
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -18
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அவள் கன்னங்கள் கண் இமைகள் சிரிப்பும் கலந்து தந்தபோதே என்ன
ஓராயிரம் மின்னல்கள் என் மீது பாய்ந்து வந்ததென்ன
ஓ. ஏதோ காதல் என்னை செய்யும்பொழுதே
மெய்யும் பொய்யும் ரெண்டும் ஒன்றாய் படுதே
நெஞ்சுக்குள்ளே புது ராகம் போலே
என்றென்றும் உன்னை காதல் செய்யவா?
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தேவா அப்படியே நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை .எதுக்கு இவ்வளவு கோப பட்டான் என்றும் அவளுக்கு புரியவில்லை. இப்போது எதுக்கு அணைத்து கொண்டான் என்றும் அவளுக்கு புரியவில்லை. மொத்தத்தில் அவன் கையில் ஒரு பொம்மை போல நின்று கொண்டிருந்தாள் தேவா.
கொஞ்சம் நேரம் கழித்துதான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்த சூர்யா சட்டென்று அவளை விட்டு விலகி நின்றான் .
ஐ ஆம் சாரி நான் ஏதோ என்று சொன்னவன் அந்த இடத்தை விட்டு செல்ல போக அவன் கையை பிடித்து நிறுத்தியவள் அவன் கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்து விட்டாள் .
அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது அவன் அவள் முன்பு அழுதிருக்கிறான் என்பதை நினைக்கும்போது. சூர்யா பல நாள் தனிமையில் அழுதிருக்கிறான் சில நேரம் பிரசாத் முன்பு கூட வேதனையை சொல்லும்போது அழுதிருக்கிறான். ஏன் என்றால் பிரசாத் அவன் உயிர் நண்பன் .அதனால் அவன் முன்பு கண்ணீரை வெளிப்படுத்த ஒரு காரணம் இருக்கிறது .ஆனால் தேவா அவன் வாழ்வில் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அப்படி இருக்கும்போது அவள் மீது என்ன அப்படி ஒரு உணர்வு ஏன் அவள் முன்பு மட்டும் இப்படி உண்மை நிலைமையை மறைக்க முடியாமல் கண்ணீர் தானாக வருகிறது என்று குழம்பி போனான் சூர்யா.
தேவா அவன் கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்து விட்டவள் அவனை பார்த்து என்ன ஆனது என்று கண்ணால் கேட்டாள் .
இல்ல ஒண்ணும் ஆகல .நீ போ தூங்கு நான் ஏதோ தெரியாம என்று சொன்னவன் அவள் கையை எடுத்துவிட்டு சென்று விட்டான் .பிரஸ்சாகிவிட்டு வந்தவன் தேவா ரூமில் இல்லாததை பார்த்து ஆச்சர்யம் அடைந்தான்.வெளியே வந்தவன் கிச்சனில் லைட் எரிவதை பார்த்து அங்கே செல்ல தேவா தோசை சுட்டு கொண்டிருந்தாள்.
இன்னும் சாப்பிடாமல் என்ன செய்கிறாள் என்று குழப்பம் அடைந்தவன் அவள் அருகில் சென்றான் .
என்ன ஆச்சு ஏன் இன்னும் சாப்பிடாம இருக்க என்று கேட்டான் சூர்யா .
இடம் வலமாக தலை அசைத்தவள் அவனை நோக்கி கை நீட்டினாள் .
இப்போ நீ எனக்காக நீ தோசை பண்ணிட்டு இருக்கியா இது எல்லாம் தேவை இல்லாத வேலை போ போய் தூங்கு என்று சொன்னான் சூர்யா .
தேவா அவனை சாப்பிட சொல்லி சைகை செய்தாள் .
இங்க பாரு எனக்கு இப்படி பண்ணா எல்லாம் பிடிக்காது போ போய் தூங்கு என்று சொன்னான் சூர்யா .
தேவா அவன் சொல்வதெல்லாம் காதில் விழாதது போல தோசை எடுத்து தட்டில் வைத்து அவன் பக்கம் நீட்டினாள். சூர்யா அவளைதான் ஆச்சார்யமாக பார்த்தான்
நான்தான் எனக்கு வேண்டாம்னு சொல்றேன்ல என்று சொன்னான் சூர்யா .
இப்போதும் அவள் தட்டை கீழே வைக்கவில்லை
இங்க பாரு இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருக்காத எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது .போ போய் தூங்கு .உனக்கு தூக்கம் வரலன்னா மொத்த மாவையும் என்று அவன் பேசிக்கொண்டிருக்க அவன் பேசுவதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் தோசையை பிய்த்து அவன் வாயின் அருகே கொண்டு சென்றாள் தேவா அவள் அப்படி செய்வதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தான் சூர்யா .அவன் நினைத்து இருந்தால் அவள் கையை தட்டி விட்டிருக்க முடியும் ஆனால் அவனால் அப்படி எதுவும் செய்ய முடியவில்லை .அவன் அவளை பார்த்த படி நின்று கொண்டிருந்தான் .அவன் வாய்க்கு அருகே தோசையை கொண்டு சென்றவள் வாயை திறக்க சொல்லி சைகை செய்ய சூர்யா அவனையும் அறியாமல் வாயை திறந்தான் அவனுக்கு புன்னகை செய்த படி ஊட்டி விட்டாள் தேவா .
இரண்டு வாய் வாங்கியவன் அவள் கையை பிடித்து தடுத்தான் .தேவா என்ன என்பது போல பார்த்தாள்.
போதும் இதுக்கு மேல நான் சாப்பிடுக்கிறேன் என்று சொன்னவன் அவள் கையில் இருந்து தட்டை வாங்கினான் .
தேவா அவனை பார்த்து புன்னகை செய்தாள் .
இங்க பாரு நான் சாப்பிடுக்கிறேன் அதனால நீ போய் தூங்கு என்று சொன்னான் சூர்யா.தேவா சரி என்பது போல தலை அசைத்தாள் .
அவள் சென்றுவிட சூர்யா தட்டில் உள்ள தோசையை பார்த்த படி அப்படியே நின்று கொண்டிருந்தவன் பிறகு கிச்சன் மேடையில் அமர்ந்தான் .
அடடா என்ன ஆச்சு எனக்கு .டேய் சூர்யா நல்லாத்தான இருந்த இப்போ என்ன எல்லாம் புது பழக்கமா இருக்கு .ஏன் இந்த தோசை உனக்கு செஞ்சு சாப்பிட தெரியாதா .இல்ல தெரியாமதான் கேக்குறேன்
சாப்பிட வேண்டாம்ன்னு தான வந்த .அப்புறம் என்ன அவ கண்ண காட்டுன உடனே சாப்பிடுற. அது சரி என்ன கண்ணுடா அது பாத்தாலே என்னவோ பண்ணுது .அடடா என்ன இவ என்ன தனியா புலம்ப விட்டுட்டா .இத பத்தி பிரசாத்கிட்டதான் கேக்கணும் ஏனா அவன்தான் இதெல்லாம் பண்ணுவான்
என்று வாய்விட்டு பேசிய சூர்யா தோசை சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு வந்தான்.தேவா அவனுக்காக காதிருந்தவள் அவனை பார்த்து சிரித்தாள். கதவை பூட்டியவன் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான் .
என்ன எப்போவும் என்ன பாத்தா பயப்படுவ இப்போ என்ன பாத்தா சிரிக்கிற .உன்கிட்ட யாராவது இந்த மாதிரி பண்ண சொல்லி சொன்னங்களா என்ன என்று கேட்டான் சூர்யா .
அவனை தேவா பார்க்கவே இல்லை .
என்ன பாரு தேவா எதுக்கு தலை குனிஞ்சு இருக்க என்று கேட்டான் சூர்யா.
அவனை பார்த்தவள் கண்கள் ஒரு இடத்தில் நிலை கொள்ளவில்லை .அவனை பார்த்து தூக்கம் வருகிறது என்று சைகை செய்துவிட்டு சட்டென்று படுத்து விட்டாள்.அவள் அப்படி செய்ததும் சூர்யாக்கு சிரிப்புதான் வந்தது .அவளை பார்த்தவன் அவள் அருகில் படுத்து கொண்டான் .
அதே நேரம் இங்கே அமிர்தா பிரசாத் முன்பு அமர்ந்து பேசி கொண்டிருந்தாள் .அவள் பேசுவதை எல்லாம் கேட்டு பிரசாத் ஆச்சர்யத்தில் இருந்தான் .
அம்மு உண்மையாவே நீ அந்த பொண்ணுகிட்ட சூர்யா பார்த்து பயப்பட வேண்டாம்ன்னு சொன்னியா .அதோட அவன் அந்த பொண்ணுகிட்ட என்ன ஆனாலும் சூர்யா சொல்றத செய்ய வேண்டாம்ன்னு சொல்லிட்டியா என்று கேட்டான் பிரசாத் .
ம்ம்ம் ஆமா நான் இதைத்தான் சொன்ன .இத்தனை நாள் ஏதோ கல்யாணம் ஆகல சொந்த வீட்டுல 3 வது மனுஷன் மாதிரி இருந்தாரு ஓகே இப்போ கல்யாணம் ஆயிடுச்சு இனி அப்படியே இருக்கணும் அப்படின்னா அது எப்படி சரியாகும் .அதுவும் இல்லாம இந்த பொண்ணு எல்லாத்துக்கும் பயப்படுறா அதான் சூர்யா அண்ணா பாத்து பயப்பட கூடாது நீங்க கூட ஆரம்பத்துல கொஞ்சம் டெரர்றா இருந்திங்க அப்புறம்தான் மாறுனிங்கன்னு சொன்ன குழந்தை நம்பிட்டா .உங்கள வில்லன் ஆக்குனது என்ன மன்னிச்சிருங்க என்று சொன்னாள் அமிர்தா.
அதை விடு அம்மு ஒருவேளை நான் உண்மையாவே ரொம்ப கோபக்காரனா இல்ல உன்ன கொடுமை பண்ணுறவனா இருந்தா என்ன பண்ணி இருப்ப.என்று கேட்டான் பிரசாத் .
அச்சோ எனக்கு சிரிப்பு வருதுங்க .உங்களை எல்லாம் என்னால கோப படுற மாதிரி நினைச்சு கூட பாக்க முடியல.நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க .என்று சொன்னாள் அமிர்தா.
அம்மு ப்ளீஸ் சொல்லு அம்மு நான் ஒருவேளை குடிகாரனா உன்ன அடிக்குற ஒரு ஹஸ்பண்ட்டா இருந்தா என்ன பண்ணி இருப்ப என்று கேட்டான் பிரசாத்.
ம்ம்ம் என்ன அடிச்சிருந்திங்க திருப்பி ஒரு அடி கொடுத்துட்டு பிள்ளைய ஒழுங்கா வளர்க்கலன்னு அத்தை மாமாவை திட்டிட்டு போய்ட்டே இருந்துருப்பேன் அவ்ளோதான். என்று அலட்டி கொள்ளாமல் சொன்னாள் அமிர்தா.
அடிப்பாவி பேச்சுக்கு கூட என்ன திருத்தி என் கூட வாழ்வேன் அப்டின்னு உனக்கு சொல்ல தோணலையா என்று கேட்டான் பிரசாத்.
நான் ஏன் உங்கள திருத்தணும் பசங்கள திருத்ததான் பொண்ண பெக்குறாங்களா.குடிக்கிறது தப்பு அதுக்காக குடிக்கிறவங்க எல்லாம் தப்புன்னு சொல்ல மாட்டேன் .நான் சின்ன பொண்ணா இருக்குறப்போ சொந்தகாரங்க வீட்டுக்கு போனேன் அங்க ஒருத்தர் குடிச்சிட்டு வந்து அவங்க பொண்டாட்டியை போட்டு செம்ம அடி அடிச்சாங்க அவர் அடிச்சத்துல அதன் ஆன்டிக்கு செம்ம ரத்தம் அப்புறம் எல்லாரும் சேர்த்துதான் அவங்கள பிரிச்சு விட்டாங்க.சண்டை முடிஞ்சு போனதுக்கு அப்புறம் அடி வாங்குன ஆண்டியை விட்டு மிச்சம் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து என் புருஷன் திட்ட மட்டும்தான் செய்வாரு .என் புருஷன் குடிச்சிட்டு வந்தாலும் வீட்டுக்குள்ள மட்டும்தான் வச்சி அடிப்பாருன்னு அவங்க அவங்க திட்டு வாங்குரத்தையும் அடி வாங்குறதையும் பெருமையா பேச ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு அப்போ ஒண்ணுமே புரியல கொஞ்சம் வளந்ததுக்கு அப்புறம்தான் அது எவ்ளோ தப்புன்னு புரிஞ்சிச்சு .ஒரு குடும்பத்துல நிம்மதி போகவே குடிதான் முக்கிய காரணமா இருக்கு அப்படி இருக்கும்போது ஒரு குடிகாரனோட எல்லாம் நான் வாழ்ந்திருக்க மாட்டேன். (Me: குடி குடியை கெடுக்கும் மக்களே)ஆனால் கடவுள் என்ன பத்தி நல்லா புரிஞ்சிக்கிட்டு எனக்கு ஏத்த மாதிரி உங்கள கொடுத்துட்டாரு என்று சொன்னாள் அமிர்தா.
அவள் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தான் பிரசாத்.
என்னங்க ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க என்று கேட்டாள் அமிர்தா.
இல்ல அம்மு புருஷன் என்ன பண்ணாலும் பொறுத்துட்டு நரகத்தில வாழுற மாதிரி வாழ்ந்து குடும்பத்துல இருகவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்குறவங்கதான் நல்ல குடும்ப பொண்ணுன்னு சொல்லி சொல்லி நிறைய பொண்ணுங்களோட கனவு ஆசை எல்லாமே அடுபங்கரைக்குள்ள முடிஞ்சு போக வச்சிடறாங்கல்ல.என்று கேட்டான் பிரசாத் .
ஆமாங்க நீங்க சொல்றதும் உண்மைதான் .அடக்கமா இரு அடக்கமா இரு சொல்லியே பல வாழ்க்கை அடக்கமாகுற வரைக்கும் இல்லாம போயிடுது. கஷ்டம் என்னன்னா அது அவங்களுக்கு தெரியாம போயிடுது.ஒரு பொண்ண பெரும்பாலும் இந்த கிணத்துக்குள்ள தள்ளுறது இன்னொரு பொண்ணாதான் இருப்பாங்க .இதெல்லாம் மாற எவ்ளோ வருஷம் ஆகுமோ என்று மேலே பார்த்து சொன்னாள் அமிர்தா.
ஏன் அம்மு நான் எந்த விதத்திலயாவது உன்னோட ஆசைகளை நிறைவேத்த விடாம பண்ணி இருகேனா என்று தலை குனிந்தபடி கேட்டான் பிரசாத்.
அடடா சார் அந்த அளவுக்கு எல்லாம் சீன் இல்ல. நான் என்னோட வாழ்க்கை சந்தோசமா வாழுறேன். எனக்குன்னு எந்த கஷ்டமும் இல்ல வர்ற கஷ்டம் எல்லாம் நமக்குன்னுதான் வருது. குடும்பம்ன்னா
ஒருத்தர் மேல பாரத்த போட்டுட்டு மத்தவங்க சந்தோஷமாக இருக்குறது இல்ல .வர்ற கஷ்டத்தை பகிறந்துக்கிறது அதனால நான் சந்தோசமா இருக்கேன் .அதோட நாங்க எல்லாம் கோவை சரளா அக்கா ரசிகையாக்கும் ஓவரா எங்கள அதிகாரம் பண்ணா அடிதான் கிடைக்கும் .என்று கையை நீட்டி பலம் காட்டுவது போல சொன்னாள் அமிர்தா. அவளை பார்த்து சிரித்தான்.
சரி என்ன கொஞ்சம் அடியேன் உன்கிட்ட அடி வாங்க ஆசையா இருக்கு என்று சொன்னான் பிரசாத்
அடிதான இப்போ தர்றேன்.ஆனா கண்ண மூடுங்க என்று சொன்னாள் அமிர்தா.
அம்மு பாத்து அடி அம்மு என்று சொன்னவன் கண்ணை மூடி அவள் கரங்கள் பளார் என்று கொடுக்க போகும் அறையை வாங்க காத்திருந்தது.
ஆனால் அவள் கரங்கள் அவன் கன்னத்தை பதம் பார்ப்பதற்கு பதிலாக அவள் இதழ்கள்
மென்மையாக அவன் கன்னத்தை தொட்டு சென்றது .அடி கிடைக்க வேண்டிய இடத்தில் முத்தம் கிடைத்ததும் அலகாக புன்னகை செய்த பிரசாத் கண்ணை திறந்து பார்த்தான் .
என்ன அம்மு திடீர்னு என்று கேட்டான் பிரசாத்.
ம்ம்ம் தப்பு பண்ணாதான் கையால அடி இல்லன்னா என்று நிறுதின்னாள் அமிர்தா.
இல்லன்னா என்ன அம்மு என்று கேட்டவன் இன்னொரு கன்னத்தை காட்ட என்ன என்று பார்வையால் கேட்டாள் அமிர்தா.
இல்ல ஒரு கன்னத்தில என்ன கிடைக்கிதோ அது இன்னொரு கண்ணத்துலயும் வாங்கிக்கணும்னு சொல்வாங்க அதான்.என்று குறும்பு புன்னகையுடன் சொன்னான் பிரசாத்.
இப்போ உண்மையா அடி விழும் .நீங்க கொஞ்சம் சூர்யா அண்ணா தேவா பத்தி யோசிங்க.என்று அவள் சொல்ல விளையாட்டை ஓரம் கட்டி விட்டு மிகவும் பேச ஆரம்பித்தான் பிரசாத்.
அம்மு நம்ம அவங்கள சேர்த்து வைக்க ட்ரை பண்ணுறது எல்லாம் ஓகேதான் ஆனால் அவங்க ரெண்டு பேர் நிலைமை புரியாம நம்ம ஏதாவது பண்ணி அது அவங்களுக்கு பிரச்சனை ஆச்சு அப்பிடின்னா என்ன பண்ண என்று கேட்டான் பிரசாத்.
நம்ம கொளுத்தி மட்டும் போடுவோம் .பத்தி எரியுறதும் அப்படியே புகையிறதும் அவங்க இஷ்டம்.பேசாம உங்க பிரண்ட்க்கு ஒரு டெஸ்ட் வச்சி அதுல இருந்து அவர் தேறுவாரா இல்ல தேற மாட்டாறான்னு பாக்கலாம் எனக்கு தெரிஞ்சு உன்னோட பிரன்ட் நூறு மார்க் வாங்குவாரு என்றாள் அமிர்தா.
அப்படியா அப்படி என்ன டெஸ்ட் வைக்க போற என்று கேட்டான் பிரசாத் அம்மு அவனுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தாள்.
அவர்கள் இரவு அப்படியே சென்றது.
...
அடுத்த நாள் காலை 6 மணி அளவில் கண் விழித்த பூஜா அவள் ஆபிஸ் க்ரூப்பில் சத்யாக்கு விபத்து நடந்து விட்டது என்ற மெசேஜ் பார்த்து அதிர்ச்சி ஆனாள்
😁😁அதே அதிர்ச்சியுடன் உங்களிடம் இருந்து விடைபெறுவது அபிராமி G. N.அடுத்த பதிவில் சந்திப்போம்.அடுத்த பதிவு பெருசா போடுறேன் பா😁
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro