Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -16

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

பூஜா மற்றும் சத்யா இருவரும் எதிரெதிர் பக்கம் அமர்ந்திருந்தார்கள் .சத்யா பதட்டமாக இருந்தான்  பூஜா கோபமாக இருந்தாள் .அவர்கள் இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்க அவர்கள் நடுவில் பிளாக் பாரஸ்ட் கேக் என்னை இப்போது சாப்பிடுவீர்களா இல்லையா என்பது போல காத்திருந்தது .அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்த மௌனத்தை  கலைத்து முதலில் சத்யாதான் பேசினான் .

பூஜா நான் பேசுற விஷயத்தை  நீங்க கொஞ்சம் கூட கோப படாம பொறுமையா கேக்கணும் என்று சொன்னான் சத்யா .கண்ணில் மொத்த கோபத்தையும் காண்பித்து  விட்டு அவனை பார்த்து  புன்னகை செய்தாள்  பூஜா .

பொறுமையா இருக்குறதுனால மட்டும்தான் உங்க முன்ன நான் இப்போ இருக்கேன் மிஸ்டர் சத்யா .
இல்லன்னா எப்போவோ எழுந்து போயிருப்பேன் .நீங்க என்ன சொல்ல வந்திங்களோ அதை சொல்லி முடிங்க நான் கிளம்பனும் என்று சத்தமாக பேசவில்லை என்றாலும் தான் பேசும் விதத்தில் தன்னுடைய கடுமையை காட்டின்னாள் பூஜா .

ஏங்க எப்போ பாத்தாலும் கோபமாவே இருக்கீங்க கொஞ்சம் சிரிச்சா நல்லா இருக்கும்ல என்று லேசாக புன்னகை செய்தபடி சொன்னான் சத்யா .

அவனை ஒரு ரியாக்சனும் இல்லாமல் பார்த்தாள் பூஜா .

சரிங்க உங்களுக்கு பிடிக்கலன்னா சிரிக்க வேண்டாம் .உங்களுக்கு நல்லா தெரியும் நான் உங்களை எந்த அளவுக்கு லவ் பண்ணுறேன்னு .ஆனா ஏங்க என்ன இந்த அளவுக்கு வெறுகுறிங்க .நான் ஏதாவது மாத்திக்கிட்டா உங்களுக்கு என்ன பிடிக்குமா நான்   நிச்சயம் மாத்திக்கிறேன் .நான் உங்களை நல்லா பாதுப்பேன் எங்க வீட்ல கூட உங்களை நல்லா பாத்துப்பாங்க. இந்த வேலை எல்லாம் நான் சும்மா பண்ணனும்னு பண்ணுறேன் .நீங்க என்ன கல்யாணமே பண்ணா வசதியா வாழலாம் என்று சொன்னான் சத்யா .

ம்ம் பேசிட்டிங்களா இப்போ நான் கிளம்பவா என்று கேட்டாள் பூஜா .

அட என்னங்க நீங்க நான் சொன்னதுக்கு பதில் சொல்லவே இல்லையே என்று கேட்டான் சத்யா .

நான் எப்போவும் சொல்லுற பதில்தான் இப்போவும் எனக்கு உங்களை லவ் பண்ணுற எண்ணமே இல்ல என்று சொன்னாள் பூஜா .

என்னங்க உங்க பிரச்சனை நான் நல்ல பையன் தான.எனக்கு என்ன குறைங்க ஒருவேளை ஜாதி பிரச்சனையா என்று கேட்டான் சத்யா .

அச்சச்சோ என்னங்க நீங்க .காதல் பிரச்னையே என்னால தாங்க முடியல இதுல உங்க பக்கத்துல இருந்து ஜாதி பிரச்சனை வேறயா .போதும் பா எனக்கு ஒரு பிரச்சனை போதும் என்று சொன்னாள் பூஜா .

என்னோட காதல் உங்களுக்கு பிரச்சனையா இருக்கா என்று வேதனை மற்றும் இயலாமையுடன் கேட்டான் சத்யா .

ஓ !உங்களுக்கு அது இப்போ வரைக்கும் புரியலயா .சிக்கன் பிரியாணி எவ்ளோ நல்லா இருந்தா என்ன வெஜிடேறியன் சாப்பிடறவங்ககிட்ட அதை சாப்பிட குடுத்தா அவங்க முகம் சுளிக்கதான் செய்வாங்க அதை மாதிரிதான் நீங்க என்னதான் நல்லவரா இருந்தாலும் உங்களுக்கு என்ன பிடிச்சாலும் என்னால உங்களை என்னோட காதலர் அப்படிகுற இடத்துல வச்சி பாக்க முடியல .என்று நேராக பேசினாள் பூஜா அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்யாவின் பூ போன்ற இதயத்தை புண் படுத்தியது .அவன் வேதனை அவன் கண்களில் தெரிந்தது விட்டால் அழுது விடுவான் என்பது போல அமர்ந்து இருந்தான் .அதை பூஜாவும் உணரவே செய்தாள் ஆனாலும் அவள் கொஞ்சம் கூட இறங்கி வரவில்லை.

இங்க பாருங்க சத்யா உங்களுக்கு எந்த அளவுக்கு கஷ்டமா இருக்கோ அதே அளவுக்கு ஒவ்வொரு முறை நீங்க என்கிட்ட லவ் பண்ணுறேன்னு சொல்லி பேசுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொன்னாள் பூஜா .

என்மேல காதல் இல்லன்னு சொல்றிங்க அப்புறம் எதுக்கு எனக்காக நீங்க வருத்தபடுறீங்க என்று கேட்டான் சத்யா .

இரக்கப்பட காதல் எதுக்குங்க குறைந்தபட்ச மனிதாபிமானம் இருந்தா போதும்.எனக்கு இருக்க மனிதாபிமானம் உங்களை பார்த்து  பாவப்பட மட்டும்தான் வைக்கும் உங்கள காதலிக்க வைக்காது சொன்னாள்   பூஜா .

இவ்ளோ வெளிப்படையா பேசுறது எனக்கு ஒரு பக்கம் கஷ்டமா இருக்கு ஆனா அதே நேரம் இன்னொரு பக்கம் எனக்கு சந்தோசமா இருக்கு நீங்க என்ன பண்ணாலும் என்னால உங்களை வெறுக்க முடியலங்க உங்களை நான் அந்த அளவுக்கு விரும்புறேன் .ஏங்க எப்படியும் ஒருநாள் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கதான போறீங்க என்ன பண்ணிக்கோங்க என்கிட்ட உங்களை நீங்க எதிர்பாக்குறதை விட நலலா வச்சி பாத்துக்க வசதி இருக்கு என்று சொன்னான் சத்யா .

இப்போ நான் உங்களை காதலிக்கணுமா இல்ல உங்க வசதியை காதலிக்கணுமா. வசதி வச்சிதான் கல்யாணம் பண்ணணும் அப்படின்னா நான் காலேஜ் படிக்குறபோவே கல்யாணமே பண்ணி இருக்கணும் .என்ன பாத்தா பணம் அப்டின்னு சொன்ன உடனே பல்லை இழிச்சுட்டு கல்யாணத்துக்கு ஓகே சொல்றமாதிரி இருக்கா என்ன என்று பூஜா கோபத்துடன் கேட்க. சத்யாக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை .சில நொடி மௌனமாக இருந்தவன் பிறகு பேச ஆரம்பித்தான் .

சரிங்க உங்களுக்கு என்ன பிடிக்கல அப்படித்தான என்ன அண்ணானு கூப்பிடுங்க நான் ஒத்துக்குறேன் உங்களுக்கு என்ன பிடிக்கலன்னு இப்போ என்ன அண்ணானு கூப்பிடுங்க என்று கேட்டான் சத்யா .

இப்போ நான் உங்களை அண்ணானு கூப்பிட்டா அடுத்த செகண்ட் நீங்க எனக்கு அண்ணா ஆயிடுவிங்களா என்ன .ஏங்க தேவை இல்லாம அண்ணா தங்கச்சி உறவை அசிங்க படுத்திறிங்க .உங்ககிட்ட நான் சொல்ல நினைக்குறது ஒரே ஒரு விஷயம்தான்.நீங்க எனக்கு அண்ணா இல்ல .லவ்வர் இல்ல ஏன் எனக்கு பிரண்ட் கூட இல்ல.எனக்கு தெரிஞ்சவர் ஒரே இடத்துல வேலை செய்யுறோம் அவ்ளோதான் இப்போ கூட அந்த மரியாதைக்குதான் பேசுறேன் .உங்களுக்கு யாரைப்பிடிக்குதோ அவங்களை காதலிக்க உங்களுக்கு உரிமை இருக்கு அதே மாதிரி வேண்டாம்னு சொல்ல எனக்கு உரிமை இருக்கு .நான் பேசுன வார்த்தைகள் உங்கள காயப்படுத்தி இருக்கும் ஆனா இதான் உண்மை இந்த உண்மை எப்போவும் மாறாது .என்ன தப்பா எடுத்துக்காதீங்க அவ்ளோதான் என்னால சொல்ல முடியும் என்று சொன்ன பூஜா கேக் சாப்பிட ஆரம்பிக்க அதற்கு மேல் அவளிடம் என்ன சொல்ல என்று தெரியாமல் சத்யா அமைதியாக அமர்ந்திருந்தான் .  கேக் சாப்பிட்டவள் அதற்கு மட்டும் காசு கொடுத்துவிட்டு சென்று விட்டாள்.சத்யா பூஜா  தன்னை அவளுக்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லியதை கேட்டு மிகவும் வேதனையுடன் அமர்ந்திருந்தான் அவனுக்கு கண்ணில் இருந்து அவன் வேதனையின் வெளிப்பாடாக கண்ணீர் வைத்து .தெருவில் நடக்க ஆரம்பித்த பூஜாக்கு சத்யாவை  கஷ்ட படுத்தி விட்டோம் என்று வருத்தமாக இருந்தது .ஆனால் அவன் மகிழ்ச்சிக்காக தன்னுடைய மனதில் இல்லாத ஒரு காதலை இருக்கிறது என்று சொல்ல அவளுக்கு மனம் இல்லை .இதற்கெல்லாம் காரணமான அவள் தோழியை திட்டி அவள் மனதில் இருக்கும் கோபத்தை குறைத்து கொள்ள முடிவு செய்தாள் பூஜா.

பூஜா நிலைமை இப்படி இருக்க  இங்கே சூர்யா மற்றும் தேவாவை பார்ப்போம் .சூர்யா அப்போதுதான் பேசிவிட்டு ரூமுக்கு வந்தான் தேவா அவன் வந்ததை கவனிக்காமல் அவள்  கையில் இருந்த வளையலை பார்த்து புன்னகை செய்ய  அவளை வினோதமாக பார்த்தான் சூர்யா .தேவா வளையலை பார்த்து கொண்டிருந்தவள் அவனை பார்த்ததும் சட்டென்று எழுந்துநின்றவள்  அவனை  பார்த்தாள் அவனும் அவளைதான் பார்த்து கொண்டிருந்தான் .

என்ன ரொம்ப சந்தோசமா இருக்கா என்று மனதுக்குள் கேட்டு   என்று கேட்டான்  சூர்யா .தேவா அவளுக்கே தெரியாமல் அவனை பார்த்து புன்னகை  செய்தாள் சூர்யா அவள் சட்டென்று தன்னை பார்த்து புன்னகை செய்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போனான் .

அவன் ஒன்றும் சொல்லாமல் இருப்பதை பார்த்த தேவா  என்ன என்று கண்ணால் கேட்டாள் .

அதில் நிஜ உலகுக்கு  வந்தவன் அவளை பார்த்தான் .அவனுக்கு அப்போதுதான் பேச வேண்டும் என்ற எண்ணமே வந்தது  .

அ அது  ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரி இருக்கே உன்ன பாத்தா அதுவும் இந்த கண்ணாடி வளையல் பார்த்து அவ்ளோ சந்தோச படுற என்ன விஷயம் என்று கேட்டான்  சூர்யா .

அவனை பார்த்து சிரித்தவள் கைகள் அசைத்து சைகை செய்தாள் கிருஷ்ணாதான் வளையல்   வாங்கி தந்தான் என்று .

அவள் முகத்தில் அவ்வளவு சந்தோசம் இருந்தது .அவள் சொன்னதை கேட்ட சூர்யாவின் புருவங்கள் முடிச்சிட்டது .

நான் என்ன பண்ணாலும் சிரிக்க மாட்டா ஆனா மத்தவங்க என்ன பண்ணாலும் சிரிப்பா  .சிரிக்கிறது என்ன என்ன பாத்து பயப்படாம இருந்தாலே அது போதும் எனக்கு என்று மனதுக்குள் நினைத்த சூர்யா சரி என்பது   போல தலை அசைத்தான்.

தேவா அவனை பார்த்து சிரித்தவள்  படுத்து கொள்ள போக சூர்யா பெட்சீட்   எடுத்து தரையில் விரித்தான் .அவனை பார்த்தாள் தேவா. சூர்யாவும் அவளை பார்தான் .என்ன என்று கண்ணால் கேட்டான் சூர்யா.ஒன்றும் இல்லை என்பது போல இடம் வலமாக தலை அசைத்தாள் தேவா.

அவளை பார்த்தான் சூர்யா  .

என்ன கீழ படுக்க பிடிக்காதுன்னு சொல்லிட்டு இப்ப கீழ படுக்க போறானேன்னு பாக்குறியா என்று கேட்டான் சூர்யா. தேவா இல்லை என்பது போல மேலும் கீழும் தலை அசைத்தாள்.

அப்போ நீ என்கிட்ட எதுவும் சொல்ல ஆசை படலையா என்று கேட்டான் சூர்யா .தேவா இல்லை என்பது போல தலை அசைக்க இடபக்கம் தலை திருப்ப போக சூர்யா அவளை  ஒற்றை புருவத்தை உயர்த்தி பார்த்தான் .இல்லை என்று தலை அசைக்க போனவள் சூர்யாவை பார்த்து பொய் சொல்ல முடியாதவள் ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.அவளை பார்த்து சூர்யாக்கு சிரிப்புதான் வந்தது.

இங்க பாரு நல்லா பொய் சொல்றவங்க கூட என்கிட்ட பொய் சொல்றது கஷ்டம் .உனக்கு பொய் சொல்ல வரவேயில்லை அப்புறம் எதுக்கு தேவை இல்லாம ட்ரை பண்ணுற என்று சூர்யா சொல்ல தேவா என்ன செய்ய என்று தெரியாமல் விழித்தாள்.

இங்க பாரு தேவா நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு அத நான் பண்ணி இருக்க கூடாது .நான் உன்ன தொட்டப்போ அருவருப்பா இருந்துருக்கும்ல நீ இல்லன்னு எதுவும் சொல்ல வேண்டாம்.எனக்கு தெரியும் உனக்கு
கஷ்டமா இருந்துருக்கும்னு. அதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன். இனி நான் அப்படி பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன் அதான் நான் இங்க படுத்துக்குறேன் சொல்றேன் என்று சொன்ன சூர்யா தலையணை எடுக்க போக தேவா தைரியமாக தலையணை பிடித்து தடுத்தாள்.அவளை கொஞ்சம் அச்சர்யத்துடன் பார்த்தான் சூர்யா.

தேவா கண்ணால் கட்டிலில் படுக்க சொன்னாள்.சூர்யா அவளை பார்த்து சிரித்தான்.அவன் சிரித்ததும் அவனை புரியாமல் பார்த்தாள்.

நீ நான் காலையில தெரியாம பண்ணேன்னு நினைச்சுதான இப்போ என்ன உன்கிட்ட படுக்க சொல்ற என்று கேட்டான் சூர்யா. ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் தேவா.

நானும் முதல்ல தெரியாம பண்ணேன்னுதான் நினைச்சேன் ஆனா யோசிச்சு பாத்தா இப்போ எனக்கு நான்  தெரியாம பண்ணி இருப்பேன்னு தோணல என்று சூர்யா அவள் கண்ணை பார்க்காமல் சொல்ல தேவா விட்டால் கண்ணே வெளியே வந்துவிடும் என்பது போல அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

அதே அதிர்ச்சியுடன் உங்களிடமிருந்து விடைபெறுவது Abirami G.N

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro