
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு-17
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உன் மார்போடு
சாயும் அந்த மயக்கம்
போதும் என் மனதோடு
சேர்த்து வைத்த வலிகள் தீரும்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அவள் எந்த அளவுக்கு அதிர்ச்சி ஆகி இருந்தாள் என்பதை பார்த்தவன் பேச ஆரம்பித்தான் .
ம்ம்ம் இல்ல நான் வேணும்னு பண்ணல தூக்கத்திலதான் உன்ன கட்டி பிடிச்சேன் .ஆனா தூக்கத்துல ஒரு பெண்ணுக்கும் தலைகாணிக்கும் வித்யாசம் தெரியாம இருக்குமா என்ன. அதுவும் எனக்கு எப்படி வித்தியாசம் தெரியாம இருந்துருக்கும்.அப்போ நான் வேணும்னுதான் பண்ணி இருக்கேன்னு.நான் வேணும்னு எதையும் பண்ணலங்கிறது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு நான் உன்ன தெரியாம கட்டி பிடிச்சேன்னும் எனக்கு தோணல.மொத்தத்துல எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு என்று சூர்யா சொல்ல தேவா சொன்ன உனக்கே ஒண்ணும் புரியல எனக்கு என்ன புரியும் என்பது போல பார்த்தாள் .அவள் பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரிந்தது
.
உனக்கு இப்போ நான் என்ன சொன்னன்னு புரியலதான என்று கேட்டான் சூர்யா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் தேவா .
ம்ம்ம் எது இருந்தாலும் உனக்கு நான் உன்ன தொட்டது பிடிக்கலதான என்று நேராக கேட்டான் சூர்யா. தேவாக்கு சட்டென்று பொய் வரவில்லை என்பதால் ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.
ம்ம்ம் அதான் சொல்றேன் நான் உன்ன தேவை இல்லாம கஷ்ட படுத்த விரும்பல நான் கீழ படுத்துக்கிறேன் என்று சொன்னான் சூர்யா .தேவாக்கு மறுத்து சொல்ல தோன்றவில்லை .
நான் கீழ படுத்துக்குறேன் என்று சொன்ன சூர்யா அவளிடம் இருந்து தலையணை வாங்க தேவா அவனைதான் புரியாமல் பார்த்தாள் அவளுக்கு சூர்யாவிடம் இருந்து தலையணையை மீண்டும் பெற வேண்டும் என்று கூட தோன்றவில்லை.
சூர்யா திரும்ப அப்போது எங்கோ யாரோ சந்தோஷத்தில் எ பட்டாசு வெடிக்க அமைதியான இடத்தில் திடீரென சத்தம் கேட்டதும் பயந்த தேவா அவனை பின்னால் இருந்து அணைத்து கொள்ள இப்போது சூர்யாவின் இதய துடிப்பு அதிகம் ஆனது.தேவாவின் இதயம் பட்டாசு சத்தம் கேட்டதால் வேகமாக துடித்தது.. சூர்யாக்கு அவள் கை பட்டதால் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவள் இவ்வளவு நெருக்கமாக இருப்பது அவனுக்குள் ஏதோ ஒரு எண்ணத்தை உருவாக்கியது.அவனுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளவே சில நொடி பிடித்தது. தேவா சூர்யாவை அணைத்திருப்பதை உணர்ந்தவள் வேகமாக அவனை விட்டு விலக சூர்யா அவளை திரும்பி பார்த்தான்.
தேவா பயத்தில் கண்ணை கூட திறக்காமல் அப்படியே இருந்தாள். அவள் எந்த அளவுக்கு பயத்தில் இருக்கிறாள் என்று சூர்யாக்கு நன்றாக புரிந்தது.
அவன் தேவாவின் பயத்தை போக்கும் பொருட்டு மிகவும் பொறுமையாக பேச ஆரம்பித்தான்.
தேவா நீ எதுக்கு இந்த சத்தத்துக்கு எல்லாம் பயப்படுற நான்தான் உன்கூட இருக்கேன்ல அப்புறம் எதுக்கு தேவை இல்லாம நீ பயப்படுற(me: ஆஹான்).எல்லாத்துக்கும் பயப்பட கூடாது தேவா?சரி முதல்ல உன்னோட கண்ணை திறந்து பாரு நான் உன்கூட தான இருக்கேன். கண்ணை திற என்று சூர்யா சொல்ல தேவா அவன் இந்த அளவுக்கு கனிவாக பேசுவதை கேட்டு ஆச்சர்யம் அடைந்தவள் மெல்ல கண்ணை திறந்து பார்க்க அப்போது மீண்டும் அந்த யாரோ(me :அந்த யாரோ நம்மதான் அப்டிங்கிற உண்மைய யாரு கேட்டாலும் சொல்ல கூடாது மக்களே 😂)சரவெடி வெடிக்க தேவாக்கு அந்த சத்தம் மிகவும் பயத்தை கொடுத்தது .அவளுக்கு தைரியம் சொல்லி கொண்டிருந்தவனிடமே தைரியம் தேடி தஞ்சம் புகுந்தாள் தேவா .சூர்யாக்கு அவள் அப்படி செய்வது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.ஆனாலும் தன்னிடம் அவள் பாதுகாப்பாக உணர்கிறாள் என்று நினைக்கும் போது மகிச்சியாக இருந்தது(me:ரொம்ப குஷியோ) அதனால் அவளுக்கு தான் என்றும் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்த நினைத்தவன் அவளை தானும் அணைத்து கொண்டான் அதே நேரம் அவனுக்கும் அவளை விலக்க கூட தோன்றவில்லை. சரவெடி சத்தம் முடிந்தது .முடிந்த பிறகும் இருவரும் அப்படியேதான் இருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து இருவரும் விலகி நின்றார்கள் .தேவாக்கு சூர்யாவை பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது அவள் தலை குனிந்து இருந்தாள் சூர்யா பேச ஆரம்பித்தான்.
தேவா எதுக்கு இப்போ நீ தலை குனிஞ்சு இருக்க .நிமந்து என்ன கொஞ்சம் பாரு என்று சொன்னான் சூர்யா.தேவா மெல்ல தலை நிமிர்ந்து பார்த்தாள்.
நீ பயந்துதான் அப்படி பண்ண அது எனக்கு நல்லா இருந்துச்சு ச்சே நல்லா புரியுது. நீ தேவை இல்லாம எதையும் யோசிச்சு குழப்பிக்காத போ
போய் தூங்கு என்று சொன்னான் சூர்யா .தேவா நகராமல் நிற்க அவளை பார்த்து என்ன என்று கேட்க தேவா அவனையும் மேலே படுத்து கொள்ள சொல்லி கண்களால் சைகை செய்ய சூர்யாவால் அவளை மறுத்து பேச முடியவில்லை.தேவா அவள் இடத்தில் படுத்துக்கொள்ள சூர்யா அவன் இடத்தில் படுத்து கொண்டான் .தேவாக்கும் சூர்யாக்கும் நீண்ட நேரம் உறக்கம் வரவில்லை.இருவரும் நீண்ட நேரம் அவர்கள் உறவை பற்றித்தான் யோசித்து கொண்டிருந்தார்கள்.பிறகு கொஞ்சம் நேரம் கழித்து இருவரும் உறங்கி விட்டார்கள்.
அந்த நாள் தேவாக்கு நன்றாகதான் சென்றது ஆனால் சூர்யாக்கு அவ்வளவு நன்றாக செல்லவில்லை. மாலை 4மணிக்குerபள்ளிக்கு சென்ற குழந்தை வீட்டுக்கு வரவில்லை என்று பெற்றோர் போன் செய்து இருந்தார்கள். சூர்யா ஸ்கூலுக்கு சென்று விசாரிக்க குழந்தை வரவில்லை என்று எல்லோரும் சாதிக்க ஆரம்பித்தார்கள்.வெளியே குழந்தையின் சொந்தகாரர்கள் எல்லாம் குழந்தை எங்கே என்று தகராறு செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை சமாளிக்க சொல்லியவன்.குழந்தை ஸ்கூலில் இருக்கிறாளா என்று தேட சொன்னான் .வழக்கம் போல cctv வேலை செய்யவில்லை.
சூர்யா அட்டென்டன்ஸ் வாங்கி பார்த்தான் அது ப்ரெசென்ட் என்று போட்டு இருந்தது அப்சென்ட் என்று மாற்றப்பட்டு இருந்தது.அதை பார்த்த உடன் அவனுக்கு சந்தேகம் வந்தது.அதனால் சூர்யா பெற்றோரை ஒரு ஓரமாக நிற்க வைத்துவிட்டு வகுப்பு ஆசிரியரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தான்.
உங்க பேர் என்ன என்று கேட்டான் சூர்யா.
அஞ்சலி சார்.
அஞ்சலி குழந்தை வந்துச்சுன்னு பெத்தவங்க சொல்றாங்க. குழந்தை வரலன்னு நீங்க சொல்றிங்க.6 வயசு குழந்தை கட் அடிச்சிட்டு எங்கேயும் போகாது .குழந்தை வரலன்னு நீங்க பொய் சொல்றிங்கன்னு எனக்கு நல்லா தெரியுது குழந்தை எங்க. குழந்தையை என்ன பண்ணீங்க என்று கேட்டான் சூர்யா.
என்ன சார் பேசுறீங்க. நான் ஒரு டீச்சர் எதுக்கு என்ன ஒரு குற்றவாளி மாதிரி விசாரணை பண்ணுறீங்க. உங்களுக்கு சந்தேகம் இருக்குன்னா நீங்க அதுக்கு ஏத்த மாதிரி கேள்வி கேளுங்க அதை விட்டுட்டு இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க என்று சொன்னவள் குரலில் தடுமாற்றம் தெரிந்தது. அதை சூர்யா கண்டுபிடிக்கவே செய்தான்
தேவை இல்லாம பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. குழந்தை எங்க. டீச்சர் தான நீங்க பொய் சொல்ல கூடாதுன்னு குழந்தைக்கு சொல்லி தர வேண்டிய நீங்களே இப்படி பொய் சொல்லலாமா. குழந்தை எங்க. என்று கேட்டான் சூர்யா.
நான்தான் சொல்றேன் எனக்கு தெரியாதுன்னு அப்புறம் எதுக்கு என்கிட்ட திரும்ப திரும்ப கேக்குறீங்க.எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க ஏன் என்ன மட்டும் கேள்வி கேக்குறீங்க வேற யாரையாவது கேளுங்க என்று சொன்னாள் அஞ்சலி.
ஏய் நானும் பொறுமையா பேசிட்டே இருக்கேன். நீயும் ஓவரா நடிக்குற. நான் என்ன படம் பாக்கவா இங்க வந்தேன். இப்படி கேட்டா நீ சொல்ல மாட்ட லக்ஸ்மி அக்கா இந்த பொண்ணுதான் ஏதோ பண்ணி இருக்கா நீங்க கேக்குற விதத்துல அவ பதில் சொல்லணும் என்று சொன்னவன் திரும்ப போக அப்போதுதான் அஞ்சலி கண்கள் கப்போர்ட் பக்கம் செல்வதை பார்த்தான். அவள் அங்கு பார்ப்பதை பார்த்தவன் மனம் ஏனோ நெருட வேகமாக சென்று அந்த கதவை திறந்து பார்க்க நிறைய புக் இருந்தது புக் எல்லாம் எடுத்து பார்க்க குழந்தையின் ஐடி கார்ட் மற்றும் ஒரு செருப்பு இருந்தது.
அதை எடுத்து பார்த்தவனுக்கு அது காணாமல் போன குழந்தையின் ஐடி என்பது புரிந்தது. அவன் கையில் எடுத்த செருப்பை பார்த்த பெற்றோர் ஓடி வந்தார்கள்.
சார் இது எங்களோட குழந்தை ஸ்ரீ செருப்பு என்று கதறினார்கள். அந்த குழந்தையின் அம்மா அஞ்சலி காலில் விழுந்து விட்டார்.
எம்மா எங்களுக்கு ஒரே பிள்ளைம்மா அவ இல்லைன்னா எங்களுக்கு ஒண்ணுமே இல்லை எங்க குழந்தை எங்கம்மா சொல்லும்மா என்று கதறி அழுதார். அந்த அம்மாவை குழந்தை அப்பா எழுப்பி விட்டார்.
அஞ்சலி அழ ஆரம்பித்து விட்டாள்.சூர்யாக்கு 100% உறுதியானது அவள்தான் அந்த குழந்தையை ஏதோ செய்து இருக்கிறாள் என்று.
குழந்தை என்ன பண்ணன்னு கூட அப்புறம் சொல்லு இப்போ குழந்தை எங்க இருக்குன்னு சொல்லு என்று கேட்டான் சூர்யா.
அஞ்சலி எதுவும் சொல்லாமல் இருக்க அப்போது அங்கே பெருக்கும் வேலை செய்யும் பெண் ஏதோ சொல்ல வந்ததாக கான்ஸ்டபிள் சொன்னார். அவர் வந்ததும் சூர்யா அவர் அருகில் சென்றான்.
என்ன சொல்லணும்ன்னு சொல்லுங்க என்று கேட்டான் சூர்யா.
சார் இண்ணைக்கு இந்த பொண்ணு சின்ன ஸ்கூல் விட்டதுக்கு அப்பறம் பழைய புக் பேப்பர் இருக்குற ரூம் பக்கம் போய்ட்டு வந்துச்சு சார். என்னம்மா அந்த ரூம்ல உனக்கு வேலை இல்லையே அப்பறம் ஏன் போனேனு கேட்டேன். அப்போ என்கிட்ட சும்மாதான் போய்ட்டு வந்தேன்னு சொல்லிட்டு இந்த பொண்ணு விட்டா போதும்ன்னு போச்சு. பழைய பேப்பர் இருக்குற ரூம்லதான் என்னவோ இருக்கும்ன்னு தோணுது என்று சொன்னார் அந்த பெண்மணி. அஞ்சலி அந்த இடத்தை விட்டு ஓட முயற்சி செய்ய அந்த பெண்ணை பிடித்து தடுத்து நிறுத்தினார்கள் பெண் காவலர்கள். அந்த பெண் சொன்னதை கேட்ட சூர்யா அந்த அறை எங்கே என்று கேட்டுவிட்டு வேகமாக ஓடினான். கதவு பூட்டப்பட்டு இருந்தது. சாவி கேட்க நேரம் இல்லை என்பதால் அந்த கதவை உடைத்து திறந்தவன் அங்கே நடுவில் குமித்து வைத்திருக்கும் பேப்பரை பார்த்தான். வேகமாக சென்றவன் அந்த பேப்பரை தூக்க அங்கே குழந்தை பேச்சு மூச்சில்லாமல் கிடந்தது. சூர்யா வேகமாக குழந்தையை தூக்கியவன் முதலில் குழந்தையை வெளியே தூக்கி வந்தான். குழந்தை அந்த நிலைமையில் பார்த்ததும் குழந்தையின் அம்மா மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.சூர்யா குழந்தையை தட்டி பார்த்தான். மூச்சு கொடுத்து பார்த்தான் அப்போதும் குழந்தை எழுந்திருக்கவில்லை. எனவே நொடி கூட தாமதம் செய்யாமல் குழந்தை எடுத்து கொண்டு ஹாஸ்பிடல் சென்றார்கள். குழந்தையின் பெற்றோர் வந்து சேர்ந்தார்கள்.
குழந்தைக்கு எதுவும் இல்லை என்று டாக்டர் சொல்ல வேண்டும் என்று காத்து கொண்டு இருந்தார்கள் எல்லோரும். சூர்யா வெளியில் சாதாரணமாக இருந்தாலும் உள்ளுக்குள் அவனுக்கும் பதட்டமாகதான் இருந்தது.
அரை மணிநேரம் கழித்து டாக்டர் ட்ரீட்மென்ட் முடித்து வெளியே வந்தார்.
சூர்யாதான் முதலில் சென்றான்.குழந்தையின் பெற்றோர் உயிரை கையில் வைத்து கொண்டு இருந்தார்கள்.
குழந்தை நல்லா இருக்கு என்று சொன்னார் டாக்டர் அதை கேட்ட பிறகுதான் அங்கிருந்தவர்களுக்கு உயிரே வந்தது.அந்த குழந்தை உயிருக்கு போராடிய அரை மணிநேரத்தில் அந்த ஹாஸ்பிடலில் உள்ளவர்கள் எல்லாம் அந்த குழந்தைக்காக பிரார்த்தனை செய்தார்கள்.குழந்தை நன்றாக உள்ளது என்று தெரிந்ததும் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்
ரொம்ப நன்றி டாக்டர் என்று சொன்னார்கள் பெற்றோர் இருவரும்.
குழந்தை 5 நிமிஷம் கழிச்சு கூட்டிட்டு வந்துருந்தா நிச்சயம் குழந்தைய காப்பாத்தி இருக்க முடியாது. இவருக்கு நன்றி சொல்லுங்க. அப்புறம் குழந்தைய அரை மணிநேரம் கழிச்சு பாருங்க உங்க குழந்தைக்கு இனி ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொன்ன டாக்டர் செல்ல. ஸ்ரீயின் பெற்றோர் வந்தார்கள்.
நல்லா இருப்பப்பா தம்பி நீ.எங்களுக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் கழிச்சு கிடைச்ச பொக்கிஷம்ப்பா எங்க ஸ்ரீ. அவள ஒரு நாள்ல பறிகொடுக்குற மாதிரி ஒரு சூழ்நிலை வந்துடுச்சி. அவளுக்கு எதாவது ஆயிருந்தா சத்தியமா சொல்றேன் நானும் அவரும் நிச்சயம் உயிரோட இருந்துருக்க மாட்டோம் என்று நீ மூணு உயிர காப்பாத்தி இருக்கப்பா. இதுக்கு பாரு நீ குழந்தை குடும்பம்ன்னு ரொம்ப சந்தோசமா இருப்ப. நீ ரொம்ப நல்லா இருப்ப என்று சொன்னார் அந்த தாய்.
ரொம்ப நன்றி சார் நீங்க காப்பாத்தி குடுத்தது என்னோட குழந்தை இல்லை சார் என்னோட அம்மா. உங்கள மாதிரி ஒரு பிள்ளைய பெத்த உங்க அம்மா அப்பா ரொம்ப நல்லா இருக்கணும் என்று சொன்னார் ஸ்ரீயின் அப்பா.
நான் என்னோட கடமைய செஞ்சேன் அவ்ளோதான். குழந்தை கண்ணு முழிச்சா சாதாரணமா பேசுங்க தேவை இல்லாம அழாதீங்க. குழந்தை பயந்துடுவா. கான்ஸ்டபில் இருப்பாங்க
நீங்க பாத்துக்கோங்க என்று சொன்னவன் ஸ்டேஷன்க்கு சென்றான்.
என்ன சொல்றாங்க அஞ்சலி மேடம் என்று கேட்டான் சூர்யா.
சார் குழந்தை இவங்க கிளாஸ்ல பேசிட்டே இருந்துருக்கு. அதனால கோபத்துல அடிச்சிருக்காங்க. குழந்தை மயக்கம் போட்டு விழுந்துருக்கு. குழந்தையை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் சொல்லிட்டு. குழந்தைக்கு மூச்சு இருக்கான்னு கூட பாக்காம செத்துட்டதா நினைச்சு மறைக்க நினைத்து பழைய பேப்பர் இருக்குற ரூம்ல போட்ருக்காங்க ஸ்கூல் விட்டு எல்லோரும் போனதுக்கு பிறகு மறுபடியும் நைட் வந்து எங்கேயாவது போடுறலாம்ன்னு நினைச்சிருக்காங்க. ஆனால் அவங்க இந்த அளவுக்கு பெரிய பிரச்சனை ஆகும்ன்னு நினைக்கல போல என்று சொன்னார் கான்ஸ்டபில்.(me; உண்மை சம்பவம் வச்சி எழுதினேன்50 % உண்மை நிஜத்துல குழந்தை இறந்துடுச்சு💔)
அவன் அஞ்சலி பக்கம் திரும்பினான்.அவள் அழுது கொண்டிருந்தாள்.அவள் முன்பு சென்று நின்றான்.
குழந்தை எப்படி இருக்கா என்று கேட்டாள் அஞ்சலி.
நல்லா இருக்கா என்றான் சூர்யா.அதை கேட்ட பிறகுதான் நிம்மதியானது அந்த பெண்ணுக்கு.
நான் தப்பு பண்ணிட்டேன் சார். வீட்ல பிரச்சனை அந்த டென்ஷன்ல குழந்தை அடிச்சு குழந்தை மயக்கம் போட்டு விழுந்ததும் ரொம்ப பயந்துட்டேன். மூச்சு கூட செக் பண்ணல பதட்டத்துல அப்படி எல்லாம் பண்ணிட்டேன். நான் வேணும்ன்னு பண்ணல. என்ன தண்டனை கொடுத்தாலும் நான் அதை ஏத்துக்கிறேன் என்று அழுதாள் அஞ்சலி.
அவளை பார்த்தவன் ஏட்டை அழைத்து பேசிவிட்டு ஸ்டேஷன் விட்டு சென்று விட்டான்.
மீண்டும் ஹாஸ்பிடல் சென்றவன் முழித்திருந்த குழந்தையை பார்த்து பேசினான் குழந்தை ஸ்ரீ அவள் அம்மா அருகில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள். அவள் சந்தோசமாக இருப்பதை பார்த்தவன் மகிழ்ச்சி அடைந்தான். பிறகு கொஞ்சம் நேரம் பேசிவிட்டு வெளியே வந்தான்.அப்போது ஸ்ரீயின் அப்பா அவனை அழைத்து பேசினான்
மறுபடியும் ரொம்ப நன்றி சார். நீங்க மட்டும் இல்லைன்னா எங்க பிள்ளை எங்ககிட்ட இல்லை எங்க உலகமே அவதான். என் பொண்ணுக்கு சின்ன அடி பட்டா கூட என் பொண்டாட்டி தாங்க மாட்டா அழுதுருவா அப்படி இருக்குறப்போ என் பொண்ணுக்கு இப்படி ஆனதும் உடைஞ்சிட்டா அம்மா விட பிள்ளை மேல யாரு சார் அதிகம் பாசம் வைக்க முடியும்.அப்படி இருக்குறப்போ ஒரு அம்மாக்கு குழந்தையை திரும்ப கொடுத்துருக்கிங்க ரொம்ப நன்றி சார். உங்க அம்மா ரொம்ப நல்லா இருப்பாங்க என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்ல சூர்யாக்கு என்ன சொல்ல என்றே தெரியல. அவன் குழந்தை பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டான். வீட்டுக்கு வரும்போது மணி பத்தை கடந்தது அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் ரூமுக்கு வர தேவா ரூமில் இல்லை. கிருஷ்ணா மற்றும் செல்வம் உறங்கி விட்டார்கள்.
ரூமுக்கு வந்த சூர்யாக்கு குழந்தையின் அப்பா சொல்லிய வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருந்தது.
எல்லா அம்மாவும் அப்படி பாசம் காட்ட மாட்டாங்க. எல்லா அம்மாவும் சின்ன அடி பட்டா கூட துடிச்சு போக மாட்டாங்க. எனக்கு அப்படி ஒரு அம்மா இல்லை அம்மா இல்லை என்று புலம்பியவனுக்கு கோபம் மற்றும் இயலாமை வர அங்கிருந்த சுவற்றில் வேகமாக குத்தினான். அப்போதுதான் கிட்சனில் இருந்து வந்த தேவா அதை கவனித்து விட்டாள்அவனை பார்த்து அதிர்ந்து நின்றவள். அவன் மீண்டும் குத்த போக அவள் வேகமாக ஓடி வந்து அவன் கையை பிடித்து தடுத்து விட்டாள். அவள் முகத்தில் வேதனை இருந்தது. அவன் மணிகட்டு சிவந்து இருந்தது அவள் அதை பார்த்து வருத்தபட்டு அவனை பார்க்க அவனும் அவளைதான் பார்த்தான்.
சின்ன வலின்னா கூட துடிச்சு போயிடுவா என்று அந்த குழந்தையின் அப்பா சொன்னது கேட்டது அவன் முகத்தில் இருந்த கோபம் இப்போது இல்லாமல் போனது.
தேவாவை பார்த்தான். அவளும் அவனைதான் பார்த்தாள்.
என் கையில பட்ட சின்ன அடிக்குதான் நீ இந்த அளவுக்கு பதட்ட படுறியா என்று கேட்டான் சூர்யா.
ஏற்கனவே தூங்காமல் இருந்ததுக்கே அவன் திட்டியது நினைவுக்கு வந்தது இருந்தாலும் அவனிடம் உண்மையை மறைக்க அவள் விருப்பம் கொள்ளவில்லை. ஆமாம் என்பது போல தலை அசைக்க அவளை ஒரு நொடி பார்த்தவன் மறுநொடி எதுவும் சொல்லாமல் அணைத்து கொண்டான்.
வார்த்தைகள் இல்லை ஆனால் மௌனத்தில் அதிகம் பேசினார்கள்
அடுத்த பதிவில் சந்திப்போம் மக்கேளே அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது Abirami G.N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro