
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு-20
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தேவா மற்றும் சூர்யா இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். செல்வம் சாப்பாடு எடுத்து வைத்து கொண்டிருந்தார்.
வாங்க வாங்க சாப்பாடு ரெடி ஆகிடுச்சு. சாப்பிடலாம் என்றார் செல்வம்.
ஆமா அண்ணி சாப்பாடு ரெடி வாங்க சாப்பிடலாம் என்றான் கிருஷ்ணா.
தேவா கிருஷ்ணா சாப்பிட அழைத்ததும் சரி என்று சாப்பிட போக அவள் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு முன்பு சூர்யா பேசினான்.
உன்னோட அண்ணி கையில மருதாணி இருக்கு அது காய கொஞ்சம் டைம் ஆகும். நீங்க சாப்பிடுங்க நாங்க அப்புறம் சாப்பிடறோம் என்றான். சூர்யா.
தேவாக்கு பசித்தது இருந்தாலும் சூர்யா அப்படி சொல்லும்போது அவளுக்கு சாப்பிட தோன்றவில்லை. அடுத்த நாள் விடுமுறை என்பதால் கிருஷ்ணா படிக்காமல் உறங்க சென்று விட்டான்.
எல்லாரும் உறங்க சென்று விட்டார்கள் மணி பத்து ஆனது. தேவாக்கு பசித்தது. ஆனால் சூர்யா சொல்லாமல் எப்படி எழுந்து சென்று சாப்பிட என்று யோசித்து கொண்டிருந்தாள்.(me: பசிச்சா சாப்பிட்டுடணும்)
ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டிருந்த சூர்யா அவளை பார்த்தான். அவன் தன்னை பார்ப்பதை பார்த்த தேவா தன்னுடைய பார்வையை திருப்பினாள். அப்போதுதான் அவள் சாப்பிடவேயில்லை என்ற விஷயம் சூர்யாக்கு நினைவு வந்தது
ஸ்ஸ் ஐ ஆம் சாரி நீ இன்னும் சாப்பிடவே இல்லையே. ரொம்ப பசிக்குதா என்று அவன் கேட்க தேவா வேகமாக இல்லை என்பது போல இடம் வலமாக தலை அசைத்தாள். இருந்தாலும் சூர்யாக்கு அவள் முகத்தை பார்த்தாலே அவளுக்கு எந்த அளவுக்கு பசிக்கிறது என்று புரிந்தது
சரி பசிக்கலன்னா கூட பரவாயில்லை டைம் ஆகுது சாப்பிடலாம் என்றான் சூர்யா. தேவா சரி என்பது போல தலை
அசைத்தவள் எழுந்து கை கழுவ போக அவளை தடுத்தான்.
எங்க போற என்று கேட்டான் சூர்யா
கை கழுவ என்பதை சைகை மூலம் உணர்த்தினாள் தேவா.
இல்ல நீ கை கழுவ வேணாம் இங்கேயே இரு என்று சொன்ன சூர்யா ரூமை விட்டு வெளியே சென்றான்.
அவனை வினோதமாக பார்த்தவள் அப்படியே கட்டிலில் உட்கார்ந்தாள் அப்போது அங்கு வந்தான் சூர்யா. அவன் கையில் தட்டு இருந்தது.தட்டில் சப்பாத்தி மற்றும் குருமா இருந்தது.
தட்டு மற்றும் சப்பாத்தி குருமாவை கட்டிலில் வைத்தவன் சேர் எடுத்து போட்டு உட்கார்ந்தான்.
அவன் பாட்டுக்கு தட்டில் சப்பாத்தி வைக்க அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் பார்த்தாள் தேவா. ரெண்டு சப்பாத்தி எடுத்து வைத்தவன் குருமா ஊற்றினான் அதை பார்க்கும் போதே தேவாக்கு சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.ஆனால் என்ன செய்ய அவன்தான் கையில் சப்பாத்தி வைத்திருக்கிறான் என்று மனதில் நினைத்தவள் குனிய சப்பாத்தி பிய்த்து குருமாவில் தொட்டவன் அவள் வாய்க்கு அருகே கொண்டு சென்றான். சப்பாத்தியை பார்த்தவள் அவனை பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.அவள் வாயை திறக்காமல் அவனை பார்த்தாள்.
கையில மருதாணி இருக்கு எப்படி சாப்பிடுவ. நான் ஊட்டி விடறேன் என்றான் சூர்யா.
தேவா கையில் உள்ள மருதாணி காய்ந்து விட்டது என்பதை அவனுக்கு காட்டினாள்.
அது காஞ்சுடுச்சு இருந்தாலும் அது உன் கையில இருக்கட்டும். நான் ஊட்டி விடறேன் சாப்பிடு. ஆ காட்டு என்று கொஞ்சம் கண்டிப்புடன் அவன் சொல்ல தேவா வாயை திறந்தாள். தேவா சாப்பிட அவளுக்கு ஊட்டி விடுவதை ரசித்தான் சூர்யா.3 சப்பாத்திக்கு மேல் அவளால் சாப்பிட முடியவில்லை. அவள் போதும் என்று சைகை செய்தாள். அவனும் தட்டை வைத்து விட்டு கிளாசை கூட எடுக்க விடாமல் அவளுக்கு தானே தண்ணீர் கொடுத்தான். பிறகு அவளை படுத்து கொள்ள சொன்னவன் தானும் சாப்பிட்டுவிட்டு அவள் அருகில் படுத்து கொண்டான்.
அவனுக்கு உறக்கம் கொஞ்சம் கூட வரவில்லை. அவனுக்கு இருக்கும் பல வேலைகள் பல கவலைகள் எல்லாவற்றையும் விட அவனுக்கு பெரிய கவலையாக இருந்தது தேவாவின் கையில் உள்ள மருதாணி சிவக்குமா சிவக்காதா என்பதுதான்.
சூர்யா தூங்காமல் இருக்க அவன் மனசாட்சி பேச ஆரம்பித்து .
டேய் சூர்யா இப்போ நீ ஏன் தூங்காம இருக்க .முதல்ல படுத்து தூங்கு அதெல்லாம் உன் பொண்டாட்டி கை நிச்சயம் சிவக்கும் நீ நிம்மதியா தூங்கு என்றது எல்லாவற்றையும் நல்ல விதமாக பார்க்கும் மனசாட்சி. நல்ல மனசாட்சி சொன்னதை கேட்டு சூர்யா கொஞ்சம் தெளிவானான் .ஆனால் அவனை குழப்பம் கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காகவே எல்லாவற்றையும் கெட்டதாக பார்க்கும் மனசாட்சி பேச ஆரம்பித்தது.
ஆமா சூர்யா ஆமா அந்த பொண்ணு கை நிச்சயம் சிவக்கும் .நெருப்புன்னா சுடதான் செய்யும் அதை மாதிரி மருதாணின்னா சிவக்கதான் செய்யும் அதுக்காக அந்த பொண்ணு மேல உனக்கு பாசம் இருக்குன்னு நீயே தப்பா நினைச்சிக்காத சரியா .பாசம் காட்டுறதுக்கும் பாவ படுறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு .நீ அந்த பொண்ணு மேல பாவ பட்டுதான கல்யாணம் பண்ண அப்புறம் இடையில என்ன பாசம்னு உனக்கு ஒரு குழப்பம். நீ ஒரு போலீஸ் அதை மறந்துடாத இந்த மாதிரி மருதாணி சிவந்தா பாசம்னு சொல்றது எல்லாம் முட்டாள்தனமான விஷயம் அதை எல்லாம் நீ நம்பாத என்று சொன்னது கெட்ட மனசாட்சி. சூர்யாக்கு அது சொல்வதும் சரி என்பது போலதான் இருந்தது .
சூர்யா நீ அந்த மாதிரி எல்லாம் யோசிக்காத பாசம் எல்லாம் பல வருஷம் ஒண்ணா பழகுனாதான் வரும்னு இல்ல.ஒருநாள் பழகுனவங்க கூட சில நேரத்துல பல வருஷம் நம்ம கூட பழகுனவங்களை விட ரொம்ப நெருக்கமா தெரிவாங்க .அதோட வாழ்க்கைல எப்போவும் எது உண்மையோ அதை மட்டும் நம்பணும்னு அவசியம் இல்லை .உன் பொண்டாட்டி கை நல்லா சிவந்ததுக்கு உன்னோட பாசம்தான் காரணம்னு உனக்கு தோணுச்சுன்னா அப்படியே இருக்கட்டும்.என்ன கெட்டுட போகுது இப்போ .உண்மையா நீ உன் பொண்டாட்டி மேல பாசம் வச்சிருக்க அதனால நீ கவலை படாத நிச்சயம் உன்னோட கை சிவக்கும் என்று சொன்னது நல்ல மன்சாட்சி.
சூர்யா இந்த நல்லவன் சொல்லுறதை கேக்காத .நீ மட்டும் அவன் சொல்லுறதை கேட்டு நடந்தா கஷ்டம் எல்லாம் உனக்குதான் எனக்கு இல்லை.இங்க பாரு சூர்யா இந்த பாசம் காதல் எல்லாமே எந்த அளவுக்கு சந்தோசத்தை தருதோ அதை விட அதிகமா வேதனையை தரும் .பாசம் நீ யார் மேலயாவது காமிச்சா அவங்க உன்மேலயும் பாசம் கட்டணும்னு உன்னோட மனசும் ஏங்கும்.இந்த அன்பு பாசம் எல்லாமே உனக்கும் இதுவரைக்கும் வேதனைதான் கொடுத்துருக்கு அதனால விழித்திரு விலகி இரு என்று சொன்னது கெட்ட மனசாட்சி.(me: தெளிவா பேசுறப்பா நீ)
சூர்யா ஒடுறப்போ எத்தனையோ முறை விழுந்துருக்க அதனால ஓடாம நின்னுருக்கியா இல்ல மறுபடியும் ஓட பயந்துருக்கியா அப்புறம் ஏண்டா புதுசா ஒரு உறவை ஏற்படுத்திக்க இந்த அளவுக்கு பயப்படுற.ஆமா சூர்யா நீ பயப்படுற .தேவா உன்ன விட்டு போயிடுவாளோன்னு நீ ரொம்ப பயப்படுற.அதனாலதான் அவகிட்ட பேசுற ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சு யோசிச்சு பேசுற.அவ உன்ன பாத்து பயப்படுறானு நீ சொல்ற ஆனா உண்மையில அவளை பார்த்து நீதான் சூர்யா பயப்படுற.எங்க உன்ன விட்டுவிட்டு போயிடுவாளோன்னு. பிரிவு பயத்துல சேர மாட்டேன்னு நினைக்கிறது எந்த வகையில நியாயம்.நீ யார் கிட்ட வேணா பொய் சொல்லலாம் என்கிட்ட பொய் சொல்லவே முடியாது .ஏன் தெரியுமா நான் உன்னோட மனசாட்சி என்று நல்ல மனசாட்சி சொல்ல அப்போ நான் யாரு என்று கேட்ட மனசாட்சி குறுகிட்டது .
சூர்யா அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல.ஓடுனா விழணும்தான் அது ரொம்ப பெரிய விஷயம் இல்ல அப்போ படுற காயம் எவ்ளோ பெருசா இருந்தாலும் ஓடி ஜெய்கிறப்போ சரி ஆகிடும் .ஆனா அதே நேரம் உறவுல ஏற்படுற காயம் அப்படி இல்ல.ஒருமுறை அடி பட்டாலே எழுந்திருக்க பல வருஷம் ஆகும் உன்னோட கடந்த கால காயமே இன்னும் சரி ஆகல அதுக்குள்ள புது காயம் பட தயார் ஆகிட்டியா.அவன் நல்லவன் அடி படலாம்னு சொல்லுவான் நான் நியாமனவன் தேவை இல்லாம காயப்பட வேண்டாம்னு சொல்லுவேன் காயப்படுத்துறது தப்பு காயப்படாம இருக்குறது தப்பு இல்லையே என்றது கெட்ட மனசாட்சி.(me: கருத்தா சொல்றான்ல😂)
அவன் நியாயம் அநியாயம்ன்னு உன்ன குழப்புறான் என்று நல்ல மனசாட்சி சொல்ல ஒரு மனம் இரண்டாக பிளவு பட்டு பேசுவதை கேட்ட சூர்யாக்கு தலை வலி வந்தது.அப்படியே திரும்பி படுத்தவன்
அமைதியாக படுத்து கொண்டிருக்கும் தேவா முகத்தை பார்த்தான் அவள் அமைதியான முகத்தை பார்த்த சூர்யா மனதுக்குள் இவ்வளவு நேரம் இருந்த குழப்பம் மொத்தமாக மறைந்து விட்டது .அவன் மனம் மிகவும் அமைதியாக இருந்தது. ஏன் என்றால் அவன் மனம் முழுவதும் தேவாதான் இருந்தாள் அவள் முகத்தை பார்த்தபடி இருந்தவன் எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கி விட்டான்.
காலையில் அவன் எழுந்திருக்கும் போது தேவா அவன் அருகில் அமைதியாக பத்திருந்தாள் .சூர்யா எழுந்தான் .அவன் எழுந்த உடன் தேவாவும் எழுந்து விட்டாள்.சூர்யா கட்டிலை விட்டு எழுந்திருக்க அப்போதுதான் அவனுக்கு மருதாணி விஷயம் நினைவுக்கு வந்தது .அவன் சட்டென்று திரும்பி அவளை பார்க்க அவன் அப்படி செய்ததும் பதட்டம் அடைந்தாள் தேவா.அவள் அருகில் எதுவும் பேசாமல் வந்தவன் அவள் கையை தன்னுடைய கையால் எடுத்து பார்த்தான் மருதாணி நன்றாக சிவந்து இருந்தது அதை பார்த்த உடன் சூர்யா முகத்தில் சூரியின் அளவுக்கு பிரகாசம் ஆனது .
ஹே தேவா கை நல்லா சிவந்துருக்கு பாத்தியா என்று ஏதோ குழந்தை தனக்கு முட்டாய் கிடைத்ததும் சந்தோஷம் படுவது போல முகம் நிறைய புன்னகையுடன் சொன்னான் சூர்யா .அவன் அப்படி புன்னகை செய்வதை பார்த்த தேவாக்கு அவன் மிகவும் அழகாக தெரிந்தான் (me: இந்த உலகம் அழகுக்குன்னு ஒரு வரையறை வச்சிருக்கு அதுபடி எல்லார் பார்வைக்கும் சில நேரத்துல சிலர் அழகா தெரிவாங்க ஆனா மனசுக்கு நெருக்கமான ஒருத்தர் மட்டும்தான் எப்போவும் அழகா தெரிவாங்க என்ன செஞ்சாலும் அழகா தெரிவாங்க. அழகு அப்டிங்கறது மனசு பொறுத்துதான் நான் நம்புகிறேன் அதான் இந்த கருத்து .இந்த கருத்து என்னுடையது மட்டுமே எனக்கு வேறு கிளைகள் கிடையாது😀)
சூர்யா அவள் கையை பார்த்து மகிழ்ச்சியில் புன்னகை செய்ய தேவா அவனை பார்த்து புன்னகை செய்தாள் .அவள் சிரிப்பு அவள் கண்கள் எல்லாம் சூர்யா மனதை ஏதோ செய்தது.அவள் கையை இழுத்து தனக்கு இன்னும் நெருக்கத்தில் கொண்டு வந்தவன் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான் .தேவா கண்களை மூடி கொண்டாள் அவனை தடுக்கவில்லை .அவளுக்கு அவன் முத்தம் ஏனோ இப்போது அந்நியமாக தெரியவில்லை.இரண்டு பேரும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் இருந்தார்கள் .சூர்யா அவள் கன்னத்தில் கை வைத்தவன் அவள் இதழை நோக்கி செல்ல சரியாக ஆறு மணிக்கு அலாரம் அடித்தது.ரெண்டு பேரும் சட்டென்று விலகினார்கள்.(me:அலாரம் அடிக்குறதுக்கு முன்னாடி யாரு உங்களை எழும்ப சொன்னா 🤐😪)
சண்டேதான கொஞ்சம் நேரம் தூங்கு என்று சொன்ன சூர்யா நேராக பாத்ரூம் பக்கம் சென்று விட்டான் .தேவா இவ்வளவு நேரம் நேரம் என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தவள் அவன் சொன்னது போல படுத்து விட்டாள் தேவா.அவளுக்கு உறக்கம்தான் வரவில்லை கொஞ்சம் நேரத்தில் வெளியே வந்த சூர்யா ஜாக்கிங் செவ்வதற்காக வெளியே சென்றான் .அவன் சென்ற பிறகு குளத்து விட்டு கோலம் போட்டு டீ போட்டு சாப்பாடு செய்ய ஆரம்பித்தாள்.சூர்யா வீட்டுக்கு வந்தவன் குளித்துவிட்டு வேலைக்கு கிளம்பினான்.தேவா மட்டும்தான் முழித்து இருந்தாள்.
அது இண்ணைக்கு வேலை இருக்கு நான் வேலைக்கு போய்ட்டு வரேன் நாளைக்கு எனக்கு
லீவ் என்றவன் கிளம்ப போக அவனை சாப்பிட சொல்லி சைகை செய்தாள் தேவா.சூர்யா சாப்பிட அமர அவனுக்கு பரிமாற தேவா முயற்சி செய்தாள் அவள் கை நடுங்கியது.அதை கவனித்த சூர்யா அவனே அவள் கையில் இருந்து கரண்டியை வாங்கி பரிமாறி சாப்பிட்டு விட்டு சென்றான் இடையில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை பைக் ஸ்டார்ட் செய்தபிறகு அவளிடம் சென்றுவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்று விட்டான் .தேவாக்கு அவன் கொடுத்த முத்தம் மீண்டும் நினைவுக்கு வர அவள் வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது அவளால் ஒரு வேளையிலும் கவனம் செலுத்தவே முடியவில்லை.செல்வம் எழுந்து வந்தவர் சூர்யா அவ்வளவு சீக்கிரம் வேலைக்கு சென்று விட்டான் என்பதை கேட்டு ஆச்சர்யம் அடைந்தார்.
காலை 8 மணி அளவில் சாப்பிட உட்கார்ந்தார்கள் மூவரும் தேவா அவர்கள் இருவருக்கும் உப்புமா வைக்க கிருஷ்ணா ஒரு வாய் உப்புமா எடுத்து வைத்தவன் தேவாவை பார்த்தான் .
அண்ணி உப்புமால உப்பே இல்ல. உப்பு போட மறந்துட்டீங்களா என்று கேட்டான் கிருஷ்ணா .
தேவாக்கு அப்போதுதான் உப்புமாவில் உப்பு போடவில்லை என்பது நினைவுக்கு வந்தது அதோடு அதை சூர்யா சாப்பிட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் சென்றது அவளுக்கு ஆச்சர்யம் ஆனது .தேவாக்கு பதட்டம் ஆனது .அதை கவனித்த செல்வம் பேச ஆரம்பித்தார்.
கிருஷ்ணா சக்கரை வச்சி சாப்பிடு .ஒருவேளை அப்படி சாப்பிட்டா ஒண்ணும் ஆகாது என்று சொன்னார் செல்வம்.தேவா கிருஷ்ணாவை பார்க்க கிருஷ்ணா மாற்று கருத்து இல்லாமல் சாப்பிட ஆரம்பித்தான் .அதன் பிறகு தேவை இல்லாமல் பதட்டம் கொள்ள கூடாது என்று தனக்குள் சொன்னவள் கிருஷ்ணா நண்பர்கள் மதியம் வருவதால் அவர்களுக்காக பிரியாணி செய்து கொண்டிருந்தாள் அவளுக்கு உதவியாக கிருஷ்ணா இருந்தான் .இடையில் சஞ்சனா கருமி வந்து உணவை ருசி பார்த்தார்கள் .கிருஷ்ணா நண்பர்கள் எல்லாம் வர வீடே கலகலவென இருந்தது .என்னதான் தேவா பேசவில்லை என்றாலும் அவள் வந்த பிறகுதான் இந்த வீடு பேசுகிறது என்பதை உணரந்தார் செல்வம் .எல்லாம் மகிழ்ச்சியாக சென்றது .நண்பர்கள் சென்றார்கள்சாயங்காலம் ஆனதும் சூர்யாவை பார்க்க வேண்டுமே அவன் முகத்தை எப்படி பார்ப்பது என்று பதட்டம் கொள்ள ஆரம்பித்தாள் .அப்போது சஞ்சனா டிவியில் சேனலை மாற்றி மாற்றி வைத்து கொண்டிருந்தாள் அப்போது ஒரு சேனல் வைத்தவள் கருமி வந்ததும் அதனுடன் விளையாட சென்றாள் அப்போது அவள் கையில் உள்ள கிளாஸ்சில் இருந்த தண்ணீர் கீழே சிந்தியது .அதை தேவா கவனிக்கவில்லை.
கிருஷ்ணா அவன் பிரென்ட் உடன் தன்னுடைய அண்ணி பற்றி ரூமில் பெருமையாக பேசி கொண்டிருந்தான். செல்வம் வெளியே சென்றிருந்தார்.
சஞ்சனா வைத்த சேனலில் ஒரு தொகுப்பாளர் ஏதோ கதை சொல்லிவிட்டு இறுதியாக நிகழ்வுயை நிறைவு செய்யும் பொருட்டு கருத்து சொன்னார் .
இதனால் என்ன சொல்ல வர்றேன்னா ஒரு விஷயத்தை புரிய வைக்க எவ்ளோ முயற்சி பண்ணாலும் சிலர் புரிஞ்சிக்க மாட்டாங்க .அப்படி உள்ளவங்களுக்கு அவங்க பண்ணதையே திரும்ப பண்ணி விடுங்க நிச்சயம் புரிஞ்சிப்பாங்க .எல்லா நேரத்துலயும் வார்த்தைகள் பேசனும்னு அவசியம் இல்ல சில நேரத்துல செயல் கூட பேசலாம் .சொற்களால் சொல்வதை விட செயல்களால் சொல்லுங்கள் .என்று சொல்லி உங்களிடமிருந்து விடைபெறுவது என்று சொல்லி அவர் விடைபெற தேவாக்கு காயபோட்ட துணி அப்பொதுதான் நினைவுக்கு வந்தது.காயப்போட்ட துணி எல்லாவற்றையும் எடுத்தவள் கொஞ்சம் நேரத்தில் கீழே வர அவள் உள்ளே வரும்போது சூர்யா வீட்டில் இருந்தான் அவனை பார்த்த உடன் தேவாக்கு மீண்டும் பாட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. அவள் அவனை பார்த்து நடந்து வர தண்ணீரை கவனிக்காமல் கால் வைக்க அது வழுக்கி விட்டது .நல்லவேளையாக சூர்யா அவள் கையை பிடித்து நிறுத்தி விட்டான் .துணி மட்டும் கீழே விழுந்தது .அவளை சோபாவில் உட்கார வைதான் சூர்யா.
கால காட்டு வலிக்குதா உனக்கு என்று சூர்யா அவள் காலை தொட போக தேவா அவனை காலை தொட விடாமல் தடுத்தாள். அதை சூர்யா தவறாக புரிந்து கொண்டான் .அவளுக்கு தான் தொடுவதே பிடிக்கவில்லை என்று நினைத்தவன் எழுந்து ரூமூக்கு சென்று விட்டான்.சூர்யா சென்றதும் ஹாலுக்கு வந்தான் கிருஷ்ணா. அவனிடம் சொல்லி தண்ணியை துடைத்தவள் பிறகு அவனோடு சேர்ந்து துணி மடித்தாள் .சூர்யா இன்னும் வெளியே வராததை கவனிதவள் அவனுக்கு டீ எடுத்து கொண்டு ரூமிக்க்கு சென்றாள்.அவளுக்காக காத்து கொண்டிருந்ததவன் அவள் வந்ததும் ரூம் கதவை பூட்டினான் அதை பார்த்து தேவா பதட்டம் அடைந்தாள் .
அவள் பதட்டம் அடைந்தது சூர்யாக்கு புரிந்தது அவன் முன்பு டீ யை நீட்டினாள். சூர்யா அதை வாங்கி டேபிளில் வைத்தான் தேவா அந்த இடத்தைவிட்டு செல்ல போக அவளை தடுத்தது சூர்யா குரல் .
என்ன உன் பிரச்சினை. எதுக்கு என்ன பாத்து இவ்ளோ பதட்ட படுற .ஓகே நான் காலையில முத்தம் கொடுத்தது தப்புதான் ஆனா நான் தப்பான எண்ணத்துல குடுக்ககல .சந்தோசத்துல கொடுத்தேன். உனக்கு அது தப்பா தெரிஞ்சா நான் என்ன பண்ண முடியும். உனக்கு ஒரு விஷயம் பிடிக்கலன்னா அப்போவே என்கிட்ட வெளிப்படுத்திரு அதை ரொம்ப நேரம் உன்னோட மனசுல வச்சிருக்காத .கால்ல அடி பட்டுருக்கான்னு பாக்க உன் கால தொட்டா தட்டி விடற என்ன பாத்தா உனக்கு என்ன எப்படா வாய்ப்பு கிடைக்கும் பொண்ணுங்கள தொடலாம்னு நினைக்கிற பொறுக்கி மாதிரி இருக்கா என்ன என்று கேட்டான் சூர்யா .தேவா இல்லை என்பது போல தலை அசைத்தாள்.
அப்போ என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது உன்னோட புருஷன் மாதிரியா அதுக்கு வாய்ப்பில்லை நான் உனக்கு வில்லன் மாதிரிதான என்று சூர்யா கோபமாக பேசி கொண்டு இருக்க அவனுக்கு எப்படி புரிய வைக்க என்று புரியாமல் தேவா திணற அப்போதுதான் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சொன்ன அறிவுரை தேவா மனதில் விழுந்தது .வார்த்தைகளால் அல்ல செயல்களால் சொல்லுங்கள் என்று .
ஒருத்தன் பாக்க முரடன் மாதிரி இருந்தா அவன் கோபமா பேசுனா அவன் கெட்டவன்தான்ல .அவனுக்குள்ள ஒரு நல்ல மனசு இருக்காதுல்ல உன்ன சொல்லியும் தப்பு இல்ல எல்லாம் என்னோட தப்புதான் என்று சூர்யா இயலாமையில் சொல்ல தேவா தைரியத்தை வரவைத்தவள் அவன் கன்னத்தில் சட்டென்று முத்தம் கொடுத்து விட்டு ரூமை விட்டு வேகமாக சென்று விட்டாள் முத்தம் கொடுப்பதில் இருந்த தைரியம் அவனை பார்பதில் இல்லாமல் போனதால் தேவா சென்று விட்டாள். அவள் சென்ற பிறகு கட்டிலில் அமர்ந்தவன் முகத்தில் இயலாமை மறைந்து வெட்கப்புன்னகை தோன்றியது. கிச்சனில் தேவா புன்னகை செய்து கொண்திருந்தாள்.
அவர்கள் இருவரும் புன்னகை செய்ய உங்களிடமிருந்து அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுவது அபிராமி G.N
நடுநிசி எழுதுனதுனாலதான் இந்த கதை இத்தனை நாள் எழுத முடியல அதனால மன்னிச்சிக்கோங்க
மக்களே இனி சரியா கதை போடுறேன்.😁.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro