
வார்த்தைகள் தீர்க்கையில் மௌனங்கள் அழகு -6
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீ கவிதைகளா
கனவுகளா கயல்விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா
பதில் மொழியா
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️[படம் ;மரகத நாணயம் ]
தேவாக்கு இன்று நடந்தது எல்லாம் கனவாக இருந்தால் என்ன என்று கூட தோன்றியது .அவள் காலையில் நிகழ்ச்சியை நினைத்து வேதனைபட்டு கொண்டிருந்தாள் .
காலையில் வழக்கம் போல வேலை எல்லாம் செய்துவிட்டு ஒரு பத்து மணி போல வந்து அமர்ந்தாள்
தேவா.அவள் அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்தாள் வழக்கம் போல அவளுக்கு கிடைத்தது பழைய சாதம்தான் .அதை பற்றி எல்லாம் கவலை படாமல் சாப்பிட ஆரம்பித்தாள் .காலை சாப்பாடு மாட்டுக்கு போகாமல் அவளுக்கு கிடைத்தாலே அது பெரிய விஷயம் என்பதால் தேவா அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .அப்போது அவள் எதிரில் வந்து சேர் போட்டு உட்கார்ந்து கொண்டாள் புவனா .
ம்ம்ம் இனி எல்லாம் பழஞ்சி[பழைய சாதம் ] குடிக்க முடியுமோ முடியாதோ நீ இப்போவே நல்லா குடிச்சிக்கோ என்று சம்மந்தமே இல்லாமல் ஆரம்பித்தார் புவனா. தேவா சாப்பிட்டு கொண்டு இருந்தவள் அப்படியே புவனாவை பார்த்தாள் .
என்னட்டி என்ன அப்படி பாக்குற .உண்மையைதான் சொல்றேன். நான் கூட உனக்கு அதிர்ஷ்டம் இல்லன்னு நினைச்சிட்டு இருந்தேன் .ஆனா அது எல்லாம் பொய்ன்னு ஆகிடுகிச்சு .ம்ம்ம் தங்கசிலை மாதிரி இருந்து குயில் மாதிரி குரல் இருக்க பெண்ணுக்கே இந்த காலத்துல நல்ல பையன் கிடைக்காது.ஆனா உனக்கு அதிர்ஸ்டம் அப்படி இருக்கு அதனாலதான் கார் சொந்தமா ரெண்டு வீடு வச்சிருக்கவன் தேடி வந்து உன்ன கட்டிக்கிறேன்னு சொல்றான்.அங்க உனக்கு ஒரு வேலையும் இருக்காது .நீ ராணி மாதிரி இருக்கலாம் .ஒரு பைசா கூட நம்ம அவங்களுக்கு தர வேண்டாம் .உனக்கு 50 பவுன் அவங்க போட்டு 5 லட்சம் பைசாவும் தருவங்களாம் .ம்ம்ம் இவ்ளோ வசதியான குடும்பத்துல இருந்து உன்ன கேட்டு வந்துருக்காங்கன்னா நீ அதை நினைச்சு சந்தோசம் படணும் .என்ன இப்போ மாப்பிள்ளைக்கு ஒரு 45 வயசு இருந்து உன்ன இரண்டாம் தாரமா கேட்டா என்ன .அதானால என்ன ஆகிட போகுது அவங்களை மாதிரி ஒரு பணக்கார குடும்பத்துல இருந்து உண்ண பொண்ணு கேட்டதே பெருசு .உனக்கு மனசுலாவுதாட்டி [புரியுதா டி ]
தேவா கெஞ்சும் பார்வை பார்த்தாள் .இந்த திருமணம் வேண்டாம் என்று அவள் கண்ணால் கெஞ்சினாள் .அவளை அப்படி வேதனை படுத்துவது அவள் சித்திக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது .
என்னட்டி ஏன் என்ன நீ அப்படி பாக்குற .ஆஹ் .இந்த உலகத்துல ஒவ்வொரு வீட்லயும் சித்தி கொடுமை எவ்ளோ நடக்குது தெரியுமா .ஆனா நான் உன்ன படிக்க வச்சி நீ வேலைக்கு போகாம வீட்ல இருந்தும் உனக்கு மூணு வேளை சோறும் கொடுத்து உன்ன இந்த அளவுக்கு நான் பாதுக்குறேன் .நான் உன்ன உரிமைல அடிக்கலாம் திட்டலாம் ஆனா அதுக்காக உன்மேல அக்கறை இல்லன்னு ஆகிடுமா .உன்மேல உள்ள அக்கறைலதான் சொல்றேன் நீ இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுற .நாளைக்கு மாப்பிளை வீட்டுல இருந்து வருவாங்க நீ அவங்க முன்ன நான் என்ன சொல்றேனோ அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிட்டா போதும் .புரியுதா .ம்ம்ம் சரி இனி நல்லா வயிறு நிறைய சாப்பிட்டுட்டு வயல்ல போயி ஓலை எடுத்து வா என்று சாதரணமாக ஒரு விஷயத்தை பற்றி பேசுவதை போல பேசினார் புவனா .தேவாக்கு அழுகைதான் வந்தது .அவளுக்கு உண்மையில் ஒரு 45 வயது நிரம்பியவரை திருமணம் செய்து கொள்ள சொல்கிறாள் என்பதை விட திருமணம் செய்து கொள்ள சொல்வதே அவளுக்கு பயத்தைதான் கொடுத்தது .அவள் மிகவும் பயந்து போயிருந்தாள் .சொந்த குடும்பத்தினரே அவளை வெறுப்போடு நடத்தும் போது அடுத்த குடும்பத்தில் எப்படி தன்னை அன்புடன் நடத்துவார்கள் என்றுதான் அவள் பயந்து கொண்டிருந்தாள் .ஒருவேளை அவள் வாழ்க்கையில் பூஜா மாதிரி ஆட்கள் அதிகம் இருந்திருந்தால் கூட அவள் அவ்வளவு பயந்திருக்கமாட்டாள் .ஆனால் அவள் பார்த்தது எல்லாம் புவனா மாதிரி ஆட்களைதான் அதனால்
அவளுக்கு திருமணம் என்பது ஒரு கெட்ட கனவு போலத்தான் இருந்தது .அவளை பார்க்கும் எல்லாரும் நல்லா இருக்கும் பெண்களுக்கே நல்ல பையன் கிடைப்பது இல்லை இவளுக்கு எப்படி கிடைக்கும். என்று பரிதாமாக சொன்ன வார்தைகக்ள் எல்லாம் அவள் மனதை அதிகம் பாதித்தது .
என்னதான் பூஜா ஆயிரம் முறை உன்னை உள்ளங்கையில் வைத்து பார்த்து கொள்ள ஒருவன் வருவான் என்று சொல்லி இருந்தாலும் அவள் மனம் இவளுக்கெல்லாம் நல்ல மணமகன் கிடைப்பானா என்று ஆயிரம் பேர் சொன்னதைதான் நம்பியது .அவளுக்கு இருக்கும் நரகம் போதும் என்று தோன்றியது .புது நரகத்தை அவள் பார்க்க விரும்பவில்லை .அதனால் தன்னுடைய தைரியம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அவள் இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என்று சைகை மூலம் சொன்னாள் .
புவனாக்கு கோபம் கோபமாக வந்தது .
என்னட்டி கொஞ்சம் பொறுமையா பேசுனா உடனே உனக்கு என் தலை மேல ஏறி உக்காரலாம்னு தோணுதோ .ஒழுங்கா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டு இந்த வீட்டை விட்டு வெளிய போற வழியை பாரு .உன்ன இத்தனை வருஷம் வளர்த்தது பெரிய விஷயம் .இதுக்குமேல உன்ன வச்சி என்னால சோறு போட முடியாது .அதனால ஒழுங்கா கல்யாணத்துக்கு ஒத்துக்கோ என்று மிரட்டினார் புவனா அவர் பார்த்தாலே பயம் கொள்ளும் தேவா அவர் மிரட்டும் போது இன்னும் பயந்து போனாள் .இருந்தாலும் அவள் இன்னும் கொஞ்சம் கெஞ்சினால் தன்னுடைய சித்தி தன்னை பற்றி கொஞ்சம் யோசனை செய்வார் என்று நினைத்து அவள் கல்யாணம் வேண்டாம் என்று கெஞ்சினாள் .அவள் கெஞ்சுவதை பார்த்து யாருக்காக இருந்தாலும் மனம் இளகிவிடும்.ஆனால் புவனாக்கு மனம் இருந்தால்தானே .அவள் கெஞ்சுவது புவனாக்கு எதிர்த்து பேசுவது போல இருந்தது .அதிக கோபம் கொண்டவர் அவள் முன்பிருந்த பழைய சாதம் தட்டை விசிறி அடித்தார் .தேவா பயந்து விட்டாள் கண்களை மூடி கொண்டவள் கையைகொண்டு காதையும் மூடி கொண்டாள் .
அதை பார்த்து இன்னும் கோபம் கொண்ட புவனா அவளை கையை பிடித்து இழுக்க பயத்தில் இருந்தவள் கையை சட்டென்று உதறிவிட அது புவனாவின் முகத்திலேயே பட்டுவிட இன்னும் கோபம் கொண்டவர் என்னையே அடிச்சிட்டியா என்ற கோபத்தில் அடுப்பில் இருந்த விறகை கொண்டு வந்து தேவா காலில் சூடு வைத்து விட்டாள்.வலியில் துடித்து விட்டாள் .பாவம் தேவா அவளுக்கு இந்த வீட்டில் அழ கூட உரிமை இல்லாமல் போனது .அந்த வேதனையிலும் இருந்த வேலை எல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் .
--------
இது எதுவும் தெரியாமல் பூஜா ரூமில் நிம்மதியாக உட்கார்ந்து போனை பார்த்து கொண்டிருந்தாள் .அப்போது அவளுக்கு அவளுடன் வேலை செய்யும் சத்யா அழைத்தான் .அவன் நம்பரை பார்த்த உடன் பூஜாக்கு கோபம் கோபமாக வந்தது இருந்தாலும் தன்னை அமைதி படுத்தி கொண்டவள் போனை கட் செய்தாள் .மீண்டும் போன் அடிக்க இந்த முறை எடுத்தவள் பேச ஆரம்பித்தாள் .
ஹலோ சொல்லுங்க சத்யா என்ன வேணும் உங்களுக்கு. என்று கடுப்பாக பேச ஆரம்பித்தாள் பூஜா .
என்ன பூஜா ஏன் இவ்ளோ கோப படுறீங்க.சாப்பிடிங்களா என்று அன்பு நிறைந்த குரலில் கேட்டான் சத்யா .
இப்போ இது கேக்கதான் கூப்பிடிங்களா .விஷயத்துக்கு வாங்க என்று கோபம் நிறைந்த குரலில் கேட்டாள் பூஜா .
இல்ல ஒண்ணுமில்ல சும்மாதான் சாப்பிடிங்களான்னு கேக்க கூப்பிட்டேன் என்று சொன்னான் சத்யா .
இங்க பாருங்க முக்கியமான விஷயம்னா மட்டும் கால் பண்ணுங்க தேவை இல்லாம இந்த மாதிரி பண்ணாதிங்க என்று சொன்னவள் போனை வைத்து விட்டாள் .
ஏதோ ஒரு நல்ல மனநிலையில் இருந்தவளுக்கு இப்போது வருத்தம்தான் மிஞ்சியது .சத்யாவை திட்டி விட்டோம் என்று வருத்தத்தில் இருந்தாள் பூஜா .
ஹே பூஜா நீ ஏன் இப்டி சத்யாவை திட்டிட்டு கவலை பட்டுட்டு இருக்க .அவரு பாவம்தான .தினமும் உனக்கு போன் பண்ணி சாப்டியான்னு மட்டும்தான் கேக்குறாரு.அதை தவிர ஒரு குட் மார்னிங் குட் நைட் அதுக்கு எதுக்கு நீ இவ்ளோ டென்ஷனாகுற .என்று கேட்டாள் நித்யா .
ஏன்னா அவன் என்ன லவ் பன்றேன் சொல்லலிட்டு சுத்திட்டு இருக்கான்.எனக்கு அவன் மேல லவ் இல்ல அதனால நான் அவனுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை தர விரும்பல .இப்போ நல்லா பேசி அவனும் சரி ஒரு நாள் இல்லை ஒருநாள் பூஜா லவ்க்கு ஓகே சொல்லுவா அப்டின்னு ஆசையை வளர்த்துக்கிட்டா நான் என்ன பண்ணுவேன் .நான் எப்படியும் அவனுக்கு ஓகே சொல்ல போறது ல்ல அப்புறம் ஏன் அந்த நம்பிக்கை கொடுக்கணும் .அவன பாத்தா எனக்கு லவ் பண்ணனும்னு தோணல .அவன நான் என்னோட பிரன்ட்டாதான் பாக்குறேன் .அவனும் அப்டிதான் என்ன பாக்குறான்னு எனக்கு எண்ணைக்கு தோணுதோ அப்போ நான் அவன்கிட்ட நல்லா பேசுறேன் .அதுவரைக்கும் நான் அவன்கிட்ட நல்லா பேச மாட்டேன். என்று சொன்னாள் பூஜா .
அவன் நல்ல பையன்தான .அப்புறம் என்ன அவன லவ் பண்ண வேண்டியதுதான.என்று கேட்டாள் நித்யா
அது சரி ஏதோ கண்ணீர் வர வைக்கிற மாதிரி காதல் வர வைக்க சொல்ற .அதெல்லாம் இப்போ நம்ம வாழ்க்கைல தேவை இல்லாத அத்தியாயம் .அதுவா வந்தா வரட்டும் இல்லன்னா வரவே வேண்டாம் என்று பூஜா சொல்ல .இவளை மாற்ற முடியாது என்பது போல நித்யா பூஜாவை பார்த்துவிட்டு உறங்க சென்றாள் .
--------
அதே நேரம் இங்கே சூர்யா உறக்கம் இல்லாமல் தவித்து கொண்டு இருந்தான் .ஏன் என்றால் கொஞ்சம் நேரத்துக்கு முன்பு கிருஷ்ணா ஒரு கேள்வி கேட்டிருந்தான் .
கொஞ்சம் நேரத்துக்கு முன்பு எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் .
அப்பா வர்ற சண்டே நான் என்னோட பிரண்ட் ரவி வீட்டுக்கு போறேன் எல்லாம் சேர்ந்து படிக்க போறோம் என்று சொன்னான் கிருஷ்ணா .
டேய் நீ ஏன்டா அங்க போற .உன்னோட பிரண்ட் வீட்ல நிறைய பேர் இருப்பாங்க .நம்ம வீடு அப்படி இல்ல அப்பா நான் இருப்போம் .நான் கூட வர்ற சண்டே வேலைக்கு போயிடுவேன் .நீ இங்க கூட்டிட்டு வா என்றான் .
ம்ம்ம் இங்க யாரும் இருக்க மாட்டிங்கன்னுதான் நான் யாரையும் கூட்டிட்டு வர்றதே இல்ல என்று முணுமுன்னுதான் கிருஷ்ணா
என்ன சொன்ன திரும்ப சொல்லு என்று கேட்டான் சூர்யா .
நீ சொன்ன மாதிரி என்னோட பிரண்ட் எல்லார் வீட்லயும் நிறைய பேர் இருப்பாங்க .உனக்கு நிறைய பேர் இருக்குறது தொந்தரவா இருக்கு .ஆனா எனக்கு அது சந்தோசமா தெரியுது .என் பிரண்ட் எல்லாருக்கும் குடும்பம் இருக்கு .ஆனா என்னோட குடும்பத்துல போலீஸ் அப்புறம் ஒரு டீச்சர் மட்டும்தான் இருக்காங்க.அண்ணா மாதிரி நடந்துக்கோன்னு ஆயிரம் முறை சொல்லி இருப்பேன் ஆன நீ போலீஸ் மாதிரிதான் நடந்துக்குற .இப்படித்தான் என் குடும்பம் இருக்குன்னு நான் யானருக்கும் காட்ட விரும்பல என்று மனதில் தேக்கி வைத்திருந்ததை எல்லாம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்லிவிட்டு தட்டை எடுத்து கொண்டு சென்றுவிட்டான் கிருஷ்ணா .
அவன் சொன்னது சூர்யா மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது .இப்போது அதை நினைத்துதான் கவலை பட்டு கொண்டிருந்தான்.அவனுக்கு கிருஷ்ணா மீது பாசம் உண்டு ஆனால் அதை காட்ட தெரியவில்லை.
2 மணி நேரம் உறங்காமல் போராடிய பிறகு அவனை நித்ராதேவி அணைத்து கொண்டாள் .நன்றாக உறங்கியவனுக்கு ஒரு கனவு அந்த கனவில் ஒரு அழகான புல்வெளி வானத்தில் நிலா அழகாக ஒளி வீசி கொண்டு இருந்தது எதிரில் பெரிய ஏரி இருந்தது .அந்த இடம் வெளிச்சமாக இருந்தது .அதை பார்த்தபடி அமர்ந்து இருந்தான் சூர்யா அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது .
உன்மேல ரொம்ப பாசம் இருக்குடா ஆனா எனக்கு காட்ட தெரியல .அண்ணனுக்கு பாசம் உன்மேல எப்போவும் உண்டு என்று சொன்னவன் மனம் அவ்வளவு வேதனை அனுபவித்து கொண்டிருந்தது .அப்போது அவன் முன்பு அவள் வந்தாள் .பெயர் தெரியாத அந்த பரிச்சயமான முகம் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான் சூர்யா .
நீ இங்க என்ன பண்ற என்று கேள்வி கேட்டான் சூர்யா .அவன் எதிரே அமர்ந்திருந்த தேவா அவனை பார்த்து சிரித்தாள் .
சரி உன்னோட பேர் என்ன என்று கேட்டான் சூர்யா அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை .அவன் அடுத்த கேள்வி கேட்பதற்குள் அவன் வாயை கையால் மூடியவள் அவன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள் .சூர்யா இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அந்த முத்தம் அவன் மனதில் இருந்த வேதனை குறைத்தது போல இருந்தது .அவளை பார்த்தான் அவள் இப்போதும் புன்னகை செய்து கொண்டுதான் இருந்தாள் .அவள் புன்னகை எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்று சொல்வது போல இருந்தது . அவனுக்கு அவளிடம் கேட்க அவனிடம் நிறைய கேள்விகள் இருந்தது ஆனால் அவன் ஒரு வார்ததை கூட பேசவில்லை .அவள் கண்களை மட்டும் பார்தது கொண்டிருந்தான் .வார்த்தைகள் இல்லாத நேரம் அவர்களுக்காக மௌனம் பேசியது .நீண்ட நேரம் மௌனமாக கழிய சட்டென்று எழுந்த தேவா தான் செல்ல வேண்டும் என்னை தேடுவார்கள் என்று சைகையால் சொன்னாள் .
அவனை விட்டு தேவா விலகி செல்ல போக அவளை செல்ல விடாமல் பிடித்தான் சூர்யா அவள் அவன் கையை விட்டு தன்னுடைய கையை பிரிக்க போராடி கொண்டிருந்தாள் .
இங்க பாரு நான் ரொம்ப கஷ்டத்துல இருந்தேன் யாருன்னே தெரியாத நீ வந்த பிறகு என்னோட கஷ்டம் எல்லாம் மறைஞ்ச மாதிரி இருக்கு .கொடுத்த நிம்மதியை பாதியிலேயே விட்டுட்டு போயி கெடுத்துராத .நீ யாரு என்னன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன் .நான் உன்கிட்ட கேக்குறது எல்லாம் என் கூடவே இருன்னு மட்டும்தான்.நானா கேட்டு நீ இங்க வரல இப்போ நீயா போறேன்னு சொன்னாலும் உன்ன விடற நிலமையில நான் இல்ல .என்ன விட்டு போகாத என்று சூர்யா சொல்ல அவனை பார்த்து புன்னகை செய்த தேவா அவனை அணைத்து கொண்டாள் .சூர்யாக்கு தான் நடந்து கொள்வதும் தன்னை சுற்றி நடப்பதும் மிகவும் வித்யாசமாக இருந்தாலும் அவனுக்கு அப்படி இருப்பது பிடித்திருந்தது .அழகான அந்த காட்சியில் திடீரென ஒரு சத்தம் அலாரம் அடித்து அவன் கனவை கலைத்து விட்டது.
எழுந்தவனுக்கு பாதி கனவுதான் நினைவு இருந்தது.ஆனால் அவன் அந்த கனவை பற்றி யோசிக்கவில்லை . அவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்க்க சென்று விட்டான் .கனவை பற்றி அதிக நேரம் சிந்திப்பவன் சூர்யா அல்ல .
கனவுகள் நிஜமாகும் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் சிந்தித்துருப்பானோ என்னவோ .
கனவுகள் எல்லாம் விரைவில் நிறைவேறும் ❤️
அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை விடைபெறுவது abirami G.N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro