Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -32

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீயே உன் சிறை
உன்னிடம் இருந்தே
வலது கால் வைத்தே
வெளியே வா மனிதி
வெளியே வா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அமிர்தாவை பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே நின்றாள் அனு.

என்ன ஆச்சு அனு ஏன் நீ உன்னோட ஹஸ்பண்ட் கிட்ட அந்த மாதிரி பேசிட்டு இருந்த ஏதாவது பிரச்சனையா என்று அக்கறையுடன் கேட்டாள் அமிர்தா.

என்ன அண்ணி ஒட்டு கேட்டுட்டு இருக்கீங்களா உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட அசிங்கமாவே இல்லையா என்று கோபத்தில் பேசினாள் அனு.

அனு நீதான் சத்தமா பேசுன. அமைதியா இருக்க இடத்துல சத்தம் குறைவா பேசுனாலே சத்தம் அதிகமாதான் கேக்கும் அப்படி இருக்குறப்போ நீ பேசுனதே சத்தமாதான் பேசுன. ஒட்டு கேக்குற பழக்கம் எல்லாம் எனக்கு இல்லை சரியா ஆமா நானும் வந்ததுல இருந்து பாக்குறேன் நீ சரியே இல்லை என்ன ஆச்சு இப்போ நீ சொல்ல போறியா இல்லையா என்று கேட்டாள் அமிர்தா.

அவள் அப்படி கேட்டதும் அனுக்கு அழுகைதான் வந்தது.அவள் அமிர்தாவை அணைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள். அமிர்தாக்கு பதட்டம் ஆனது.

அனு என்ன ஆச்சு அனு எதுக்கு அனு அழுற சொல்லு அனு எனக்கு ரொம்ப பயமா இருக்கு  என்று கேட்டாள் அமிர்தா ஆனால் அனு தொடர்ந்து அழுதாள்.

அனு என்ன பாரு எதுக்கு அழுற. இப்போ கொஞ்சம் அழுறத நிறுத்து என்ன பிரச்சனைன்னாலும் என்கிட்ட சொல்லு நம்ம அதுக்கு தீர்வு கண்டு பிடிப்போம் என்று சொன்னாள் அமிர்தா அனு அமிர்தாவை பார்த்தாள்.

எல்லாம் முடிஞ்சு போச்சு அண்ணி என்னோட வாழ்க்கை இனி என்ன ஆக போகுதுன்னே தெரியல அண்ணி நானே என்னோட வாழ்க்கைல மண்ண தூக்கி போட்டுட்டேன் தப்பு பண்ணிட்டேன் அண்ணி என்று அழுதாள் அனு.

அனு நீ இந்த மாதிரி பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு ப்ளீஸ் அனு என்ன ஆச்சுன்னு சொல்லு என்று கேட்டாள் அமிர்தா.

அண்ணி என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி நீங்களும் அண்ணனும் லவ்
பண்ணிட்டு இருந்தப்போ எனக்கு என்னோட ஹஸ்பண்ட் கூட கல்யாணம் பிக்ஸ் பண்ணாங்க அப்போ இந்த கல்யாணம் பத்தி நீங்க என்கிட்ட என்ன சொன்னிங்கன்னு நியாபகம் இருக்கா என்று கேட்டாள் அனு அமிர்தா தான் என்ன சொன்னோம் என்று நினைத்து பார்த்தாள்.

பிளாஷ்பேக்

அனுவும் அமிர்தாவும் பார்க்கில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.

ஏன் அனு இந்த வரன் உண்மையா உனக்கு பிடிச்சிருக்கா என்ன என்று கேட்டாள் அமிர்தா.

பிடிச்சிருக்கே ஏன் அப்படி கேக்குறீங்க என்று கேட்டாள் அனு.

இல்லை பிரசாத் சொன்னாரு கல்யாணத்துக்கு அப்புறம் உன்ன வேலைக்கு எதுவும் போக வேண்டாம்ன்னு அவர் சொன்னாங்களாமே என்று கேட்டாள் அமிர்தா

ஆமா ஆனா அதனால என்ன. அவங்க என்ன அவங்களோட பொண்ணு மாதிரி பாத்துக்குறேன் சொன்னாங்க. அப்புறம் ரகு ரொம்ப வசதி உள்ள ஒரு ஆளு அப்படி இருக்குறப்போ அவரோட மனைவியாக போற நான் இன்னொருத்தர்கிட்ட சம்பளம் வாங்கி ஏன் வேலை செய்யணும் அவர் எனக்கு எல்லாம் வாங்கி கொடுப்பாரு என்று சொன்னாள் அனு.

அனு நீ எவ்ளோ கஷ்டபட்டு படிச்ச. இந்த வேலை உனக்கு கேம்பஸ்ல கிடைச்சது இதை ஏன் விடற கொஞ்சம் யோசிச்சுபாரு அனு இங்க ஒவ்வொருத்தருக்கும் வேலை கிடைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படி இருக்கும்போது நீ கிடைச்ச வேலைய ஏன் விட்ற என்று கேட்டாள் அமிர்தா.

அண்ணி ஏற்கனவே ரொம்ப கஷ்ட பட்டாச்சு அண்ணி. ஒரு துணி கடைக்கு போனா பிடிச்ச டிரஸ் எடுக்காம கையில உள்ள காசுக்கு எதாவது டிரஸ் தேறுமான்னு பாத்து பாத்து எடுக்குற அந்த கஷ்டம்  எல்லாம் எனக்கு இனி வேண்டாம். என்ன ரகு நல்லா பாத்துப்பாரு என்ன அவர் உள்ளங்கையில வச்சி தாங்குவாரு என்று சொன்னாள் அனு.

உனக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியல. இரு ஒரு உதாரணம் சொல்றேன் இப்போ நீ ஒரு கரடு முரடான பாதையில போகணும் அந்த பாதையில சில நேரம் நல்ல இடம் வரும் சில நேரம் சவாலான இடம் வரும் நீ அந்த இடத்தை தனியா கடக்க வேண்டாம் உன்கூட ஒரு துணையும் வர்ராங்கன்னு வச்சிக்கோ உங்க ரெண்டு பேர் கையிலயும் கொஞ்சம் சுமை இருக்கும். அப்போ உன்கூட இருக்கவங்க அந்த சுமைய நீ தூக்கு நான் உன்ன தூக்குறேன்னு சொல்லுவாங்க நீயும் கரடு முரடான பாதையில பாதம் படவேண்டாம்னு சொல்லி சரின்னு சொல்லுவ அதிக சுமை உன் கையில இருக்கும் அதை கொஞ்சம் கவனம் சிதறினாலும் கீழ போட்ருவ ரொம்ப கவனமா அதை நீ பாத்துப்ப ஆனா உன்ன தூக்குறவங்க அந்த சுமையோட சேர்த்து உன்னையும் சுமையா நினைப்பாங்க. அந்த நினைப்பு வெறுப்ப குடுக்கும் அது உனக்கும் புரியும் அப்போ நீ இறங்கலாம்ன்னு நினைப்ப ஆனால் அப்போ உன்னால இறங்க முடியாது. அந்த வேதனைய உன்னால தாங்கிக்க கூட முடியாது அதனாலதான் சொல்றேன் உன்னோட துணையோட சுமைய பகிர்ந்துகிட்டு போறதுதான் நல்லது. வாழ்க்கையில நம்மள கஷ்டமே தெரியாம தாங்கிக்கிற மாதிரி துணை கூட கிடைக்கலாம் ஆனால் அதுக்காக நம்ம அதை ஏத்துக்கணும்ன்னு அவசியம் இல்லை நம்மளால நடக்க முடியும் அப்டின்னா நடந்து போறதுதான் நல்லது. அனு உன்னால உன்னோட சொந்த கால்ல நிக்க முடியும் அப்டின்னா எதுக்காக இன்னொருத்தர்கிட்ட போய் காசுக்காக நிக்கணும் அதான் சொல்றேன் நீ வேலைக்கு போ எனக்காக நீ அதை மட்டும் பண்ணு என்று சொன்னாள் அமிர்தா (me : மக்களே நான் house wife யாரும் சும்மா இருக்காங்கன்னு சொல்லல அவங்க வேலைய 90% யாரும் மதிக்க மாட்டாங்கன்னுதான் சொல்றேன்.ரொம்ப சுலபமா சொல்லிடுவாங்க வீட்லதான இருக்க என்ன பன்றேன்னு பண்ணி பார்த்தாதான் தெரியும் எவ்ளோ கஷ்டம்ன்னு. அதனால பொண்ணோ பையனோ சொந்த காலில் நிற்பது சாலச்சிறந்தது 😇)

நீங்க என்ன சொல்றிங்க. யாரோ ஒருத்தர்கிட்ட வேலை செஞ்சு அவங்ககிட்ட சம்பளம் வாங்குறதுக்கு என்னோட ஹஸ்பண்ட்கிட்ட உரிமையா காசு வாங்கிட்டு போலாமே. நான் என்னதான் வேலைக்கு போய் சாம்பாதிச்சாலும் இந்த அளவுக்கு வசதியா என்னால வாழ முடியாது. அதோட எனக்கு ரகுவை ரொம்ப பிடிச்சிருக்கு அவர் நிச்சயம் என்ன ரொம்ப நல்லா பாத்துப்பாரு நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன் அதனால நீங்க கொஞ்சம் கூட என்ன பத்தி கவலை பட வேண்டாம் என்று அவள் சொல்லும்போதே அவளுக்கு ரகுவிடமிருந்து அழைப்பு வர போன் எடுத்தவள் அமிர்தாவை கண்டு கொள்ளாமல் எழுந்து பேச சென்றாள்.

அமிர்தாவால் அதற்குமேல் அவளிடம் அதைபற்றி பேச முடியவில்லை.என்பதால் அதோடு விட்டு விட்டாள்.

---

அனு அப்போ நம்ம பேசுனத எல்லாம் நீ எதுக்கு இப்போ பேசிகிட்டு இருக்க அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் நீ எதுக்கு அழுதுட்டு இருக்க என்று கேட்டாள் அமிர்தா.

அண்ணைக்கு நீங்க சொல்றத கேட்டுருந்தா நான் இப்போ இந்த நிலைமையில இருந்துருக்க மாட்டேன் அண்ணி நான் நல்லா இருந்துருப்பேன் என்று அவள் சொல்ல அமிர்தாக்கு பதட்டம் ஆனது.

அனு என்ன சொல்ற நீ. நீ நல்லாத்தான இருக்க என்று கேட்டாள் அமிர்தா

இல்லை அண்ணி நான் நல்லா இல்லை என்னோட வாழ்க்கை மொத்தமா போச்சு. கல்யாணம் ஆன முதல் ரெண்டு வருஷம் நல்லாதான் போச்சு அப்புறம் குழந்தை இல்லைன்னு பேச்சு வந்துச்சு அவ்ளோ ஹாஸ்பிடல் போய் எனக்கு குழந்தை பிறந்துச்சு ஆனால் அதுக்கு நடுவுல எவ்ளோ கேள்விகள் எவ்ளோ அவமானம். கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் இல்லைங்கிறதுக்கே எனக்கு மலடி அப்படிங்கிற பட்டம் கொடுத்துட்டாங்க நல்லவேளை எனக்கு அதுக்கப்புறம் குழந்தை பிறந்தான் இல்லைன்னா இன்னும் என்னன்ன கேட்டிருப்பன்னே எனக்கு தெரியல. எனக்கு அந்த மாதிரி நேரத்துல அவர் ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தாரு. எல்லாம் நல்லாதான் போச்சு போன வாரம் ஒரு கல்யாணம் வீடு இருந்துச்சு அவர் பிரண்ட்க்குதான் கல்யாணம் அங்க பொண்ணுக்கு நிறைய நகை பணம் கார் வீடு எல்லாம் கொடுத்து பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துருக்காங்க இத்தனைக்கும் அவங்க பிரண்ட் இவர விட வசதி கம்மி. அங்க இருக்கவங்க எல்லாம் தகுதி உள்ளவங்களுக்குதான் இந்த மாதிரி இடம் அமையும்ன்னு அவர் காதுபட சொல்லவும் அவர் ரொம்ப குழப்பமாகிட்டாரு. என்கிட்ட கொஞ்சம் நாளா ஒழுங்காவே பேசல நான் ஏன் இப்படி இருக்கீங்கன்னு ஒரு நாள் கேட்டேன் அதுக்கு சொன்னா உனக்கு புரியுமா பிசினஸ்ல பிரச்சனைன்னா எல்லாருக்கும் சப்போர்ட் பண்ற மாதிரி மாமியார் வீடு இருக்கு எனக்கு பாரு ஒண்ணுமே தராத மாமியார். நல்ல இளிச்சவாயா இருந்ததால என்ன ஏமாத்தி மாப்பிள்ளையாக்கிகிட்டிங்க இல்லைன்னா இந்நேரம் வசதியா என்னோட தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ண நான் கல்யாணம் பண்ணி இருப்பேன். என்ன யாரும் கேவல படுத்தி இருக்கவே கூடாது ஆனால் உன்ன கல்யாணம் பண்ணதுனால அந்த கல்யாண வீட்ல என்ன எல்லாரும் கேவலமா பாக்குறாங்க இத்தனை வருஷம் இந்த வீட்ல சொகுசா வாழ்ந்தல்ல அதுக்கு எல்லாம் என்ன பண்ண ஒண்ணுமே பண்ணலல்ல அதனால இப்போ போய் உன்னோட வீட்ல இருந்து 10 லட்சம் வாங்கிட்டு வா இல்லைன்னா அதுக்கு எதாவது நகை போட சொல்லு. அது எல்லாம் இருந்தா வா இல்லைன்னா நீ வரவே தேவை இல்லைன்னு சொல்லி குழந்தைய என்கிட்ட கொடுக்காம என்ன மட்டும் அனுப்பி வச்சிட்டாங்க. இத்தனை வருஷம் ஒண்ணா வாழ்ந்து இப்போ பணம்தான் முக்கியம்ன்னு என்ன அனுப்பி வைக்கிறாருன்னா அவர் கூட நான் இத்தனை வருஷம் என்ன வாழ்க்கை வாழ்ந்தேன்னே தெரியல உண்மையா என்ன நடந்தாலும் நான் நம்ம வீட்டுக்கு வர கூடாதுன்னுதான் நினைச்சேன் ஆனால் என்ன தூரத்திட்டாங்க எனக்கு என்னோட குழந்தைய பாக்கணும் அண்ணி எனக்கு என்ன பண்ணன்னு தெரியல என்று சொல்லி அழுதாள் அனு.

அனு நீ அழ வேண்டாம் வா இப்போ உடனே போய் எல்லாருகிட்டயும் சொல்லுவோம் என்றாள் அமிர்தா.

இல்லை அண்ணி அம்மா அப்பாகிட்ட சொன்னா எப்படியும் அவர்கிட்ட சமாதானம் பேச முயற்சி பண்ணுவாங்க இல்லை பணம் புரட்டுவாங்க அது எதுவும் வேண்டாம் எனக்கு அங்க போக கூட பிடிக்கல எனக்கு என் குழந்தைதான் வேணும் என்று சொன்னாள் அனு.

சரி நம்ம பிரசாத் கிட்ட சொல்லுவோம் குழந்தைய கூட்டிட்டு வரலாம். பேசாம இருந்தா இங்க ஒண்ணுமே நடக்காது.அனு நீ எதுக்கும் கவலை படாத எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று சொல்லிய அமிர்தா அவளை கீழே அழைத்து சென்றாள். அவர்கள் கீழே செல்லும்போது வீட்டில் உள்ள எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள்.

மாப்பிள்ளை போன் பண்ணாரு நாளைக்கு காலையில கிழம்பு நாங்க அவர் கையில கால்ல விழுந்தாவது அவர்கிட்ட உன்ன விட்டுட்டு வர்றோம் என்று சொன்னார் அனுவின் அம்மா. அனு அமிர்தாவை பார்த்தாள் அவள் பார்வையில் வலி இருந்தது.

🖤எனக்கு தெரியும் இந்த எபிசொட் கியூட்டா இருந்துருக்காதுன்னு ஆனாலும் தேவை உள்ள எபிசொட்தான்னு நினைக்கிறேன் அடுத்த பதிவில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது அபிராமி கணேசன் 🖤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro