Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -11

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கண்களில் சோகம் என்ன
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும்
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே
உன்னை பாதுகாப்பேன்
நானே நானே[me; லைன் நல்லா இருக்குல்ல ]
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

சூர்யா வீட்டில்தான் பிரசாத் குடும்பத்தினர் எல்லோரும் இருந்தார்கள் .அமிர்தா குழந்தை வைத்திருக்க கிருஷ்ணா அருகில் சஞ்சனா அமர்ந்திருந்தாள் .குழந்தையாக இருந்ததால் அவளுக்கு என்ன பிரச்சனை என்பது புரியவில்லை .ஆனால் ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவளுக்கு தெரிந்தது .பிரசாத் அம்மா அப்பா செல்வத்திற்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தார்கள் .

அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்ன்னு நம்மளும் எவ்ளோ ஆசை பட்டோம்.புரியுது அவன் பண்ணது தப்புதான் .ஆனா அவன் ஒண்ணும் யோசிக்காம பண்ணுற பையன் இல்லையே .அவன் ரொம்ப பொறுப்பான பையன் அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பான் அப்படி இருக்கும்போது அவன் இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கான்னா அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும் என்று சொன்னார் பிரசாத் அப்பா சுப்ரமணியம் .

செல்வம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவர் மௌனமாக இருந்தார் .

இங்க பாருங்க அண்ணா உங்களுக்கு சூர்யா மேல கோப பட எல்லா உரிமையும் இருக்கு .ஆனா அதை எல்லாம் வீட்டுக்குள்ள வச்சி பேசி முடிங்க .எது எப்படியோ. அவன் வாழ்க்கைல அந்த பொண்ணுதான் மனைவின்னு வரணும்னு இருக்குன்னா யாரால மாத்த முடியும்.அதனால அவன் வந்ததுக்கு அப்புறம் பொறுமையா பேசலாம் என்று பிரசாத் அம்மா கோமதி சொன்னார் .

எனக்கு மட்டும் அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு அவன் குடும்பம் குழந்தைன்னு வாழணும் ஆசை இல்லையா .அவனுக்கு கல்யாணம் ஆனது எனக்கு ரொம்ப சந்தோசம் ஆனா யாரும் இல்லாத மாதிரி கல்யாணம் பண்ணி இருக்கான் அதான் கஷ்டமா இருக்கு.ஏற்கனவே சொந்தகாரங்க மத்தியில எனக்கு நல்ல பேர் இப்போ ஒரு பொண்ணு பாத்து பையனுக்கு கல்யாணம் கட்டி வைக்க தகப்பனுக்கு முடியல அதான் பையன் இப்படி வாய் பேச முடியாத பொண்ண கல்யாணம் பண்ணிட்டான்னு பேசுவாங்க .செய்யாத தப்புக்கு பேச்சு வாங்குறது எனக்கு ஒண்ணும் புதுசு இல்ல. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லணும்னு அவனுக்கு தோணலையா என்ன .நான் அவனை எதுவும் சொல்ல போறது இல்லை .பசங்க பெத்தவங்ளை பாக்காம இருக்க முடியும் .ஆனா பெத்தவங்க அப்படி இருக்க முடியாதே என்று மிகவும் வருத்தப்பட்டு பேசி கொண்டு இருந்தார் செல்வம் .அந்த இடத்தில் எல்லோரும் டென்சனாக இருக்க அங்கே சந்தோசமாக இருந்தது கிருஷ்ணா மட்டும்தான் .அதை அமிர்தா கவனிக்கதான் செய்தாள் .

அமிர்தா பெரியவர்களை விட்டுவிட்டு கிருஷ்ணாவிடம் ரகசியமாக பேச ஆரம்பித்தாள் .

டேய் இங்க எல்லாரும் என்ன பேசிட்டு இருக்காங்க .நீ மட்டும் ரொம்ப ஜாலியா இருக்க மாதிரி இருக்க என்று கேட்டாள் அமிர்தா .

அக்கா நானும் பாத்துட்டு இருக்கேன் வந்ததுல இருந்து ஒரே மாதிரிதான் பேசிட்டு இருக்காங்க .இவங்களுக்கு எப்படியோ எனக்கு அண்ணாக்கு கல்யாணம் ஆனது ரொம்ப சந்தோசம் .வர்ற அண்ணி ஒரு டீச்சர் மாதிரி போலீஸ் மாதிரி இல்லாம அண்ணி மாதிரி இருந்தா நல்லா இருக்கும் .எப்படி இருந்தாலும் அப்பா ஏத்துப்பாரு .இந்த டீச்சர் கூடவும் போலீஸ் கூடவும் இனி என்னால வாழ முடியாது .அண்ணி பேச மாட்டாங்கன்னா கூட பரவாயில்லை எனக்கு ஒரு பிரண்ட் இருக்கான் அவனுக்கு கூட பேச வராது .ஆனா அவன் பேசுறது எனக்கு புரியும் .அதனால எனக்கு பிரச்சனை இல்ல என்று அமிர்தாக்கு விளக்கம் கொடுத்தான் கிருஷ்ணா. உண்மையை சொல்ல போனால் இந்த ரணக்களத்திலும் ஒரு குதூகலம் என்னும் நிலமையில்தான் இருந்தான் கிருஷ்ணா .

சூப்பர் டா கிருஷ்ணா .இப்படித்தான் இருக்கணும் .எனக்கும் ஒரு பிரண்ட் கிடைச்சா சூப்பரா இருக்கும் .ம்ம்ம் பாப்போம் என்ன நடக்க போகுதுன்னு என்று சொன்னாள் அமிர்தா

இரவு 7 மணி அளவில் வந்து சேர்ந்தார்கள் மூவரும் .பிரசாத் கண்டிப்பாக சரியான திட்டு கிடைக்கும் கோபத்தில் நான்கு அறை கிடைத்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று நினைத்து கொண்டு இருந்தான் .ஆனால் அமிர்தா அவர்களை ஆரத்தி தட்டுடன் வரவேற்றாள் .அது பிரசாத்க்கே கொஞ்சம் ஆச்சார்யமாகதான் இருந்தது .அமிர்தாவிடம் என்ன நடக்கிறது என்று கண்ணால் கேட்டான் பிரசாத் .அப்புறம் எல்லாம் சொல்வதாக சொன்ன அமிர்தா ஆரத்தி எடுத்துவிட்டு உள்ளே செல்ல சொன்னாள் .பிரசாத்தின் அம்மா அப்பா கிருஷ்ணா எல்லோரும் வெளியே இருந்தார்கள் செல்வம் மட்டும் வெளியே இல்லை .அதை சூர்யா கவனிக்கதான் செய்தான் .

அமிர்தா உள்ளே செல்ல சொன்னாள் .தேவாக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது அதை உணர்ந்த சூர்யா அவள் கையை பிடித்துகொண்டு உள்ளே அழைத்து சென்றான் .தேவா அவன் உடன் சென்றாள் .வலது கால் எடுத்து வைத்து உள்ளே வர சொன்னார் கோமதி .அவளும் வலது கால் எடுத்துவைத்து வந்தாள் .எல்லோரும் மௌனமாக இருந்தார்கள் தேவாக்கு ஏதோ காட்டில் தனியாக மாட்டி கொண்டது போல இருந்தது .அதுவும் ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்றிருந்த செல்வத்தை பார்த்தாலே தேவாக்கு பயமாக இருந்தது .தேவா பயத்தில் இருக்க பிரசாத் அவளுக்கு கண்ணால் சைகை செய்தான் அவன் எதற்கு சைகை செய்கிறான் என்பது தேவாக்கு புரிந்தது.

வீட்டுக்கு வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு .

இங்க பாரும்மா உன்னோட மாமனார் அதாவது சூர்யா அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான டீச்சர் .ஆனா அதே நேரம் அவரை எல்லாருக்கும் பிடிக்கும் ஏனா அவர் அந்த அளவுக்கு நல்லவர் .படிக்கிற பசங்க வருத்தபட்டா கூட தாங்கிக்க மாட்டாரு அவ்ளோ இழகுன மனசு .அதனால அவர் மருமக பொண்ணு நீ போய் நேரா அவர் கால்ல விழுந்துடு .இல்ல ரெண்டு பேருமே சேர்ந்து கால்ல விழுந்துடுங்க .அப்போ அவர் கோபம் குறைய வாய்ப்பு இருக்கு .நீயா போய் விழுந்துர கூடாது நான் சிக்னல் கொடுக்குறப்போதான் நீ போய் விழணும்.இதுதான் ஒரே வழி என்று ஐடியா கொடுத்திருந்தான் பிரசாத்

இப்போது பிரசாத் அதுக்குதான் சிக்னல் கொடுக்கிறான் என்று புரிந்து கொண்டவள் சூர்யாவை பார்க்க சூர்யா அவளை அழைத்துகொண்டு அவள் செல்வம் முன்னாடி சென்றான் .அவர் அவர்கள் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்பாக அவர் காலில் இருவரும் விழுந்தார்கள் .காலில் விழுபவர்களை எட்டி தள்ளும் அளவுக்கு செல்வம் கல் நெஞ்சம் கொண்டவர் அல்ல .அதுவும் தன்னுடைய மகன் காலில் விழும்போது அவருக்கு கோபபட வரவில்லை.அவருக்கு திட்ட வேண்டும் என்பது கூட மறந்து நல்லா இருங்க என்று ஆசிர்வாதம் செய்தவர். அவர்கள் இருவரையும் எழுப்பினார்.

கோபம் இருக்கு .ஆனா மனசுல இருந்து சொல்றேன் நல்லா இருங்க .என்று சொன்னார் செல்வம் . அடுத்து பிரசாத் அம்மா அப்பாவிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கினார்கள் .

நல்லா இருங்க ரெண்டு பேரும் என்று ஆசிர்வாதம் செய்தார்கள் .என்னதான் அவர்கள் கிருஷ்ணா சொன்னது போல பேசிய விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசினாலும் அந்த பேச்சின் முடிவில் அவர்களை ஏற்று கொள்வது என்ற நல்ல முடிவுக்குதான் வந்தார் செல்வம் .அவர் சீரியலில் வருவது போல பழி வாங்க போகிறேன் ஒதுக்கி வைக்க போகிறேன் என்று எதுவும் சொல்லவில்லை .அவர் நடந்ததை மாற்ற முடியாது எனவே நடப்பதை ஏற்று கொள்ளலாம் என்று முடிவு செய்தார் .

விளக்கு ஏற்ற சொன்னார்கள் .தேவா அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தாள்.கிருஷ்ணா தன்னை தேவாவிடம். அறிமுகம் செய்து கொண்டான் அவளுக்கு கிருஷ்ணா பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது .கொஞ்சம் நேரம் எல்லாரும் பேசிவிட்டு அவளை சென்று ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள்.கிருஷ்ணாதான் அவளை ரூமுக்கு அழைத்து சென்றான் .

அண்ணி இதுதான் அண்ணா ரூம் .இனி. இதுதான் உங்களோட ரூம் .எங்க ரூம் அந்த சைடு இருக்கு .உங்களுக்கு டையார்டா இருக்கும் நம்ம நாளைக்கு பேசலாம் நீங்க ரெஸ்ட் எடுங்க சாப்பாடு ரெடியானதும் உங்களை கூப்பிடுறேன் என்று சொன்னவன் சென்றுவிட தேவா அந்த அறையில் நின்று கொண்டிருந்தாள். அந்த அறை பெரியதாக இல்லை ஆனால் நேர்த்தியாக இருந்தது . ஒரு கட்டில் ஒரு மேஜை .செல்பில் புத்தகங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது .போட்டோக்கள் சுவற்றில் மாட்டபட்டு இருந்தது .அவ்வளவுதான் ரூம் .அந்த ரூமை நின்ற இடத்தில் இருந்து சுற்றி பார்த்தவள் அப்படியே திரும்ப கிருஷ்ணா சூர்யா செல்வம் ஒன்றாக இருந்த போட்டோ இருந்தது .பிரசாத் குடும்பத்துடன் எடுத்த ஒரு போட்டோ இருந்தது . சூர்யாபோலீஸ் உடையில்இருக்கும் ஒரு போட்டோ இருந்தது .அங்கிருந்த ஒரு போட்டோவில் ஒரு போட்டோவில்தான் சூர்யா சிரித்து கொண்டிருந்தான் .ஏன் என்றால் அந்த போட்டோவில் சூர்யா உடன் சஞ்சனா இருந்தாள் .அது முதன்முதலில் அவன் சஞ்சனாவை பார்க்க சென்ற போது எடுத்த புகைப்படம் .இந்த ஒரு போட்டோ மட்டும்தான் சூர்யா விருப்பட்டு அவன் ரூமில் வைத்திருக்கும் போட்டோ .மீதம் எல்லா போட்டோவும் கிருஷ்ணா வைத்தது .சூர்யாக்கு இந்த அளவுக்கு சிரிக்க தெரியுமா என்று அவள் ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருக்க இருமும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள் .அங்கே சூர்யா நின்று கொண்டு இருந்தான் .அவனை பார்த்த உடன் தலையை குனிந்து கொண்டாள் தேவா .

போட்டோ எல்லாம் பாத்துட்டன்னா வர்றியா உன்கிட்ட பேசணும் என்று சொன்னவன் கட்டிலில் சென்று அமர்ந்தான் .அவள் அவனை பார்த்தபடி நின்றாள் .

என்ன இண்ணைக்கு முழுக்க நிக்க போறியா உக்காரு என்று கட்டிலை காண்பித்தான் சூர்யா .தேவா தயங்கி தயங்கி பெட்டின் ஓரத்தில் அமர்ந்தாள் .

இப்போ நான் பேசுவனா .இல்ல நீ விழுவியா இல்ல விழமாட்டியான்னு பாப்பேனா .முதல்ல ஒழுங்கா உக்காரு என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் சொன்னான் சூர்யா .தேவா ஒழுங்காக கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள் .தேவா தலை குனிந்து உட்கார்ந்து இருந்தாள்.

இங்கபாரு என்னோட முகத்தை பாத்து பேசு .இப்படி நீ தலை குனிஞ்சு இருந்தா நான் எங்க பாத்து பேசுறது .எனக்கு முகத்தை பாத்து பேசுறது மட்டும்தான் வரும் .நான் உன்ன கடிச்சு சாப்பிட்டுட மாட்டேன் அதனால என்ன பாரு என்று சூர்யா சொல்ல அவளை நிமிர்ந்து பார்த்தாள் தேவா .

குட் என்று சொன்னான் சூர்யா .அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான் என்பது போல பார்த்தாள் தேவா .

ஓகே .இப்போ நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வைப் ஆகிட்டோம் .ஆனா அதுக்காக நான் உன்ன எந்த விதத்திலயும் தொந்தரவு பண்ண மாட்டேன் .நீ இங்க நீயா இருக்கலாம் .அதே மாதிரி நீயும் என்ன தொந்தரவு பண்ண கூடாது .இத்தனை நாள் நான் எப்படி இருந்தேனோ இனியும் அப்படித்தான் இருப்பேன் .நான் சமைச்சு வச்சிட்டுதான் வேலைக்கு போவேன் .நைட் கூட அப்பா ஏதாவது சமையல் பண்ணிடுவாரு.இந்த வீட்ல நீ எந்த வேலையும் பாக்க தேவை இல்ல .நீ ரெஸ்ட் எடுக்கலாம் .எப்போவும் நீ எனக்காக எந்த வேலையும் பண்ண கூடாது .நான் வேலைக்கு போனா இப்போதான் வருவேன்னு சொல்ல முடியாது அதனால எனக்கு வெய்ட் பண்ணாம தூங்கிடணும்.உனக்கு தூக்கம் வரலன்னா நீ தூங்க வேண்டாம் அது உன் இஷ்டம் .மொத்ததுல நீ நீயா மட்டும் இரு .அதை தாண்டி உன்கிட்ட நானும் எதுவும் எதிர்பார்க்க மாட்டேன் .என்று சொன்னான் சூர்யா.தேவா அவனை மிகவும் வினோதமாக பார்த்தாள்.

என்ன அப்படி பாக்குற .என்று கேட்டான் சூர்யா .தேவா ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தவள் மீண்டும் தலை குனிந்து கொண்டாள் .

ம்ம்ம் அப்புறம் என்ன சோப்பு யூஸ் பண்ணுவ என்று கேட்டான் சூர்யா .சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.அவள் கண்ணில் அதிர்ச்சி பதட்டம் இருந்தது .அதை பார்த்த போது சூர்யாக்கு என்ன என்றே தெரியவில்லை திடீரென வார்த்தைகள் வராமல் போனது போல ஆனது .

அ அது நான் ம்ம்ம் அது நான் அந்த தப்பா எதுவும் கேக்கல .உனக்கு என்னன்ன வேணும்னு ங்க டேபிள் மேல பேப்பர் பென் இருக்கும் எழுதி குடு .நான் போய் வாங்கிட்டு வர்றேன் என்று சொன்னான் சூர்யா .

வேண்டாம் என்று தலை அசைத்தாள் தேவா.

என்ன வீட்டுக்கு விருந்துக்கு வந்துருக்கோம்ன்னு நினைப்பா உனக்கு .ஏதாவது ஒரு பொருள் வச்சி அட்ஜஸ்ட் பண்ணி ரெண்டு நாள் இருந்துட்டு மூணாவது நாள் போயிடலாம்ன்னு நினைப்பா .இனி இங்கதான் இருக்க போற அதனால உனக்கு எது தேவையோ அத எழுதி கொடு என்று சொன்னான் சூர்யா .

தேவா சரி என்று தலை அசைத்தாள் .

.............................

பிரசாத் வீட்டில் பிரசாத் அம்மா அப்பாவிடம் நன்றாக திட்டு வாங்கிவிட்டு அவன் ரூமுக்கு வந்து சேர்ந்தான் .அமிர்தா குழந்தைகளை உறங்கவைத்தவள் .நன்றாக திட்டுவாங்கிட்டு ரூமுக்கு தலையை குனிந்து கொண்டு வந்த பிரசாத்தை பார்த்து சிரித்தாள் அவளை செல்மாக முறைத்தான் .

புருஷன் அங்க அவ்ளோ திட்டு வாங்கிட்டு இருக்கேன் .ஒருமுறை என்ன காப்பாத்த வந்தியா .ஜாலியா இந்த ரூமுக்குள்ள உக்காந்துருக்க என்று கேட்டான் பிரசாத் .

அத்தை மாமா பேசுறப்போ நான் எப்படி அவங்களை எதிர்த்து பேசுறது .எனக்கு அதெல்லாம் வராதுங்க என்று அப்பாவி போல முகத்தை வைத்துகொண்டு சொன்னாள் அமிர்தா .

எப்படி இப்படி எல்லாம் அப்பாவி மாதிரி பேசுற உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் .திட்டு வாங்குனா வாங்கட்டும்ன்னு உள்ள உக்காந்து சிரிச்சிட்டுதான இருந்த என்று கேட்டவன் கட்டிலில் வந்து அமர்ந்தான் .

ம்ம்ம் அப்படியும் சொல்லலாம் என்று சொன்ன அமிர்தா சிரிக்க அவள் கன்னத்தை கிள்ளினான் பிரசாத்.

ஆஹ் ஏங்க வலிக்குது .என்று சொன்னாள் அமிர்தா .

உன்னோட ஆப்பிள் மாதிரி இருக்க கன்னத்தை கடிச்சு வைக்கலாம்னுதான் பாத்தேன் .ஆனா இப்போ சாப்பிட கூப்பிடுவாங்க அதான் உன்ன விடறேன் .என்றான் பிரசாத்

ம்ம்ம் என்றாள் அமிர்தா .

ஆனா அம்மு.இன்னொரு பொண்ண நான் கல்யாணம் பண்ணி இருந்தா கூட என்ன விட்டுருப்பாங்க என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே பிரசாத் கழுத்தில் கை வைத்தாள் அமிர்தா .

இன்னும் ஒரு வார்த்தை இந்த வாயில இருந்து வந்துச்சு உன்ன நான் கொன்னுடுவேன் என்று சொன்னாள் அமிர்தா .

அது சரி நீ என்ன வேணா பண்ணு உன்ன யாரு கேக்க போறா .ஆனா கழுத்தை நெருச்சி கொல்றதுக்கு முன்னாடி உன்னோட கண்ணு என்ன எரிச்சிரும் போலயே .நான் செத்துட்டா என்று அவன் சொல்ல அவனை கிள்ளினாள் பிரசாத் .

என்னங்க உங்க பிரச்னை .எதுக்கு இப்டி எல்லாம் பேசறீங்க .என்று கோபமாக கேட்டாள் அமிர்தா .

ஹே என்னடி நீதான ஆரம்பிச்ச நான் என்று அவன் பேசி முடிக்கும் முன்பு அவனை இடைமறித்து பேச ஆரம்பித்தாள் அமிர்தா .

ஆமா நான்தான் எல்லாம் ஆரம்பிச்சேன் எனக்குதான் அடி பட்டுச்சு .நான்தான் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணுவேன்னு சொன்ன எல்லாம் நான்தான் போதுமா என்று சொன்னவள் கண்ணில் இருந்து கண்ணீர் வர ஆரபித்தது .அதை பார்த்த பிரசாத்க்கு ஒரு கணம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை .

அம்மு அம்மு ஏன் அம்மு அழுற .ப்ளீஸ் அம்மு கோபம் இருந்தா நாலு அடி கூட அடிச்சிக்கோ இப்படி அழாத அம்மு கஷ்டமா இருக்கு .என்ன ஆச்சு அம்மு என்று மிகவும் அப்பாவியாக கேட்டான் பிரசாத் .

நானே நீங்க என்ன விட்டுட்டு தனியா கல்யாணத்துக்கு போயிட்டிங்கனு வருத்துல இருந்தேன் .உங்களை நான் எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா .நீங்க இல்லையேனு வருத்துல இருந்தா நீங்க போன் பண்ணி சின்னதா ஆக்சிடன்ட்ன்னு சொல்றிங்க எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துருக்கும் .போன்க்கு சார்ஜ் போடாம வச்சி அது ஸ்விட்ச் ஆப் ஆகி .உங்க கிட்ட மறுபடியும் பேசுற 10 நிமிசம் நடுவுல எவ்ளோமுறை செத்து செத்து பிழைச்சேன் தெரியுமா .உங்களுக்கு அப்புறம் ஒண்ணுமில்லன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் எனக்கு நிம்மதி ஆச்சு .என்ன அவ்ளோ பயப்பட வச்சிங்க அதான் நான் உங்களை நான் திட்டு வாங்கணும்ன்னு விட்டுட்டேன்.நான் கோபத்துல ஏதாவது பேசுனா கூட கூட பேசாதிங்க .என்ன சமாதானம் பண்ணுங்க .முடியலயா எழுந்து போங்க என்று சொன்னவள் அவனை பார்க்காமல் முகத்தை திருப்பி கொண்டாள்.

சின்ன சின்ன விஷயங்களுக்கு பெரிய பெரிய சண்டைகள் காதலில் அழகு
பெரிய பெரிய சண்டைகளுக்கு பிறகு சின்ன சின்ன சமாதானங்கள் காதலில் கவிதை [me; ஆமா நான் ஏன் இதை சொன்னேன்😮🤔 ]

அதை உணர்ந்த பிரசாத் அமிர்தா அருகில் சென்று அவள் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான் .அமிர்தா ஒரு வார்த்தை கூட பேசவில்லை .

அம்மு அழாத .நான்தான் வந்துட்டேன்ல .நான் கூட உன்ன எந்த அளவுக்கு மிஸ் பண்ணன்னு தெரியுமா என்று கேட்டான் பிரசாத் .

எந்த அளவுக்கு மிஸ் பண்ணிங்க .நான்தான் உங்களுக்கு அதிகம் போன் பண்ணி பேசுனேன் .நீங்க ஒண்ணும் என்று அவள் பேசிகொண்டிருக்கும் போதே அவள் இதழில் முத்தம் கொடுத்து அவளை பேச விடாமல் செய்தான் பிரசாத்.சில நொடிகளுக்கு பிறகு அவளை விட்டவன் கண்ணால் சாரி என்று சொன்னான் .

நீங்க இருக்கிங்களே என்றவளுக்கு அதற்கு மேலும் என்ன சொல்ல என்றே தெரியவில்லை .அவள் முகத்தை கையால் மூடி கொண்டாள்.

என்ன அம்மு வெக்கமா .என்ன பாரு அம்மு என்று வேண்டும் என்றே அவளை சீண்டினான் பிரசாத் .

வெக்கம் எல்லாம் ஒண்ணுமில்லை.நீங்க என்ன அப்படி பாக்காதிங்க என்று சொன்னாள் அமிர்தா .பிரசாத் அவளை பார்த்து சிரித்தான்.

அம்மு நீ இப்போ கோபமா இருக்கியா .வேணா நான் இன்னும் கொஞ்சம் உன்ன சமாதானம் பண்ணவா என்று பிரசாத் கேட்க அம்மு அவனை பார்த்தாள் .

அய்யா பண்ணது வரைக்கும் போதும் .கொஞ்சம் வெளிய போவோமா .மாமா அத்தை சாப்பிடாம வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க என்றாள் அம்மு .

போலாம் அம்மு ஆனா அதுக்கு முன்னாடி நீ என்ன எந்த அளவுக்கு மிஸ் பண்ணன்னு நான் தெரிஞ்சிக்க ஆசை படறேன் என்று புன்னகையுடன் சொன்னான் பிரசாத் .

அதை எல்லாம் உங்கள மாதிரி சில நொடியில எல்லாம் என்னால புரிய வைக்க முடியாது என்று சொன்ன அமிர்தா எழுந்து சென்று விட .அடிப்பாவி என்று வாயில் கை வைத்து கொண்டான் பிரசாத்.

..................

இங்கே தேவா அப்போதுதான் குளித்து வேறு உடை மாற்றிவிட்டு வந்தாள்.அவளுக்கு பூஜாவிடம் பேச வேண்டும் போல இருந்தது.ஆனால் அதை சூர்யாவிடம் கேட்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது .அவன் இவ்வளவு செய்த பிறகும் அவனிடம் மீண்டும் சென்று நிற்க அவ்வளவு கஷ்டமாக இருந்தது .அவள் அதையே யோசித்து கொண்டு இருக்க .சூர்யா உள்ளே வந்தான்.

தேவா உன்னோட தங்கச்சிகிட்ட பேசுனேன் .அவ உனக்கு இன்னும் அரை மணி நேரத்துல வீடியோ கால் பன்றேன்னு சொன்னா .சாப்பாடு ரெடி அதுக்குள்ள நீ சாப்பிட்டுட்டு வந்துடு .சாப்பாடு ரெடி என்று சொன்னவன் ரூமைவிட்டு வெளியேறினான்.

தேவாவால் சூர்யாவை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவே முடியவில்லை .ஒரு பக்கம் அவனுக்காக எந்த ஒரு வேலையும் செய்ய கூடாது என்று சொல்கிறான் .இன்னொரு பக்கம் அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்கிறான்.பேசுவதில் கோபம் தெரிந்தாலும் அவன் நடந்து கொள்வதில் கோபம் இல்லலை.அவனை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி போனாள் தேவா .

அதிக குழப்பங்கள் சரியாகும் இடத்தில் அதிக புரிதல்கள் தோன்றும் .(me: இது போன்ற அற்புத தத்துவங்கள் இங்கு மட்டும் கிடைக்கும் வேறு கிளைகள் இல்லை. )

புரிதல்கள் விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுவது abirami G.N

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro