
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -10
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தேவாவின் கையை பிடித்து கொண்டு சூர்யா நடக்க .அவன் உடன் அதிர்ச்சியாக இருந்தாலும் பிரசாத்தும் நடக்க ஆரம்பித்தார்.
போ டி போ இனி இந்த வீட்டு பக்கம் வந்துராத.அவன்தான் காப்பாத்துவான்னு பெரிய இவ மாதிரி போறல்ல நீ நல்லாவே இருக்க மாட்ட .நடு தெருவுலதான் நிக்க போற என்று கத்தினார் புவனா அவள் சொன்னதை எல்லாம் சூர்யா கேட்க கூட இல்லை .ஆனால் தேவாதான் பாவம் அவள் கண்ணில் கண்ணீர் தேங்கி இருந்தது .
ஒரு நிமிசம் நில்லுங்க. என்று சொன்னாள் பூஜா சூர்யா திரும்பி பார்த்தான் .
நீங்க கல்யாணம் பண்ணது இப்போ கூட்டிட்டு போறது எல்லாம் ஓகேதான் .ஆனா எங்க அம்மா பண்ண தப்புக்கு என்கிட்ட சொல்லாம போனா என்ன அர்த்தம் .என்று கேட்டாள் பூஜா .
வரணும்ன்னு நினைச்சாதான் சொல்லிட்டு போவாங்க பூஜா .தேவா கஷ்டபடுத்தணும்ன்னு நினைக்குற ஒருத்தர் இருக்குற இடத்துக்கு நான் நிச்சயம் அவளை விட மாட்டேன் .ஆனா நீங்க எப்ப வேணா நம்ம வீட்டுக்கு வரலாம் .பேசலாம் இப்போ ஏதாவது பேசணும்ன்னா உங்க அக்காகிட்ட பேசுங்க .ஆனா நான் இப்போவே சொல்றேன் உங்க அம்மா இதுக்கு மேல தேவாவை கஷ்ட படுத்துற ஒரு வார்த்தை பேசுனா கூட நான் மனுசனாவே இருக்க மாட்டேன் .என்று சொன்னான் சூர்யா.
அவன் சொன்னதை கேட்ட புவனா ஏதோ சொல்ல வர சூர்யா முறைத்தில் மௌனம் ஆனார் .
தேவா உனக்கு இனி எல்லாம் நல்லதாதான் நடக்கும் .கோவில் வரைக்கும் கூட நம்ம போல ஆனா கல்யாணம் நடந்துருச்சு .எனக்கு நிறைய பேசணும் போல இருக்கு .ஆனா காமெடியா அழுகை எல்லாம் வருது. நீ தனியா போறேன்னு நினைக்காத நான் சீக்கிரம் சென்னை வந்துரவேன்.என்று சொன்னாள் பூஜா .
இப்போ கூட எங்க கூட வரலாம்.இப்படியே போக முடியாதுல்ல எப்படியும் கோவிலுக்கும் போவோம் நீயும் வேணும்ன்னா எங்ககூட வாம்மா என்று அழைத்தான் பிரசாத் .அவனை பார்த்து எரிப்பது போல முறைத்தார் புவனா .பிரசாத் கண்டு கொள்ளவில்லை .
இல்ல இப்போ நான் வர்றது சரியா இருக்காது .நான் சென்னைக்கு வந்து பாக்குறேன் .தேவா உன்னோட பேக் மறுத்துட்ட பாரு என்று உள்ளே சென்று ஒரு பேக் எடுத்து கொண்டு வந்து கொடுத்தாள் பூஜா .அதை தேவா வாங்கினாள் .இதை எல்லாம் புவனா மௌனமாக இருந்து பார்த்து கொண்டிருந்தார் .அவருக்கு உண்மையில் மகிழ்ச்சியாகதான் இருந்தது .ஏன் என்றால் தேவாவை இந்த ஒரு காரணத்தை வைத்து இனி இந்த வீட்டில் சேர்த்து கொள்ளாமல் இருக்கலாம் என்று நினைத்தார் .அதோடு அவருக்கு சூர்யா தேவாவை அதிகம் நாள் வைத்து பார்த்து கொள்வான் என்று தோன்றவில்லை .என்னதான் இப்போது ஒரு வேகத்தில் சூர்யா திருமணம் செய்து கொண்டாலும் தேவா உடன் வாழ பிடிக்காமல் அவளை விட்டு விடுவான் என்று நம்பினார் .அப்படி தேவாவை சூர்யா கைவிட்ட பிறகு அவள் சித்தி வீடு இருக்கிறது என்று நம்பி இங்கே வந்தால் அவளை வீட்டில் சேர்க்காமல் அப்படியே துரத்தி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் .
இன்னும் வீட்டு படி கூட தாண்டாமல் இருக்கும் தேவாவை மீண்டும் யாரும் இல்லாமல் தன் வீடு வாசலில் வந்து நின்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து கொண்டிருந்தார் .அந்த கற்பனை அவருக்கு அவ்வளவு ஆனந்தத்தை கொடுத்தது.
அவர் கற்பனையில் மகிழ்ச்சியாக இருக்க தேவா சூர்யா உடன் வெளியே நடக்க ஆரம்பித்தாள் .காலை அந்த நேரத்தில் எல்லோரும் வீட்டுக்குள் வேலை செய்து கொண்டு இருந்ததால் கார் வந்ததை பார்த்ததும் ஏதோ சொந்தகாரர்க்கள் வந்திருப்பார்கள் .இல்லை சுதாகர் வந்திருப்பான் என்று நினைத்து கொண்டு அவரவர் வேலையை பார்த்து கொண்டு இருந்தார்கள் .
வாசல் வரைக்கும் வந்து அவளை பூஜா மட்டும் வழி அனுப்பி வைத்தாள் .சண்டை எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்ததால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை .
பூஜா வழி அனுப்பும்போது பாத்துக்கோங்க என்று சூர்யாவிடம் சொன்னாள் .சூர்யா பார்த்து கொள்வதாய் சொன்னான் .பிரசாத் முன்னால் உட்கார்ந்து இருந்தான் .டிரைவர் கார் ஓட்ட சூர்யா சாதாரணமாக அமர்ந்து இருக்க .தேவா அழும் நிலமையில் இருந்தாள் .அவள் கார் கதவை ஒட்டி அமர்ந்து இருந்தாள் .அவள் அருகில் இருந்த பேக் எடுத்து பின்னால் வைக்கலாம் என்று அவன் பேக்கை எடுக்க சட்டென்று அவன் அருகில் வந்ததும் அதிர்ந்து விட்டாள் தேவா .சூர்யாக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
என்ன ஆச்சு என்று கேட்டான் சூர்யா .ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தாள் தேவா .அவள் கண்ணில் தேங்கி இருந்த கண்ணீர் இப்போது இமை தாண்டி வந்து விட்டது .
இப்போ எதுக்கு அழுற என்று கேட்டான் சூர்யா .உண்மையில் அவன் அக்க்கறையில் தான் கேட்டான் ஆனால் அவன் அக்கறை அவன் கேட்ட விதத்தில் வெளிப்படவில்லை .அவன் இப்போதும் ஏதோ குற்றவாளிகளை விசாரணை செய்வது போல பார்த்தான் .அவன் பேசுவதும் கூட அப்படித்தான் இருந்தது .தேவாக்கு அவள் அழுவதை பாத்து சூர்யா கோபம் கொள்கிறான் என்று தோன்றியது .அவள் அவனை பார்த்தாள் கண்ணை கூட அசைக்கவில்லை .இதை எல்லாம் பார்த்த பிரசாத்க்கு தலையில் அடித்து கொள்ளலாம் என்று இருந்தது .
நீ இப்படி கேட்டா அழாதவங்க கூட அழுதுருவாங்க .கொஞ்சம் பொறுமையா பேசுடா சூர்யா என்று சொன்ன பிரசாத் தேவா பக்கம் திரும்பினான் .
இங்க பாரும்மா நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம்.அவன் உன்கிட்ட கோபமா பேசல.அவன் பேசுறதே இப்படித்தான் இருக்கும் .சரி என் பேர் நான் சொல்லவே இல்லையே என்னோட பேர் பிரசாத் அவனோட பிரண்ட் என்று சிரித்த முகத்துடன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான் பிரசாத் .
சூர்யாவை பார்த்து பயந்து இருந்தவளுக்கு பிரசாத் பார்த்து கொஞ்சம் நிம்மதியாக இருந்தது .அவள் அவனை பார்த்து புன்னகை செய்தாள் .லேசான புன்னகை மட்டுமே .சூர்யாக்கு அவள் அழாமல் இருந்தாலே போதும் என்று இருந்ததால் அவன் அதற்கு மேல் எதுவும் பேசவிலை அவன் தன்னுடைய பார்வையையை திருப்பினான் .கொஞ்சம் நேரத்தில் கோவிலுக்கு முன்பு கார் நின்றது.
சூர்யா காரைவிட்டு இறங்கினான் .சூர்யாவும் தேவாவும் ஒன்றாக கோவிலுக்கு செல்ல பிரசாத் போன் பேசிவிட்டு வந்தான் .
தேவா கடவுளை பார்த்ததும் அவள் மனதுக்குள் வேண்டி கொண்டது எல்லாம் அவள் சித்திக்கு அவள் மீது இருக்கும் கோபம் தீர வேண்டும் என்றும் பூஜா இந்த பிரச்சனையில் எந்த வகையிலும் மாட்டி கொள்ள கூடாது என்றும்தான் .
சூர்யா எந்த வேண்டுதலும் கடவுளிடம் வைக்கவில்லை .அவன் அமைதியாக இருந்தான் .பிரசாத் கையில் மாலையுடன் வந்தான் .அவனை வினோதமாக பார்த்தான் சூர்யா .
என்னடா என்ன அப்படி பாக்குற சும்மா தாலி கட்டிட்டு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னா சரி ஆகிடுமா .வா இங்க கோவில்ல கடவுள் முன்னாடி ஒருமுறை மாலை மாத்தி கல்யாணம் பண்ணிக்கோங்க .அப்போதான் சாட்சி எல்லாம் இருக்கும் .தேவை இல்லாத பிரச்சனை கூட வராது என்று சொன்னான் பிரசாத் .அவன் சொன்னது சரி என்று சூர்யாக்கும் பட்டது .தேவா இந்த உலகில்
தான் இல்லை என்பது போல மண்டைக்காடு பகவதி அம்மனிடம் மனதில் உள்ளதை பேசி கொண்டு இருந்தாள் .
நீ போய் அவளை கூட்டிட்டு வந்து இப்போ என்ன நடக்குதுன்னு சொல்லி இந்த மாலை மாத்துற விஷயம் எல்லாம் சொல்லு .இப்போ நான் போய் கூப்பிட்டா பயந்து அம்மன் சந்நிதி விட்டு வெளிய வராம இருந்தாலும் இருந்துருவா .நான் அவளை அப்டி என்ன பண்ணுனேன்னுதான் எனக்கும் தெரியல என்று சொன்னான் சூர்யா .
ஹாஹா நீ ஒண்ணுமே பண்ணல ஆனா நீ அந்த பொண்ணுகிட்ட ஏதோ குற்றவாளிகிட்ட பேசுற மாதிரி பேசுற.உன்ன பாத்தா கிரிமினல் கூட பயப்படுறான் .இந்த பொண்ணு கொஞ்சம் சந்தம் போட்டாலே பயப்படும் போல இருக்கு .அப்படி பட்ட பொண்ணு நீ பேசுறது கேட்டு பயப்படாம இருந்தாதான் அதிசயம் .கொஞ்சம் கோபம் இல்லாத மாதிரி பேசுடா .எங்களுக்குதான் இதெல்லாம் பழக்கம் அந்த பொண்ணு புதுசுடா கொஞ்சம் பொறுமையா பேசு என்று பிரசாத் சொல்ல அவனை மேலும் கீழும் பார்த்தவன் மீண்டும் பேச ஆரம்பித்தான் .
என்ன பாத்தா உனக்கு என்ன எப்போவும் கோபமாவே பேசுற மாதிரி இருக்கா என்று கேட்டான் சூர்யா .
இப்படித்தான் பேசாதன்னு உன்கிட்ட சொல்றேன் என்று சொன்ன என்றான் பிரசாத் .
மூச்சை இழுத்து விட்டு கொண்டான் சூர்யா அவர்கள் பேசி முடிப்பதற்குள் தேவா வந்து விட்டாள் .
வாம்ம்மா மாலை எல்லாம் மாத்திகக்கோங்க .என்று பிரசாத் சொல்ல தேவா சூர்யாவை பார்த்தாள் .
ஓஹோ இப்போவே புருஷன் சொன்னாதான் எதா இருந்தாலும் பண்ணுவிண்களோ என்று பிரசாத் கேட்க தேவா பிரசாத்தை பார்த்தாள்.
டேய் இப்படி தேவை இல்லாம பேசுறதை நிறுத்திட்டு ஆகுற வேலையை பாப்போமா என்று கேட்டான் சூர்யா பிரசாத் தலை அசைத்தான் .
அப்போது அர்ஜுன் மற்றும் அவன் புது மனைவி வந்தார்கள் .அவர்களை பிரசாத்தான் வர சொல்லி இருந்தான் .அவர்கள் வந்த பிறகு தேவா மற்றும் சூர்யா மாலை மாற்றி கொண்டார்கள் .சூர்யா அவள் வெறும் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டான் .பிறகு கொஞ்சம் நேரம் கோவிலில் இருந்து அங்கே உள்ள வேலை எல்லாம் முடித்துவிட்டு அர்ஜுன் மற்றும் அவன் மனைவியிடம் விடைபெற்று சென்றார்கள் .
கொஞ்சம் தூரம் சென்றதும் சூர்யா சட்டென்று தேவா பக்கம் திரும்பினான் .அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தவள் அவனை பார்த்தாள் .
பிரசாத் சொன்னதை மனதில் வைத்து கொண்டு சூர்யா தன்னால் முடிந்த வரை பொறுமையாக பேசினான்.
சாப்பிடியா என்று கேட்டான் சூர்யா .
தேவா இல்லை என்று சைகை செய்தாள் .
அண்ணா போற வழியில ஹோட்டல்ல நிறுத்துங்க என்று டிரைவரைபார்த்து சொன்னான் சூர்யா .
டிரைவர் சரி என்று சொன்னார் .கொஞ்சம் நேரத்தில் .கார் ஹோட்டல் பக்கம் நின்றது .
வா போய் சாப்பிடலாம் என்று பொறுமையாக அழைத்தான் சூர்யா .தேவா வேண்டாம் என்று சைகை மூலம் சொன்னாள் .உண்மையில் அவளுக்கு பசி என்பது கொஞ்சம் கூட இல்லை அதனால் அவள் வேண்டாம் என்று சொன்னாள் .சூர்யாக்கு சாப்பிட சொல்லி கெஞ்சுவது எல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காத வேலை .இருந்தாலும் அவளுக்காக கேட்டான் .
சாப்பிடாம பட்டினியா இருக்க போறியா என்று கேட்டான் சூர்யா .இப்போது அவன் குரலில் கண்டிப்பு தெரிந்தது .தேவா உடனே தான் சாப்பிடுவதாய் ஒப்பு கொண்டாள் .
பிரசாத்க்கு அவர்கள் இருவரையும் பார்க்க என்னவோ கண்டிப்பான அம்மாவும் குழந்தையும் போல இருந்தது .சூர்யாவை பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்டான் .பிறகு 4 பேரும் ஹோட்டல்க்கு செல்ல தேவா 2 தோசை ஏதோ பேருக்கு சாப்பிட்டாள் அதுவும் சூர்யா இருந்ததால்தான் சாப்பிட்டாள் .
கொஞ்சம் நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வந்தவள் காரில் உட்கார மாத்திரை எங்க என்றான் சூர்யா .அவள் பேக்கை நோக்கி கை காட்ட சூர்யா மாத்திரை எடுத்து கொடுத்தான் .அவளும் போட்டு கொண்டாள் அப்போதுதான் அவள் சூர்யா கையில் இருந்த காயத்தை பார்த்தாள் .அவளிடம் காயத்துக்கு போடும் மருந்து இருந்தது . தேவையான பொருள் எல்லாம் கொடுத்து விட்டது பூஜாதான் .
அவள் காயத்துக்கு போடும் மருந்தை எடுத்து கையில் வைத்து கொண்டாள் .சூர்யா போன் பார்த்து கொண்டு இருந்தான் பிரசாத் மற்றும் டிரைவர் இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள் .
சூர்யா அவள் தன்னை பார்க்கிறாள் ஏதோ கேட்க விரும்புகிறாள் என்பதை உணர்ந்து கொண்டான் எனவே அவன் தேவா பக்கம் திரும்பி என்ன என்று கண்ணால் கேட்டான் .
அவள் அவன் கையில் இருந்த காயத்தை காண்பித்தாள் .அவன் கையில் உள்ள காயத்தை பார்த்தான்.
ம்ம்ம் இது சின்ன காயம்தான் என்று சொன்னான் சூர்யா அவன் அதை சின்ன காயம் என்று சொன்னது தேவாக்கு ஆச்சார்யமாக இருந்தது .தேவா தன்னுடைய கையில் இருக்கும் மருந்தையும் பார்த்தாள் .அவனையும் பார்த்தாள் .
என்ன என்று கேட்டான் சூர்யா .அவனை மருந்து போட்டு கொள்ளும்படி சைகை செய்தாள் தேவா .சூர்யா அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து சொல்ல போக அவள் கண்ணால் மருந்து போட்டு கொள்ள சொல்ல கெஞ்ச .சட்டென்று யார் சொல்வதையும் மறுத்து பேசுபவன் அவள் விழிகள் பேசும் மொழியை மறுத்து பேச முடியாமல் தடுமாறி போனான் .அவளிடம் முடியாது என்று சொல்ல மனம் இல்லலாதவன் அவளிடம் இருந்து மருந்தை வாங்கினான் .அவனை பார்த்து லேசாக புன்னகை செய்தவள் மீண்டும் வெளியே தெரியும் காட்சி பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பினாள் .
அதே நேரம் இங்கே ஊரில் தேவா சென்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது .சிலர் தேவா தப்பித்து விட்டாள் என்று நினைர்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள் .சிலர் புவனாக்கு ஆறுதல் சொன்னார்கள் .வள்ளி தேவா சூர்யா நேற்றே ஓடி போக இருந்ததாகவும் விபத்து நடந்ததாகவும் அதனால்தான் இன்று ஓடி போனதாக தனி கதை சொன்னார் அதையும் பலர் நம்பினார்கள் .பூஜா இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை .அவள் வீட்டில் உள்ள கும்பல் சென்றால் சூர்யாக்கு போன் செய்யலாம் என்று காத்திருந்தாள்.
------
அதே நேரம் இங்கே தேவா மாத்திரை போட்டதால் தூங்கி கொண்டு இருந்தாள் .பிரசாத்க்கு அமிர்தா மெசேஜ் அனுப்பி இருந்தாள்.அதை பார்த்தவன் சூர்யா பக்கம் திரும்பினான் .
டேய் சூர்யா நம்ம உனக்கு கல்யாணம் ஆன விஷயம் அப்பாக்கு யாரோ உங்க ஊருல உள்ள ஆள் பாத்து சொல்லிட்டாங்களாம் அப்பா செம்ம கோபத்துல இருக்கங்களாம் என்று பிரசாத் சொல்ல சூர்யாக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை .சூர்யா எல்லாவற்றையும் நேரில் சென்று அவன் அப்பாவிடம் சொல்லி புரிய வைக்கலாம் என்று நினைத்தான்.
ஆனால் இப்போது அவன் அப்பாக்கு அவர் சொந்த மகனுக்கு கல்யாணம் ஆன விஷயம் யாரோ மூன்றாவது மனதர் சொல்லி தெரிந்திருக்கிறது எனும்போது சூர்யாவால் அவன் அப்பாவின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது .சூர்யா அவன் அப்பாவை நினைத்து மௌனமாக இருக்க பிரசாத் பேசினான் .
என்னடா பண்ண போற என்று கேட்டான் பிரசாத் .
சூர்யா கண்ணை மூடி உறங்கும் தேவாவை பார்த்துவிட்டு மீண்டும் பிரசாத் பக்கம் திரும்பினான் .
பாத்துக்கலாம்டா.அப்புறம் நீயும் யோசிச்சு வச்சிக்கோ.அப்பாவை எப்படி சமாதானம் பண்ணலாம்னு .ஏனா இந்த சமாளிக்குற வேலை எல்லாம் நீதான பண்ணுவ.கல்யாணம் பண்ணி வச்சிட்ட .குடும்பத்தோட சேர்த்தும் வச்சிரு என்று சாதரணமாக சொன்னான் சூர்யா .இப்போது பிரசாத்க்குதான் பதட்டமாக இருந்தது .
சில நேரத்துல நண்பர்கள் பிரச்சனைக்கு நமக்குதான் பதட்டம் அதிகமா இருக்கும் இப்போ பிரசாத் கூட அப்படி ஒரு நிலையில்தான் இருந்தான் .பிரசாத் அடுத்த எபிசோடில் எப்படி சமாளிக்கிறான் .சூர்யா அப்பா தேவாவை முதலில் சூர்யாவை ஏற்று கொள்கிறாரா என்று பார்ப்போம் .
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது Abirami.G.N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro