Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

யாருக்குள் இங்கு யாரோ -47

❣️என்னுடைய நிழலும் இன்னொருத்தி தொடுவது பிழை என்று கருதி விட்டாள். ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கை கொடுக்க தங்க முகம் கருகி விட்டாள்❣️

ஹரிணி சத்யா சொன்னதை கேட்டு சோகமாக அமர்ந்து இருக்க பைசல் வந்தான்

பைசல் :ஹோய் என்ன முகம் எல்லாம் வாடி போய் இருக்கு

ஹரிணி :ஒண்ணுமில்ல அண்ணா சும்மாதான்

பைசல் :அப்டியா சரி நம்புறேன். சாப்பிடலயா

ஹரிணி :இல்லை இப்போ பிரேக் தான அப்புறம் சாப்பிட்டுக்கலாம்

பைசல் :ஹரிணி இப்படி சொல்ல மாட்டாளே.

ஹரிணி :இல்ல அண்ணா எனக்கு வேணாம்

பைசல் :சரி உம்மா இன்னைக்கு குலாப் ஜாமுன் செஞ்சு குடுத்தாங்க உனக்கு வேண்டாமா சரி நான் சாப்பிட்டுக்குறேன்

ஹரிணி :ஆஹ் இல்லை எனக்கு வேணும். ஆண்ட்டி எனக்குதான் குடுத்து விட்ருப்பாங்க குடுங்க இல்லைன்னா நான் போன் பண்ணி மாட்டி விட்ருவேன். (Me:சாப்பிடுவது என்றால் சகல துக்கத்தையும் மறக்கும் இவள் என் இனம்😎😎😎😎)

பைசல்க்கு சிரிப்புதான் வந்தது. அவளிடம் பாக்ஸ் ஒன்று  கொடுத்தான். ஹரிணி குலாப் ஜாமுன் ஒன்றை எடுத்து வாயில் போட்டாள்.

ஹரிணி :என்ன அண்ணா இன்னைக்கு திடீர்னு குலாப் ஜாமுன் எல்லாம். வழக்கமா ஆண்ட்டி கார சாரமா தான குடுத்து விடுவாங்க இன்னைக்கு என்ன ஸ்வீட் எல்லாம்.

கேட்டுக்கொண்டேஇன்னொரு குலாப் ஜாமுன் எடுத்து வாயில் போட்டாள்.

பைசல் :அது நல்ல விஷயம் சொல்றதுக்கு முன்னாடி ஸ்வீட் எடுத்துக்கணும்

ஹரிணி :என்ன நல்ல விஷயம் அண்ணா

கேட்டுக்கொண்டே இன்னொரு குலாப் ஜாமுன் எடுத்து வாயில் போட்டாள்.

பைசல் :அது அண்ணா இப்போ வாப்பா ஆக போறேன்

ஹரிணி :ஓ செம்ம அண்ணா. இருங்க இப்போ என்ன சொன்னிங்க கரெக்ட்டா தான் கேட்டுச்சா. ஆஹ் அப்பா ஆக போறீங்களா கையை குடுங்க. இந்தாங்க நீங்களும் ஒரு குலாப் ஜாமுன் சாப்பிடுங்க.

பைசல் :ஹரிணி ஹரிணி உன்னோட சந்தோசத்த கட்டுபடுத்து ஆபீஸ்ல உனக்கு சாயா ஜோசப்க்கு தான் தெரியும் வேற யாருக்கும் தெரியாது சரியா. நீயும் யாருகிட்டயும் சொல்லாத

ஹரிணி :ஓ சரி சரி நான் சொல்லல ஆனா எனக்கு சந்தோசம் தாங்கலயே.என்ன பண்ணுவ இருங்க நான் நார்மல் ஆகிக்கிறேன்.

ஒரு பக்கம் மூச்சை இழுத்து இன்னொரு பக்கம் மூச்சை விட்டு நார்மல் ஆனதாக சொன்னாள்.

ஹரிணி :சரி பர்வீன் அக்காவ பாக்க போலாமா

இருவரும் அவர்கள் இடத்திற்கு சென்றனர். சாயா பைசல் பார்த்ததும் மென்மையாக புன்னகை புரிந்து வாழ்த்துக்கள் சொன்னாள்.அவனும் பதிலுக்கு புன்னகை செய்தான் ஹரிணி பர்வீன்க்கு வாழ்த்துக்கள் சொன்னாள்.சாயாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

பைசல் :பர்வீன் சாப்டியா

பர்வீன் :இங்க பாருங்க நான் ஜூஸ் இப்போதான் குடிச்ச வேணா நீங்க சாயா கிட்ட கேட்டு பாருங்க

சாயாவும் அவள் இப்போதுதான் ஜூஸ் குடித்தாள் என்று சொன்னாள்

பைசல் :ஓகே அப்போ நாங்க கிளம்புறோம் எதாவது வேணும்ன்னா கேளு. சாயா கொஞ்சம் அவள பாத்துக்கோங்க.

சாயா :நான் பாத்துக்குறேன்

ஹரிணி :பை சிஸ் என்ன தேவை இருப்பினும் உடனுக்குடன் அழைக்கவும். உடனே வந்து வந்து விடுவோம்

என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் சென்று விட்டனர். அவர்கள் செல்ல

பர்வீன் :இருந்தாலும் இவர் கொஞ்சம் ஓவராதான் பண்ணிக்கிட்டு இருக்காரு. பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை சாப்டியான்னு கேட்டுட்டே இருக்காரு. பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை சாப்பிட்டா நான் என்ன ஆவேன்.

என்று சொல்லிவிட்டு அவள் சிரிக்க ஆரம்பித்தாள்.

சாயா :ஏன் சிரிக்குற

பர்வீன் :இல்லை நேத்து ரொம்ப ஒருமாதிரி இருந்துச்சு அப்புறம் வீட்டுக்கு பைக்ல போய்ட்டு இருந்தப்போ எனக்கு தல சுத்த ஆரம்பிச்சிருச்சு. சரின்னு ஹாஸ்பிடல் போனோம். அவங்க சில டெஸ்ட் எல்லாம் பண்ணி பார்த்தாங்க. எனக்கு செம்ம பயம் என்ன டா தல சுத்துதுன்னு வந்தா இவங்க பண்றத பாத்தா மயக்கமே வந்துரும் போல அப்டின்னு நினைச்சுட்டு இருந்த.டாக்டர் பார்த்துட்டு காங்கிராசுலேசன்ஸ்ன்னு சொன்னாங்க ஒண்ணுமே புரியல நான் எதுக்குன்னு வேற கேட்ட அவங்க சொன்னாங்க கர்பமா இருக்கேன்னு. என்னால  நம்பவே முடியல அவர பாக்கணுமே பேயறஞ்ச மாதிரி ஆகிட்டாரு  எங்களுக்கு நிதானத்துக்கு வரவே ரொம்ப நேரம் ஆச்சு. அல்லாஹ் குடுத்த பரிசு நினைச்சு அவ்ளோ சந்தோசம். வீட்டுக்கு போய் சொன்னதும் எல்லாருக்கும் சந்தோசம் வாப்பாக்கெல்லாம் அவ்ளோ சந்தோசம். என்ன நிக்க கூட விடல. ஒரு குழந்தை வருதுன்னா கூடவே எவ்ளோ சந்தோசம் வருதுல்ல. நேத்து ரொம்ப நேரம் நானும் அவரும் பாப்பா பத்தி தான் பேசிட்டு இருந்தோம். வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொன்னாங்க நான் தான் டாக்டர் அதெல்லாம் போலாம்ன்னு சொன்னாங்க பைசல் கூட தானே இருக்காருன்னு சொல்லிட்டு வேலைக்கு  வந்துட்டேன். இவர் என்னடான்னா இப்படி படுத்துறாரு.

சாயா :ஓஹோ வாய் அப்படி சொல்லுது ஆனா மனசு  ஆஹா நம்ம புருஷன் தாங்குறாறேன்னு உள்ளுக்குள்ள குத்து டான்ஸ் ஆடிட்டு இருக்க மாதிரி தெரியுது

பர்வீன் :ஈ ஈ அதுவும் உண்மைதான் ஆனா இது தெரிஞ்சா அவர் அப்புறம் நிமிஷத்துக்கு ஒரு கால் பண்ணுவாரு

சாயா :சரி சரி ஆனா நீயும் சரியா சாப்பிடணும். உனக்காக தான் ஜூஸ் குடிச்சன்னு பொய் சொன்ன இப்போ உண்மையா ஜூஸ் குடி

பர்வீன் :வேணாமே

சாயா :நீ சரிப்பட்டு வரமாட்ட.நான் உங்க அவரயே கூப்பிடுறேன்

பர்வீன் :இல்லை நானே கூப்பிடறேன் ச்சே இல்லை நானே குடிக்கிறேன்

அப்புறம் அவர்கள் இருவரும் டிஸ்கஸன் ரூம்க்கு சென்றனர். ஜோசப் அந்த காஸ்மெட்டிக் ஆட்க்கான வேலை சென்று கொண்டிருக்க முதலில் டீமில் இருந்து ஐடியா சொன்னார்கள்.

பர்வீன் :எல்லாம் ஓகே பட் இப்படி அந்த ப்ராடக்ட் இருந்தாதான் கான்பிடன்ட்டா இருக்க முடியும்ன்னு சொல்ற மாதிரி இருக்கு அது வேண்டாமே.

ஜோசப் :ம்ம்ம் நீ சொல்றதும் சரிதான் பர்வீன்.

மல்லிகா :இந்த மாதிரி ஆட் குடுத்தா தான் நல்லா இருக்கும் அந்த கம்பெனி இம்ப்ரெஸ் பண்ற மாதிரி இருக்கும். அதோட இது ஜஸ்ட் ஆட் தான.அதனால இப்படி எடுக்குறது தப்பு இல்லை. நம்ம வின் பண்ணணும்ன்னா இப்படி பண்ணாதான் முடியும்.

பர்வீன் :ஒரு ஆட் எவ்ளோ மாற்றத்தை கொடுக்கும் தெரியுமா கலர் மாறாதுன்னு தெரிஞ்சும் இன்னும் பல கிரீம் மார்க்கெட்ல விலை போக காரணமே ஆட்ஸ்தான். சோ அத யோசிக்கிற நமக்கும்  கொஞ்சம் ரெஸ்பான்ஸ்பிலிட்டிஸ் இருக்கணும்

மல்லிகா :சோ எனக்கு ரெஸ்பான்ஸ்பிலிட்டிஸ் இல்லைன்னு சொல்றிங்களா

பர்வீன் :நான் அப்படி சொல்லல. ஐடியால கொஞ்சம் மாத்தணும்ன்னு தான் சொல்றேன் மத்தபடி எல்லாம் ஓகே தான்

மல்லிகா :இங்க பாருங்க என்னோட ஐடியாவ மாத்திக்கிறது எனக்கு பிடிக்காது நீங்க இன்னும் பழைய மாதிரி யோசிக்கிறீங்க கொஞ்சம் புதுசா யோசிங்க

கொஞ்சம் சத்தமாக பேசினாள்.சாயாக்கு கோபம் கோபமாக வந்தது சாயா பேச வர அவளை கண்ணாலே அமைதியாக இருக்க சொன்னாள் பர்வீன்.

ஜோசப் :ஹலோ ஹலோ ஸ்டாப் எதுக்கு இப்படி பேசுறீங்க மல்லிகா இப்படித்தான் சீனியர் கிட்ட பிஹேவ் பண்ணுவிங்களா. பர்வீன் கிட்ட சாரி சொல்லுங்க

மல்லிகா :நான் தப்பு பண்ணல

ஜோசப் :இப்போ நீங்க சாரி சொல்லலன்னா இந்த டீம்ல நீங்க இருக்க மாட்டிங்க

பர்வீன் :இட்ஸ் ஓகே ஜோசப் விடு.

மல்லிகா :சாரி

முறைப்பாகதான் கூறினாள்.மீண்டும் டிஸ்கசன் ஸ்டார்ட் ஆனது. இறுதியாக டிஸ்கசன் முடிய பர்வீன் சொன்னது போல சில மாற்றங்கள் செய்ய பட்டது.

ஜோசப் :ஓகே இந்த நான் அகரன் சார் கிட்ட சொல்லிடறேன் அப்புறம் மேல பண்ண வேண்டிய வேலை பண்ணலாம்.இப்போ எல்லாரும் லஞ்ச்க்கு போங்க.

எல்லாரும் லஞ்ச்க்கு சென்றனர் ஹரிணியும் பைசலும் அமர்ந்து இருந்தனர்.

பைசல் :என்ன வேலை எல்லாம் முடிஞ்சதா. பாரு எவ்ளோ டியர்டா இருக்கேன்னு

பர்வீன் :என்னால முடியல பைசி

பைசல் :என்ன ஆச்சு இங்க

பர்வீன் :உன்னோட அன்பு தொல்லையதான் சொன்ன. பசிக்குது சாப்பிட விடுவீங்களா

பைசல் :வா வந்து உக்காரு.

அவளுக்கு ஏனோ அந்த பிரியாணி பிடிக்கவே இல்லை. சாயா தயிர் சாதம் மாங்காய் ஊறுகாயும் உருளைக்கிழங்கு பொரியலும் கொண்டு வந்து இருந்தாள்.சாயா இப்படி எதாவது கொண்டு வந்தாலே வழக்கமாக தயிர் சாதம் என்று  கிண்டல் செய்பவளுக்கு இப்போது ஏனோ அந்த சாப்பாடு தான் வேண்டும் என்பது போல இருந்தது.

சாயா :என்ன சாப்பிடாம யோசனை

பர்வீன் :எனக்கு இந்த சாப்பாடு வேணாம் எனக்கு அது தான் வேணும். நீ இத சாப்பிடு

என்று தயிர் சாதத்தையும் மாங்காய் ஊருகாவையும் சுவைத்து உண்டாள்.எல்லாருமே அவளை வித்யாசமாக பார்த்தனர்.

பர்வீன் :உங்க எல்லாருக்கும் என்ன லஞ்ச் டைம் தனியா சொல்லி இருக்காங்களா சாப்பிடுங்க

எல்லாரும் சிரித்துக்கொண்டே சாப்பிட்டு கொண்டே இருந்தனர். சாயாதான் அகரன் வருவானா என்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ஹரிணி :சாப்பிடு

சாயா :சாப்பிடறேன் அவர் வருவேன் சொன்னாரு. பர்வீன் பைசல் சாப்பிட்டு விட்டு சென்று விட்டனர் ஹரிணியும் எழ போக அப்போது தான் அகரன் வந்தான்

சாயா :வாங்க சாப்பிடலாம்

ஹரிணி :அண்ணா நீங்க வருவீங்கன்னு சாப்பிடாம உக்காந்து இருக்கா. சரி ஓகே எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்.

என்று சொல்லிவிட்டு ஹரிணி சென்று விட்டாள்.

அகரன் :ஏன் சாயா டைம்க்கு சாப்பிட வேண்டியது தான

சாயா :சாப்பிட தான் போறேன். வாங்க நீங்களும் உக்காருங்க

அகரன் :இல்லை அது வந்து  நான் சப்பிட்டேன் சாயா ஒரு மீட்டிங் இருந்துச்சு முடிஞ்சதும் அப்டியே லஞ்ச் போய்ட்டு வந்துட்டோம்.

சாயா :ஓ அப்டியா சரி அப்புறம் ஏன் இங்க நிக்குறிங்க. உங்களுக்கு இருக்க வேலைல என்ன நியாபகம் இருக்குமா. நான் தான் போன் பண்ணி கேட்ருக்கணும் இட்ஸ் ஓகே. லஞ்ச் டைம் முடிய போகுது நான் சாப்பிடணும்.

என்று சொன்னவளின் குரலில் வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது. அவனை பார்க்காமல் வேகமாக சாப்பிட புரை ஏறிவிட்டது அவளது தலையை தட்டி கொடுத்தவன் தண்ணீரை எடுத்து கொடுத்தான்.

அகரன் :என்மேல தான கோபம் தண்ணி மேல இல்லையே குடி

அதை வாங்கி குடித்தாள்.

அகரன் :சாரி அம்மாடி எல்லாமே திடிர்னு முடிவு ஆயிடுச்சு அதான் மறந்துட்டேன். சாரி

சாயா :இட்ஸ் ஓகே

என்றவள் எழுந்து சென்று விட்டாள்.இங்கே ஹரிணியும் வேறு ஒரு பெண்ணும் புதிய ஆட்க்காக  லொகேஷன் பார்க்க காபி ஷாப் சென்று இருந்தனர். ஆட்க்காக பேசி டேட் எல்லாம் முடிவு செய்த பின்னர் வெளியே செல்ல எத்தனிக்க அந்த காபி ஷாப்பில்  ஒரு இடத்தில் மட்டும் கூட்டமாக இருக்க அங்கே சென்று பார்க்க சத்யா இன்டெர்வியூ கொடுத்து கொண்டு இருந்தான் உடன் அந்த ஹீரோயின் இருந்தாள்.ஆங்கர் சொல்லும் மொக்க ஜோக்குக்கு கூட சத்யாவின் மீது விழுந்து விழுந்து அவள் சிரிக்க ஹரிணிக்கு பற்றிக்கொண்டு வந்தது. அதை அதிகரிக்கும் விதமாக உடன் வந்தவள் பேச ஆரம்பித்தாள்

ஷீலா :பாரேன் இவங்க பேர் நல்லா இருக்குல்ல. எனக்கு என்னவோ இவங்க லவ் பண்றாங்கன்னு தோணுது.

ஹரிணிக்கு பக்கென்று இருந்தது.

ஹரிணி :ஏன் அப்படி சொல்ற

ஷீலா :இல்லை சத்யா சார் ரீசென்ட் இன்டெர்வியூல லவ் மேரேஜ் தான் சொன்னாரு அவரு இதுக்கு முன்னாடி இப்படி சொன்னதே. கல்யாணம் டாபிக் வந்தாலே மாத்துறவரு இப்போ இவங்க கூட ஆக்ட் பண்ண ஆரம்பிச்ச பிறகு தான் லவ் பத்தி பேசுறாரு. எது எப்டியோ நல்லா இருந்தா சரிதான்.

என்று ஏதோ நேரில் பார்த்ததை சொல்வது போல சொன்னவள் விடை பெறுவதாக சொல்லி கிளம்பி விட்டாள்.திரும்பி பார்த்தாள் ஹரிணி சத்யாவின் அருகில் உட்கார்ந்து கொண்டு சிரித்துகொண்டு இருந்தாள் அந்த ஹீரோயின்.

ஹரிணி (m.v)1:அவ்ளோ இடம் இருக்கு தான பின்ன என்ன. எதுக்கு அவ்ளோ நெருக்கமா உக்காரணும். இவருக்கு சிரிப்பு ஒரு கேடு. வாய பாரு

ஹரிணி (m.v)2:அவர் ஹீரோ இதெல்லாம் அவர் வாழ்க்கைல சகஜம் அதோட நீதான வேண்டாம்ன்னு சொன்ன. அப்புறம் என்ன. ஒரு காலத்துல சத்யாவோட எந்த வீடியோ வந்தாலும்  நீ பாக்க தான செய்வ இப்போ மட்டும் என்ன.

ஹரிணி (m.v)1:அப்போ எனக்கு வெறும் ஹீரோ இப்போ அப்படி இல்லயே

இப்படி அவளின் மனம் ஒரு புறம் அவனுக்காக பேச இன்னொரு புறம் எதிராக பேச அப்படியே நின்று  நகத்தை கடித்துக்கொண்டு இருந்தாள்.அவளை பார்த்த சத்யா அவளுக்கு போனில் அழைத்தான்.

சத்யா :ஹலோ ஹரிணி

ஹரிணி :சொல்லுங்க சீனியர்

சத்யா :இங்க என்ன பண்ற

ஹரிணி :இல்லை ஆட் விஷயமா பேச வந்தோம்.

சத்யா :வீட்டுக்கு எப்படி போற

ஹரிணி :பஸ்ல தான்

சத்யா :ஓ !கொஞ்சம் வெயிட் பண்ணு ஒண்ணா போலாம். நீ போய் கார்ல உக்காரு

ஹரிணி :இல்லை சீனியர் நான் பஸ்ல போய்க்கிறேன்

சத்யா :உன்ன என்ன பண்ண சொன்னனோ அத பண்ணு

என்றவன் போனை வைத்து விட்டான்.

சத்யாவின் மேனேஜர் ஹரிணியிடம் சென்று கார் கீ கொடுத்தார். அவளும் அதை வாங்கிக்கொண்டு காரில் சென்று அமர்ந்தாள் சிறிது நேரத்தில் சத்யா வந்தான்.காரில் அமர்ந்தவன்  ஹரிணி பின்னால் அமர்ந்து இருப்பதை பார்த்தான்.

சத்யா :ஹோய் அங்க ஏன் உக்காந்து இருக்க

ஹரிணி :ஏன் உக்கார கூடாதா

சத்யா :நான் கார் ஒட்ட போறேன்

ஹரிணி :ஓட்டுங்க நான் என்ன பண்ண

சத்யா :என்ன பாத்தா டிரைவர் மாதிரி இருக்கா ஒழுங்கா முன்ன வந்து உக்காரு. (Me:பயங்கரம் பாஸ் )

ஹரிணி :இதுக்கு தான் நான் அப்போவே பஸ்ல போறேன்னு சொன்ன  ஆனா அதுக்குள்ள நீங்கதான் கூட்டிட்டு போறேன்னு சொன்னிங்க. பிறவாயில்லை நான் பஸ் போறேன். இல்லைன்னா நடந்து கூட போறேன் நீங்க ஒண்ணும் எனக்கு டிரைவர் வேலை பாக்க வேணாம்.

என்று சொல்லிக்கொண்டு இறங்க போக

சத்யா :ஓ நீ இறங்கிடுவியா.இப்போ மட்டும் நீ இறங்குனன்னு வச்சிக்கோ நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை

ஹரிணி :அய்யடா என்ன பண்ணுடுவீங்க

சத்யா :ம்ம்ம் இப்படி லொட லொடன்னு பேசுற உன்னோட வாய கடிச்சு வச்சிருவேன்.

ஹரிணி :வாய கண்டிப்பிங்களா

என்று சொல்லி அதை  நினைத்து பார்த்தவள்
ச்சி என்றாள்

சத்யா :என்ன நினைச்சு பாத்தியா. நீ நினைச்சது நடக்க கூடாதுன்னா முன்ன வந்து உக்காரு.

ஹரிணி முன்னாடி வந்து உட்கார்ந்தாள்.

ஹரிணி (m.v):மனசுல நினைச்சத எப்படி கண்டு பிடிச்சாரு.

சத்யா :நீ என்ன யோசிக்கிறன்னு உன்னோட முகம் சொல்லுது ரொம்ப யோசிக்காத 

கார் அமைதியாக செல்ல ஆரம்பித்தது. ஹரிணிக்குதான் இதயம் படபடப்பாக இருந்தது. சிறிது நேரம் கழித்து அவள் வீட்டுக்கு கொண்டு விட்டவன் தன்னுடைய வீட்டுக்கு சென்றான்.ஹரிணி அவளுடைய போனை சத்யாவின் காரில் வைத்து விட்டு சென்று விட்டாள்.சத்யா அவன் வீட்டுக்கு சென்ற பிறகுதான் அதை பார்த்தான். போனை கொடுத்து விடலாம் என்று யோசித்தவன் பிறகு  போனை எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு சென்று போனை ஆன் செய்ய சத்யாதான் லாக் ஸ்கிறீன்  S என்று பாஸ்வார்ட் போட ஓபன் ஆனது. வேகமாக கேலரி சென்றவன் அவள் புகைப்படங்களை வேகமாக லேப்டாப்பில் ஏற்றியவன் இப்போது நல்ல பிள்ளையாக போனை சென்று கொடுத்து விட்டு வந்து விட்டான். ஹரிணிக்கு அவன் போன் வந்து கொடுக்கும் வரை போன் அவளிடம் இல்லை என்பது கூட தெரியாமல் ஏதோ மந்திரித்து விட்டது போல சுற்றிக்கொண்டு இருந்தாள்.இங்கே சாயா அகரன் உடன் பேசுவதையே தவிர்த்து வந்தாள்.காரில் வரும்போது இரவு உணவு உண்ணும் போது என அவள் பேசவே இல்லை. மாடிக்கு வருவாள் பேசலாம் என்றால் அங்கும் வரவில்லை. சரி ரூமில் தானே இருப்பாள் என்று செல்ல அவளும் அங்குதான் அமர்ந்து இருந்தாள் புத்தகம் படிக்கும் இடத்தில் அமர்ந்து இருந்தாள்.அவளை பார்த்த அகரன்க்கு தான் என்னவோ போல ஆகி விட்டது. சின்ன டீ ஷர்ட் அணிந்து கொண்டு முட்டி வரை உள்ள அரைக்கால் சட்டை அணிந்து கால் நீட்டி புத்தகம் படித்துக்கொண்டு இருந்தாள்.இவன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

சாயா :என்ன வேணும் ஏன் என்ன அப்படி பாக்குறீங்க

அகரன் :ஆ ஆ ஒண்ணுமில்ல அம்மாடி என்ன இன்னைக்கு ஏன்  இப்படி டிரஸ் பண்ணி இருக்க

சாயா :ஏன் நான் இந்த டிரஸ் போடுறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை

அகரன் (m.v):உனக்கு என்ன பிரச்சனை எனக்கு தான் பிரச்சனை

சாயா :எதாவது சொன்னிங்களா

அகரன் :இல்லை. சாரி அம்மாடி

சாயா :எதுக்கு

அகரன் :இல்ல நான் மறந்துருக்க கூடாது. திடிர்னு வேலை அதான்

சாயா :இட்ஸ் ஓகே. நானும் சாரி சின்ன விஷயத்துக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு.

அகரன் :சண்டை இல்லை இல்லை

சாயா :இல்லை

இருவரும் சிரித்தனர். சாயா முடி முன்னே விழ அவளின் அருகே அதை காதோரம் ஒதுக்கியவன். அவள் காதருகே சென்று ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தான்.

அகரன் :ஏன் அம்மாடி தள்ளி நின்னே கொல்லுற.

சாயா :நம்ம கிட்ட கிட்ட தான் நிக்குறோம்

அகரன் :ஆமா ரொம்ப கிட்ட கிட்ட நிக்கிறோம். நீ இந்த டிரஸ் தான் போட்டு தூங்க போறியா.

சாயா :ஆமா ஏன்

அகரன் :ஒண்ணுமில்ல ஒண்ணுமே இல்லை. குட் நைட். 

சாயா :சும்மா சொன்ன நான் போய் வேற டிரஸ் போட்டு வர்ற. நம்ம மாடிக்கு போய் பேசலாம்.

அகரன் :பேசலாமே

இங்கே இவர்கள் பேசுவதற்கு மாடிக்கு செல்ல. சத்யா ஹரிணியின் போட்டோவை பார்த்து கொண்டு இருக்க.ஹரிணி உறங்கி கொண்டிருக்க.பிரியா தர்சன் இன்னும் வரவில்லை என வாசலை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அடுத்து என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro