
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -31
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
புகை போல வெண் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவா் சொல்லி கேட்பேன்
கடல் போன்ற கண்ணாலே
என்னை வாாி சென்றாளே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூர்யா போனை காட்ட தேவா போனையும் அவனையும் ஆச்சர்யமாக பார்த்தாள்.அதில் தேவா அனுப்பிய மெசேஜ் இருந்தது
இங்க வா வந்து உக்காரு இதை பத்தி பேசணும் என்று தேவாவை அழைத்தான்.
என்ன ஆச்சு இது நீ அனுப்புன மெசேஜ்தான இல்லை வேற யாராவது உன் போன் எடுத்து அனுப்பிட்டாங்களா. என்று கேட்டான் சூர்யா.தேவா அவனை பார்க்க தயாராக இல்லை அவள் தலை குனிந்து இருந்ததை பார்த்த சூர்யா அவளுடைய போனை எடுத்தான் ஆனால் அந்த போனில் மெசேஜ் இல்லை.
அதாவது நடந்த சம்பவத்தின் படி தேவா delete for everyone கொடுக்கறதுக்கு பதிலா delete for me கொடுத்துட்டா அதனாலதான் சூர்யா படிச்சிட்டான். (Me :இந்த மாதிரி மெசேஜ் மாத்தி டெலீட் பண்ணுறதெல்லாம் எங்க வீர வாழ்க்கையில சகஜம் 😎)
சூர்யா அந்த போனில் மெசேஜ் இல்லாததை பார்த்து ஆச்சர்யம் அடைந்தவன் அவளை பார்க்க தேவா அவனை பார்த்தாள் அவள் இமை கூட லேசாக அசைக்கவில்லை.சூர்யா பேச ஆரம்பித்தான்.
இரு இண்ணைக்கு மிஷன் கொடுக்க அமிர்தா பிரசாத் வந்துருந்தாங்கல்ல. அப்போ இது அமிர்தா பிரசாத் வேலையாதான் இருக்கும்.அதான் பாத்தேன் கவிதை எல்லாம் வந்துருக்கேன்னு. அமிர்தாதான் எதாவது கூகிள்ல தேடி இந்த கவிதை எடுத்து நீ அனுப்புன மாதிரி அனுப்பி இருப்பா நீ எதுவும் அவங்கள தப்பா எடுத்துக்காத நம்ம சேர்ந்து சந்தோசமா இருக்கணும்னுதான் அவங்க இந்த மாதிரி எல்லாம் பண்ணுறாங்க. இட்ஸ் ஓகே ஒன் சைட் லவ் கூட நல்லாத்தான் இருக்கு. நீ எதை நினைச்சும் குழப்பிக்க வேண்டாம் நீ எப்போவும் போல இரு. சரி இப்போ நம்ம சாப்பிட போலாம் என்னவோ இண்ணைக்கு கொஞ்சம் பசிக்குது என்று சொன்னவன் சாதாரணமாக செல்ல தேவா ஒன்றும் புரியாமல் அவன் செல்வதை பார்த்தபடி அப்படியே நின்றாள்.
பிறகு அவளும் சாப்பிட சென்றாள். சாப்பிட்ட பிறகு கிருஷ்ணா பேய் படம் பார்க்க செல்வத்தை அழைக்க செல்வம் தனக்கு உறக்கம் வருவதாக சொல்லி சென்று விட்டார் சூர்யா வேலை இருப்பதாக சொல்லி அவனும் சென்று விட்டான்.தேவாவிடம் கிருஷ்ணா கேட்கும் போது அவளால் மறுக்க முடியாமல் அவனுடன் பேய் படம் பார்க்க ஒப்பு கொண்டாள்.உண்மையில் தேவாக்கு பேய் படம் என்றால் அவ்வளவு பயம் இருந்தாலும் கிருஷ்ணாக்காக ஒப்பு கொண்டாள் (me : நானா இருந்தா போடா கொய்யாங்கோன்னு போயிருப்பேன் )
The grudge
தேவாவும் கிருஷ்ணாவும் அந்த படத்தை பார்க்க ஆரம்பித்தார்கள். தேவாக்கு ஆரம்பத்தில் இருந்தே மிகவும் பயமாக இருந்தது அதுவும் நேரமாக நேரமாக இன்னும் பயம் அதிகம் ஆனது. கிருஷ்ணா வேறு இருட்டில் படம் பார்த்தால்தான் நன்றாக இருக்கும் என்று லைட் ஆப் செய்து விட்டான்.அது தேவாக்கு இன்னும் பயத்தை கொடுத்தது. சத்தம் வேறு சற்று அதிகமாக வைத்து இருந்தான் கிருஷ்ணா தேவா இதனால் பயத்தின் உச்சத்தில் இருக்க அப்போதுதான் கவனித்தாள் ஏற்கனவே கிருஷ்ணா உறங்கி விட்டான் என்பதை அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. ரிமோர்ட் வேறு தூரத்தில் இருந்தது அதை எடுக்க செல்லவும் அவளுக்கு பயமாக இருந்தது.காலை கீழே வைக்க கூட அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது அந்த படத்தில் கதவை திறக்கும் காட்சி ஒன்று வர அப்போது நிஜத்தில் கதவு திறக்கும் அவளுக்கு சத்தம் கேட்டது அவளுக்கு கிருஷ்ணாவை எழுப்ப மனம் இல்லை எனவே படத்தை பார்த்தால் தானே பயம் வரும் என்று தன்னுடைய மனதுக்குள் நினைத்தவள் கண்ணை மூடி கொண்டு காதையும் மூடி கொண்டாள் அவளுக்கு பயம் இன்னும் அதிகம் ஆனது கண்ணை மூடினாலும் கனவில் கூட அந்த பேய்தான் வந்து நின்றது தேவை இல்லாமல் இந்த படத்தை பார்க்க உட்கார்ந்து விட்டோமோ என்று அவள் பயத்தில் இருக்க தண்ணீர் எடுக்க வேண்டி கிட்சனுக்கு செல்ல வெளியே வந்த சூர்யா தண்ணீர் எடுத்து விட்டு வரும்போது அவள் கண்ணையும் காதையும் மூடி கொண்டு உட்கார்ந்து இருப்பதை பார்த்தான் ஹாலில் லைட் வேறு ஆன் செய்யவில்லை என்பதால் தேவா முகம் கிட்சனில் உள்ள லைட் வெளிச்சமும் டிவி ஒளியும் அவள் அப்படி பயந்து போய் உட்கார்ந்து இருப்பது தெரிந்தது.
சூர்யா ஹால் லைட் ஆன் செய்தவன் அவள் அருகில் சென்று அவளை அழைத்தான் ஆனால் தேவா கொஞ்சம் கூட அசையவில்லை.அவள் மனதில் பேய் மீதான பயம் அதிகம் இருந்ததாலும் அதோடு அவள் காதை மூடி இருந்ததாலும் அவளால் அவன் அழைத்ததை அறிய முடியவில்லை.
அவளை பார்த்து சூர்யாக்கு சிரிப்புதான் வந்தது.டிவியை ஆப் செய்த சூர்யா அவளை காதில் இருந்து கையை எடுக்க அவன் தொடுகையில் அதிர்ந்தவள் கண்ணை திறந்து அவனை பார்த்ததும் அமைதியானாள்.அவளை அமைதியாக பார்த்து லேசாக புன்னகை செய்தவன் அவள் அருகில் சிவனே என்று படுத்து கொண்டிருந்த கிருஷ்ணாவை முறைத்தவன் அவனை எழுப்பினான் பதறி எழுந்தான் கிருஷ்ணா.
டேய் படம் பாக்குறேன்னா அதை பாக்கணும். அவளை கூப்பிட்டு உக்கார வச்சிட்டு நீ பாட்டுக்கு தூங்கிட்டு இருக்க அவ பயந்துட்டு உக்காந்து இருக்கா அவ இந்த அளவுக்கு அவ பயந்து காய்ச்சல் எதாவது வந்தா நீ என்ன பண்ணுவ. இந்த மாதிரி இனிமே பண்ணாத இன்னும் நீ ஒண்ணும் சின்ன பையன் கிடையாது என்று சூர்யா கோபமாக சொல்ல தேவாக்கு அந்த படத்தில் வந்த பேய் கூட பரவாயில்லை என்று தோன்றியது.கிருஷ்ணா தூக்க கலகத்தில் இருந்ததால் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை அவன் தேவாவை ஒன்றும் புரியாமல் பார்க்க தேவா சூர்யாவை அமைதியாக இருக்கும்படி அவன் கையை பிடித்து சைகை செய்ய சூர்யா அவள் கையை தட்டி விட்டான்.
இங்க பாரு கிருஷ்ணா இனி இந்த மாதிரி எதாவது பேய் படம் பாக்குறேன் அது இதுன்னு சொல்லிட்டு இந்த மாதிரி உக்காருங்க அப்புறம் இருக்கு உங்களுக்கு. தேவா உனக்கும்தான் இனி இந்த மாதிரி இன்னொரு தனியா உக்காந்து பயந்துட்டு இருக்காத ஒண்ணு தைரியமா இருக்கணும் இல்லை தைரியம் உள்ளவங்க கூட நீ இருக்கணும் உனக்கு புரியுதா. சரி இப்போ ரெண்டு பேரும் போய் தூங்குங்க என்று சொன்னான் சூர்யா.
சாரி அண்ணி என்று சொன்ன கிருஷ்ணா சோகமாக செல்ல அவனிடம் தேவா செல்ல போக அவளை அழைத்த சூர்யா அவளை உறங்க செல்ல சொல்ல முதல் முறையாக தேவா உண்மையான கோபத்துடன் சூர்யாவை முறைத்துவிட்டு அவர்கள் அறைக்கு சென்றாள் அதை பார்த்த சூர்யாக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் ஆச்சர்யமாகவும் இருந்தது.
அவளை பார்த்து சிரித்தவன் கிட்சன் லைட் மற்றும் ஹால் லைட் எல்லாவற்றையும் அணைத்து விட்டு ரூமுக்கு சென்றான் ( me : மின்சாரத்தை வேஸ்ட் பண்ண கூடாது 🤷♀️)
தேவா கட்டிலில் அமர்ந்து இருந்தவள் அவனை பார்த்து முறைத்தாள்.
அவள் முறைப்பதை பார்த்த சூர்யாக்கு சிரிப்புதான் வந்தது
என்ன மேடம் வழக்கமா நான் எதாவது திட்டுனா அப்டியே முகம் எல்லாம் வாடி வதங்கிடும் ஆனால் இண்ணைக்கு என்ன புதுசா என்ன பார்த்து கோபபடுற மாதிரி இருக்கு.
அவன் அப்படி கேட்டதும் தேவாக்கு இன்னும் கோபம்தான் வந்தது
வேகமாக எழுந்து அவன் அருகில் வந்தவள் அவனை பார்த்து முறைதாள்.
இப்போ எதுக்கு என்ன முறைக்கிற எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்று சூர்யா கேட்க அவனை இன்னும் முறைத்தாள் தேவா
இங்க பாரு என்ன நீ இந்த மாதிரி முறைக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லை. இப்போ என்ன நான் கிருஷ்ணாகிட்ட அப்படி பேசுனது நீ தப்புன்னு நினைக்கிறியா என்று கேட்டான் சூர்யா. தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்
ஓ அப்டியா தப்பா நினைச்சா நினைச்சிக்கோ ஆனால் நான் தப்பா நினைக்கல இந்த மாதிரி விஷயம் எல்லாம் எனக்கும் கிருஷ்ணாக்கும் ரொம்ப சாதாரணம். அவன் ஒண்ணுமே நினைக்க மாட்டான் அதனால அவன் வருத்தபடுவான்னு நினைச்சிட்டு நீ என்மேல கோப படவேண்டாம் ஓகே. என்று அவன் சொல்ல அவனை பார்த்து முறைத்தவள் கட்டில் பக்கம் செல்ல அவள் கையை பிடித்து இழுத்தான் சூர்யா அதில் அவன் மீதே மோதி நின்றாள். அவள் இடையோடு சேர்த்து அவளை அனைத்தவன் அவளை பார்த்து பேசுனான்.
என்ன கிருஷ்ணா மேல உனக்கு அவ்ளோ பாசமா அவன திட்டுனா உனக்கு இந்த அளவுக்கு உனக்கு கோபம் வருது.அதோட அவன திட்டுனா உனக்கு தைரியமும் தானா வருது. அப்போ என்ன யாராவது திட்டுனாலும் உனக்கு கோபம் வருமா அப்படி கோபம் வர்றப்போ நீ கொஞ்சம் தைரியமா இருப்பல்ல. அப்டி தைரியம் வந்தா அந்த மெசேஜ் அனுப்புனது நீதான்னு உண்மைய ஒத்துப்பல்ல என்று சூர்யா கேட்க அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் தேவா இருந்த கோபம் எல்லாம் மறைந்து அவளுக்கு இப்போது பதட்டம் ஆனது.
இவ்ளோ நேரம் என்ன முறைச்சிட்டு இருந்த இப்போ என்ன ஆச்சு என்ன பாக்கவே மாட்டேங்குற. என்று கேட்டான் சூர்யா. தேவாக்கு இப்போ உடம்பில் உள்ள ரத்தம் எல்லாம் ஒரே நேரத்தில் தலைக்கு வந்தது போல இருந்தது. அவளுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. அவளை பார்த்து சிரித்தவன் அவள் முகத்தை கைகளில் தாங்கி அவளை பார்க்க வைத்தான்.
எனக்கு புரியுது தேவா இது எல்லாம் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும் ரொம்ப பதட்டமாதான் இருக்கும் ஆனா சொல்லாம இருந்து பதட்ட படுறதுக்கு சொல்லிட்டு பதட்ட படுறது பரவாயில்லை. இப்போ நீ என்ன லவ் பண்றங்கிறதுக்காக எதுவும் மாற போறது கிடையாது. நம்ம முதல்ல லவ்வர்ஸ் ஆவோம் அப்புறம் ஹஸ்பண்ட் அண்ட் வைப் ஆவோம். சில நேரம் நண்பர்களா இருப்போம் இது எல்லாம் சேர்ந்து இருக்குறதுதான நம்ம வாழ்க்கை. நான் எதுவும் அவ்ளோவா எதிர்பாக்கவே இல்லை ஆனால் எதிர்பாக்கமலேயே எனக்கு எல்லாம் கொடுக்க நீ இருக்க நமக்காக ஒரு பொண்ணு இருக்கா அப்படிங்கிறத தாண்டி வேற என்ன வேணும். நீ எனக்கு கவிதையா சொல்ல தேவை இல்லை இல்லை ஐ லவ் யூன்னு மெசேஜ் பண்ண தேவை உன்னோட ழுத்துக்கள் என்கிட்ட பேசுறதுக்கு முன்னாடியே உன்னோட கண்கள் அது என்கிட்ட பேசுது அந்த கண்கள்ல எனக்காக பாசம் இருக்கு நம்ம குடும்பத்து மேலையும் பாசம் இருக்கு ஆனால் நீ என்ன பார்க்கும் பார்க்கும் போது எனக்குன்னு ஒரு காதல் இருக்கு அது எனக்கு தெரியும் ஆனால் நீ சொன்னா அது எனக்கு ஒரு அதிக சந்தோசம். உனக்கு எப்போ நான் உன்ன நல்லா பாத்துப்பேன்னு உன்மேல உண்மையான அன்பு வச்சிருக்கேன்னு உனக்கு எப்போ தோணுதோ அப்போ நீ என்கிட்ட நேரில வந்து லைட்டா கண்ண கூட அசை அதுலயே நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு தெரிஞ்சுடும். என்று சூர்யா சொல்ல அவ்வளவு நேரம் அவனை பார்த்து கொண்டிருந்தவள் அவனை அணைத்து கொண்டாள் அவள் அப்படி செய்ததும் சூர்யாவிற்கு கொஞ்சம் வித்யாசமாக இருந்தது. இதுநாள் வரை உள்ள அணைப்பிற்கும் இதுக்கும் உள்ள வித்யாசம் என்பதை அவனால் உணர முடிந்தது.அவள் அவனை நிமிர்ந்து பார்க்க கண்ணால் என்ன என்று கேட்டான் சூர்யா. தேவா நோட் பென் எடுக்க போக அவளை தடுத்தான் சூர்யா.
நீ நோட் பென்தான எடுக்க போற நமக்கு இனிமே நோட் பென் இதெல்லாம் தேவையே இல்லை. நீ கண்ண காமிச்சாலே புரியும் எனக்கு என்று சூர்யா சொல்ல தேவா அவளை பார்த்து புன்னகை செய்தவள் கண்களால் தன்னுடைய காதலை சொன்னாள். (Me: இதென்ன பிரமாதம் நாங்க எல்லாம் பிரகாடிகல்ல procedure கூட கண்ணால பேசிப்போம் . Worst example ஆனால் எனக்கு வேற சொல்ல தெரியல )அந்த மெசேஜ் படித்த போது இருந்த மகிழ்ச்சியை விட சூர்யா இப்போதுதான் இன்னும் மகிழ்ச்சி அடைந்தான்.
அப்புறம் இப்போ நம்ம என்ன தூங்க போற என்று சூர்யா கேட்கவர தேவா சட்டென்று அவன் உதட்டில் முத்தம் கொடுத்தவள் நொடியில் விலகி நின்றாள் சூர்யாக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான்.
அவள் அருகில் சென்றவன் அவளை முகத்தை உயர்த்தி தன்னை பார்க்கும்படி செய்து பேச ஆரம்பித்தான்.
மேடம் நீங்க ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க சோ யூ ஆர் அண்டர் அரெஸ்ட் அவ்ளோ சீக்கிரம் ரிலீஸ் ஆக முடியாது என்று சூர்யா சொல்ல தேவாக்கு வெட்கம் வந்தது. அதை ரசித்தான் சூர்யா.
எல்லாமே சரியா இருந்தா அங்க ஏதோ ஒண்ணு சரி இல்லைன்னு அர்த்தம் அதே நேரம் எல்லா பிரச்சனை ஒருத்தருக்கே வராது. பிரச்சனை பலவிதம் அதில் வரப்போகும் பிரச்சனை ஒருவிதம்.(me : பேச வேண்டிய பிரச்சனை 😇)
அனு மாடியில் நின்று பேசி கொண்டிருந்தாள்.
என்னங்க ப்ளீஸ் நான் எப்படியாவது 5 லட்சம் வாங்கிட்டு வர்றேன் ப்ளீஸ் எனக்கு பாப்பாவையாவது காட்டுங்க வீடியோ கால் பண்ணா அட்டென்ட் பண்ணுங்க ப்ளீஸ் என்னங்க என்னங்க என்று அவள் பேசும்போதே அனுவின் கணவன் போனை வைத்து விட்டான். அவள் போனை பார்த்துவிட்டு திரும்ப அமிர்தா கையில் பால் கிளாசுடன் நின்று கொண்டிருந்தாள்.
❤❤ ஓகே சில கேள்வி இருக்கலாம் உங்களுக்கு கவிதை கவிதைன்னு சொன்னிங்களே அந்த கவிதை எங்க சூர்யா போட்டோ பார்த்து என்ன சொன்னான்னு அது எல்லாம் வர வேண்டிய இடத்தில் வரும். கவிதை எழுதல ஆனால் எப்படிபட்ட கவிதைன்னு யோசிச்சு வச்சிருக்கேன் ஆனால் அதுக்கு சீன் இருக்கு பாத்துப்போம் ❤
❤❤ அப்புறம் என்கிட்ட சூர்யா சந்தேகம் பட மாட்டான்னு சொன்ன எல்லாருக்கும் நன்றி. இந்த நன்றி அந்த மாதிரி கமெண்ட் என்ன சந்தோச படுத்திச்சு அதுக்குதான் ❤
ஓகே மக்களே அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது அபிராமி G. N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro