Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -27

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கானாவும் நூறு விடை சொல்லடி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

தேவா அமைதியாக நின்று கொண்டிருந்தாள். சூர்யா அவளை பார்த்தவன் மீண்டும் சட்டையை பார்த்தான். பெருமூச்சு விட்டவன் அவள் அருகில் நெருங்கி வந்தான்.தேவா அவனை பார்த்ததும் அப்படியே ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தாள் அதை  பார்த்ததும் மானசீகமாக தலையில் அடித்து கொண்டான் சூர்யா.

ஏண்டா இப்போதான் அவளே கொஞ்சம் சிரிச்சா அதுக்குள்ள நீ ஏன்டா இந்த மாதிரி எல்லாம் திட்டுன போ இனி எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பி சிரிக்க இனி எத்தனை வருஷம் ஆகுமோ என்று மனதில் நினைத்து வருத்தம் கொண்டான் சூர்யா (me to surya :உனக்கென்னடா பீலிங் எனக்குத்தான் பீலிங்🤦. Readers to me : செய்யுறத எல்லாம் செஞ்சுட்டு இப்போ பேச்சை பாரு 🙄)

தேவா அருகில் அவன் சென்றதும் தேவா தலையை குனிந்து கொண்டாள். சூர்யா அவள் முகத்தை பார்க்க வேண்டி குனிய அவன் அடித்து விடுவானோ என்னும் பயத்தில் தேவா கண்ணை மூடி கொண்டாள் அவள் கைகள் அவளையும் அறியாமல் அவள் காதுகளை மூடி கொண்டது. அதை பார்த்த சூர்யாக்கு கவலையாக இருந்தது. அவன் ஒன்றும் பேசமால் அப்படியே அமைதியாக நின்றான் இன்னும் அடி விழவில்லை என்பதை உணர்ந்த தேவா கண்ணை திறந்தவள்
அப்படியே அவனை பார்க்க அவன் அவளைதான் பார்த்து கொண்டிருந்தான் அவன் முகத்தில் கோபம் என்பது அப்பட்டமாக தெரிந்தது. கோபம் என்பதை தாண்டி அவன் முகத்தில் வேதனை அதிகம் இருந்தது.

அவளை பார்த்தவன் ஒரு அடி எடுத்து வைக்க தேவாவும் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தாள். சூர்யா மீண்டும் ஒரு அடி எடுத்து வைக்க தேவா மீண்டும் பின்னே செல்ல ஒரு கட்டத்தில் அவள் சுவரின் மீது மோதி நின்று விட்டாள்.சூர்யா பேச ஆரம்பித்தான்.

உனக்கு என்ன பார்த்தா எப்படி தெரியுது இல்லை நானும் தெரியாமதான் கேக்குறேன் நான் எப்போவாது உன்ன அடிச்சிருக்கேனா என்று கேட்டான் சூர்யா. தேவா இல்லை என்பது போல தலை அசைத்தாள்.

சரி உன்ன நான் அடிக்க வந்துருக்கேனா என்று கேட்டான் சூர்யா. தேவா அதற்கும் இல்லை என்பது போல தலை அசைத்தாள்.

அப்புறம் எதுக்கு என்ன பார்த்து நீ பயப்படுற. நான் இண்ணைக்கு வீட்டுக்கு வரும்போது நீ இல்லை. அமிர்தாவும் வீட்ல இல்லை. எனக்கு 99% நீ அமிர்தா கூடத்தான் போயிருப்பேன்னு தெரியும் ஆனால் அந்த மீதி 1% உனக்கு எதாவது ஆகிடுமோ அப்படிங்கிற அந்த ஒரு எண்ணம் என்ன எந்த மாதிரி படுத்தி எடுத்துச்சு தெரியுமா. நீ சொல்லாம போனியேங்கிற கோபத்தில நான் திட்டல ஆனால் எங்க உன்ன இழந்துடுவேனோ அப்படிங்கிற பதட்டத்திலதான் திட்டிட்டேன். சரி நானே இருக்கேன் என்னோட வேலை லேட் ஆச்சுன்னா நான் ஏன் வீட்டுக்கு வர லேட் ஆகும்னு சொல்ற. ஏனா அப்பா தேவை இல்லாம என்ன நினைச்சு பதட்ட பாடுவாங்க அப்டின்னுதான. ஒரு குடும்பத்துல எப்போவும் அந்த டைம்ல வீட்ல இருக்கவங்க வீட்டுக்கு வரும்போது இல்லன்னா எவ்ளோ பதட்டமா இருக்கும்னு உனக்கு தெரியுமா. நீ எப்படி நினைக்கிறியோ என்னவோ ஆனால் 100 சதவீதம் நான் உன்ன என்னோட மனைவியா நினைக்கிற உனக்கு சின்னதா ஒரு பிரச்சனை வந்தாலும் அது எனக்கு ரொம்ப பெரிய பிரச்சனைதான். எனக்கு நீ ரொம்ப முக்கியம். நமக்கு முக்கியமானவங்க அவங்கள பாத்துக்குறதுல அஜாக்கிரதையா இருந்தா  எனக்கு கோபம்தான் வரும். அது இயற்கை அதை யாராலயும் தப்புன்னு நிச்சயம் சொல்ல முடியாது. நீ கூட சொல்ல முடியாது. இப்போ நான் திட்டல அப்டின்னா நீ நாளைக்கும் இதே தப்புதான் பண்ணுவ அதனாலதான் சொல்றேன் நான் தப்பு பண்ணல அதனால என்னால மன்னிப்பு கேக்க முடியாது. ஆமா இந்த டிரஸ் எப்படி வாங்குன. அப்பா காசு குடுத்தாரா என்று கேட்டான் சூர்யா. தேவா அவனை பார்த்து ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.

அவர் எனக்கு டிரஸ் எடுக்க காசு குடுத்தாரா இல்லை உனக்கு டிரஸ் எடுக்க காசு குடுத்தாரா எனக்கு எதாவது தரணும்னா அப்பா எனக்கே தந்துருவாரு. இனி அவர் எதாவது உனக்கு வாங்கிக்க சொல்லி பைசா கொடுத்தா நீயே வச்சிக்கோ எனக்கு செலவு பண்ணாத. அப்புறம் இந்த ஷர்ட் நல்லா இருக்கு தேங்க்ஸ் என்று சொன்னவன் ரூமுக்கு சென்றான். தேவா அவனை புரிந்து கொள்ள முடியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

சூர்யா ரூமை விட்டு வெளியே வந்தான்.தேவா அவனை பார்த்தாள்.

என்மேல கோபமா என்று கேட்டான் சூர்யா தேவா அவனை என்ன என்பது போல பார்த்தாள்.

என்மேல கோபமான்னு நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையா என்று சூர்யா கேட்க தேவா அப்போதும் ஏதோ அதிர்ச்சியில் இருப்பது போல அவனை பார்த்தாள்.

சரி நீ என்மேல கோபமா இருக்க போல ஆனால் நான் உன் மேல கோபமா இல்லை அதை புரிஞ்சிக்கோ என்று சொன்னான் சூர்யா. தேவா அவனை பார்த்தாள் ஆனால் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லை.

நீ நான் திட்டுனலதுல ரொம்ப அதிர்ச்சி ஆகிட்ட போலயே. முள்ள முள்ளாலதான் எடுக்க முடியும்னு கேள்வி பட்ருக்கியா என்று அவன் கேட்க தேவா அவனை புரியாமல் பார்த்தாள்.

உனக்கு புரியலதான நான் என்ன சொல்றேன்னு என்று சூர்யா கேட்க தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.

சரி நான் உனக்கு புரிய வைக்கிறேன். கொஞ்சம் அப்டியே அந்த பக்கம் பாரு என்று சூர்யா சீரியஸாக சொல்ல தேவா அங்கே அப்படி என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள திரும்பினால் அவள் திரும்பியதை பார்த்ததும் சூர்யா அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க வேண்டி அருகில் வர தேவா சட்டென்று திரும்பிவிட்டாள் முத்தம் கொடுக்க வந்தவனும் அப்படியே நின்று விட்டான். தேவா அவனை பார்த்து என்ன என்று கண்ணால் கேட்டாள்.

சூர்யா அவள் தோள் மீது கை போட்டவன் அவளை பார்த்து புன்னகை செய்தபடி பேச ஆரம்பித்தான்.

நான் எதையும் வேணும்னு  பண்ணல. தள்ளி இருக்க நினைக்கிறேன் ஆனால் என்னால தள்ளி இருக்க முடியல. என்ன என்னவோ பண்ணுற நீ. என்ன என்ன பண்ணுற என்று சூர்யா கேட்க தேவா அவனை பார்த்து தான் ஒன்று செய்யவில்லை என்பது போல உதட்டை சுழித்தாள். அவள் அப்படி செய்ததை பார்த்ததும் ஏற்கனவே தடுமாறி இருந்த சூர்யா இன்னும் தடுமாறினான்.

நான் எப்போவும்  எல்லா விஷயத்துலயும் கட்டுப்பாடோட இருக்கணும்ன்னு நினைக்கிறேன். ஆனால் உன்கூட மட்டும் கட்டுப்பாடா அப்டின்னா என்னன்னு என்னோட மனசு என்ன பார்த்து கேக்குது.சம்மதம் இல்லாம என்ன பண்ணாலும் தப்புதான் ஆனால் இங்க ஒரு சட்டம் இருக்கு தப்பு பண்ணவங்கள விட தப்பு பண்ண தூண்டுனவங்களுக்குதான் அதிகம் தண்டனை அதிகம்ன்னு. ஆனால் அதை எல்லாம் அப்போ நான் உண்மைன்னு நினைக்கல ஆனால் இப்போ அது சரிதானோன்னு தோணுது எல்லா விஷயத்துலயும் இல்லை ஆனால் சில விசயத்துல ஆனால் அதுக்காக நான் என்னோட மனசாட்சிக்கு எதிரா எதுவும் பண்ண மாட்டேன் நீ பயப்பட வேண்டாம் என்று சொன்ன சூர்யா நேராக அவர்கள் அறைக்கு சென்றான். தேவா சூர்யாக்கு என்ன ஆனது என்பது போல புரியாமல் குழப்பத்தில் பார்த்து கொண்டிருந்தாள்.அவளுக்கு அவன் பேசியதன் அர்த்தம் புரியவில்லை. (Me: எழுதுன எனக்கே புரியல உனக்கு எப்படி புரியும் 😂😂😂😂)

தேவா அப்படியே சோபாவில் அமர்ந்தாள். நேரம் சென்றது தேவா சூர்யா பக்கம் திரும்பவில்லை சூர்யாவும் தேவாவை எதுவும் கேட்கவில்லை.அவர்கள் அப்படியே இருக்க கிருஷ்ணா செல்வம் வீட்டுக்கு வந்தார்கள்.வழக்கம் போல அவர்கள் எல்லோரும் அமர்ந்திருக்க அப்போது ஒரு பெண் கதவுக்கு அருகில் வந்து நின்றாள். தேவாதான் முதலில் அந்த பெண்ணை பார்த்தாள் . கிருஷ்ணாவிடம் தேவா சைகை செய்ய கிருஷ்ணா மீரா அக்கா உள்ள வாங்க என்று  சொன்னான் அவளும் வந்தாள்.

சூர்யா எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தான்.செல்வம் அவளை அமர சொன்னார் அவளும் அமர்ந்தாள்

என்ன சூர்யா எல்லோரும் என்கிட்ட பேசுறாங்க உனக்கு என்கிட்ட பேச தோணலயா என்று மீரா கேட்டாள்.

எப்படி இருக்க என்று கேட்டான் சூர்யா

என்னடா யாரோ மூணாவது மனுஷிக்கிட்ட பேசுற மாதிரி பேசுற என்று கேட்டாள் மீரா.

நான் எப்போவும் பேசுற மாதிரிதான் பேசுறேன் நான் யார் கிட்டயாவது அதிகம் பேசி நீ பாத்துருக்கியா என்று அவன் கேட்க மீரா இல்லை என்பது போல தலை அசைத்தாள்.

சரி இப்போ என்ன திடிர்னு இங்க வந்துருக்க என்ன விஷயம் என்று கேட்டான் சூர்யா

இல்லை உன்கிட்ட பேசதான் வந்தேன் தனியா பேசணும் என்று சொன்னாள் மீரா தேவா மீரா பேசுவதை எல்லாம் கேட்டு ஆச்சர்யமாக பார்த்தாள். அவளுக்கு ஏனோ மீரா சூர்யாவிடம் பேசுவது கொஞ்சம் கூட சரியாக படவில்லை. காதில் இருந்து புகை வராத குறையாக நின்று கொண்டிருந்தாள்.(me:இது கடுப்பு வேற டிப்பார்ட்மென்ட் 😂)

தனியா பேச நமக்குள்ள எதுவும் இல்லையே என்று சொன்னான் சூர்யா...

சூர்யா ப்ளீஸ். அங்கிள் எனக்காக நீங்க சொல்லுங்க அங்கிள் இதுதான் லாஸ்ட் நான் இதுக்கு மேல நான் இங்க இப்படி வர மாட்டேன் என்று சொன்னாள் மீரா.

அம்மாடி தேவா போய் எல்லாருக்கும் டீ காஃபி போட்டு கொண்டு வந்து குடும்மா என்று சொன்னார் செல்வம் தேவா அவர் சொன்னதை செய்ய கிட்சன்க்கு சென்றாள்

சூர்யா அந்த பொண்ணு உன்கிட்ட என்னவோ சொல்ல நினைக்குறா அது என்னனு கொஞ்சம் கேளுடா. யாரா இருந்தாலும் ஏன் நம்ம எதிரியா இருந்தாலும் நம்மகிட்ட எதாவது சொல்ல வந்தா அதை கேக்கணும். ஏனா அவங்க நம்மகிட்ட சொல்ல என்ன செய்தி வச்சிருக்காங்கன்னு நமக்கு தெரியாது இல்லையா அதனாலதான் சொல்றேன். நீ மீரா என்ன சொல்ல வர்றான்னு கேளு அதோட மீரா ஒண்ணும் உனக்கு எதிரி இல்லையே. போய் பேசிட்டு வாடா என்றார் செல்வம்.சரி என்பது போல தலை அசைத்தான்.

தேவா கிட்சனில் இருந்தாள் அவளுக்கு  ஏனோ சோகமாக இருந்தது அப்போது கிருஷ்ணா கிட்சன்க்கு வந்தான். தேவா அவனை அழைத்து கண்ணால் மீரா பற்றி கேட்டாள்.

அவங்க இந்த தெருவுலதான் முன்னாடி  இருந்தாங்க அண்ணி. அவங்க அண்ணாவை லவ் பண்ணாங்க ஆனால் அண்ணன் வேணாம்ன்னு சொல்லிட்டான். அந்த அக்கா கூட அவங்க வீட்ல எல்லாம் கல்யாணத்துக்கு  பெர்மிஸ்ஸன் வாங்குனாங்க ஆனால் அண்ணா ஒத்துக்கல அதுல அப்பாக்கும் கொஞ்சம் வருத்தம்தான் ஆனால் அதுவும் கொஞ்சம் நல்லதுதான் இல்லன்னா நீங்க எனக்கு அண்ணியா கிடைச்சிருக்க மாட்டிங்க என்று சொன்னான் கிருஷ்ணா. அவன் சொன்னதை கேட்டு தேவாக்கு கஷ்டமாக இருந்தது. ஏன் என்றால் மீரா அழகாக இருந்தாள் அதை எல்லாம் தாண்டி அவளால் பேச முடிந்தது காரணமே இல்லாமல் தன்னுடன் அவளை ஒப்பிட்டு பார்த்தவள் எப்படி இருந்தாலும் மீரா தன்னை விட உயர்ந்தவள் என்றுதான் அவளுக்கு தோன்றியது. அவள் அதை எல்லாம் யோசித்து கொண்டு அமைதியாக இருக்க கிருஷ்ணா கிட்சன்விட்டு வெளியே சென்றான்.

சூர்யா எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க. என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க எனக்கு என்ன சொல்லன்னு தெரியல. உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்வி பட்டேன் உன்னோட மனைவிக்கு பேச வராதுன்னு கேள்வி பட்டேன் ஏன் சூர்யா அந்த பொண்ண விட நான் அழகாதான இருக்கேன் என்ன ஏன் சூர்யா உனக்கு பிடிக்கல. என் பின்னாடி எத்தனை பசங்க  சுத்தி இருக்காங்க உன்ன விட அழகா உன்ன விட வசதியா ஆனால் நான் உன்னதான விரும்புன என்ன நீ கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னப்போ யாரையும் கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லைன்னு சொன்ன ஆனால் இப்போ எப்படி கல்யாணம் பண்ண என்று கேட்டாள் மீரா

ஏனா எனக்கு தேவாவை பிடிச்சிருக்கு. நீ ஒருமுறை என்கிட்ட சொன்ன காதல் எவ்ளோ தவிர்த்தாலும்  ஒருத்தர் மேல வரணும்னா வந்தே தீரும்னு ஆனால் அப்ப எனக்கு அதுமேல நம்பிக்கை இல்லை ஆனால் இப்போ நான் நம்புறேன் ஏன் தெரியுமா ஏனா என்னோட wife தேவா அவளை நான் அந்த அளவுக்கு லவ் பண்ணுறேன். உன்மேல எனக்கு அந்த எண்ணம் வரல  நீ அழகா இருக்கலாம் அது உன்னோட கண்ணோட்டத்தில ஆனால் என் கண்ணுக்கு அவதான் அழகா தெரியுறா அவ என்கிட்ட வார்த்தையால பேசலன்னா என்ன அவ கண்ணு என்கிட்ட பேசும் அவகிட்ட என்னோட மனசுல உள்ளதை எல்லாம் அவகிட்ட சொல்ல தோணுது. நான் வீட்டுக்கு வர்றப்போ எனக்காக என் wife இருப்பான்னு யோசுக்கும்போதே எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமா. என்று சூர்யா சொல்லும்போதே அவன் எண்ணம் எதிரில் இருப்பவளை மறந்து தேவா பக்கம் சென்றது அவன் முகத்தில் புன்னகையாக அது பிரதிபலித்தது.

மீரா அதை கவனித்தவள் லேசாக இருமினாள்.சூர்யா அவளை பார்த்தான்.

இந்த சிரிப்பு உன் முகத்துல என்னால வரணும்ன்னு நினைச்சேன் ஆனால் இப்போ இன்னொரு பொண்ணால உன் முகத்துல இந்த சிரிப்பு இருக்கு. அது எனக்கு சந்தோசம்தான் இருக்கு. ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க. நானும் என் மனச மாத்திக்க முயற்சி பண்ணுறேன். சரி வா சூர்யா கீழ போலாம் என்று சொன்னாள் மீரா.

உன்ன நான் கஷ்ட படுத்த நினைச்சு எதுவும் பண்ணல. ஆனால் கஷ்ட பட்டுருப்ப அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்றான் சூர்யா.

இல்லை நீ எப்போவுமே என்ன லவ் பண்ணுறேன்னு சொன்னதும் இல்லை அந்த மாதிரி எண்ணத்துல பழகுனதும் இல்லை. நீ என்ன நினைச்சு கொஞ்சம் வருத்த படவேண்டாம் நான் நல்லா இருப்பேன் என்று சொன்னவள் அவனை பார்த்து புன்னகை செய்ய இருவரும் கீழே நடக்க ஆரம்பித்தார்கள்.

கீழே வந்ததும் கிளம்பினாள் மீரா. அவளை சாப்பிட சொல்லி செல்வம் வற்புறுத்திய போதும் அவள் மறுத்துவிட்டு எல்லோரிடமும் சொல்லிவிட்டு சென்று விட்டாள். அவள் சென்ற பிறகும் தேவா மீரா பற்றி யோசித்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒரு தெளிவே இல்லை எப்படி யோசித்தாலும் மீராதான் அவனுக்கு சரியான ஜோடியாக தெரிந்தாள். சூர்யா பிரசாத்தை பார்க்க சென்றுவிட்டு இரவு வந்தான். இரவு சாப்பாடு முடித்துவிட்டு ரூமுக்கு சென்றாள். தேவா முகத்தை சூர்யா கவனிக்கதான் செய்தான். அவள் உறங்க போக சூர்யா அவளை அழைத்தான் தேவா அவனை பார்க்காமல் தலை குனிந்து நின்றாள்.

தப்பு பண்ணாம எதுக்கு தலை குனிஞ்சு நிக்கிற என்ன விஷயம் என்ன பாரு என்று சூர்யா சொல்ல தேவா அவனை பார்த்தாள் அவள் கண் கலங்கி இருந்தது.

என்ன ஆச்சு எதுக்கு கண்ணு கலங்கி இருக்கு என்று சூர்யா கேட்க தேவா தன்னுடைய முகத்தை சுட்டி காட்டி தான் அழகாக இல்லை என்பது போல சைகை மூலம் சொன்னாள்.

உன்கிட்ட கிருஷ்ணா எதாவது சொன்னானா மீரா பத்தி என்று சூர்யா கேட்க தேவா அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

மீராவோட உன்ன ஒப்பிட்டு பாக்குற அப்டித்தான என்று சூர்யா கேட்க தேவா தலை குனிந்து நின்றாள்.

பாத்தியா தப்புங்குறதுனாலதான நீ தலை குனிஞ்சு நிக்குற என்று கேட்டான் சூர்யா தேவா அவனை பார்க்கவில்லை.

இப்போ மீரா உன்ன விட அழகா இருக்கான்னு நினைச்சு நீ வருத்தப்படிறியா இல்லை எனக்கு அவளை பிடிச்சிருக்கும்ன்னு நினைச்சு வருத்தப்படுறியா.உன் வருத்தம் சரிதான் ஆனால் என் கண்ணுக்கு மீராவிட ஒரு பொண்ணு அழகா தெரியுறா அவளை நீ பாக்கறியா என்று கேட்டான் சூர்யா தேவாக்கு ஒரு பக்கம் கோபம் மறுபக்கம் ஏமாற்றம் சேர்ந்து கொண்டது.அதை சூர்யா கவனித்தான்.

என்ன ஆச்சு தேவா என்று கேட்டான் சூர்யா தேவா ஒன்றுமிலலை என்பது போல தலை அசைத்தாள்.

சரி வா அந்த பொண்ண காட்டுறேன் என்று சொன்னவன் தேவா கண்ணை மூடி அழைத்து சென்று அங்கிருந்த கண்ணாடி முன்பு நின்றான்.

பொறாமை பட கூடாது அவளோட அழகை பார்த்து என்று சூர்யா சொல்ல தேவா உச்சக்கட்ட கடுப்பில் தலை அசைத்தாள். சூர்யா கையை எடுக்க கண்ணை திறந்த தேவா வேறு பெண் போட்டோவை எதிர்பார்க்க அங்கே அவள் பிம்பம்தான் கண்ணாடியில் தெரிந்தது. அவள் அப்படியே நிற்க சூர்யா பேச ஆரம்பித்தான்.

பாத்தியா எவ்ளோ அழகா இருக்கா. என்னோட கண்கள் நிறைய பெண்கள பாத்துருக்கு ஆனால் ரசிச்சது இவளைதான். இவ அளவுக்கு யாரையும் ரசிக்கவும் இல்லை இனி ரசிக்க போறதும் இல்லை ஏனா இது என்னோட பொண்டாட்டி தேவா. அவளை தாண்டி வேற யார்கிட்டயும் என் மனசு கூட போகாது என்று அவன் சொல்ல தேவா கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. அவள் அவனை பார்க்க அவளை சூர்யா அணைத்து கொண்டான்.

நான் எப்போவும் ரசிக்கிற ஒரே பொண்ணு நீதான் அது எப்போவும் மாறாது. என் கண்ணுக்கு நீ மட்டும்தான் அழகு  என்று சூர்யா சொல்ல அவன் இதயம் துடிக்கும் ஓசையை இசை போல் ரசித்தவள் அப்படியே நின்றாள்.

❤️❤️❤️

சில நேரத்துல வாழ்க்கை ஏன் இவ்ளோ மட்டமா போகுது அப்டின்னு நமக்கு தோணும் ஆனா அப்படி தோணுறப்போதான் முன்னேற முதல் அடி எடுத்து வைக்கிறோம்னு அர்த்தம்.எனக்கு பெரிய பிரச்சனை இல்லை ஆனா பெரிய குழப்பம் அதான் கதை எழுதல இனி சரியா எழுத்துறேன் ஆனா குழப்பம்  இன்னும் சரி ஆகல .அதை கடவுள் பாத்துப்பாரு இனி நான் சரியா எழுத்துறேன்.கடமையை செய்வோம் பலன் அப்புறம் பார்ப்போம்.கடவுள் காப்பாத்துவாரு❤️❤️

அடுத்த பதிவில் உங்களை சந்திக்க்கும் வரை விடை பெறுவது அபிராமி க. நி

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro