Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வார்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -26

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வானத்தில் ஏறியே
மின்னல் பிடிக்கிறவன் பூக்களை
பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்
பகவான் பேசுவதில்லை அட பக்தியும்
குறைவதும் இல்லை காதலி பேசவுமில்லை
என் காதல் குறைவதும் இல்லை
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

தேவாக்கு உறக்கம் என்பதே வரவில்லை.அவள் உறங்காமல் நீண்ட நேரம் விழித்திருந்தாள் அவளுடைய முகத்தில் புன்னகை இருந்தது உறங்காமல் விழித்திருந்தவள் அப்படியே உறங்கி போனாள்.சில நேரத்தில் மகிழ்ச்சியாக மனநிலையில் இருக்கும்போதும் கனவுகள் வேதனையின் வெளிப்பாடாக இருக்கும் அப்படித்தான் தேவாக்கும் அவளுடைய சித்தி புவனா வந்தாள்.

என்னட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கியோ. இதெல்லாம் கொஞ்சம் நாளைக்குதான் ஆனா அதெல்லாம் மாறிரும் .உனக்கு எல்லாம் அடுக்களைதான் லாயக்கு .இங்க வந்து நீ வேலைதான் பாக்கணும் அதுதான் சரி .உன்ன நான் சீக்கிறமா கூட்டிட்டு போயிடுவேன் அதுக்கப்புறம் நீ என்கூட எப்போவும் போல ரொம்ப சந்தோஷமா இருக்கலாம் என்று சொன்னவர் தேவா கையை பிடித்து இழுக்க தேவா வரவில்லை என்பது போல  தலை அசைத்து அழுதாள் ஆனாலும் புவனா அவளை விடுவதாக இல்லை அவளை தொடர்ந்து இழுத்து கொண்டு வெளியே செல்ல முயற்சி செய்ய அப்போதுதான் தேவாக்கு சூர்யா அழைக்கும் குரல் கேட்டது.அவள் திரும்பி பார்க்க சூர்யா அவள் கையை பிடித்திருந்தான்.

என்ன தேவா என்ன ஆச்சு நீ ஏன் பயப்படுற என்னவிட்டு உன்ன யாராலயும் கூட்டிட்டு போக முடியாது.நான் உன்ன கூட்டிட்டு போக விட மாட்டேன் என்று சொன்ன சூர்யா புவனாவை பார்க்க புவனா தேவா கையை விட்டார்.அதன் பிறகு அவள் கனவில் அவர் இல்லை .சூர்யா மட்டும்தான் இருந்தான்.

நீ ஏன் அவங்க கூப்பிட்டா இவ்ளோ பயப்படுற.என்று கேட்டான் சூர்யா தேவா அவனை பார்த்தாள்.

சரி நீ தேவை இல்லாம பயப்படாத தேவா எப்போவும் சூர்யா கூடத்தான் இருப்பா தேவாவை விட்டுட்டு சூர்யா இருக்க மாட்டான் எப்போவும் உன்ன நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் .நீ எனக்கு ரொம்ப முக்கியம்.உன்கிட்ட ஒருவேளை அவனுக்கெல்ல்லாம் நீ முக்கியம் இல்ல அவனை விட்டு வந்துடு அப்டின்னு உன்கிட்ட யாராவது சொன்னா நீ போக கூடாது உனக்காக சூர்யா இருக்கானு நீ எனக்காக என்கூட இருக்கணும் என்று சூர்யா சொல்ல அவனை பார்த்து சூர்யா சொல்ல அவனை பார்த்து சிரித்தவள் அவனை அனைத்து கொண்டாள்.அவனும் அவளை அணைத்து கொண்டான்.

இப்படித்தான் எப்போவும் நம்ம ஒண்ணாவே இருப்போம் .சேர்ந்து இருந்தா எல்லா பிரச்சனையும் தீர்ந்து போகும் நான் சொல்லுறது சரிதான என்று சூர்யா கேட்க தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.

காலை அழகாக விடிய தொடங்கிய நேரம்.சூர்யா தேவாவை அணைத்தபடி படுத்திருந்தான் சூர்யா.அவன் உறக்கம் கலைந்து அரை மணிநேரம் ஆனது ஆனாலும் அவன் எழுந்திருக்கவில்லை.அவன் படுத்து கொண்டுதான் இருந்தான்.அவள் முகத்தை மறைந்திருந்த முடியை ஒதுக்கி விட்டான் தேவா கண்ணை திறந்து பார்த்தாள் அவளை அணைத்தபடி படுத்திருந்தான் சூர்யா.தேவா அவனை பார்த்தாள் அவளுக்கு ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவனை விட்டு அவள் விலக போக அவளை விலக விடாமல் பிடித்து கொண்டான் சூர்யா.

அவளுக்கு ஒன்றும் புரியவேயில்லை அவனை குழப்பத்துடன் பார்க்க சூர்யா கண்ணை திறந்தான்.

மணி 5 தான் ஆகுது இப்போவே எழுந்து எங்க போற என்று கேட்டான் சூர்யா தேவா இடம் வலமாக தலை அசைத்தாள்.அவளை பார்த்து புன்னகை செய்தான் சூர்யா.

என்ன நேத்து ஏதாவது கெட்ட கனவு கண்டியா தூக்கதுல அப்படி முனகுற அதோட விட்டா என்ன கீழ தள்ளி விட்டுருப்ப நான் உன்ன எழுப்புன நீ எழும்பவே இலை.அப்புறம் என்னோட சட்டையை கெட்டியா பிடிச்சிட்ட அப்புறம் நானும் நீ ஏதோ பயப்படுற போலன்னு உன்ன  அப்படியே கட்டிபிடிச்சிட்டு அப்படியே படுத்துட்டேன் .ஆமா அப்படி என்ன கனவு கண்ட என்று கேட்டான் சூர்யா.தேவா அவனுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க என்று தெரியாமல் அவனை பார்க்க சூர்யா அவளை பார்த்து சிரித்தான்.

சரி சரி உன்னோட கனவு என்கிட்ட சொல்ல வேண்டாம் இன்னும் நிறைய டைம் இருக்கு தூங்கு என்றான் தேவா சரி என்பது போல தலை அசைத்தவள் மீண்டும் அவன் சட்டையை பிடித்து கொண்டு கண்ணை மூடினாள்.சூர்யா அவளை பார்த்து சிரித்தவன் மீண்டும் கணனி மூடினான்.

காலை 6   மணி அளவில் சூர்யா அவளை எழுப்பி விட்டான்.தேவா எழுந்தாள் .(me:அதிகாலை)

குட் மார்னிங் என்றான் சூர்யா தேவா அவனை பார்த்து  புன்னகை செய்தவள் சல்யூட் அடித்தாள் அவளை பார்த்து சிரித்தான்.

பிறகு தேவா எழுந்து குளிக்க போக  சூர்யா டீ போட கிட்சன் பக்கம் சென்றான்.கொஞ்சம் நேரத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தவள் கிட்சன் பக்கம் செல்ல போக அவளை அழைத்தான் கிருஷ்ணா.என்ன என்பது போல சைகை மூலம் கேட்டாள் தேவா .

இல்ல அண்ணி காலையிலயே ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களே என்ன விஷயம் என்று கேட்டான் கிருஷ்ணா ஒன்றுமில்லை என்பது போல தலை அசைத்தாள்.

ஓ அப்படியா நான் கூட நீங்க அண்ணா பர்த்டே இண்ணைக்குங்கிறதுனாலதான் ரொம்ப சந்தோஷமா இருக்கிங்களோன்னு நினைச்சேன் என்று சொன்னான் கிருஷ்ணா.

அவன் சொன்னதை கேட்டதும் தேவா முகம் பிரகாசம் ஆனது. ஆனால் அவன் அடுத்து சொன்னதை கேட்டதும் தேவா முகத்தில் இருந்த பிரகாசம் காணாமல் போனது.

அண்ணி அண்ணா அவன் பர்த்டே எல்லாம் அவ்ளோ பெருசா கண்டுக்க மாட்டான்.இப்போ நீங்க போய் பர்த்டே விஷ் பண்ணாலும் ஓ இண்ணைக்குதான் என்னோட பர்த்டேவான்னு கேட்டுட்டு போயிட்டே இருப்பான் அவ்ளோதான் என்றான் கிருஷ்ணா.

என்ன அண்ணியும் கொழுந்தனும் ஏதோ ரகசியம் பேசிட்டு இருக்கீங்க என்று கேட்டான் சூர்யா .

இல்ல உனக்கு இண்ணைக்கு பர்த்டேல அதை சொல்லிட்டு இருந்தேன் என்றான் கிருஷ்ணா.

ஓ அப்படியா சரி .டி இருக்கு போய் குடிங்க என்று சொன்னவன் ரூமுக்கு சென்று விட்டான்.

நான் சொல்லல இவன் எப்போவும் இந்த மாதிரிதான் சொல்லுவான் என்ற கிருஷ்ணா கிட்சன்க்கு சென்று விட்டான்.தேவாவும் கிட்சன்க்கு சென்று விட்டாள்.

சூர்யா வேலைக்கு சென்று விட்டான் .செல்வமும் வேலைக்கு சென்று விட்டார் கிருஷ்ணா ஸ்கூலுக்கு சென்று விட்டான்.தேவா அவனுக்காக கடிதம் ஒன்றை எழுதினாள்.அதன் பிறகு அமிர்தா வீட்டுக்கு வந்தாள்.

என்னமா எப்படி இருக்க உங்க ஆளுக்கு இண்ணைக்கு பிறந்தநாள் ஆச்சே என்ன ஸ்பெஷல் என்று கேட்டாள்  அமிர்தா .

ஒன்றும் இல்லை என்பது போல இடம் வலமாக தலை அசைத்தாள் .

அப்போ ஒண்ணுமே இல்லையா என்று கேட்டாள் அமிர்தா.

தேவா தலையை முதலில் இடம் வலமாக தலை அசைத்தவள் மீண்டும் தலையை மேலும் கீழும் அசைத்தாள் .அவளை பார்த்து சிரித்தாள் அமிர்தா.

இப்போ ஏதாவது ஸ்பெஷல்  இருக்கா இல்லையா என்று கேட்டாள் அமிர்தா.

தேவா ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் .

ம்ம்ம் சரி என்ன பண்ண போற என்று கேட்டாள் அமிர்தா.

தேவா சட்டை ஒன்றை காண்பித்தாள் .

ஓ சட்டை வாங்க போறியா ம்ம்ம் நல்லா இருக்கும் ஆமா எப்போ கடைக்கு போற  என்று கேட்டாள் அமிர்தா .இப்போ  என்று சைகை செய்தாள் தேவா.

அப்போ எதுக்கு வெய்ட் பண்ணனும் வா போலாம் என்று அழைத்தாள் அமிர்தா. தேவாவும் புன்னகை செய்தபடி அவளுடன் சென்றாள்.பாவம் அவனுக்கு உடை வாங்க போகும் அவசரத்தில் வீட்டில் உள்ள போனை எடுக்காமல் சென்று விட்டாள் அவள் கெட்ட நேரம் சூர்யா வீட்டுக்கு வந்து விட்டான்.பாவம் அவன் வீட்டுக்கு வரும்போது தேவா வீட்டில் இல்லை.அவன் நேராக பிரசாத் வீட்டுக்கு சென்றான் .ஆனால் அங்கும் அவள் இல்லை.அமிர்தா கடைக்கு செல்வதாக சொல்லிவிட்டுதான் கிளம்பினாள் அதற்கு நடுவில்தான் தேவாவை பார்க்க வந்தாள் அமிர்தா அதனால் அவளும் வீட்டில் தேவா உடன் கடைக்கு செல்வதை சொல்லவில்லை.அமிர்தாக்கு அழைக்கும்போது அவள் எடுக்கவில்லை.பிரசாத்க்கு அழைக்கும்போது அவன் அமிர்தா கடைக்கு இன்னும் வரவில்லை என்று சொன்னான் அதனால் சென்றால் அமிர்தா உடன்தான் சென்றிருக்க வேண்டும் ஏதாவது கோவிலுக்கு சென்றிருப்பாள் என்று நினைத்து அவன் வீட்டுக்கு வெளியே வர தேவா உள்ளே வந்தாள்.அவனை பார்த்து ஆச்சர்யம் அடைந்தாள் தேவா.அதே நேரம் சூர்யாக்கு கோபம் கோபமாக வந்தது.அவன் நேராக வீட்டுக்கு செல்ல தேவா வீட்டுக்குள் சென்றாள்.

எங்க போயிருந்த என்று சூர்யா கேட்க தேவா அவனிடம் அந்த கடையின் பையை நீட்டினாள் அதை பார்த்ததும் சூர்யாக்கு இன்னும் கோபம் அதிகமாக வந்தது அந்த பையை தூக்கி எறிந்தான்.

என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ என்று அவன்  சற்று அதட்டி கேட்கவும் தேவா பாவம் பயத்தில் நடுங்கி விட்டாள்.

இங்க பாரு தேவா நான் பொறுமையா இருக்கேன் அப்படிங்கிறதுக்காக எல்லாத்தையும் அமைதியா பாத்துட்டு இருப்பேன்னு நினைக்காத.அது என்ன யாரு கூடையும் சொல்லாம போற பழக்கம் .யார் கூட போன என்று கேட்டான் சூர்யா.தேவா அமிர்தாவை கோர்த்து விட விரும்பவில்லை அதனால் அவள் அமைதியாக இருந்தாள்.

ஓ அப்போ சரி நீ யாரையும் காட்டி கொடுக்க மாட்ட அப்படித்தான என்று சொன்ன சூர்யா கோபமாக அறைக்கு சென்றான்.தேவா நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் .அவளுக்கு பயத்தில் வியர்த்து இருந்தது .சூர்யா கோபத்தில் ரூமுக்கு சென்றவன் சேரில் அமர்ந்தான் அப்போதுதான் புக்குக்கு அடியில் இருந்த பேப்பரை எடுத்து பார்த்தான் தேவாதான் எழுதி இருந்தாள்.

எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியல இப்போ உங்க கையில என்ன இருக்கோ அதுதான் நான் உங்களுக்காக கொடுக்குற ஒரு பரிசு .நீங்க எனக்கு ஒரு குடும்பத்தை கொடுத்துருக்கினாகி.கோபத்தை மட்டும் பாற்றது வளர்ந்த  எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு .இருந்தாலும் உண்மையா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.என்னால பேச முடிஞ்சா நான் நிறைய சொல்லி இருப்பேன் ஆனா முடியல.உங்க பிறந்தநாள் நீங்க கொண்டாட மாட்டிங்கன்னு கிருஷ்ணா சொன்னா ஆனா நான் இந்த நாளைத்தான் கொண்டாட நினைக்கிறேன் இந்த நாள் இல்லன்னா நீங்க என் வாழ்க்கையில இருந்துருக்க மாட்டீங்க.வாழ்த்து சொல்ல எழுதின கடினம் நன்றி சொல்லுற கடிதம் மாதிரி இருக்கு.இருந்தாலும் நான் நிறைய நன்றிகளோட பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்றேன் .இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் என்று அவள்  எழுதி இருந்தால் அதை படித்தவனுக்கு கஷ்டமாக இருந்தது.

சூர்யா அவள் எங்கே தெரியாத இடத்தில் சென்று தொலைந்து விடுவாளோ என்ற பதட்டத்தில்தான் அவளை திட்டினான்.ஆனால் இப்போது அவளை திட்டிய வார்த்தைகள் அவனை நெருப்பாக சுட்டது.

எழுந்து வெளியே வந்தான்  சூர்யா தேவா அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.சூர்யா அந்த கவரை எடுத்தான்.தேவா தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தாள்.தேவாக்கு அப்போதுதான் அவள் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது .அதை எடுக்கலாம் என்று அவள் போக சூர்யா கூற;ள் கேட்டது.

அந்த லெட்டர்தான் நீ எடுக்க போறன்னா அத நான் ஏற்கனவே படிச்சிட்டேன்  என்றான் சூர்யா தேவா அவனை திரும்பி பார்த்தாள்.

சூர்யா அவள் வாங்கி இருந்த சட்டையை  எடுத்து பார்த்துவிட்டு அவளை பார்த்தான்.

------

என்னது அவளை கட்டி கொடுத்தா பத்து லட்சமும் 25 பவுன் உருப்படியும் கிடைக்குமா .ஆனா அவளுக்கு கல்யாணம் ஆச்சு .என்னது கல்யாணம் ஆனாலும் பரவாயில்லையா.அப்போ சரி அவளுக்க மாப்பிள்ளைக்கிட்ட இருந்து பிரிச்சு உங்களுக்கு கட்டி  வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று சொன்னாள் புவனா.

கனவில் கண்டது நிஜமாகுமா இல்லை கனவில் சொன்னது நிஜமாகுமா அடுத்தடுத்த பதிவில் அறிவோம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது அபிராமி கணேசன்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro