Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு-13

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமல
சில எண்ணங்கள் வலை வீசுதே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

சூர்யா சம்மந்தமே இல்லாமல் வெளியே சென்று கொஞ்சம் நேரம் நின்றுவிட்டு வந்தான் . அவன் உள்ளே வரும் போது அமிர்தா தேவாக்கு பூ வைத்து கொண்டிருந்தாள் .

அத்தைதான் பூ குடுத்து விட்டாங்க .உங்களுக்கு பூ ரொம்ப அழகா இருக்கு என்று அமிர்தா சொல்ல தேவா அவளை பார்த்து சிரித்தாள் .

சூர்யா வந்தவன் ஒரு நொடி அவளை பார்த்து அப்படியே நின்று விட்டான் .அவன் தேவாவை பார்த்து கொண்டிருக்க அதை கவனித்த தேவா அவனை பார்த்து கண்ணால் என்ன வேண்டும் என்று கேட்டாள் .ஒன்றுமில்லை என்று தலை அசைத்தான் .

அப்போது செல்வம் மற்றும் கிருஷ்ணா ஸ்கூல் செல்ல தயார் ஆகி வந்தார்கள் .

செல்வம் பிரசாத் மற்றும் அமிர்தாவை பார்த்தார் .

என்னப்பா விஷயம் என்று செல்வம் கேட்க அவருக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான் பிரசாத் .

இல்லப்பா நம்ம சூர்யாக்கு கல்யாணம் ஆச்சுல்ல அதான் அவனுக்கு விருந்து குடுக்கலாம்ன்னு நாங்க பேசி இருக்கோம் .அதுக்கு கூப்பிடதான் வந்தோம் என்று சொன்னான் பிரசாத் .

சரிப்பா நல்ல விஷயம் அப்போ நாங்க கிளம்புறோம்.ஸ்கூல்ல நிறைய வேலை இருக்கு .போய்ட்டு வந்துடறோம் .என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு அவர் கிளம்ப கிருஷ்ணாவும் எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்ப போக தேவா அவனை நிற்கும்படி சைகை செய்துவிட்டு கிட்சன்க்கு சென்று லன்ச் பாக்ஸ் மற்றும் தண்ணி பாட்டிலை எடுத்து வந்து கொடுத்தாள் .

அய்யோ அண்ணி மறந்தே போயிட்டேன் என்று சொன்னவன் அதை வாங்கினான் .

அவனை மறக்காமல் சாப்பிடும்படி சைகை செய்தாள் தேவா .

சரி அண்ணி நான் சாப்பிடறேன் .என்று அவன் சொல்ல கிருஷ்ணாவை பார்த்து புன்னைகை செய்தாள் தேவா .அவர்கள் இருவரையும்தான் எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டு இருந்தார்கள் .இதில் அதிகம் ஆச்சர்யம் அடைந்தது சூர்யாதான் .ஏன் என்றால் இங்கு இருக்கும் எல்லோரையும் விட தேவா உடன் அதிகம் பழகியது என்று பார்த்தால் அது சூர்யாதான் .ஆனால் அவள் சூர்யாவை பார்த்து கூட இப்படி புன்னகை செய்தது இல்லை .என்னதான் சூர்யா அவளை கொடுமை படுத்தவில்லை என்றாலும் தேவா ஒவ்வொருமுறை அவனை பார்க்கும் போதும் அவள் கண்ணில் ஒரு பயம் இருக்கும் .பிரசாத் அமிர்தாவை பார்க்கும்போது கூட அவள் கண்ணில் சின்ன பதட்டம் இருக்கும் ஆனால் கிருஷ்ணாவிடம் பேசும்போது அவள் கண்ணில் பதட்டம் என்பது இல்லை.ஒருவேளை அவன் சிறுவன் என்பதால் கூட இருக்கலாம் .ஆனாலும் சூர்யாக்கு தேவா கிருஷ்ணாவிடம் பேசுவது போல தன்னுடனும் பேச வேண்டும் என்று தோன்றியது .அவன் அவள் உண்மையாக சிரிக்கும் அழகை ரசிக்கவே செய்தான் .அவன் அவள் மீது பார்வையை விலக்கி கொள்ளலாம் என்று நினைத்தாலும் அவன் கண்கள் நகர மறுத்தது .பிரசாத் அவள் தோள் மீது கை வைக்க அவன் பக்கம் திரும்பி என்ன என்று கேட்டான் சூர்யா .

பார்த்தது போதும் என்று சொன்னான் பிரசாத் .அவனை சூர்யா முறைக்க மௌனம் ஆனான் .கிருஷ்ணா அவன் அண்ணியிடம் விடைபெற்று செல்ல அவனை மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைத்தாள் தேவா .கிருஷ்ணா முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்த செல்வத்துக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது .

அப்புறம் மச்சான் மதியம் வந்துருங்க .எல்லாம் உனக்கு பிடிச்ச மாதிரி காரசாரமா இருக்கும் ஓகேவா என்று கேட்டான் பிரசாத் .

இல்ல காரம் அதிகமா போட வேண்டாம் அவளுக்கு அதிக காரம் பிடிக்காது என்று சூர்யா சாதரணமாக சொல்ல பிரசாத் மற்றும் அமிர்தா இருவரும் சேர்ந்து ஓஹோ என்று சொன்னார்கள் .தேவா சூர்யாவைதான் ஆச்சார்யமாக பார்த்தாள் .சூர்யா பிரசாத் மற்றும் அமிர்தா இருவரையும் வினோதமாக பார்த்தான் .

என்னங்க இங்க சுவிட்ச் போட்டா அங்க லைட் எரியுது என்று அமிர்தா சொல்ல பிரசாத் ஆமாம் என்பது போல தலை அசைத்தான் .

ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லையா போங்க போய் விருந்து ஏற்பாடு பண்ணுங்க என்று சூர்யா சொல்ல அவர்கள் இருவரும் அவனை பார்த்து புன்னன்னகை செய்தபடி அங்கிருந்து கிளம்பினார்கள் .தேவா அமிர்தா மற்றும் பிரசாத் செல்வதை பார்த்தவள் இப்போது சூர்யாவை பார்த்தாள் .

என்ன வேணும் என்று கேட்டான் சூர்யா ஒன்றும் வேண்டாம் என்பது போல தலை அசைத்தாள் தேவா .

ம்ம்ம் உனக்கு போர் அடிச்சிச்சுன்னா டிவி பாரு .பசிச்சா பழம் ஏதாவது எடுத்து சாப்பிடு .எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் ரூமிலதான் இருப்பேன் ஏதாவது வேணும்னா வந்து பாரு .[me; சொர்க்கம் என்பது யாதெனில் ]

என்று அவளிடம் பேசிவிட்டு சூர்யா உள்ளே சென்றுவிட தேவா மட்டும் ஹாலில் தனியாக அமர்ந்து இருந்தாள் .அவளுக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை .[me; நானா இருந்தா தூங்கிருப்பேன் ஐடியா இல்லாத தேவா ]

அவள் பாட்டுக்கு அமைதியாக அமர்ந்திருக்க சஞ்சனா வந்தாள் .சஞ்சனாவை பார்த்ததும் தேவாக்கு உற்சாகம் ஆனது .சஞ்சனா தனியாக வரவில்லை அவள் கையில் ஒரு பூனையும் இருந்தது .அந்த பூனை அவள் கையில் பொம்மை போல அமர்ந்து இருக்க அதை தூக்க முடியாமல் தூக்கி வந்தாள் சஞ்சனா .அவள் அருகில் சென்றாள் தேவா .

இவனுக்கு பசிக்குதாம் சாப்பாடு வேணும் என்று சஞ்சனா கேட்க தேவா நேராக சென்று பால் கொண்டு வந்தாள் .அதை ஒரு கவரில் ஊற்றி பூனைக்கு கொடுக்க அது சந்தோசமாக குடிக்க ஆரம்பித்தது .

இவன் பேர் கருமியா .பாவம் இவனுக்கு பசிக்குது நேத்து கேக்காம எடுத்து சாப்டுடான்னு அம்மா பால் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.என்று சொன்ன சஞ்சனா பூனை பக்கம் திரும்பினாள் .

என்ன கருமியான் பசி போச்சா .என்று அவள் கேட்க பூனை அவளை செல்லமாக உரசியது .சரி வா நம்ம வீட்டுக்கு போவோம் இனி உனக்கு பசிச்சா இங்க வா என்று சொல்லிவிட்டு அவள் செல்ல தேவா சஞ்சனா செல்வதை பார்த்து புன்னகை செய்தாள் .

மத்தியானம் தேவா மற்றும் சூர்யா பிரசாத் வீட்டில் விருந்துக்கு சென்றார்கள் .விருந்து நல்ல படியாக முடிந்தது .தேவா அந்த விருந்தில் சூர்யாவை வேறு ஒரு கோணத்தில் பார்த்தாள் .சூர்யா சஞ்சனா அருகில் இருக்கும் போது மட்டும் அவ்வளவு அழகாக புன்னகை செய்தான் .அவளுடன் விளையாடினான் அதை எல்லாம் பார்க்கும்போது அவளுக்கு மிகவும் வித்யாசமாக இருந்தது சூர்யா தன்னிடமும் இப்படி பேசினால் நன்றாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது .

அதன் பிறகு சாயங்காலம் செல்வம் மற்றும் கிருஷ்ணா வந்தார்கள் .சூர்யா தேவாவை ஒரு வேலை கூட செய்ய விடவில்லை .தேவா இரவு நேரம் கிருஷ்ணாவிடம் அமர்ந்து பேசி கொண்டு இருந்தான் .அவன் அன்று ஸ்கூலில் நடந்த கதை எல்லாம் சொல்ல தேவா அதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தாள் .

அப்போது கருமி வந்தது .அது நேராக வந்து தேவா காலடியில் படுத்து விட்டது அதை பார்த்து சிரித்தாள் தேவா .

அண்ணி இதுக்கு பால் குடுத்திங்ககளா என்று கேட்டான் கிருஷ்ணா ஆமாம் என்று தலை அசைத்தாள் தேவா .

சஞ்சனா குட்டி கூட்டிட்டு வந்தாளா என்று கேட்டான் கிருஷ்ணா .ஆமாம் என்று தலை அசைத்தாள் தேவா .

அப்போ தலைவர் மறுபடியும் திருடிட்டாரு போல .அதான் சஞ்சனா இங்க கொண்டு வந்துருக்கா .அது ஒண்ணும் இல்ல அண்ணி இது தெருவுல உள்ள பூனைதான் ஆனா சஞ்சனா அவ பூனைன்னு சொல்லி வளர்ப்பா அதனால அமிர்தா அக்கா அவனுக்கு சாப்பிடு எல்லாம் நேரா நேரத்துக்கு கொடுப்பாங்க .ஆனாலும் அப்பப்போ திருடிடுவான் அவன் திருடுற அண்ணைக்கு மட்டும் அவனுக்கு சோறு போட மாட்டாங்க .அப்போ சஞ்சனா இங்க தூக்கிட்டு வந்துருவா.மிஸ்டர் இன்ஸ்பெக்ட்ர்க்கு பூனை சுத்தமா பிடிக்காது ஆனாலும் சஞ்சனா கேட்டா அதுக்கு சாப்பிடு போடுவான் . இண்ணைக்கும் அவன தேடி வந்துருப்பா நீங்க இருந்த உடனே உங்ககிட்ட வந்துட்டா .இனி சஞ்சனா கருமி ரெண்டு பேரும் உங்களை விடவே மாட்டாங்க என்று சொல்ல அவன் சொன்னதை கேட்டு சிரித்தாள் தேவா .

அண்ணி நான் என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வரவா என்று சூர்யா கேட்க தன்னிடம் ஏன் அனுமதி கேட்கிறான் என்று புரியாமல் சரி என்று தலை அசைத்தாள் தேவா .

சூப்பர் அண்ணி நீங்க .சரி அண்ணி டைம் ஆச்சு நாளைக்கு ஸ்கூலுக்கு போணும் நான் போய் தூங்குறேன் என்று சொன்னவன் தூங்க சென்று விட கிருஷ்ணாவிடம் பேசிய மகிழ்ச்சியில் ரூமுக்கு வந்தாள் தேவா.சூர்யா ஏதோ புத்தகத்தை படித்து கொண்டிருந்தவன் அவளை பார்த்த உடன் புக்கை டேபிளில் மூடி வைத்தான் .தேவா அவனை பார்க்காமல் அவள் இடத்துக்கு படுக்க செல்ல சூர்யா நில்லு என்று சொன்னான் .தேவா அவன் பக்கம் திரும்பி நின்றாள் சூர்யா எழுந்து வந்தான் .தேவா அவள் துணியை கெட்டியாக பிடித்து கொண்டாள் அதை சூர்யாவும் கவனிக்கதான் செய்தான் .அவள் அருகில் வந்தவன் பேச ஆரம்பித்தான் .

தூக்கம் வருதா என்று சூர்யா கேட்க தேவா இல்லை என்று தலை அசைத்தாள் .

ம்ம்ம் அப்போ உக்காரு உன்கிட்ட பேசணும் என்று சூர்யா சொல்ல தேவா சரி என்று தலை அசைத்துவிட்டு பெட்டில் அமர்ந்தாள்.

நாளைக்கு உனக்கு ட்ரெஸ் எடுக்க போறோம்.உடனே வேண்டாம்னு சொல்லாத .நான் நீ எழுதி குடுத்து நான் என்ன வாங்கிட்டு வந்தாலும் உனக்குன்னு சில தேவைகள் இருக்கும் அதை வாங்கிட்டு வர எனக்கு பிரச்சனை இல்ல அப்ப்டின்னாலும் கேக்க நிச்சயம் உனக்கு பிரச்சனையா இருக்கும்.அதனால நீயே போய் உனக்கு தேவையானதை வாங்கிக்கோ .உன்கூட நான் வர மாட்டேன் அதனால நீ கொஞ்சம் கூட பயப்பட தேவை இல்ல .உன்கூட பிரசாத் அம்மா அப்புறம் அமிர்தா வருவாங்க .அதனால உனக்கு என்ன தேவையோ வாங்கிக்கோ.என்று சூர்யா சொல்ல தேவா அவனை பார்த்தாள் .

என்ன ஏதாவது சொல்லணுமா என்று சூர்யா கேட்க தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் .

சரி என்ன விஷயம் என்று கேட்டான் சூர்யா .

தேவா சைகை மூலம் இல்லாத பாத்திரத்தை வைத்து சமைப்பது போலவும் பெருக்குவது போலவும் செய்து காண்பித்தாள். அதன் மூலம் அவள் வீட்டு வேலை செய்ய கேக்கிறாள் என்பது சூர்யாக்கு புரிந்தது.

அப்போ நீ இங்க வீட்டு வேலை பாக்க ஆசை படற அப்டித்தான என்று சூர்யா கேட்க தேவா ஆமாம் என்று தலை அசைத்தாள்.

இல்ல நீ வேலை எல்லாம் செய்ய வேண்டாம் .அதுக்கு அவசியம் இல்ல நாங்க பாதுபோம் என்று சூர்யா சொல்ல தேவா முகம் வாடியது அதை பார்த்தவன் பேச ஆரம்பித்தான் .

சரி வேலை செய்ய ஒரு காரணம் சொல்லு பாப்போம் என்று சூர்யா கேட்க தேவா சைகை மூலம் அவனுக்கு காரணம் சொல்ல முயற்சி செய்தாள்.

சூர்யா ஆரம்பத்தில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொள்ளதான் அவளை கவனிக்க ஆரம்பித்தான் ஆனால் ஒரு கட்டத்தில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை கவனிப்பதை விட்டுவிட்டு தேவாவை கவனிக்க ஆராம்பித்து விட்டான் .கொஞ்சம் நேரம் கழித்து தேவா அவள் விளக்கத்தை முடித்து விட சூர்யா இன்னும் அவள் கண்ணைதான் பார்த்து கொண்டிருந்தான் .சூர்யா எதுவும் பேசாமல் சிலை போல இருப்பதை பார்த்தவள் அவன் முன்பு கையை அசைக்க சட்டென்று கனவுலகில் இருந்து நிஜ உலகுக்கு வந்தான் சூர்யா .தேவா அவனை வினோதமாக பார்த்தாள் .

நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு கொஞ்சம் புரியல எழுதி காட்டுறியா என்று சூர்யா கேட்க சரி என்பது போல தலை அசைத்தாள் தேவா .சூர்யா பேப்பர் மற்றும் பென் எடுத்து கொடுத்தான் .அதை வாங்கிய தேவா சில நொடிக்குள் மீண்டும் அவனிடம் கொடுத்து. விட்டாள் .அவள் அவ்வளவு நேரம் விளக்கிய ஒரு விஷயத்தை சில நொடிக்குள் சொல்லி விட முடியுமா என்று ஆச்சர்யத்துடன் அந்த பேப்பரை வாங்கியவன் அதில் அவள் எழுதி இருந்ததை பார்த்து ஆச்சர்யம் அடைந்து அவளை பார்த்தான் தேவா அவனைப்பார்க்காமல் தரையை பார்த்து கொண்டிருந்தாள் .

நியாயமான கேள்வியை தலை நிமிந்தே கேட்கலாம் என்று சொன்னவன் அவள் எழுதி இருந்த கேள்வியை மீண்டும் படித்தான் .அதில் தேவா பெரிதாக ஒன்றும் எழுதவில்லை நான் விருந்தாளியா என்று மட்டும்தான் எழுதி இருந்தாள் .அதுவே அவள் கேட்க நினைத்த எல்லாவற்றையும் அவனுக்கு சொல்லிவிட்டது .அந்த கேள்வியை பார்த்தவன் மீண்டும் தேவாவை பார்த்தான் .

உன்ன கஷ்ட படுத்திக்காம நீ என்ன பண்ணாலும் எனக்கு அது சந்தோசம்தான் .சரி இப்போ தூங்கலாமா நாளைக்கு வேலைக்கு போணும் என்று சூர்யா கேட்க சரி என்று தலை அசைத்தாள் தேவா .இவர்கள் இருவரும் தூங்கி விட இவர்கள் இருவரை பற்றியும்தான் அமிர்தா மற்றும் பிரசாத் பேசி கொண்டிருந்தார்கள் .

அம்மு நீ என்ன நினைக்குற சூர்யா அந்த பொண்ண சீக்கிரம் ஏத்துப்பான்னா என்று பிரசாத் கேட்க அமிர்தா அவனை வினோதமாக பார்த்தாள் .

இருந்தாலும் நீங்க இந்த அளவுக்கு வினோதமான இருக்க கூடாது .அவர் ஏற்கனவே தேவாவை ஏத்துகிட்டாரு அதனாலதான் அவர் கல்யாணம் பண்ணி இருக்காரு .இதுக்கு முன்னாடி அவர் எந்த பொண்ணோட கஷ்டமான கதையும் கேட்டதில்லையா அவங்களை எல்லாம் கல்யாணம் பண்ணாரா என்ன .எனக்கு தெரிஞ்சு இந்த பொண்ண காப்பாத்த எவ்வளவோ வழி இருக்கு ஆனா உன்னோட பிரண்ட் எதுக்கு கல்யாணம் பண்ணாரு அவர் அந்த பொண்ண காப்பாத்த மட்டும் கல்யாணம் பண்ண மாதிரி இல்ல யாருக்கும் தேவாவை விட்டு கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணி கல்யாணம் பண்ண மாதிரி இருக்கு .என்று அமிர்தா சொல்ல அவளை இப்போது பிரசாத் வினோதமாக பார்த்தான்

அம்மு உன்னோட கற்பனை கொஞ்சம் நிறுத்து .நீ என்ன புது கதை சொல்லுற .அதெல்லாம் ஒண்ணுமில்ல சூர்யா அந்த பொண்ண காப்பாத்ததான் கல்யாணம் பண்ணா அதனால அந்த பொண்ணு விஷயத்துல தப்பு நடக்க கூடாதுனு நினைக்கிறான் .எனக்கு நீ சொல்ற மாதிரி சூர்யா நினைச்சா ஓகே நான் கூட அவனை இதை வச்சி கிண்டல் பண்ணுவேன் ஆனா எதார்த்தம் அப்படின்னு ஒண்ணு இருக்குல்ல .அது எப்படி இத்தனை நாள் கல்லு மாதிரி இருந்தவன் ஒரே நாள்ல கரைவான் என்று பிரசாத் கேட்க அவனுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள் அமிர்தா

கரைப்பார் கரைச்சா கல்லும் கரையும் .இப்போ உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்றேன் .நம்ம சஞ்சு குட்டிக்கு பூனைன்னா பயம் ஆனா ஒரு நாள் கருமி கூட விளையாடுன பிறகு அவளுக்கு அந்த பயம் போயிடுச்சு .இப்போ எல்லாம் அவ அவன் மேல எவ்ளோ பாசமா இருக்கா .நான் சாப்பாடு தரலன்னா கூட யாருக்கிட்டயாவது கேட்டு அந்த கருமிக்கு சாப்பாடு கொடுத்துருவா .அந்த சின்ன குழந்தைக்கு அந்த பூனை மேல வந்த பாசம் ஒருநாள்லதான் .அதுக்கு முன்னாடி எத்தனையோ பூனையை பாத்து பயப்படதான் செஞ்சா.ஆனா கருமி மேலதான் பாசம் வந்துச்சு.எப்படி பாசம் ஏன் பாசம்னு கேள்வி எல்லாம் கேக்க முடியாது பாசம் தானா உருவாகிச்சு .சஞ்சு பொருத்தவரைக்கும் அவதான் கருமியை பாதுக்குறா அதனால அவன் மேல அதிக பாசம் .அதே மாதிரிதான் உன்னோட பிரென்ட் அவருக்கும் நிறைய வலிகள் இருக்கு அந்த வலி தீக்க அவருக்கு ஒரு துணை தேவை பட்டுச்சு ஆனா அந்த துணை தேர்ந்தெடுக்குறதுல அவருக்கு சில தயக்கம் இருந்துச்சு .ஆனா இப்போ தேவா அவரோட வாழ்க்கைல இருக்கா .இனி அவரால அவளை மறுக்க முடியாது நேசிக்க மட்டும்தான் முடியும் .நேசிக்கப்படுறது ஒருவகை சந்தோஷம்ன்னா நேசிக்கிறது ஒருவகை சந்தோசம் .பாத்தீங்களா இண்ணைக்கு கூட தேவாக்கு காரம் ஒத்துக்காதுனு நம்ம கிட்ட காரம் இல்லாம சமைக்க சொல்றாரு அதெல்லாம் அவருக்கு அவசியமே இல்ல ஆனாலும் பண்ணுறாரு ஏன்னா அவருக்கு தேவா மேல பாசம் இருக்கு .என்று அமிர்தா சொல்ல அவளை. இடைமறித்து பிரசாத் பேச ஆரம்பித்தான் .

பாசம்தான் இருக்கா காதல் இல்லையா என்று கேட்டான் பிரசாத் .

அளவுக்கு அதிகமான பாசம்தான் காதலா மாறும் அப்படி பாத்தா கூடிய சீக்கிரம் உங்க பிரன்ட் காதலிக்க ஆரம்பிச்சிருவாரு ஆனா தேவாதான் பாவம் அவர பார்த்து ரொம்ப பயப்படுறா அதை மட்டும் சரி பண்ணா போதும் அவங்க ரெண்டு பேருமே கூடிய சீக்கிரம் சந்தோசமா வாழ ஆரம்பிச்சிருவாங்க .அதுக்கு உன்னோட பிரன்ட் இன்னும் கொஞ்சம் சிரிச்சு பேசணும் .நீதான் அதுக்கு அவர்கிட்ட பேசணும் .என்று சொன்னாள் அமிர்தா

அவன் இந்த அளவுக்கு பண்ணுறதே பெருசு .கொஞ்சம் டைம் கொடுப்போம் அப்போதான் எல்லாம் சரியா நடக்கும் .அப்படி எதுவும் நடக்குற மாதிரி இல்லன்னா நம்ம ஏதாவது பண்ணுவோம் . அம்மு நீ தேவா கிட்ட சூர்யா பத்தி நல்ல விஷயம் நிறைய சொல்லு அப்போதான் தேவாக்கு சூர்யா மேல இருக்க பயம் போகும் என்று பிரசாத் சொல்ல அவனை பார்த்து புன்னகை செய்தாள் அமிர்தா .

நம்ம ரெண்டு பேரும் ஒரு ஜோடியை சேர்த்து வைக்க போறோமா .ஹை ஜாலியா இருக்கு என்று அமிர்தா உற்சாகமாக சொல்ல அவளை பார்த்து புன்னகை செய்தான் பிரசாத் .

அம்மு நீ எனக்கு மனைவியா வரலன்னா நான் இப்படி சந்தோசமா இருப்பேனான்னு எனக்கு தெரியல .உன் இடத்துல என்னால வேற யாரையும் நினைச்சு கூட பாக்க முடியல என்று மகிழ்ச்சியாக சொன்னான் பிரசாத் .

நினைச்சு பாத்துராத போட்டு தள்ளிருவேன் என்று செல்ல முறைப்புடன் சொன்னாள் அமிர்தா .இருவரும் சிரித்து விட்டார்கள் அவர்கள் இரவும் அழகாக சென்றது .

அடுத்த நாள் காலை தேவா எழுந்திருக்கும்போதே சூர்யா வேலைக்கு சென்றிருந்தான்.தேவா டீ போட்டு சாப்பாடு செய்து மற்ற இருவருக்கும் கொடுத்து அனுப்பினாள் .கொஞ்சம் நேரத்தில் அவர்கள் எல்லாம் சென்று விட தேவா மீண்டும் தனியாக இருந்தாள்.அப்போது அமிர்தா வந்தாள் .அவளை பார்த்து புன்னகை செய்தாள் தேவா.

என்ன தேவா தனியா இருக்க போர் அடிக்குதா எங்க வீட்டுக்கு வாங்க .உங்கள அத்தை கூட்டிட்டு வர சொன்னாங்க என்று அமிர்தா சொல்ல தேவா சற்று தயங்கினாள் .

அட என்னப்பா நீங்க எதுக்கு இவ்ளோ தயக்கம் என்கூட வாங்க .நாங்கதான் வீட்ல இருப்போம் .என்று அமிர்தா சொல்ல தேவா வருகிறேன் என்று தலை அசைத்தாள் .

ம்ம்ம் நல்ல பொண்ணு .சரி போலாமா என்று கேட்க அவள் சரி என்று தலை அசைத்தாள் .

ம்ம்ம் உங்களை பார்த்த உடனேதான் பூ நியாபகம் வருது பூ விக்குற அக்கா நேத்து வரவே இல்லை .இண்ணைக்கு வந்தா பூ வாங்கலாம் என்று அமிர்தா சொல்லி கொண்டிருக்கும் போதே பூ விக்கும் அக்கா குரல் கேட்டது .

அமிர்தாதான் வெளியே சென்று பார்த்தாள் .பூ விக்கும் பெண் நின்று கொண்டிருந்தார் .

செல்வி அக்கா இங்க என்ன பண்ணுறீங்க .என்று கேட்டாள் அமிர்தா .

இல்லம்மா சூர்யா தம்பி காலையில என் பையன்கிட்ட இனி தினமும் இங்க பூ குடுக்க சொல்லிச்சாம் ஆதான் கொண்டு வந்தேன் .இங்க யாருமா பூ வைக்க ஆள் இருக்கா என்று பூ விற்பவர் குழப்பத்துடன் கேட்க அமிர்தா அவரை பார்த்து சிரித்தாரள் .

பூ வைக்க ஆள் வந்தாச்சு அக்கா .என்று புன்னகை செய்த படி சொன்னாள் அமிர்தா .

மாற்றங்கள் புதிது.மாற்றங்கள் இனிது மாற்றம் ஒன்றே மாறாதது 😊💐

அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது Abirami G.N

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro