
யாராகுள் இங்கு யாரோ உண்மையான முதல் பாகம் 😂😂😂😂
💥💥படித்தவுடன் மறந்து விடவும் 💥💥
காலை நேரம் வீட்டில் எல்லாரும் உறக்கத்தில் இருக்க அகரன் மட்டும் அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். அந்த பெரிய வீட்டில் அவனுடன் பிறந்த ஒரு சகோதரி மாலதி . அகரன் தான் அந்த வீட்டின் முதல் பிள்ளை சிறு வயதில் தந்தை இறந்து போக தாயின் அணைப்பில் வளர்ந்தனர். பணத்திற்கு பிரச்சனை இல்லாத குடும்பம் என்பதாலும் அகரனின் அப்பாவின் நண்பர் சிவகுமாரின் உதவியாலும் அவர்களுடைய கம்பெனி எந்த வித பிரச்னையும் இல்லாமல் நடந்தது.அப்பா இல்லாத குடும்பம் என்ற பெயரே இல்லாமல் ஒழுக்கத்திலும் பாசத்திலும் ஊரே கண் வைக்கும்படி இருந்தனர். ஆனால் இடையில் அவன் தாயின் இறப்பு அதன் பின்பு நடந்த ஒரு சம்பவம் அதனால் இன்று இவனை பற்றி கவலை பட யாரும் இல்லை என்றாகி விட்டது. எல்லாரும் ஒரே வீட்டில் தான் இருக்கின்றனர். ஆனால் இவனுக்காக யாரும் இல்லை.
அதை பற்றி அவனுக்கு கவலையும் இல்லை. ஏற்கனவே இறந்த ஒருவனை கத்தியால் குத்தினால் என்ன சாட்டையால் அடித்தால் என்ன வலியை அவ்வுடல் அறிய போவதில்லை.
என்னோட வாழ்க்கையில நான் பண்ண ஒரே தவறு உன்மேல என்னோட உயிரை வச்சது ஆனா அதுவும் சரிதான் போல அனு இல்லைன்னா என்ன இத்தனை பேர் காயப்படுத்துன பிறகும் என்னால இவ்ளோ சந்தோச பட முடியாது இல்லையா. அகரனின் மனவோட்டத்தை கலைத்தது எங்கோ சென்றுகொண்டிருந்த புல்லட்டின் சத்தம்.
வேலைக்கு செல்ல தயாராகி கீழே வந்தான் இன்று வழக்கத்தை விட சற்று சீக்கிரமாக கிளம்பி விட்டதால் மாலதி சாப்பிடும் நேரம் இவனும் சாப்பிட வர வேண்டியதாயிற்று. அகரனை பார்த்ததும் மாலதி எழுந்து செல்ல எத்தனிக்க அகரன் சாப்பிடாமல் சென்று விட்டான்.
காலையில் சீக்கிரம் அலுவலகதிற்கு சென்றவன் சில கோப்புகளை பெயருக்கு பார்த்தான்.அவனுடைய மனம் சொல்ல முடியாத வலியில் தவித்தது. அப்படியே கண்ணை மூடினான் மனதெல்லாம் நிறைந்த அவளே அவன் கண் மூடிய பிறகும் தோன்றினாள். அவளோடு அவன் வாழ்ந்த நாட்கள் குறைவானதாக இருக்கலாம் காதலின் வலிமை காலத்தால் அளப்பது அல்லவே அது இதயத்தில் தோன்றும் அன்பால் அளப்பது .
ஹே அகரா என்னடா இண்ணைக்கு ஏதோ கவலையில இருக்க மாதிரி இருக்கு என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் சித்தார்த்
அகரனிடம் எந்த பயமும் இன்றி பேச தைரியம் இருக்கும் ஒரே ஆள் சித்தார்த் மட்டுமே சித்தார்த் இந்த கம்பெனியோடு சேர்த்து பல கம்பெனிக்கு லீகல் அட்வைசர்.
என்ன சித்தார்த் திடீர்னு வந்திருக்க. சித்தார்த் பேச ஆரம்பித்தான். இங்க பாருடா நான் நல்ல வரன் கொண்டு வந்துருக்கேன்.
டேய் சித்தார்த் நீ என்ன வேலை பாக்குறேன்னு உனக்கு தெரியுதா. நான் தான் சொன்னேன்ல என்னால கல்யாணத்தை பற்றி யோசிக்க முடியாதுன்னு
இங்க பாரு அகரா இண்ணைக்கு நான் பேச வந்தது உன்னோட கல்யாணத்த பற்றி இல்லை உன்னோட தங்கச்சி கல்யாணத்த பத்தி
மாலதி கல்யாணமா அப்டினா நீ அவகிட்ட போய் கேளு உனக்கு தெரியுமே நானும் அவளும் பேசியே பல வருஷம் ஆகுதுன்னு அப்புறம் எப்படி இதைபத்தி பேச முடியும்
அதுக்காக அவ அப்டியே இருக்கட்டும்னு விட்டுட முடியாது இல்லை. நீ மட்டும் தான் அவளுக்குன்னு இருக்குற ஒரேயொரு துணை நீயே இப்படி ஒதுங்கி நின்னா
என்னடா இப்படி பேசுற உனக்கு நடந்ததெல்லாம் தெரியும் அவளுக்கு என்மேல இருந்த பாசம் எல்லாம் போய் ரொம்ப நாள் ஆச்சு. இப்போ நாங்க அறிமுகமே இல்லாத ஆட்கள் மாதிரிதான் இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம். அவ என்மூலம் எதுவுமே வேண்டாம்னு தனியா பிஸினஸ் பண்ணறா இப்படி இருக்கவக்கிட்ட போய் நான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொன்னா நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிடுவா. சோ நீயே போய் பேசு அவகிட்ட அவ உன்னையும் அண்ணனாதான் நினைக்குறா
எல்லாம் சரிதான் அப்போ அவ கல்யாண விசயத்துல நீ தலையிட மாட்ட இல்லையா அகரா
அப்படி இல்லை அவகிட்ட தான் பேச மாட்டேன்னு சொன்ன ஆனா அவளை யார் கையில பிடிச்சு குடுக்கணும்ன்னு நினைக்கிறேனோ அவன் நிச்சயமா தங்கமா இருக்கணும் என் தங்கச்சிய நல்லா பாத்துக்கணும் அப்படி ஒரு பையனதான் பாப்பேன்.
உனக்கும் சரி அவளுக்கும் சரி பாசம் ஜாஸ்திடா ஆனா இந்த குழப்பத்தால ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பிரிஞ்சி இருக்கீங்க எல்லாம் சீக்ரம் சரி ஆகும்
பாக்கலாம் டா இத்தனை நாள் மாறாதது இனி என்ன மாற போகுதுன்னு
Me:மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றம் தான் இப்பொழுது மாலதியின் காரின் எதிரே வந்து விழுந்தது
ஏன்மா கண்ண எங்க மா வச்சிட்டு வர்ற உன்மேல இடிச்சுருந்தா நான்ல போலீஸ் கேஸ்ன்னு அலையணும் என்று கார் டிரைவர் கத்த ஏற்கனவே பயந்திருந்த அபி இன்னும்.
______________________________________
ஒண்ணுமே புரியலயோ இதுதான் யாருக்குள் இங்கு யாரோ நான் முதல்ல யோசிச்சு வச்சது. ஆனா அப்புறம் இப்படி ஒண்ணு எழுதுனத நானே மறந்துட்டேன். இப்போ ரீசன்ட்டாதான் நானே பாத்தேன். அதான் சரி எழுதினது எதுக்கு வேஸ்ட் பண்ணணும்ன்னு போஸ்ட் பண்ணிட்டேன்.
1.நிறைய பேர் கேப்பிங்க என்கிட்ட ஸ்டோரி அடுத்து என்ன ஆகும்ன்னு ஆனா உண்மையா சொல்லணும்ன்னா எனக்கே அது தெரியாது. ஒவ்வொரு பார்ட் எழுதுற வரை எனக்கே தெரியாது. சில பார்ட் யோசிச்சு வச்சிருப்பேன் அப்போ டவுட் கேட்டா சொல்லுவேன் இல்லைன்னா நான் இன்னும் யோசிக்கலன்னு உண்மைய சொல்லிடுவேன். இல்லைன்னா ஐடியா கிடைச்சதும் அவங்க கிட்ட சொல்லிடுவேன். இப்போ கூடயாருக்குள் இங்கு யாரோ - 55 ல என்ன எழுத போறேன்னு முடிவு பண்ணல . ஆனா போஸ்ட் போட்டுருவேன். இப்படி தான் நான் எழுதுறேன் அதுக்கு நீங்க தர்ற ஆதரவுக்கு நன்றி 😇.
ஆனந்த கண்ணீர் வேற ஒண்ணுமில்ல 😂😂
2.அப்புறம் எப்படி லவ் ஸ்டோரிஸ் எழுதுறிங்கன்னு கேட்டுருக்காங்க. படங்கள் அப்புறம் கதைகள்ல வர்றத வச்சிதான் இப்படி இருக்கும்ன்னு எழுதுறேன் மத்தபடி இப்படித்தான் இருக்கும்ன்னு எனக்கும் தெரியாது. தெரிஞ்சுருந்தா கஷ்ட படுற மாதிரி கூட எழுதி இருப்பேன்.
ஐடியா கிடைக்கலன்னா எதாவது பாட்டு கேட்டுட்டு அப்புறம் எழுத ஆரம்பிப்பேன் அந்த பாட்டு தான் மேல ஆரம்பத்துல எழுதி வைப்பேன்.
இந்த ரெண்டு சீரிஸ் பாத்துட்டுதான் யாருக்குள் இங்கு யாரோ எழுதவே ஆரம்பிச்சேன் ❣️
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் 😇
அடுத்த பார்ட் நாளைக்கு போஸ்ட் பண்ற.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro