் அம்மா மற்றும் அப்பா வேறு வழி இல்லாமல் அவர்களுடன் நடந்து சென்றார்கள். பணம் மட்டுமே முக்கியம் என்று நினைத்த ரகு அவன் குழந்தையும் மனைவியையும் செல்வதை கூட தடுக்காமல் நின்றான். அவனுக்கு அவன் குழந்தை மீது கொஞ்சம் பாசம் இருந்தது ஆனால் பணம் பாசத்தை எல்லாம் மறக்கவைத்துவிட்டது.அவனுக்கு அவன் வாழ்க்கையில் இருந்த பிரச்சனை எல்லாம் முடிந்து என்பது போல இருந்தது. அவனுக்கு தெரியவில்லை அவன் பிரச்சனையே இப்போதுதான் ஆரம்பமாக போகிறது என்று.காரில் வந்து எல்லோரும் அமர்ந்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தார்கள்.

அனு எல்லாம் சரியாகும் நீ எதை நினைச்சும் கவலை படாத என்றான் பிரசாத்.

ஆமா நீ சொல்றதும் சரிதான் இனிதான் எல்லாம் சரி ஆகும். எனக்கும் என் குழந்தைக்கும்னு ஒரு எதிர்காலம் அதை நான் உருவாக்குவேன். இவன் நிச்சயம் அவன மாதிரி வளர மாட்டான் என்று உறுதியுடன் சொன்னாள் ஆனால் அவள் மனம் இத்தனை வருட வாழ்க்கை எல்லாம் போலியான ஒரு செய்தி போல முடிந்ததை எண்ணி அவள் மனம் வேதனைபட்டு கொண்டிருந்தது.அந்த வேதனை வெளிகாட்ட முடியாமல் தனக்குள் மறைத்தவள் ஜன்னல் பக்கம் திரும்பி பல வேலைகள், மகிழ்ச்சிகள், கவலைகளுடன் கடந்து செல்லும் மக்கள் மீது தன்னுடைய பார்வையை செலுத்தினாள்.

இங்கே சாயங்காலம் நேரம் சூர்யா கிட்சனில் நின்று பஜ்ஜியும் டீயும் செய்து கொண்டிருந்தான். கிருஷ்ணா மற்றும் தேவா இருவரும் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். செல்வம் சஞ்சனாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றிருந்தார். அமிர்தா யாரிடமும் எந்த விஷயத்தையும் சொல்லவில்லை.சாதாரணமாகதான் அனு உடன் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லி இருந்தாள்.

தேவா கொஞ்சம் இங்க வாயேன் எனக்கு இந்த வாழைக்கா கட் பண்ண ஹெல்ப் பண்ணேன் என்று கிட்சனிலிருந்து குரல் கொடுத்தான் சூர்யா.

அவன் குரல் கொடுத்ததும் தேவா எழுந்திருக்க போக கிருஷ்ணா அவளை தடுத்தவன் தான் கிட்சன்க்கு சென்றான். தேவாவை எதிர்பார்த்த சூர்யாவின் முகம் கிருஷ்ணாவை பார்த்ததும் பியூஸ் போன பல்பு மாதிரி வாடி போனது.

"உன் பேர் தேவாவா?", என்று கேட்டான் சூர்யா

"அண்ணிதான் வந்து உனக்கு ஹெல்ப் பண்ணனுமா என்ன?. நான் ஹெல்ப் பண்ண கூடாதா. ஆமா உனக்குதான் யார் ஹெல்ப் பண்ணாலும் பிடிக்காதே அப்புறம் என்ன அண்ணிய மட்டும் ஹெல்ப்க்கு கூப்பிடுற. சரி இல்லையே ...",என்றான் கிருஷ்ணா.

"டேய் ரொம்ப யோசிக்காத. போ போய் மாடியில போய் டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வா. வெயில் குறையிற மாதிரி இருக்கு அப்புறம் டிரஸ் எல்லாம் ஸ்மெல் அடிக்கும்", என்றான் சூர்யா.

"சரி நானும் அண்ணியும் போய் எடுக்குறோம் ",என்றான் கிருஷ்ணா..

"அவ எதுக்கு", என்று அவசரமாக கேட்டான் சூர்யா.

"ஏன் அண்ணி என்கூட வர கூடாதா?", என்று கேட்டான் கிருஷ்ணா.

"இல்லை அவளுக்கு கால் வலி அதான் ",என்று சொன்னான் சூர்யா..

"அப்டியா என்ன ஆச்சு", என்று கேட்டான் கிருஷ்ணா

"இல்ல ஒண்ணும் ஆகல.. டேய் எதுக்கு இவ்ளோ கேள்வி கேக்குற. சொன்னா சொன்னதை செய் ",என்று சொன்னான் சூர்யா..அவனை பார்த்து சிரித்தான் கிருஷ்ணா.

"இப்போ எதுக்கு சிரிக்கிற ",என்று கேட்டான் சூர்யா.

"இல்லை நீ நடத்து நடத்து", என்றான் கிருஷ்ணா

"என்ன சொல்ற?", என்றான் சூர்யா

"நான் மாடிய தனியா சுத்தி பாக்க போறேன் வர ஒரு பத்து நிமிஷம் ஆகும்", என்று சொன்னவன் அதற்கு மேலும் நிற்காமல் கிட்சன்விட்டு சென்றான்.

"அண்ணி அண்ணா தேடுறது நீங்க போனாதான் கிடைக்குமா. சோ நீங்க போங்க", என்று சத்தமாக சொன்ன கிருஷ்ணா வெளியே நடக்க அவன் சொன்னதை கேட்ட சூர்யா புன்னகை செய்தபடி தேவாக்காக காத்திருக்க ஆரம்பித்தான் புன்னகையுடன்.

அவன் அவளுக்காக காத்திருக்கட்டும் உங்களை நான் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது Abirami G.N


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro