
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -28
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இருவரும் அப்படியே நின்றார்கள்.
தேவா நான் உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பத்தி பேசணும் என்றான் சூர்யா தேவா என்ன என்பது போல அவனை பார்த்தாள். அந்த பார்வை ஏதோ அவனுக்குள் ஒரு புது தாக்கத்தை ஏற்படுத்தியது.
அ அது நான் உன்ன என்ன சொல்ல என்று அவன் தடுமாற தேவா அவனை புரியாமல் பார்த்தாள்.
அம் அது நம்ம ரூம்ல கட்டில் ரொம்ப குட்டியா இருக்குல்ல என்றான் சூர்யா தேவாக்கு இன்னும் குழப்பம் ஆனது.
இல்லை இப்போ நம்ம ரெண்டு பேர் இருக்கோம் இந்த கட்டில் சரியா இருக்கு நாளைக்கு அப்டியே இருக்காதுல்ல எப்போவும் இந்த ரூம்ல ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கணுமா என்ன மூணு பேர் ஆகலாம் இல்லை நாலு பேர் ஆகலாம் அதான் கொஞ்சம் பெரிய கட்டிலா வாங்குனா நல்லா இருக்கும் என்று அவன் சொல்ல இல்லை கிட்டதட்ட உளற கையும் களவுமாக பிடிபட்ட திருடன் போல அவன் நிற்பதை பார்த்து புன்னகை செய்தாள் தேவா. அவள் சிரிப்பதை பார்த்து தலையில் மானசீகமாக தலையில் அடித்து கொண்டான் சூர்யா.
உனக்கு ரொம்ப டையார்ட்டா இருக்கும் போ போய் தூங்கு என்று சொன்னான் சூர்யா. தேவா அவனை பார்த்து புன்னகை செய்தபடி தலை அசைத்துவிட்டு அவள் இடத்தில் படுத்து கொண்டாள் சூர்யா போனை எடுத்து கொண்டு மாடிக்கு சென்றான். தேவா அவனை பார்த்து புன்னகை செய்தாள்.
மாடிக்கு சென்றவன் பிரசாத்க்கு அழைத்தான்.
என்னப்பா தைரியமான வீரமான போலீஸ் ப்ரொபோஸ் பண்ணீங்களா என்னவோ ப்ரொபோஸ் பண்ண போறேன்னு கிளம்புனீங்களே என்ன மனசுல உள்ள காதல் எல்லாத்தையும் கொட்டிட்டீங்களா என்ன என்று கேட்டான் பிரசாத்.
எனக்கு இப்போ உன்ன ஒண்ணுமே திட்ட முடியாத நிலைமை என்றான் சூர்யா
ஹாஹா அப்போ நீ உன்னோட மனசுல உள்ள காதலை சொல்லல அப்டித்தான. நான்தான் சொன்னேனே காதல் சொல்றது ஒண்ணும் கத்திரிக்காய் வியாபாரம் இல்லைன்னு நீ எங்க கேட்ட கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பேசுன வீர வசனத்தை எல்லாம் கொஞ்சம் நினைச்சு பாருங்க. என்று சொன்ன பிரசாத் சிரிக்க சூர்யா எல்லாம் நேரம் என்பது போல மௌனமாக நின்றான்.
...சிறிது நேரத்துக்கு முன்பு பிரசாத் வீட்டு மாடியில் ...
டேய் பிரசாத் எனக்கு என்னவோ நான் தேவாவை விரும்புறேன்னு தோணுது என்று சொன்னான் சூர்யா. பிரசாத் இதையே இப்பதான் புரிஞ்சிக்கிறியா என்பது போல பார்த்தான். பிறகு பேசினான்
ஏண்டா லவ் பண்ணுறதையே இப்போதான் கண்டு பிடிக்கிறியா என்றான் பிரசாத்
உனக்கு முன்னாடியே தெரியுமா என்று கேட்டான் சூர்யா.
ஏண்டா காதலிக்காமதான் கல்யாணம் பண்ணியா கொஞ்சம் லாஜிக்கோட பேசுடா என்று சொன்னான் பிரசாத்.
இப்ப தெரிஞ்சது இதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கலாம் என்றான் சூர்யா
ஏன் அப்போ தெரிஞ்சா என்ன பண்ணி இருப்ப என்று கேட்டான் பிரசாத்
இவ்ளோ டைம் வேஸ்ட் பண்ணி இருக்க மாட்டேன். உடனே லவ் ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன் என்று சொன்னான் சூர்யா.
ஹெலோ ஹெலோ நீங்க நினைக்குற அளவுக்கு அது ஒண்ணும் அவ்ளோ சுலபம் இல்லை. ப்ரொபோஸ் பண்ணுறது அவ்ளோ ஈஸியா இருந்தா ஏண்டா அவனவன் பல வருஷம் லவ் சொல்லாம இருக்காங்க. நீ சொல்லலாம் அவங்களுக்கு தைரியம் இல்லை அதனால அவங்க எல்லாம் லவ் சொல்லலன்னு ஆனால் விஷயம் அப்படி இல்லை நம்ம மனசுக்குள்ள ஒரு பதட்டம் தானா வந்துடும். எப்படி சொல்ல சாதாரணமா எவ்ளோ வெயிட் உள்ள அரிசி மூட்டையா இருந்தாலும் நான் ஈஸியா தூக்கிடுவேன் ஆனால் என்னோட பிள்ளைய நான் முதன்முதல்ல தூக்குறப்போ எனக்கு அவ்ளோ பயமா இருந்துச்சு எங்க நான் குழந்தைய கீழ விட்ருவேனோ இல்லை பஞ்சு மாதிரி இருக்க அவமேல என் கை பட்டா அவளுக்கு வலிக்குமோன்னு ஆயிரம் எண்ணம் மனசுல ஓடிட்டே இருக்கும் அதுக்கப்பறம்தான் தூக்குவோம். அதே மாதிரிதான் லவ் என்னதான் நீ தைரியமா இருக்குறதா நினைச்சாலும் லவ் சொல்றப்போ எங்க நிராகரிக்க பட்டுடுவோமோன்னு மனசுக்குள்ள ஒரு பயம் வரும் அதெல்லாம் சாதாரணம் அந்த எண்ணம் வர்றப்போ நம்மளால பேச முடியாது என்று பிரசாத் சொல்ல சூர்யா இடைமறித்து பேசினான்.
இங்க பாரு பிரசாத் நீ சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் எனக்கு தெரியும் தேவாக்கு என்ன பிடிச்சிருக்குன்னு . அதனால என் மனசுல எந்த விதமான குழப்பமும் இல்லை இப்போ கூட என்னால அவகிட்ட அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியும் என்று சொன்னான்.சூர்யா
ஆமா பிடிச்சிருக்குன்னு சொல்றது ஈஸி அதை யார்கிட்ட வேணா சொல்லலாம் ஆனால் காதலிக்கிறேன்னு சொல்றதுதான் கஷ்டம். என் அனுபவத்துல சொல்றேன் சூர்யா நல்லா ரெடி ஆகிட்டு போய் ப்ரொபோஸ் பண்ணு அதை விட்டுட்டு இப்போவே போய் ப்ரொபோஸ் பண்ணா பயங்கரமா சொதப்பிடும் கொஞ்சம் பொறுமையா பண்ணு என்று சொன்னான் பிரசாத்.
நீ என்ன வேணா சொல்லு நான் இண்ணைக்கு என்னோட லவ்வ அவகிட்ட சொல்லதான் போறேன் ஏத்துக்குறதும் ஏத்துக்காம போறதும் அவளோட இஷ்டம் அவ முடிவுல நான் வீணா தலையிட மாட்டேன் என்று சொன்னான் சூர்யா.
நான் சொன்னா கேக்க மாட்டேன்னு முடிவுல இருக்க அப்புறம் உன்னோட இஷ்டம். நீ வேணா பாரு எனக்கு நீ கால் பண்ணி பேசுவ என்று சொன்னான் பிரசாத்.
உன்கிட்ட பேச எல்லாம் எனக்கு இனி நேரம் இருக்காது. நான் போறேன் என்று கெத்தாக சொல்லிவிட்டு வந்தான் சூர்யா ஆனால் அவனால் மனதில் உள்ளதைதான் அவளிடம் சொல்ல முடியவில்லை. சரியாக சொல்லலாம் என்று வரும்போதுதான் அவன் மனதில் தேவா தன்னை விரும்பவில்லை என்று சொன்னால் என்ன செய்வது என்று தோன்றியது. அந்த எண்ணம் வந்த பிறகு அவனால் தன்னுடைய மனதில் உள்ள எண்ணம் என்ன என்பதை சொல்லவே முடியவில்லை அதனால்தான் அப்படியே அமைதியாக வந்து விட்டான்.
--
என்னடா எதுவும் பேச மாட்டேங்குற எதுக்கு இப்போ அமைதியா இருக்க. நான்தான் அப்போவே சொன்னேன்ல இப்படிதான் ஆகும்னு ப்ரிப்பேர் பண்ணிட்டு போன்னு எங்க கேட்ட என்று சொன்னான் பிரசாத்.
இங்க பாரு பிரசாத் எனக்கு இப்போ நான் எந்த அளவுக்கு அவளை லவ் பன்றேன்னு சொல்லலன்னா பைத்தியம் புடிச்சிடும் போல. எல்லாம் லவ்ன்னா அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னு சொன்னிங்க ஆனால் லவ் இவ்ளோ பெரிய இம்சையா இருக்கு நான் என்ன பண்ணுறது என்று கேட்டான் சூர்யா.
ஹாஹாஹா நீ இப்படி எல்லாம் புலம்புறதை கேக்க எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமா. ஏண்டா லவ் என்ன எங்கள மாதிரி நீ சொன்ன உடனே கேட்டு நடந்துக்கும்ன்னு நினைச்சியா அதுக்கு வாய்ப்பே இல்லை.ஹிட்லரயே அந்த காதல் விட்டு வைக்கல அப்படி இருக்கும்போது நீ எம்மாத்திரம். பட்டுதான் ஆகணும் மகனே காதல் இம்சைதான் ஆனா கொஞ்சம் இனிமையான இம்சை என்று சொன்னான் பிரசாத்.
டேய் இனிமையான இம்சையா இப்படியே போச்சுன்னா எனக்கு எப்படி ப்ரொபோஸ் பண்ணுறதுன்னே தெரியாம போயிடும்போல. உண்மையா ரொம்ப கஷ்டமா இருக்கு. மத்த நேரத்துல அதை பத்தி பேசவும் ரொம்ப வித்யாசமா இருக்கு என்று சொன்னான் சூர்யா.
ஹாஹாஹா ஆனால் எங்க கதைக்கும் உன்னோட கதைக்கும் கொஞ்சம் வித்யாசம் இருக்கு சூர்யா. இப்போ நாங்க எல்லாம் முதல்ல லவ் பண்ணி அந்த பொண்ண பாக்கவே தவமா தவம் இருந்து அப்புறம் ப்ரொபோஸ் ரெண்டு வீட்ல சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணி அப்பப்பா அவ்ளோ கஷ்டம் ஆனால் உனக்கு என்னப்பா யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டியோ அவங்கள காதலிக்கிற நல்லா டைம் எடுத்துக்கோ அப்புறம் ப்ரொபோஸ் பண்ணு. இதெல்லாம் ஜாலியா இருக்கும் அதை என்ஜாய் பண்ணு என்று சொன்னான் பிரசாத்.
என்னவோ நீ சொல்ற நான் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு நாளைக்கு ப்ரொபோஸ் பண்ணுறேன் என்று சொன்னான் சூர்யா அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தான் பிரசாத்.
என்னது நாளைக்கு சொல்ல போறியா கொஞ்சம் பொறுமையா இரேண்டா என்று சொன்னான் பிரசாத்
நாளைக்கு வரைக்கும் வெயிட் பன்னுறதே பொறுமைதான். சரி சரி தேவை இல்லாம பேசி டைம் வேஸ்ட் பண்ணாத போ போ போய் தூங்கு என்ற சூர்யா போனை வைத்து விட்டான் பிரசாத் எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்பது போல போனை பார்த்தான்.
சூர்யா மீண்டும் அறைக்கு வந்தவன் பார்த்தது நன்றாக உறங்கி கொண்டிருக்கும் தேவாவைதான். அவளை பார்த்து புன்னகை செய்தவன்
அவள் அருகில் படுத்தபடி அவளை அவளை பார்த்தவன் அவளை பார்த்து சிரித்தான்.
என்ன மாதிரி உணர்வு இது நான் இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் இருந்ததே இல்லை தேவா உன்ன பார்த்த பிறகுதான் இதெல்லாம் உணருறேன்.உன்ன எந்த அளவுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்ல முடிஞ்ச என்னால எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு சொல்ல முடியல.எனக்கு தெரியும் உனக்கும் என்ன பிடிக்கும்னு ஆனால் நீ ஒருவேளை நான் உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லி என்ன நீ மறுத்துட்டா என்ன பண்ணுறதுன்னு நினைச்சாலே எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. குழப்பம் அப்டிங்கிறதை கடந்து உண்மையா எனக்கு பயமா இருக்கு. உன்ன என்ன ஆனாலும் நான் இழக்க கூடாதுன்னு நினைக்கிறேன் நீ வர்றதுக்கு முன்னாடி காதல் கல்யாணம் இது மேல எனக்கு இருந்த எண்ணம் வேற ஆனால் இப்போ அதுமேல எனக்கு இருக்க எண்ணம் வேற காதல்ன்னா தேவை இல்லாத வேலை காதல் பத்தின பேச்சே அர்த்தம் இல்லாத பேச்சுன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன் இப்போ பாரு நானே உன் முன்ன சத்தம் இல்லாம புலம்பிட்டு இருக்கேன் எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல ஆனால் என்னால உன்கிட்ட என் மனசுல உள்ள லவ்வ ரொம்ப நாள் சொல்லாம இருக்க முடியும்னு தோணல. என்னோட வாழ்க்கையில இந்த அளவுக்கு நான் பதட்டபட்டதே இல்லை ஆனால் இப்போ அதுக்கு எல்லாம் சேர்த்து நான் பதட்டம் படுறேன். உண்மையா சொல்லணும்னா காதலிக்க படுறத விட காதலிக்கிறது ரொம்ப சுகமா இருக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம ஒருத்தர் மேல அன்பு காட்டுறது ரொம்ப அழகா இருக்கு. இதெல்லாம் உன்னாலதான் கடவுள்கிட்ட எனக்கு அவ்ளோ பேச்சு வார்த்தை இல்ல ஆனா உன்ன என்னோட வாழ்க்கைல குடுத்ததுக்காக இனி நான் அவர்கிட்ட பேசுறேன் என்று தேவாவை பார்த்தபடி மனதுக்குள் பேசி கொண்டிருந்தவன் அவள் லேசாக அசையவும் அப்படியே சிலை போல ஆனான் ஆனால் தேவா உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை. அவள் உறக்கத்தை கலைக்க விரும்பாதவன் லைட் ஆப் செய்துவிட்டு படுத்து கொண்டான் அவன் மனதில் ஒரு புது வித மகிழ்ச்சி இருந்தது.
அடுத்த நாள் வழக்கம் போல சூர்யா வேலைக்கு சென்றான் அவன் அன்று வேலை முடித்து சீக்கிரம் வந்து அவளுக்கு ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தான் ஆனால் பாவம் அவனுடைய வேலை அவன் நினைத்ததை செய்ய விடாமல் செய்தது இரண்டு மூன்று நாட்கள் அவனுக்கு வீட்டுக்கு கூட வர முடியாத அளவுக்கு வேலை வந்துவிட்டது.சூர்யா அவன் வாழ்க்கையில் முதல்முறை வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அவ்வளவு ஆசைபட்டான். தேவாவும் அவன் இல்லாமல் அவ்வளவு கஷ்டபட்டாள். தேவா அவ்வப்போது அவனுக்கு மெசேஜ் அனுப்புவாள் அவனும் மெசேஜ் அனுப்புவான் இப்படிதான் இவர்கள் நாட்கள் சென்றது.இடையில் பூஜா ஒருநாள் தேவாவை பார்த்துவிட்டு சென்றாள்
அன்று மதியம் தேவா வீட்டில் இருக்க அவளுடன் சஞ்சனா இருந்தாள் சஞ்சனா தேவா போன் வைத்து விளையாடி கொண்டிருக்க தேவா அவளுக்காக ஜூஸ் போட்டு கொண்டிருந்தாள். அப்போது சஞ்சனா தெரியாமல் அழுவது போன்ற ஸ்மையை சூர்யாக்கு அனுப்பி வைத்தாள்.அந்த நேரம்தான் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று அமர்ந்தவன் தேவாவின் மெசேஜ் பார்த்து குழம்பி போனான்.
அடுத்த நொடி அவளுக்கு வீடியோ கால் செய்தான். தேவா சஞ்சனாக்கு ஜூஸ் கொடுத்தவள் சூர்யாவிடமிருந்து போன் வருவதை பார்த்தாள் . அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. போன் அட்டென்ட் செய்தவள் லேசாக புன்னகை செய்தாள்.
என்ன ஆச்சு தேவா எதுக்கு அந்த எமோஜி அமிச்சிருக்க நீ நல்லாத்தான இருக்க என்று கேட்டான் சூர்யா
தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள். பிறகு அவள் சஞ்சனாவை காண்பித்தாள் அவளை பார்த்தபிறகுதான் சூர்யாக்கு புரிந்தது தேவா அந்த எமோஜி அனுப்பவில்லை என்று. என்னதான் அவள் அந்த emojiஅனுப்பவில்லை என்பது அவனுக்கு தெரிந்தாலும் அவனுக்கு போனை வைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. காரணம் இருந்தால்தான் பேச முடியும் என்பது மூன்றாம் நபர்களிடம் மட்டும்தான் நேசிப்பவர்களுக்கு அல்ல அதனால் அவர்கள் அதிகம் பேசினார்கள். என்ன சூர்யாக்கு வேலை இடைமாறித்ததால் 23 நிமிடத்தில் பேச்சு முடிந்தது (me:பேச வார்த்தைகள் தேவை இல்லை 😄)
சாயங்காலம் நேரம் பூஜா தேவாவை பார்க்கலாம் என்று நினைத்து ஆட்டோக்காக காத்து கொண்டிருந்தாள்.அப்போது ஒருவன் அவள் முன்பு வந்து நின்றான்.
ஹெலோ என்னங்க எப்படி இருக்கீங்க உங்களை ரொம்ப நாளா லவ் பண்ணிட்டு இருக்கேங்க அது உங்களுக்கே தெரியும் இப்போதான் தைரியம் வருது உங்ககிட்ட சொல்ல ஐ லவ் யூங்க என்றான் அவன். பூஜை ஆட்டோ ஸ்டாண்டில் சில முறை அவனை பார்த்திருக்கிறாள் ஆனால் அவன் ஆட்டோ ஒட்டி ஒரு நாள் கூட பார்த்தது இல்லை.
என்னங்க உங்ககிட்ட லவ் சொல்லி இருக்கேன் பதில் இல்லையா என்று அவன் கேட்க பூஜா மௌனமாக போன் எடுத்து பார்க்க ஆரம்பித்தாள். அவள் தலையை நிமிர்ந்து பார்க்கவேயில்லை.
என்னங்க என்ன நீங்க நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க நான் உங்கள நல்லா பாத்துப்பேன் என்று அவன் சொல்ல பூஜா எதுவும் பேசாமல் இருந்தாள். அப்போது ஜெய் குரல் கேட்டது.
பாஸ் என்ன பாஸ் நீங்க அவங்க என்னோட ஆள் பாஸ். நீங்க அவங்கள தொந்தரவு பண்ணாதீங்க என்று சொன்னான் ஜெய். பூஜா ஜெய்யை குழப்பதுடன் பார்க்க அந்த புதியவன் பூஜாவை அப்படியா என்பது போல பார்க்க பூஜா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.
என்னமா நீ இதை முதல்லயே சொல்ல கூடாதா உன் பின்னால வந்து இத்தனை நாள் வேஸ்ட் பண்ணிட்ட சரி நஷ்டம் உனக்குதான் நான் வர்றேன் நல்லா இரு என்று சொல்லிவிட்டு நடையை கட்டினான்.அவன் சென்றதை பார்த்த பிறகு ஜெய் பேச ஆரம்பித்தான்
எப்படி நல்ல டைம்ல வந்து காப்பாத்துனேனா என்று கேட்டான் ஜெய்.
எனக்கு பிரச்சனை தெரிஞ்சு நீங்க காப்பாத்த வந்திங்களா என்று கேட்டாள் பூஜா.
இல்லை சும்மா உங்களை பார்க்க வந்தேன் என்று சொன்னான் ஜெய்.
இங்க பாருங்க இந்த பிரச்சனைல இருந்து என்ன காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி ஆனால் என்ன பொறுத்தவரை நீங்களும் எனக்கு பிரச்சனைதான் என்று சொன்னாள் பூஜா அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் ஜெய்.
இப்போ என்னயும் அந்த பையனும் ஒரே மாதிரின்னு சொல்றிங்களா என்று கேட்டான் ஜெய்.
இல்லை நீங்களும் அந்த பையனும் ஒரே மாதிரி இல்லை நீங்க கொஞ்சம் டீசண்டா இருக்கீங்க ஆனால் என்ன ஒரே விஷயம்தான் பண்ணுறீங்க என்று சொன்னவள் ஆட்டோ வந்ததும் அதில் ஏறி சென்றாள் அவள் சொன்னதை கேட்டு ஜெய் அதிர்ச்சியில் நின்றான்.
அவர்கள் அதிர்ச்சியில் இருக்கட்டும் அடுத்த பதிவில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடை பெறுவது அபிராமி G. N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro