Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -8

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மழையில் கழுவிய மணலிலே
தொலைந்த காலடி நானடி
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
நிலைத்த முகவரி நீயடி

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

சூர்யா ஊருக்கு வந்து இரண்டு நாள்தான் ஆகியது .இப்போ வரவும் காரணம் அவனுடைய நண்பன்
அர்ஜுன் திருமணம்தான் .இந்த முறை பிரசாத் கூட வந்திருந்தான் .இங்கிருந்து அப்படியே கேரளா செல்ல பிளான் போட்டு இரண்டு பேருமே வந்திருந்தார்கள்[me; அய்யா நான் வேற பிளான் வச்சிருக்கேன் அய்யா ] .நேற்று திருமணம் முடிந்து விட்டது.இன்று காலை மாப்பிளை பெண் கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதால் பிரசாத்தான் கார் ஓட்டினான்.அர்ஜுன் அவனுக்கு வழி சொல்லி கொண்டிருக்க காருக்குள் புது மாப்பிள்ளை பெண்ணை கிண்டல் செய்தபடி அவர்கள் பயணம் இனிமையாகதான் சென்று கொண்டிருந்தது .சூர்யா கல்யாண மண்டபத்தில் உள்ள வேலை எல்லாம் உடன் இருந்து முடித்து விட்டு .பாத்திரங்கள் எல்லாம் கொடுத்துவிட்டு கோவிலுக்கு சென்றான் .அவன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே அப்போதுதான் சென்றான் அவன் யாரை பார்க்க கூடாது என்று நினைத்து கொண்டு இருந்தானோ அவரே எதிரே வந்தார் .ஆம் அவன் அம்மா விஜயாவும் அவர் கணவர் திலீப்பும் ஒன்றாக வந்து கொண்டு இருந்தார்கள்.சூர்யாக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை .அவன் அவர்களை கண்டு கொள்ள கூடாது என்றுதான் நினைத்தான் ஆனால் அவன் விலகி செல்வதற்கு முன்பு அவனுடைய அம்மா விஜயா அவன் முன்பு வந்து நின்றார் .

என்னப்பா எப்படி இருக்க .என்ன பாத்து பேசாம போற.நீ பாத்து பேசாம போற அளவுக்கு நான் அப்படி என்ன பண்ண .என்று ஒரு தவறும் செய்யாதது போல கேட்டார் விஜயா .சூர்யாக்கு கோபம் கோபமாக வந்தது .எவ்வளவு அவமானம் எவ்வளவு வேதனை இத்தனையும் கொடுத்து விட்டு என்ன செய்தேன் என்று கேட்கும் தன்னுடைய அம்மாவை என்ன சொல்ல என்றே தெரியவில்லை அவனுக்கு .

அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் விலகி செல்ல போக அவனை செல்ல விடாமல் கையை பிடித்து கொண்டார் விஜயா .தேவை இல்லாமல் எல்லோரின் கவனம் தன் மீது விழுவதை சூர்யா கொஞ்சம் கூட விரும்பவில்லை அதே நேரம் கோவிலுக்கு 5 நிமிஷத்தில். வந்து விடுவேன் என்று சொன்ன சூர்யா வராததால் அவனை தேடி வந்தான் பிரசாத் .பிரசாத் சூர்யா மற்றும் விஜயாவை ஒன்றாக பார்க்க அவனுக்கு தலை சுற்றாத குறைதான் .அவன் வேகமாக சூர்யா அருகில் சென்றான் .சூர்யா அவன் அம்மாவின் கையை தட்டி விடுவதற்குள் சூர்யா அருகில் வந்து நின்றான் பிரசாத் .பிரசாத்தை பார்த்த விஜயா அவனை பார்த்து புன்னகை செய்தார் விஜயா .சூர்யா அவர் கையை தட்டி விட்டான் .

சூர்யா இது என்ன கெட்ட பழக்கம் .இப்படி எல்லாம் பண்ண கூடாது .பெரியவங்ககிட்ட இப்டி நடந்துக்க கூடாது அதுவும் நான் உன்ன பெத்தவப்பா என்று விஜயா சொல்ல அவளை எரிப்பது போல பார்த்தான் சூர்யா .

என்னோட பார்வைக்கு பெரியங்களும் தெரியல பெத்தவங்களும் தெரியல .கோவிலுக்கு நிம்மதியை தேடி வந்தா சொந்தம்னு சொல்லிட்டு வந்து நிம்மதியை கெடுக்க பாக்குறாங்க .பிரசாத் நீ சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு போ நான் நேரா வீட்டுக்கு வர்றேன் .யாராவது கேட்டா வேலை இருக்கு இங்க போயிருக்கேன் அங்க போயிருக்கேன் சொல்லி சமாளி என்று சொன்ன சூர்யா கோவிலை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தான் .இப்போது பிரசாத் மட்டும் விஜயா முன்பு நின்று கொண்டிருந்தான் .பிரசாத்க்கு சூர்யா மாதிரி எடுத்தெறிந்து பேச வராது .படிக்கும் காலத்தில் இருந்தே அப்படித்தான் பிரசாத்க்கு ஏதாவது பிரச்சனை என்றால் சூர்யாதான் முதலில் போய் நிற்பான் .அதுக்காக பிரசாத்க்கு கோபமே வராதா என்றால் அப்படியும் அல்ல .தன்னால் விட்டு கொடுத்து போக முடியும் என்றால் 100ல் 90 சதவீதம் பிரசாத் விட்டு கொடுத்து விடுவான் .ஆனால் சூர்யா அதற்கு மாறாக 10 சதவீதம்தான் பொறுத்து போவான் அது கூட குறைவுதான் . இப்போதும் அப்படித்தான் சூர்யா கோபமாக சென்றுவிட்டான் .

என்னப்பா இவன் இவ்ளோ கோப படறான் என்று கேட்டார் விஜயா .

அவன் கோப படல .அவன கோப படுத்துறாங்க .நான் போறேன் நானும் அவனை தனியா விட விரும்பல என்று சொன்ன பிரசாத் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்று விட்டான் .அவன் கோவில் விட்டு வெளியே வரும் போது சூர்யா பைக் ஸ்டார்ட் செய்திருந்தான் அவன் முன்பு வந்து நின்றான் பிரசாத் .

என்னடா நீ எதுக்கு இங்க வந்த .போ அவங்களை யாரு திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு போவா என்று கோபத்தை குறைத்து கொண்டு கேட்டான் சூர்யா .

அவன கூட்டிட்டு போக நிறைய பேர் இருக்காங்க .உன் கூட விழுந்து வார நான்தான இருக்க என்று சொன்னான் பிரசாத் சாதாரணமாக .

நான் ஒண்ணும் விழுந்து எல்லாம் வார மாட்டேன்.நீ போ என்றான் .சூர்யா

தனியா எல்லாம் விட முடியாது என்று சொன்னான் பிரசாத் .அவனை பார்த்த சூர்யா மௌனமாக இருக்க பிரசாத் புன்னகை செய்தபடி பைக்கில் ஏறி உக்கார்ந்தான் .

அவர்கள் பயணம் அமைதியாக சென்றது .வழியில் பிரசாத் ஒரு முக்கியமான வேலை இருப்பதால் தாங்கள் வந்து விட்டதாக போன் செய்து நண்பனுக்கு சொல்லி விட்டான்.அவர்கள் இருவரும் மௌனமாகத்தான் இருந்தார்கள் .ஆனால் திடீர் திடீரென பைக் வேகம் மட்டும் கூடி கொண்டிருந்தது .

சூர்யா கொஞ்சம் மெதுவா போடா .உன்ன நம்பி ஒரு ஜீவன் இருக்கு என்று சொன்னான் பிரசாத் .

என்னால என்கூட இருக்க யாரையும் பாத்துக்க முடியாது .என்கூட யாராலையும் இருக்கவும் முடியாது எனக்கும் தெரியும் .உன்ன நான் என் கூட வர சொன்னனா அப்புறம் எதுக்கு என்கூட வந்த .நீ என்கூட வரலன்னா என்ன எங்கேயாவது போயி முட்டிட்டு செத்துருவேனா என்ன என்று கோபமாக கேட்டான் சூர்யா .

வாயை உடைக்க போறேன்டா சூர்யா .முதல்ல பைக் நிறுத்து என்று சொன்னான் பிரசாத் .

முடியாது என்றான் சூர்யா .

இவர்கள் இருவரும் இப்படி பேசி கொண்டு வண்டியில் வந்து கொண்டு இருந்தார்கள் .கொஞ்சி குலவும் போது கியூட்டாக இருக்கும் நாய்
கடிக்க துரத்தும் போது கியூட்டாக இருப்பது இல்லை [me ;அனுபவங்கள் அற்புதங்கள் ].மாங்காய் தோப்பில் கட்டி வைத்திருந்த நாய் அதிலிருந்து அறுத்து கொண்டு வர சிவனே என்று வந்து கொண்டிருந்த தேவாவை துரத்த ஆரம்பிக்க அதை பார்த்து பயந்து ஓட ஆரம்பித்தாள் .பயத்தில் ரோட்டுக்கு செல்வதை கூட அறியாமல் அவள் ஓட சட்டென்று சூர்யா வண்டிக்கு குறுக்க வந்து விட்டாள் .சூர்யா நிறுத்த முயற்சி செய்தான் அவள் சற்று தள்ளி நின்றிருந்தாலும் அடி பட்டிருக்காது ஆனால் அவள் நாய் பார்த்து பயந்து இருந்ததால் இவர்கள் இடிக்க வந்தது போல வந்ததும் அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டாள் .அதனால் பைக் அவள் மீது மோதியது .அவள் மோதிய வேகத்தில் அருகில் இருந்த கற்கள் பக்கம் விழுந்து விட்டாள் .அதனால்தான் அவளுக்கு ரத்தம் வர்ற அளவுக்கு அடி பட்டுவிட்டது கூட்டம் வந்தது .சூர்யா போலீஸ் என்பதால் கூட்டத்தை சமாளிக்க அவனுக்கு தெரிந்தது .அங்கிருந்து அவர்கள் சூர்யாதான் அழைத்து வந்தான் .அவனுக்கும் பிரசாத்க்கும் கூட லேசான காயம் பட்டிருந்தது .

சூர்யா இதுவரை பார்த்த விபத்து எல்லாவற்றையும் வைத்து தேவாக்கு பெரிதாக அடி படவில்லை என்று கணித்திருந்தான் .ஆனாலும் அவளுக்கு ரத்தம் வந்தது அதோடு உள்காயம் எதுவும் இருக்கிறதா டாக்டர் வந்து தேவாக்கு எதுவும் இல்லை என்று சொன்னால்தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும் என்பது போல இருந்தது .

அவன் அமர்ந்து இருக்க அவன் அருகில் வந்தான் பிரசாத் .அவன் கையில் அடி பட்டத்துக்கு மருந்து போட்டிருந்தது .சூர்யாக்கும் லேசான சிராய்ப்புகள் இருந்தது .அவனை பிரசாத் மருந்து போட கூப்பிட்டான் ஆனால் சூர்யா வர மறுத்துவிட்டான் .அவனுடைய காயம் பிறருக்கு பெரிய அடியாக இருக்கலாம் ஆனால் அவனுக்கு அது ஒரு பொருட்டாக கூட இல்லை .அவனுக்கு தேவாக்கு சரியானால் போதும் என்றுதான் இருந்தது .சூர்யா இப்படி இருப்பதை பார்க்க பிரசாத்க்கே வித்யாசமாகதான் இருந்தது .அவன் சூர்யா இதுபோல ஒரு விபத்துக்கு இப்படி உட்கார்ந்து பார்த்தது இல்லை .அவன் சூர்யா தோள் மீது கை வைத்தான் சூர்யா அவனை பார்த்தான் .அப்போது அங்கே அவர்கள் இருக்கும் இடத்துக்கு பூஜா மற்றும் புவனா வந்து சேர்ந்தார்கள்.பூஜா முகத்தில் வேதனை இருந்தது புவனா முகத்தில் ஒரு படபடப்பும் இல்லை .வள்ளி பூஜாவை அழைத்தார் .பூஜா வேகமாக வந்தாள்.

அக்கா தேவா எங்க என்று கேட்டாள் பூஜா .உள்ளே ட்ரீட்மெண்ட் போய்ட்டிருக்கு என்று சொன்ன வள்ளி அவளை சமாதானம் செய்தார் .பூஜா விட்டால் அழுது விடுவாள் என்பது போல இருந்தாள் .புவனா ஒன்று தேவா சாக வேண்டும் இல்லை என்றால் இந்த விபத்தினால் திருமணத்தில் எந்த பிரச்சினையம் வந்து விட கூடாது என்று மனதில் நினைத்து கொண்டாள் .சூர்யா தங்களுக்கு எதிரில் இருக்கும் இருவரையும் கவனிக்கதான் செய்தான் .அவன் முதல் பார்வையிலேயே பூஜா பற்றியும் புவனா பற்றியும் புரிந்து கொண்டான் .பூஜா சூர்யா அருகில் வந்தாள் .

நீங்கதான் என்னோட அக்காவை இடிச்சிங்களா .கொஞ்சம் பாத்து வந்துருக்கலாம்ல .என்னோட அக்கா ரொம்ப பாவம் அவளுக்கு மட்டும் அதாவது ஆச்சு என்று கண்ணீரின் விளிம்பில் அவள் பேச சூர்யா ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாக இருந்தான் .

இங்க பாருங்க ரொம்ப பெரிய அடி எல்லாம் இல்ல பயப்படாதீங்க .அதோட நாங்க போய் அவங்களை இடிக்கல அவங்கதான் வந்து விழுந்தாங்க என்று பிரசாத் பேசிக்கொண்டிருக்கும் போதே பிரசாத்தை பேச விடாமல் தடுத்து பேசினான் சூர்யா .

இங்க பாருமா கொஞ்சம் பொறுமையா இரு .உன்னோட அக்காக்கு ஒண்ணும் ஆகாது என்று சூர்யா அவளுக்கு சொல்வது போல தனக்கும் சொல்லி கொண்டான்.பூஜா ஏதோ கேட்க வர அப்போது டாக்டர் வர எல்லோரின் கவனமும் டாக்டர் பக்கம் திரும்பியது .

சூர்யாவும் பூஜாவும்தான் முதலில் போய் நின்றார்கள் .டாக்டர் அவளுக்கு எல்லா செக்கப்பும் செய்தாகி விட்டது.அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று.கண் விழிக்க 2 மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் .அதை கேட்ட பிறகுதான் பூஜாக்கு உயிரே வந்தது .

க்க்கும் இதுக்குதான் இப்டி அடிச்சி பிடிச்சி ஓடி வந்தியா .நான் கூட நீ வந்த வேகத்துக்கு இண்ணை க்கு செத்துருவான்னுல்லா நினைச்சேன் .என்று புவனா சொல்ல அவர் பேசியதை கேட்ட சூர்யாக்கு கோபம் கோபமாக வந்தது .அவன் பேசுவதற்கு முன்பு பூஜா புவனாவை வாயை மூட சொன்னனாள் .

நான் என்ன பொய்யா சொன்ன .பாவம் தெருல இருக்க நாய் குறுக்க விழுந்த கணக்கா இவ போய் விழுந்து பாவம் இந்த பயலுவளுக்கு அடி பட்டுருக்கு .அப்படித்தான பிள்ளே என்று புவனா அன்பு ஒழுக கேட்க .சூர்யா இல்லை என்பது போல தலை அசைத்தான் .பூஜாக்கு கோபம் கோபமாக வந்தது .

எம்மா நீ இங்க இல்லன்னா கூட பரவாயில்லை கிளம்பு .நான் என்னோட அக்காவை பாதுக்குறேன் என்று சொன்னாள் பூஜா .

புவனா ஒரு பேச்சுக்கு கூட இருக்கிறேன் என்று சொல்லாமல் வீட்டுக்கு செல்ல வள்ளி உடன் கிளம்பி விட்டார் .பூஜா
தேவாவை பார்க்க சென்றாள் .பிறகு கொஞ்சம் நேரம் கழித்து வெளியே வந்தாள் .சூர்யா போலீஸ் உடன் பேசி கொண்டு இருந்தான் .பிரசாத் மருந்து கொண்டு வந்து பூஜாவிடம் கொடுத்தான் .என்ன மருந்து எப்போது கொடுக்க வேண்டும் என்று சொன்னான் .

இதுக்கெல்லாம் நிறைய செலவு ஆகி இருக்குமே எவ்ளோ ஆச்சுன்னு சொன்னிங்கன்னா நான் உங்களுக்கு தந்துடறேன் என்று கேட்டாள் பூஜா .

நாங்கதான் இடிச்சோம் அதனால செலவு எங்களது .சொல்ல போனா அவனோடது என்று சொன்னான் பிரசாத் .

இல்ல அது எப்படி என்று பூஜா ஏதோ சொல்ல வர அவனை இடைமறித்து பேசினான் பிரசாத் .

இல்லம்மா நீ காசு திருப்பி தர மட்டும் நினைக்காத .அவன் உன்னோட அக்காவை இடிச்சத்துக்கே அவ்ளோ கஷ்ட பட்டுட்டு இருக்கான் காசு திருப்பி கொடுத்தா அவ்ளோதான் .இன்னும் ரொம்ப கஷ்டபட்டுடுவான் .அதனால அப்படி எல்லாம் பண்ணாத என்று சொன்னான் பிரசாத் பூஜாக்கு சரி என்று தலை ஆட்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

ஆமா நீங்க அந்த பொண்ண அக்கா சொல்றிங்க ஆனா உங்க அம்மா அந்த பொண்ணு மேல கொஞ்சம் கூட அக்கறை காட்டாத மாதிரி இல்ல இருக்கு .என்று தன்னுடைய மனதில் உள்ளதை கேட்டான் பிரசாத் .

அவங்க என்னோட சொந்த அம்மா .தேவா அவங்க அக்கா பொண்ணு .தேவா அம்மா இறந்ததுனாலதான் அப்பா அம்மாவை ரெண்டாவது முறை கல்யாணம் பண்ணாரு .அதான் அம்மாக்கு தேவாவை பிடிக்காது .என்று சொன்னனாள் பூஜா .இதெல்லாம் சூர்யாவும் கேட்டு கொண்டு இருந்தான் .

அப்போது சென்ற புவனா மீண்டும் வேகமா வந்தார் .அவர் முகம் எப்போதும் இல்லாத பதட்டத்தை இப்போது வெளிப்படுத்தி கொண்டு இருந்தது .

பூஜா அவள பாத்தியா நல்லாதான இருக்கா .நடக்கலாம்ல என்று கேட்டார் புவனா .

ஆமா என்று சந்தேகம் நிறைந்த பார்வையுடன் சொன்னாள் பூஜா .

சரி தள்ளு அவளை போய் நான் எழுப்புறேன் இல்லன்னா .கல்யாணம் அவ்ளோதான் மாப்பிள்ளை வீடு காரங்க பொண்ணுக்கு இப்படி ஆனதை அபசகுணம்ன்னு சொல்லி தேவாவை வேணாம்னு சொல்றாங்க . இவள கூட்டிட்டு போய் நல்லா இருக்கான்னு காமிச்சா அவங்க மனசு மாற வாய்ப்பு இருக்கு .வா அவளை போய் எழுப்புவோம் என்று சொன்னார் புவனா .பூஜா அவரை தடுத்தாள் .

அம்மா கொஞ்சம் நேரம் அமைதியா இரு நானே நிறுத்தணும்னு நினைச்ச கல்யாணம் தானா நின்னு போச்சு.அப்பா வயசு ஆளை போய் மாப்பிள்ளைன்னு சொல்லாதம்மா தயவு செஞ்சு கிளம்பு .அவளுக்குன்னு கடவுள் நல்ல வாழ்க்கை வச்சிருக்காரும்மா அதான் அவ இண்ணைக்கு நடந்த விபத்துல தப்பிச்சிருக்கா .ப்ளீஸ் அவளை பாழும் கிணத்துல தள்ளி விட முயற்சி பண்ணாத மீறி ஏதாவது பண்ண அம்மான்னு கூட பாக்க மாட்டேன் உன்ன போலீஸ்கிட்ட பிடிச்சு குடுத்துருவேன் என்று பூஜா சொன்னாள் .

அவள் சொன்னதை காதில் வாங்காமல் தேவா இருந்த அறைக்குள் நுழைந்தார் புவனா .பூஜா அவர் பின் செல்ல பிரசாத் மற்றும் சூர்யா உள்ளே சென்றார்கள் .

அம்மா அம்மா ஏன் இப்டி எல்லாம் பண்ற அவளை ரெஸ்ட் எடுக்க விடு .45 வயசு ஆளுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வச்சா அவ வாழ்க்கை வீணா போய்டும் .

ஆமா இவளை இல்லன்னாலும் எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லி நிக்குறாங்க .அந்த 45 வயசு ஆளும் இவளை வேண்டாம்தான் சொல்றாரு .என்ன இப்போ விடு என்று சொன்ன புவனா தேவாவை உலுக்க தேவாக்கு ஏதோ மாய இருண்ட உலகத்தில் இருந்து வெளிச்சத்துக்கு யாரோ அழைப்பது போல இருந்தது .

அம்மா நிறுத்தும்மா .அவளை ஏன்மா இவ்ளோ கஷ்ட படுத்துற என்று அவளை பிடித்து இழுத்து நிற்க வைத்தாள் பூஜா .

எட்டி உனக்கு சொன்னா புரியாதா .இரு இவளை யாரு கல்யாணம் கட்டிக்கிறேன் வந்து லைன்ல நிக்குறா.சரி யாராவது வந்து இவளை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னா நான் தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கிறேன் யாராவது சொல்வாங்களா .சொல்ல மாட்டாங்க எப்பா தம்பி நீ இந்த மாதிரி வாய் பேச முடியாத பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கோ அதுவும் வரதட்சணை இல்லாம கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா ஒத்துக்குவியா என்று பிரசாத் பார்த்து கேட்டார் புவனா .பிரசாத்க்கு அமிர்தா இருக்கும் போது அவன் எப்படி. இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியும் அவன் மௌனமாக இருக்க அதை பார்த்து வெற்றி புன்னகை செய்த புவனா சூர்யாவை பார்த்து இந்த பொண்ணு தேவதர்ஷினியை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்டார் புவனா நக்கல் கலந்த குரலில்.
தன்னுடைய தாயின் இந்த நடவடிக்கை பார்த்து வேதனை அடைந்த பூஜா அவரை பேசாமல் இருக்க சொல்ல போக அங்கிருக்கும் எல்லோரையும் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்னும் வார்த்தையில் மௌனம் ஆக்கினான் சூர்யா .

சூர்யா கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொல்லவில்லை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி இருந்தான் .அது யாருக்கு புரிந்ததோ இல்லயோ பிரசாத்க்கு புரிந்தது அவன்தான் எல்லோரையும் விட அதிர்ச்சி ஆகி இருந்தான் . அதே அவன் வார்த்தைகள் தேவாவை அவள் இருந்த இருண்ட உலகில் இருந்து மீட்டு கொண்டு வர போதுமானதாக இருந்தது .கண்ணை திறந்தாள் அவள் கண் எதிரே பார்த்தது சூர்யாவைதான் .கண் விழிக்கும் நேரம் எல்லாம் காண போவது அவனைதான் என்று உணர்த்துகிறதோ காலம் .

பதில் காலம் சொல்லும் .

அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது Abirami G.N

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro