Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் -51

அன்று தாஜ்மஹால் சென்றுவர நண்பர்களுடன் சென்றான் அரசன். ஒரே நட்புகுழுவுக்குள் சிரிப்பும் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும் தான் இருந்தது....

அழகான புகைப்படங்கள் எடுத்து கொண்டு அதை வாட்ஸ்அப்பில் எல்லோருக்கும் அனுப்பி கொண்டு இருக்க அதை அநன்யாவுக்கும் அனுப்பினான்.

"ஹவ் இஸ் இட்??😊என்ற கேள்விக்கு அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை முன்பெல்லாம் டி.பி யை பாத்துட்டே அத்தனை ரிப்ளை வரும் இப்ப நம்ப ப்ரைவேட்டா சேட் பன்னாலும் பதில் காணோமே நம்ப சந்தேக பட்டமாதிரி அவளுக்கு நம்ப மேல காதல் இல்லையோ...சரி பார்த்துக்கலாம் என்று உச்சுக்கொட்டியபடி நடக்க அழைப்பு வந்தது "ஹலோ சொல்லுமா என்ன கால் பன்னிருக்க ???

ஏய் அகல்யா கல்யாணம் நெருங்கிடுச்சு டா நீ இன்னும் சென்னை வரலைனா எப்படி???பொன்னு வீட்டு சார்பில் நம்பதான் டா எல்லா வேலையும் பார்க்கனும் உங்க அத்தை வீரா கோச்சிக்கும் அப்புறம்.😂

சரிமா வரேன்..."மா அநன்யா எப்படி இருக்கா?? என்ற கேள்விக்கு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்த தாயை மா....என்ன ஆச்சு ஏன் பதில் சொல்லமாட்ற எதாவது பிரச்சினை யா???சொல்லு?

அ...அதுவந்து நீ நேர்ல வா விஷயம் உனக்கே புரியும். அது போன்ல சொல்லமுடியாது டா ப்ளீஸ் நேர்ல வா எல்லாம் பேசிக்கலாம்.

மா ...கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு அவ எப்படி இருக்கா அப்படிங்கிறது தான் என்னோட கேள்வி. என்று சொன்னதும் "நல்லாயிருக்கா டா ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் வேற அதைத்தான் நான் நேர்ல சொலாறனு சொன்னேன்.

மா என்னமோ விஷயம் இருக்கு எதையோ மறைக்கிற மாதிரி தெரியுது ஆனால் என்னனு எனக்கு தெரியனும் நான் நாளைக்கு கிளம்பி ப்ளைட்ல சென்னை க்கு வரேன் .வந்தவுடன் அவளதான் பார்க்க போவேன்.

ஏய் அதெல்லாம் நீ போய் எதுவும் கேக்க வேண்டாம் சும்மா கிளம்பி நம்ப வீட்டுக்கு வா நானே விஷயம் சொல்றன் பொறுமையா ஓகேவா.

இங்கபாரு கல்யாண பிஸில நீ எதையும் சொல்லபோறது இல்லை அப்புறம் என்ன??நானே தெரிஞ்சிக்கிறன்.

டேய் தாஜ்மஹால் போட்டோ செம்ம டா...இந்த பிச்சர் பொன்னு பார்க்க கொடுத்தா நல்லாருக்கும். என்று அவன் தாய் சக்தி பேச்சு வாக்கில் உளர அவனுக்கோ எதுவும் புரியவில்லை.

🌸🌸🌸🌸🌸
கல்யாண மண்டபம் கலைக்கட்டியது மண்டப வாசல் அலங்கரிக்கபட்டு வாழைமரம் கட்டிவைத்து பன்னிர் தெளித்து வரவேற்றனர். அவினாஷ் வந்தபோது தான் அரசனும் உள்ள நுழைந்தான் "டேய் அவி எங்கடா உங்க அக்கா????நான் இன்னும் அவளை பார்க்கல எங்க போனாள் டா ???

மாமா அது வந்து நான் உங்க கிட்ட அப்புறம் சொல்றனே முதல்ல வாங்க நம்ப உள்ளபோலாம் முஹுர்த்தம் ஆரம்பிக்கபோது சீக்கிரம் வாங்க அப்புறம் நம்ப போறதுக்குள்ள மாப்பிள்ளை தாலி கட்டி முடிச்சிருவாரு.

உள்ள வந்து நாற்காலியில் அமர்ந்தான் ஐயர் மந்திரம் ஓதுவதை பார்த்து கொண்டிருக்க மணமக்கள் வந்து அமர "கெட்டிமேலம்"என்று ஐயர் கை காட்டியபோது சதிஷ்யின் தாய் சத்யா "நிறுத்துங்க" என்று கத்தினார் "ஏண்டி என்ன நெஞ்சழுத்தம் இருந்தா ஏற்கனவே இன்னொருத்தன் கிட்ட கெடுக்கப்பட்டு இப்ப என் பையன் கிட்ட கழுத்தை நீட்ட வந்துருப்ப என்ன இதெல்லாம் எப்படி தெரியும் பாக்குறியா . போலிஸ் என்குவைரி பத்தி சதிஷ் உன்கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன்...உன்னை கெடுத்தவனை கண்டுபிடிக்க தான் போலிஸ் போராடுதாமே....ஏண்டி இரண்டு வருஷமா நடந்துட்டு இருந்த கேஸ் இவ்வளவு நாள் கண்ணுல மண்ணை தூவி இப்ப கல்யாணம் வரைக்கும் வந்துட்டியா ????
பதில் எதுவும் கூறாமல் அழுகையை அடக்கி கொண்டு கல் போல நின்றாள் அகல்யா..

சதிஷ் - மா...ப்ளீஸ் சத்தம் போடாத அமைதியாக இரு முதல்ல இந்த கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் பேசிக்கலாம். மா எனக்கு அகல்யா தான் வாழ்க்கை னு நான் முடிவு பன்னிட்டேன்.

ஏண்டா இந்த கழுதையை கட்டிக்க னு நான் தானே டா சொன்ன இப்ப நானே சொல்றன் இவ உனக்கு வேணாம் வா போலாம்.

மா இவளை முன்புலிருந்தே லவ் பன்றன் மா ....ரொம்ப வருஷமா லவ் பன்றேன் மா ப்ளீஸ் எங்களை பிரிசாசுறாதிங்க.

இங்க பாரு எனக்கு கவுரவம் தான் முக்கியம் நீ எழுந்துவா..

வீரா - ஏய் சத்யா என்னடி நீயே இப்படி பேசுனா எப்படி டி நீ சொல்றது எனக்கு ஒன்றும் புரியல என் பொன்னை ஒருத்தன் கெடுத்தானா ...ஐயோ ஒன்னும் புரியலையே ....

சத்யா - ஏண்டி வீரா அந்த காலத்துல என் அண்ணன் உன் போட்டோவை மார்ப்பிங் பன்னானு தைய தக்கா னு குதிச்சிங்களே இப்ப உன் பொன்னே கெட்டு போய் வந்துருக்கா இப்ப என்ன சொல்லவர...

நவின் - வார்த்தையை அளந்து பேசு சத்யா....வீராவை யும் அவ பொன்னையும் நீ இதுக்கு மேல அசிங்கபடுத்தமுடியாது.

முருகேஷ் - டேய் அரசன் ஒரு நிமிஷம் இங்க வா..

என்ன அப்பா???

நடக்கிறது எதுவும் சரியில்லை இப்ப இருக்கிற சூழ்நிலைல நீ அகல்யா கழுத்தில் தாலி கட்டி அவளை நம்ப வீட்டுக்கு மருமகளா கூட்டு வந்திடு ப்ளீஸ்....ஏன்னா சதிஷ் வீட்டில் இவ நிம்மதியாக காலம் முழுக்க வாழ முடியாது.

ப்பா திடிருனு இப்படி சொன்னா நான் என்ன முடிவு எடுக்கிறது???

தொடரும்.
அகல்யா கழுத்தில் தாலி கட்டுவானா அரசன்?

அப்போ அநன்யா???அவளுக்கு என்ன ஆச்சு ??ஏன் அநன்யா பற்றி யாரும் எதுவும் சொல்லல???😢 பார்ப்போம்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro