Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 32

(ஒரு மாதம் கழிந்தன)
அங்கிருந்த மேடம் "ஏய் நர்மதா இந்த மாசம் நீ நாப்கின் யூஸ் பன்னல???இன்னும் மாதவிடாய் வரலை??

ஐயயோ இந்த மேடம்க்கு என்ன பதில் சொல்றது "அ...அது வந்து எனக்கு மாதவிடாய் காலம் இன்னும் வரல மேடம்"

இல்லை யே போனமாசம் கரெக்டா வந்துச்சே நீ கூட பிள்ளையார் பூஜையில் கலந்துக்க முடியாம போச்சே....

நர்மதா கூட இருக்கும் அவளுடைய தோழி ஒருவள் "மேடம் இப்பலாம் நான் நர்மதா எல்லாம் துணி தான் யூஸ் பன்றோம் மேடம் அதான் என்று சமாளித்து நர்மதாவை தனியே அழைத்து பேசினாள் "மச்சி என்னடி இதெல்லாம் அந்த மேடம்க்கு தெரிஞ்சா உன்னை ஆஷ்ரமம் ல இருக்க விடாது . நீ உடனே நவினுக்கு போன் பன்னி விஷயத்தை சொல்லு ...

"ஹலோ நவின்...

என்ன நர்மது....😊

வந்தன்னு வை உன்னை அப்படியே நங்குனு தலைல கொட்டபோறன்.

ஏண்டி என்னாச்சு??

எல்லாம் நீ பன்ன விஷயம் தான்.. நான் கன்சிவ் இருக்கேன் மேடமுக்கு வேற சந்தேகம் வந்துருச்சு விஷயம் தெரிஞ்சா என்னை ஆஷ்ரமம் விட்டு அனுப்பிருவாங்க அந்த மேடம் ரொம்ப கண்டிப்பு. இப்ப என்ன பன்றது எனக்கு தெரியல....ஆஷ்ரமம் ல இருக்க குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை சொல்லி தர நானே ஒழுக்கம் இல்லாமல் இருக்கேனு நினைக்குறப்ப குற்ற உணர்வா இருக்கிறது. எதாவது வழி சொல்லு ப்ளீஸ்.

ம்ம்ம்.... ஒரே வழி தான் இருக்கு.பெசாம அபார்ட் பன்னிடலாம் நீ கிளம்பி நான் சொல்ற ஆஸ்பிட்டலுக்கு வா...என்னோட ப்ரண்டு தயாளன் அப்பா தான் அங்க சீஃப் டாக்டர். ஸோ நான் பேசிக்கிறன் நீ வா...

ந...நவின் அது வந்து...

என்ன???

ஏய் அது நம்ப மூலமாக வந்த உயிர் டா...பாவம் டா அந்த ஒருமாத கரு...என்னடா பாவம் பன்னுச்சு . எனக்கு என் புள்ள வேணும் டா ப்ளீஸ் அபார்ஷன் எல்லாம் வேணாம் வேற எதாவது வழி இருந்தா சொல்லு.

ம்ம்ம் என்ன பன்னலாம்....😂😂😂😂ஓகே நீ கிளம்பி என் சித்தப்பா வீட்டுக்கு போயிடு உன்னை ரயில் ஏத்தி விடுறன்..ராகேஷ் என் தம்பி உனக்கு தான் அவனை நல்லா தெரியுமே போய் அவன் வீட்டில் இரு. ஒன்னும் பிரச்சினை இல்லை... அதுக்குள்ள நான் வீட்டில் பேசி சம்மதிக்க வச்சு நம்ப கல்யாணம் பன்னிக்கலாம்.

டேய் என்னை கைவிட்டுற மாட்டல??

சத்யமா இல்லை டி என்னை நம்பு.

நம்புறன்.... நீயும் பெங்களூர் என் கூட வரலாமே நவின் ப்ளீஸ் நீயும் வாயேன் டா...எனக்கு உன்னை பார்க்காம இருக்க முடியாது.

புரிஞ்சு தான் பேசுறியா நர்மதா ???நீ போறது சூழ்நிலை காரணமாக. நான் இங்க வேலையெல்லாம் விட்டு எப்படி வர முடியும்??அங்க தான் உன் உயிர் தம்பி ராகேஷ் இருக்கான்ல 🙂

ஆமாம் நானும் ராகேஷ் ஏற்கனவே பழகிருக்கோம் னு உனக்கு எப்படி தெரியும்.???- நர்மதா

தெரியும் தெரியும் நான் போனவாட்டி அக்கா கூட பெங்களூர் போயிருந்தப்ப ராகேஷ் சொன்னான். - நவின்.

ஏய் நர்மதா நல்லா யோசிச்சிக்கோ..இந்த குழந்தை இப்போதைக்கு வேணுமா ???எதுக்கும் அபார்ட் பன்னிடலாம் ப்ளீஸ் டி...

இங்க பாரு உனக்கு என் கூட சேர்ந்து வாழ விருப்பம் இல்லைனா சொல்லு நான் பாட்டுக்கு எங்கயாவது போயிடுறன் அதுக்காக அபார்ட் பன்னலாம் சொல்லாத .....என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

🌼🌼🌼🌼
பெங்களூர் சென்றுவிட்டாள் நர்மதா அங்கு ராகேஷின் ஆதரவு அவளுக்கு முழுமையாக கிடைத்தது அங்கேயே ஒரு க்ளீனிக் டாக்டரிடம் மாதா மாதம் பரிசோதனை செய்து கொண்டு இருந்தாள் .இப்போது இரண்டு மாத கர்ப்பிணி. இன்னும் போச்சுனா வயிறு காட்டி கொடுக்கும் அதுக்குள்ள கல்யாணம் ஆயிடனும்.

இதற்கிடையில் சக்திக்கு டெலிவரி டேட் தந்தாச்சு...இதுல தன்னோட காதலை பற்றி சிந்திக்க நேரமில்லை நவினுக்கு. முதல்ல சக்தி அக்காவிடம் காதல் விவகாரம் சொல்ல வேண்டும் என நினைத்தான்.

ஆனால் அன்று வீராவை ரயில் நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது..."என்ன வீரா எங்க கிளம்பிட்ட ???

கொயம்பத்தூர் பன்னாரி அம்மன் கோவிலுக்கு ,சும்மா நான் மட்டும் தனியாக... என்னனு தெரியலை நவின் மனசே சரியில்லை அதான்.

ஓ.....நானும் பெங்களூர் போகனும் அதான் ரயில் ஏற வந்தேன். நர்மதா இப்ப சித்தப்பா வீட்டில் விட்டுருக்கன்...

"எ...ஏன் என்னாச்சு???

இல்லை அதுவந்து எப்படி சொல்றது உன்கிட்ட தெரியலை நான் நர்மதா கூட த...தப்பு பன்னிட்டேன் கன்சீவ் ஆயிட்டா...

போதும் நிறுத்து நவின் இதெல்லாம் சொல்ல வெக்கமா இல்லை... கல்யாணம் முன்னாடி இப்படி அவ வயித்த நிரப்பி வச்சிருக்க ..யார் கொடுத்த தைரியம் டா உனக்கு ரேஸ்கல்...

வீ...ரா...மன்னிச்சிறு நீ தான் எப்படியாவது உதவி பன்னனும். இங்க பாரு நான் அவளை கல்யாணம் பன்னிக்க தான் ஆசைபடுறன் டி ...அவளை கைவிட மாட்டேன் என்னைய நம்பு ப்ளீஸ்.

சரிசரி கொயம்பத்தூரில் இருந்து போன் பன்றேன் எங்க அண்ணன் முருகேஷ் க்கு எல்லாம் தெளிவாக பேசிட்டு உன்கிட்ட சொல்றன். கல்யாணம் க்கு ஒத்துக்க வைக்கிறன் .இப்போ ரயிலுக்கு நேரமாச்சு பை...

ஏ...ஏய் வீரா..கொயம்பத்தூரில் யாரவது தெரிஞ்சவங்க இருக்காங்களா??,எங்க நீ தங்குவ??

அதெல்லாம் என் ஸ்கூல் ப்ரண்டு ஒருத்தி மேரஜ் ஆயிட்டு அங்க தான் சேட்டில் ஆயிருக்கா அவ வீட்டில் தங்கிப்பேன்.நான் அப்ப கிளம்புறன் பை.

நவின் மனதில் இருந்த எண்ணம் ஓட்டங்கள் :
என்னை மன்னிச்சிறு வீரா ,அன்னைக்கு உன் இடையை தீண்டுன என் கைகள் ,இன்று நர்மதா வை தொட்டுவிட்டது. என்னை மன்னிச்சிறு சூழ்நிலை அப்படி ஆக்கிடுச்சு நான் என்ன பன்னுவேன். குடிபோதை என்னை அவளை தொட வச்சிருச்சு,ஆனால் நான் நர்மதா வை கைவிடமாட்டேன். கடவுள் பத்தியா எப்படி விளையாடிருக்காரு. .உன் கழுத்தில் நான் தாலி கட்டபோறேனு நினைச்சிட்டு இருந்த அந்த நொடி உன்னோட தனுஷை மறுபடியும் வரவழைத்தாரு...எங்க நான் நர்மதாவை விடாடுருவேனோ னு அவளுடன் நெருக்கமான சூழ்நிலை உருவாக்கிட்டாரு....என்னமோ வாழ்க்கை யை புரிஞ்சிக்க முடியல...வீரா நீ எனக்கு எப்பவுமே ஒரு நல்ல தோழியா இருக்கனும்.

பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ப்ளாட்பாரத்தை வந்தடைந்தது என்ற அனோஸ்மண்டு அவனை விழிக்க வைத்தது . ரயிலில் ஏறி அமர்ந்தான்.

கொயம்பத்தூர் ரயில் புரப்பட்டது.அதில் வீரா ஏறி அமர்ந்தாள்.

தொடரும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro