
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -25
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மௌனம் பேசும்
மொழிகூட அழகடி
ஆயுள் நீள அது போதும் வருடி
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்
புது மொழி அதை உடைத்தெறி
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள் சில நொடி மௌனமாக இருக்க அவள் கண்ணில் கண்ணீரை பார்த்த ஜெய் அதிர்ச்சியானான்.
என்னங்க ஏன் அழுறிங்க என்று கேட்டான் ஜெய் அவன் குரலில் நிஜ உலகுக்கு வந்தவள் பேச ஆரம்பித்தாள்.
இல்ல எனக்கு உங்கமேல அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று சொன்னாள் பூஜா.
இப்போதான இல்ல இனி வருங்காலத்துல அப்படி ஒரு எண்ணம் வரலாமே என்று சொன்னான் ஜெய்.
மரியாதையா சொன்னா உங்களுக்கு எல்லாம் புரியவே புரியாதா என்று கேட்டாள் பூஜா.
நான் உங்ககிட்ட தப்பா எதுவும் சொல்லலேயே என்று கேட்டான் ஜெய்.
நீங்க ஒரு கேள்வி கேட்டீங்க நான் பதில் சொல்லிட்டேன் இதுக்கு மேல நமக்குள்ள பேச ஒண்ணுமே இல்ல என்று சொன்ன பூஜா நேராக நடக்க ஆரம்பித்தாள்.
ஏங்க ஒரு நிமிஷம் நில்லுங்க என்று சொன்னான் ஜெய் பூஜா அவனை நேராக பார்த்தாள்.
இங்க பாருங்க நீங்க எப்படியும் யாரையோ ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்க போறீங்க அது ஏன் நானா இருக்க கூடாது .நான் உங்களை நல்லா பாத்துப்பேன் என்று சொன்னான் ஜெய் அவனை பார்த்து முறைத்தாள் பூஜா.
நீங்க என்ன பாத்துக்குற நிலமையில நான் இல்லை என்னால என்ன பாத்துக்க முடியும் நானும் சம்பாதிக்கிறேன் என்று சொன்னாள் பூஜா.
என்னங்க நான் உங்கள பாத்துக்குறதுக்கும் நீங்க சம்பாதிக்கிறதுக்கும் என்ன சம்மந்தம் .பாத்துக்குறதுன்னா உங்களை அன்பா பாத்துகேக்குறேன்னு கூட அர்த்தம் வரும் என்று சொன்னான் ஜெய்.அவனை பார்த்தாள் பூஜா.
இந்த மாதிரி வசனங்கள் எல்லாம் நான் நிறைய கேட்ருக்கேன் இதை எல்லாம் நம்பி இருந்தா இப்போ நான் இருக்க நிலமையில இருக்க முடியாது என்று சொன்னாள் பூஜா.
ஆனா நான் இதுவரைக்கும் யார் கிட்டயும் இந்த மாதிர வசனம் எல்லாம் சொன்னதே இல்ல என்று சொன்னான் ஜெய்.
அப்படியா அப்போ எனக்கு தெரிஞ்சு நீங்க வேற யார்கிட்டயாவது இந்த வசனம் எல்லாம் சொல்லுறது நல்லது என்று சொன்னாள் பூஜா.
இல்ல அது கஷ்டம் .உடனே சொன்னதுனால என்னோட காதல அவ்ளோ இளக்காரமா நினைக்க வேண்டாம் .உண்மைய சொல்லணும் அப்படின்னா நீங்கதான் என்னோட உயிர்ன்னு கூட நான் சொல்ல மாட்டேன் ஆனா என் உயிர் உள்ள வரைக்கும் எனக்கு மனைவின்னா அது நீங்க மட்டும்தான்னு என்னால சொல்ல முடியும் என்று சொன்னான் ஜெய்.[me; இதுபோன்ற வசனங்கள் கதையில் வந்தால் படிக்க நன்றாக இருக்கும் ஆனால் நிஜத்தில் நீங்கள் இதை போல பேச நினைத்தால் திட்டுக்கள் வாங்க நேரலாம் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது🙅]
அவன் சொன்னதை கேட்ட பூஜாக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.
மிஸ்டர் ஜெய் எனக்கு நிறைய வேலை இருக்கு என்னால உங்க வாழ்க்கை வீண் ஆகிட கூடாதுன்னுதான் நான் இங்க வந்தேன் .இப்போவும் உங்க வாழ்க்கை வீண் ஆகிட கூடாதுன்னுதான் நான் சொல்லுறேன் என்ன காதலிக்கிறேன்னு சொல்லி முட்டாள்தனம் பண்ணாதீங்க என்று சொன்னாள் பூஜா.
உங்களுக்கு இது முட்டாள்தன்மா இருக்கலாம் ஆனா எனக்கு அப்படி இல்லை என்றான் ஜெய்.
உங்ககிட்ட நான் என்ன சொல்லுறதுன்னு எனக்கு தெரியல நீங்க என்ன வேணா பண்ணுங்க ஆனா என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருங்க என்று சொன்ன பூஜா அவன் கூப்பிடுவது காதில் விழாதது போல நடக்க ஆரம்பித்தாள் .ஜெய் அவள் பின்னால் சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அப்படியே நின்று விட்டான்.பூஜா திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டாள்.அவள் செல்வதை பார்த்த ஜெய் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அப்படியே நின்று விட்டான்.என்னதான் பூஜா அவனிடம் நிதானமாக பேசினாலும் அவள் இதயம் எந்த அளவுக்கு வேகமாக துடிக்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது இப்படி எல்லாம் நடப்பது அவளுக்கு புதிது.எப்போது யாரிடம் பேசினாலும் தெளிவாக இருக்கும் அவள் மனம் இவனிடம் மட்டும் தடுமாறுவது போல இருந்தது.அதனால்தான் அவள் அவனிடம் அதற்குமேல் எதுவும் பேசாமல் மௌனமாக சென்று விட்டாள்.
அதே நேரம் இங்கே அமிர்தா தேவாவை படுத்தி எடுத்து கொண்டிருந்தாள்.கொஞ்சம் நேரத்துக்கு முன்பு தேவா வீட்டுக்கு வந்தாள் அமிர்தா வரும்போதே மேக்கப் கிட் கொண்டு வந்தாள் அமிர்தா.
அவளை பார்த்து என்ன என்பது போல சைகை செய்தாள் தேவா.
அது ஒண்ணுமில்ல தேவா எனக்கு ரொம்ப போர் அடிக்குது அதான் உனக்கு மேக்அப் பண்ணலாம்னு வந்தேன் என்றாள் அமிர்தா.அவள் அப்படி சொன்ன உடன் தேவா வேண்டாம் என்பது போல இடம் வலமாக தலை அசைத்தாள்.
கிருஷ்ணாவும் செல்வமும் அப்போதுதான் ஸ்கூலில் இருந்து வந்திருந்தார்கள் செல்வம் அவர்கள் இருவரின் பேச்சுவார்த்தைக்கு நடுவில் வரவில்லை.அவர் அமைதியாக ரூமுக்கு சென்று விட்டார்.கிருஷ்ணாதான் தேவா முகத்தை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.
டேய் கிருஷ்ணா என்ன சிரிப்பு உனக்கு நான் நல்லாத்தான பண்ணி விடுவேன் அப்புறம் எதுக்கு சிரிக்கிற என்று கேட்டாள் அமிர்தா.
இல்ல அக்கா எனக்கு அண்ணி முகத்தை பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது. அவங்கள பாருங்களேன் ஏதோ பூதத்தை பாக்குற மாதிரி உங்களை பாக்குறாங்க என்று சொன்னான் கிருஷ்ணா.
என்ன தேவா என்ன பார்த்தா உனக்கு மேக் அப் பண்ணி சொதப்பிடுவேன்னு உனக்கு தோணுதா என்ன என்று கேட்டாள் அமிர்தா.
தேவா அப்படியே அவளை பார்த்தாள்.ஆமாம் என்பது போலவும் தலை அசைக்கவில்லை இல்லை என்பது போல இடம் வலமாகவும் தலை அசைக்கவில்லை.
பாத்தீங்களா எங்க அண்ணி எந்த அளவுக்கு பயந்துருந்தங்கன்னா இப்படி அதிர்ச்யில உறைஞ்சு போயிருப்பாங்க என்று கேட்டான் கிருஷ்ணா.
அவன் சொல்றது உண்மையா தேவா.நான் உன்ன தொந்தரவு பண்ணுறேனா ஐ ஆம் சாரி தேவா.நான் ஏதோ பிரண்ட்ன்னு நினைச்சுதான் உன்கிட்ட உரிமையா கேட்டேன் நீ என்ன அப்படி நினைக்கலன்னு எனக்கு இப்போதான் புரியுது ஐ ஆம் சாரி தேவா இனி நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என்று சொன்னவள் சஞ்சனாவை அழைத்து கொண்டு செல்ல போக தேவா அவள் கையை பிடித்து தடுத்தாள்.
அப்போ மேக் அப் பண்ணி விடவா என்று அமிர்தா கேட்க தேவா சரி என்பது போல தலை அசைத்தாள் . அவ்வளவு நேரம் சோகமாக இருந்த அமிர்தா முகம் இப்போது பிரகாசம் ஆனது.நல்ல குழந்தை இப்போ என்கூட வா என்று சொன்ன அமிர்தா அவளை அவளுடைய அறைக்கு அழைத்து சென்றாள்.
சஞ்சனா ஹாலில் கிருஷ்ணா உடன் அமர்ந்து இருந்தாள்.சூர்யா எப்போதும் லேட்டாக வருபவன் இன்று மட்டும் எனோ கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிட்டான்.மேக்க பி போடுவதில் பிசியாக இருந்ததால் தேவா மற்றும் அமிர்தா இருவரும் சூர்யா பைக் சத்தத்தை கவனிக்கவில்லை வீட்டுக்கு வந்த சூர்யா நேராக அவன் ரூமுக்கு செல்ல போக கிருஷ்ணா அவனை தடுத்தான் அவன் அருகில் சஞ்சனாவும் இருந்தாள் சஞ்சனா கால் அருகில் கருமி சாவகாசமாக படுத்து கொண்டது.அந்த மூவர் கூட்டணியை வினோதமாக பார்த்தான் சூர்யா.
என்ன ஆச்சு என்று கேட்டான் சூர்யா.அவனை பேசாமல் இருக்கும் படி கிருஷ்ணா உதட்டில் கை வைத்து சைகை செய்தான்.
எங்க அண்ணி உள்ள ரெடி ஆகிட்டு இருக்காங்க .அதனால இப்போ கொஞ்சம் அமைதியா இங்கேயே உக்காருங்க என்று மிகவும் மெதுவாக சொன்னான் கிருஷ்ணா.அவன் சொன்னதை கேட்டு குழப்பம்தான் வந்தது சூர்யாக்கு இருந்தாலும் அமைதியாக வந்து சோபாவில் உட்கார்ந்தான் அவன்
அருகில் வந்து சஞ்சனா அமர்ந்து கொண்டாள்.அப்போது கிருஷ்ணா போன் அடித்தது.
ஹலோ ஆ சரி அக்கா ஓகே வீடியோதான நான் எடுக்குறேன் என்று சொன்ன கிருஷ்ணா போனை கட் செய்து வீடியோ ஆன் செய்தான்.சூர்யா அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் பார்க்க அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது கிருஷ்ணா அவன் வேலையில் மும்முரமாக இருந்தான் . கதவு திறந்ததும் சூர்யா சாதரணமாக நிமிர்ந்து பார்த்தான் ஆனால் தேவாவை பார்த்ததும் அவனால் அவன் கண்ணை அவளிடமிருந்து திருப்பவே முடியவில்லை அவன் கண்ணுக்கு எப்போதும் அவள் அழகுதான் என்றாலும் இன்று இன்னும் அழகாக இருந்தாள்.அதே நேரம் தேவா அவன் வந்ததை கூட பார்க்காமல் தலை குனிந்து இருந்தாள் அவளுக்கு ஒரே பதட்டமாக இருந்தது.அவள் இதற்கு முன்பு இதுபோல ஒப்பனை எல்லாம் செய்து கொண்டதே இல்லை.அதனால் அவளுக்கு வெக்கமமாக இருந்தது.உண்மையில் அமிர்தா சூர்யா வருவான் என்று சொல்லி இப்படி செய்யவில்லை.ஆனால் அவள் இப்படி செய்த நேரம் சூர்யா சரியாக வந்துவிட்டான்.சூர்யாவை பார்த்த அமிர்தாக்கு சிரிப்புதான் வந்தது.
மாப்பிள்ளை உன்னோட முகத்தை பார்க்க ஆசை படுறாரு கொஞ்சம் அவரை பாரு மின்னல் என்று சொன்னாள் அமிர்தா அவள் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சி ஆன தேவா தலை நிமிர்ந்து பார்க்க சூர்யா அவளைதான் இன்னும் பார்த்து கொண்டிருந்தான்.அவனை பார்த்த உடன் தேவாக்கு உடம்பில் உள்ள ரத்தம் எல்லாம் தலையில் வந்தது போல இருந்தது.அவளால் நிற்கவே முடியவில்லை கால்கள் என்று ஒன்று. இருப்பதையே அவளால் உணர முடியவில்லை .அவளும் அப்படியே நின்று கொண்டிருந்தாள் அவனும் அவளைதான் பார்த்து கொண்டிருந்தாள்.இதை எல்லாம் கிருஷ்ணா வீடியோ எடுத்து கொண்டிருத்தான்.
லேசாக இருமினாள் அமிர்தா அவள் கொடுத்த சத்தத்தில் நிஜ உலகுக்கு வந்தார்கள் இருவரும் சூர்யா அப்படியே அவன் முகத்தை திருப்பினான் ஆனாலும் அவன் கண்கள் அவள் பக்கம் செல்வதை அவனால் தடுக்க முடியவில்லை.தேவா அப்படியே ரூமுக்கு ஓட முயற்சி செய்தாள் ஆனால் பாவம் அவளை அமிர்தா அவளை உள்ளே செல்ல விடவில்லை.
டேய் கிருஷ்ணா எப்படி என்னோட திறமை உங்க அண்ணியை அழகா ரெடி பண்ணி இருக்கேனா என்று கேட்டாள் அமிர்தா.
என்கிட்ட ஏன் அக்கா கேக்குறிங்க எங்க அண்ணன் கிட்ட கேளுங்க என்றான் கிருஷ்ணா.
அதுவும் சரிதான் என்ன அண்ணா எங்க திறமை எப்படி என்று சூர்யாவை பார்த்து கேட்டாள் அமிர்தா.
அவன் பதில் சொல்லுவதற்கு முன்பாகவே சஞ்சனா சூப்பறா இருக்கு என்று கத்தி சொன்னாள் அவளை பார்த்து புன்னகை செய்தான் சூர்யா .
அம்மா எங்கள சேர்த்து ஒரு போட்டோ என்றாள் சஞ்சனா.
நான் எடுக்குறேன் என்று சொன்ன அமிர்தா தேவாவை சென்று அமர சொன்னாள்.கிருஷ்ணா வேண்டுமென்றே சூர்யாவை விட்டு தள்ளி அமர்ந்தான். தேவா சூர்யா அருகில் அமர்ந்தாள் சஞ்சனா அவன் மடியில் அமர்ந்தாள் .தேவா எழுந்திருத்தாள் என்ன என்று கேட்டாள் அமிர்தா தேவா செல்வத்தின் அறையை காட்டின்னாள்.
அட ஆமாப்பா முக்கியமானவர விட்டுட்டோமே நான் போய் கூட்டிட்டு வர்றேன் என்று சொன்னவள் சென்று செல்வதை அழைத்து வர எல்லோரும் சந்தோசமாக அமர்ந்து பேமிலி போட்டோ எடுத்தார்கள் அதன் பிறகு கொஞ்சம் நேரத்தில் அமிர்தா குழந்தை எழுந்திருப்பான் என்று சொல்லி சென்று விட்டாள் சஞ்சனாவும் அவளுடன் சென்று விட்டாள் சூர்யா அவன் அறைக்கு சென்று விட்டான்.தேவா இரவு சாப்பிடு முடியும் வரை அறைக்கு செல்லவே இல்லை.தூங்கும் நிரம்தான் அறைக்கு சென்றாள்.சூர்யா அவர்கள் இருவரின் விடியோவைதான் பார்த்து கொண்டிருந்தான் .தேவா வந்ததும் அந்த வீடியோவை நிறுத்தியவன் போனை வைத்தான்.
தேவா வழக்கம் போல எதுவும் சொல்லாமல் உறங்க செல்ல சூர்யா அவளை அழைத்தான் .தேவா அவனை பார்த்தாள்.சூர்யாக்கு என்னவோ அவள் கண்ணை பார்த்து பேசவே அவ்வளவு தடுமாற்றமாக இருந்தது.இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டவன் பேச ஆரம்பித்தான்.
அது நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் என்று சொன்னான் சூர்யா.தேவா என்ன என்பது போல பார்த்தாள் தேவா
இண்ணைக்கு நீ ரொம்ப அழகா இருக்க என்றான் சூர்யா அவன் அப்படி சொன்னனதும் தேவாக்கு வெட்கம் வந்தது அவள் அவனை பார்த்தாள் உண்மையில் அவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக கூட இருந்தது.அவன் பேசுவதே அளந்து அளந்துதான் பேசுகிறான் அப்படி இருக்க்கும்போது இப்படி பட்ட வார்த்தை எல்லாம் அவனிடமிருந்து கேட்பது அவளுக்கு அதிசயமாகதான் இருந்தது.அவள் அவனை பார்த்து சரி என்பது போல தலை அசைத்தாள் உண்மையில் அவளுக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதே மறந்து போய் விட்டது.உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியில் இருந்தாள்.
ம்ம்ம் கண்ணுல மை வச்சிருக்குறது பிரீ ஹேர் விடுறது எல்லாமே உனக்கு ரொம்ப நல்லா இருக்கு அப்புறம் அதைஎல்லாம் விட நீ வெக்க படும்போது இன்னும் அழகா இருக்க என்றான் சூர்யா தேவா அவனை பார்த்து புன்னகை செய்தாள்.அவளுக்கு இன்னும் வெட்கம் வந்தது .
இதைத்தான் சொன்ன என்று சொன்னான் சூர்யா.தேவாக்கு என்ன ரியாக்ட் செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை.
ம்ம்ம் அப்புறம் இண்ணைக்கு மட்டும் இல்ல எப்போவும் நீ அழகாதான் இருக்க.நீ பொட்டு வச்சிட்டு அத்துக்குமேல சந்தனம் வைக்கிறது கூட ரொம்ப நல்லா இருக்கும் நீ கிருஷ்ணா கூட பேசிட்டு இருக்குறப்போ சிரிப்ப அப்போ இன்னும் அழகா இருப்ப சமயத்துல நானா உன்ன பாக்குரனான்னு ஓர கண்ணால பாப்ப அது இன்னும் நல்லா இருக்கும் இதை எல்லாம் சொல்லணும்னு நினைச்சேன் இப்போ சொல்லிட்டேன் அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும் என்றான் சூர்யா .
அவன் தன்னை இந்த அளவுக்கு கவனித்திருக்கிறான் என்பதே அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது .அவள் அந்த ஆச்சர்யத்தில் இருந்து வெளியே வரமாலயே சூர்யாவை பார்த்து என்ன என்பது போல கண்ணால் கேட்டாள் .
இது ரகசியம் காதை காட்டு சத்தமா சொல்ல முடியாது என்றான் சூர்யா தேவா அவன் சொன்னது போல அவன் அருகில் வந்தாள். அவள் காதுக்கு அருகில் வந்தவன் அவளை பார்த்து புன்னகை செய்து ரகசியமாக கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.தேவா கண்கள் ஆச்சர்யத்தில் வெளியே வராத குறைதான்.
இதுதான் ரகசியம் பத்திரமா வச்சிக்கோ குட் நைட் என்றான் சூர்யா.தேவா சரி என்று ஏதோ பொம்மை போல தலை அசைத்தவள் அப்படியே படுத்து கொண்டாள். அவளுக்கு தூக்கம்தான் வரவில்லை அவனுக்கும் தூக்கம் வரவில்லை.
இருவரின் மனதிலும் பல உணர்வுகள் அந்த உணர்வின் உறைவிடம் காதல் என்று அவர்கள் உணர்ந்தால்.....விரைவில் உணர்வார்கள் என்னும் நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுவது அபிராமி கணேசன்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro