
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -12
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தொடுவானம் சிவந்து
போகும் தொலை தூரம் குறைந்து
போகும் கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
இனி உன்னை பிாிய
மாட்டேன் தொலை தூரம்
நகர மாட்டேன் முகம் பாா்க்க
தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இரவு நேரம் சாப்பிட்டுவிட்டு தேவா அவர்கள் அறைக்கு வந்து விட்டாள் .வந்தவள் மாத்திரை போட்டுவிட்டு கொஞ்சம் நேரம் பூஜாவிடம் வீடியோ கால் மூலம் பேசிவிட்டு அமர்ந்திருந்தாள்.சூர்யா உள்ளே வந்தான் அவன் வந்த உடன் தரையில் அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றாள் .
என்ன மரியாதையா .மரியாதை எல்லாம் மனசுல இருந்தா போதும் .சரி ஏன் தரையில உக்காந்து இருக்க ஒண்ணு சேர்ல உக்காரு இல்ல பெட்டுல உக்காரு அதை விட்டுட்டு ஏன் தரையில உக்காந்துருக்க .என்று கேட்டான் சூர்யா .
தனக்கு பெட்டில் உக்காருவதை விட தரையில் உட்காருவதுதான் பிடித்திருக்கிறது என்று சைகை மூலம் சொன்னாள் தேவா ஆனால் அவள் சொன்னது சூர்யாக்கு புரியவில்லை .
என்ன சொல்ற நீ .பெட் விட தரை கிளீனா இருக்குன்னு சொல்றியா என்று கேட்டான் சூர்யா .
இல்லை என்று தலை அசைத்தாள் தேவா .
என்ன சொல்ல வர்ற நீ இப்போ என்று கேட்டான் சூர்யா. அவன் கேட்பது கோபமாக கேட்பது போல இருந்ததால் அவனை பயத்துடன் பார்த்தாள் தேவா [me; சிலர் அப்படித்தான் பேசுறத கேட்டாலே ரொம்ப கோப படுவாங்களோன்னு தோணும் ஆனா உண்மையா அவங்க ரொம்ப நல்ல மனசு உள்ளவங்களா இருப்பாங்க .நான் அந்த மாதிரி ஆட்களை பாதுருக்கேன் .நீங்களும் பாத்துருபிங்க .அந்த மாதிரி ஒரு கேரக்டர்தான் சூர்யா]
அவள் பயப்படுவதை உணர்ந்த சூர்யா அவள் அருகில் செல்ல ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க அவள் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தாள் அதை பார்த்தவனுக்கு கொஞ்சம் கஷ்டமாகி விட்டது. இருந்தாலும் அவன் தன்னுடைய மனதில் என்ன நினைக்கிறான் என்பதை வெளிகாட்டி கொள்ள விரும்பவில்லை. சில நொடிகள் தயங்கியவன் பிறகு அவள் அருகில் சென்றான்.
என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு.குடிச்சிட்டு வந்து பொண்டாட்டியை அடிச்சு தொந்தரவு பண்ணுவாங்களே அந்த மாதிரி கேவலமான ஜென்மங்கள் தெரியுதா என்று கேட்டான் சூர்யா. இல்லை என்பது போல வேகமாக தலை அசைத்தாள் தேவா.
அப்புறம் என்ன பாத்து எதுக்கு நீ பயப்படுற என்று கேட்டான் சூர்யா. தேவா அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.அவள் அப்படி காரணமே இல்லாமல் பயம் கொள்வது சூர்யாக்கு கோபத்தை கொடுத்தது.
என் முகத்தை பாத்து பேசு என்று கடுமையான குரலில் சூர்யா சொல்ல தேவா அதிர்ந்து விட்டாள். அவனை பயத்துடன் நிமிர்ந்து பார்க்க அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. அதை பார்த்த சூர்யாக்கு இன்னும் கஷ்டமாகி விட்டது.
இங்க பாரு கண்ணீர இப்படி தேவை இல்லாம வேஸ்ட் பண்ணாத. நான் இப்படித்தான் பேசுவேன். நான் உன்மேல கோபமா இல்லை. நான் கோபமா இருந்தாலும் அதை உன்மேல நான் காட்ட மாட்டேன். அது என்னோட பழக்கமும் இல்லை. நான் பேசுறது உனக்கு பயமா இருந்தா என்னால என்ன மாத்திக்க முடியாது. ஆனால் நீ இப்படி தொட்டதுக்கு எல்லாம் பயப்படறதை மாத்திக்கலாம் . எல்லாத்துக்கும் பயந்தா நீ காலம் முழுக்க இன்னொருத்தர் நிழல்ல வாழுற மாதிரிதான் இருக்கும். அதனால பயப்படறதை நிறுத்து. அதுவும் என்ன பார்த்து பயப்படறதை முதல்ல நிறுத்து.என்று சூர்யா சொல்ல தேவா அவனை பார்த்து சரி என்பது போல தலை அசைத்தாள்.
ம்ம்ம் குட். சரி எங்க படுக்க போற என்று சூர்யா கேட்க அவள் தரையில் என்று சைகை செய்தாள்.
ஏன் மேடம் பெட்ல படுக்க மாட்டிங்களா என்று சூர்யா கேட்க தேவா அவனை பார்த்து மீண்டும் தரையில் படுத்து கொள்வதாக சொன்னாள்.
இங்க பாரு நீ தரையில படுக்குறது ஓகேதான். ஆனால் எனக்கு எப்போ வேலை வரும்ன்னு எனக்கே தெரியாது. திடீர் திடீர்னு நான் போக வேண்டியது அப்போ எல்லாம் என்னால உன்ன எழுப்ப முடியாது.உன்ன தாண்டி தாண்டி போனா உனக்குதான் தூக்கம் போகும். அதனால நான் சொல்றதை பண்ணு நீ பெட்ல அந்த பக்கம் படுத்துக்கோ. நான் இந்த பக்கம் படுத்துகிறேன். அப்டின்னா உனக்கும் தொந்தரவு இருக்காது எனக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. புரியுதா என்று கேட்டான் சூர்யா. தேவா அவனை பார்த்து சரி என்பது போல தலை அசைத்தாள்.ஆனால் அவள் முகம் தயக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தது.
உனக்கு என்கூட ஒண்ணா ஒரே கட்டில தூங்கணும்ன்னு நினைச்சா கஷ்டமா இருக்கா என்று கேட்டான் சூர்யா. அவன் அப்படி கேட்டதும் எப்படி தன்னுடைய மனதில் நினைப்பது எல்லாம் அவனுக்கு எப்படி புரிகிறது என்று புரியாமல் பார்த்தாள் தேவா .
நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு எப்படி தெரியுதுன்னு பாக்குறியா நீ என்ன நினைக்கிறேன்னு உன்னோட முகத்தை பாத்தாலே சொல்லிடலாம்.அதான் என்னால ரொம்ப சுலபமா சொல்ல முடியுது. அத விடு நம்ம கதைக்கு வருவோம். நான் கீழ படுக்குறத பத்தி பிரச்சனை இல்லை. எத்தனை நாள் அந்த மாதிரி படுக்க முடியும். நான் எல்லாம் இடிக்க மாட்டேன் நான் எப்படி தூங்குவேனோ அப்டியேதான் எழுந்திருப்பேன். நீ எதாவது இடிப்பியா என்ன. என்று கேட்டான் சூர்யா
இல்லை என்று வேகமாக தலை அசைத்தாள் தேவா.
அப்புறம் என்ன பிரச்சனை நம்ம ஒரே ரூம்லதான் இருக்கோம் ஒரே பெட்ல தூங்கலாம். நான் உண்மையை சொல்றேன் எனக்கு தரையில படுக்குறது சுத்தமா பிடிக்காது. உனக்கு நான் இங்க உன்கூட படுக்குறது கஷ்டமா இருந்தா சொல்லு அப்போ எனக்கு கீழ படுக்குறதுல பிரச்சனை இருக்காது. விருப்பம் உன்னோடது. நீ என்ன நினைக்கிறியோ அதை நான் பண்றேன். என்று சூர்யா அவன் சொன்னதை கேட்டவள் அப்படியே சென்று கட்டிலில் படுத்து கொண்டாள். அவளை பார்த்து சூர்யாக்கு சிரிப்புதான் வந்தது. அதே நேரம் சூர்யாக்கு ஆச்சர்யமாக கூட இருந்தது அவன் இந்த அளவுக்கு பேசி இருக்கிறான் என்பதை நினைக்கும் போது. தன்னை பற்றி தானே யோசித்து கொண்டவன் பிறகு கொஞ்சம் நேரத்தில் உறங்க சென்றான். இருவரும் படுத்த கொஞ்சம் நேரத்திலேயே உறங்கி போனார்கள்.
கொஞ்சம் நேரம் சென்றது சூர்யா நல்ல ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்று விட்டான் .நன்றாக உறங்கி கொண்டு இருந்தவனுக்கு திடீரென அவன் அம்மா விட்டு சென்ற பிறகு அவர்கள் பிறரால் அவமான படுத்தப்பட்டது எல்லாம் கனவு போல வந்தது அந்த கனவு அவனை வேதனை படுத்த சட்டென்று எழுந்து விட்டான் சூர்யா .அவனுக்கு தூக்கமே போனது போல ஆகிவிட்டது .
எழுந்து அப்படியே அமர்ந்தவனுக்கு தேவை இல்லாத அவன் கடந்த காலம் நினைவுக்கு வந்தது .இதை போன்ற நினைவுகள். எல்லாம் வந்தால் அவன் அதற்கு மேல் உறங்கவே மாட்டான் சில நேரம் ஏதாவது புக் எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவான் அந்த அளவுக்கு அவனுக்கு அந்த நினைவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் .
அவன் அப்படியே தலையில் கை வைத்து கொண்டு உட்கார்ந்து இருந்தான் .அப்போது தேவா திரும்பி படுக்க சூர்யா கவனம் அவள் பக்கம் திரும்பியது .அந்த அறை எப்போதும் வெளிச்சம் நிறைந்ததாக இருக்கும்.திரைசீலை போடவில்லை என்றால் தெரு விளக்கு வெளிச்சத்தில் அந்த அறையில் எப்போதும் மந்தமான ஒளி இருந்து கொண்டே இருக்கும் .
சூர்யா தேவாவை பார்த்தான் அவனுக்கு முதன்முதலில் அவளை பார்த்தது நினைவுக்கு வனந்தது .அவள் அன்று நடந்து கொண்டது இவனை பார்த்து பயந்தது எல்லாவற்றையும் மனதுக்குள் நினைத்து பார்த்தான் .தேவா பற்றி நினைக்க ஆரம்பித்தவனுக்கு அந்த கசப்பான நினைவுகள் எல்லாம் எங்கே சென்றன என்று தெரியாமல் போனது .அவன் எண்ணம் முழுவதும் தேவாதான் இருந்தாள் .அவளை பற்றி நினைக்கும்போதே அவன் முகத்தில் தானாக புன்னகை தோன்றியது . பெரிதாக புன்னகை செய்யவில்லை என்றாலும் அவன் முகத்தில் மிகவும் சிறிய புன்னகை தோன்றியது.அவளை பார்த்து கொண்டே இருந்தான்.எப்போதும் கசப்பான நினைவுகளை மறக்க முடியாமல் பல மணிநேரம் போராடுபவனை ஒரு வார்த்தை கூட பேசாமல் சின்ன சைகை கூட செய்யாமல் சரி செய்து விட்டாள் தேவா .இந்த விஷயம் தேவாக்கு கூட தெரியாது .அவளை பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவள் தலையை வருடி கொடுக்க வேண்டும் போல இருந்தது .எனவே கையை அவள் தலைக்கு அருகே கொண்டு சென்றான் .ஆனால் சட்டென்று ஒரு தயக்கம் வந்து விட தேவை இல்லாமல் எதுவும் செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டான்.பிறகு அவளை பார்த்தபடி படுத்தவன் கொஞ்சம் நேரத்தில் உறங்கியும் போனான் .
காலை பொழுது அழகாக விடிந்தது .தேவா எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தாள் .சூர்யா அவளுக்கு முன்பே எழுந்து குளித்து விட்டான் .அவன் வழக்கம் போல காபி போட்டு கொண்டிருந்தான் .வாசல் பெருக்கி கொண்டிருந்தான் கிருஷ்ணா .அவன் அருகில் சென்ற தேவா தான் அந்த வேலையை பார்ப்பதாக சைகை செய்தாள்.
இல்ல வேண்டா அண்ணி உங்களுக்கே அடி பட்டுருக்கு நீங்க உங்களுக்கு சரியானத்துக்கு அப்புறம் பண்ணுங்க நான் இந்த வேலை எல்லாம் பண்ணுறேன். எனக்கு பழக்கம்தான் என்று சொன்ன. கிருஷ்ணா அவன் வேலையை பார்க்க ஆரம்பிக்க தேவா என்ன செய்ய என்று தெரியாமல் மீண்டும் வீட்டுக்குள் வந்தாள் .தேவா டீ கப் உடன் வெளியே வந்தான் .
நான் டீ போட்டுட்டேன் போய் எடுத்து குடி என்று சொன்னான் சூர்யா .அவனை பார்த்து சரி என்பது போல தலை அசைத்தவள் கிச்சன் பக்கம் சென்றவள் டீ. எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.கொஞ்சம் நேரம் ஆனது .
சாப்பாடு கூட சூர்யா செய்து விட்டான் .எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்
.
தோசை கார சட்னி செய்திருந்தான் சூர்யா .கார சட்டினி அவ்வளவு காரமாக இருந்தது .தேவாவை தவிர மற்ற மூவரும் சாதாரணமாக சாப்பிட ஆரம்பித்தார்கள் .தேவாக்குதான் அந்த காரத்தை தாங்க முடியவில்லை .அவளால் சாப்பிட முடியும் என்று தோன்றவில்லை .ஆனாலும் அவளுக்கு வேண்டாம் என்று சொல்ல தைரியம் இல்லை .இருக்கும் இரண்டு தோசையை அவள் சாப்பிட்டு முடித்து விடலாம் என்று நினைத்தாள்.ஆனால் அண்ணி மீது உள்ள பாசத்தில் இன்னும் இரண்டு தோசையை எடுத்து வைத்த கிருஷ்ணா .அவள் வேண்டாம் வேண்டாம் என்று சைகை செய்தும் சட்னியை வைத்து விட்டான் .தேவாக்கு ஏற்கனவே காரத்தில் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது.அவ்வளவு நேரம் தலை குனிந்து உட்கார்ந்து இருந்தவள் கிருஷ்ணாவிடம் வேண்டாம் என்று சைகை செய்யதான் தலை நிமிர்ந்தாள் முதலில் அவள் கண்ணில் இருந்த கண்ணீரை பார்க்காத கிருஷ்ணா பிறகுதான் கவனித்தான் .
அண்ணி ஏன் அழறிங்க என்று சட்டென்று கிருஷ்ணா கேட்க அவளை அப்போதுதான் சூர்யா பார்த்தான் .தேவா அவனை பார்ப்பதை தவிர்த்தாள் .தேவா நிலைமை செல்வத்துக்கு புரிந்தது .
என்னம்மா நீ காரம் அதிகமா சாப்பிட மாட்டியா என்று கேட்டார் செல்வம் தேவா ஆமா என்பது போல தலை அசைத்தாள் .
காரம் அதிகம் சாப்பிட மாட்ட அப்படின்னா முதல்ல சொல்ல வேண்டியது தான.அதை விட்டுட்டு எதுக்கு இப்படி கஷ்டபட்டு சாப்பிடுற என்று சூர்யா கேட்க அவன் கேட்பது அவளுக்கு திட்டுவது போல இருந்தது .
சூர்யா எதுக்கு இப்படி பேசுற .நீ பேசுறது கோபமா பேசுற மாதிரி இருக்கு .கொஞ்சம் பொறுமையா இரு என்று சொன்ன செல்வம் தேவாவை பார்த்தார் .
இங்க பாரும்மா உனக்கு சாப்பிட பிடிகலன்னா விட்டுடு .கிருஷ்ணா அண்ணிக்கு போய் சீனி கொண்டு வா என்று சொல்ல கிருஷ்ணா சீனி எடுத்து வந்து கொடுத்தான் .அதை வைத்து தோசை சாப்பிட்டாள் தேவா .கொஞ்சம் நேரத்தில் எல்லோரும் சாப்பிட்டு முடிக்க சூர்யா அவன் அறைக்கு சென்றான் .
மாத்திரை எடுக்க வேண்டியது இருந்ததால் தேவா உள்ளே சென்றாள் .சேரில் அமர்ந்திருந்த சூர்யா அவளை அழைத்தான் .
தேவா அவள் அருகில் சென்று நின்றாள்.அவள் அவன் முகத்தை பார்த்தாள் .
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.நான் உன்கிட்ட பேசுற அளவுக்கு யார்கிட்டயும் பொறுமையா பொறுமையா பேசுனதே இல்ல அதான் உண்மை .அப்படி இருந்தும் நீ ஏன் இப்படி பயப்படற .நான் பொறுமையா பேசுறப்போவே நீ இப்படி பயப்படுறன்னா நான் கோபப்பட்டா நீ என்ன ஆவ.இங்க பாரு உனக்கும் உன்னோட வாழ்க்கைல நிறைய கஷ்டம் இருந்துருக்கும் அதை எல்லாம் நான் உன்கூட இருந்து பாக்கல . பயம் தப்பு கிடையாது .ஆனா எல்லாத்துக்கும் பயப்படுறது ரொம்ப தப்பு.எனக்கும் சில விஷயங்கள் ரொம்ப கஷ்டத்தை தரும் ஆனா எனக்கு அதுல இருந்து விலகி போக தெரியும் .நீயும் விலகி போக கத்துக்கோ .விலகி போக வேண்டிய இடத்துல விலகி போணும் எதிர்த்து நிக்க வேண்டிய இடத்துல எதிர்த்து நிக்கணும் .எல்லாத்துக்கும் ஆமான்னு சொல்லணும்னு அவசியம் இல்லை சில விஷயம் முடியாதுன்னும் சொல்லாம்.இனிமே சின்ன விஷயமோ பெரிய விஷயமோ உனக்கு பிடிகலன்னா முதலிலேயே அதை வெளிப்படுத்த கத்துக்கோ .பிடிக்காத ஒரு விஷயம் சின்னதோ பெருசோ அதை ஏத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லை .உனக்கு நான் சொல்றது புரியுதா என்று சூர்யா கேட்க தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் .
அப்புறம் நம்மள நம்மதான் கவனிச்சிகணும் மத்தவங்களுக்கு எப்போவும் நம்ம நியாபகம் இருக்க மாட்டோம் .என்னையும் சேர்த்துதான் சொல்றேன்.இந்த படத்துல வர்ற மாதிரி சாப்டியா தூங்குனியான்னு மணிக்கு ஒருமுறை நான் கேக்க மாட்டேன் சாப்பாடு இருக்கும் நீ சாப்பிட்டுக்கோ .சாப்பிடியா செல்லம்ன்னு கேக்குறது நீ இல்லன்னு சொன்னா டென்ஷன் ஆகுறது எல்லாம் எனக்கு வராது[me; அய்யா இப்படி பொய் சொல்ல கூடாது அய்யா] .அதனால உன்ன நீதான் பாத்துக்கணும் என்று சூர்யா சொல்ல சரி என்று தலை அசைத்தாள் தேவா.
ம்ம் குட் என்று சொன்னவன் ரூமை விட்டு வெளியே போக செல்ல அப்போதுதான் அவள் மாத்திரை போட வேண்டும் என்னும் விஷயம் அவனுக்கு நியாபகம் வந்தது .சட்டென்று நின்றவன் அவளை பார்க்க அவள் இந்த முறை பயம் இல்லாமல் என்ன என்பது போல பார்த்தாள் .
மாத்திரை போட்டியா என்று கேட்டான் சூர்யா இல்லை என்பது போல தலை அசைத்தாள் தேவா.
இவ்ளோ நேரம் மாத்திரை போடாம என்ன பண்ண .மாத்திரை எங்க என்று கோபமாக கேட்டவன் தேவாவை பார்க்க அவள் சூர்யாவை வினோதமாக பார்த்தாள் .அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தது சூர்யாக்கு .
என்னடா சாப்பிடியான்னு கேட்டு கோப படமாட்டேன் சொன்னவன் இப்போ இப்படி பேசுறானேன்னு தான நீ யோசிகிறியா என்று சூர்யா கேட்க தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் .
எப்போவும் கேக்க மாட்டேன்னு தான் சொன்ன .எப்போயாவது கேப்பேன் .ம்ம் நீ மாத்திரை மறக்காம சாப்பிடு நான் முக்கியமான கால் பண்ணனும் என்று சொன்னவன் ரூம் விட்டு வெளியே வந்து வாசல் பக்கம் வர பிரசாத் மீது மோதி நின்றான் பிரசாத் அருகில் அமிர்தா நின்றாள் .
டேய் சூர்யா நீ ஏண்டா திருடன் மாதிரி வர்ற என்று கேட்டான் பிரசாத் .
அரஸ்ட் பண்ண ஆள் ரெடியா இருக்கு அதான் என்று சட்டென்று சொன்னவனை பிரசாத் வினோதமாக பார்க்க வராத போனை காதில் வைத்து கொண்டு வெளியே சென்றான் சூர்யா .அதை பார்த்து புன்னகை செய்தான் பிரசாத்.அமிர்தாவும் புன்னகை செய்தாள் .
.................
அதே புன்னகையுடன் அடுத்த அப்டேட்டில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது Abirami G.N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro