
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -30
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முத்தங்கள் நூறு
நான் தந்தேன் கள்ளியாய் தூக்கி
போனாளே
என்னிடம் மீண்டும்
தாவென்று கேட்டதும் மௌனம்
ஆனாளே
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்த சூர்யா வேலைக்கு கிளம்பி கொண்டிருக்க தேவா அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.சூர்யா அந்த காஃபியை வாங்கியவன் காஃபியை குடிக்க ஆரம்பித்தான். தேவா அவனுக்கு சாப்பாடு தயார் செய்ய போக அவளை செல்ல விடாமல் தடுத்தவன் அவளை பார்த்தான்.
ஹோய் இப்போ எங்க போற என்று கேட்டான் சூர்யா.
தேவா சாப்பாடு செய்ய போவதாக சைகை செய்தாள்.
இவ்ளோ காலையில என்னால சாப்பிட முடியாது நீ போட்டு கொடுத்த காஃபிக்கு ரொம்ப நன்றி இப்போ போய் தூங்கு. இன்னும் விடிய டைம் இருக்கு நான் கிளம்புறேன் என்று சொன்னான் சூர்யா. அவன் ஒரு காபிக்கு கூட நன்றி சொல்லுவதை கேட்ட தேவாக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
அவன் சொன்னதுக்கு சரி என்பது போல தலை அசைத்தாள் தேவா.காஃபியை குடித்த சூர்யா ரூமை விட்டு வெளியே செல்ல அவனை வழி அனுப்ப வேண்டி அவன் பின்னால் நடந்தாள் தேவா. ரூம் கதவுக்கு அருகே வந்ததும் சட்டென்று நின்ற சூர்யா அவள் பக்கம் திரும்பினான். தேவா அவனை என்ன என்பது போல பார்த்தாள்.
பாத்தியா என்னதான் நான் ஒரு போலீசா இருந்தாலும் சில விஷயத்தை மறக்குறேன் இப்போ கூட பாத்தியா ரொம்ப முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன் என்று சொன்னான் சூர்யா. அவன் சொன்னதை கேட்டு குழம்பினாள் தேவா.
நான் என்ன மறந்தேன்னு உன்கிட்ட சொல்லல இப்போ சொல்றேன் என்று சூர்யா சொல்ல தேவாவும் அவனை மிகவும் சீரியசாக பார்க்க அவள் அருகில் வந்தவன் அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க தேவா கண்ணை மூடி கொண்டாள். முத்தம் கொடுத்தவன் அவளை பார்த்து புன்னகை செய்தான்.
இந்த முத்தம்த்ததான் குடுக்க மறந்துட்டேன் எனக்கு ஒரு விஷயம் குடுக்கணும்ன்னா அதை உடனே குடுத்துரணும் இல்லைன்னா அதை பத்தி யோசிச்சிகிட்டே இருப்பேன்.ஸ்டேஷன்ல அக்கியூஸ்ட்க்கு நடுவுல இருக்குறப்போ உனக்கு முத்தம் கொடுக்கலன்னு யோசிச்சிட்டு இருந்தா நல்லாவா இருக்கும் அதான் இப்போவே கொடுத்துட்டேன் நைட் பாக்கலாம். பாக்க மட்டும்தான் முடியுமான்னு நீதான் எனக்கு சொல்லணும் என்று சொன்னவன் நடக்க ஆச்சர்யத்துடன் அவனை பார்த்தவள் அவன் பின்னால் நடக்க ஆரம்பிக்க சூர்யா அவளிடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினான். தேவா சென்று வெறுமனே படுத்து கொண்டிருந்தாள். அவளுக்கு உறக்கம் கொஞ்சம் கூட வரவில்லை.அவள் மனம் முழுக்க சூர்யா பற்றிய எண்ணம்தான் முதலில் அவனை பார்த்தது அவனை பார்த்து பயந்தது இப்போது அவனை ரசிப்பது என எல்லாவற்றையும் நினைத்து பார்த்தவள் முகத்தில் புன்னகை தோன்றியது.
மனதிற்கு பிடித்தவரை நினைக்கும் போது முகத்தில் தானாக புன்னகை தோன்றும் என்பது கூட உண்மைதான் போல ( me : நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க மக்களே ஆனால் இது 100% உண்மைன்னு கம்பெனி வாக்கு கொடுக்காது)
தேவாவின் நாள் எப்போதும் போல மகிழ்ச்சியாக சென்றது. கிருஷ்ணா மற்றும் செல்வம் பள்ளிக்கு செல்ல தேவா வீட்டில் இருந்தாள். அப்போது அமிர்தாவும் பிரசாத்தும் வந்தார்கள்.அதுவும் தையல் இயந்திரத்துடன் அதை பார்த்ததும் தேவா முகம் பிரகாசம் ஆனது அவர்களை உள்ளே வரும்படி சைகை செய்தாள்..
தேவா பாருங்க உங்களுக்காகதான் இந்த மெசன் நீங்க தைப்பிங்கன்னு சூர்யா சொன்னான் அதோட உங்களுக்கு வீட்ல தனியா இருக்கும்போது போர் அடிக்காம இருக்கும்ன்னு இதை வாங்க சொன்னான் . நல்லா பழகுன மிஸன்தான் மிதிக்க ஈஸியா இருக்கும்னு சொல்லிட்டான் அதான் தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி தேடி அலைஞ்சு நல்ல கண்டிஷன்ல இதை வாங்கிட்டு வந்தோம் காசு உங்க புருஷன்தான் கொடுத்தது என்று சொன்னான் பிரசாத் அவன் சொன்னதை கேட்டு சிரித்தாள் தேவா.
இங்க பாரு தேவா நீ முதல்ல எனக்குதான் தச்சு தரணும். நீ மட்டும் எனக்கு நல்லா பண்ணி கொடுத்த உனக்கு நான் நிறைய ப்ளௌஸ்க்கு ஆர்டர் வாங்கி கொடுக்குறேன்.என்று சொன்னாள் அமிர்தா.
அடடா ஆரம்பிச்சிட்டியா. அந்த பொண்ண கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு. உனக்கு ஓசியில தைக்க அந்த பொண்ணுதான் கிடைச்சாளா. என்று கேட்டான் பிரசாத்.
இவர் சும்மா சொல்றாரு தேவா உழைச்ச காச நான் எடுத்துக்க மாட்டேன். உனக்கு கொடுத்துடுவேன் ஆனால் நீ எனக்கு ப்ளௌஸ் நிச்சயம் தச்சு தரணும் என்று அமிர்தா சொல்ல தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.
அப்ப சரி பிரண்ட்ஸ் நீங்க பேசுங்க நான் அப்டியே கடைக்கு கிளம்புறேன். அம்மு நான் சாயங்காலம் அனு வருவா அவளை கூட்டிட்டு வந்துடறேன். நீ மதியத்துக்கு அப்புறம் கடைக்கு வந்தா போதும் என்று பிரசாத் சொல்ல அமிர்தா சரி என்பது போல தலை அசைத்தாள். பிரசாத் சென்றுவிட தேவாவும் அமிர்தாவும் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்.
வா மிசன் எப்படி இருக்குனு பாரு உனக்கு ஒருவேளை நல்லா இல்லைன்னு தோணுச்சுன்னா மாத்திக்கலாம் என்று சொன்னாள் அமிர்தா தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.
இங்க பாரு தேவா நீ என்கிட்ட இதைப்பத்தி எதுவும் சொல்லலன்னா கூட எனக்கு தெரியும் சூர்யா அண்ணா உன்மேல எந்த அளவுக்கு பாசம் வச்சிருக்காங்கன்னு. தேவா அமிர்தாவை பார்த்தாள்.
இதெல்லாம் நீ சொல்லணும்னு அவசியம் இல்லை தேவா. எனக்கு எல்லாம் புரியுது உனக்கு சூர்யா அண்ணாவை ரொம்ப பிடிச்சிருக்குதான என்று அமிர்தா கேட்க தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.
எனக்கு 100% நல்லா தெரியும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகான ஜோடி உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு ஆனால் இப்போ நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ இப்போ இந்த மிஷன் உன்கிட்ட இருக்கிறது உனக்கு ஒரு முதலீடு மாதிரி. நீ உனக்காக எங்களுக்காகன்னு இல்லாம எல்லாருக்கும் தைக்கணும். பெருசா படிச்சி பெரிய கம்பெனிக்கு போனாதான் வாழ முடியும்னு இல்லை ஒரு மிஷன் வச்சி ஒரு குடும்பத்தையே காப்பாத்துற ஆழுங்களும் இருக்காங்க. நாளைக்கு குழந்தைங்க குடும்பம்ன்னு மனசு அதுகிட்டதான் இருக்கும் அப்போ கூட நம்ம சொந்த கால்ல நிக்கிறோமாங்கிறதுதான் முக்கியம். அதுதான் நான் உனக்கு இப்போ சொல்றேன் உன்னோட சம்பாத்தியம்ன்னு உனக்கு இருக்க மாதிரி பாத்துக்கோ என்று சொன்னாள் அமிர்தா (me : கருத்து மக்களே )
அவள் சொன்னதை கேட்ட தேவாக்கு அவள் சொன்னதும் சரி என்று பட்டதால் சரி என்பது போல தலை அசைத்தாள்.
ம்ம் நல்ல பிள்ளை நான் என்னோட ப்ளௌஸ் அப்புறம் அளவு ப்ளௌஸ் எல்லாம் கொண்டு வந்துருக்கேன் நீ டைம் கிடைக்கிறப்போ தச்சு வை நான் வாங்கிக்கிறேன் என்று சொன்னாள் அமிர்தா தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.
சரி தேவா நாத்தனார் இண்ணைக்கு வர்றாங்க அதனால கொஞ்சம் பிஸி நான் போறேன் என்று சொன்னாள் அமிர்தா தேவா சரி என்பது போல தலை அசைத்தாள். அமிர்தா சென்ற பிறகு தேவா அந்த மிஸனை பார்த்தவள் அமிர்தா கொடுத்த அந்த துணியை அளவெடுத்து வெட்ட ஆரம்பித்தாள். சாயங்காலம் நேரம் ஏனோ தேவா மனம் சூர்யாவை அதிகம் நினைவு படுத்தியாதால் அவள் அவனிடம் பேச நினைத்தாள் ஆனால் நினைத்த நேரத்தில் அவனிடம் பேச முடியாது என்பதால் அவள் மனதில் உள்ளதை எல்லாம் மெசேஜ்ஜாக டைப் செய்து தன்னுடைய காதலையும் சேர்த்து அதில் சொல்லி அவனுக்கு அனுப்பி வைத்தாள் மனதில் உள்ளதை வார்த்தைகளாக மாற்ற அவளுக்கு சில நிமிடம் கூட ஆகவில்லை ஆனால் அதை அவனுக்கு அனுப்பதான் ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆனது அவள் மெசேஜ் அனுப்பிவிட்டு போனை கீழே வைத்தாள்.
அவள் மெசேஜ் அனுப்பியதும் சூர்யா பைக் சத்தம் கேட்டது அந்த சத்தம் அவளுக்குள் ஏதோ ஒரு புதுவித பதட்டத்தை கொடுக்க தேவா அவள் அனுப்பிய மெசேஜ்ஜை டெலீட் செய்து விட்டாள்., (me: yyyyy)
தேவாவும் கிருஷ்ணாவும் ஒன்றாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.செல்வமும் வீட்டுக்கு வந்தார்.தேவா சிறிது பதட்டத்தில் இருக்க அவளை பார்த்த சூர்யா என்ன என்று கண்ணால் கேட்க தேவா ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தாள்.
அவர்கள் எல்லோரும் சந்தோசமாக பேசி கொண்டிருந்தார்கள் அப்போதுதான் அனு அமிர்தா உடன் வந்தாள்.
அவளை வரவேற்றறார் செல்வம்.
என்னம்மா அனு இப்போதான் உனக்கு நம்ம வீட்டுக்கு வழி தெரிஞ்சிச்சா என்று கேட்டார் செல்வம்
அப்படி எல்லாம் இல்லைப்பா என்று புன்னகை செய்தாள் அனு.
ஆமாம் மாப்பிள்ளை எங்க உன்னோட பையன் எங்க என்று கேட்டார் செல்வம்
இல்லைப்பா நான் மட்டும்தான் வந்துருக்கேன் இங்க நம்ம வீட்ல ஏசி இல்லை இல்லப்பா அவங்களுக்கு அது எல்லாம் செட் ஆகாது அதான் நான் மட்டும் வந்துருக்கேன் ரெண்டு நாள் கழிச்சு என்ன அவர் வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு என்று சொன்னாள் அனு. அவள் அப்படி பேசியது அமிர்தாக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் அவள் அனுவின் சுபாவம் அது என்று விட்டுவிட்டாள். சூர்யா களைப்பில் உறங்கி கொண்டிருந்தவன் சத்தம் கேட்டு வெளியே வந்தான்.வெளியே வந்ததும் அனுவை பார்த்தவன் சிரித்தான்.
சூர்யா அண்ணா எப்படி இருக்கீங்க என்று கேட்டாள் அனு
ரொம்ப நல்லா இருக்கேன் என்று தேவா ஒரக்கண்ணால் பார்த்து சொன்னான் சூர்யா.
அப்போது தேவா அனுக்கு காபி கொடுத்தாள்.
இல்லங்க நான் காஃபி குடிக்குறது இல்லை. அச்சோ சாரி உங்களுக்கு நான் பேசுறது புரியுதா உங்களால பேச முடியாதுல்ல அதை மறந்துட்டேன். அண்ணா உங்களுக்கு எப்படி இவங்க சொன்னா புரியும் என்று கேட்டாள் அனு.
சூர்யாக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது. இருந்தாலும் அவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அவளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்
சில பேர் பேசவே தெரியாம பேசுவாங்க அவங்கள விட இவ சொல்றது எனக்கு நல்லா புரியும் என்று சொன்னான் சூர்யா. அவன் தன்னைதான் சொல்கிறான் என்று புரிந்து கொண்ட அனு ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் ஆனாள்
அனு தேவா காஃபி சூப்பரா போடுவாங்க. கொஞ்சம் ட்ரை பண்ணு நீ முன்னாடி எல்லாம் காஃபி குடிப்பதான ட்ரை பண்ணு என்று சொன்னாள் அமிர்தா சரி என்றவள் காஃபி எடுத்தாள். உண்மையில் அவளுக்கும் காஃபி பிடித்தது ஆனால் சொல்லதான் அவளுக்கு மனமில்லை கொஞ்சம் நேரம் பேசிவிட்டு சென்று விட்டாள். தேவா வழக்கம் போல கிருஷ்ணா உடன் அமர்ந்திருந்தாள் சூர்யா அறைக்கு சென்றவன் கொஞ்சம் நேரத்தில் தேவாவை அழைத்தான்.
தேவா ரூமுக்கு சென்று என்ன என்பது போல அவனை பார்த்தாள்.
தேவா உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா என்று கேட்டான் சூர்யா தேவாக்கு ஒன்றும் புரியவில்லை.
இல்லை நான் தெரியாம கேக்குறேன் நீ பாட்டுக்கு எல்லாம் பண்ணிட்டு எதுவும் தெரியாத மாதிரி இருக்க. உன்ன நானும் அப்பாவின்னு நினைச்சேன் ஆனா நீ அப்படி இல்லை உன்ன அப்பாவின்னு நினைச்ச நான்தான் அப்பாவி. இப்போவும் இதை எல்லாம் நான் பாக்கல அப்டின்னா ஏமாந்துதான் போயிருப்பேன் என்று சொன்ன சூர்யா அவன் போனை காட்ட தேவா அதிர்ச்சி ஆனாள்.
--
ஆமா மாப்பிள்ளை அந்த மகேஷ் பையனையும் தேவாவையும் சேர்த்து போட்டோ ஒண்ணு ரெடி பண்ணி என்கிட்ட காமிச்சுங்களே அதை அந்த போலீஸ்காரனுக்கு அனுப்புனீங்களா. உண்மை மாதிரியே இருந்து அந்த போட்டோ நிச்சயம் தேவா வாழ்க்கையில பெரிய பிரச்சனை உண்டு பண்ணும் ஏதோ பாவம்னு கட்டி
இருப்பான் இன்னொருத்தனோட பழக்கம் உள்ளவன்னு தெரிஞ்சா விட்டு வைப்பானா நாளைக்கு ராத்திரி அவ கண்ண கசக்கிட்டு இங்க நிப்பா நாலு திட்டு கொடுத்து பின்ன அவள வீட்ல ஏத்திட்டு டைவர்ஸ் வாங்கி கொடுத்துட்டு உங்களுக்கு நான் கட்டி வைக்கிறேன். அந்த நகை பணம் மட்டும் மறக்காம குடுத்துருங்க. ஆஹ் சரி மாப்பிள்ளை அப்புறம் நான் வைக்கிறேன் என்று சொன்னவள் போனை வைத்தாள். அவர் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. (Me: எனக்கு இப்படி எழுத பிடிக்காது ஆனால் இந்த சமூகத்தில் இப்படி பட்ட விசகிருமிகள் இருக்கிறார்கள் எனவே இந்த கதாபாத்திரம் இந்த காட்சி அவசியமாகி விட்டது )
புவனாவின் சூழ்ச்சி வேலை செய்யுமா தேவா வாழ்க்கை என்ன ஆகும் ஆஆஆஆ bgm போட்டுக்கோங்க மக்களே அடுத்த பதிவில் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது Abirami G. N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro