Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு-15

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வீசிப்போன புயலில்
என் வோ்கள் சாயவில்லை
ஒரு பட்டாம்பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

உறங்கி கொண்டிருக்கும் அவளை பார்த்து கொண்டு அமைதியாக இருந்தான் சூர்யா .அவனுக்கு ஏனோ அவளை திட்டிவிட்டோமே என்று மனதுக்கு கவலையாக இருந்தது.(me;பிடிச்சவங்கள திட்டுனாலே நமக்குத்தான் அதிக வருத்தமா இருக்கும் டிசைன் அப்படி),அவளை அவன் அமைதியாக பார்த்து கொண்டிருக்க தேவாக்கு சட்டென்று உறக்கம் கலைந்து கண்ணை திறந்து பார்க்க சூர்யா தன்னை பார்த்துக்கொண்டிருப்பதைதான் பார்த்தாள் .அவள் சட்டென்று கண் விழித்து பார்த்ததும் சூர்யாக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை அவன். அப்படியே சிலை போல அமர்ந்து இருந்தான் தேவா அவனை பார்த்து பயந்தவள் சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் .இருவரும் ஒருவரை  ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தார்கள் தேவா கண்ணில் பயம் அப்பட்டாமாக தெரிந்தது  .அதை பார்த்தவனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது .அவனுக்கு பேச வார்த்தைகள் தேடவே சில நொடி பிடித்தது .

ஐ ஆம் சாரி என்றான் சூர்யா அதுதான் அவன் சொல்லிய முதல் வார்த்தை அவன் சாரி கேட்டதும் அவனை மிகவும் வித்யாசமாக பார்த்தாள் தேவா.அவள் கண்ணில் பதட்டம் மற்றும் குழப்பம் தெரிந்தது .அதை உணர்ந்தவன் தொடர்ந்து பேசினான் .

அது நான் உன்ன உண்மையா திட்டணும்னு நினைக்கல .உனக்கு தூக்கம் வரலன்னா தூங்காம இரு. என்ன வேணா பண்ணு நான் எந்த கேள்வியும் கேக்க மாட்டேன் ஆனா நீ எனக்காக முழிச்சு இருக்க வேண்டாம்னுதான் சொல்றேன் .எனக்கு எனக்காக யாராவது ஏதாவது பண்ணா சுத்தமா பிடிக்காது .என்ன பாத்துக்க என்னால முடியும் .அதனால இனிமே நீ எனக்காக காத்துகிட்டு இருக்காத.தூக்கம் வந்தா தூங்கிடு .நீ காத்திருந்து நன்றி  சொல்ல எல்லாம் அவசியம் இல்லை . நான்நன்றி எதிர்பார்த்து எதையும் பண்ணவே இல்ல .நீ நன்றி சொல்ல நினைச்சது தப்பு இல்ல உன்ன புரிஞ்சுக்காம திட்டிட்டேன் எல்லாம் என்னோட தப்புதான் சாரி என்று சொன்னான் சூர்யா .அவனை பார்த்து ஒரு சைகை கூட  செய்யாமல் அமர்ந்து இருந்தாள் .

இங்க பாரு நான் கோபபட்டு பேசுற மாதிரி இருக்கலாம் ஆனா நான் எப்போவும் உன்மேல என்னோட தனிப்பட்ட கோபத்தை காட்ட மாட்டேன் .இதுக்கு மேல கோப படுற மாதிரி சூழ்நிலை வராதுன்னு நினைக்குறேன் அதோட நான் பேசுறதுதான் அப்படி இருக்கு மத்தபடி நான் எப்போவும் கோப படுறவன் இல்ல அதனால நீ என்ன பாத்து பயப்படுறதை நிறுத்து ஓகேவா என்று சூர்யா அவளை திட்டியதற்கு மனம் கேட்காமல் மாறி மாறி அவளுக்கு தன் பக்க நியாயத்தை புரியவைத்து தன்னை நிரபராதி என்று புரிய வைக்க போராடி கொண்டிருந்தான் .அவன் இவ்வளவு பேசியும் தேவா பெரிதாக ஒன்றும் ரியாக்சன் கொடுக்காமல் லேசாக தலை மட்டும் அசைத்துவிட்டு மீண்டும் படுத்து கண்ணை மூடி விட்டாள் .அவளுக்கு இப்போது சூர்யாவை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது .அவளுக்கு ஆச்சர்யத்தில் என்ன சொல்ல என்று கூட தெரியவ்வில்லை அவள் அப்படி ஆச்சர்யத்தில் ஒன்றும் சொல்லாமல் படுத்ததை பார்த்த சூர்யாக்கு கஷ்டமாகி விட்டது .

அவனுக்கு என்ன சொல்லி அவளை சமாதானம்  செய்ய என்றே தெரியவில்லை .ஏதோ கொலை குற்றம் செய்தது போல தன்னை கொல்லும் மனதை எப்படி சமாளிக்க என்றும் அவனுக்கு தெரியவில்லை .தேவா கொஞ்சம் நேரத்தில் உறங்கி விட்டாள் .பாவம்  சூர்யாக்கு தான் உறக்கமே வரவில்லை லைட் அணைத்துவிட்டு உறங்காமல் இருந்தான் அவனால் இந்த நிலைமையை கொஞ்சம் கூட தாங்கி கொள்ள முடியவில்லை .அவன் உறங்கும்போது கிட்டதட்ட விடியற்காலை ஆனது .

காலை ஆறு மணி அளவில் தேவா எழுந்திருக்க அவள் அருகில் சூர்யா உறங்கி கொண்டிருந்தான் .அவனை பார்த்து லேசாக புன்னகை செய்தாள் .உறங்கும்போது எவ்வளவு அமைதியாக அழகாக இருக்கிறான் என்று சூர்யாவை பார்த்து ரசித்தாள் தேவா .பிறகு அவனை தாண்டி இப்போது போக முடியாது என்பதால் அவன் பக்கத்திலிருந்து இறங்காமல் நேராக கட்டிலிலிருந்து இறங்க முடிவு செய்தவள் அப்படியே வேகமாக எழுந்த்திருக்க போக அவள் அணிந்திருந்த சாரியின் முந்தானை அவளை பின்னால் இழுத்தது .என்ன ஆச்சு என்று அவள் திரும்பி பார்க்க சூர்யா அவள் முந்தானை மீது படுத்திருந்தான் அவள் மெல்ல இழுத்து பார்த்தாள் அப்போது சூர்யா புருவத்தில் அசைவு தெரிய அப்படியே அசையாமல் அமர்ந்தவள் அவனே எழுந்து விடுவான் என்று நினைத்து அமைதியாக அவன் அருகில்  படுத்து விட்டாள் தேவா அசையாமல் அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள் .அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி எப்போதும் இருக்கும் இடைவெளியைவிட கொஞ்சம் குறைவுதான் அவள் அவன் அமைதியாக உறங்குவதை ரசித்து பார்த்து கொண்டிருக்க சட்டென்று அவள் மீது கை போட்ட சூர்யா ஏதோ தலையணையை  இழுப்பதுபோல அவளை இழுத்து உறக்கத்தில் அவளை அணைத்து  கொண்டான் .சூர்யா அப்படி செய்ததும் தேவா இதயம் மிகவும் வேகமாக துடித்தது அவள் ஏதோ உறைந்து போன பொம்மை போல அவன் அருகில் இருந்தாள் .அவளுக்கு பதட்டமாக இருந்தது அவளுக்கு அந்த அணைப்பில் இருக்க பிடிக்கவில்லை அவள் லேசாக அவனை தட்ட முதலில் சூர்யா எழுந்திருக்கவில்லை .எனவே தேவா  சில நொடி கழித்து தன்னை சமாளித்து கொண்டு மீண்டும் அவனை தட்ட  இந்த முறை லேசாக கண்ணை திறந்தவன் அவளை பார்த்தான் .அவன் முகத்தில் லேசான புன்னகை தோன்றியது ஆனால் அந்த புன்னகை தேவா முகத்தில் இருந்த பதட்டத்தை பார்த்த உடன் மறைந்து விட்டது .அவன் முகத்தில் குழப்பம் தோன்றியது அவன் கண்ணால் என்ன என்று கேட்க தேவா அவன் அணைத்திருப்பதை சுட்டி காண்பிக்க அப்போதுதான் அவளை தான் அணைத்திருப்பதை உணர்ந்தவனுக்கு தூக்கம் மொத்தமாக இல்லாமல் போனது அவளை விட்டு விலக வேண்டி சட்டென்று அவன் திரும்பி உருள கட்டில் அவ்வளவு பெரிதில்லை என்பதால் சட்டென்று தடுமாறி தரையில் விழுந்து விட்டான் .அவன் அப்படி விழுந்ததும் தேவா அவனை தூக்க அருகில் வர அதற்க்குள் அவனே எழுந்து விட்டான்.
அவன் நன்றாக இருக்கிறானா என்று அவளுக்கு கேட்க தோன்றியது ஆனால் நேற்று சாப்பிடிங்களா என்று கேட்டதற்குதானே அவன் அவ்வளவு கோபபட்டான் இப்போது மீண்டும். ஏதாவது கேட்டு இதற்கு எதற்கு தனியாக திட்டு வாங்க வேண்டும் என்று மௌனமாக இருந்துவிட்டாள் ஆனாலும் அவன் கண்ணில் பதட்டம் இருந்தது .அவளை பார்த்த  சூர்யா அவள் தான் அணைத்து கொண்டதால்தான் இப்படி பதட்டபடுகிறாள் என்று நினைத்தான் .அவனை பொறுத்தவரையில்  இதுபோல கீழே விழுவதை பார்த்து பயப்பட ஒன்றுமே இல்ல .அவன் ரத்தம் வரும் அளவுக்கு அடி பட்டால் கூட கண்டு கொள்ள மாட்டான் அப்படி இருக்கும்போது அவனால் தான் விழுந்ததால்தான் தேவா பதட்டமாகி இருக்கிறாள் என்று எண்ண முடியவில்லை .அவனுக்கு ஏதோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டது போல இருந்தது  அவனால் தேவா கண்ணை பார்க்கவே முடியவில்லை .தலை குனிந்து நின்றபடி பேச ஆரம்பித்தான் .

ஐ ஆம் சாரி நான் வேணும்னு பண்ணல இனி இப்படி பண்ண மாட்டேன் என்று சொன்ன சூர்யா அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறி விட்டான் தேவா அவன் செல்வதை பார்த்தவள் குளிக்க சென்று விட்டாள் .அவள் குளித்துவிட்டு ரெடி ஆகி ரூமை விட்டு வெளியே வந்ததும் ரூமுக்கு உள்ளே வந்தான் சூர்யா .தேவா கோலம் போட்டுவிட்டு  கிட்சன்க்கு வரும்போது செல்வம் டி போட்டு கொண்டிருக்க தான் அந்த வேலை பார்ப்பதாக சொன்ன தேவா டீ போட ஆரம்பித்தாள் .அப்போது அங்கே க்ருஷனா வந்தான் .அவனிடம் படிச்சியா என்று சைகை மூலம் கேட்டாள் தேவா .

ஆமா அண்ணி நல்லா படிச்சிட்டேன் .எந்த கேள்வி கேட்டாலும் என்னால இனி பதில் சொல்ல முடியும் என்று சொன்னான் கிருஷ்ணா மகிழ்ச்சியுடன் [me; அது ஒண்ணுமில்ல 10வதுல அப்படிதான் இருப்பாங்க]

அவனை பார்த்து புன்னகை செய்த தேவா அவனுக்கு டீ கொடுத்துவிட்டு செல்வத்துக்கு டீ கொடுக்கலாம் என்று எடுத்துவிட்டு  வெளியே வர சூர்யா வேலைக்கு தயாராகி இருஙகவன் கிச்சன் பக்கம் வந்தவன் தேவாவை பார்த்ததும் திரும்பியவன் முக்கியமான வேலை இருப்பதாக செல்வத்திடம் சொல்லிவிட்டு தேவாவிடமும் சென்று வருவதாக சொல்லலிவிட்டு சென்று விட்டான்.அவன் செய்வது எல்லாம் தேவாக்கு  .சூர்யா சென்ற பிறகு தேவா செல்வம் மற்றும் கிருஷ்ணாவை அனுப்பி வைத்தாள் .

தேவாக்கு அன்று வழக்கம் போல நாள் நன்றாகதான் சென்றது .சஞ்சனா கருமி வந்தார்கள் அவர்களை பார்த்தே அவளுக்கு பொழுது போனது .

சாயங்காலம் நேரம் கிருஷ்ணா எப்போது வருவான் என்று எதிர்பார்த்து காதிருந்தாள் கிருஷ்ணா வந்தான்

அவனை பார்த்ததும் மகிச்சியாக வாசலில் வந்து புன்னகையுடன் வரவேற்றாள் தேவா .கிருஷ்ணா பெரும்பாலும் வீட்டுக்கு வரும்போது அந்த வீட்டில் வெறுமை மட்டும்தான் இருக்கும் ஆனால் இப்போது அவனை வரவேற்க அவனுக்கென்று ஒரு ஆள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது அவனுக்கு அவ்வளவு மகிச்சியாக இருந்தது .

கிருஷ்ணா மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்தவன் சென்று உடை மாற்றி விட்டு வந்து அமர்ந்தான் அவனுக்கு டீ மற்றும் பஜ்ஜி கொண்டு வந்து கொடுத்தாள் தேவா .அவளை பார்த்து. சிரித்தவன் அவளிடம் ஒரு கவரை கொடுத்தான் .

தேவா அவனை என்ன என்பது போல பார்த்தாள் .

அண்ணி பிரிச்சு பாருங்க என்று சொன்னான் கிருஷ்ணா .

தேவா    அவன் சொன்னது போல அதை பிரித்து பார்த்தாள் அதில் கண்ணாடி வளையல் இருந்தது அதை பார்த்ததும் மகழ்ச்சி அடைந்தவள் கிருஷ்ணாவை பார்த்தாள் .

அது ஒண்ணுமில்ல அண்ணி என்னோட பிரண்ட் அவனோட அம்மாக்கு வளையல் வாங்குனான் அப்போ எனக்கு உங்க நியாபாகம் வந்துச்சு நான் உங்களுக்கு வாங்கிட்டு வந்தேன் என்று கிருஷ்ணா சொல்ல தேவாக்கு சந்தோஷத்தில் இருந்த கண் கலங்கி விட்டது .அவள் கண்ணில் கண்ணீர்  வருவதை பார்த்த கிருஷ்ணாக்கு பதட்டமாகி விட்டது .

என்ன ஆச்சு அண்ணி ஏன் இந்த மாதிரி கண்ணு உங்களுக்கு கலங்குது என்று பதட்டத்துடன் கேட்டான் கிருஷ்ணா.

அவனை பார்த்து ஒன்றுமில்லை என்பது போல கை அசைத்த  தேவா கண்ணை  துடைத்து கொண்டு வளையல் நன்றாக உள்ளது என்று சைகை மூலம் சொன்ன தேவா அந்த வளையலை மிகவும் மகிழ்ச்சியாக போட்டு கொண்டாள்.அப்போது அமிர்தா வந்தாள் .

அவளை பார்த்த உடன் புன்னகை செய்தாள் தேவா .

என்ன அண்ணியும் கொழுந்தனையம் நான் டிஸ்டப் பண்ணிட்டேன் போல என்று கேட்டாள் அமிர்தா .

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சைகை செய்த தேவா அவளை வந்து அமர சொல்லி சையை செய்தாள் .

அவளுக்கு டீ எடுத்துவந்து கொடுத்த தேவா தானும் அவர்களுடன் அமர்ந்து கொண்டாள் .

அட வளையல் நல்லா இருக்கே யாரு உங்க அவர் வாங்கிட்டு வந்தாரா என்ற் கேட்டாள் அமிர்தா தேவா அவள்  கேட்டதும் என்ன சொல்ல என்று  தெரியாமல் அமிர்தாவை பார்க்க கிருஷ்ணா தான்   பேச ஆரம்பித்தான் .

நான்தான் அக்கா வாங்கிட்டு வந்தேன் என்றுசொன்னான் க்ருஷ்ணா .

எனக்கு எண்ணைக்காவது இதெல்லாம் பண்ணி இருக்கியா என்று கேட்டாள் அமிர்தா கேலி செய்யும் விதத்தில் .

உங்களுக்கு பிரசாத் அண்ணா வாங்கிட்டு வருவாருல்ல என்று கேட்டான் கிருஷ்ணா

அடடா ரொம்பத்தா .உங்க அண்ணா அண்ணிக்கு ஒண்ணுமே வாங்கி தரலையா என்ன .தினமும் பூ கொடுக்க சொல்லி இருக்காரு  தெரியுமா உனக்கு என்று அமிர்தா சொல்ல தேவாக்கு ஏனோ முகத்தில் புன்னகை தோன்றியது .

ஹோய் தேவா என்ன வெக்கமா என்று அமிர்தா கேட்க தேவா இன்னும் சிரித்தவள் இல்லை என்பது போல தலை அசைத்தாள் .அவர்கள் எல்லோரும் பேசி கொண்டிருக்கும்போது செல்வம் வர அவருடன் கொஞ்சம் பேசிவிட்டு அமிர்தா சென்றுவிட்டாள் .இரவு 6.30 மணி இருக்கும் கிருஷ்ணா வழக்கம் போல படித்து கொண்டிருக்க தேவா அவனுக்கு அருகில் அமர்ந்து வார இதழ் படித்து கொண்டிருந்தாள். அப்போது சூர்யா பைக் வரும் சத்தம் கேட்டது .

அண்ணி அண்ணா வந்துட்டான் என்று சொன்னான் கிருஷ்ணா .இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கடைசி 5 நிமிடத்தில் 10 மதிப்பெண் விடை எழுத ஆரம்பித்த மாணவன் போல பதட்டும் கொள்ள ஆரம்பித்தாள் .அவள் இதயம் வேகமாக துடித்தது .சூர்யா வாசலில் வந்து நிற்க அவனை பார்த்தவள் அப்படியே நிற்க அவன் பின்னால் பூஜா வந்து நின்றாள் .அவளை பார்த்ததும் தேவாக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை அவள் அப்படியே பூஜாவை பார்க்க பூஜாவை சூர்யா உள்ளே அழைத்து வந்தான் .

அண்ணி உங்க தங்கச்சிதான என்று கிருஷ்ணா கேட்க அவன் குரலில் நினைவுக்கு வந்தவள் வேகமாக ஓடி சென்று பூஜாவை அணைத்து கொண்டாள் .பூஜா அவளை அணைத்து கொண்டாள் .

பாச மலரே எப்படி இருக்க என்று பூஜா கேட்க அவளை விலக்கி பார்த்தவள் தான் நன்றாக இருப்பதாக சைகை மூலம் சொன்னாள் .அவளை உக்கார சொல்ல வால் அமர்ந்தாள் .கிருஷ்ணா பக்கம் திரும்பி செல்வத்தை அழைத்து வர   சொல்லி சைகை செய்தாள் தேவா  அவன் சென்றான் .

செல்வம் வந்தார் .

வணக்கம் அங்கிள் நான் தேவா தங்கச்சி என்று அவரை பார்த்து எழுந்து நின்று சொன்னாள் பூஜா .

ஏமா நிக்கிற  உக்காரு.ஏதாவது சாப்பிடுறியா டீ குடிப்பியா இல்ல காபியா என்று கேட்டார் செல்வம் .

இல்ல அங்கிள் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்று சொன்னாள் பூஜா .

அட இரும்மா நான் போய் கொண்டு வர்றேன் என்று அவர் சொல்ல தேவா தான் செல்வதாக சைகை செய்துவிட்டு எழுந்த்திருக்க அவளை உட்கார சொல்லிவிட்டு செல்வம் சென்றார் .

கிருஷ்ணா பூஜா தேவா எல்லோரும் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருக்க அங்கு சம்மந்தமே இல்லாதது போல்  நின்று கொண்டிருந்தது சூர்யாதான் .

சூர்யாதான் பூஜாவை இங்கு அழைத்து வந்தான் ஆனால் இப்போது அவளும் அவனை மறந்து விட்டாள்.அவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்க சூர்யா அவர்களை பார்த்து கொண்டிருந்தான் .

பேசி பேசி வந்த விஷயத்தை மறந்துட்டேன் .இந்தா தேவா உனக்காக வாங்கிட்டு வந்தேன் என்று சொன்னவள் நகை பெட்டியை கொடுத்தாள்.தேவா அவளை ஆச்சார்யமாக பார்த்தாள் .

ஏதோ தங்கச்சியால முடிஞ்சது என்று சொல்லி அவள் கையில் கொடுத்தாள்.அதன் பிறகு மோதிர பாக்ஸ் எடுத்தாள் .

எனக்கு முறை எல்லாம் அவ்ளோவா தெரியாது ஆனா எனக்கு தெரிஞ்சது பண்ணுறேன் மோதிரத்தை எடுத்து சென்று சூர்யாவிடம் நீட்ட இவ்வளவு நேரம் தனக்கும் இங்கு நடப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல இருந்தவன் பூஜா தன்னிடம் மோதிரத்தை நீட்டியதும் அவளை வினோதமாக பார்த்தான் .

இப்போ எதுக்கு இந்த மாதிரி வீண் செலவு எல்லாம் என்று கேட்டான் சூர்யா .

இது என்னோட கடமை சந்தோஷம் என்று சொன்னாள் பூஜா .சூர்யா வாங்கி கையில் வைத்து கொண்டான் .

கிருஷ்ணாக்கும் செல்வத்துக்கும் உடை வாங்கி வந்திருந்தவள் அதையும் கொடுத்துவிட்டு செல்வதாக சொல்ல அவளை சாப்பிட்டுவிட்டு செல்ல சொன்னனார்கள் ஆனால் பூஜா இன்னொரு நாள் வருவதாக சொல்லிவிட்டு செல்ல எல்லோரும் மகிழ்ச்சியாக அவளை வழி அனுப்பி வைத்தார்கள் .
பூஜாக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது .ஒரு வழியாக தேவாவை நல்லபடியாக பார்த்து கொள்ள ஒரு குடும்பம் கிடைத்துவிட்டதை நினைத்து அவள் மிகவும் மகிழ்ச்சியாக ஹாஸ்டல் செல்ல அவளுக்கு தெரியவில்லை அவள் மகிழ்ச்சியான மனநிலை காணாமல் போக போகிறது என்று .அவளுக்கு அவள் தோழியிடம் இருந்து கால் வந்தது .

ஹெலோ சொல்லு டி என்று சொன்னாள் பூஜா .

ஹே வர்றப்போ ரெட் வெல்வெட் கேக் வாங்கிட்டு வர்றியா சாப்பிடணும் போல இருக்கு என்று சொன்னாள் அஸ்வினி .

பூஜாவும்  உடனே சரி என்று சொல்லி விட்டாள் .பேக்கேறி அவர்கள் ஹாஸ்டலில் இருந்து 5 நிமிடம் நடக்கும் தொலைவில் இருந்ததால் அங்கிருந்து நடந்து செல்லலாம் என்று முடிவு செய்தவள் பேக்கரியில் இறங்கினாள் .அப்போது அஸ்வினி அவளுக்கு அழைத்தாள் .

ஹே இப்போதான்டி வந்துருக்கேன் .இன்னும் ஒரு 10 நிமிஷத்துல வருவேன் வெய்ட் பானு என்று சொன்னாள் பூஜா .

இல்ல பூஜா சாரி நீ எனக்காக கொஞ்சம் பேசிட்டு வா என்று சொன்னாள் அஸ்வினி .

யாருக்கிட்ட பேச சொல்ற .என்று கேட்டாள் பூஜா அப்போது சத்யா அவள் முன்பு வந்து  நின்றான் .அவனை அவள் பார்க்க அவன் இவளை பார்த்து புண்ணாகி செய்தான் .

ஹாய் பூஜா உக்காந்து பேசலாமா என்று கேட்டான் சத்யா.தேவை இல்லாமல் எதுவும் பிரச்சனை வேண்டாம் என்று முடிவு செய்தவள் சரி என்று தலை அசைத்தாள்  .அவளுக்கு அவ்வளவு கோபமாக வந்தது .பொது இடத்தில் பிரச்சனை வேண்டாம் என்று மௌனமாக இருந்தாள்.

இங்கே அதேநேரம்  சூர்யா அவன் அறையில் புத்தகம் படித்து கொண்டிருந்தான் அவன் முன்பு வந்து நின்றாள் தேவா அவன் என்ன என்பது போல பார்த்தான் .அவள் மேஜை மீது இருந்த மோதிரத்தை காண்பித்து போடவில்லையா என்று சைகை மூலம் கேட்டாள் .

இல்ல எனக்கு மோதிரம் போட  பிடிக்காது என்று சொன்னான் சூர்யா அவன் சொன்னதை கேட்ட உடன் தேவா முகம் வாடி விட்டது   .அவள் முகம் வாடுவதை பார்த்தவன் எழுந்து நின்றான் .

சரி இதுவரை பிடிக்காது இனிமே பழகிக்கிறேன் .நீ வேணா எனக்கு போட்டு விடு என்று சொன்னான் சூர்யா அவன் சொன்னதை கேட்டு தேவாக்க்கு ஆச்சர்யமாக இருந்தது சொல்ல போனால் சூர்யாக்கே ஆச்சர்யமாகதான் இருந்தது .அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவன் அவளுக்கு தனக்கு மோதிரம் போட்டு விட இஷ்டம் இல்லை என்று நினைத்தான்   சூர்யா .

உனக்கு இஷ்டம் இல்லன்னா பரவாயில்லை நான் போட்டுக்குறேன் என்று சொன்னான் சூர்யா .ஆனால் தேவா தான் போட்டு விடுவதாக சைகை செய்தவள் மோதிரத்தை எடுத்துவர சூர்யா அவன் கையை  அவள் மோதிரம் போட்டு விட நீடின்னான்.தேவா அவனுக்கு மோதிரம் போட்டு விட்டவள் அவனை பார்த்து புன்னகை செய்ய அவள் பிரதிபலிப்பாக அவனாயும் அறியாமல் புன்னகை செய்தான்  சூர்யா .இறுவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தார்கள் .    இருவருக்கும் இந்த பாரவை மிகவும் புதிது .புதுமை ரசிகவே செய்தார்கள்.

அதே நேரம் பேக்கேறியில்  சத்யாவை எரிப்பது போல பார்த்து கொண்டு மௌனமாக  இருந்தாள் பூஜா .

பார்வைகள் இன்பத்தையும் துன்பத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் என்றால் வார்த்தைகள் இரண்டாம் பட்சம்தான் .

அடுத்த பகிவில் சந்திக்குவரை உங்களிடமிருந்து விடைபெறுவது அபிராமி G.N

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro