Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -21

❤❤❤❤❤❤❤❤❤❤

 தேடல் வரும்பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி

கானலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன்

இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே  

தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

சூர்யா ரூமில் உட்கார்திருந்தான் அவனுக்குள் தோன்றும் உணர்வுகள் எதையும் அவனால் விளக்கி கொள்ளவே முடியவில்லை.அவன் இதயம் மிகவும் வேகமாக துடித்தது.கொஞ்சம் நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் பிறகு அவள் கொடுத்த டீயை  குடித்துவிட்டு வெளியே வந்தான். தேவா  கிருஷ்ணா உடன் அமர்ந்திருந்தாள்.அவள் அவனை பார்த்து சிரிக்க சூர்யா இப்போது தடுமாறி போனான்.

கிட்சனுக்கு சென்று கிளாசை  கழுவி வைத்தவன் ஹாலுக்கு வந்தான். தேவா கிருஷ்ணா உடன் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள்.

தேவா நேத்து நான் உன்கிட்ட ஒரு முக்கியமான பைல் குடுத்து வைக்க சொன்னேன்ல அது எங்க என்று கேட்டான் சூர்யா தேவாக்கு சட்டென்று ஒன்றுமே புரியவில்லை. சூர்யா அவளை பார்த்து கண்ணால் சைகை செய்ய தேவா அவன் எதோ சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொண்டு எழுந்து ரூமுக்கு சென்றாள்.

சூர்யா அவள் பின்னே செல்ல போக கிருஷ்ணா பேசினான் .

ஆமா இங்க யாரோ அவங்கவங்க வேலையை அவங்கவங்கதான் செய்யணும்னு அடுத்தவங்க செய்ய கூடாது அப்டின்னு    சொல்வாங்க அவங்கள நீங்க பாத்தீங்களா  அண்ணா என்று கேட்டான் கிருஷ்ணா .அவனை பார்த்து முறைத்தான் சூர்யா .

ம்ம்ம் ஆமா அது அடுத்தவங்கதான் செய்ய கூடாதுன்னு சொன்ன தேவா ஒண்ணும் யாரோ இல்லையே என்று சொன்னான் சூர்யா .

ஓ அப்படியா விஷயம் அது சரி என்று இழுத்து சொன்னான் கிருஷ்ணா .

டிவிதான பாக்குற அதை மட்டும் பண்ணு என்று சொன்ன சூர்யா நேராக ரூமுக்குள் சென்றான் .

தேவா அவன் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள். அவளுக்கு சூர்யா எதற்கு அழைத்திருப்பான் என்று குழப்பமாக இருந்தது .கொஞ்சம் பதட்டமாக இருந்தது .இருந்தாலும் பதட்டத்தை வெளிக்காட்டாமல் நின்று கொண்டிருந்தாள் .சூர்யா அவளை பார்த்து நெருங்கி வந்து நின்றான்  .அவனை பார்த்து பயப்படாமல் நின்றாள் தேவா.அது சூர்யாக்கு கொஞ்சம் வித்யாசமாக இருந்தது . அவள் அருகில் நெருங்கி வந்தவன் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்  .ஆனாலும்  தேவா அசரவில்லை .இன்னும் கிட்ட சென்று நின்றான் சூர்யா தேவா தைரியமாக நின்றாள்.கொஞ்சம் கூட அசையவில்லை .

ம்ம்ம் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி நீ என்ன பண்ண  என்று சூர்யாகேட்க தேவா அவன் கேள்விக்கு நியாயமாக பதில் கொடுக்க நினைத்து முத்தம் கொடுத்தேன் என்று உதட்டை குவித்து  சைகை மூலம் சொன்னாள். சூர்யாக்கு அவள் அப்படி செய்ததும் ஒருமாதிரி ஆனது இருந்தாலும் தன்னை ஓரளவுக்கு சமாளித்தான்.

அப்போ உனக்கு என்ன பாத்து பயம் வரலயா என்று கேட்டான் சூர்யா இல்லை என்பது போல தலை அசைத்தாள் தேவா.

நிஜமா உனக்கு என்ன பாத்து பயம் வரலையா என்று கேட்டான்  சூர்யா தேவா இல்லை என்பது போல தலை அசைத்தாள்.

அது எப்படி திடீர்னு பயம் இல்லாம போகும் உன்கிட்ட யாராவது என்கிட்ட பாசமா நடந்துக்க சொல்லி சொன்னாங்களா என்று கேட்டான் சூர்யா  இல்லை என்பது போல தலை அசைத்தாள்.

அப்புறம் எப்படி திடீர்னு உனக்கு பயம் எல்லாம் இல்லாம போகும் இதுல ஏதோ தப்பு இருக்கே என்னால நம்ப முடியல என்றான் சூர்யா.

தனக்கு தெரியவில்லை என்பது போல உதட்டை பிதுக்கினாள் தேவா .அவள் அப்படி செய்ததை பார்த்த சூர்யாக்கு அவள் மிகவும் கியூட்டாக தெரிந்தாள் . ஒரு நொடி என்ன பேசி கொண்டிருந்தோம் என்னும் விஷயமே அவனுக்கு மறந்து விட்டது .அவனுக்கு மீண்டும் பழைய நிலைக்கு வர சில நொடி பிடித்தது .

கேள்வி கேட்டு கொண்டிருந்தவன் அமைதியாக இருக்க என்ன ஆனது என்று   வினோதமாக பார்த்தாள். அவள் அவன் ஏன் மௌனமாக இருக்கிறான் என்று கேட்க சூர்யா சட்டென்று அவளை அறைவது போல கை ஓங்கினான் .அவன் அப்படி சட்டென்று செய்ததும் தேவா ஒரு நொடி பயத்தில் அதிர்ந்து விட்டாள். சூர்யா அவளை பயமுறுத்தி விளையாடலாம் என்று நினைத்துதான் அப்படி செய்தான்  .அவன் நினைத்தது போல தேவா பயந்தாள்தான் ஆனால் அங்கே  சூர்யாதான் உறைந்து    போனது போல நின்று கொண்டிருந்தான் .ஏன் என்றால் தேவா பயத்தில் அவனைதான் அனைத்து கொண்டு நின்றாள்  தேவா இப்படி செய்வாள் என்று அவன் கொஞ்சம் கூட  எதிர்பார்க்கவில்லை.காலையில் இருந்து எதிர்பார்க்காத சம்பவங்கள் மட்டும்தான் அவனுக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவனால் எந்த மாதிரி ஒரு உணர்வை அனுபவிக்கிறோம் என்பதை  எல்லாம் அவனால்  புரிந்து கொள்ளவே முடியவில்லை ஆனால் அவனால் புரிந்து கொள்ள முடிந்த விஷயம் என்றால் அது  அவனுக்கு தேவாவின் அருகாமை பிடித்திருக்கிறது என்பது மட்டும்தான்  .

தேவா என்னதான் பயப்படாமல் இருக்க முயற்சி செய்தாலும் அவன் அடிப்பது போல கையை ஓங்கவும் மிகவும் பயந்து விட்டாள். ஆனால் குழந்தை அடி வாங்கினாலும் ஆறுதல் தேட அம்மாவிடம் செல்வது போல தேவாவும் பயமுறுத்திய அவனிடம்தான் பபயத்தை சரி செய்ய வழியும் தேடினாள் .சூர்யாக்கு அவள் எந்த அளவுக்கு பயத்தில் இருக்கிறாள் என்பது நன்றாக புரிந்தது .அவளை தன்னைவிட்டு விலக்கி நிற்க வைத்தவன் தேவாவை பார்த்தான் .அவள் கண்கள் கலங்கி இருந்தது அதை பார்த்த சூர்யாக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது .

அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் அவளை தன்னை பார்க்கும்படி செய்தான் .அவள் கண்ணில் இருந்த கண்ணீர் கன்னத்தில் பட்டது .அவன் அவள் கண்ணீரை துடைத்தான் .

தேவா ப்ளீஸ் அழாத நான் ஏதோ சும்மா விளையாட்டுக்கு பண்ண  .நான் எப்படி உன்ன அடிப்பேன்னு நீ நினைக்குற .நான் என்ன ஆனாலும்   நிச்சயம் உன்ன எப்போவும் அடிக்க மாட்டேன் .அதனால நீ இதுக்கெல்லாம் பயப்பட வேண்டாம்.நீ கஷ்டப்பட்டா எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு  . என்று சொன்னான் சூர்யா அவன் அப்படி சொன்னதும்   தேவாக்கு இன்னும் அழுகைதான் வந்தது .

தேவா இதற்கு முன்பு எத்தனையோ முறை அழுதிருக்கிறாள். மனவேதனையில் உடல் வேதனையில் எத்தனையோ முறை அழுதிருக்கிறாள் ஆனால் அப்போது எல்லாம் தேவா அழுகை சத்தம் வெளியே கேட்க கூடாது என்று மட்டும்தான் நினைத்து இருக்கிறாள் ஏன் என்றால்  அழுகை சத்தம் கேட்டால் கூட சித்தியிடம் இருந்தும் திட்டு மற்றும் அடிதான் கிடைக்கும் அவளுக்காக வேதனை பட  இருந்ததது பூஜா மட்டும்தான் அப்படி இருக்கும்போது   அவளுக்கு என்று  வேதனை பட இன்று சூர்யா இருக்கிறான் என்று நினைக்கும்போது அவளுக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது  அவளுக்கு சந்தோசத்தில் இன்னும் அழ வேண்டும் போல இருந்தது .இன்னும் அழுதாள் சூர்யா இன்னும் பதறி விட்டான் .

சாரி நான் ஏதோ தெரியாம பண்ணிட்டேன் .இனி இப்படி பண்ண மாட்டேன் என்ன மன்னிச்சிடு கோவம் இருந்தா என்ன அடிச்சிடு  என்று சொன்னான் சூர்யா .தேவாக்கு கஷ்டம் ஆனது .அவளுக்கு அவனிடம் தான் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்ல வேண்டும் என்று தோன்றியது ஆனால் அவளால் சொல்ல முடியவில்லை வாழ்க்கையிலேயே தனக்கு பேச்சு வரவில்லை என்று அந்த நொடிதான் அதிகம் வேதனை அடைந்தாள்.அவள் சைகையால் சொல்வதை புரிந்து கொள்ளும் நிதானத்தில் அவள் இல்லை .தேவா அவன் கைகளில் முகத்தை புதைத்தப்டி அழுதாள் .சூர்யாக்கு அவள் தான் வேதனை படுத்தியதால் அழவில்லை என்று தோன்றியது .அவளை கொஞ்சம் நேரம் அழவிட்டவன் பிறகு அவளை மீண்டும் தன்னை பார்க்கும்படி செய்தான் .

என்ன ஆச்சு தேவா ஏன் இப்படி அழுற உனக்கு பிடிக்காத மாதிரி ஏதாவது நடந்துச்சா .உன் மனசு கஷ்ட படுற மாதிரி ஏதாவது நடந்துச்சா சொல்லு நான் இப்போவே சரி பண்ணுறேன் என்று அக்கறையுடன் கேட்டான் சூர்யா .

தேவா ஒன்றும் இல்லை என்பது போல இடம் வலமாக தலை அசைத்தாள் .

அப்புறம் எதுக்கு அழுத என்று கேட்டான் சூர்யா .அவனை பார்த்து இப்போது சிரித்தவள் அங்கிருந்த பேப்பர் ஒன்றை எடுத்தாள். பிறகு அதில் ஏதோ எழுதி அவனிடம் கொடுத்தாள்.

எனக்காக என்மேல என் தங்கச்சிக்கு அப்புறம் இவ்ளோ அக்கறை நீங்கதான் காட்டுறீங்க .எனக்கு இது புதுசு அதான் ஆனந்த கண்ணீர் என்று எழுதி இருந்தாள்.

அதை பார்த்தவனுக்கு சந்தோச படவா இல்லை வேதனை படவா என்றே தெரியவில்லை .அவள் மகிழ்ச்சியில்தான்  அழுதாள் என்பது அவனுக்கு சந்தோஷம்தான் ஆனால் அந்த கொஞ்சம் வார்த்தைகள் கூட அவள் வாழ்க்கையில் அதிகம் வேதனை பட்டிருக்கிறாள் என்று அவனுக்கு புரிய வைத்தது .அவன் அந்த பேப்பரில் உள்ளதை படித்துவிட்டு பேச ஆரம்பித்தான் .

நான் உன்மேல அக்கறை காட்டாம யாரு அக்கறை காட்டுவா .ஏனா நான் உன்னோட ஹஸ்பன்ட்  என்று சொன்னான் சூர்யா தேவாக்கு அந்த ஒரு வார்த்தை வாழ்க்கை முழுவதும் போதும் என்பது போல இருந்தது அவள் அவனை பார்க்கும் விதம் அவன் சொன்ன அந்த வார்த்தைக்கு பிறகு மாறியது சூர்யா தொடர்ந்து பேசினான் .நான்  எப்போவும் இப்படித்தான் இருப்பேன் அதனால இதை நினைச்சி எல்லாம் நீ அழாத .சந்தோசத்துல அழுதாலும் இனி நீ அழ வேண்டாம் எனக்கு உன் கண்ணீரை பாக்க முடியல  .சரி இப்போ சிரி பாக்கலாம் என்று  சூர்யா சொல்ல அவனை பார்த்து சிரித்தாள் தேவா .சூர்யாவும் சிரித்தான் .

போ போய் டிவி பாரு .என்று சொன்னான் சூர்யா தேவா சரி என்பது போல தலை அசைத்துவிட்டு சென்று விட்டாள். அவளுக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது .அவள் இந்த வீட்டுக்கு வந்த இத்தனை நாளில் அவளுக்கு இன்றுதான் இது தன்னுடைய வீடு என்னும் எண்ணமே வந்திருக்கிறது .காரணம் இன்றுதான் சூர்யா அவளிடம் உரிமையாக  தன்னை கணவன் என்று சொல்லி இருக்கிறான் .தேவா சந்தோசமாக வெளியே வந்தாள். அவள் டிவி பார்க்க கிருஷ்ணா அருகில் அமர போக அப்போது அமிர்தா வீட்டில் இருந்து வந்தார்கள் பிரசாத் அப்பா மட்டும் வரவில்லை  .அவர்களை எல்லாம் வரவேற்றவள் உட்கார வைத்துவிட்டு டி காபி எல்லாம் கொடுத்தாள். எல்லோரும் தேவா மருதாணி சிவந்ததை வைத்து சூர்யாவை கலாய்த்து கொண்டிருந்தார்கள் .தேவாக்கு அவர்கள் கேலி செய்வதை எல்லாம் பார்த்து வெட்கம் வந்தது அவள் அப்படி வெட்க படுவதை தன்னை மறந்து ரசித்தான் சூர்யா .அதற்கும் எல்லோரும் கிண்டல் செய்ய வேறு வழி இல்லாமல் சஞ்சனாவை அழைத்துக்கொண்டு வெளியே செல்வது போல சென்று விட்டான் .தன்னுடைய நண்பனை கேலி செய்ய பிரசாத்தும் வெளியே சென்றான் .

எல்லோரும் சூர்யாவை கிண்டல் செய்து பேசி கொண்டிருக்க அமிர்தா அழுது கொண்டிருந்த குழந்தைக்கு சமாதானம் செய்து செர்லாக் கொடுத்து கொண்டிருந்தாள்.கையில் எதையோ வைத்தபடி விளையாடி கொண்டே  சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தை திடீரென தலையை தொங்க போட்டு விட்டது .அமிர்தா பதறி விட்டாள்.

அத்தை அத்தை பாப்பாக்கு என்னவோ ஆயிடுச்சு அத்தை என்று அமிர்தா அழ அமிர்தாவின் மாமியார் குழந்தையை வாங்கி குழந்தை தட்டி வாயில் ஊதினார் சில நொடி கழித்து குழந்தை அழுதது அதற்குள் அமிர்தா சத்தம் கேட்டு சூர்யா பிரசாத் ஓடி வந்தார்கள் .அமிர்தா அழுதபடி குழந்தையை வாங்கி அதற்கு முத்தம் கொடுத்தாள். எல்லோரும் குழந்தையை பார்க்க கிருஷ்ணா மட்டும் அண்ணி என்ன ஆச்சு என்று கத்த சூர்யா தேவாவை பார்க்க தேவா அப்படியே மயங்கி நின்ற இடத்திலேயே விழுந்தாள். சூர்யாக்கு உலகமே நின்றது போல இருந்தது .அவளை சென்று தட்ட அவள் எழுந்திருக்கவில்லை .பிறகு அமிர்தா மாமியார்தான் தண்ணீர் தெளித்தார் .தேவா பிறகு கண்ணை திறந்தாள் .அவள் கண்ணை திறக்கும் போது அமிர்தா கையில் குழந்தை சிறிது கொண்டிருந்தான் .சூர்யா அவளை எழுப்பி சோபாவில் உட்கார வைத்தான் .(me: இது நிஜமா நடந்துச்சு என் பிரன்ட் பாப்பா குழந்தை மயங்கிட்டதான் அவங்க மாமிதான் என்ன என்னவோ பண்ணி எழுப்புனாங்க.குழந்தை இருக்க வீட்ல பெரியவங்க இருக்குது எவ்ளோ முக்கியம்னு எனக்கு அப்போதான் புரிஞ்சிச்சு .2 மூணு நொடியில உயிர் போயிட்டு உயிர் வந்துச்சு )

அது சரி இதுக்கெல்லாம் மயக்கம் போட்டா எப்ப்டிம்மா.நாளைக்கு உனக்கு குழந்தை பிறக்கும் அப்பவும்  இப்படித்தான் இருக்கும் இதுக்கெல்லாம் பயப்பட கூடாது .எல்லாரையும் பயமுறுதிட்டு எப்படி சிரிக்கிறான் பாரு மாய கண்ணன் என்று அமிர்தா கையில் இருந்து குழந்தையை வாங்கி கொஞ்ச ஆரம்பித்தார் அவர் .

தேவாக்கு லேசாக தலை வலித்தது .அமிர்தா ஓரளவுக்கு சமாதானம் ஆகி  இருந்தாள் .எல்லோரையும் பதற வைத்த அகரன் விளையாட ஆரம்பித்தான் எல்லோரும் பதட்டத்தில் இருந்து மீள தேவா அருகில் வந்தாள் சஞ்சனா .

அத்தை உங்களுக்கு நாளைக்கு பாப்பா பிறக்குமா என்று கேட்டாள் .பாவம் குழந்தை பாட்டி சொன்னதை தப்பாக புரிந்து கொண்டாள் .தேவாக்கு அவள் கேட்ட கேள்விக்கு பதில் என்ன என்றே தெரியவில்லை .அவள் சூர்யாவை பார்க்க .எல்லோரும் அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தார்கள் .

சஞ்சனா குட்டி நாளைக்கு வரலன்னாலும் கூடிய சீக்கிரம் உங்க கூட விளையாட இன்னொரு பாப்பா வந்துடும் ஸ்.இப்போ வா நம்ம போய் உங்க மாமா காசுல ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிடலாம் என்று சஞ்சனாவை தூக்கி சென்றான் பிரசாத் .

கல்யாணம் என்றே யோசிக்காத சூர்யாக்கு இப்போது குழந்தை அதற்கு அப்பாவாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்தது சொல்ல போனால் அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூட அவனுக்கு  தோன்றியது .அவனை பற்றி யோசிக்க அவனுக்கே இப்போது கொஞ்சம் வியப்பாக இருந்தது .அப்பா ஆவது அப்புறம் முதலில் நல்ல கணவனாக அவளிடம் பேர் வாங்கு அப்புறம் குழந்தை பத்தி யோசி என்று மனசாட்சி சொல்ல மனசாட்சி சொல்வதை கேட்கலாம் என்று முடிவு செய்தான் .

❤️வரும் பதிவுகளில் வில்லன் ஜீவனை அறிமுகம் செய்யும் முடிவோடு உங்களிடமிருந்து விடைபெறுவது Abirami G.N

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro