
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -29
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி
நீராவியாய் என்னை
நீ மோதினாய் உன் பாா்வையில்
ஈரம் உண்டாக்கினாய்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஜெய் மனம் வேதனை பட்டது அவனால் பூஜா சொன்ன வார்த்தையை தாங்கி கொள்ளவே முடியவில்லை. அவன் அந்த இடத்திலிருந்து கோபத்துடன் கிளம்பினான்.
பூஜா மனம் பெரும் குழப்பத்தில் இருந்தது அவளுக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை அவளால் ஜெய்யை முழுமையாக வெறுக்கவும் முடியவில்லை முழுமையாக ஏற்று கொள்ள முடியவில்லை. எப்போதும் வேண்டும் வேண்டாம் என்று யோசித்து முடிவு செய்யும் அவளுடைய மனம் ஜெய் விஷயத்தில் மட்டும் தடுமாறியது. அவள் அமைதியாக அமர்ந்திருக்க ஆட்டோ டிரைவர் இடம் வந்து விட்டதாக சொன்னார் அவர் சொன்னதை கேட்ட பூஜா ஆட்டோ விட்டு இறங்கி பணம் கொடுத்துவிட்டு தேவா வீட்டுக்குள் வர தேவா பூஜா வருவது தெரிந்ததால் அவளை வாசலுக்கு வந்து வரவேற்றாள். தேவாவை பார்த்ததும் புன்னகை செய்தவள் அவளுடன் உள்ளே சென்றாள்.
கிருஷ்ணா படிப்பாளி பிள்ளையாக படித்து கொண்டிருந்தான். செல்வம் அவனுக்கு அருகில் அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருந்தார். தேவா இந்த வீட்டுக்கு வந்த நாட்களில் இருந்து பூஜா எப்போது எல்லாம் தேவாக்கு அழைத்தாலும் கிருஷ்ணா உடனும் செல்வத்துடனும் பேசவே செய்வாள். அதனால் அவர்களுக்குள் நல்ல உறவு இருந்தது.
பூஜாவை பார்த்ததும் கிருஷ்ணா புத்தகத்தை தூக்கி ஓரம் வைத்தான்.
அட பூஜா அக்கா வாங்க வாங்க நீங்க வர்றதா சொல்லவே இல்லையே என்று கேட்டான் கிருஷ்ணா
இல்லடா சும்மாதான் அப்டியே பாத்துட்டு போலாம்னு வந்தேன். நானே கிளம்புறதுக்கு முன்னாடிதான் தேவாகிட்ட சொன்ன என்று சொன்னாள் பூஜா.
வந்தவங்கள உக்கார சொல்லாம என்ன பேசிட்டே இருக்க கிருஷ்ணா அக்காவை உக்கார சொல்லு என்று சொன்னார் செல்வம்
அட ஆமால்ல அதை மறந்துட்டேனே வாங்க அக்கா உக்காருங்க. நான் போய் உங்களுக்கு சாப்பிட எதாவது கொண்டு வர்றேன் என்று சொன்ன கிருஷ்ணா பூஜா வேண்டாம் என்று சொல்வதையும் கேட்காமல் வேகமாக கிட்சன் பக்கம் சென்றான். பூஜா சோபாவில் அமர்ந்தவள் தேவாவிடம் தான் கொண்டு வந்திருந்த பையை கொடுத்தாள். தேவா அதை வாங்கிவிட்டு கிட்சன் பக்கம் சென்று விட்டாள்.கிட்சன் சென்றவள் கிருஷ்ணாவை படிக்கும்படி சைகை செய்து அனுப்பிவிட்டு டீ போட ஆரம்பித்தாள் (me:நான் ஏன் எல்லா இடத்துலயும் டீ போடுறாங்கன்னு சொல்றேன்னா எனக்கு டீ பிடிக்கும் 🤷♀️)
அண்ணி என்ன படிக்க சொல்லி அனுப்பிட்டாங்கப்பா என்று சொன்னவன் புக் எடுத்து கையில் வைத்து கொண்டு அமர்ந்தான்.
பூஜா வேலை எல்லாம் எப்டிம்மா போகுது என்று கேட்டார் செல்வம்
நல்லா போகுது அங்கிள் என்றாள் பூஜா அவள் முகத்தில் வழக்கமாக இருக்கும் மகிழ்ச்சி இல்லாததை செல்வம் கவனிக்கதான் செய்தார்
இங்க பாரும்மா உன் முகமே சரி இல்லை. எதாவது வேலையில டென்ஷன் இருந்துச்சு அப்டின்னா அது எல்லாம் ரொம்ப சாதாரணமா சரி ஆகிடும். சில நேரத்துல நம்ம ரொம்ப பெரிய பிரச்சனை வந்துருக்குனு நினைப்போம் ஆனால் அந்த பிரச்சனை ரொம்ப சின்னதா இருக்கும். அது தானா சரி ஆகிடும் அதனால நீ எதை நினைச்சும் கவலை பட வேண்டாம்.என்றார் செல்வம் பூஜா அவரை பார்த்து புன்னகைக்க மட்டும் செய்தாள்.
சரிம்மா போ உன்னோட அக்கா கூட போய் பேசு. என்று சொன்னவர் புத்தகத்தை கையில் எடுக்க பூஜா எழுந்து கிட்சன்க்கு சென்றாள்.
தேவா அப்போதுதான் டீ போட்டு முடித்தவள் அந்த டீயை அவளுக்கு கொடுத்தாள்.
பூஜா அதை வாங்கினாள். தேவா பிறகு டீயை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு பூஜாவை அழைத்து கொண்டு ரூமுக்கு சென்றாள்.
எப்படி இருக்க தேவா என்று கேட்டாள் பூஜா. அவளை பார்த்து புன்னகை செய்தவள் தான் நலமாக இருப்பதாக சைகை மூலம் சொன்னாள்.
என்ன ஆச்சு தேவா உன்னோட முகத்துல சோகம் இவ்ளோ அதிகமா தெரியுது என்று கேட்டாள் பூஜா
அப்படி எதுவும் இல்லை என்பது போல தலை அசைத்தாள் தேவா
மேடம் உங்களோட ஒவ்வொரு கண் அசைவுக்கும் அர்த்தம் எனக்கு தெரியும். இப்போ நீ ஒத்துக்கலன்னாலும் நான் நீ ஏன் இப்படி இருக்கேன்னு சொல்லவா என்று கேட்டாள் பூஜா
தேவா அவளை பார்க்க பூஜா தொடர்ந்து பேசினாள்.
அது உன்னோட அவர பார்த்து கொஞ்சம் நாள் ஆகுது இல்லையா அதான் நீ சோகமா இருக்க அப்டித்தான என்று பூஜா கேட்க இல்லை என்பது போல இடம் வலமாக தலை அசைக்க போனவள் ஆமாம் எனபது போல தலை அசைத்தாள். பூஜா அவளை பார்த்து சிரிக்க தேவா தலை குனிந்து கொண்டாள்.
அடடா எங்க அக்கா வெக்க படுறாளா என்ன என்று கேட்ட பூஜா தேவா முகத்தை பார்க்க முயற்சி செய்ய தேவா தலை குனிந்து கொண்டாள் அவள் வெட்கம் கொள்ளவில்லை மாறாக அழுகிறாள் என்பதை உணர்ந்த பூஜா பதட்டத்துடன் அவள் முகத்தை கையில் ஏந்தினாள்.
என்ன ஆச்சு தேவா ஏன் அழுற. என்று அவள் கேட்க தேவா சூர்யா போட்டோவை பார்த்தாள்.அதை பார்த்ததும் தேவா சூர்யா இல்லாமல் வருத்தம் கொண்டு அழுகிறாள் என்று புரிந்து கொண்டாள் பூஜா.
ஓஹோ அப்போ தலைவி வினை மேற்கொள்ள சென்ற தலைவன் சொன்ன நேரத்துக்கு வராததால் பசலை நோயால அவஸ்தை படுறாங்களா என்ன. வேணா தோழி நான் தலைவன் கிட்ட தூது போகவா என்று பூஜா கேட்க தேவா சிரித்து விட்டாள்.
அவளை பார்த்து புன்னகை செய்த பூஜா தேவா கண்ணீரை துடைத்து விட்டாள்.
தேவா நீ நிறைய அழுத்துருக்க நீ அழும்போது எல்லாம் நான் நீ அழ கூடாதுன்னு நினைப்பேன். ஆனால் இப்போ நீ அழுறத பார்த்து எனக்கு கஷ்டமா இல்லை சந்தோசமா இருக்கு உன்ன உன்னோட ஹஸ்பண்ட் நல்லா பாத்துக்குறாருன்னு எனக்கு நல்லா புரியுது. எனக்கு என்ன சொல்லன்னு தெரியல ரொம்ப சந்தோசமா இருக்கு.எனக்கு இதுக்கு மேல எதுவும் வேண்டாம் நீ பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து இனி உன் ஹஸ்பண்ட் கூட சந்தோசமா இரு. என்னதான் இருந்தாலும் ஒரு அவசரத்துல நடந்த கல்யாணம் அவர் உன்ன நல்லா பாத்துக்கிட்டாலும் அதுல காதல் இருக்குமான்னு நான் யோசிச்சேன் ஆனால் இப்போ உன்னோட கண் அதுல வழியுற கண்ணீர் நீ அவர எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு எனக்கு புரிய வைக்குது. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு தேவா சந்தோஷத்துல கண்ணீர் எல்லாம் வருது எனக்கு. என்று அவள் சொல்ல தேவா அவளை பார்த்து புன்னகை செய்தாள்.
ஆனால் தேவா இந்த காதல்,கல்யாணம் எல்லாம் ரொம்ப வித்யாசமா இருக்குல்ல. ஒரே ஊர் இல்லாம ஒரே நாடு இல்லாம ஏதோ இடத்துல எதார்த்தமா சந்திச்சு அந்த சந்திப்பு சாதாரணமா கடந்து போக முடியாமல் மறுபடியும் தொடர்ந்து காதலா மாறி அதுக்கப்பறம் சேர்ந்துடறாங்க. இவங்களுக்கு இவங்கதான்னு கடவுள் போடுற முடிச்ச என்ன பண்ணாலும் மாத்த முடியாதுல்ல . சேரணும்னு விதி இருந்தா சேர்ந்தேதான் தீருவாங்கல்ல என்று சொன்ன பூஜா மனதில் ஏனோ ஜெய் முகம் வந்து போக அப்படியே மௌனம் ஆனாள்.
அவள் திடீர் மௌனத்தை பார்த்த தேவா கையை அசைக்க ஜெய் நினைவில் இருந்து நிஜ உலகக்கு வந்த பூஜா அவளை பார்த்தாள்.
தேவா என்ன ஆனது என்று சைகையால் கேட்க பூஜா ஒன்றுமில்லை என்பது போல தலை அசைத்தவள் எழுந்து நேராக ஹாலுக்கு வந்து செல்வம் மற்றும் கிருஷ்ணா உடன் பேச ஆரம்பித்தாள்.தேவா பூஜா இப்படி நழுவுவதை கவனிக்கவே செய்தாள். பிறகு இதை பற்றி கேட்கலாம் என்று நினைத்து விட்டு விட்டாள்.
கொஞ்சம் நேரம் கழித்து பூஜா கிளம்புவதாக சொல்லி வெளியே வர அவளை வழி அனுப்ப வந்தார்கள் தேவா மற்றும் கிருஷ்ணா.
பூஜா ஆட்டோ வரவும் சூர்யா வரவும் சரியாக இருந்தது அவனிடம் ஏதோ சொன்னவள் பிறகு கிளம்பி விட்டாள் அவர்கள் என்ன பேசினார்கள் என்று கிருஷ்ணா மற்றும் தேவாக்கு கேட்கவில்லை. பூஜா சென்று விட்டாள். சூர்யா வந்ததை பார்த்த தேவாக்கு மகிழ்ச்சியில் குதிக்க வேண்டும் போல இருந்தது ஆனாலும் அவள் தன்னை கட்டுப்படுத்தி கொண்டாள்.
சூர்யா வந்தவன் நேராக குளிக்க சென்று விட்டான் பிறகு செல்வத்துடன் பேசினான் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். அப்போதும் அவ்வளவாக எதுவும் பேசவில்லை அவன் இப்படி செய்வது தேவாக்கு மிகவும் கவலையாக இருந்தது. அவளுக்கு தான் மட்டும்தான் தேவை இல்லாத விஷயத்தை கற்பனை செய்து கொண்டோமோ என்று இருந்தது அவளும் தேவை இல்லாமல் எதுவும் செய்ய வேண்டாம் அவன் பக்கம் கவனம் செல்லாமல் தன்னை பார்த்து கொண்டாள்.
இரவு தூங்கும் நேரம் சூர்யா புக் படித்து கொண்டிருந்தான் தேவா அவனை பார்த்து புன்னகை செய்தவள் படுக்க செல்ல சூர்யா அவளை அழைத்தவன் தனக்கு அருகில் உட்கார சொன்னான். தேவா அவன் அருகில் அமரந்தாள்.
உனக்கு உடம்பு சரி இல்லைன்னு பூஜா சொன்னா ஏதோ பசலை நோய் வந்துருக்காம் அதுக்கு மருந்து இப்போதான் கிடைச்சிருக்குன்னு பூஜா சொன்னா என்ன நோய் என்ன பிரச்சனை அது வர என்ன காரணம் என்று கேட்டான் சூர்யா.
தேவா தனக்கு தெரியாது என்பது போல தலை அசைத்தாள். அவளை பார்த்து சிரித்தான்.
ஓ உனக்கு தெரியாதா. சரி எனக்கு தெரியும் நான் சொல்ற. பசலை தலைவனை பிரிந்த துயரத்துல தலைவிக்கு வர்றது. இங்க தலைவி நீ தலைவன் நான் தோழி பூஜா அப்போ என்ன நீ ரொம்ப தேடி இருக்க அப்டித்தான என்று சூர்யா கேட்க அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் தேவா.
என்ன பாக்குற நாங்களும் தமிழ் படிச்சிருக்கோம். அதைவிட நீ ஒவ்வொரு விஷயத்துக்கும் எப்படி முகத்தை வச்சிப்பேன்னு எனக்கு நல்லா தெரியும் அதான் கேக்குறேன் சொல்லு நான் இல்லாம நீ கஷ்ட பட்டியா என்ன என்று கேட்டான் சூர்யா.
தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் எப்படியும் பொய் சொன்னாலும் கண் அசைவில் அவன் கண்டு கொள்வான் என்பதால் அவள் உண்மையாக அவன் இல்லாமல் கஷ்ட பட்டத்தை தலை மேலும் கீழும் தலை அசைத்து ஒப்பு கொண்டாள். அவளை பார்த்து சிரித்த சூர்யா வேறு எதுவும் சொல்லாமல் புத்தகத்தை மட்டும் பார்த்தான். அது தேவாக்கு இன்னும் ஆச்சர்யம் ஆனது. அவள் அப்படியே அவனை பார்க்க சூர்யா அவள் பார்ப்பதை உணர்ந்து எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தவன் பிறகு அவளை பார்த்தான்.
என்ன ஆச்சு உனக்கு எதுக்கு என்ன பாக்குற உனக்கு என்கிட்ட எதாவது கேட்கணுமா என்று கேட்டான் சூர்யா தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.
என்ன கேக்கணும் என்று கேட்டான்.
தேவா டீ குடிப்பது போல சைகை செய்தாள்.
குடிக்க எதாவது வேணுமா என்று கேட்டான் சூர்யா. இல்லை என்று தலை அசைத்தவள் போன் எடுத்து அதில் நான் போட்டு கொடுத்த டீ மிஸ் பண்ணீங்களா என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள். அந்த மெசேஜ் பார்த்தவன் புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டான் பிறகு அவளை பார்த்துவிட்டு no என்று ஒரே வார்த்தையில் பதில் அனுப்பினான். தேவா முகம் வாடியது. இருந்தாலும் அவள் நிற்காமல் சாப்பாடு என்று அடுத்த கேள்வி அனுப்பினாள். அவள் மனம் எப்படியாவது அவன் ஒரு வார்த்தை நீ செஞ்சு கொடுத்த சாப்பாடு மாதிரி எதுவும் இல்லை என்று சொல்ல மாட்டானா என்று ஏங்கியது. ஆனால் அவளை கவலை பட வைக்க வேண்டும் என்பதற்காகவே
சூர்யா மீண்டும் no என்று அனுப்பினான்.
தேவாக்கு அழுகையாக வந்தது. இருந்தாலும் வீட்டை மிஸ் பண்ணிங்களா என்று அடுத்த மெசேஜ் அனுப்பினாள் அதற்கும் சூர்யா no என்று அனுப்பினான். பாவம் தேவா அவள் மனம் அவ்வளவு கஷ்டபட்டது தேவை இல்லாமல் கற்பனை செய்து கொண்டதற்காக தன்னை தானே திட்டி கொண்டவள் அதற்கு மேல் அங்கே இருந்தால் அவன் முகத்தை பார்த்தே மனதில் உள்ளதை கண்டு கொள்வான் என்று நினைத்தவள் அவனை பார்க்காமல் உறங்கலாம் என்று போக அவளுக்கு மெசேஜ் வந்தது சூர்யாவிடமிருந்துதான் மெசேஜ் வந்தது அவன் ஒரு ஹார்ட்❤ எமோஜி அனுப்பி இருந்தான் அதை பார்த்து குழப்துடன் சூர்யா பக்கம் திரும்பினாள் தேவா. அவள் அவன் பக்கம் திரும்பியதும் அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் சட்டென்று அவள் இதழ்களை சிறை செய்தான் இதை சற்றும் எதிர்பார்க்காத தேவா அதிர்ந்து போனாள். கொஞ்சம் நேரத்தில் அவளை விட்டவன் அவளை பார்த்தான் அவள் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.அவளை பார்த்து சிரித்த சூர்யா பேச ஆரம்பித்தான்.
என்ன ஆச்சு தேவா ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற நீ என்ன எந்த அளவுக்கு மிஸ் பண்ணன்னு புரிய வச்ச நானும் உனக்கு புரிய வைக்கணும் இல்லையா அதான். ஆமா நீ என்ன என்கிட்ட உன்ன மிஸ் பண்ணனான்னு கேக்காம
டீய மிஸ் பண்ணியா காபி மிஸ் பண்ணியான்னு கேட்டுட்டு இருக்க. எனக்கு டீ, சாப்பாடு, வீடு இதெல்லாம் ஒரு பிரச்சனையா இருந்ததே இல்லை. அதனால அதை பத்தி எல்லாம் கவலை படுறதில்ல.ஆனால் என்னவோ இந்த வாட்டி ஒவ்வொரு வாட்டியும் என்ன பண்ணாலும் நீதான் நியாபகம் வந்த. நான் டீ காஃபி சாப்பாடு வீடு எதையும் மிஸ் பண்ணல ஆனால் இதை எல்லாத்துலயும் என்கூட இருந்த உன்னதான் நான் மிஸ் பண்ண. டெய்லி உன்ன பாத்துட்டு உன்ன பாக்காம ஒவ்வொரு நாளும் நரகம் மாதிரி இருந்துச்சு. அந்த அளவுக்கு மிஸ் பண்ண.நாளைக்கும் வேலைக்கு சீக்கிரம் போணும் தலைக்கு மேல வேலை இருக்கு ஆனாலும் அதை எல்லாம் விட எனக்கு நீதான் முக்கியமா தெரியுற இதுக்கு மேல உன்ன பாக்காம இருந்தா டீ கிளாஸ் கூட எல்லாம் பேச ஆரம்பிச்சிடுவேன்னுதான் உன்ன பாக்க வந்துட்டேன். நீ என்கிட்ட இல்லாம எனக்கு தூக்கம் கூட வரல. காத்து கண்ணுக்கு தெரியாது ஆனால் அதுதான் வாழ்க்கைக்கு ஆதாரம். அதே மாதிரிதான் நீயும் எனக்கு இப்போ. நீ இல்லாம எனக்கு எதுவுமே இல்லன்னு இருக்கு. நான் இதை உன்கிட்ட எப்படி சொல்லணும் எங்க சொல்லணும்ன்னு நிறைய யோசிச்சிட்டு இருந்தேன் ஆனாலும் எனக்கு இதை உன்கிட்ட சொல்லாம
இருக்க முடியாதுன்னு தோணுது அதனால இப்போவே சொல்றேன் நான் உன்ன ரொம்ப லவ் பண்றேன் என்று சொன்னான் சூர்யா இவ்வளவு நேரம் நடந்ததே தேவாக்கு கனவு போல இருந்தது. இது அவளுக்கு நம்ப முடியாததாக இருந்தது. அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
நான் லவ் சொல்லிட்டேன் அப்டிங்கிறதுக்காக நீயும் உடனே சொல்லணும்னு அவசியம் இல்ல உனக்கு தோணுறப்போ நீ சொன்னா போதும் நான் அதுக்காக வெயிட் பண்ணுவேன் இப்போ நீ தூங்கலாம் என்று அவன் சொல்ல சூர்யா சொல்ல தேவா அவனை பார்த்தாள்.அசைவில்லை அவள்.
ஹெலோ மேடம் தூங்குங்க இப்டியே பாத்துட்டே இருக்க போறிங்களா என்ன. படுத்து தூங்கு உனக்கு எப்போ தோணுதோ அப்ப நீ சொன்னா போதும்.என்று அவன் சொல்ல தேவா சரி என்பது போல தலை அசைத்தவள் படுத்து கொள்ள சூர்யாவும் படுத்து கொண்டான் அவனுக்கு அவளிடம் மனதில் இருப்பதை சொன்னதாலும் அவள் அருகாமையில் இருப்பதாலும் உறக்கம் உடனே வந்தது அவன் உறங்கிய பிறகு தேவா அவன் பக்கம் திரும்பியவள் அவனை பார்த்து புன்னகை செய்துவிட்டு அவன் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு அவனை அணைத்தப்படி உறங்கி போனாள்.உறக்கத்தில் சூர்யாவும் அவளை அணைத்து கொண்டான்.இருவரின் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தது.
நாமும் அந்த மகிழ்ச்சியுடன் விடைபெறுவோம் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடை பெறுவது அபிராமி G. N❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro